70000 பொலிஸார் பாதுகாப்பு கடமையில்
Posted in இலங்கை செய்திகள்

70000 பொலிஸார் பாதுகாப்பு கடமையில்

70000 பொலிஸார் பாதுகாப்பு கடமையில்

70000 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கையின் காவல்துறையில் அறிவித்திருக்கின்றனர்.

எதிர்வரும் உள்ளூர் ஆட்சி தேர்தலை மையப்படுத்தி நாடாளாவியரீதியில் வன்முறைகள் அசம்பாவிதங்கள் இடம்பெறாத தடுப்பதற்காக இந்த 70000 போலீசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை போலீஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில், மக்கள் போக்குவரத்து இலகு படுத்தவும் ,அங்கு வன்முறைகள் அசம்பாவிதங்கள் இடம்பெறாத தடுப்பதற்காகவும் ,போலீசார் பெருந்தொகையில் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் காலத்தை அடுத்து ,போலீசாருக்கு வழங்கப்பட்ட விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டு, தற்பொழுது அவர்கள் சிறப்பு படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளமைக்கு மாறாக இம்முறை தேர்தலுக்கு .அதிக ஆயிரம் போலீசார் தேர்தல் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள .தகவல்களும் வெளியாகி இருக்கின்றன.

விசேட வீதி ரோந்துகள் வீதி சோதனைகள் சுற்று காவல் நடவடிக்கைகள் என இந்த விசேட போலீஸ் அணிகள் நடத்தி வருவதாக தெரிய வருகிறது.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவு

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவு

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவு ,இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவுகள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இரு நாடுகளும் பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் கூட்டு இராணுவ மற்றும் கடற்படை பயிற்சிகள் ஆகியவற்றால் இருதரப்பு உறவுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, இலங்கை முப்படைகளின் சுமார் 750 அதிகாரிகளுக்கு இந்தியா ஆண்டுதோறும் விடயதானம் சார்ந்த பயிற்சியை வழங்குவதாக பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இரு நாடுகளும் பல தசாப்தங்களாக நல்லுறவுப் பாதுகாப்பு உறவுகளைப் பேணி வருவதாக அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்

பாதுகாப்பு சபையில் இஸ்ரேல் தாக்குதல் விவரிப்பு
Posted in உலக செய்திகள்

பாதுகாப்பு சபையில் இஸ்ரேல் தாக்குதல் விவரிப்பு

பாதுகாப்பு சபையில் இஸ்ரேல் தாக்குதல் விவரிப்பு

பாதுகாப்பு சபையில் இஸ்ரேல் தாக்குதல் விவரிப்பு , பலத்தினம் காசா பகுதியில் மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை அடுத்து தற்பொழுது அவசர அவசரமாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ஆரம்பித்திருக்கிறது .

இந்த கூடத்தில் 15 உறுப்பினர்கள் கலந்து கொண்டு இஸ்ரேல் தாக்குதல் தொடர்பாக தற்பொழுது ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலஸ்தீனம் இஸ்ரேல் இடையில் இடம் பெற்று வருகின்ற இந்த யுத்தத்தில் அப்பாவி மருத்துவமனைகளை இலக்கு வைத்து வருகிறது.

சர்வதேச விதிகளை மீறி மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவது சர்வதேச குற்றமாகும் .

வீடியோ

அவ்வாறன குற்றங்களை தொடராக இளைத்து வரும் இஸ்ரேலுடைய இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் ,மேலும் பல லட்சக்கணக்கான மக்கள் பலியாக கூடும் என பலத்தின் அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதனை அடுத்து தற்பொழுது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் உடனடியாக கூடி கமல் அட்வன் மருத்துவமனை மீதான தாக்குதல் தொடர்பாக தற்போது விசாரணைகளை ஆரம்பித்து வருகின்றனர் .

இந்த பாதுகாப்பு சேவை கூட்டத்தின் ஊடாக இஸ்ரேலை கட்டுப்படுத்த முடியுமா .#

முடியாது என்பதை பதிலாக இருக்கிறது. அப்படி என்றால் ஏன் இந்த பாதுகாப்பு கவுன்சில் கூடியிருக்கிறது என்பதே மக்கள் கேள்வியாக இருக்கிறது.

பாதுகாப்பு நாடு முழுவதும் தீவிரம்
Posted in இலங்கை செய்திகள்

பாதுகாப்பு நாடு முழுவதும் தீவிரம்

பாதுகாப்பு நாடு முழுவதும் தீவிரம்

பாதுகாப்பு நாடு முழுவதும் தீவிரம் , எதிர்வரும் நத்தார் புத்தாண்டை முன்னிட்டு இலங்கை நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு தீவிரமாக பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை மற்றும் இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர் .

நத்தார் பண்டிகையை முன்னிட்டு வன்முறை சம்பவங்கள் மற்றும் தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெற வாய்ப்புள்ளது .

அவை இடம் பெறலாம் என எதிர்பார்க்கும் ஆளுகின்ற அரசு அதனை தவிர்க்கும் முகமாக வீதி சோதனைகள் தீவிரப்படுத்த பட்டுள்ளன .

மற்றும் மக்களுடைய பாதுகாப்புக் கருதியும் போக்குவரத்தில் அவர்கள் சிக்கல் இல்லாமல் பயணங்களை மேற்கொள்வதற்குமான

நடவடிக்கையை மேற்கொள்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த நத்தார் புத்தாண்டு தின காலப்பகுதியில் இலங்கையில் தேவாலயங்கள் மீது மிகப்பெரும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது .

வீடியோ

அதனால் மகிந்தா மற்றும் கோத்தாபாய் குழு தாக்குதல் நடத்தப் படலம் என எதிர்பார்க்கும் அனுராவினுடைய ஆட்சி அதனை தடுக்கும் வகையிலான பாதுகாப்புகளை தீவிர படுத்தியுள்ளதையே மேற்படி சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

64000 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில்
Posted in இலங்கை செய்திகள்

64000 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில்

64000 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில்

64000 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ,பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்று (12) முதல் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சுமார் 64,000 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் தேர்தல் நடைபெறும் நாளிலும், அதற்கு மறுநாளிலும், தேவைப்பட்டால், அதற்குப் பின்னரும் பொலிஸ் அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சுமார் 64,000 பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 3,200 உத்தியோகத்தர்கள் கடமைக்காக தயாராக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சுதந்திரமானதும் அமைதியானதுமான தேர்தலை நடாத்துவதற்கு தேவையான ஆதரவை வழங்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு ஜெனரல்களுக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தடை
Posted in இலங்கை செய்திகள்

இரண்டு ஜெனரல்களுக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தடை

இரண்டு ஜெனரல்களுக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தடை

இரண்டு ஜெனரல்களுக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தடை ,சூடானின் துணை ராணுவப் படையைச் சேர்ந்த இரண்டு ஜெனரல்களுக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது.


துணை ராணுவக் குழுவின் செயல்பாட்டுத் தலைவர் மற்றும் மேற்கு டார்ஃபர் தளபதி ஆகியோர் பயணத் தடை மற்றும் சொத்து முடக்கம் ஆகியவற்றால் அறைந்துள்ளனர்.

வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்கள் மூலம் நாட்டை சீர்குலைத்ததற்காக சூடானின் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படையின் (RSF) இரண்டு ஜெனரல்களை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் குழு அனுமதித்துள்ளது.

மொஹமட் ஹம்டன் “ஹெமெட்டி” டகாலோ மற்றும் சூடான் ஆயுதப் படைகளின் (SAF) தலைவர் அப்தெல் ஃபத்தா அல் ஆகியோருக்கு இடையேயான

அதிகாரப் போட்டியின் விளைவாக, ஏப்ரல் 15, 2023 அன்று வெடித்த சூடானில் தற்போதைய போரில் முதல் ஐ.நா. தடைகள் இவை. -புர்ஹான்

RSF இன் நடவடிக்கைகளின் தலைவரான ஒஸ்மான் மொஹமட் ஹமீத் மொஹமட் மற்றும் மேற்கு டார்ஃபர் கமாண்டர் அப்தெல் ரஹ்மான் ஜுமா பர்கல்லா மீது சர்வதேச பயணத் தடை மற்றும் சொத்து முடக்கம்

ஆகியவற்றை விதிக்க ஆகஸ்ட் மாத இறுதியில் செய்யப்பட்ட அமெரிக்காவின் முன்மொழிவுக்கு UNSC இன் சூடான் தடைகள் குழு வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, இந்த திட்டத்தை ஆய்வு செய்ய அதிக நேரம் தேவைப்படுவதால், இந்த நடவடிக்கை ரஷ்யாவால் தாமதமானது என்று இராஜதந்திரிகள் தெரிவித்தனர்.

குழு ஒருமித்த கருத்துடன் செயல்படுகிறது.

மே மாதம், அமெரிக்க கருவூலத் துறை முகமது மற்றும் குழுவின் மத்திய டார்ஃபர் தளபதி அலி யாகூப் ஜிப்ரில் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து விளக்கம்
Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து விளக்கம்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து விளக்கம்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து விளக்கம் ,முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் மருந்து வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட

அதிகம் என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (06) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு செலவு தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை விவரித்தார்.

அதற்காக நூற்றுக்கும் அதிகமான பொலிஸ் மற்றும் படை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் சில ஜனாதிபதிகளுக்கு 180 வரையான பாதுகாப்பு அதிகாரிகள் கடமையாற்றுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு அதிகாரிகள் மாத்திரமன்றி பாதுகாப்பு வாகனங்கள், பஸ், டிபன்டர் ரக வாகனங்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள், அம்பியூலன்ஸ் வண்டி என சகலதும் வழங்கப்பட்டுள்ளதுடன் சராசரியாக

பொலிஸ் பாதுகாப்பு வழங்குதல் மற்றும் ஏனைய பராமரிப்பு செயற்பாடுகளுக்காக 1,100 மில்லியன் ரூபா வரை செலவிடப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்கட்டினார்.

ஒரு வருடத்திற்கு செலவாகும் இந்த செலவு பொலிஸ் வைத்தியசாலையின் ஒரு வருடத்திற்கான செலவை விட அதிகம் என குறிப்பிட்ட அமைச்சர், இவ்வாறான செயற்பாடுகளை மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். அதற்காக குழு

ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், குழுவின் சிபாரிசுக்கு இணங்க எதிர்காலத்தில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்றும், அந்த அமைச்சரவை பத்திரத்திற்கு இணங்க சகல முன்னாள்

ஜனாதிபதிகளுக்குமான சலுகை முறைகள் மற்றும் பாதுகாப்புடன் தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

மேலும் விசேட பாதுகாப்பு தேவைப்பாடு உள்ள முன்னாள் ஜனாதிபதிகளுக்காக விசேட பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் விபரித்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு நீக்கப்படவில்லை என்றும், அவருக்கு ஏற்கனவே 57 பாதுகாப்பு அதிகாரிகள் காணப்படுவதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஆடைகளை அவிழ்த்துவிட்ட மாணவிக்கு பாதுகாப்பு
Posted in உலக செய்திகள்

ஆடைகளை அவிழ்த்துவிட்ட மாணவிக்கு பாதுகாப்பு

ஆடைகளை அவிழ்த்துவிட்ட மாணவிக்கு பாதுகாப்பு

ஆடைகளை அவிழ்த்துவிட்ட மாணவிக்கு பாதுகாப்பு ஈரானில் பொது இடத்தில் ஆடைகளை அவிழ்த்துவிட்ட மாணவிக்கு ‘பாதுகாப்பு’ இல்லை
முதலில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் அந்த பெண் ஒரு வசதியில் சிகிச்சை பெற்று வருவதாக ஈரான் அரசாங்கம் கூறுகிறது

ஈரான் ஒரு பல்கலைக்கழகத்தில் தனது ஆடைகளை கழற்றியதற்காக கைது செய்யப்பட்ட ஒரு பெண் மாணவிக்கு எதிராக இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

சனிக்கிழமையன்று வடமேற்கு தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழக வளாகத்தில் இளம் பெண் தனது உள்ளாடைகளை பொது இடத்தில் கழற்றினார், இது ஈரானின் கட்டாய இஸ்லாமிய ஆடைக்

குறியீட்டிற்கு எதிரான எதிர்ப்பாக மனித உரிமை வழக்கறிஞர்கள், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் சில சமூக ஊடக பயனர்களால் உணரப்பட்டது.

பல்கலைக் கழகப் பாதுகாப்பால் தடுத்து வைக்கப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரியும் சில உள்ளூர் ஊடகங்களும் அந்தப் பெண்ணை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சித்தரித்தன.

உள்ளூர் ஊடகங்களும் இளம் பெண்ணின் முன்னாள் கணவரைக் காட்டுவதாகக் கூறப்படும் ஒரு கிளிப்பைப் பகிர்ந்துள்ளன.

முகம் மங்கலாக இருந்த அந்த நபர், தான் மனநலம் பாதிக்கப்பட்டு இரண்டு குழந்தைகளின் தாய் என்று அழுவதும், தான் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறுவதை கேட்க முடிந்தது.

சந்திரிக்காவின் பாதுகாப்பு நீக்கப்படவில்லை
Posted in இலங்கை செய்திகள்

சந்திரிக்காவின் பாதுகாப்பு நீக்கப்படவில்லை

சந்திரிக்காவின் பாதுகாப்பு நீக்கப்படவில்லை

சந்திரிக்காவின் பாதுகாப்பு நீக்கப்படவில்லை ,முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு நீக்கப்படவோ அல்லது குறைக்கப்படவோ இல்லையென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“முன்னாள் ஜனாதிபதிகள் குறிப்பாக சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் பாதுகாப்பு நீக்கப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார். அப்படி எந்த நீக்கமும்

செய்யப்படவில்லை. 30 வரை குறைக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார். அது தவறு. அவருக்கு தற்போது 57 பேர் வழங்கப்பட்டுள்ளனர்.”

மகிந்தவின் பாதுகாப்பு நீக்கப்பட கூடாது
Posted in இலங்கை செய்திகள்

மகிந்தவின் பாதுகாப்பு நீக்கப்பட கூடாது

மகிந்தவின் பாதுகாப்பு நீக்கப்பட கூடாது

மகிந்தவின் பாதுகாப்பு நீக்கப்பட கூடாது ,போரை முடிவுக்கு கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு நீக்கப்பட கூடாது என சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

வத்தளை பிரதேசத்தில் நேற்று (31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“மகிந்த ராஜபக்சவை நாம் ஒருபோதும் மறக்க முடியாது.

நமது அரசியல் கதை என்னவாக இருந்தாலும், அவரை மறக்க முடியாது. அவர் ஒரு யுக மனிதர்.

நாட்டை போரில் இருந்து காப்பாற்றிய தலைவரே மஹிந்த ராஜபக்ஷ.

எனவே அவரது பாதுகாப்பை நீக்குவது சரியல்ல.

2008ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை கவிழ்க்க வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க முயற்சித்தார்கள் என்பதை நான் அவர்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

அது ஏன்… போரின் கடைசி நாட்களில் போரை நிறுத்த நினைத்தார்கள், ஏனெனில் இந்நாட்டு தமிழ் மக்கள் மீதுள்ள அன்புக்காகவோ அல்லது இந்நாட்டின் பிற இனத்தவர் மீது கொண்ட அன்பிற்காகவோ அல்ல. NGOக்களின் சகவாழ்வுக்காக.

இந்நாட்டில் போரை முடிவுக்குக் கொண்டு வந்த மகிந்தவுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு, கவனிப்பே அன்றி வேறில்லை” என்றார்

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் பென்டகன் பயணத்தை ரத்து செய்தார்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் பென்டகன் பயணத்தை ரத்து செய்தார்

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் பென்டகன் பயணத்தை ரத்து செய்தார்

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் பென்டகன் பயணத்தை ரத்து செய்தார் ,ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேலின் பதிலடிக்கு பிராந்தியம் தயாராகி வரும் நிலையில், ரத்து செய்யப்பட்ட பயணம் வந்துள்ளது.

கடந்த வாரம் ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு இஸ்ரேல் எதிர்பார்க்கும் பதிலடிக்கு பிராந்தியம் பிரேஸ் செய்வதால்,

இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரி யோவ் கேலண்ட், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டினை சந்திக்கும் திட்டத்தை ரத்து செய்தார்.

பென்டகனின் செய்தித் தொடர்பாளர் செவ்வாயன்று காலன்ட் தனது பயணத்தை நிறுத்தியதை உறுதிப்படுத்தினார்.

இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு ஜனாதிபதி ஜோ பிடனுடன் “தொலைபேசி அழைப்பை” பெறும் வரையில் கையொப்பமிட மறுத்ததால்

பயணம் கைவிடப்பட்டது என்ற செய்திகள் குறித்து கருத்து தெரிவிக்க பென்டகன் மறுத்துவிட்டது, மேலும் இஸ்ரேலிய அமைச்சரவை ஈரானுக்கான பதிலை அங்கீகரிக்கிறது.

“நான் இஸ்ரேலிய அரசியலில் இருந்து விலகி இருக்கப் போகிறேன்” என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் சப்ரினா சிங் செய்தியாளர்களிடம் கூறினார். “நான் அதைப் பற்றி அதிகம் படிக்க மாட்டேன்.”

ஆஸ்டின் மற்றும் கேலன்ட் ஒரு “சிறந்த உறவை” கொண்டுள்ளனர் மற்றும் 80 முறைக்கு மேல் பேசியுள்ளனர், சிங் மேலும் கூறினார்.

ரணிலின் பாதுகாப்பு தொடர்பில் வௌியான தகவல்
Posted in இலங்கை செய்திகள்

ரணிலின் பாதுகாப்பு தொடர்பில் வௌியான தகவல்

ரணிலின் பாதுகாப்பு தொடர்பில் வௌியான தகவல்

ரணிலின் பாதுகாப்பு தொடர்பில் வௌியான தகவல் ,முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக

வெளியாகியுள்ள தகவல் முற்றிலும் பொய்யானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 50 அதிகாரிகள் உட்பட பாதுகாப்பு தரப்பினர்

தொடர்ந்தும் செயற்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் ‘அத தெரண’

வினவியதற்கு பதிலளிக்கும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்படவுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கை விரைவில் தீர்மானிக்கப்பட்டு நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவை ஸ்தாபிப்பதற்கு தேவையான அதிகாரிகளின்

எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு படை பிரதானிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

பாதுகாப்பு படை பிரதானிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

பாதுகாப்பு படை பிரதானிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

பாதுகாப்பு படை பிரதானிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு ,புதிய ஜனாதிபதியாக நியமனம் பெற்றதன் பின்னர் நாட்டின் பாதுகாப்பு

படைகளின் பிரதானிகள் சம்பிரதாயபூர்வமாக நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் முப்படைத் தளபதி ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினர்.

அதன்படி பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத்

தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்‌ஷ மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து சினேகபூர்வமாக கலந்துரையாடினர்.

இதன்போது நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

முன்னாள் ஜனாதிபதிகள் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடல்
Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகள் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடல்

முன்னாள் ஜனாதிபதிகள் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடல்

முன்னாள் ஜனாதிபதிகள் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடல் ,முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முக்கியஸ்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இன்று (30) விசேட கலந்துரையாடலொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த கலந்துரையாடல் அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உள்ளிட்டோர் இதில் பங்கேற்க உள்ளனர்.

அண்மையில், முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளிட்ட உயரதிகாரிகளின் பாதுகாப்பை நீக்க அரசாங்கம் தீர்மானித்தது.

எவ்வாறாயினும், அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதிகள் தங்களின் பாதுகாப்பு மற்றும் தமக்கு தேவையான பாதுகாவலர்களின் எண்ணிக்கை குறித்து அறிவித்துள்ளனர்.

இதன்படி, இந்த விடயம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக இந்த கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.

இதேவேளை, பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் உத்தியோகத்தர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக ஏனைய கடமைகளில் ஈடுபட்டு வந்த உத்தியோகத்தர்களை சேவையின்
தேவையின் அடிப்படையில் பொலிஸ் நிலையங்களில் இணைப்பதற்கு பதில் பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு
Posted in இலங்கை செய்திகள்

நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ,இலங்கையில் வரும் 15ஆம் தேதிக்குப் பின்னர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கையினுடைய காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர்.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இடம் பெற உள்ள நிலையில் கட்சிகள் பல போட்டிகளிலும் கட்சி தகவலும் ஈடுபட்டு வருகின்ற நிலையில்,

நாட்டில் பல குண்டு வெடிப்புகள் ஏதும் இடம் பெறலாம் என்று நிலையிலேயே தற்பொழுது இரு ராணுவம் போலீஸ் பாதுகாப்பு நீடிக்கப்பட்டுள்ளது.

தேர்தலை செவ்வனே செய்து முடிப்பதற்கும், அதற்கு எவ்வித இடையூறு இடம் பெறாமல் பாதுகாக்கும் நோக்குடன், காவல்துறையினர் மற்றும் ஆயுதம் ஏந்திய ராணுவத்தினரும் ஆங்காங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமாக இருந்தால் பல்வேறுபட்ட நயவஞ்சகங்களின் ஊடாகவே வெற்றியை பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலை காணப்படுகின்றது.

அதனை அடுத்து தேவாலயங்கள் பள்ளிவாசல்கள் மற்றும் மக்களது ஆலயங்களில் உள்ளிட்டவர்களில் குண்டு வெடிக்க கூடிய அபாயம் காணப்படுகின்றது .

அதனால் பொதுமக்கள் தற்பொழுது உஷாராக இருக்க வேண்டும் என்கின்ற கருத்துக்களும் வெளியிடப்பட்டு வருகின்றன.

இலங்கை திரு நாட்டில் இறையாண்மையுடன் மக்கள் தனி சுதந்திரமாக வாழ வேண்டுமாக இருந்தால் இணக்கப்பாட்டுடன் கூடிய ஒரு நல்லாட்சி உரிய அரசர் ஒருவர் வருகின்ற பொழுதுதான்,

அதனை ஏற்பாடு செய்து அதன் ஊடாக வெற்றிகொள்ள முடியும் என்கின்ற கருத்து பரவி வருகின்ற நிலையில் தற்போது இந்த ராணுவம் குறிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது..

இலங்கையில் பாதுகாப்பு அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் பாதுகாப்பு அதிகரிப்பு

இலங்கையில் பாதுகாப்பு அதிகரிப்பு

இலங்கையில் பாதுகாப்பு அதிகரிப்பு ,இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் தேர்தல் இடம் பெற உள்ள நிலையில் தற்போது நாட்டினுடைய பாதுகாப்பை பலப்படுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து தற்பொழுது வீதிகள் பிரதான நகரங்கள் என்பவை சுற்று காவலுக்கு உள்ளாக்கப்பட்டு ,ராணுவம் போலீசார் என்பன குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து எவ்வளையும் எங்கும் எதுவும் நடக்கலாம் என்று நிலை காணப்படுகிறது .

அதனை அடுத்து தற்பொழுது தேர்தல் தொடர்பான பல்வேறுபட்ட விடயங்களில் சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்ற நிலையில்,

நாட்டின் உடைய பாதுகாப்பை பலப்படுத்தி மக்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு வேண்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது.

தமக்கு பிடித்தவரை தெரிவு செய்யும் நடவடிக்கையில் வாக்காளர்கள் தயாராகி வருவதாகவும் ,

வாக்காளர்கள் நேரடியாக வந்து வாக்களிப்ப்பு

அவ்வாறு வாக்காளர்கள் நேரடியாக வந்து வாக்களிப்பதற்கான அனைத்து நடைமுறையை மேற்கொள்ள வேண்டும் என்கின்ற விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் உரிய முறையில் நடத்துவதற்கு மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதன் ஊடாகவே தேர்தலில் சீர் குழைவு இல்லாத முறையில் நடத்த முடியும் என்பதால்,

தற்பொழுது நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு மற்றும் சுற்றி வளைப்பு தேடுதல் என முடிக்கி விடப்பட்டுள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றனர்.

பாதுகாப்பு வலயமென்று
Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

பாதுகாப்பு வலயமென்று

பாதுகாப்பு வலயமென்று

பாதுகாப்பு வலயமென்று
பாதை தேடி நகர்ந்தோமே!
பாதகரின் ஆப்பு என்று
பாதம் வைக்க உணர்ந்தோமே!

பாதி வாழ்வை தக்கவைக்க
பாரங்களைச் சுமந்தோமே!
பாரத்தோடு பகலிரவாய்
பாவிகளாய் அலைந்தோமே!

சோறு சுகம் குறைந்தபோதும்
சோர்வு இனறி நடந்தோமே!
சேறுதண்ணியில் புதைந்தபோதும்
தேசம் என்றே கடந்தோமே!

வேறுபடை வந்தபோதும்
வேங்கையாக நிமிர்ந்தோமே!
ஆறமனம் அமைதியின்றி
அடிக்கடி இடம்பெயர்ந்தோமே!

காலம் பதில் சொல்லுமென்று
கனவோடு வாழ்கிறோமே!
காயங்களைச் சுமந்துகொண்டே
காலங்களைக் கடக்கிறோமே!

-பிறேமா(எழில்)-

சிங்ககொடியுடன் நடப்பவருக்கு பொலிஸ் பாதுகாப்பு
Posted in இலங்கை செய்திகள்

சிங்ககொடியுடன் நடப்பவருக்கு பொலிஸ் பாதுகாப்பு

சிங்ககொடியுடன் நடப்பவருக்கு பொலிஸ் பாதுகாப்பு

சிங்ககொடியுடன் நடப்பவருக்கு பொலிஸ் பாதுகாப்பு.இலங்கையை சுற்றி நடக்கும் வாலிபருக்கு பொலிஸ் பாதுகாப்புடன் சாதனை நிகழ்வு .

சிங்கள சகோதர மொழி நண்பரான செல்டன் பெராரோ ஒருவர் ,சாதனையையும் ஒற்றுமையும் நிலை நாட்ட ,இலங்கை தேசிய கொடியை தாங்கி பிடித்தவாறு நடை பயில்கின்றார் .

இவரது இந்த சாதனை நல்லிணக்க நிகழ்வானது அம்பாறை மத்திய முகாமில் இருந்து ஆரம்பிக்க பட்டுள்ளது .

சாதனை படைக்க நடை பயணம்

52 நாட்கள் திட்டமிட்ட படி இவர் எங்கு தொடங்கியதோ அங்கு சென்றடைவார் .

இவ்வாறு இவரது நடைபயணமானது 12 நாட்கள் கழிந்து யாழ்ப்பாணம் வந்தடைந்தது . இவரை கண்ணுற்ற மக்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர் .

இலங்கை தேசிய கொடியை பிடித்து செல்கின்ற பொழுது ,இவருக்கு ஏதும் நேர்ந்து விடலாம் என்பதால் போலீசார் பாதுகாப்பு வழங்க இவர் நடந்து செல்கின்றார் . .

இவரது இந்த நடவடிக்கையானது இலங்கை சிங்கள தேசம் என்பதை பறை சாற்ற இவர் தேசிய கொடியினை பிடித்து நடந்து செல்கிறார் .

சிங்கள மக்கள் மொழி இனம் என்கின்ற அடிப்படையில் ,அவர் தனது தாய் நாட்டு கொடியை தாங்கி பிடித்து நடந்து செல்கிறார் .

புலிக்கொடி பிடித்து தமிழர் நடந்திட அனுமதி உண்டா ..?

ஆனால் இதே போன்று புலிக்கொடியை பிடித்து எம் தமிழரை இலங்கை முழுவதும் கடந்து செல்ல இனவாத சிங்களவர்கள் அனுமதி அளிப்பார்களா..? ,அரசு பொலிஸ் அனுமதி அளிக்குமா என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது .

எனினும் இவர் தன்னை வருத்தி சாதனை நிலை நாட்ட நடக்கும் ,இந்த பயணத்தை ,இன பேதம் கடந்து வரவேற்று வாழ்த்தி அனுப்பி வையுங்கள் .

தமிழ் உரையாடி அசத்திய சிங்கள சகோதரர்

எம் தமிழை பேசி யூடுப்பர் ஒருவருக்கு இவர் வழங்கிய செவ்வி அளப்பெரியது .எம் மொழியை முயன்றவரை அவர் அதிலேயே உரையாடி, தனது நடை பயண நோக்கத்தை விளங்க படுத்தினார் .

அதற்கு தலை சாய்த்து நன்றிகள் தெரிவிப்போம் ,மனிதத்தோடு அணுகி சகோதர மொழி நண்பரை வாழ்த்தி அனுப்புங்கள் தமிழர்களே .

தமிழர்கள் அறம் நிறைந்தவர்கள் என்பதை இதன் பொழுது தெரிய படுத்துங்கள் மக்களே .

பள்ளிவாசல்களுக்கு சிறப்பு பாதுகாப்பு
Posted in இலங்கை செய்திகள்

பள்ளிவாசல்களுக்கு சிறப்பு பாதுகாப்பு

பள்ளிவாசல்களுக்கு சிறப்பு பாதுகாப்பு

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைவாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் இந்த கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் உள்ள அனைத்து பள்ளிவாசல் நிர்வாகத்தோடு கலந்துரையாடி சிறப்பு பாதுகாப்பு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள 3,203 பள்ளிவாசல்களில் மத வழிபாடுகள் நடைபெறும் 2,453 பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கபடவுள்ளன.

இந்த பணிகளில் 5,580 பொலிஸார், 510 விசேட அதிரடிப்படையினர் மற்றும் 1,260 இராணுவ வீரர்கள் உட்பட 7,350க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தரை தாக்கிய கும்பல்
Posted in இலங்கை செய்திகள்

வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தரை தாக்கிய கும்பல்

வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தரை தாக்கிய கும்பல்

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையினுள் உட்புகுந்த இனம் தெரியாத சிலர் பாதுகாப்பு உத்தியோகரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

வைத்தியசாலைக்கு இன்று மாலை மது போதையில் வந்த சிலர்
கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரைப் தலையில் பலமாக தாக்கினர்.

பாதுகாப்பு உத்தியோகத்தரின் அலுவலக ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனை தடுக்க வந்தவர்களையும் தகாத வார்த்தைகளால் கடுமையாக மிரட்டிச் சென்றுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிசாருக்கு வைத்தியசாலை நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு, பொலிசார் வாக்கு மூலங்களைப் பதிவு செய்து, விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்