Tag: சீனா
சீனா பறந்த ரணில் ஜி ஜின்பிங்கை சந்தித்தார்
சீனா பறந்த ரணில் ஜி ஜின்பிங்கை சந்தித்தார்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது சீன விஜயத்தின் போது, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சற்று முன்னர் சந்தித்துள்ளார்.
சீனாவின் பீஜிங் நகரில் இன்று வெள்ளிக்கிழமை காலை, இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு
- மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த வாரம் பொல்கொல்ல அணை காலி
- மகிந்தா மனைவி மீது பாய்ந்த விசாரனை
- ஞானசார தேரோ அவதூறு வழக்கு செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணை
- அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை
- இருவர் வெட்டி படுகொலை
- லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சபாநாயகர் மீது விசாரணை
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை
- ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நடந்த ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் விசாரணை
4.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் சீனாவுடன் உடன்படிக்கை
4.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் சீனாவுடன் உடன்படிக்கை
சீனா எக்சிம் வங்கியும் இலங்கையும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் உடன்படிக்கைக்கு வந்துள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, கடனை மறுசீரமைப்பதற்கான முக்கிய கொள்கைகள் மற்றும் முக்கிய நிபந்தனைகள் தொடர்பாக பொருத்தமான உடன்பாடு எட்டப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
4.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் சீனாவுடன் உடன்படிக்கை
குறித்த உடன்படிக்கையின் கீழ் சீன வங்கிக்கு செலுத்தப்படவுள்ள கடனானது சுமார் 4.2 பில்லியன் டொலர்களும் உள்ளடக்கியுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இது இலங்கையின் நீண்ட கால கடன் நிலைத்தன்மை மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது
- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு
- மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த வாரம் பொல்கொல்ல அணை காலி
- மகிந்தா மனைவி மீது பாய்ந்த விசாரனை
- ஞானசார தேரோ அவதூறு வழக்கு செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணை
- அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை
- இருவர் வெட்டி படுகொலை
- லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சபாநாயகர் மீது விசாரணை
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை
- ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நடந்த ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் விசாரணை
G77 + சீனா அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் ஜனாதிபதியின் உரை
G77 + சீனா அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் ஜனாதிபதியின் உரை
உலகெங்கிலும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் எதிர்கொள்ளும் தற்போதைய அபிவிருத்தி சவால்களை எதிர்கொள்வதில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களினால் கூடுதல் பங்களிக்க முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
கியூபாவின் ஹவானா நகரில் நேற்று (15) ஆரம்பமான “G77 + சீனா” அரச தலைவர் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
கியூபா ஜனாதிபதி மிகெல் டியெஸ் கெனெல் பெர்மியுடெஸ் தலைமையில் மாநாடு ஆரம்பமாகியதுடன், மாநாடு தொடங்கும் முன், இதில் பங்கேற்ற அனைத்து அரச தலைவர்களும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இந்த மாநாட்டை கூட்டியது குறித்து கியூபா ஜனாதிபதி மிகெல் டியெஸ் கெனெல் பெர்மியுடெஸை (Miguel Diaz-Canel Bermudez) பாராட்டி தனது உரையை ஆரம்பித்த ஜனாதிபதி, பல்வேறு பலதரப்பு அமைப்புகளில், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் நோக்கங்கள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் கியூபா ஆற்றியுள்ள வரலாற்றுப் பங்கை நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
G77 + சீனா அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் ஜனாதிபதியின் உரை
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
“தொற்றுநோய்கள், காலநிலை மாற்றங்கள், உணவு, உரம் மற்றும் வலுசக்தி நெருக்கடிகள் போன்றவை, நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு தடைகளை ஏற்படுத்துகின்றன. அதேபோன்று, அந்த நிலைமையை, உலகளாவிய கடன் நெருக்கடி மேலும், அதிகரிக்கச்செய்வதுடன், அதன் காரணமாக முன்னெப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொள்ளும் நிலை, உலகளாவிய ரீதியில் தெற்கு நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.
15 ஆம் நூற்றாண்டில் துப்பாக்கி குண்டுகள், பீரங்கிகள் மற்றும் கடல் பயணக் கப்பல்கள் போன்ற துறைகள் மூலம் ஐரோப்பா அடைந்த முன்னேற்றங்கள் காரணமாக, அவற்றுக்கு உலகின் பிற நாடுகளைக் கைப்பற்ற முடிந்தது. அதன் விளைவாக, உலகில் இன்று தொழில்நுட்ப ரீதியிலான பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் தோன்றியுள்ளன.
அதிக செலவு காரணமாக, சில தொழில்நுட்ப முறைகளுக்கு பிரவேசிப்பதற்குள்ள வரையறைகள், போதுமான டிஜிட்டல் திறன்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, கலாசார மற்றும் நிறுவன ரீதியில் நிலவும் தடைகள் மற்றும் நிதி தொடர்பான தடைகள் போன்ற சவாலான சூழ்நிலைகள் இத்தகைய ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுத்தது என்பதே எமது நம்பிக்கையாகும்.
21ஆம் நூற்றாண்டில் இந்தப் புதிய தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வு மிகவும் அதிகரித்துள்ளது. அந்த இடைவெளியைக் நிரப்புவதற்காக, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் Big Data, Internet of Things (IoT), செயற்கை நுண்ணறிவு (AI), Blockchain, உயிரியல் தொழில்நுட்பவியல் (Biotechnology) மற்றும் மரபணு வரிசைமுறை (Genome Sequencing) போன்ற புதிய தொழில்நுட்பங்களை நோக்கி நாம் விரைவாக செல்ல வேண்டியது அவசியமாகும்.
அபிவிருத்திப் பொறிமுறைகளைப் பின்பற்றுவதற்கான செயல்முறையை இலகுபடுத்துவதற்குத் தேவையான மாற்றங்களைச் செய்வதற்கும், அந்தச் செயல்முறைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கும், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு, அதற்குத் தேவையான அறிவு மற்றும் முழுமையான தொழில்நுட்பத்துடன், கற்ற தொழிற்படையும் இருக்க வேண்டும்.
தற்போது குறைந்த செயற்திறனுள்ள விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் குறித்து மதிப்பீடுகளைச் செய்வதற்கும், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க சபையொன்றையும், டிஜிட்டல் மாற்ற முகவர் நிறுவனமொன்றையும் நிறுவுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை இலங்கை எடுத்துள்ளது.
மேலும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தொழில்நுட்ப ஒத்துழைப்பின் பிரதிபலனாக, புதிய தொழில்நுட்பவியலுக்காகவே விசேடமான நான்கு புதிய பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கும் இலங்கை திட்டமிட்டுள்ளது. மேலும், காலநிலை மாற்றம் குறித்த உத்தேச சர்வதேச பல்கலைக்கழகத்தை அதில் ஐந்தாவதாக ஸ்தாபிப்பதற்கும் நாம் எதிர்பார்த்துள்ளோம்.
G77 + சீனா அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் ஜனாதிபதியின் உரை
“G77 + சீனா” குழுவில் செயற்திறன் மிக்க ஒத்துழைப்பு பொறிமுறை ஒன்றும் தேவை. உலகளாவிய தெற்கிற்கான விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களுக்கான ஒன்றிணைவு (COSTIS) புத்துயிர் பெறச்செய்வதற்கு அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்வதற்காக ஒரு தசாப்தமாக அவர்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% ஒதுக்குவதன் மூலம், உறுப்பு நாடுகள் சில அர்ப்பணிப்புகளைச் செய்ய வேண்டும் என்றும் நான் பரிந்துரைக்க விரும்புகின்றேன்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறையைப் பின்பற்றி, டிஜிட்டல் மயமாக்கல், சுகாதாரம், மருத்துவம், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பசுமை ஹைட்ரஜன் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைகளில், தொழில்நுட்பத் தளங்களை உருவாக்குவதற்கு அரச துறை மற்றும் தனியார் துறை ஆகிய இரண்டும் ஒத்துழைப்புடன் செயற்படுவது மிகவும் முக்கியமாகும்.
உலகளாவிய ரீதியில் தெற்கிலிருந்து வடக்கிற்கு இடம்பெறும் நுண்ணறிவு ஓட்டத்தின் பிரதிபலனாக கல்வி கற்ற தொழிற்படை இழப்பு, தெற்கின் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறைகளின் வளர்ச்சிக்கு மற்றொரு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் அவர்களின் தொழிற்படைப் பலத்தை மேம்படுத்தி, அதன் மூலம் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தில் முன்னேற்றியுள்ளது. அதன் காரணமாக உலகில் தெற்கு என்ற ரீதியில் நமது கற்ற தொழிற் படை இழப்புக்காக, உலகின் வடக்கில் இருந்த இழப்பீடு கோரப்பட வேண்டும்.
உலகளாவிய ரீதியில், தெற்கு நாடுகளுக்கு இடையில் அதிக ஒத்துழைப்பை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
ஒத்துழைப்பை மேம்படுத்தல், சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்ளுதல், மற்றும் விஞ்ஞானம், தொழிநுட்பம், புத்தாக்கம் ஆகியவற்றின் ஆற்றல்களைப் பயன்படுத்தக் கூடிய கொள்கைகளை மேம்படுத்துவதற்கு கொழும்புத் திட்டத்தைப் போன்ற ஒரு திட்டத்தை உருவாக்குவது குறித்தும் நான் இங்கு பரிந்துரைக்கின்றேன்.
புதிய ஹவானா பிரகடனத்தை ஆதரிப்பதற்காக இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் வலியுறுத்த வேண்டும். “G77 + சீனா” அரச தலைவர்களின் உச்சிமாநாட்டின் கூட்டுக் குரல், சர்வதேச ரீதியில் ஒலிக்கச் செய்ய ஒன்றிணையுமாறும் நான் அனைத்து உறுப்பு நாடுகளிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.
- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்
by நிருபர் காவலன் - சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
by நிருபர் காவலன் - அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்
by நிருபர் காவலன் - நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு
by நிருபர் காவலன் - இஸ்ரேலுக்கான 2.8 பில்லியன் டாலர் ஆயுதத் தொகுப்பிற்கு அமெரிக்கா ஒப்புதல்
by நிருபர் காவலன்
அமெரிக்கா சீனா மோதல் |போர் வெடிக்குமா |இந்தியா இராணுவம் மாயம்|ethiri news
அமெரிக்கா சீனா மோதல் |போர் வெடிக்குமா |இந்தியா இராணுவம் மாயம்|ethiri news
அமெரிக்கா சீனாவுக்கு இடையில் வெடித்த பெரும் மோதல் ,
சிக்கிய முக்கிய ஆயுத நிறுவனங்கள் ,இந்தியா இராணுவத்தை காணவில்லை ,
வெடித்த போர் ,
- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்by நிருபர் காவலன்
- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கைby நிருபர் காவலன்
- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்by நிருபர் காவலன்
- சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்புப் படை பல நகரங்களில் அவசரகால எச்சரிக்கைby நிருபர் காவலன்
- ஏமன் சண்டையில் தங்களுக்குத் தொடர்பில்லை என ஈரான் மறுப்புby நிருபர் காவலன்
G77+ சீனா மாநாட்டுக்கு புறப்பட்டார் ஜனாதிபதி
G77+ சீனா மாநாட்டுக்கு புறப்பட்டார் ஜனாதிபதி
தற்போதைய அபிவிருத்தி சவால்களுக்கு மத்தியில், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தின் வகிபாகம்” என்ற தொனிப்பொருளில்
செப்டம்பர் 14 முதல் 16 வரை கியூபாவின் ஹவானாவில் நடைபெறவுள்ள “G77+ சீனா” அரச தலைவர் மாநாட்டில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (13) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டார்.
- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்புby நிருபர் காவலன்
- மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுby நிருபர் காவலன்
- பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த வாரம் பொல்கொல்ல அணை காலிby நிருபர் காவலன்
- மகிந்தா மனைவி மீது பாய்ந்த விசாரனைby நிருபர் காவலன்
- ஞானசார தேரோ அவதூறு வழக்கு செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணைby நிருபர் காவலன்
சீனா போர் கப்பல் கொழும்பில்
சீனா போர் கப்பலில் கொழும்பில்
சீன மக்கள் விடுதலை இராணுவ கடற்படையின் போர்க்கப்பலான HAI YANG 24 HAO இன்று (ஆகஸ்ட் 10) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
கொழும்பை வந்தடைந்த 129 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 138 பேர் கொண்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர் மற்றும் கமாண்டர் ஜின் சின் தலைமை தாங்குகிறார்.
இதற்கிடையில், கப்பல் ஆகஸ்ட் 12 ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்பட உள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது
- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு
by நிருபர் காவலன் - மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
by நிருபர் காவலன் - பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த வாரம் பொல்கொல்ல அணை காலி
by நிருபர் காவலன் - மகிந்தா மனைவி மீது பாய்ந்த விசாரனை
by நிருபர் காவலன் - ஞானசார தேரோ அவதூறு வழக்கு செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணை
by நிருபர் காவலன்
அமெரிக்காவில் சீனா உளவாளி கைது
அமெரிக்காவில் சீனா உளவாளி கைது
அமெரிக்காவில் இரண்டாவது சீனா உளவாளி கைது செய்யப் பட்டுள்ளார் .
கைதானவர் அமெரிக்காவின் மிக முக்கிய பகுதிகள் மற்றும்
நபர்களை இலக்கு வைத்து தகவல்களை திரட்டி ,
சீனாவுக்கு அனுப்பி வந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
கைதானவர் தொடர்ந்து தீவிர விசாரணைகளிற்கு உள்ளாக்க பட்டுள்ளார் .
சீனா அமெரிக்கா மீது தாக்குதலை நடத்தும் முகமாக,
தமது இராணுவ உளவாளிகளை சர்வதேச
நாடுகள் எங்கும் பரப்பி விட்டுள்ளது .
அமெரிக்காவில் தொடராக சீனா உளவாளிகள்
சிக்கிய வண்ணம் உள்ளமை இரு நாடுகளுக்கு
இடையில் முறுகளை அதிகரித்துள்ளது .
இலங்கைக்கு உத்தரவாதம் வழங்கும் சீனா
இலங்கைக்கு உத்தரவாதம் வழங்கும் சீனா
கடன் சுமையிலுள்ள இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்குத் தேவையான நிதி உத்தரவாதங்களை வழங்குவதாக இந்தியா உத்தியோகபூர்வமாக அறிவித்த சில நாட்களுக்குள், சீனாவும் நிதி உத்தரவாதம் அளிக்கும் என்று அறியமுடிகிறது.
இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்துவதை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நீட்டிக்கப்பட்ட கடன் தொகையை இலங்கை பெறுவதற்குத்
தேவையான நிதி உத்தரவாதங்களை வழங்குவதாகவும் தெரிவித்து சீனா இலங்கைக்கு கடிதம் ஒன்றை வழங்கியுள்ளதாக சில நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு இந்தியா உத்தியோகபூர்வமாக ஆதரவளிக்கும் என சர்வதேச நாணய நிதியத்திற்கு கடந்த 16ஆம் திகதி எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டது.
இலங்கைக்கு உத்தரவாதம் வழங்கும் சீனா
இலங்கை சீனாவுக்கு செலுத்த வேண்டிய கடனை குறுகிய காலத்தில் முடக்குவதற்கு சீனா தீர்மானித்துள்ளதாகவும், இலங்கை கடனாளர்கள் ஒன்றிணைந்து நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டத்தை அமுல்படுத்த
வேண்டுமென, சீனா எதிர்பார்ப்பதாகவும் இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக இந்திய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த செப்டம்பரில், உள்ளூர் அதிகாரிகளும் சர்வதேச நாணய நிதிய குழுவும் 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதியுடன் இலங்கையின் பொருளாதார சீர்திருத்தம் மற்றும் சீர்திருத்தக் கொள்கைகளை ஆதரிப்பதற்கு ஊழியர்கள் அளவிலான உடன்பாட்டை எட்டியது.
அதன்படி, இலங்கை பாரிஸ் கிளப் உறுப்பினர்கள், இந்தியா, ஜப்பான் மற்றும் சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தன.
கடன் மறுசீரமைப்பு செயல்முறையை இறுதி செய்ய அடுத்த வாரம் பாரிஸ் கிளப் உறுப்பினர்களுடன் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று நிதி அமைச்சு உறுதிப்படுத்தியது.
ஜப்பானுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்த அதேவேளை, நாணய நிதியத்துடனான
இலங்கையின் வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிப்பதற்கும் தயாராக இருப்பதாக பாரிஸ் கிளப் ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளது.
சீனாவில் கொரனோவால் 60 000 பேர் மரணம்
சீனாவில் கொரனோவால் 60 000 பேர் மரணம்
சீனாவில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களில்
60,000 பேர் பலியாகியுள்ளதாக சீனா அறிவித்துள்ளது .
இதில் டிசம்பர் ஆரம்பத்தில் இருந்து,
அதன்பின்னர் குறித்த நோயானது வேகமாக
பரவி விட்டது என்கிறது சீனா .
கொரனோ நோயால் ஏற்பட்ட ,
சுவாசக் கோளாறு காரணமாக 5,503 மரணங்கள் ஏற்பட்டன .
சீனாவில் கொரனோவால் 60 000 பேர் மரணம்
டிசம்பர் 8 முதல் கொரனோ நோய் உள்ளிட்ட,
நோய்த் தாக்கம் காரணமாக
54,435 பேர் பலியாகியுள்ளனர் என்கிறது ,
சீனா சுகாதார அமைச்சு .
இந்த நோயினால் பாதிக்க பட்ட அதிகமான மக்கள்
வீட்டிலேயே இறந்திருக்கலாம் என அஞ்ச படுகிறது .
250 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் ,
சீனாவில் கொரனோ நோயால் பாதிக்க பட்டு,
இருந்தமை குறிப்பிட தக்கது .
32 உற்பத்தி பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு சீனா அனுமதி
32 உற்பத்தி பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு சீனா அனுமதி
நாட்டின் உணவு உற்பத்திகளில் 32 வகைளை பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு சீன மக்கள் அரசின் சுங்க நிர்வாகத்தினால் அனுமதி கிடைத்துள்ளது.
இதுதொடர்பாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கையில் இந்த உற்பத்திப் பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக சீன மக்கள் அரசின் சுங்க நிர்வாகத்தினால் அனுமதி கிடைத்திருப்பதாக தெரிவித்தார்.
29 வகையான கடற்றொழில் நீரியல் உற்பத்தி இதில் அடங்குகின்றன. சீன அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 38 இலங்கை நிறுவனங்கள் இவற்றின் ஏற்றுமதியாளர்களாக செயல்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
32 உற்பத்தி பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு சீனா அனுமதி
சீனாவுக்கு இவற்றை ஏற்றுமதி செய்வதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கும் ஊக்குவிக்கும் வகையில் ஏற்றுமதி பொருட்களை பரிசோதித்தல் எள்ளிட்ட விடயங்களுக்காக , சீன அரசாங்கத்தின் சுங்க
பகுதிக்கும் கடற்றொழில் அமைச்சுக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடுவதற்காக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நேற்று (03) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்தில் அமைச்சர் இந்தவியடங்களை குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பினவருமாறு:
- இலங்கையிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள சமுத்திர மீன்பிடி நீரியல் வள உற்பத்திகளை பரிசோதித்தல், தொற்றுக்காப்பு செய்தல் மற்றும் கால்நடைகள் சுகாதாரப் பாதுகாப்பு தேவைகள் தொடர்பான அறிவியல் சோதனை பணிமுறை முன்னேற்பாடு
எமது நாட்டிலிருந்து 33 வகையான உணவுற்பத்திகள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக சீனக் குடியரசின் பொதுச் சுங்க நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவற்றில் 29 உற்பத்திகள் நீரியல் வள உற்பத்திகளாக காணப்படுவதுடன், சீனக் குடியரசில் பதிவு செய்யப்பட்ட இலங்கைக் கம்பனிகளில் 38 கம்பனிகள் குறித்த ஏற்றுமதிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சீனாவுக்கு நீரியல் வள உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்குத் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கும்,
மற்றும் ஊக்குவிப்பதற்கும் இயலுமாகும் வகையில் இலங்கையிலிருந்து
சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சமுத்திர மீன்பிடி நீரியல் வள உற்பத்திகளைப் பரிசோதித்தல்,
தொற்றுக்காப்பு செய்தல் மற்றும் கால்நடைகள் சுகாதாரப் பாதுகாப்பு தேவைகள் தொடர்பான
அறிவியல் சோதனைப் பணிமுறை முன்னேற்பாடு (Protocol),
சீனக் குடியரசின் பொது சுங்க நிர்வாகம் மற்றும் இலங்கை ஜனநாயக
சோசலிச குடியரசின் கடற்றொழில் அமைச்சுக்கும் இடையில்
கையொப்பமிடுவதற்காக
கடற்றொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வடகொரியா சீனாவை தாக்கும் நீண்ட ஏவுகணைகளை தயாரிக்கும் ஜப்பன்
வடகொரியா சீனாவை தாக்கும் நீண்ட ஏவுகணைகளை தயாரிக்கும் ஜப்பன்
வடகொரியா சீனா ஜப்பானை மிரட்டி வரும் நிலையில் ,
அந்த நாடுகளிடம் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளும் நோக்கில் ,
ஜப்பன் புதிய ஏவுகணைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது .
அதன் அடிப்படையில் 2030 களின் முற்பகுதியில்
2,000 கிமீ தூரம் சென்று தாக்கும் ஏவுகணையையும்,
3,000 கிமீ ஹைப்பர்சோனிக் ஏவுகணையையும்,
2035 ஆம் ஆண்டளவில் வட கொரியாவையும் ,
சீனாவின் சில பகுதிகளையும் தாக்கும் திறன் கொண்ட ,
ஏவுகணைகள் தயாரிக்க திட்டமிட்டுள்ளது .
வடகொரியா சீனாவை தாக்கும் நீண்ட ஏவுகணைகளை தயாரிக்கும் ஜப்பன்
சீனா ,வடகொரியா தொடர்ந்து தயாரித்து வரும் ஏவுகணைகள் ,
மற்றும் புதிய ஆயுத தயாரிப்புகளினால் ,
கொரியா பகுதி எங்கும் பதட்டம் நிலவுகிறது .
வடகொரியா ஜப்பன் மற்றும் தென்கொரியாவை மிரட்டி வருகிறது .
சீனாவோ ஜப்பான் ,தென்கொரியா ,
அதைஅவன் உள்ளிட்ட நாடுகளை மிரட்டிய வண்ணம் உள்ளது .
சீனா வடகொரியா கூட்டாக ஒரு நாடாகவும் ,
ஜப்பான் தென்கொரியா ,தாய்வான் ஒன்றாகவும் இணைந்துள்ளன .
இதனால் நாடுகளுக்கு இடையில் ,
தொடர்ந்து போர் பதட்டம் இடம்பெற்ற வண்ணம் .உள்ளது .
ஜப்பான் தயாரிக்கும் இந்த ஏவுகணைகள் மூலம் ,
வடகொரியாவின் நூற்றுக்கு மேற்பட்ட கண்டம் விட்டுகண்டம் பாயும் ,
ஏவுகணைகள் தாக்குதல்களில் இருந்து தம்மை ,
தற்காத்து கொள்ள முடியுமா என்கின்ற கேள்வி எழுகிறது .
தொடரும் இந்த ஆயுத போட்டி மற்றும் ,
அடக்கி ஆளும் அதிகார மோதல்களினால் ,
மூன்றாம் உலக போர் விரைந்து ஆரம்பிக்கும் என்றே தெரிகிறது .
கடன்பொறியை நிராகரித்தது சீனா
கடன்பொறியை நிராகரித்தது சீனா
சீனா எப்போதும் இலங்கையின் அரசியல் நிபந்தனைகளுக்கு அமைய எந்தவித உதவிகளையும் செய்யவில்லை. அவ்வாறான நிலைப்பாட்டை சீனா
ஒருபோதும் கொண்டிருக்காது என சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜாவோ லிஜான் அந்நாட்டு செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முதலீடுகளை முன்னெடுப்பது மற்றும் நிதி உதவிகளை செய்வது தொடர்பான விடயங்களில் நாங்கள் ஒருபோதும் அரசியல் சுயநலத்துடன் செயற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார் .
கடன் நிதி உதவிகள் விடயத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சரின் கருத்தை வரவேற்கின்றோம், சீனாவின் உதவிகளை வரவேற்பதாகவும், நாம்
இரு தரப்பும் நட்பு நாடுகள் என அவர் தெரிவித்துள்ள கருத்தானது ஆரோக்கியமானது என்றார்.
கடன்பொறியை நிராகரித்தது சீனா
குறிப்பாக இலங்கையில் சீனாவின் கடன்பொறி என பயன்படுத்தப்படும் சொல்லாடலை வலுவாக நிராகரிக்கும் கருத்து இதுவாகும். அதுமட்டுமல்ல
சீனா எப்போதும் இலங்கையின் அரசியல் நிபந்தனைகளுக்கு அமைய எந்தவித உதவிகளையும் செய்யவில்லை. அவ்வாறான நிலைப்பாட்டை சீனா கொண்டிருக்காது என்றார்.
இலங்கையில் முதலீடுகளை முன்னெடுப்பது மற்றும் நிதி உதவிகளை செய்வது தொடர்பான விடயங்களில் நாங்கள் ஒருபோதும் அரசியல் சுயநலத்துடன் செயற்படவில்லை. தற்போது இலங்கை பல்வேறு
நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது. இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் மற்றும் சவால்களை சீனா முழுமையாக புரிந்துகொண்டுள்ளது. இந்த பிரச்சினைகளை உரிய விதத்தில் தீர்ப்பது குறித்து உரிய நிதி
அமைப்புகளிற்கு சீன ஒத்துழைப்புகளை வழங்குகின்றது. அத்துடன் உறுதியான தீர்வை பெற்றுக்கொடுக்க நானும் பணியாற்றுகின்றோம்.
மேலும் எங்கள் சக்திக்கு உட்பட்ட வகையில் நாங்கள் இலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு உதவி வழங்கி வந்துள்ளோம்.
சீனா தொடர்ந்தும் இலங்கையுடன்
நெருக்கமான நட்புறவை கையாண்டு ஒத்துழைப்புக்களை வழங்கும் என்றார்.
Featured
சீனாவில் கடும் வெள்ளம் 16 பேர் மரணம்
சீனாவில் கடும் வெள்ளம் 16 பேர் மரணம்
சீனாவின் மேற்கு Qinghai மாகாணத்தில் இனம்பெற்ற கடும் வெள்ள பெருக்கில், சிக்கி இதுவரை 16 பேர் மரணமாகியுள்ளனர்,
மேலும் இரண்டாடயிரம் மக்கள் மீட்க பட்டுள்ளனர் .
160 வகணங்கள் வெள்ள நீரில் அடித்து செல்ல பட்டுள்ளது .
மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர் .
வீடுகள் மற்றும் சொத்துடைமைகள் என்பன சேதமாகியுள்ளன .
வெள்ள மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இலங்கை வந்தடைந்த சீனா ஆய்வு கப்பல்
இலங்கை வந்தடைந்த சீனா ஆய்வு கப்பல்
இலங்கை கம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் ஆய்வு கப்பல் வந்தடைந்துள்ளது .
இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, சீனாவின் ஆய்வு கப்பல் இலங்கை வந்தடைந்துள்ளது .
இலங்கை இந்தியாவுக்கு இடையில் இந்த சீன கப்பல், விடயம் முறுகளை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கை கடலில் தரித்து நிற்கும் ,இந்த சீனா கப்பல் ,இலங்கை மற்றும் இந்தியாவின் கடல் பகுதிகளை ஆய்வு செய்யும் .
சீனாவின் இந்த கப்பல் உளவு வேளைகளில் ஈடுபடுவது என தெரிக்க பட்டுள்ள நிலையிலே, சர்ச்சையில் சீனாவின் கப்பல் சிக்கியுள்ளது.
சீனா போர் விமானங்கள் தாய்லாந்தில் குவிப்பு
சீனா போர் விமானங்கள் தாய்லாந்தில் குவிப்பு
சீனா தாய்லாந்து இணைந்து, போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் .இந்த பயிற்சிகளுக்கு மேலதிகமாக சீனா தனது போர் விமானங்களை அனுப்பியுள்ளது ,பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய்வான் சீனாவுக்கு இடையில் ,போர் பதட்டம் அதிகரித்துள்ள நிலையில், தற்பொழுது, சீனா தாய்லாந்து போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது, மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது .
தாய்லாந்து சீனாவின் போர் பயிற்சிகள் , மேற்குலக நாடுகள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
ரஸ்யாவை போன்று சீனாவும், நாடுகள் மீது வலிந்து தாக்குதலை நடத்த கூடும், என எதிர் பார்க்க படுகிறது.
அதற்கான முன்னோட்டமாக, இந்த இராணுவ ஒத்திகைகள் காணப்படுகிறது .
வல்லாதிக்க நாடுகளுக்கு இடையிலான எதிரி போக்கு எதிர் நாடுகளை கலங்க வைத்து வருகிறது .
தாய்வான் எல்லையில் தொடரும் சீனாவின் இராணுவம் போர் ஒத்திகை
தாய்வான் எல்லையில் தொடரும் சீனாவின் இராணுவம் போர் ஒத்திகை
தாய்வான் எல்லையில் சீனா இராணுவம் தனது இராணுவ போர் ஒத்திகையை தொடர்ந்தவண்ணம் உள்ளது .
இதனால் தாய்வான் சீனாவுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது.
தாய்வான் தமது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து கூறி வருகிறது .
தனி நாடாக தாய்வான் உள்ள போதும் சீனாவின் இந்த மிரட்டல் ஆக்கிரமிப்பு துடிப்பு உலக போராக மாறும் அபாயம் எழுந்துள்ளது.
உக்கிரேனை போன்று தாய்வான் மீதுசீனா போரினை தொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது.
தாய்வான் எல்லைக் கோட்டை தாண்டிய 68 சீன போர் விமானங்கள்
தாய்வான் எல்லைக் கோட்டை தாண்டிய 68 சீன போர் விமானங்கள்
தாய்வான் மீது சீனா பெரும் போர் ஒன்றை தொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது .
தாய்வான் வான் பரப்புக்குள் அத்து மீறி சீனா விமானங்கள் நுழைந்துள்ளது.
உக்கிரேன் மீதான போர் ஒன்றரை போல சீனா தாய்வான் மீது தாக்குதலை தொடுக்கலாம் என்கின்ற நிலையில் தற்பொழுது சீனா மற்றும் தாய்வானுக்கு இடையில் பெரும் போர் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவ்விதமான தாக்குதல் செயல் திறன் என்ன என்பதை இங்கே கவனியுங்கள்
தாய்வான் அருகில் சீனா ஏவுகணை வீச்சு போர் பதட்டம் அதிகரிப்பு
தாய்வான் அருகில் சீனா ஏவுகணை வீச்சு போர் பதட்டம் அதிகரிப்பு
சீனா தாய்வான் மீது இராணுவ தாக்குதலை நடத்தும் முகமாக தாய்வான் கடல் பகுதியில் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.
மேலும் தாய்வான் வான் பரப்புக்குள் அத்துமீறி இருபத்தி இரண்டு சீனா விமானங்கள் பறந்து சென்றுள்ளன .
உக்கிரேன் மீது ரஷ்ய போரினை தொடுத்தது போல் சீனா தாய்வான் மீது தாக்குதலை நடத்தும் இராணுவ ஒத்திகையில் ஈடுபட்டுள்ளதால் போர் பதட்டம் அதிகரித்துள்ளது .
தாய்வான் எல்லை அருகில் சீனா பாரிய இராணுவம் மற்றும் கனரக ஆயுதங்களை குவித்துள்ளது.
மேலும் சீனா நடத்தியுள்ள இந்த ஏவுகணை தாக்குதல்கள் சீனா தாய்வான் மீது சில வாரங்களில் தாக்குதல் தொடுத்து விடும் என்பாதக முக்கிய உளவு நிறுவனங்கள் கசிவுகளை வெளியிட்டுள்ளன.
சீனா தாய்வான் மீது இந்த போர் நடவடிக்கை மேற்கொண்டால் உலக நாடுகளில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது .
சீனா பசுபிக் கடல் பகுதியில் அமைக்கும் புதிய இராணுவ தளம்
சீனா பசுபிக் கடல் பகுதியில் அமைக்கும் புதிய இராணுவ தளம்
சீனா உலக நாடுகளை ஆக்கிரமிக்கும் நோக்குடன் பசுபிக் தெற்கு மற்றும் மேற்பகு கடல் பகுதியில் பாரிய இராணுவ தளம் ஒன்றை அமைத்து வருகிறது .
2050ஆம் ஆண்டு உலக வல்லரசாக தானே வலம் வரவேண்டும் என்கின்ற அடிப்படையில் சீனா திட்டமிட்டு நகந்து வருகிறது .
பசுபிக் பகுதியில் சீனா அமைக்கும் இந்த இராணுவ தளம் அவுஸ்ரேலியாவுக்கு பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்க படுகிறது .
ஐரோப்பா மற்றும் உலக நாடுகளை தனது பொருளாதார வலைக்குள் சிக்க வைத்து ஆட்டம் காட்டி வரும் சீனா தற்போது தனது இராணுவ பலத்தை நிரூபிக்கும் வகையில் நகர்ந்த வண்ணம் உள்ளது .
சீனா பசுபிக் கடல் பகுதியில் அமைக்கும் புதிய இராணுவ தளம்
சீனாவின் இந்த படை நகர்வு மேற்குலக நாடுகளை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
நாடுகளுக்கு உதவி என்கின்ற வகையில் பணத்தை அள்ளி வழங்கி இலங்கை பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஆட்சி கவிழ்ப்பை ஏற்படுத்தி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து கவிழ்த்தது .
அதே போன்று தற்போது வெள்ளையர் நாடுகளை இலக்கு வைத்து சீனா நகர்ந்து வருகின்றமை குறிப்பிட தக்கது.
தாய்வான் விவகாரம் அமெரிக்கா சீன அதிபர்கள் போனில் பேச்சு
தாய்வான் விவகாரம் அமெரிக்கா சீன அதிபர்கள் போனில் பேச்சு
தாய்வான் விவகாரம் தொடர்பில் சீனா அதிபர் மற்றும் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோர் தொலைபேசி மூலம் பேச்சில் ஈடுபட்டனர்.
இந்த பேச்சின் மூலமாக தாய்வானை ஆக்கிரமிக்க முனையும் சீனா விட்டு கொடுப்புகளுடன் பதட்டத்தை தணிக்குமா என்கின்ற கேள்வி எழுந்துள்ளது .
விசேட தாக்குதல் மூலம் தாய்வானை ஆக்கிரமிக்கும் நகர்வில் சீனா ஈடுபட கூடும் என எதிர் பார்க்க படுகிறது.
அதனால் அமெரிக்கா சீனாவுடன் அவசரமாக தொலைபேசி மூலம் பேச்சுக்களில் ஈடுபட்டதாக தெரிவிக்க படுகிறது.
இந்த சீனா அமெரிக்காவுக்கு இடையிலான பேச்சு சுமுகமாக முடிந்துள்ளதா என்கின்ற கேள்வி எழுந்துள்ளது.











































