Posted in இலங்கை செய்திகள்

இலங்கை வந்தடைந்த சீனா அரிசி கப்பல்

இலங்கை வந்தடைந்த சீனா அரிசி கப்பல்

இலங்கையில் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கா அதிகாரத்தில் உள்ள பொழுது முதலாவது சீனாவின் அரசி கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.

சீனாவின் இந்த கப்பலில் 500 மெட்ரிக் தொன் அரிசி ஏற்ற பட்டு வந்தடைந்துள்ளது .


இந்த சீனாவின் அரிசி கப்பல் இலங்கையில் உள்ள சிறார்களின் உணவு தேவையை பூர்த்தி செய்திடும் என தெரிவிக்க படுகிறது .

    Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

    சீனா கடனால் சீரழிந்தத இலங்கை உண்மையை உடைத்த அமெரிக்கா உளவுத்துறை

    சீனா கடனால் சீரழிந்தத இலங்கை உண்மையை உடைத்த அமெரிக்கா உளவுத்துறை

    ,

    இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணம் சீனா வழங்கிய கடன் பொறியே என அமெரிக்கா உளவுத்துறை உண்மையை உடைத்து தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவின் உளவுத்துறை தலைவர் நிகழ்வு ஒன்றில் பேசும் பொழுது இன்று இந்த பொருளாதார நெருக்கடியில் இலங்கை நாடு சிக்கி தவிக்க சீனாவின் கடன் பொறியும் அதிகமான வட்டி வீதமும் மூலம் என இடித்துரைத்துள்ளார்.

    ஆசை காட்டி சீனா நாடுகளை கடன் நிலைக்கு தள்ளி அந்த நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நரி திட்டமே இது என்கிறது .

    இலங்கையில் நெருக்கடி ஏற்படும் ரணில் எச்சரிக்கை

    இலங்கையை கைவிட்ட உலக நாடுகள் பிச்சைக்கார நாடான இலங்கை

    இலங்கை இன்று இந்த நிலையில் சிக்கி தவிக்க சீனாவே காரணம் என அமெரிக்கா உளவுத்துறை விடயத்தை போட்டுடைத்துள்ளது.

    பவுத்த மதம் என்ற நிலையில் சீனாவுடன் ஒட்டி உறவாடிய இலங்கைக்கு இன்று இந்த பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படக்காரணமாக அமைந்தது.

    சீனா கடனால் சீரழிந்தத இலங்கை உண்மையை உடைத்த அமெரிக்கா உளவுத்துறை

    மேலும் சீனா வழங்கிய பல பில்லியன் டொலர் காரணமாக அதில் லஞ்ச ஊழல் மோசடி புரிந்து ஏப்பம் விட்டது மறு காரணம் என தெரிவிக்க படுகிறது.

    சீனாவின் இந்த நெருக்கடி ஏனைய நாடுகளுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என அமெரிக்கா உளவுத்துறை எச்சரித்துள்ளது.


    அப்படி என்றால் மேலும் சில நாடுகள் சீனாவின் கடன் பொறிக்குள் சிக்கியள்ளது என்பதையே அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கிறது.

    வளர்ந்து வரும் நாடுகளில் அபிவிருத்தி என்கின்ற போர்வையில் காபட் வீதிகளை அமைக்கும் ஒப்பந்தத்தில் சீனா களம் இறங்குகிறது .

    அதன் ஊடாக வீதிகளை அபிவிருத்தி செய்வதுடன் தனது தயாரிப்பு வாகனங்களையும் அங்கே இறக்குமதி செய்து விடுகிறது .

    அந்த நாட்டி செல்வ செழிப்பை சுரண்டிட இவ்விதமான ஆடம்பர ஆசைகளை காண்பித்து அந்த மக்களையும் நாட்டையும் இவ்விதம் நெருக்கடியில் சிக்க வைத்து தனது அரசியல் மேலாண்மையை அந்த நாடுகளில் நிறுவி விடுகிறது .

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் சீனா,இந்தியா கடும் போட்டி

      இலங்கையில் சீனா,இந்தியா கடும் போட்டி

      இலங்கையில் ஏற்பட்டுள்ள இன்றைய நெருக்கடி நிலையை அடுத்து தற்பொழுது

      சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் போட்டிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

      இந்த போட்டிகளின் விளைவாக இரு நாடுகளும் முண்டியடித்து இலங்கைக்கு கடன் அடைப்படையில்


      உதவிகளை வழங்கிய வண்ணம் உள்ளன
      இது இலங்கையை தமது கட்டுப்பட்டுக்குள் வைத்து கொள்ளும் சதுரங்க ஆட்டமாக மாற்றம் பெற்றுள்ளது

      கடனை கொடுத்து இலங்கையை சிதைத்த சீனா நல்ல பிள்ளை வேடம்

      போட்டு மீளவும் நெருக்கடி நிலைக்குள் தள்ளிவிட தனது விளையாடலை ஆரம்பித்துள்ளது

      இது மகிந்த சிந்தனைகளின் மீள் இடம்பெறும் தவறான ஆட்டமாக நோக்க படுகிறது ,எதிர்வரும் மூன்று ஆண்டுகளில்


      இலங்கை மிக மோசமான நிலையை சந்திக்கும் என எதிர் பார்க்கலாம்

        சீனா வெளிநாட்டு அமைச்சர்
        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கைக்கு உதவ சீனா தயாராம் -பொறியில் சிக்கும் இலங்கை

        இலங்கைக்கு உதவ சீனா தயாராம் -பொறியில் சிக்கும் இலங்கை

        நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சீன தூதுவர் Qi Zhenhong, 5 வகையான உதவிகள் தொடர்பில் விபரித்துள்ளார்.

        அதாவது வேகமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அதிகளவான வெளிநாட்டு நேரடி முதலீடு, வர்த்தகம், இரு தரப்பு கடன் தீர்வு மற்றும் இலங்கைக்கான ஆதரவு

        ஆகியவற்றை கருத்தில் கொண்டு சீனாவிடம் இருந்து இலங்கைக்கு ஐந்து வழி முறையிலான உதவிகளை எடுத்துரைத்தார்.

        கடந்த மே 24 அன்று அவர் தனது மனைவி ஜின் கியான் உடன் இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கு மூன்று நாள் பயணத்தை திருகோணமலையில் இருந்து

        தொடங்கினார், இவர்களுக்கு ஆளுநர் மற்றும் பல்வேறு தரப்பினரின் அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

        தூதுவர் மற்றும் அவரது மனைவி Jin Qian ,சீன வர்த்தக சபை பிரதிநிதிகளுடன் வணிக மன்றத்தில் சந்திப்பு இடம்பெற்றது. அதன்போது இலங்கை எதிர்கொண்டுள்ள

        தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க,
        சீன அரசு அதிக முதலீட்டை வழங்கி ஊக்குவிக்க எண்ணி உள்ளதாக தெரிவித்துள்ளார்

          Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

          சீனா ரசியா போர் ஒத்திகை – கடுப்பாகும் அமெரிக்கா

          சீனா ரசியா போர் ஒத்திகை – கடுப்பாகும் அமெரிக்கா

          சீனா மற்றும் ரசியா இணைந்து ஜப்பான் நாட்டின் எல்லை அருகே , போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர் ,

          இந்த போர் ஒத்திகை நடவடிக்கையில் சீனா ரசியா போர் விமானங்கள் ,கப்பல்கள்
          பறந்து பெரும் தாக்குதல் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன

          சீனா ரசியாவின் இந்த திடீர் கூட்டிணைந்த செயல் ,நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

          தாய்வான் மீது இராணுவ தாக்குதலை சீனா தொடுக்கலாம் என்ற
          நிலையில். இந்த போர் ஒத்திகை இடம்பெற்று வருகின்றமை பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

          சீனா ரசியா போர் ஒத்திகை – கடுப்பாகும் அமெரிக்கா

          ரஷியா உக்கிரேன் மீது மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கை போன்று சீனாவும் ரசியாவினது ஆதரவுடன் போரை தொடுத்து விடுமோ என்ற அச்சத்தில் அமெரிக்கா கொதிக்கிறது

          கொரியா பகுதியில் ஜப்பான்,அமெரிக்கா தென்கொரியா என்பன இணைந்து தொடர் போர் ஒத்திகையில் ஈடுத்து வருகின்றன

          அவ்விதமான நாடுகளுக்கு இடையிலான நீண்ட நாட்கள் பகைமைகள் மூன்றாம் உலக போருக்கு வழிவகுக்கலாம் என்ற அச்சமே தற்போது மேலோங்கியுள்ளது .

          பசுபிக் பகுதியில் அமெரிக்கா மேற்கொள்ளும் கூட்டினைந்த நாடுகளின் இராணுவ போர் ஆதிக்க பொறிமுறையை உடைத்து தமது பலத்த நிரூபிக்க வேண்டிய நிலையில் சீனா ,ரசியா உள்ளன ,

          இவைகளே எதிர் காலத்தில் ஏற்பட போகும் மூன்றாம் உலக யுத்தத்தின் வெற்றியை தீர்மானிக்கும் சக்திகளாக மாற்றம் பெற போகின்றன

          அதற்கு அமைவாக நட்புடன் கூடிய பேரம் பேச்சுக்கள் ஊடான இராணுவ கூட்டணியை ரசியா சீனா உருவாக்கி வைத்துள்ளன ,

          இதில் எந்த ஒரு நாட்டுக்கு மூன்றாம் நாடு ஒன்றினால் தாக்குதல் அல்லது பாதிப்பு ஏற்பட்டால் இராணுவ ஒத்துழைப்பை இரு நாடுகளும் ஒன்றுக்கு ஒன்று வழங்கும்

          அவ்விதமான கூட்டு நகர்வின் ஊடாகவே இந்த போர் பயிற்சிகளில் சீனா ரசியா நாடுகள் இணைந்து நடத்திய வண்ணம் உள்ளன

          சீனா ரசியா இந்த போர் ஒத்திகையை நடத்திய வண்ணம் இருக்க சீனாவின் ஆதரவுடன் வடகொரியா தனது ஏவுகணை சோதனைகளை தீவிர படுத்தி வருகிறது

          ,வட கொரியா ஏவுகணைகள் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வரை சென்று தாக்கும் திறன் கொண்டதாக அமைய பெற்றுள்ளது

          பறந்து விரிந்து செல்லும் சீனா ரசிய போர் முறமை அமெரிக்காவுக்கு பெரும் நெருக்கடியான ஒன்றாகவே எதிர் காலத்தில் மாற்றம் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை – வன்னி மைந்தன் –

          • வன்னி மைந்தன் –
            Posted in இலங்கை செய்திகள்

            இலங்கையின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த – விளையாட போகிறோம் சீனா அறிவிப்பு

            இலங்கையின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த – விளையாட போகிறோம் சீனா அறிவிப்பு

            இலங்கையில் நிகழ் காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து அந்த

            நாட்டை மீள தூக்கி நிறுத்திட தாம் அதறகான விளையாட்டை ஆரம்பிக்க போவதாக சீனா அறிவித்துள்ளது

            சீனா கடன்வழங்கிய நிலையில் இந்த நிலைக்கு இலங்கை சென்றமை குறிப்பிட தக்கது

              Posted in Uncategorized

              தாய்வான் கடல் அருகே சீனா போர் ஒத்திகை – போர் பதட்டம் அதிகரிப்பு

              தாய்வான் கடல் அருகே சீனா போர் ஒத்திகை – போர் பதட்டம் அதிகரிப்பு

              சீனா தனது நாட்டின் ஒருபகுதியாக தாய்லாந்தை கூறி வருகிறது ,இதனால் இரு

              நாடுகளுக்கு இடையில் பெரும் முறுகல் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

              இவ்வேளை சீனா அதிரடியாக தாய்வான் கடல் அருகே போர் ஒத்திகையில்

              ஈடுபட்டுள்ளது ,இந்த போர் ஒத்திகை காரணமாக நாடுகளுக்கு இடையில் மீளவும் பதட்டம் ஏற்பட்டுள்ளது

              சீனா தாய்வான் மீது இராணுவ தாக்குதல்களை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது.

                Posted in Uncategorized

                சீனாவில் இடிந்து வீழ்ந்ந்த கட்டிடம் – 53 பேர் மரணம்

                சீனாவில் இடிந்து வீழ்ந்ந்த கட்டிடம் – 53 பேர் மரணம்

                சீனாவில் பாரிய கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதற்குள் வசித்த 53 மக்கள் பலியாகினர்

                இதுவரை பத்து சடலங்கள் மீட்க பட்டுள்ளன

                இந்த விபத்துக்கு காரணமாக விளங்கிய ஒன்பது பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,


                தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                  Posted in இலங்கை செய்திகள்

                  இலங்கைக்கு சீனா அவசர உதவிகளை வழங்கும் – சீனா உறுதி

                  இலங்கைக்கு சீனா அவசர உதவிகளை வழங்கும் – சீனா உறுதி

                  இலங்கைக்கு கடனை அள்ளி வழங்கி மத்திய வங்கியை இலங்கை வரலாற்றில் முதன்

                  முதலாக கறுப்பு பட்டியலில் சீனா இணைத்தது

                  தற்போது எழுந்துள்ள நெருக்கடி நிலையில் இலங்கைக்கு சீனா மேலும் உதவிகளை வழங்கும் என தெரிவித்துள்ளது

                  சீனாவின் இந்த உதவி திட்டம் இலங்கைக்கு மேலும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது வெளிப்படை

                    Posted in Uncategorized

                    கடன் வேணுமா வாங்க தருகிறோம் அழைக்கும் சீனா – தப்பி ஓடும் இலங்கை

                    கடன் வேணுமா வாங்க தருகிறோம் அழைக்கும் சீனா – தப்பி ஓடும் இலங்கை

                    சீனாவிடம் அதிக வட்டிக்கு கடனை பெற்றே இலங்கை அதனை மீள் செலுத்த முடியா

                    நிலையில் சிக்கி தவித்து வருகிறது .அழகான பாலங்கள் ,வீதிகள் என இலங்கையின் யுத்த பூமி எங்கும் காட்சி அளிக்கிறது

                    அந்த அபிவிருத்திக்கு பெற்ற கடனை மீள வழங்க முடியா நிலையில் இலங்கை சிக்கி தவித்து வருகிறது

                    இவ்வேளை இலங்கையின் நிலையினை புரிந்து மேலும் கடன்களை அள்ளி வழங்க

                    காத்திருக்கிறோம் ஓடிவாங்க என சீனா அழைக்கிறது ,ஆனால் இலங்கையோ வாங்கிட தயக்கம் காட்டுகிறது

                    இப்போது கழுத்தளவு மூழ்கியுள்ளது ,மேலும் வாங்கினால் அப்டியே மூழ்கிவிடுவார்கள் ,அந்த சாவு மணி அடிக்கவே சீனா அழைக்கிறது

                      Posted in இலங்கை செய்திகள்

                      இலங்கையில் புகுந்து விளையாடும் இந்தியா சீனா

                      இலங்கையில் புகுந்து விளையாடும் இந்தியா சீனா

                      இலங்கைக்கு பாரிய கடனை வழங்கி அந்த ஆட்சியினை கவிழ்த்துள்ள சீனா அரசானது

                      தற்போது ஏற்படடுள்ள நெருக்கடி நிலையினை அடுத்து மைத்திரி ,சஜித்

                      உள்ளிட்டவர்களை தனித்தனியாக சந்தித்து பேசியுள்ளனர்

                      இதில் இவ்ரகளுக்குரிய தேர்தல் செலவு மற்றும் முக்கிய ஆட்சி அமைப்பு தொடர்பான விடயங்கள் பேச பட்டுள்ளன

                      சீனாவின் இந்தஅவசர சந்திப்பும் கலந்துரையாடலும் இந்தியாவுக்கு கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

                      அதற்கு பதிலாக இந்தியா தமக்கு சார்பான ஒருவர் அரியணையில் ஏறுவதை அது விரும்புகிறது ,அதற்கு ஏற்றது போல


                      இந்தியா டில்லி மையம் காய்களை நகர்த்தி செல்கிறது ,
                      இவர்களது ஆதரவு சஜித் பக்கமே சாய்ந்துள்ளது

                      கடந்த கால மைத்திரி ,ரணில் இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் நகர்வில் ஈடுபட்டனர் ஆதலால் சஜித் வருவதை அவர்கள் விரும்புகின்றனர்

                      இதற்கான பச்சை சமிக்கை இந்தியாவால் வழங்க பட்டுள்ளது ,அதற்கு எதிராக சீன செயல் படுகிறது


                      இந்த பிராந்திய அரசியல் சதுரங்க விளையாட்டில் வெல்ல போவது இந்தியாவா சீனாவா என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வியாகும்

                      • வன்னி மைந்தன் –
                        Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

                        அமெரிக்கா விமானங்களை துரத்திய சீனா விமானங்கள்

                        அமெரிக்கா விமானங்களை துரத்திய சீனா விமானங்கள்

                        கிழக்கு சீனா கடல் பகுதி மேலாக பறப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த அமெரிக்கா விமானங்களை சீனாவின் விமானங்கள் பறந்து சென்று துரத்தி சென்றன ,

                        சீனாவின் விமானங்கள் மிக அருகில் இந்த விமானங்கள் பறந்ததினால் வான் பரப்பில் பெரும் பதட்டம் ஏற்பட்டது

                        எனினும் சீனா விமானங்கள் அமெரிக்கா விமானங்கள் மீது தாக்குதல் எதனையும் நிகழ்த்தவில்லை

                        சீனா அமெரிக்கா நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டு வரும் பனிப் போரின் உச்சமாக இந்த அத்து மீறல் நிகழ்வுகள் பார்க்க படுகின்றன

                        இரண்டாயிரத்து ஐம்பதாம் ஆண்டு உலக வல்லரசா சீனா உருவெடுக்கும் என எதிர் பார்க்க பாடுகிறது ,அதற்கான அணைத்து நகர்விலும் சீனா ஈடுபட்ட வண்னம் உள்ளது

                        சீனாவானது பொருளாடஹரத்திலம் இராணுவ பலத்திலும் தன்னை வேகமாக கடடமைத்து வருகிறது

                        மேலும் பலநாடுகளை பணத்தின் மூலம் தனது கட்டுப்பாட்டுக்குள் அடக்கி வருகிறது ,பல அநாடுக்ளின் ஆட்சியையும் வலேதும் நோக்கில் இது செயலாற்றி வருகிறது

                        இவ்வாறான நிலையில் சீனா மீது தாக்கல் ஒன்றை நடத்தும் முகமாக அமெரிக்கா தொடர் அத்து மீறல் தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது

                        தொடரும் அமெரிக்கா சீனா நாடுகளுக்கு இடையிலான கடல் ஆகாய வழி நுழைவுகளும் அத்து மீறல் செயல் பாடுகளும் போர் ஒன்றை ஏற்படுத்தும் நிகழ்வுகளை முன்னிலை படுத்தி உதயமாகின்றன

                        அமெரிக்கா விமானங்களை துரத்திய சீனா விமானங்கள்

                        அமெரிக்கா விமான தொழில் நுட்பங்களை திருடி அதே போன்ற விமானங்களை சீனா உற்பத்தி செய்து வருகிறது

                        இதற்காக ஆண்டு தோறும் பல மில்லியன் பணத்தை செலவு செய்து வருகிறது சர்ச்சைக்கு உள்ளாகும் சீனாவின் செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் நுழைதலும் அத்துமீறலும் இரு நாடுகளுக்கு இடையில் அதிகார போட்டியை ஏற்படுத்தியுள்ளது

                        அமெரிக்கா விமானங்கள் மேலும் இவ்விதம் நுழைந்தால் தாம் அதனை சுட்டு வீழ்த்துவோம் என சீனா மிரட்டல் விடுத்தது வந்ததும் இவ்வாறான கால பகுதியில் ஏவுகணை தாக்குதலை அது மேற்கொண்டது

                        அவ்வாறு இருந்தும் அமெரிக்கா தனது தொடர் அத்து மீறல் நடவடிக்கையை மேற்கொண்ட வண்ணம் உள்ளது இது சீனா அமெரிக்கா நாடுகளுக்கு இடையில் மேலும் விரிசலை ஏற்படுத்தி வருகிறது .

                        • வன்னி மைந்தன் –

                        பதட்டம் ரசியா
                        Posted in Uncategorized

                        உக்கிரனை மீட்க – ரஷியா சீனாவிடம் இராணுவ உதவி கோரல்

                        உக்கிரனை மீட்க – ரஷியா சீனாவிடம் இராணுவ உதவி கோரல்

                        உக்கிரேன் நாட்டை முழுமையாக மீட்கும் பொருட்டு ரசியா இராணுவம் வேகமாக

                        முன்னேறி வருகிறது ,அந்த நாட்டின் முக்கிய பகுதிகள் அணைத்தும் ரசிய படைகள் வசம் வீழ்ந்துள்ளது .

                        தற்போது கீவ் நகரை அண்மித்து ரசியா இராணுவம் முன்னேறிய வண்ணம் உள்ளது .

                        இவ்வாறான நிலையில் சீனாவிடம் இராணுவ உதவியினை ரசியா கோரியுள்ளதாக அமெரிக்கா உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது

                        அமெரிக்காஇவ்விதம் போலியான செய்திகளை பரப்பி வருவதாக ரசியா குற்றம் சுமத்தியுள்ளது

                        வடகொரியா அதிபர் இறந்து விட்டார் என அமெரிக்கா உளவுத்துறை போலியான

                        செய்தியை பரப்பி பரபரப்பை ஏற்படுத்தியது போன்றே இதுவும் அமையலாம் என்பது நமது கணிப்பு

                          Posted in உலக செய்திகள்

                          போரினை முடிவுக்கு கொண்டுவர ரசியாவுக்கு சீனா அழுத்தம்

                          போரினை முடிவுக்கு கொண்டுவர ரசியாவுக்கு சீனா அழுத்தம்

                          உக்கிரேன் ரசியவனுக்கு இடையில் ஏற்பட்ட போரினை முடிவுக்கு கொண்டும் வரும் படி

                          ரசியாவை சீனா கேட்டு வருகிறது ,இந்த அமைதி நடவடிக்கையை மேற்கொள்ள சீனா

                          ரசியாவுக்கு கடும் அழுத்தம் கொடுத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன

                          போரினை முடிவிக்கு கொண்டு வந்து இயல்பு நிலைக்கு மீள்வும் இரு நாடுகளும் இயங்குவதற்கு


                          உக்கிரேனை ஆக்கிரமித்த பின்னரே ரசியா இந்த அமைதிக்கு உடன்படும் என எதிர்பார்க்க படுகிறது

                            சீனா
                            Posted in Uncategorized

                            பூட்டான் எல்லையில் சீனாவின் கிராமங்கள் – வெடித்தது போர்

                            பூட்டான் எல்லையில் சீனாவின் கிராமங்கள் – வெடித்தது போர்

                            டோக்லோம் பள்ளத்தாக்கில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் சாலை கட்டுமானப் பணிகளை சீனா மேற்கொண்டு வருவது குறித்த செயற்கைக்கோள் படங்கள், புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

                            பூட்டான் எல்லைக்குள் சட்டவிரோதமாக கிராமங்களை உருவாக்கும் சீனா
                            பூட்டான் எல்லையில் கிராமங்களை உருவாக்கும் சீனா

                            இந்தியாவில் கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களை இந்திய படைகள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கு இந்தியாவும், சீனாவும்

                            ஆயிரக்கணக்கில் படைகளை குவித்து கண்காணிப்பு பணிகளை பலப்படுத்தின. இதனால் எல்லையில் கடுமையான பதற்றம் தொடர்ந்து வருகிறது.

                            இதை தணிக்கும் நடவடிக்கையாக சீனப்பகுதியில் உள்ள சுசுல்-மோல்டோ எல்லையில் இந்தியா சீனா ராணுவ அதிகாரிகள் தரப்பில் 14-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன.

                            இந்நிலையில், பூட்டானுக்குள் சட்டவிரோதமாக இரண்டு கிராமங்களை சீனா கட்டமைத்து வருவது குறித்து செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. டோக்லாம் பள்ளித்தாக்கு

                            பகுதியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் சாலை கட்டுமான நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் ஒரு முழு அளவிலான கிராமத்தை அது உருவாக்கி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

                            கடந்த ஆண்டு நவம்பரில் சீனாவின் இந்த அத்துமீறல் கட்டுமான பணிகளை


                            கண்டறிந்ததாக இன்டல் ஆய்வகத்தின் முன்னணி ஆராய்ச்சியாளர் டேமியன் சைமன் தெரிவித்துள்ளார்.

                            சீனாவுக்கும் பூட்டானுக்கும் இடையே உள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் நடந்து வரும் இந்த

                            கட்டுமானப்பணிகள் மேம்பாட்டு நடவடிக்கைகள் மறுக்க முடியாத சான்றாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

                              சீனா
                              Posted in இலங்கை செய்திகள்

                              சீனா வெளிநாட்டு அமைச்சர் இலங்கை வருகிறார்

                              சீனா வெளிநாட்டு அமைச்சர் இலங்கை வருகிறார்

                              இலங்கையில் இடம்பெறவுள்ள சுதந்திர தினத்தை அடுத்து சீனாவின் வெளிநாட்டு அமைச்சர்


                              Wang Yi began இலங்கை வரவுள்ளதுடன் ,

                              இவர் இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதுடன் ,இலங்கையின் பொருளாதார

                              அபிவிருத்தி தொடர்பாகவும் பேச உள்ளார் என தெரிவிக்க படுகிறது

                                Posted in Uncategorized

                                சீனாவின் மலை உச்சியில் ஆபத்தான மரண சாலை

                                சீனாவின் மலை உச்சியில் ஆபத்தான மரண சாலை

                                சீனா உலக நாடுகளில் முக்கிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி சாதனை படைத்தது

                                வருகிறது ,அவ்விதம் உயர் மலை ஒன்றை குடைந்து அதன்வழியாக வீதி அமைக்க பட்டுள்ளது

                                ,இந்த வீதி உலகில் மிக ஆபத்தான மரண சாலை என இடம்பிடித்துள்ளது

                                கரணம் தப்பினால் மரணம் என்பது இது தான் பாருங்கள் மிரள வைக்கும் வீதி

                                  Posted in Uncategorized

                                  சீனாவை பாராட்டிய மகிந்தா – இந்தியாவுக்கு ஆப்பு

                                  சீனாவை பாராட்டிய மகிந்தா – இந்தியாவுக்கு ஆப்பு

                                  இந்நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு சீனாவிடமிருந்து கிடைக்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கைக்கான சீன தூதுவர் சீ.ஷென்ஹொன் அவர்களின் முன்னிலையில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது பாராட்டினை தெரிவித்தார்.

                                  கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சீன தூதுவர் சீ.ஷென்ஹொன் அவர்கள் நேற்று (27) அலரி மாளிகையில் சந்தித்தபோதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

                                  கொவிட் தொற்று நிலைமையை கட்டுப்படுத்தல் மற்றும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்வதற்கு இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்பு தொடர்பில் சீன அரசாங்கத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் கௌரவ பிரதமர் குறிப்பிட்டார்.

                                  இலங்கையின் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்வதற்கு வாழ்த்து தெரிவித்த சீன தூதுவர் சீ.ஷென்ஹொன் அவர்கள், அதற்கு சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்பு தொடர்ந்து இலங்கைக்கு வழங்கப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

                                  சீன மக்கள் வங்கி (PBOC) மற்றும் இலங்கை மத்திய வங்கி (CBSL) இடையிலான 10 பில்லியன் சீன யுவான் மதிப்பிலான இருதரப்பு நிதி பரிமாற்ற ஒப்பந்தமானது, உலகளாவிய முதலீட்டாளர்களின்

                                  உணர்வை வலுப்படுத்தவும், இலங்கையின் பொருளாதாரம் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதற்கும் உதவும் என சீன தூதுவர் இதன்போது வலியுறுத்தினார்.

                                  இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 65 ஆண்டு நிறைவு மற்றும் இரப்பர் அரிசி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாகின்றமை ஆகியவற்றை குறிக்கும்

                                  2022ஆம் ஆண்டானது, இலங்கை – சீன இருதரப்பு உறவின் மிக முக்கியமான ஆண்டாக விளங்கும் என சீன தூதுவர் சீ.ஷென்ஹொன் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்.

                                  அடுத்த மாதம் வரவிருக்கும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு சீன ஜனாதிபதி மற்றும் சீன பிரதமரின் சார்பில் சீன தூதுவர் முன்கூட்டிய பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

                                    Posted in Uncategorized

                                    ஆப்கானிஸ்தான் விமானப்படை தளத்தை சீனா கைப்பற்ற முயற்சி

                                    ஆப்கானிஸ்தான் விமானப்படை தளத்தை சீனா கைப்பற்ற முயற்சி

                                    சீனா, ஆப்கானிஸ்தானில் ஒரு நகர்வுக்கு முயற்சிக்கிறது. பாகிஸ்தானைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக சீனா பலம் பெற முயற்சிக்கிறது.

                                    ஆப்கானிஸ்தான் விமானப்படை தளத்தை சீனா கைப்பற்ற முயற்சி: நிக்கி ஹாலி குற்றச்சாட்டு

                                    ஐ.நா. சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதராக பதவி வகித்தவர் நிக்கி ஹாலி. இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் கேபினட் மந்திரி அந்தஸ்தைப்பெற்ற முதல் இந்திய வம்சாவளி என்ற சிறப்பைப் பெற்ற தலை சிறந்த நிர்வாகி.

                                    ஆப்கானிஸ்தானை கடந்த மாதம் 15-ந் தேதி தலீபான்கள் தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்திருப்பதையொட்டி இவர் அமெரிக்காவின் பாக்ஸ் நியூஸ் டெலிவிஷனுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

                                    ஜோ பைடன் நிர்வாகம், இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற தனது முக்கிய நட்பு நாடுகளை அணுகி, அவர்களது ஆதரவை பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

                                    முதலில் ஜோ பைடன் செய்ய வேண்டியது, நமது கூட்டாளிகளுடன், அது தைவானாக இருந்தாலும், உக்ரைனாக இருந்தாலும், இஸ்ரேலாக இருந்தாலும், ஜப்பானாக இருந்தாலும் சரி, அவர்களுடைய முதுகெலும்பாக இருப்போம் என்று மறு உறுதி செய்ய வேண்டும். நமக்கு அவர்களும் தேவை.

                                    இரண்டாவது, உலகமெங்கும் நாம் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சியை மேற்கொள்கிறோம் என்பதை உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால், இந்த (ஆப்கானிஸ்தானில்) தார்மீக வெற்றியால் போராளிகள் மிகப்பெரிய அளவில் தங்களுக்கு ஆள் சேர்ப்பார்கள். அதை நாம் பார்க்க முடியும்.

                                    நாம் பாதுகாக்கப்பட்டுள்ளோம் என்பதை உறுதி செய்ய வேண்டும். நமது இணையதள பாதுகாப்பு, பத்திரமாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் ரஷியா போன்ற நாடுகள் தொடர்ந்து நம் தளங்களில் ஊடுருவுவார்கள்.

                                    ஏனென்றால் நாம் மீண்டும் போராட தயாராக இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.

                                    நாம் சீனாவைப் பார்க்க வேண்டும். ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ள இந்த தருணத்தில் சீனாவை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்ராம் விமானப்படை தளத்தை சீனா கைப்பற்ற முயற்சி செய்கிறது. (இந்த விமானப்படை தளம் 20 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.)

                                    சீனா, ஆப்கானிஸ்தானில் ஒரு நகர்வுக்கு முயற்சிக்கிறது. பாகிஸ்தானைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக சீனா பலம் பெற முயற்சிக்கிறது.

                                    நமக்கு நிறைய சிக்கல்கள் உள்ளன. எனவே ஜோ பைடன் செய்ய வேண்டிய மிகப்பெரிய விஷயம், நமது கூட்டாளிகளை வலுப்படுத்துவதாகும். அவர்களுடனான உறவை வலுப்படுத்த வேண்டும். நமது ராணுவத்தை நவீனப்படுத்த வேண்டும்.

                                    சைபர் குற்றங்கள் மற்றும் பயங்கரவாத குற்றங்களை எதிர்கொள்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

                                    இவ்வாறு அவர் கூறினார்.

                                    Posted in Uncategorized

                                    இலங்கை இந்திய நலன்களை பாதிக்கும் செயற்பாடுகள் அனுமதிக்கப்படமாட்டாது

                                    இலங்கை இந்திய நலன்களை பாதிக்கும் செயற்பாடுகள் அனுமதிக்கப்படமாட்டாது

                                    கௌதாரிமுனையில் நெற் காணிகளையும் கடலட்டைப் பண்ணைகளையும் பகிர்ந்தளிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

                                    அதனடிப்படையில், தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின்

                                    இணைத் தலைவரான கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சீனா போன்ற நாடுகளிடம் இருந்து கடலட்டை செயற்பாடுகளுக்கான முதலீடுகளையும் தொழில்நுட்பத்தினையும்

                                    பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும், எமது நலன்களுக்கோ அல்லது அயல் நாடான இந்தியாவின் பாதுகாப்பிற்கோ அச்சுறுத்தலை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.

                                    கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று (22.07.2021) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே குறித்த விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டன.

                                    கௌதாரிமுனை கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைமையில் சுமார் 70 இற்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்ட இக்கலந்துரையாடலில், நெற் காணிளுக்கான கோரிக்கைகளை சுமார் 93 பேர் சமர்ப்பித்திருந்தனர்.

                                    அதேபான்று கடலட்டைப் பண்ணைக்கான விண்ணப்பங்கள் சுமார் 27 கடற்றொழிலாளர்களினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன் மேலும் பலர் விண்ணப்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

                                    இவை தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆராய்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விண்ணப்பித்தவர்களுக்கான வயல் நிலங்களை பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகளை அரச சுற்று நிரூபத்திற்கு அமைவாக மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.

                                    அதேபோன்று, கௌதாரிமுனைப் பிரதேசத்தில் இதுவரை 16 கடலட்டைப் பண்ணைகளுக்கான இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், முன்னுரிமை அடிப்படையில்

                                    விண்ணப்பித்தவர்களுக்கு அவற்றை வழங்குமாறும் ஏனையவர்களுக்கான இடங்களை அடையாளப்படுத்துமாறும் சம்மந்தப்பட்ட அதிகாரிக்கு கடற்றொழில அமைச்சரினால் அறிவுறுத்தப்பட்டது.

                                    இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ‘இலங்கை சீனக் கூட்டு நிறுவனத்தினால் கௌதாரிமுனையில் அமைக்கப்படடுள்ள கடலட்டை குஞ்சு பராமரிப்பு நிலையம் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

                                    அதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், அந்தக் கடலட்டை குஞ்சு

                                    பராமரிப்பு நிலையத்தினூடாக எமக்கான முதலீடுகளையும் தொழில்நுட்பத்தினையும் பெற்றுக்கொள்வது தொடர்பில் சிந்தித்து வருகின்றேன்.

                                    சீனா போன்ற நாடுகளில் இருந்து முதலீடுகளும் அனுபவங்களும் தொழில்நுட்பமும் பெற்றுக்கொள்ளப்படுமே தவிர, எமது மக்களினதும் நாட்டினதும் நலன்களை பாதிக்கும் வகையில்

                                    அல்லது அயல் நாடான இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சறுத்தல் ஏற்படும் வகையிலான எந்தவொரு செயற்பாடுகளும் அனுமதிக்கப்பட மாட்டது’ என்று அமைச்சர் தெரிவித்தார்.

                                    முன்னதாக, கிளிநொச்சி மாவட்ட வீதி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலின் போது, கௌதாரிமுனைக்கான சுமார் 16 கிலோ மீற்றர் வீதியை புனரமைப்பதற்கான சாத்தியங்கள்

                                    தொடர்பாக ஆராயுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளிடம் கடற்றொழில் அமைச்சர் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.