இலஞ்சம் பெற்ற பொலிஸ் கைது
Posted in இலங்கை செய்திகள்

இலஞ்சம் பெற்ற பொலிஸ் கைது

இலஞ்சம் பெற்ற பொலிஸ் கைது

இலஞ்சம் பெற்ற பொலிஸ் கைது ,20,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில், கம்பளை தலைமையகப் பொலிஸ் நிலையத்தின்

பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்சம் ஊழல் தொடர்பான ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பளையில் வசிக்கும் ஒருவரின் முறைப்பாட்டின் அடிப்படையில், காருக்கான எரிபொருளை செலுத்துவதற்கும், 25.10.2024 அன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்குச் சென்று முறைப்பாடு செய்தவருக்கு எதிராக இருந்த

வழக்குத் தொடர்பில் விசாரணை செய்து அது தொடர்பான வாக்குமூலத்தை வழங்குவதற்கும் முறைப்பாட்டாளரிடம் குறித்த பரிசோதகர் 20,000 ரூபா இலஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதன்படி, லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில், கம்பளையில் உள்ள உணவகம் ஒன்றில் வைத்து ஆணைக்குழுவினால் அதிகாரிகளால் குறித்த பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டார்.

அவர் கம்பளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலஞ்சம் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு
Posted in இலங்கை செய்திகள்

இலஞ்சம் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு

இலஞ்சம் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு

இலஞ்சம் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு ,பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற நபரை மட்டக்குளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மட்டக்குளி பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரிக்கு நேற்றைய தினம் (16) ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு போதைப்பொருள் கடத்தலை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்குமாறு கோரியுள்ளார்.

சந்தேகநபர் மாதாந்தம் 100,000 ரூபாயை இலஞ்சமாக வழங்க விரும்புவதாக அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு குறித்த பொலிஸ் அதிகாரி அறிவித்துள்ளார்.

இதையடுத்து, குறித்த சந்தேக நபரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து, சந்தேகநபர் 50,000 ரூபாயை வழங்க முற்படும் போது, ​​இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மட்டக்குளி பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் திருட்டு
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் திருட்டு

பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் திருட்டு

பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் திருட்டு ,யாழ்ப்பாணம், நவாலி பகுதியில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பன திருடப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் குளியலறை ஊடாக உள்நுழைந்த திருடர்கள், ஆறரை பவுண் நகை மற்றும் 29 ஆயிரம் ரூபா பணம் என்பவற்றைத் திருடிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாக்களிப்பு நிலையத்தில் பொலிஸ் அதிகாரி மரணம்
Posted in இலங்கை செய்திகள்

வாக்களிப்பு நிலையத்தில் பொலிஸ் அதிகாரி மரணம்

வாக்களிப்பு நிலையத்தில் பொலிஸ் அதிகாரி மரணம்

வாக்களிப்பு நிலையத்தில் பொலிஸ் அதிகாரி மரணம் ,வாக்களிப்பு நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் திடீர் சுகவீனம் காரணமாக பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பிற்பகல் உயிரிழந்ததாக புலஸ்திபுர பொலிஸார் தெரிவித்தனர்.

பொலன்னறுவை புலஸ்திபுர விஜிதா ஆரம்ப பாடசாலையின் வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

பொலிஸ் சார்ஜன்ட் 53419, எச்.எம். இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் புலஸ்திபுர பொலிஸ் அதிகாரி ஒருவர் எமது விசாரணையின் போது ரத்னபால பொலிஸ் உத்தியோகத்தர் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த திடீர் மரணம் தொடர்பில் பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு.நிஷான் டி சில்வாவின் ஆலோசனையின் பேரில் புலஸ்திபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

எரிந்த ஆட்டோ விசாரணையில் பொலிஸ்
Posted in இலங்கை செய்திகள்

எரிந்த ஆட்டோ விசாரணையில் பொலிஸ்

எரிந்த ஆட்டோ விசாரணையில் பொலிஸ்

எரிந்த ஆட்டோ விசாரணையில் பொலிஸ் ,மட்டக்களப்பு வவுணதீவிலிருந்து விளாவெட்டுவானுக்குச் செல்லும் வீதியில் ஆட்டோ ஒன்று எறிந்த நிலையில் காணப்பட்டுள்ளது .

இந்த ஆட்டோ எப்படி எரிந்தது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இயந்திர கோளாறு காரணமாக தீ பற்றி எரிந்ததா அல்லது விஷமிகளினால் தீயிட்டு கொழுத்த பட்டதா என்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி

விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி

விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி ,யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் , புங்குடுதீவு பகுதியை சேர்ந்த கண்ணதாசன் எனும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

வேலணை பகுதியில் இருந்து அராலி சந்தியை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி, எதிரே வந்த ஜே.சி.பி வாகனத்தினுள் அகப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

பெண் குளிப்பதை பார்வையிட்ட பொலிஸ்
Posted in இலங்கை செய்திகள்

பெண் குளிப்பதை பார்வையிட்ட பொலிஸ்

பெண் குளிப்பதை பார்வையிட்ட பொலிஸ்

பெண் குளிப்பதை பார்வையிட்ட பொலிஸ் ,3.4.2024 அன்று நான் என் குடும்ப உறுப்பினர் சகிதம் 8 பேர் கன்னியா வெந்நீர் ஊற்றுக்கு சென்றோம் .

ஒரு தலைக்கு 50 ருபா கொடுக்க வேண்டும் அங்கு குளித்து உடுப்பு மாற்றுவதற்கு இடம் இருக்கவில்லை .

முன்பு உடுப்பு மாற்றுவதற்கு என ஆண்கள் பெண்கள் இருவருக்கும் ஒவ்வொரு பகுதிகள் காணப்பட்டன, அதை நினைத்து நாமும் குளித்து உடுப்பு மாற்றுவதற்கு போனோம் .

குளித்த பின் பார்த்தபோது எல்லா இடங்களும் தகரத்தாலும் பரல்களாலும் அடைக்கப்பட்டு இருந்தது எமக்கு என்ன செய்வதென தெரியவில்லை.

பின்பு பற்றை காடுகள் இருந்தது அதற்குள் மறைந்திருந்து உடுப்பை மாற்றினோம் .

மேலே போலீச இருந்தார்கள் நாம் அவர்களுக்கு தென்படாதபடி உடுப்புகளை மாற்றிவிட்டு எமக்கு டிக்கெட் தந்தவருடன் கதைத்தோம் .

நீங்கள் டிக்கெட் தரும்போது எங்களுக்கு சொல்லி இருக்க வேண்டும் அல்லவா நாம் குளிக்காது திரும்ப வந்திருப்போம்.

அதற்கு அவர் சொன்னார் பார்க்க போவதற்கு தான் 50 ரூபாய் என நான் சொன்னேன் நீங்கள் இதில் விளம்பரப்படுத்தி இருந்தால் நாங்கள் குளிக்க போயிருக்க மாட்டோம் என நீங்கள் இதில் எழுதி போட்டோ இருக்க வேண்டும் உடுப்பு மாற்றுவதற்கு இடம் இல்லை என.

அப்படி எழுதி போட்டிருந்தால் நாங்கள் குளிக்காம வந்து இருப்போம் இது சம்பந்தமாக நீங்கள் நடவடிக்கை எடுத்தீர்களா என்று கேட்டபோது ஓம் என்று சொன்னார்.

இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் இதுவரை ஏன் எடுக்கவில்லை என கேட்டோம் .

இவ்விடயம் தொடர்பாக இது சம்பந்தமாக யாருடன் கதைக்க வேண்டும் என்று தொல்பொருள் திணைக்களத்துடன் கதைக்க வேண்டும் என்று சொன்னார்.

அப்போது நான் சொன்னேன் இதனை ஊடகங்களுக்கு தெரிய ப்படுத்தவா என்று ஓம் என தெரிவித்தார் .

உண்மையில் எங்களுக்கு முன் மூன்று பெண் பிள்ளைகள் உடுப்பு மாற்றினவர்கள் அவர்கள் மேலே இருக்கிற போலீஸ்காரர்களை அவதானித்தார்களோ தெரியவில்லை.

திருகோணமலை வெந்நீர் ஊற்றில் நடக்கின்ற இந்த விடயம் அங்கு செல்லும் மக்களுக்கு பெரும் இடர்களை ஏற்படுத்தியுள்ளது .

இவ்வாறு அங்கு சென்று பாதிக்க பட்டவர்கள் அனுப்பி வைத்துள்ளார்கள் .

லஞ்சம் பெற்ற பொலிஸ்அதிகாரி கைது
Posted in இலங்கை செய்திகள்

லஞ்சம் பெற்ற பொலிஸ்அதிகாரி கைது

லஞ்சம் பெற்ற பொலிஸ்அதிகாரி கைது

லஞ்சம் பெற்ற பொலிஸ்அதிகாரி கைது ,இலங்கை மத்தியகமா போலீஸ் காவல்துறை பகுதியில் கடமையாற்றும் ஒரு போலீஸ் அதிகாரி லஞ்சம் பெற சென்ற போது கையும் மையமாக கைது செய்யப்பட்டுள்ளார்.

லஞ்ச ஊழல் விசாரணை ஆழக்குழுவின் அதிகாரிகளினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு தற்போது தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு நீதிமன்றத்தில் பரப்படுத்த பட்டுள்ளார் .

இலங்கை காவல்துறையினர் கையூட்டு பெற்றதில் தேர்ச்சி பெற்றவர்கள் என்பதை இந்த விடயங்கள் மூலமும் எடுத்துக்காட்டுகின்றனர்.

மக்கள் சமூகத்தை காப்பாற்றும் அவருடைய கடமையை பணியாற்ற வந்த இவர்கள் தமது தனிநலன் சார்ந்து லஞ்ச உடை பெற்று தமது குடும்பங்களுக்காக அவர் செல்வந்தராக வாழ்வதற்காக வந்தார்கள் என்பதை இந்த விடயம் எடுத்து காட்டுகிறது.

குற்றவாளிகள் தப்பித்து செல்வதற்கும் பல்வேறுப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இவர்களது இந்த விடயங்கள் மிகப்பெரும் நெருக்கடியையும் உடனையும் ஏற்படுத்துவதை காண முடிகின்றது.

போத்த வைத்து லஞ்ச ஊழல் மற்றும் அரசியல்வாதிகள் வர்த்தகர்களிடம் இவ்வாறு லஞ்சத்தை பெற்று அவர்கள் அவருக்கு உடனடியாக செயல்படுவதான விடயம் உண்மைதான் என்பதை மேற்படி முடியும் எடுத்துக்காட்டுவதாகவும் ஒரு முறை அம்பலப்பட்டுள்ளது.

மருத்துவர் நாகநாதன் பொலிஸ் விசாரணையில்
Posted in இலங்கை செய்திகள்

மருத்துவர் நாகநாதன் பொலிஸ் விசாரணையில்

மருத்துவர் நாகநாதன் பொலிஸ் விசாரணையில்

மருத்துவர் நாகநாதன் பொலிஸ் விசாரணையில் சிக்கியுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பதிவுகள் சில காண்ப்பிக்கின்றன .

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் சைக்கோ மருத்துவர் அல்லது சக மருத்துவர்களை மன நோயாளியாக சித்தரிக்கும் ,

சத்தியமூர்த்தி என்கின்ற மருத்துவர் அர்ச்சுனாவை போல தற்போது நாகநாதன் மருத்துவரை கூண்டில் ஏற்ற பொலிஸ் விசாரனையை ஆரம்பித்துள்ளார் .

நாகநாதன் மருத்துவரை அணுகிய காவல்துறையினர் அவரை விசாரணைக்கு உள்ளாகியுள்ளதாகவும் ,அதில் அவர் சிகிச்சை புரிகின்ற சத்திர சிகிச்சை பகுதியில் மருத்துவர்கள் தாதிமார்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ள பட்டதாக சமூகவலைத்தள பதிவுகள் பேசுகின்றன .

தங்களது மாபியா கொள்ளையை தடுக்கும் முகமாக அப்பாவி மருத்துவர்களை மிரட்டி ஒடுக்கும் நடவடிக்கையில் சத்தியமூர்த்தி ஈடுபட்டு வருகின்றார் .

அர்ச்சுனாவுக்கு ஆதரவாக மருத்துவமனை ஊழல்களை கூறுபவர்களை மிரட்டி அடக்கும் ஒரு திறந்த நிகழ்ச்சி நிரலின் திட்டமிட்ட நகர்வாக இந்த வைத்தியர் நாகநாதன் மீதான பொலிஸ் விசாரணை விடயம் பார்க்க படுகிறது .

போலீஸ் விசாரணைக்கு உள்ளான மருத்துவர் நாகநாதன் தனது சட்டத்தரணியை நாடியுள்ளதாக தெரிவிக்கபடுகிறது .

தமிழ் மக்களின் கலாச்சார பட்டினத்தில் உள்ள யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியான சத்தியமூர்த்தியின் ,தனக்கு எதிராக அவதூறு பரப்பினார் என்கின்ற இழி செயல் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .

பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு

பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு

பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு ,எரிபொருள் சமையல் எரிவாயு மின்சாரம் போன்றவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும் அதனை பெற்றுக் கொள்கின்ற வாடிக்கையாளர்கள் அதிக விலை கொடுத்து வாங்கி செல்வதான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதை அடுத்து.

எதிர்வரும் நாட்களில் பல்வேறுபட்ட பகுதிகளில் திடீர் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அனைத்து வர்த்தக நிலையங்களையும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.

மக்களுக்கான வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ளவும் அவர்களது சிறந்த முறையில் மலிந்த விலையில் பொருட்களை வாங்கி அவர்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை ஏற்படுத்தப்படும் என காவல்துறையினர் இப்படி அறிவித்திருக்கின்றனர்.

ஒரே பொருள் நாளுக்கு நாள் பல்வேறுபட்ட விளைகளில் விற்பனையாகி வருகின்றது .

இதனால் கடை முதலாளிகள் கொள்ளை லாபங்களை பெற்று கொளுத்துபருத்து வாழ்கின்றனர் என்ற குற்றச்சாட்டு மக்களினால் முன்வைக்கப்பட்ட வருகின்றது.

அதனை அடுத்து தற்பொழுது மக்கள் நலன் கருதி போலீசார் விசேட சுற்றி வலைப்பு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் ,

வரும் நாட்களில் பல்வேறுபட்ட மாவட்டங்களில் சுழற்சி முறையில் இந்த விசேட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசினால் அறிவிக்கப்பட்ட விளைவுகளுக்கு ஏற்றவாறு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் ,

அதற்கு மேலாக விற்பனை செய்தால் அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படுவதுடன் அந்த கடை முதலாளிகள் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக போலீசார் இப்படி தெரிவிக்கின்றனர்.

வெட்டு பொலிஸ் அதிகாரி
Posted in இலங்கை செய்திகள்

வெட்டு பொலிஸ் அதிகாரி

பொலிஸ் அதிகாரி மீது வெட்டு

பொலிஸ் அதிகாரி மீது வெட்டு , லஞ்ச ஊழல் குற்ற சாட்டின் அடிப்படையில் கைது சிறையூயில் கைது செய்து வைக்க பட்ட பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இவ்வாறு கத்தி வெட்டு தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரி எட்டு காயங்களுக்கு உள்ளன நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார் .

இவ்வாறு அனுமதிக்க பட்ட அவர் எவ்வாறான வெட்டு தாக்குதலுக்கு உள்ளான நிலையில் அனுமதிக்க பட்ட அவர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்க பட்டு .வருகின்றன.

சுட்டு தற்கொலை பொலிஸ் அதிகாரி
Posted in இலங்கை செய்திகள்

சுட்டு தற்கொலை பொலிஸ் அதிகாரி

பொலிஸ் அதிகாரி சுட்டு தற்கொலை

பொலிஸ் அதிகாரி சுட்டு தற்கொலை ,போலீஸ் அதிகாரி ஒருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துள்ள சம்பளம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனுராதபுரம் ரூபன் வெளி சாய காவல்துறை பகுதியில் பணியாற்றிய போலீசார் ஒருவரே தற்பொழுது தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார் .

சார்ஜன் தரத்திலான அதிகாரி ஒருவரே இவ்வாறு தன்னைத்தான் சுட்டு தற்கொலை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

அனுராதபுரத்தைச் சேர்ந்த ஐம்பத்தி ஐந்து வயதான போலீஸ் அதிகாரி ஏன் இவ்வாறு தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்தார்கள் என்ற விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தற்கொலை செய்து கொண்ட போலீசாரின் சடலம் மீட்க பட்டுள்ளது .

குறித்த மரணம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தற்பொழுது அவரது குடும்பத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது .

இந்த தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .

இலங்கை ராணுவம் மற்றும் காவல்துறைகளில் பல்வேறுபட்ட நபர்கள் இவ்வாறு தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிகரித்து காணப்படுகின்றது.

இதற்கு பின்புலத்தில் அதிகாரிகளுடைய அழுத்தம் காணப்படலாம் என்கின்ற விடயம் வெளியாகி இருக்கின்றது .

சம்பவத்திலேயே தற்பொழுது இந்த தற்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இதுவரை இந்த தற்கொலைக்கான காரணம் எதுவென்று தெரியவில்லை என போலீசார் தெரிவித்து வருகின்றனர்.

பொலிஸ் சுற்றிவளைப்பு பறக்கும் தேசவிரோத கும்பல்
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் சுற்றிவளைப்பு பறக்கும் தேசவிரோத கும்பல்

பொலிஸ் சுற்றிவளைப்பு பறக்கும் தேசவிரோத கும்பல்

பொலிஸ் சுற்றிவளைப்பு பறக்கும் தேசவிரோத கும்பல் ,இலங்கை தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பகுதிகள் தொடர்பான சோதனை நடவடிக்கை உள்ளாக்கப்படும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

யுத்திய நடவடிக்கை என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட சமூக விரோத செயல்பாட்டுகளை கலையும் நடவடிக்கையான இந்த யுக்தி நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதனை எடுத்து தற்பொழுது கொழும்பினுடைய பல பகுதிகள் மீதும் தாங்கள் இந்த தேர்தல்களை விரைவாக மேற்கொள்ள உள்ளதாகவும் ,

அதன் பொழுது பல பட்டாலியன் படைகளை இணைத்து இந்த தேடுதல் முடுக்கிவிடப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர் .

சமூக விரோத செயல்பாடுகள் தடுக்கும் பொலிஸ்

இந்த தேர்தலின் ஊடாகவே சமூக விரோத செயல்பாடுகள் போதை வஸ்துக்கள் மற்றும் வேற இதர சமூக சட்டவிரவாத செயல்கள் தடுப்பதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்த முடியும் என காவல்துறையினர் நம்பிக்கை விடுத்துள்ளனர் .

மேற்கொள்ளும் இந்த யுக்திய நடவடிக்கை ஊடாக இலங்கையில் பாரிய கைது பாரிய குற்ற செயல்களும் தடுக்கப்பட்டு இருந்தன.

அதனை அடுத்து இந்த யுக்தியை நடவடிக்கைகள் யுக்தியின் ஊடாகவே பாரிய அளிப்பு நடவடிக்கை மேற்கொண்டு நாட்டை சரியான முறையில் வழிகாட்டி செல்வதற்கு இந்த தேர்தல்கள் உகந்த முறையில் உதவும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் .

அதனை அடுத்து இலங்கையினுடைய தலைநகர் பாதுகாப்பான நகரமாக உல்லாச பயணிகளுக்கு காண்பதற்கான நடவடிக்கை ஒன்றாக இந்த தேர்தல் நடவடிக்கையை போலீசார் மேற்கொள்ளதாக தெரிவித்துள்ளனர் .

போலீசார் விடுத்துள்ள இந்த அதிரடி அறிவிப்பை அடுத்து சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற தேச விரோத கும்பல்கள் இப்போது ஓடி பதுங்க வேண்டிய நிலையில் காணப்படுகின்றனர் .

இந்த தேச விரோத கும்பலினால் போத வஸ்துக்கள் கடத்தல்கள் படுகொலைகள் காணாமல் ஆக்கப்படுத்தல் மற்றும் சொல்லென்னா துயரங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது .

அதனை அடுத்த இந்த தேச விரோத கும்பல்களை இலக்கு வைத்து தற்பொழுது போலீசார் புதிய படையணியின் ஊடாக களமுனையில் தாக்குதல் வீரியங்களை மேம்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர் .

இலங்கையில் இடம்பெற்று வருகின்ற பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் இந்த தேச விரோத சமூக விரோத கும்பல் இருப்பதாக போலீசார் குற்றம் சுமத்தி வருகின்ற நிலையிலே ,

இந்த யுக்திய போலீஸ் விசேட சுற்றிவழிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

எதிர்வரும் நாட்களில் இலங்கை தலைநகர் கொழும்பை அண்மித்த பல பகுதிகளில் தேடுதல் நடைபெற போவதற்கான முன்னறிவிப்பாக இது காணப்படுகின்றது.

பொலிசாரை தாக்கிய கணவன் மனைவி
Posted in இலங்கை செய்திகள்

பொலிசாரை தாக்கிய கணவன் மனைவி

பொலிசாரை தாக்கிய கணவன் மனைவி

பொலிசாரை தாக்கிய கணவன் மனைவி ,போலீஸ் அதிகாரி மீது கணவன் மனைவி திடீர் தாக்குதல் .

இலங்கை களுத்துறை பகுதியில் நீதிமன்றம் ஒன்றுக்கு வழக்கு விசாரணைக்காக வருகை தந்திருந்த கணவன் மனைவி இணைந்து போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீது கடும் தாக்குதலை நடத்தினர்.

நீதிமன்ற வளாகத்திற்கு விசாரணைக்காக வருகை தந்த கணவன் மனைவி ஆகியோரை வழிமறித்த போலீஸ் அதிகாரி .பெண் அணிந்திருந்த உடையானது நீதிமன்றத்திற்கு பொருத்தமற்றது என தெரிவித்துள்ளார் .

கணவன் மனைவிக்கு இடையில் கடும் வாக்குவாதம்

இதனை அடுத்து காவல்துறை அதிகாரிக்கும் கணவன் மனைவிக்கு இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது .

இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் உச்சம் அடைந்து முட்டி வெடித்த நிலையில் ,கணவன் மனைவி இணைந்து காவல்துறை அதிகாரியை சரமரியாக தாக்கினர்.

இதன் பொழுது பலத்த காயமடைந்த கான்ஸ்டபிள் அதிகாரி தரத்திலான காவல்துறை அதிகாரி தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

நீதிமன்றங்களுக்கு வருகை தருகின்ற மக்கள் இந்த உடை தான் அணிந்து வருகை தர வேண்டும் என்கின்ற சட்ட ஏதும் இலங்கையில் காணப்படவில்லை .

ஆனால் போலீசார் வேண்டுமென்றே இந்த பெண் கணவன் மனைவி மீது விஷமத்தனமாக வலிந்து சீண்டும் நடவடிக்கை ஈடுபட்டு அவர்களை திசை திருப்ப நடவடிக்கை ஈடுபட்டதான தகவலாகவே இந்த சம்பவம் காணப்படுகிறது .

லஞ்சம் பெறுவதற்காக நடவடிக்கை

அல்லது இந்த அதிகாரி அவர்களும் லஞ்சம் பெறுவதற்காக இவ்வாறான ஒரு விடயத்தை கையாண்டாரா என்கின்ற விடயங்களும் தற்பொழுது விழுந்து வெடிக்கின்றன .

இலங்கையில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை லஞ்சம் குற்றச்சாட்டுகளில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், இந்த சம்பவம் பல்வேறுபட்ட சர்ச்சைகளையும் பேசு பொருளையும் ஏற்படுத்தி உள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பாக இலங்கை சகா காவல்துறை அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

கழுத்துறை நீதிமன்ற வளாகத்தில் இலங்கை காவல்துறை அதிகாரி மீது நடத்த பட்ட இந்த தாக்குதல், சிங்கள மக்கள் மத்தியில் மட்டுமல்ல ,தமிழ் மக்கள் மத்தியிலும் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

பொலிஸ் வண்டி வீட்டுக்குள் நுழைந்தது
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் வண்டி வீட்டுக்குள் நுழைந்தது

பொலிஸ் வண்டி வீட்டுக்குள் நுழைந்தது

பொலிஸ் வண்டி வீட்டுக்குள் நுழைந்தது ,வவுனியா, நெடுங்கேணி பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்த புளியங்குளம் பொலிசாரின் ஜீப் வண்டி வீடு ஒன்றுக்குள் புகுந்து நேற்று (04.06) மாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

நெடுங்கேணி – புளியங்குளம் வீதியில் பயணித்த புளியங்குளம் பொலிஸ் நிலைய ஜீப் வண்டி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியோரத்தில் இருந்த வீடு ஒன்றுக்குள் புகுந்துள்ளது.

வீட்டு வேலியை உடைத்துக் கொண்டு சென்ற ஜீப்

வீட்டு வேலியை உடைத்துக் கொண்டு சென்ற ஜீப் வண்டி வீட்டிற்குள் நின்ற மோட்டர் சைக்கிள், வீதியோர மின்சாரத்தூண், வீட்டு குடிநீர் இணைப்பு

என்பவற்றை சேதப்படுத்தியுள்ளதுடன், அருகில் உள்ள கொட்டகையில் படித்துக் கொண்டிருந்த சுமார் 40 வரையான மாணவர்கள் மயிரிழையில் தப்பியுள்ளனர்.

விபத்தின் போது புளியங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 5 பேர் சிவில் உடையில் வாகனத்தில் இருந்ததாக விபத்து இடம்பெற்ற பகுதியில் இருந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் பொதுமக்கள் குவிந்ததும் பொலிசார் அங்கிருந்து நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்குள் தப்பிச் சென்றுள்ளனர்.

நெடுங்கேணி பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், ஜீப் வண்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினரும் சம்பவ இடத்திற்கு வருகை

விசேட அதிரடிப்படையினரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பொலிசார் மதுபோதையில் வாகனத்தை செலுத்தியமையே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இஸ்ரேல் மக்கள் பொலிஸ் மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மக்கள் பொலிஸ் மோதல்

இஸ்ரேல் மக்கள் பொலிஸ் மோதல்

இஸ்ரேல் மக்கள் பொலிஸ் மோதல் 14 போலீஸ் காயம், இஸ்ரேல் மக்களுக்கும் காவல்துறைக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது .

இதில் பொது மக்கள் காவல்துறையினரை தாக்கியதில் 14 பொலிஸ் காயமடைந்துள்ளனர் .

செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல்

செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திய ஏமன் அன்சர் அல்லா போர் படைகள் ,அமெரிக்கா ஏவுகணைகள் ,விமானங்கள் என்பனவற்றை தடுத்து சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவிப்பு .

ஆனால் கப்பல்களுக்கு சேதம் என தகவல் .

ஏவுகணை தாக்குதல்

வடக்கு இஸ்ரேலிய நகரங்கள் இராணுவ தளங்களை இலக்கு வைத்து கடும் ஏவுகணை தாக்குதல் ,வெள்ளம் போல ஏவுகணை மழை பொழிவு இடம்பெற்றுள்ளது .

பாலஸ்தீனம் காசா பகுதியில் கடும் யுத்தம் தடுக்க முடிய திணறும் எதிரி படைகள் ,எதிரிகளின் வரவை கணடறிந்து வீரம் செறிந்த தாக்குதல் .

பாலஸ்தீனம் யூத படைகள் தாக்குதலுக்கு அமெரிக்கா நீதவான் நீதிமன்றம் என கூறி வரும் ஜோ பைடன் தீர்ப்பு எழுதிட தயாராகி வருகிறார் .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
மாணவனை தாக்கிய பொலிஸ்
Posted in இலங்கை செய்திகள்

மாணவனை தாக்கிய பொலிஸ்

மாணவனை தாக்கிய பொலிஸ்

மாணவனை தாக்கிய பொலிஸ் ,பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் தாக்கப்பட்ட 13 வயது பாடசாலை மாணவர் அண்மையில் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஏர் ரைபிள் மற்றும் கையடக்கத் தொலைபேசியைத் திருடிச் சென்றதாகக் கூறி பொலிசார் தம்மை தாக்கியதாக மாணவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மாணவன் கூறுகையில்,

முச்சக்கர வண்டி ஓட்டியவர் அடிக்கவில்லை. மற்றவர்களே என்னை தாக்கினர். தற்போது அதற்காக சிகிச்சை பெறுகிறேன்” என்றார்.

பாடசாலை மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நாடத்திய சம்பம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

நாட்டின் சட்டத்தை தமது கையிலெடுத்து ,தமது அதிகார வரைமுறையை மீறி ,அப்பாவி மாணவர்களை போலீசாரை தாக்கிய சம்பவம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .

மக்கள் மீது துப்பாக்கி சூட்டு சம்பவங்களை நடத்தி படுகொலை புரிதல் ,மற்றும் ,சிறையில் கைதிகளை கொலை செய்தல் என்ற குற்ற சாட்டுக்கள் போலீசார் மீது வைக்க பட்டுள்ள நிலையில் ,இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

போதைப் பொருளுடன் ஒருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

போதைப் பொருளுடன் ஒருவர் கைது

போதைப் பொருளுடன் ஒருவர் கைது

போதைப் பொருளுடன் ஒருவர் கைது ,ராகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வீதித்தடையை பயன்படுத்தி வாகனங்களை சோதனை செய்த போது போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் ராகம, வல்பொல பட்டலந்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சோதனைக்கு உட்படுத்திய காரில் 102 கிராம் 940 மில்லி கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 45 வயதுடைய ‘பாஸ் ரொஷான்’ என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் ராகம, கெண்டலியத்த பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 25 இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேக நபர் ஹெரோயின் கடத்தல் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.

போலீசார் நடத்திகிய விசேட சுற்று காவல் முற்றுகை தேடுதலில் இவ்விதமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட வண்னம் உள்ளனர் .

இலங்கையில் நாள்தோறும் இவ்விதமான குற்ற சத்துக்களின் அடிப்டையில் பலர் கைது செய்யப்பட்டு வருவது ,இலங்கை போதைவஸ்து நாடாக மாற்றம் பெற்றுள்ளதை காண்பிக்கிறது .

20பேர் போலீசாரால் கைது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்

20பேர் போலீசாரால் கைது

20பேர் போலீசாரால் கைது

20பேர் போலீசாரால் கைது ,பம்பலப்பிட்டி காலி வீதி மற்றும் டுப்ளிகேஷன் வீதியில் பொழுதுபோக்கிற்காக மோட்டார் சைக்கிள்களை கவனயீனமாகவும் அபாயகரமாகவும் ஓட்டிச் சென்ற 20 பேரை மோட்டார் சைக்கிள்களுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இந்த ஒருவழிப்பாதையான இவற்றில் அதிக சத்தத்துடன் அதிவேகமாகவும், எதிர்திசையிலும் கூட கட்டுக்கடங்காத வகையில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் செல்வதாக மக்களிடம் இருந்து பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இவர்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு இடையே ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டி, முன் சக்கரத்தை உயர்த்தி பின் சக்கரத்தில் மாத்திரம் பயணித்து ஏனைய சாரதிகளுக்கு ஆபத்தை விளைவிப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதன்படி இன்று (05) அதிகாலை பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் இந்த விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இந்த குழுவிற்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்ககொடியுடன் நடப்பவருக்கு பொலிஸ் பாதுகாப்பு
Posted in இலங்கை செய்திகள்

சிங்ககொடியுடன் நடப்பவருக்கு பொலிஸ் பாதுகாப்பு

சிங்ககொடியுடன் நடப்பவருக்கு பொலிஸ் பாதுகாப்பு

சிங்ககொடியுடன் நடப்பவருக்கு பொலிஸ் பாதுகாப்பு.இலங்கையை சுற்றி நடக்கும் வாலிபருக்கு பொலிஸ் பாதுகாப்புடன் சாதனை நிகழ்வு .

சிங்கள சகோதர மொழி நண்பரான செல்டன் பெராரோ ஒருவர் ,சாதனையையும் ஒற்றுமையும் நிலை நாட்ட ,இலங்கை தேசிய கொடியை தாங்கி பிடித்தவாறு நடை பயில்கின்றார் .

இவரது இந்த சாதனை நல்லிணக்க நிகழ்வானது அம்பாறை மத்திய முகாமில் இருந்து ஆரம்பிக்க பட்டுள்ளது .

சாதனை படைக்க நடை பயணம்

52 நாட்கள் திட்டமிட்ட படி இவர் எங்கு தொடங்கியதோ அங்கு சென்றடைவார் .

இவ்வாறு இவரது நடைபயணமானது 12 நாட்கள் கழிந்து யாழ்ப்பாணம் வந்தடைந்தது . இவரை கண்ணுற்ற மக்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர் .

இலங்கை தேசிய கொடியை பிடித்து செல்கின்ற பொழுது ,இவருக்கு ஏதும் நேர்ந்து விடலாம் என்பதால் போலீசார் பாதுகாப்பு வழங்க இவர் நடந்து செல்கின்றார் . .

இவரது இந்த நடவடிக்கையானது இலங்கை சிங்கள தேசம் என்பதை பறை சாற்ற இவர் தேசிய கொடியினை பிடித்து நடந்து செல்கிறார் .

சிங்கள மக்கள் மொழி இனம் என்கின்ற அடிப்படையில் ,அவர் தனது தாய் நாட்டு கொடியை தாங்கி பிடித்து நடந்து செல்கிறார் .

புலிக்கொடி பிடித்து தமிழர் நடந்திட அனுமதி உண்டா ..?

ஆனால் இதே போன்று புலிக்கொடியை பிடித்து எம் தமிழரை இலங்கை முழுவதும் கடந்து செல்ல இனவாத சிங்களவர்கள் அனுமதி அளிப்பார்களா..? ,அரசு பொலிஸ் அனுமதி அளிக்குமா என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது .

எனினும் இவர் தன்னை வருத்தி சாதனை நிலை நாட்ட நடக்கும் ,இந்த பயணத்தை ,இன பேதம் கடந்து வரவேற்று வாழ்த்தி அனுப்பி வையுங்கள் .

தமிழ் உரையாடி அசத்திய சிங்கள சகோதரர்

எம் தமிழை பேசி யூடுப்பர் ஒருவருக்கு இவர் வழங்கிய செவ்வி அளப்பெரியது .எம் மொழியை முயன்றவரை அவர் அதிலேயே உரையாடி, தனது நடை பயண நோக்கத்தை விளங்க படுத்தினார் .

அதற்கு தலை சாய்த்து நன்றிகள் தெரிவிப்போம் ,மனிதத்தோடு அணுகி சகோதர மொழி நண்பரை வாழ்த்தி அனுப்புங்கள் தமிழர்களே .

தமிழர்கள் அறம் நிறைந்தவர்கள் என்பதை இதன் பொழுது தெரிய படுத்துங்கள் மக்களே .