Tag: காவடி
காவடி ஆட்டிக்கொண்டிருந்த இளைஞன் மரணம்
காவடி ஆட்டிக்கொண்டிருந்த இளைஞன் மரணம்
காவடி ஆட்டிக்கொண்டிருந்த இளைஞன் மரணம் ,அம்பலாங்கொடை, மாதம்பேயில் உள்ள சுவிசுத்தாராமய விஹாரையில் ஏற்பாடு செய்த
ஊர்வலத்தின் போது காவடி நடனமாடிக்கொண்டிருந்த 20 வயது இளைஞர் ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்ததாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எட்கந்துர, தனபத்தேகம பகுதியைச் சேர்ந்த பி.எம்.மஹிஷ பிரபாஷன என்ற 20 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.
மதம்பே நகர வீதிகளில் ஊர்வலம் சென்று கொண்டிருந்தபோது காவடி நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் நோய்வாய்ப்பட்டார்.
அவர், பலபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
கிரிக்கெட் வீரரான உயிரிழந்த இளைஞருக்கு எந்தவிதமான தொற்று நோயும் இல்லை என்றும், இளைஞனின் மரணம் நினைத்துப் பார்க்க முடியாதது என்றும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தியாகத்துக்கான காவடி தமிழர்
தியாகத்துக்கான காவடி தமிழர்
தியாகத்துக்கான காவடி தமிழர்
தாயகத்தின் காவடி.
மனக்காயத்தோடு உறங்கியவனின்
மரியாதைக்கான காவடி.
கடவுளுக்கான காவடி மக்கள்
கண்ணீரின் காவடி.
நினைவுகளைச் சுமந்தை செல்லும்
நெஞ்சங்களின் காவடி.
திலீபனுக்கான காவடி தேச
வீரனுக்கான காவடி.
வலியோடு நோன்பிருந்தவனுக்காக
வரலாற்றுக் காவடி.
அகிம்சைக்கான காவடி பெரும்
அநீதிக் கெதிரான காவடி.
வம்சங்கள் செடில் குத்தியாடும்
விடுதலைக்கான காவடி.
பருக நீர்மறுத்து பலநாள்
பசி இருந்தவனுக்கான காவடி.
முருகன் வாசலில் மூச்சுவிட்ட
புதல்வனுக்கான நாளடி❗
-பிறேமா(எழில்)-
- வெளியில் தெரியாத வேர்கள்.

- சேரன் குளிர்களி

- ஈழத் தமிழச்சி ஏலாத் தமிழச்சியா

- பாதுகாப்பு வலயமென்று

- செட்டிகுள முகாமும் சீ என்ற வாழ்க்கையும்

- தனியாகப் போறவளே

- அப்பான்ர சைக்கிளே அந்தநாள் வாகனம்

- பாரதமே இவர்களையாவது பறக்கவிடு

- டெங்கொழிக்க எங்களின் பங்கு

- மழைக்காலத் துன்பங்கள்

- நாங்கள் மலர்ந்துவிட்டோம்.

- சினிமாவுக்குள் மூழ்கும் சீமான்களுக்கு

- ஓடிஓடி வாழ்ந்தபோதும் ஓய்ந்திடாத கல்வி

- இளைஞரில்லா இலங்கை

- தியாகத்துக்கான காவடி தமிழர்









