70000 பொலிஸார் பாதுகாப்பு கடமையில்
Posted in இலங்கை செய்திகள்

70000 பொலிஸார் பாதுகாப்பு கடமையில்

70000 பொலிஸார் பாதுகாப்பு கடமையில்

70000 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கையின் காவல்துறையில் அறிவித்திருக்கின்றனர்.

எதிர்வரும் உள்ளூர் ஆட்சி தேர்தலை மையப்படுத்தி நாடாளாவியரீதியில் வன்முறைகள் அசம்பாவிதங்கள் இடம்பெறாத தடுப்பதற்காக இந்த 70000 போலீசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை போலீஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில், மக்கள் போக்குவரத்து இலகு படுத்தவும் ,அங்கு வன்முறைகள் அசம்பாவிதங்கள் இடம்பெறாத தடுப்பதற்காகவும் ,போலீசார் பெருந்தொகையில் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் காலத்தை அடுத்து ,போலீசாருக்கு வழங்கப்பட்ட விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டு, தற்பொழுது அவர்கள் சிறப்பு படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளமைக்கு மாறாக இம்முறை தேர்தலுக்கு .அதிக ஆயிரம் போலீசார் தேர்தல் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள .தகவல்களும் வெளியாகி இருக்கின்றன.

விசேட வீதி ரோந்துகள் வீதி சோதனைகள் சுற்று காவல் நடவடிக்கைகள் என இந்த விசேட போலீஸ் அணிகள் நடத்தி வருவதாக தெரிய வருகிறது.