அர்ச்சுனா உருக்கம் பசியோடு பார்த்தீபன் இருக்கிறான்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

அர்ச்சுனா உருக்கம் பசியோடு பார்த்தீபன் இருக்கிறான்

பசியோடு பார்த்தீபன் இருக்கிறான் அர்ச்சுனா உருக்கம்

அர்ச்சுனா உருக்கம் பசியோடு பார்த்தீபன் இருக்கிறான் என தனது முகநூல் பதிவில் தியாக தீபம் திலீபன் நினைவில் உருகி பேசியுள்ளார் .

தியாக தீபம் திலீபன் நினைவை பகிர்ந்து அவரது நிழல்படத்தை பதிவிட்டு ,அதிலே பார்த்தீபன் இன்னும் பசியோடு தான் இருக்கிறான் என குறிப்பிட்டுள்ளார் .

ஆழ நெஞ்சத்தில் அகிம்சாவாதியின் அன்பு அர்ச்சுனா மனதில் பட்டு தெறிப்பதை இந்த விடயம் எடுத்து காண்பித்துள்ளது .

இந்தியா இராணுவத்தின் பாசிச வெறிக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த ,வீர தளபதி திலீபன்நீரும் இன்றி உண்ணாவிரதம் இருந்து தன் உயிரை அவர் ஆகுதியாக்கி கொண்டார் .

வரலாறு வரலாற்று நாயகர்களை வாழ்த்திய படியே பயணிக்கிறது .வலிகளோடு தமிழர் நெஞ்சங்களுக்கு நடக்கிறது .

அன்புள்ள அண்ணா சீமான் அவர்களுக்கு அர்ச்சுனா எழுதிய கடிதம்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

அன்புள்ள அண்ணா சீமான் அவர்களுக்கு அர்ச்சுனா எழுதிய கடிதம்

அன்புள்ள அண்ணா சீமான் அவர்களுக்கு அர்ச்சுனா எழுதிய கடிதம்

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா
வைத்திய அத்தியட்ச்சகர்
ஆதார வைத்தியசாலை சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
திரு சீமான் அவர்கள்
நாம் தமிழர் கட்சி
தமிழ்நாடு
இந்தியா


அன்புள்ள அண்ணா சீமான் அவர்களுக்கும் எமது தொப்புள்கொடி உலக வாழ்த்தமிழ் மக்களுக்கும் இலங்கையிலிருந்து உங்கள் தம்பி தமிழுள்ள தாயத்தில் இருந்து எமது மக்கள் சார்பாக ஒரு அன்பு கடிதம்…
அண்ணா.


நாங்கள் இறைவனின் கிருபையால் நன்றாக இருக்கிறோம். நீங்களும் எமது புலம்பெயர் ஈழ மைந்தர்களின் கிருபையால் மிகவும் நன்றாக இருக்கின்றீர்கள் என்பது எமக்கு நன்றாகவே தெரியும்.


எல்லாம் வல்ல எனது இனத் தலைவனின் இறைவனின் பாதத்திற்கும் சிரம் தாழ்த்தி தாயகனவிலே தங்கள் உயிரையும் உடலையும் வித்திட்டு விதியாகிப்போன எனது அக்கா அண்ணா தம்பி தங்கைகளுக்காக இந்த மடலை உங்களின் கவனத்திற்காக எழுதிக் கொண்டிருக்கிறேன். .


தமிழனாய் பிறந்ததற்காகவும் தமிழனுக்காய் பிறந்ததுக்காகவும் பெருமையாய் தங்களுக்கு ஒரு கடிதம்.


1983 இல் தொடங்கிய தமிழின வேட்கை கடந்த 40 வருடங்கள ஆகியும் எங்கே செல்கின்றோம் இதனை தேடுகின்றோம் எனத் தெரியாமலே பிறந்ததிலிருந்து இன்றுவரை நாடோடியாய் அலையும் ஒரு இனத்தின் ஆண் மகன் இதயத்தில் இருந்து இடத்தினை பிழிந்து எடுத்து கடைசியாய் கண்ணீருடன் எழுதிக் கொண்டிருக்கும் மடல் இது..


உலகமே திரண்டு 2009ல் எனது தலைவணையும் எனது தனயன் களையும் எனது தமிழினத்தையும் கந்தக காட்டில் புதைத்துக் கொண்ட ஒரு இனத்தின் தந்தையை இழந்த ஒரு குழந்தையின் ஏக்க மடல் இது….


நாடினை இழந்தோம் வீடினை இழந்தோம் தாயினை இழந்தோம்..
தந்தையினை இழந்தோம் சுமக்காய் போராடிய 44,000 உறவினை இதே மண்ணில் விட்டுடலாய் புதைத்தோம்..


கடைசியில் எமது தலைவணையும் இழந்து இருந்தால் தலைவன் இல்லையேல் இறைவனின் தேடிக் கொண்டிருக்கிறோம்..
உங்களுக்கும் தமிழக தொப்புள் கொடி உறவுகளுக்கும் எமது கூக்குரல் கேட்காது..
ஏனெனில் நாம் தமிழர் ஆயிற்றே..


எனது இனம் அணுவணுமாய் பிளக்கப்பட்டு ஒரு இனப்படுகொலையை அரங்கேற்றிய பேரினம் உங்களை ஆதரவாக பற்றிக் கொண்டிருப்பதை அறிந்தும் உங்களை நம்பிய எனது புலம்பெயர் இரத்தங்கள் உங்களுக்கு பணம் சேர்த்து அனுப்புவதை தெரிந்தும் தெரியாமல் இங்கும் ஒரு பானை

சோற்றிற்கும் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றோம்…
ஏனெனில் நாம் தமிழராயிற்றே..


மூன்று தசாப்தங்களாக பேரினம் எம்மை அணு அணுவாய் சிதைத்தது..
இருந்தும் உயிர்ப்புடன் தான் ஓடிக் கொண்டிருக்கிறோம் ஏனெனில் நாமும் தமிழர் ஆயிற்றே…


என் தனையன்..
எம் இன தலைவன் மேதகு..
மற்றும் மறவன் துணை சென்ற என் அண்ணாவும் அக்காவும் என் கொடியும் என் தேசியக் கொள்கையும் உனக்கு..
உன் தமிழ்நாட்டு அரசியலுக்கு பேசுபொருள் தான்..
நீ உண்ட ஆமை கறியும் தலைவனை பாசறையும் உனக்கு அரசியல் ஆணிகள்..
ஏனெனில் நீயும் தமிழன் ஆயிற்றே..
அண்ணனின் காலத்தில்..
ஈழத்தில் பிறந்த இந்த மருத்துவனின் குரல் உனக்கு கேட்கின்றதோ இல்லையோ..
என் தமிழ் இனத்திற்கு கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது..
என் தமையன் உன்னடி வந்தது..
என் உறவுகள் உன் பால் சிரம் தாழ்த்தியது..
என் தலைவனில் மூச்சுக்காற்றை நீ சுவாசித்து இருக்கிறாய் என்பதற்காக மட்டுமே அன்றி..
தமிழினத்தையும் தலைவனையும் மண் கொண்ட வித்துடல்களையும் மரணித்த வேங்கைகளையும் உனக்கு அடைமானம் வைக்க அல்ல..
உன் அரசியலுக்காய் பாவிக்க அல்ல..
தமிழில் எழுதி இருக்கிறேன்..
முடிந்தால் வாசித்துக் கொள்..
என்னிடம் என் தேசம் என் தேசியத் தலைவன் என் மாவீரர் வரலாறுகளின் உலகத் தமிழர் இனத்திற்குரியது…
என் கொடி அது என் தலைவனுடையது..
என் உயிரிலும் மேலானது..
அதை உன் அரசியலில் இருந்து மீண்டும் எனது மூச்சுக்காற்றுகளுக்கு மீட்கும் ஓர் நன்னாளை பார்த்து ஓடிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தமிழினதும் நெறிக்கப்பட்ட குரல்வலைகளில் இருந்து அன்புடன் கேட்கிறேன்..
என் இனத்தை எங்களை நாங்களாகவே ஆளவும் வாழவும் இடம் கொடு..
இப்படிக்கு அன்புடன்..
இராமநாதன் அர்ச்சுனா
தலைவனின் பாசறையில் இருந்து.

இவ்வாறு அர்ச்சுனா இராமநாதன் சீமான் அண்ணா அவர்களுக்கு எழுதிய கடிதத்தை முகநூலில் பதிவு செய்துள்ளார் .

அர்ச்சுனா காவல்துறை மோதல்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனா காவல்துறை மோதல்

அர்ச்சுனா காவல்துறை மோதல்

அர்ச்சுனா காவல்துறை மோதல்.வீதி சோதனை காவல்துறையினர் மறித்து அர்ச்சுனாவுக்கு செய்த விடயம் அம்பலமாகியுள்ளது .

தகாத வார்த்தையால் போலீசார் அர்ச்சுனா இராமநாதன் அவர்களை இலங்கை காவல்துறை திட்டிய விடயங்கள் தொடர்பாக அர்ச்சுனா வெளியிட்டுள்ளார் .

அந்த விடயம் தொடர்பாக இந்த காணொளியில் வெளியிட்டுள்ளார் .

video

சீமான் தொடர்பாக அர்ச்சுனா வெளியிட்ட ஆதாரம்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

சீமான் தொடர்பாக அர்ச்சுனா வெளியிட்ட ஆதாரம்

சீமான் தொடர்பாக அர்ச்சுனா வெளியிட்ட ஆதாரம் ,

சீமான் தொடர்பாக அர்ச்சுனா வெளியிட்ட ஆதாரம்  ,தமிழர் கட்சியின் சீமான் செயல்பாடுகள் தொடர்பாக வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் வெளிப்படையாக பலவிடயங்களை வெளியிட்டுள்ளார் .

அதன் முக்கிய பகுதிகள் இந்த காணொளியில் .உள்ளது

வீடியோ

சீமான் அர்ச்சுனா மோதல்
Posted in இலங்கை செய்திகள்

சீமான் அர்ச்சுனா மோதல்

சீமான் அர்ச்சுனா மோதல்

சீமான் அர்ச்சுனா மோதல் ,போக்கு தீவிரமடைந்து வந்த நிலையில் அவை தற்போது முற்று பெற்றுள்ளதாக கடந்த தினம் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார் .

வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் கலந்து கொண்டு பேசுபொழுது சீமானுடன் தான் பேசியதாகவும் அதன் பின்னர் தனது நிலைப்பாடு எப்படி உள்ளது என்கின்ற விடயத்தை தெளிவாக அர்ச்சுனா இராமநாதன் விளக்கியுள்ளார் .

சீமானுடன் நட்புறவாக அரசியலை எடுத்து செல்ல உள்ளதாகவும் ,ஆனால் அவர் பயன் படுத்தும் புலிகளது சிந்தனைகள் ,எவற்றையுய்ம் தான் பயன்படுத்த மாட்டேன் என தெரிவித்துள்ளார் .

காலம் கணிக்கின்ற பொழுது அதனை அவ்விடத்தில் சிறந்த முறையில் செய்து கொள்வேன் என்கின்ற விடயத்தை தெரிவித்துள்ளார் .

இதனை அடுத்து தற்பொழுது சீமான் அர்ச்சுனா இடையில் நிலவிய முறுகல் மோதல் நிலை தவிர்க்க பட்டு மென் போக்குடன் கூடிய அரசியல் பயணம் பயணிப்பதாக அறிய முடிகிறது .

எனது கடவுள் என் மக்கள் அர்ச்சுனா
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

எனது கடவுள் என் மக்கள் அர்ச்சுனா

எனது கடவுள் என் மக்கள் அர்ச்சுனா

எனது கடவுள் என் மக்கள் அர்ச்சுனா ,கடவுளை நம்பவில்லை ஆனால்
எவன் ஒருவன் தமிழின வேட்கையில் தன்னை ஆகுதியாகி கொண்டானோ அவனின் ஆன்மா சாந்தி அடையாமல் எம்மை சுற்றி கொண்டிருக்கின்றது என்பதை இன்றுடன் நம்புகிறேன்.


முதலில் வழக்கு கூறப்பட்டு பின்பு திருப்பி எடுக்கப்படும் என சொன்னபோது ஒரு மணித்தியால இடைவெளி இருந்தது..
அந்த ஒரு மணித்தியால இடைவெளியில் தான் அந்த கடிதம் என் கைக்கு வந்து சேர்ந்தது…


எனக்கு ஒரு நம்பிக்கை இருந்தது என்னுடன் தொலைபேசியில் கதைத்தவர்கள் அவற்றை எல்லாம் அனுப்பி வைப்பார்கள் என்று..
ஐயா..


உங்கள் ஊர் தெரியாது பெயர் தெரியாது..
உங்கள் கால்களுக்கு என் கைகளால் கரம் கூப்பி தொழுகின்றேன்..
நீங்கள் அந்தக் கடிதத்தை இன்று எனக்கு அனுப்பி வைத்திருக்காவிடில்..
இன்றும் குற்றவாளிகள் கூட்டில் குற்றவாளியாகவே நின்றிருப்பேன்..


தாங்கள் தொலைபேசியில் அழைத்து கதைத்த போது நான் அவற்றை பெரிது படுத்தவில்லை..


ஏனெனில் இவை எல்லாம் எல்லாருக்கும் தெரிந்த பொது விடயங்கள்..
ஆதலால் நான் நடவடிக்கை எடுத்தேன் ஆனால் ஆதாரங்களை சேர்க்கத் தோணவில்லை..


அவர்களே தன் தலையில் மண்ணள்ளிப் போட்டுக் கொண்டு இப்போது கட்டாயம் சமாதானத்திற்கு வருவார்கள்..


இறந்து போன அந்த உடலங்கள் குளிர அறைகளில் அழுது கொண்டிருந்தது கடவுளுக்கு கேட்டிருக்கிறது..
இல்லை இல்லை..


எங்கள் கடவுளர்களுக்கு கேட்டிருக்கிறது..
மாவீரர்கள் கடவுள் அல்ல..


அவர்கள் இந்த மண்ணுக்கு கொடுத்தது உயிரை அல்ல..
ஏதோ ஒரு வகையில் ஒரு மாவீரனின் பிள்ளை என்ற விதத்தில் நானும் அவர்களுக்கான நீதியின் தேடலில் உங்களுடன் இணைந்து இருக்கிறேன்..
என்றோ ஒரு நாள்..


எமக்காக தங்களது உயிர்களை எவரவர் ஆகுதியாக்கி கொண்டார்களோ..
அவர்களின் ஆன்மாக்களுக்கு நான் பதில் சொல்லியே ஆகுவேன்..
அதுவரை..தமிழால் ஒன்றிணைவோம்..இவ்வாறு அர்ச்சுனா தனது முகநூலில் பதிவிட்டுளளார் .

முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை அனுப்ப வேண்டிய அர்ச்சுனா முகவரி
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை அனுப்ப வேண்டிய அர்ச்சுனா முகவரி

முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை அனுப்ப வேண்டிய அர்ச்சுனா முகவரி

முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை அனுப்ப வேண்டிய அர்ச்சுனா முகவரி ,முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை அனுப்ப வேண்டிய முகவரி
நீங்கள் தரும் ஒவ்வொரு தகவல்களும் நீதிக்கான தேடலுக்கு உதவி செய்யும்.

கீழே உள்ள முகவரிக்கு உங்கள் ஆதங்கம் ,கருத்துக்கள் என்பனவற்றை அனுப்பி வைக்கும் படி வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார் .


Dr Ramanathan Archchuna
28/1 Buthgamuwa Road
Kalapaluwewa
Rajagiriya
T.p
0094 772249924
0094 775456126

அர்ச்சுனாவுக்கு இப்படியும் கோபம் வருமா
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனாவுக்கு இப்படியும் கோபம் வருமா

அர்ச்சுனாவுக்கு இப்படியும் கோபம் வருமா

அர்ச்சுனாவுக்கு இப்படியும் கோபம் வருமா,வைத்திய கலாநிதி மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தனது உடன்பிறந்த சகோதரன் ரகுராம் இராமநாதன் தொடர்பாக பேசிய விடயம் கோபத்தை ஏற்படுத்தியது ,வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் நடந்த விடயம் .


மக்கள் ஆதரவு பெருகியதால் எதிரிகள் கலக்கம் .காணொளியில் முழுமையான விடயங்கள் பார்க்கவும் .

வீடியோ

அர்ச்சுனா எங்கள் அவதாரம்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

அர்ச்சுனா எங்கள் அவதாரம்

அர்ச்சுனா எங்கள் அவதாரம்

அர்ச்சுனா எங்கள் அவதாரம்
அவனை நாங்கள் பின் தொடர்வோம்
எதுகை மோனைக்கு ஏன் சீற்றம்
ஏனோ உனக்கு தடு மாற்றம்

கத்தும் கடலே அமைதி கொள்
கரு வானமே இவரை பார்த்து கொள்
எத் துயர் நீ எறிந்தாலும்
எங்கள் வீரனை நாம் தொடர்வோம்

குரைக்கும் நாய்கள் வாசலிலே
கூவியே இன்று என் கண்டார்
அன்பு செலுத்தும் மக்கள் முன்
அகிலத்தில் எவர் முன் வருவார்

கொத்தி எறியும் கோடாரி
கொண்டை கழன்று விழுந்துவிடும்
அடுப்பில் எரியும் அவ்வேளை
அட டா சாம்பலாய் மாறிவிடும்

விட்டு களத்தை ஓடி விடு – நாம்
விடுதலை பெற்றிட விட்டு விடு
பற்றி எரியும் பார் முன்னால்
பகைவா இன்றே ஓடி விடு ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 05-09-2024

அரசியலில் குதித்த அர்ச்சுனா நண்பன்
Posted in இலங்கை செய்திகள்

அரசியலில் குதித்த அர்ச்சுனா நண்பன்

அரசியலில் குதித்த அர்ச்சுனா நண்பன்

அரசியலில் குதித்த அர்ச்சுனா நண்பன் ,நமது அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான எந்த ஒரு மேலதிக கருத்துக்களும் நண்பன் மயூரன் சிவப்பிரகாசம் அவர்களுடன் இணைந்தே வெளியிடப்படும்.
எனது அரசியல் சம்பந்தமான பேச்சாளராக மயூரன் சிவப்பிரகாசம் தொடர்ந்து பயணிப்பான்.


எனது நண்பனுக்கு அவனது அரசியல் பயணத்திற்கு உதவ விரும்பும் சாவகச்சேரியின் அன்பு பெருமக்கள் அவனுடன் நீங்கள் தொடர்பு கொண்டு மேலதிகமான உங்கள் ஆதரவினை தெரிவிக்கலாம்.


நன்றி
இப்படிக்கு வைத்திய கலாநிதி
இராமநாதன் அர்ஜுனா.

என தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .

அர்ச்சுனா தம்பி ஐயாவுக்கு சொன்ன விடயம்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா தம்பி ஐயாவுக்கு சொன்ன விடயம்

அர்ச்சுனா தம்பி ஐயாவுக்கு சொன்ன விடயம்

அர்ச்சுனா தம்பி ஐயாவுக்கு சொன்ன விடயம் ,ஐயோ அண்ணா..
நான் கண்விழித்துப் பார்த்தபோது ஒருவர் என்னை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார் சோட்சுடன் படுத்து இருந்தேன்..
இருவர் தலைமாட்டிலும் கதவுக்கு வெளியாலும் நின்று இருந்தார்கள்..


நான் நினைத்தேன் இவர்கள் திட்டமிட்ட ரீதியில் என்னை மீண்டும் அரெஸ்ட் பண்ணத்தான் வந்திருக்கிறார்கள் என்று..
நித்திரையில் கண்ணால் முடித்த போது நான் வேறு என்னத்தை கற்பனை பண்ண முடியும்..


ஆதலால் தான் நீங்கள் எவ்வாறு எனது குவாட்டர்ஸின் கதவை உடைத்தீர்கள் என்று கேட்டேன்..
அது சட்டப்படி முரணானது..


ஆனால் எனக்கு நான் நித்திரையாக போனவுடன் இவ்வளவு விடயம் நடந்ததை இப்போதுதான் ஒன்றாக யூடியூபில் பார்த்தபடி போய்க்கொண்டிருக்கிறேன்..


காலை 8 மணிக்கு போலீஸ் தலைமை அதிகாரிக்கு கால் பண்ணி மன்னிப்பும் கோரி எவ்வாறு இது நடந்தது யார் இதை உடைக்க சொன்னார்கள் எனக்கு எதுவுமே தெரியாது என்று அவரிடம் சொன்னபோது நீங்கள் வந்து ஒரு ஸ்டேட்மெண்ட் ஒன்றை போலீசில் கொடுத்து விடுங்கள் உங்களை பாதுகாக்க தான் கதவை உடைத்தோம் என கேட்டார்கள்..


ஆம் என்று சொல்லி இருக்கிறேன்..
இது ராமநாதன் அர்ஜுனா அண்ணா தயவுசெய்து யோசித்து விட்டு கருத்தை பகிருங்கள்..


தம்பி ராஜா அண்ணா இன்று வரை ஒன்றுக்கொன்று முரணாக எனக்கு சார்பாகவும் எனக்கு எதிராகவும் கருத்தை வெளிவிட்டு கொண்டிருப்பது எனக்கு நன்றாக தெரியும்…


மன்னார் கோட்சில் கூட அவர் அங்கு நின்று பிரச்சனை பட்ட போது நீதிமன்ற அவமதிப்பு என்று மறுபடியும் நான் உள்ளே போய் இருப்பேன்..
அவர் வயது முதிர்ந்தவர் உணர்ச்சிவசப்பட்டு கார்த்தி குளரி ஒன்றையும் செய்யக்கூடாது..


ஏற்கனவே எட்டு வழக்குகளை வைத்துக் கொண்டிருக்கிறேன்..
இனி மறுபடியும் வைத்தியசாலை குவாட்டர்ஸில் நான் உள்ளே இருந்து திட்டமிட்ட ரீதியில் இவற்றையெல்லாம் செய்தேன் என்று யூட்யூபில் எழுதிக் கொண்டிருப்பார்கள்..


அதனால் தான் எனக்கு கோபம் வந்தது..
எனக்கு இதுவரை உள்ள வழக்குகள் போதும்.
வைத்திய சாலையில் உள்ளே லைப் போடக்கூடாது என்று அவருக்குத் தெரியாதா..


நான் சூசைட் பண்ண போகிறேன் என்று தனக்கெல்லாம் சொல்லி இருக்கிறேன் என்று முட்டாள்தனமாக சொல்லி இருக்கிறார்..
ஒருவரில் உதவி செய்கிறோம் என்று உரிமை எடுத்து அவரை தலைகீழாக மாற்றுவது முட்டாள்தனம்..


எனக்கும் தம்பி ராஜா எனப்படுகின்ற சம்பந்தப்பட்ட நபருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அவர் எனது ஆதரவாளராக நான் எந்தக் கூட்டத்திலோ எந்த யூடியூப்பிலும் எந்த நேர்காணல் கருத்து தெரிவிக்கவில்லை..


இந்த நிமிடத்தில் நான் யாரையாவது எனது ஆதரவாளர் என்று சொல்லும்போது அவர்கள் செய்கின்ற முட்டாள்தனமான வேலைகளுக்கு எல்லாம் நான் தான் நீதிமன்றத்தில் பதில் சொல்லிக் கொள்ள வேண்டி இருக்கும்..


தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்..
உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்.
என் மீது வைத்திருந்த அன்பு என்றே சொல்லிக் கொள்வோம்..


அதை எப்போது கண்டிக்காவிடில் நாளை ஒரு போலீசாருக்கு அடித்து விட்டு சொல்லுவார்கள் அர்ச்சுனாவில் உள்ள அன்பால் அடித்தோம் என்று..


வன்முறையையும் தனிப்பட்ட விளம்பரங்களையும் என்னால் அனுமதிக்க முடியாது அவ்வாறாயின் அரசியல் செய்ய முடியாது அது சாணக்கியன் சுமந்திரன் அரசியல்..


இது இராமநாதன் அர்ச்சுனாவின் அரசியல்..
யாரும் என்னை தெரியும் என்னுடன் பழக்கம் இவருக்கு காசு போடுங்கள் என்று இன்றுவரை காசு சேர்க்கவில்லை..


யாரும் நான் இவரின் நண்பன் என்று சொல்லி இன்றுவரை மார் தட்டிக் கொள்ளவில்லை..


அவரவர் தகுதிக்கேற்ப அவரவர் என் மீது கொண்ட பாசத்திற்கு ஏற்ப நியாயமானதாக என்ன உதவி கேட்டாலும் செய்யலாம்..


அர்ச்சுனாவை தெரியும் என்பதற்காக வித்தியா படுகொலை போல் போலீசாருடன் ஒருபோதும் சொல்லப்போவதில்லை அவரை விட்டு விடுங்கள் என்று..


என்னை பின்தொடர்புலுக்கு கனிவான வேண்டுகோள் தயவுசெய்து தங்களுடைய சுயலாபத்திற்காக பின் தொடர வேண்டாம்..


உங்களுக்கு தமிழினத்தின் பால் அன்பு இருக்குமாயின் நீங்கள் என்னுடன் நிக்கலாம் நான் உங்களுடன் உயிரைத் தந்து நிற்பேன்..

அர்ச்சுனாவுக்கு இரவு நடந்தது என்ன இதோ ஆதாரம்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனாவுக்கு இரவு நடந்தது என்ன இதோ ஆதாரம்

அர்ச்சுனாவுக்கு இரவு நடந்தது என்ன இதோ ஆதாரம்

அர்ச்சுனாவுக்கு இரவு நடந்தது என்ன இதோ ஆதாரம், கடந்த தினம் இரவு அர்ச்சுனா இராமநாதனனுக்கு நடந்தது என்ன ..?

மக்கள் பதட்டம் அடைந்தது ஏன் ? எதற்காக மக்கள் காவல்துறைக்கு அழைத்து அவர் தனது அறைக்குள் உள்ளாரா என பார்க்க வைத்தார் என்ற விடயம் பேசு பொருளாக்க பட்டுள்ளது .

எனவே அது தொடர்பான கட்சிகளுடன் இதோ கீழ் உள்ள காணொளியை மக்களே பாருங்கள் , வன்னி மைந்தன் டிக் டாக் லைவ் இல் நடந்தது என்ன .முழுமையன விடயம் இதோ

டிக் டாக்கில் இணைய லிங்க் இதோ

இதில் அழுத்தி வீடியோ பார்க்க

அர்ச்சுனாவுக்கு நடந்தது என்ன மக்கள் அழுகை
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவுக்கு நடந்தது என்ன மக்கள் அழுகை

அர்ச்சுனாவுக்கு நடந்தது என்ன மக்கள் அழுகை

அர்ச்சுனாவுக்கு நடந்தது என்ன மக்கள் அழுகை ,மருத்துவர் அர்ச்சுனாவுக்கு என்ன நடந்தது அறை திறக்க படவில்லை .

கைது செய்யப்பட்டாரா அல்லது அவர் ஏதும் செய்து கொண்டாரா என்பது தொடர்பாக தெரியவில்லை .

மக்கள் தற்போது பெரும் ; பதட்டத்தில் உறைந்து கொண்டுள்ளனர்

வீடியோ live

மனம் உடைந்த அர்ச்சுனா
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

மனம் உடைந்த அர்ச்சுனா

மனம் உடைந்த அர்ச்சுனா

மனம் உடைந்த அர்ச்சுனா ,எனக்கேன் வம்பு..
இது சாதாரண தமிழன்…
வம்புகள் தானே பார்த்துக் கொள்ளலாம்..
இது இராமநாதன் அர்ச்சுனா..


இதுவரை கிடைத்த நற்பெயருடன் லண்டன் வா கனடா வா பிரான்ஸ் வா என்கிறது உறவு..


இல்லை இங்கேயே செத்து விடுகிறேன் என சொல்கிறது அப்பாவின் ஆன்மா..
மனமுடைந்து கேட்கிறேன்..சோறு தானே உண்கிறீர்கள்..


நான் இவ்வாறே விட்டுவிட்டு ஓடிப்போகிறேன் என்று சொல்லிக் கொள்வோம்..
இனியும் உங்களுக்கு ஏதாவது நம்பிக்கை உண்டா?


வீடு பிளந்து போய் இருக்கிறது..
சுமந்திரன் என்ன செய்கிறார்?
சாணக்கிய பரமாத்மா எங்கே?
அங்கஜன் ராமநாதன் எங்கே?


சித்தார்த்தனுக்கு whatsappபில் பிடிஎஃப் ஓபன் பண்ண தெரியாதா?
மனதுக்குள் அழுகிறேன்..இவ்வாறு முகநூலில் அர்ச்சுனா மனம் உடைந்து எழுதியுள்ளார் .

அர்ச்சுனா
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

அர்ச்சுனா

அர்ச்சுனா

நான் உன் உறவு நம்படா
நான் கூட வருவேன் எண்ணடா
தோல்வி கண்டு தளராதே
தோற்று நீ போகாதே

வழி வரும் தடை கண்டு வாடாதே
வலி எல்லாம் வெற்றி தான் கலங்காதே
எதிரே பகை வரின் தளராதே
என்றும் நாம் இருப்போம் சோராதே ..

திடல் இருக்கு விளையாடு
திட்டம் இருக்கு அடி போடு
வீர மகன் நீ தானே
விளையாடு விவேகம் நாட்டு

எவன் வருவான் எழு பார்ப்போம்
எழுவாய் பயனிலை முன் காப்போம்
தடை போட்டார் தடை உடை
தரணியில் உன் புகழ் விதை..

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 02-09-2024

அர்ச்சுனா யார் என்ற கேள்விக்கு இதோபதில்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனா யார் என்ற கேள்விக்கு இதோபதில்

அர்ச்சுனா யார் என்ற கேள்விக்கு இதோபதில்

அர்ச்சுனா யார் என்ற கேள்விக்கு இதோபதில் ,அன்பு தம்பி வன்னி மைந்தன் மற்றும் தம்பி ரகுராம் அவரகட்கு.

உங்கள் அர்ச்சுனா பற்றிய உரையாடல் கேட்டேன்! தமிழ் அரசியல் ஊழல் வாதிகள் அவர்களுக்கு உதவிடும் சிவில் சேவை அமைப்புக்கள், இதில் மதத்தலைவர்களும் அடங்கும். இந்த நிலமைகளை நிதானமாக ,அவதானமாக கவனித்த தம்பி தேசிய தலைவர் அவர்கள் கூறிய இறுதி வார்த்தைகளில் இதுவும் ஒன்று.

எங்கள் எதிர்கால அரசியலை எமது இளைஞர்களின் கையில் ஒப்படைக்கின்றேன் என்பதுதான்?.

ஆகவே இப்போது நடப்பது அதுதான். அதை செயல்படுத்த எங்களுக்கு ஒரு இளைஞன் கிடைக்கமாட்டானா என்று கடந்த 15 வருடமாக காத்திருந்த எமக்கு கிடைத்த விடி வெள்ளி வைத்தியர் அரச்சுனா.

ஒவ்வொரு தன்மானமுள்ள தாயகத்தில் உள்ள தமிழனும்,புலம்பெயர் உறவுகளும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும் என்பதுதான் எமது பேரவா! தமிழர் ஒற்றுமை பேணப்படவேண்டும் என்றால் பொது வேட்பாளருக்கு,அவர்கள் ஏற்றுக் கொண்டார்களோ இல்லையோ அவர்களுக்கு வாக்களிப்போம்.

ஆனால் அடுத்த பாராளுமன்றத்தேர்தலில் கல்விமான்களான இளைஞர்களை தேர்தலில் நிறுத்துவோம்.


எங்கள் சிந்தனை என்ன என்றால் வடக்கு, கிழக்கில் இப்போதுள்ள மருத்துவ மாபியாக்களை,இவர்களுக்கு துணையாய் இருக்கும் ஊழல் அரசியல்வாதிகளை,அரசியல்வாதிகளின் குடையின் கீழ் இயங்கும் சிவில் அமைப்பினரை, குருமாரை துடைத்தெடுத்து கள்ளங் கபடமற்ற ,வெளிப்படைத்தன்மையாகப்பேசும் டாக்டர்.

அர்ச்சனாவின் தலமையின் கீழ் நிரந்தரமான சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வை எம்மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே எமது பேரவா.

2009 இதன் பின் சலித்துப்போயிருந்த எமக்கு இன்று அர்ச்சுனா ஒரு நம்பிக்கை விடி வெள்ளி.

ஆகவே, உங்களைப் போன்றவர்கள் அர்ச்சுனாவின் சிந்தனைகளை உள்வாங்கி அவருக்கு எதிராக செயல்படும் மாபியாக்களுக்கு துணை போகாமல் தர்மத்தின் பாதையில் செல்ல வேண்டும் என்பதே எமது பேரவா.

ஆகவே படித்த பண்புள்ள,மூன்று மொழிகளிலும் சரளமாக உரையாடக்கூடிய பட்டதாரிகளை பாராளுமன்றம் அனுப்புவோம்.

அர்ச்சுனா யார் என்ற கேள்விக்கு இதோபதில்: . எனது மனைவி வீட்டில் இருந்து 5வது வீடு அர்ச்சுனாவினுடைய அப்பா வீடு. இவர்கள் பெரிய விழானை பூர்வீகமாக கொண்டவர்கள்.

அர்ச்சுனாவினுடைய சித்தப்பா என்னுடன் இளவாலை புனித கென்றி அரசர் கல்லூரியில் படித்தவர்.அர்ச்சுனா இப்போது வலம் வரும் தட்டுவாணிகளைப்போல் அல்ல.

யாழ்ப்பாணம் ராணி தியேட்டர் ,ஶ்ரீதர் தியேட்டர்,ஹரன் தியேட்டர். உரிமையாளர் திரு. இரத்தின சபாபதியின் பேரன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வடக்கிலும், கிழக்கிலும் 146 பேரூந்துகளை வைத்து பஸ் கம்பனி நடத்திய நாகலிங்கத்தின் பேரனாவார்.

யாழ். ஸ்ரான்லி வீதியில் மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் விற்கும் மகேந்திரா அன் கம்பனி திரு. நித்தியானந்தத்தின் மருமகனாவார்.இவர் உறவினர்கள் அகதிகளாக பிரித்தானியா சென்றவர்கள் அல்ல.1960 முன்பதாகவே அங்கு குடியேறியவர்கள்.

அர்ச்சுனா வாய்திறந்தால் கோடியாக கொட்டி கொடுப்பதற்கு உறவினர்கள் தயாராக இருக்கின்றார்கள்.ஆனால் அவரது நேர்மை, பணிவு,ஒளிவு மறைவு இன்மை, கல்வித்தகமை,தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள பாசம் இதனால் அவர் எதைக்குறித்தும் அலட்டிக்கொள்ளவில்லை.


ஆம் அன்பான உறவுகளே! எம் சமூக நீதிக்காக அர்ச்சனா வழியில் போராடுவோம்.”அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு”என்பதை மன்னாரில் கண்ணால் கண்டோம்.கலந்து கொண்ட அனைத்து உள்ளங்கட்கும் நன்றி!.

மருத்துவ பராமரிப்பு இல்லாமல் எம்மை விட்டு பிரிந்த எம் அன்பு மகள் சிந்தூஜா,அவர் கணவர் மரியராஜிற்காக நாம் இறைவனிடம் வேண்டுவோம்.

இதை எல்லாவற்றையும் தன் இதயத்தில் சுமந்து வலிதாங்கிய எம் அன்பு மகன் டாக்டர். அர்ச்சுனாவின் நெஞ்சுரத்திற்கு நன்றி கூறுகின்றேன்.


டேவிட் அந்தனி( பிரான்ஸ்சிலிருந்து) என்ற வாசகர் அர்ச்சுனா உடன்பிறந்த அண்ணா ரகுராம் பேச்சு கேட்டு வாசகர் ஒருவர் எழுதிய மடல் இது .

நன்றி டேவிட் அண்ணா .

அர்ச்சுனா அரியேந்திரன் நேரடி சந்திப்பு
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

அர்ச்சுனா அரியேந்திரன் நேரடி சந்திப்பு

அர்ச்சுனா அரியேந்திரன் நேரடி சந்திப்பு

அர்ச்சுனா அரியேந்திரன் நேரடி சந்திப்பு, வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதன் மற்றும் பொது வேட்பாளர் பா ,அரியேந்திரன் ஆகியோர் எமது டிக் டாக் நேரலையில் கடந்த தினம் இரவு சந்தித்து பேசினர் .

இதன் பொழுது எதிர்கால நடவடிக்கை ,மற்றும் அர்ச்சுனா ஆதரவு தொடர்பாக பேச பட்டது .

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எவ்விதம் தாங்கள் பணியாற்ற போகிறோம் என்பது தொடர்பாக பொது கட்டமைப்பு அதனை வழிகாட்டும் எனவும் அதன் அடிப்படையில் எமது பரப்புரைகள் ,மக்கள் சநதிப்புக்கள் நாடு தழுவிய ரீதியில் இடம்பெறும் என தெரிவிக்க பட்டுள்ளது .

முதன் முதலாக பொது வேட்பாளர் பா, அரியேந்திரன் மற்றும் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் ,பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் ஞானமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

முதன் முதலாக மக்கள் நேரலையில் இவர்கள் சநதிப்பு இடம்பெற்றுள்ளது கண்டு மக்கள் பெரும் மகிழ்வடைந்தனர் .

வன்னி மைந்தன் அழைப்பை ஏற்று கொண்டு வன்னி மைந்தன் tiktok நேரலையில் கலந்து கொண்டு சிறப்பித்த உங்களுக்கு, எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம் .

இவ்வேளை இவர்களை இணைய பேருதவி புரிந்த ஏற்பாட்டு குழுவிற்கும் இவ்வேளை எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம் .

அசிங்கப்படுத்துகிறார் கஜேந்திரன் பொது வேட்பாளரை அர்ச்சுனா
Posted in இலங்கை செய்திகள்

அசிங்கப்படுத்துகிறார் கஜேந்திரன் பொது வேட்பாளரை அர்ச்சுனா

அசிங்கப்படுத்துகிறார் கஜேந்திரன் பொது வேட்பாளரை அர்ச்சுனா


அசிங்கப்படுத்துகிறார் கஜேந்திரன் பொது வேட்பாளரை அர்ச்சுனா ,கஜேந்திரன் பொது வேட்பாளரை அசிங்கப்படுத்துகிறார் அர்ச்சுனா ,எமது இலங்கையின் வரலாற்றை 2024 ஆம் ஆண்டு தேர்தல் புரட்டிப்போட போகிறது.


தமிழரின் ஆதரவு இல்லாமல் முஸ்லிம்களின் ஆதரவு இல்லாமல் தனி சிங்கள வேட்பாளராக அனுரகுமார திசாநாயக்க வெல்லப் போவது நிச்சயம்.
அனுரா சிறைபிடிக்கப்படுவார் கொல்லப்படுவர் என்பது முட்டாள்தனமான எதிர்கூறல் அல்ல.


இந்த வேளையிலே தமிழர் நாம் பேரின வாத கட்சிகளுக்கு அடிபணிந்து போகாமல் வாக்கு பலத்தை ஒற்றுமையை எப்போது பொது வேட்பாளருக்காக காட்டுகிறோமோ அப்போதுதான் சர்வதேச தலையீடின் போது தமிழருக்கான நியாயம் கிடைக்கும்.


இதைப் புரிந்து கொள்ளாமல் தயவு செய்து எந்த ஒரு சிங்கள ஜனாதிபதிக்கும் விலை போக வேண்டாம்.

எனக்கு நம்பிக்கை இருக்கிறது அரியனேந்திரன் அவர்கள் காசுக்கு விலை போய் சஜித்துடன் நிக்க மாட்டார் என்று.


ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவர் தனது வாய் மூலம் சஜித்துக்கு ஆதரவு தெரிவிப்பாராக இருந்தால் தமிழனாக அடையாளப்படுத்தி அவரை நாங்கள் வைத்திருக்கும் போது விலை போவாராக இருந்தால் எந்த தமிழனும் செல்லுபடியாக கூடிய வாக்குகளை இடுவதில் அர்த்தமில்லை.


அரியனேந்திரன் அவர்களை தெரிவது செய்தவர்களில் எனக்கு முற்றிலும் நம்பிக்கை இருக்கிறது.


குதிரை கஜேந்திரன் இப்போது பொது வேட்பாளரை அசிங்கப்படுத்த அங்கேயும் இங்கேயும் ஓடுகிறது.


பொது வேட்பாளருடன் நிற்பவர்கள் குதிரை கஜேந்திரனை அவதானித்து வைத்திருக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


அரசியல் எதிர்கூறல் பிழையாக இருக்கும் என்றால் தங்களின் மதிப்பிற்குரிய கருத்தினை கீழே பதிவிடலாம்.

கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு.
தயவுசெய்து பகிருங்கள். என அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார் .

விடுமுறையில் வீடு செல்லும் அர்ச்சுனா
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

விடுமுறையில் வீடு செல்லும் அர்ச்சுனா

விடுமுறையில் வீடு செல்லும் அர்ச்சுனா

விடுமுறையில் வீடு செல்லும் அர்ச்சுனா ,வைத்தியர் ஷாஃபியும் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவும்.


எவ்வாறு வைத்தியர் ஷாப்பியை சுகாதார அமைச்சு மூன்று வருடங்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பி மீண்டும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மன்னிப்பு கோரி சேவையில் இணைத்துக் கொண்டதோ..


எவ்வாறு சாஃவி அவர்களின் உன்னதமான மருத்துவ சேவையை சுகாதார அமைச்சு கேள்விக்குறியாக்கியதோ..
அவ்வாறே..


சுகாதார அமைச்சு இன்றோ நாளையோ எனக்கு கட்டாய விடுமுறை அளிக்க இருப்பதாக அறிகிறேன்..


அப்படியாயின் அந்த நாளிலிருந்து யாழ்ப்பாணத்தில் இலவச மருத்துவ சிகிச்சை ஆரம்பிக்கப்படும்..


யாராவது பிரைவேட் வைத்திருப்பவர்கள் விரும்பினால் தொடர்பு கொள்ளவும்..
நான் எந்த கட்டணமும் இன்றி நோயாளர்களை பார்வையிடுவேன்..
உங்களுடைய கட்டணங்களையும் மருந்து செலவுகளையும் அறவிட்டு கொள்ளுங்கள்..


அசாத் அவர்களின் தொலைபேசி உரையாடலை நான் வெளியிட்ட பின்பும் மன்னார் நீதிமன்றத்தில் நான் குற்றமற்றவன் அல்லது குற்றம் இழைத்தவன்

என்று நிரூபிக்கப்படாத விடத்தும் சுகாதார அமைச்சு என்னை குற்றம் செய்தவர் என கட்டாய விடுமுறை அளிக்க இருப்பதாக அறிகின்றேன்..
நல்ல விடயம்..


சுகாதார அமைச்சுக்கு..
அமைச்சின் செயலாளருக்கும்..
நாட்டின் மாண்புமிகு மிகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும்..
என்னை கொண்டு வருவேன் என்று ஏமாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்த்த அவர்களுக்கும்.


சும்மா ஒரு..
எப்படி வசதி?
இப்படிக்கு
வைத்திய கலாநிதி இராமநாதன் அர்ச்சுனா…இவ்வாறு முகநூலில் பதிவு ஒன்றை அர்ச்சுனா இராமநாதன் வெளியிட்டுள்ளார் .

உங்கள் வாக்கை நீங்கள் விரும்பியவருக்கு அளியுங்கள் அர்ச்சுனா
Posted in இலங்கை செய்திகள்

உங்கள் வாக்கை நீங்கள் விரும்பியவருக்கு அளியுங்கள் அர்ச்சுனா

உங்கள் வாக்கை நீங்கள் விரும்பியவருக்கு அளியுங்கள் அர்ச்சுனா

உங்கள் வாக்கை நீங்கள் விரும்பியவருக்கு அளியுங்கள் அர்ச்சுனா ,உங்கள் வாக்கை தீர்மானிப்பதற்குரிய சகல உரிமையும் தமிழனுக்கு உண்டு..
நான் ஜனாதிபதி தேர்தலில் இருந்து முற்றாக கருத்து தெரிவிப்பதை நிறுத்தி விடுகிறேன்..


உங்கள் வாக்கை நீங்கள் விரும்பியவருக்கு அளியுங்கள்.
எந்த சிங்கள ஜனாதிபதியும் தமிழரின் கோரிக்கைகளுக்கு மன சுத்தியுடன் செவி சாய்க்க மாட்டார்கள் என்பது வரலாறு..


ஆனால் இந்த தேர்தலானது தமிழர்களின் வாக்கை மட்டுமே நம்பி இருப்பதால் ஒருமுறை முயன்று பார்க்கலாம் என்று யோசித்தேன்..
அனுராவிடன் கதைக்கும்போது இந்திமா மூலம் அவர்கள் தமிழருக்கு எதிரானவர்கள் என்பதை புரிந்து கொண்டேன்..


சஜித் பிரேமதாஸ் அவர்களுடன் அவர் அழைத்து வர சொன்னதால் கண்டியிலிருந்து கொழும்பு வந்து சென்று கதைத்தேன்..
அவர் என்னை அவர் கட்சியில் சேர்ப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டினார்..
ஒரு தமிழனாக நான் மாட்டேன் என்று சொன்னேன்..


ஆனால் அவரை ஆதரிப்பதற்கு ஒரு மக்களை அணுகக்கூடிய ஜனாதிபதியாக நான் கருதியே அவரிடம் சென்றேன்..


ஆனால் தமிழ் முஸ்லிம் உறவுகளின் விரிசலை அவர் மேலும் மேலும் வலுப்படுத்தினாரே ஒழிய இன ஒற்றுமையை அவர் அந்த மேடையில் வலுப்படுத்தவில்லை..


முஸ்லிம் அரசியல்வாதிகள் நான் மேடையில் இருப்பதை விரும்பவில்லை..
அவர் அதை கையாண்ட பக்குவம் ஒரு முதிர்ச்சியற்ற ஜனாதிபதி என்பதை எடுத்துக்காட்டியது..


நான் மேடையில் இருந்து இறங்கி வந்து மறுபடியும் சொன்னேன் ஒரு தமிழனை நீங்கள் இவ்வாறு நடத்துவது உங்களுக்கு தமிழ் மக்களுக்கான அங்கீகாரத்தை இல்லாமல் பண்ணும். அவருடைய பாதுகாப்பு உத்தியோகத்தரிடம திரும்பவும் சொல்லவும் என்று..


எனக்கு தன்னுடைய காரில் இருக்குமாறும் தான் வந்து கதைப்பதாகவும் சொல்லப்பட்டது..


அவர் காரில் ஏறி இருப்பதற்கு தமிழன் முப்பது வருடம் தன் உயிரை மாய்த்து ஒரு சுதந்திரப் போராட்டத்தை நடத்தவில்லை..


அவ்வாறு நான் ஏறி இருந்திருந்தால் சில வேளைகளில் பொதுமக்கள் நான் ஏதோ டீல் கதைப்பதாக நினைத்திருப்பார்கள்..


இதனால்தான் எனது தொலைபேசிகள் எப்போதுமே ரெக்கார்ட்டில் இருக்கும்..
சுயநலவாதிகள் எனக்கு எதிராக திரும்புகின்ற போது நான் எப்போதுமே அவர் ரெக்கார்டிங் களை அவர்களுக்கு காட்டுவது வழக்கம்..


சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருந்தால் மட்டுமே அவர்கள் கதைத்ததை நான் பொதுமக்களுக்கு காட்டுவது வழக்கம்..


மைந்தன் சிவா எனப்படுகின்ற மிகவும் ஒரு அடி முட்டாள் என்னைப் பற்றி எழுதிய பின்பு தான் அவர்கள் முஸ்லிம்களூடாக அதை பரப்பப்பட்ட போது

பாராளுமன்ற உறுப்பினர் திஸஸ அத்தநாயக்க விடம் மற்றும் ராதாகிருஷ்ணன் எம்பி இரு வருடமும் சொல்லிவிட்டு தான் நான் அந்த ரெக்கார்டிங் வெளியில் பொது மக்களுக்காக விட்டேன்..


தங்களுடைய அரசியல் லாபங்களுக்காக தமிழ் மக்களை அடக்கி வைக்கும் போது எனது சுயமரியாதையை இழந்து சஜித் பிரேமதாச அவர்களுக்கு நான் ஒருபோதும் உதவ முடியாது..


இதிலிருந்து சஜித் பிரேமதாச, தான் பக்குவம் அற்றவர் அல்லது அவரின் பின்னால் இருப்பவர்கள் அவரை பகடைக்காயாக பயன்படுத்தி

பாராளுமன்றத் தேர்தலில் வாக்குகளை பெறவே முயற்சிக்கிறார்களே அன்றி அவரை ஜனாதிபதியாக மாற்றிப் பார்க்க எந்த ஒரு முயற்சியை எடுக்கவில்லை.. இவை முக்கியமாக முஸ்லிம் எம்பி களுக்கானது..


இதிலிருந்து சஜித் பிரேமதாஸ் அவர்களின் அத்தியாயம் முடிக்கப்படுகிறது..
அவர் அவ்வாறு நடந்து கொண்டமைக்குரிய முக்கியமான காரணம் உமா சந்திர பிரகாஷ் எனப்படுகின்ற முட்டாள் என்பது அவருக்கு இப்போது தெரிந்திருக்கிறது..


நான் எனது தொலைபேசிகள் அனைத்தையுமே முடிவுறுத்தி விட்டேன்…
இனிமேல் சஜித் பிரேமதாச அத்தியாயம் விடைபெறுகிறது..


ரணில் விக்ரமசிங்க அவர்கள் முழு தமிழ் எம்பிக்களும் டீல் அடித்து தன்னுடன் இருப்பதால் தமிழ் வாக்குகள் கிடைக்கும் என நினைத்து தமிழர்களின்

பிரதிநிதியாக இதுவரை காலமும் எமது பொதுமக்களை ஏமாற்றிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவில் வெல்லலாம் என நினைக்கிறார்கள்..


முக்கியமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்னுடைய நம்பிக்கை வலயத்தில் இருந்து நான் இழந்ததுக்கு காரணம் எனது முன்னாள் சட்டவாளர் சிலஸ்டின் அவர்கள் மட்டுமே..


அவர்கள் அமைச்சரின் ஏகப்பிரதிநிதியாக எனது மற்றுமொரு சட்டவாளர் அன்டன் புனித நாயகன் அவர்களுடன் சேர்ந்து என்னை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவின் ஆளாக காட்டுவதற்கு திட்டமிட்ட ரீதியில் ஆஸ்திரேலியாவில்

வசிக்கின்ற எனக்கு சார்பாக உதவி செய்து கொண்டிருந்து சுமந்திரனின் அடியாளான பாலா விக்னேஷ்வரன் அவர்களுடன் இணைந்து என்னை இபிடிபி ஆக காட்டி தமிழ் மக்களிடம் இருந்து பிரிப்பதற்காக செய்த முயற்சிகள்.

அதுமட்டுமல்ல ஏழாம் திகதி நான் மன்னார் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட போது பொதுமக்களை சந்திக்க விடாமல் அண்டன் புனித நாயகம் அவர்கள் தனது காரில் ஏற்றி அங்கும் இங்குமாக அலைத்து திட்டமிட்ட ரீதியில் மக்களை

என்மேல் கோபப்பட செய்து மறுபடியும் புதுமைதானத்தில் கொண்டே இறக்கி குழப்பம் செய்தது பாலா விக்னேஸ்வரனுடனும் அண்டன் புனித நாயகத்துடனும் எனது தொடர்புகளை நிறுத்திக் கொண்டதற்குரிய காரணம்..


இவர்கள் எனக்கு உதவுவது போன்று திட்டமிட்ட ரீதியில் என்னை எனது மக்கள் ஆதரவை குறைப்பதற்கு முயன்ற போது எல்லாம் அறிந்து கொண்ட நான் அமைதியாக இருந்தேன்…


மேலும் அஜித் எனப்படும் சாவகச்சேரியை சேர்ந்த டக்ளஸ் அவர்களின் கையாள் திட்டமிட்ட ரீதியில் என்னை வளைத்து போட முயன்றதும் அவர்களுடைய தொடர்பையும் துண்டித்துக் கொண்டேன்..


அது தவிர தம்பிராசா எனப்படுகின்ற எனக்கு யார் என்றே தெரியாத ஒருவர் என்னை உரிமை கூறுகின்ற போது நான் அவரிடமிருந்தும் தொடர்புகளை எப்போதோ அறுத்து கொண்டேன்..


இராமநாதன் அர்ச்சுனா எனப்படுகின்ற வைத்தியரை அரசியலால் கொலை செய்ய நடந்த சதிகள் இவை மட்டுமல்ல இதற்கு மேலும் மேலும் சொல்ல எவ்வளவோ இருக்கிறது..


எனக்கு ஒன்று ஒரு நம்பிக்கையான நட்பு வட்டம் சாவகச்சேரியில் இருக்கிறது..
அவர்கள் தான் என்னை சாவகச்சேரியில் தூக்கி வைத்து சந்தோசம் கொண்டார்கள்..

நான் அவர்களுடன் மீண்டும் போய் இணையும் வரை தயவுசெய்து எனது சாவகச்சேரி நட்பு வட்டம் பொறுமையாக இருக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்..


இப்போது அனுராவிக்கோ சஜித்துக்கோ ரணிலுக்கோ என் சார்பில் எந்த ஆதரவும் கொடுப்பதற்கு தயாராக இல்லை..


புது வேட்பாளர் பற்றிய மக்களின் கருத்து அவர்களுடைய சுய சிந்தனை சரியாக இருந்தால் ஒற்றுமையாக பொது வேட்பாளருக்கு உங்கள் வாக்குகளை அளிக்கலாம்..


ஆனால் மீண்டும் ஒரு விடயம் சொல்ல விரும்புகிறேன்…
அனுரா அவர்கள் ஜனாதிபதியானால் ரணில் அவர்கள் அவரிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு ஒதுங்க போவதில்லை..


அனுரா அவர்கள் சிறைபிடிக்கப்படுவார்கள் அல்லது இராணுவத்தால் கொல்லப்படுவார்.. அப்போது பொதுமக்கள் பாதையில் இறங்கி இந்த நாடு மீண்டும் ஒரு 1987 போன்ற பட்டலாந்து படுகொலையை சந்திக்கும்..

அதற்குரிய அமெரிக்காவின் ஆதரவும் இந்தியாவின் ஆதரவும் ரணில் அவர்களுக்கு தாராளமாக உண்டு..
இராணுவ ஆட்சி நிறுவப்படுமாயின் பல தலைவர்கள் கொலை செய்யப்படலாம்..


பொதுமக்கள் கொத்துக்கொத்தாக பாதைகளில் சுட்டுக் கொல்லப்படலாம்..
இவை எனது எதிர்கூறல் மட்டுமே..


சஜித் அவர்கள் வெற்றி பெற்றால் மீண்டும் அதே பாதாள லோக அரசியல்வாதிகள் பாதுகாக்கப்படுவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை..
பாராளுமன்றம் ஒருபோதும் கலைக்கப்படாது..


மாகாண சபை தேர்தலோ உள்ளூர் ஆட்சி சபை தேர்தலோ மீண்டும் வைக்கப்படும்..


அனுரா அவர்கள் காணாமல் ஆக்கப்படுவார்கள்..
பொதுமக்கள் கிளர்ச்சி எழும்.. மீண்டும் கொலைகள் நடந்தேறும்..
ரணில் அவர்கள் ஜனாதிபதி ஆனாலும் அதே பாதாள கூட்டங்கள் அதே பாராளுமன்ற உறுப்பினர்கள் அதே தமிழ் மக்களுக்கான எதிரான கெடுபிடிகள் எப்போதுமே இருக்கும்..


இன்னும் ஐந்து வருடங்களுக்கு இராணுவமயமாக்கல் மேலும் விஸ்தரிக்கப்பட்டு தமிழர்களின் இனம் அழிக்கப்படும்..
முஸ்லிம்கள் எப்போதுமே ரணிலுடன் இருப்பதால் தமிழர் எதிரான திட்டமிட்ட இனவெளிப்பு கட்டாயம் நடந்தேறும்..


கடந்த வருடத்தில் மட்டும் 80,000 தமிழர்கள் இலங்கையில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள்..


வெளிநாட்டு உதவி உள்ள தமிழர்கள் வெளியேறுவார்கள்..
நான் சிறைபிடிக்கப்பட்டு கொல்லப்படுவேன்..
மீண்டும் அதே தமிழ் எம்பிக்கள் பொத்துவில் இருந்து புண்ணாக்கை கொண்டு வந்து பொதுமக்களை ஏமாற்றுவார்கள்.


அதே புலம்பெயர் தமிழர் கூட்டங்கள் ஒரு சில புலிக்கொடிகளுடன் சீமானுடன் அங்கேயும் இங்கேயும் ஓடித் தெரியும்..
எல்லா கடைகளிலும் உண்டியல் வைக்கப்படும்…


மீண்டும் பொதுமக்கள் வெளிநாட்டில் குளிர்களில் உழைக்கின்ற பணங்கள் சேர்க்கப்பட்டு ஐநா சபை மற்றும் சர்வதேச உதவிகளுடன் தமிழருக்கு நீதி கிடைக்கும் என இன்னும் ஒரு இருபது வருடம் இழுத்தடிக்கப்படும்..


தமிழின விகிதாசாரம் மெல்ல மெல்லமாக அழிக்கப்பட்டு இன்னும் இருபது முப்பது வருடங்களில் தமிழினம் இலங்கையை விட்டு மொத்தமாக வெளியேறும்..


நானும் இதர பல தமிழர்களும் காணாமல் ஆக்கப்படுவோம்..
இவற்றிற்கு உள்ளே சிறந்த தெரிவு எதுவென்பது பொது வேட்பாளராக இருந்தால் அங்கேயும் பிரச்சனைகள் உள்ளது..


பொது வேட்பாளரை வைத்துக்கொண்டு ஐநாவிற்கு போய் நீதி கிடைத்த வரலாறு 2009 இல் இருந்து இன்றுவரை நடக்கவில்லை..


பொது வேட்பாளர் என சொல்லப்படுகின்ற கூட்டங்கள் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் நன்றாக பணங்களை சேர்த்து பிள்ளைகளுக்கு ஹெலிகாப்டரில் சாமத்திய வீடும் ரீச்சா மற்றும் ஐ பி சி போன்ற ஊடகங்களை நடத்தியும் மிச்சம் இருக்கின்ற தமிழர்களையும் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும்..


எமக்கென உள்ள தலைமை வெற்றிடமாக உள்ளது என சிவனடியான் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்..


நல்லதொரு தலைமையை தேடுங்கள்..
அது நிச்சயமாக சுமந்திரனோ சாணக்கியனோ ஸ்ரீதரனனோ அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவோ அல்லது அரிய நேந்திரனோ அல்ல..
இவைதான் எனக்குத் தெரிந்த அரசியல் அறிவு..


இவை பிழை என்றால் சரியான கருத்தை சொல்லுங்கள்..
ஒரு உண்மையான தலைமை தமிழனுக்கு கிடைக்கும் வரை யாழ்ப்பாணமோ மட்டக்களப்போ மிஞ்சப் போவதில்லை..


நான் அரசியலில் இருந்து விலகுகிறேன்..
நான் ஏற்கனவே வைத்திய சேவையில் இருந்து விலக்கப்பட்டு விட்டேன் திட்டமிட்ட ரீதியில்..


பெரும்பாலும் காணாமல் ஆக்கப்படுவேன்..
என்னை எதிர்த்த ஒவ்வொரு தமிழனும் தன்னைத்தானே நொந்து கொள்ளும் நாட்கள் விரைவில் வரும்..


எனக்குத் தெரிந்தவை எல்லாம் தமிழனுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே..
இருந்தேன் சாவகச்சேரி வைத்தியசாலையில் நடந்த அட்டூழியங்களை வெளியில் சொன்னேன்..


மன்னர் போய் சிந்துஜாவின் நீதியை கேட்டேன்..
அவை சம்பந்தமாக எனது தமிழ் உறவுகளாலேயே விமர்சிக்கப்பட்டேன்..
இப்போது கூட ஓடிக்கொண்டே இருக்கிறேன்..
உயிருக்கு பயந்து அல்ல.


உயிருக்கு பயந்தவன் முஸ்லிம் மேடையில் இருந்து இறங்கி நான் போய் வருகிறேன் என சொல்லிவிட்டு வந்திருக்க மாட்டான்..
உயிருக்கு பயந்தவன் சஜித் பிரேமதாசவின் ஓடியோ லீக் பண்ணி இருக்க மாட்டான்..


உயிருக்கு பயந்தவன் இவ்வளவு விமர்சனங்களையும் தெளிவாக முகப்புத்தகத்தில் எழுத மாட்டான்..
என் தொழிலை இழந்து இருக்கிறேன்..
என் குடும்பத்தை என்னால் சென்று பார்க்க முடியாது..


எனது உடலையும் பேராதனை வைத்தியசாலைக்கு இப்போதோ எழுதிக் கொடுத்து விட்டேன் முதன் முதலாக..
எனது உறுப்புகள் அனைத்தும் தானமாக வழங்கப்பட்டு விட்டன..
என் உயிரை தமிழனுக்காக கொடுத்திருக்கிறேன்..


என் எதிரிகளுக்கு என் என்ன வேண்டும்??
தமிழனாக தமிழனுக்கு பிறந்தேன்..
என் உயிர் மூச்சு இருக்கும் வரை தமிழுக்காக எனது இதயம் துடித்துக் கொண்டிருக்கும்..


உங்களால் முடிந்தால் இவற்றில் ஒன்றையேனும் செய்து பாருங்கள்..
குடும்பம் தொழில் உயிர் உடல்..


ஒன்றையேனும் செய்துவிட்டு பதிவிடுங்கள்..
இருந்தால் உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு..
எப்படி வசதி?
தமிழனின் தாகம்…..


மக்களால் அதிகம் விரும்பப்பட்ட விரும்பப்படுகின்ற தமிழ் மெடிக்கல் அட்மின்..
வைத்திய கலாநிதி இராமநாதன் அர்ச்சுனா.