ஆளுநர் மாளிகை போரட்டம் அர்ச்சுனா ஆதரவாளர்களின் இரத்து
Posted in இலங்கை செய்திகள்

ஆளுநர் மாளிகை போரட்டம் அர்ச்சுனா ஆதரவாளர்களின் இரத்து

ஆளுநர் மாளிகை போரட்டம் அர்ச்சுனா ஆதரவாளர்களின் இரத்து

ஆளுநர் மாளிகை போரட்டம் அர்ச்சுனா ஆதரவாளர்களின் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் தெரிவிக்க பட்டுள்ளது .

அர்ச்சுனாவுக்கு ஆதரவான மக்கள் இணைந்து யாழ்ப்பாணம் கச்சேரிக்கு முன்பாக அமைய பெற்றுள்ள ,ஆளுநர் மாளிகைக்கு முன்பாக அறவழி போராட்டம் ஒன்றை நடத்தி ,அதன் ஊடாக மகயர் ஒன்றை கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வந்தது .

ஆனால் தற்போது அந்த போராட்டம் சில காரணிகள் காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக வன்னிமைந்தன் டிக் டாக் நேரலையில் வன்னி மைந்தன் தெரிவித்துள்ளார் .

அர்ச்சுனா இராமநாதன் சிறையில் இருந்து விடுதலையாகும் வரை எவ்வித போராட்டங்களும் நடத்துவதில்லை என்ற நிலையை இவர்கள் கடைபிடிக்க முனைவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

எனவே யாழ்ப்பாணம் வடக்கு மாகாண ஆளுநர் மாளிகை முன்பக்க இடம்பெறவிருந்த மகாயார் கையளிப்பு போராட்டம் கைவிட பட்டுள்ளதக வன்னி மைந்தன் தெரிவித்துள்ளார் .

அர்ச்சுனாவை வன்னி மைந்தன் காட்டி கொடுத்தாரா
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனாவை வன்னி மைந்தன் காட்டி கொடுத்தாரா 

அர்ச்சுனாவை வன்னி மைந்தன் காட்டி கொடுத்தாரா 

அர்ச்சுனாவை வன்னி மைந்தன் காட்டி கொடுத்தாரா ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் ஆதரவாக வன்னி மைந்தன் செய்வது என்ன ..? ஆரம்பிக்க பட்ட தேர்தல் களமுனை நகர்வு இது தான்.

காணொளியில் முழுமியன் விபரம் மக்களே பாருங்கள்

வீடியோ

மருத்துவ மனையில் அர்ச்சுனா அனுமதி
Posted in இலங்கை செய்திகள்

மருத்துவ மனையில் அர்ச்சுனா அனுமதி

மருத்துவ மனையில் அர்ச்சுனா அனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெற்று சென்றதாக தெரிவிக்க படுகிறது .

இன்று நீதிமன்றில் வழக்காடு மன்றத்திற்கு எடுக்க பட்டதாக தெரிவிக்க படுகிறது .அப்பொழுதே இவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பட்டதாக தெரிவிக்க படுகிறது .

தற்போது மருத்துவமனையில் இருந்து விடுவிக்க பட்டு மீளவும் சிறைச்சாலைக்கு அழைத்து செல்ல பட்டுள்ளதாக குறிப்பிட படுகிறது .

எதிர் வரும் பத்தாம் திகதி மீளவும் வழக்கு விசாரணைக்கு ,வருகிறது அப்பொழுது இவர் விடுவிக்க படலம் என எதிர் பார்க்க படுகிறது .

இன்று விடுதலையாவர் என எதிர் பார்க்க பட்ட பொழுதும் ,அது நிறைவேராதா நிலையில் மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர் .

அர்ச்சுனா காலில் பந்து |வென்றிட அருமையான வாய்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா காலில் பந்து |வென்றிட அருமையான வாய்ப்பு

அர்ச்சுனா காலில் பந்து |வென்றிட அருமையான வாய்ப்பு

அர்ச்சுனா காலில் பந்து |வென்றிட அருமையான வாய்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவாக காணப்படுகிறது .

கீழே உள்ளே காணொளியில் அழுத்தி பாருங்கள்

வீடியோ

கோமாளி அர்ச்சுனா மண்டையன்குழு தலைவர்
Posted in இலங்கை செய்திகள்

கோமாளி அர்ச்சுனா மண்டையன்குழு தலைவர்

கோமாளி அர்ச்சுனா மண்டையன்குழு தலைவர்

கோமாளி அர்ச்சுனா மண்டையன்குழு தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார் .

வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதன கோமாளி எனவும் அவர் மன நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக மண்டையன் குழு தலைவராக விளங்கிய மண்டையன் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார் .

விடுதலை புலிகள் அமைப்பினாரால் தமிழ் தேசிய கூட்டமைப்பு எனும் கட்சி ஒன்றுக்கு ஆரம்பிக்க படுவதற்கு முன்பதாக ,இலங்கை இராணுவத்துடன் இணைந்து செயலாற்றி வந்த மண்டையன் குழு சுரேஷ் அணியினர் மக்களை படுகொலை செய்தனர் .

பெண்கள் கடத்தி செல்லப்பட்டு கற்பழிக்க பட்டனர் ,காணாமல் ஆக்கப்பட்டனர் .படுகொலை செய்யப்பட்டதுடன் மக்களை மிரட்டி பணப்பறி ப்பிலும் இந்த சுரேஷ் பிரேமசந்திரன் மண்டையன் குழு ஈடுபட்டது .

சிங்கள இராணுவத்தினருடன் இனைந்து பிடித்து செல்ல பட்டவர்கள் வதைகளிற்கு உள்ளாக்க பட்டு படுகொலை ,செய்யப்பட்டதுடன் அவர்களது குடும்பங்கள் மிரட்டப்பட்டு பணம் என்பன கப்பமாக பறித்தனர் .

அவ்வாறான தேசவிரோத செயல்களை புரிந்த இந்த மண்டையன் சுரேஷ் பிரமேமசந்திரன் ஆயுத குழுவை புலிகள் கூட்டமைப்பில் இணைந்து மன்னித்தார் .

அதன் பின்னர் மக்கள் முன் தோன்றிய இந்த மண்டையன் சுரேஷ் பிரேமசந்திரன் தாங்கள் மனித புனிதர்கள் என பேசிய வண்ணம் அலைகின்றார் .

தனது தாய் மனுக்கும் ,மக்களிற்கும் எதிராக செயல்பட்ட எட்டப்ப கூட்டமான மண்டையன் குழு தலைவர் ,இன்று அர்ச்சுனா இராமநாதனை மனநோயாளி எனவும் ,கோமாளி என கூறுகிறார் .

இப்பொழுது மக்களாகிய நீங்கள் இந்த சுரேஷ் பிரேமசந்திரன் குழுவால் நடத்த பட்ட படுகொலைகள் ,கடத்தல் , காணமல் ஆக்கப்படுதல் ,கற்பழிப்பு ,கப்பம் போன்ற விடயங்களை மக்கள் பேசவேண்டும் .

மண்டையன் சுரேஷ் பிரேமசந்திரன் எம்மோடு பேசிட தயார் என்றால் அழையுங்கள் நாங்கள் பேசிட தயாராக இருக்கின்றோம் .

உங்களினால் பாதிக்க பட்டவர்கள் உள்ளார்கள் அவர்களும் பேசட்டும் உங்களது படுகொலை இராச்சியத்தின் மறுபக்கத்தை ,எழுந்து வாருங்கள் நேருக்கு நேர வன்னி மைந்தன் டிகே நேரலையில் பேசுவோம் .

எமது இந்த சவாலுக்கு ரெடியா நீங்கள் ..? மண்டியன் குழு தலைவரே பதில் கூறுங்கள் .

அர்ச்சுனா எங்கே ஏக்கத்தில் அழுத பெண்கள்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனா எங்கே ஏக்கத்தில் அழுத பெண்கள்

அர்ச்சுனா எங்கே ஏக்கத்தில் அழுத பெண்கள்

அர்ச்சுனா எங்கே ஏக்கத்தில் அழுத பெண்கள் ,வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் கடந்த தினம் அர்ச்சுனா எங்கே என கேட்டு கேட்டு பெண்கள் அழுத்த காட்சிகள் கீழ் உள்ள காணொளியில் உள்ளது .

மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் மீது மக்கள் கொண்டுள்ள அளவு கடந்த பாசம் மேற்படி காணொளியில் பெண்கள் அழுத கண்ணீர் குமுறல் காட்சிகள் ஊடாக காணமுடிகிறது .

கீழ் உள்ள இணைப்பில் அழுத்தி பாருங்கள் மக்களே

வீடியோ

சிறையில் அர்ச்சுனாவை அடைத்த அனுரா
Posted in இலங்கை செய்திகள்

சிறையில் அர்ச்சுனாவை அடைத்த அனுரா

சிறையில் அர்ச்சுனாவை அடைத்த அனுரா

சிறையில் அர்ச்சுனாவை அடைத்த அனுரா குமர திசாநாயக்க ஆட்சி என மக்கள் கண்ணீரோடு தெரிவித்து வருகின்றனர் .

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஆட்சி பீடம் ஏறிய அனுரா குமார திசாநாயக்க, மக்களுக்கு மிக பெரும் சேவை ஆற்றுவார் என கருதப்பட்டு வரும் நிலையில் ,பதவி ஏற்று மூன்று நாட்களுக்குள் மருத்துவர் அர்ச்சுனாவை சிறையில் அடைந்துள்ளார் .

இது திட்டமிட்ட பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் இயக்க பட்டு வருவதாகவே அடித்தட்டு மக்கள் மன்றம் உளவியல் காணப்படுகிறது .

வடக்கு தமிழர் பகுதியில் தமது அரசியல் இருப்பை தக்க வைத்து கொள்ள முடியா நிலை ஏற்படலாம் என்பதால் ,மருத்துவர் அர்ச்சுனாவை மிரட்டி அடிபணிய வைக்கும் நடவடிக்கையில் அனுரா குமார திசாநாயக்க ஈடுபட்டுள்ளார் என்றே அடித்தட்டு பாமர மக்கள் உளவியல் கூற்று காணப்படுகிறது .

ஆகவே மக்களின் இந்த மனோ நிலை என்பது ஆளும் அனுரா குமார திஸாநாயக்கவிற்கு எதிரான எதிர்ப்பு அலையடை உருவாக்கியுள்ளது .

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிக ஆசனத்த்தை அனுரா குமார திசாநாயக்க பெறவேண்டுமாகாக இருந்தால் மருத்துவர் அர்ச்சுனா மீது அடாவடி அடக்குமுறையை பிரோயோகிக்காது செல்ல வேண்டும் .

அவ்வாறு கண்டும் காணாது போன்ற செயல் ,அல்லது அவரது பயணத்திற்கு தடை விதிக்கா மென்போக்கு நிலையை அனுரகுமார திசாநாயக்க கடைபிடிக்க வேண்டும் ,

அது தவறினால் தமிழ் மக்கள் மனங்களில் நிலையான இடம்பிடித்து வெற்றி நடை போட முடியா நிலை ஏற்படலாம் .

ஆகையால் அனுரா குமார திசாநாயக்க கட்சி மற்றும் அதில் அங்கம் வகிக்கும் தமிழ் தலைமைகள் உள்ளிட்டவர்கள் இதனை கவனத்தில் எடுத்து பயணிக்க வேண்டும் .

அர்ச்சுனாவை தொடர்ந்து சிறை படுத்தினால் அதுவே அர்ச்சுனாவிற்கு அனுதாப அலையயை மக்கள் மத்தியில் தேடி தருவதுடன் ,அதிக வாக்குகளை பெற்று மருத்துவர் அர்ச்சுனா கட்சி வெற்றி நடை போட வழி வகுக்கும் .

ஆக மொத்தம் அர்ச்சுனாவை தொட்டால் அனுரா கட்சி செத்தான் என்கின்ற நிலைதான் காணப்டுகிறது .

இந்த அரசியல் சதுரங்கம் கொஞ்சம் வித்தியமான பாடத்தை தமிழர்கள் மத்தியில் அனுரா குமரா திசாநாயக்கவிற்கு உருவாக்கலாம் .

ஆகையால் நான் இலங்கை வாழ் மக்கள் ஜனாதிபதியென அனுரா குமார திசாநாயக்க கருதினால் ,நாம் மேலே

குறிப்பிட்ட விடயங்களை அந்த கட்சி ,மற்றும் மேல் மட்டங்கள் ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .

சுருங்க சொன்னால் கரணம் தப்பினால் மரணம் என்பது தான் ,மேலும் சொல்ல போனால் எனது கணிப்பின் அடிப்படையில்

115 ஆசனங்களை மட்டுமே அனுரா குமார திஸாநாயக்காவினால் பெற முடியும் நிலை காணப்படுகிறது .

தனி பெரும்பாண்மை பலத்த பாரளுமன்றில் நிரூபிக்க வேண்டுமானால் ,நாம் கூறும் இந்த விடயத்தை காதில் போட்டு வாயில் ஆட்டுங்கள் அனுரா குமார திசாநாயக்க கட்சியில் அங்கம் வகிக்கும் பெரும் மக்களே .

  • வன்னி மைந்தன் –
அர்ச்சுனா இராமநாதன் கைது மக்கள் அழுகை
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

அர்ச்சுனா இராமநாதன் கைது மக்கள் அழுகை

அர்ச்சுனா இராமநாதன் கைது மக்கள் அழுகை

அர்ச்சுனா இராமநாதன் கைது மக்கள் அழுகை ,வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதன் அவர்கள் நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக தடுத்து வைக்க பட்டுள்ளார் .

இன்று நீதிமன்ற வழக்கிற்கு சென்ற இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

அர்ச்சுனா இராமநாதனை நேசிக்கும் மக்களிற்கு இந்த கைது ,தடுத்து வைப்பானது மிக பெரும் நெருடலை ஏற்படுத்தியுள்ளது .

பல ஆண் பெண்கள் அழுகையோடு எமக்கு அழைத்து தமது கண்ணீர் மலர்ந்த குமுறலை தெரிவிப்பதில் இருந்து அர்ச்சுனா இராமநாதன் என்கின்ற இந்த மனிதன் மக்கள் மனதில் எவ்விதம் நீங்காத இடம் பிடித்து ஆட்சி செய்கின்றார் என்பதை உணர முடிகிறது .

தமிழ் இனத்தின் மக்கள் விடியலிற்கு வருகை தரும் ஒருவர் இவ்விதம் நசுக்க படுவது ,மிக பெரும் நெருடலை ஏற்படுத்தியுள்ளது .

நீதிமன்றில் நடந்த விடயம் என்ன என்பதை முழுமையாக இந்த காணொளியில் உள்ளது கேட்டு பாருங்கள் மக்களே .

தளராது அர்ச்சுனாவிற்கு ஆதரவாக நாம் பயணிப்போம் .

வீடியோ

வன்னியில் அர்ச்சுனா ஆட்டம் ஆரம்பம்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

வன்னியில் அர்ச்சுனா ஆட்டம் ஆரம்பம்

வன்னியில் அர்ச்சுனா ஆட்டம் ஆரம்பம்

வன்னியில் அர்ச்சுனா ஆட்டம் ஆரம்பம் , வன்னி தேர்தல் தொகுதியில் அர்ச்சுனா இராமநாதன் மக்கள் இயக்க முன்னணி கட்சி சார்பாக சட்டவாளர் ஒருவர் களமிறக்க படுவதாக அறிவிக்க பட்டுள்ளது .

மிகவும் திறன் வாய்ந்தவர்களும் ,மக்கள் விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்த போரளிகளையும் அர்ச்சுனா இராமநாதன் தெரிவு செய்து களத்தில் இறக்கியுள்ள செயல் வரவேற்பை பெற்றுள்ளது .

நன்கு ஒருங்கிணைக்க பட்ட நேர்த்தியான ரீதியில் அர்ச்சுனா இராமநாதன் செயல் படுவது இதன் ஊடக மீளவும் ஒருமுறை நிருபனமாகியுள்ளது .

மக்கள் வாழ்வியலில் புதிய மாற்றத்தையும் ,மாறுதலையும் ஏற்படுத்தும் நோக்கில் அரசியல் புரட்சியை விதைக்கும் நடவடிக்கையில் அர்ச்சுனா இராமநாதன் மக்கள் இயக்க முன்னணி கட்சி ஈடுபட்டுள்ளது .

தாயாக பகுதியில் ,வெளிநாடுகளிலும் இந்த கிளைகள் உருவாக்க பட்டு மக்கள் ; பயணம் செய்கின்றனர் .

அதன் ஒரு அங்கமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்க படுகிறது .சிறந்த தெளிந்த சிந்தையோடு பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் அர்ச்சுனா இராமநாதன் பயணம் வெற்றி பெறும் என்பதாக மேற்படி தெரிவுகள் காண் பிக்கின்றன .

பலத்த போட்டி நிலவும் ஒரு களமாக தமிழர் தாயக பகுதியில் காணப்பட போகின்றன .

புதிதாக மூன்று காட்சிகள் இந்த களத்தில் போட்டியிட போகின்றன என்பதை களத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

அப்படி என்றால் சட்டப்படி இந்த பாராளுமன்ற தேர்தல் பரபரப்பும் பேசுவதற்கு நிறையவே களமுனையில் திறக்க பட போகின்றன .

ஆகவே அந்த கட்சியின் செயல்பாடுகள் ஊடகங்களில் பேச படாது மறைக்க பட வாய்ப்புக்கள் உள்ளன .காரணம் அதிகம் கட்சி சார்பான ஊடகங்களே காணப்படுகின்றன .

ஆக மொத்தம் அரசியல் கட்சிகள் இப்பொழுது அதற்கு ஏற்ப களத்தை அமைத்து காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளன .

வன்னி தொகுதியில் அர்ச்சுனா களமிறக்கும் சட்டவாளர் மிக முக்கியமானவர் என கூற படுகிறது .

,இதன் பிரதி பழிப்பு எமது கட்சியிலும் சட்ட தரணிகள் உள்ளார்கள் என எதிரியை கலங்கடிக்க வைத்துள்ளார் அர்ச்சுனா இராமநாதன் .

அர்ச்சுனா கட்சி விடயங்கள் நாள்தோறும் லண்டன் நேரம் மதியம் 4.00 மணிக்கு வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் இடம்பெறுகிறது இதில் அழுத்தி பார்க்க

மிரட்டல் அர்ச்சுனா அண்ணாவுக்கு
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

மிரட்டல் அர்ச்சுனா அண்ணாவுக்கு

மிரட்டல் அர்ச்சுனா அண்ணாவுக்கு

மிரட்டல் அர்ச்சுனா அண்ணாவுக்கு இடம்பெற்றுள்ளதாக ரகுராம் இராமநாதன் அவர்கள் வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் தெரிவித்துள்ளார் .

தனது கைபேசிக்கு ,அச்சுறுத்தும் மிரட்டல் பேச்சை மேற்கொண்டதாகவும் ,அதற்குரிய சட்ட நடவடிக்கையை தான் மேற்கொள்ள உள்ளதாக அர்ச்சுனா இராமநாதனின் உடன்பிறந்த அண்ணன் ரகுராம் இராமநாதன் தெரிவித்துள்ளார் .

தம்பி மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் அரசியல் கட்சி ஒன்றை நிறுவி அதன் ஊடக அரசியலில் களம் குதித்துள்ள நிலையில் ,

அதற்கு ஆதரவாக செய்லபடுபவர்கள் குரல்வளையை நசுக்கும் நடவடிக்கையில் விடுதலை புலிகள் என உரிமை கூறி கொள்ளும் குழுக்களினால் தொடர்ந்து அச்சுறுத்தல் விடப்பட்டு வருகிறது .

தமிழீழ காவல்துறையில் அதிகாரியாக பணியாற்றிய ரகுராம் அவர்கள் ,விடுதலை புலிகள் செயல் பாட்டு தளத்தில் இருந்து ஒதுங்கி தனிமனிதா வாழ்வியல் பயணத்திற்கு தன்னை உள்படுத்தி வாழ்ந்து வருகிறார் .

அவ்வாறான நிலையில் அர்ச்சுனா இராமநாதன் முன்னெடுத்து செல்லும் அரசியல் போருக்கு ஆதரவாக தனது குரலை வழங்கி வருகிறார் .

அதனால் அதனை ஜீரணித்து கொள்ள முடியாத இந்த கும்பல் ,இவ்வாறு அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் ,தேச துரோகி ,துரோகி என பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர் .

துரோகி ரகுராம் என்றால் அதனை கூறும் நபர்களும் துரோகிளியாகத்தானே இருக்க முடியும் ,என்பதை மறந்து இவ்வாறு துரோக பட்டம் வழங்கி வருகின்றனர் .

துரோகி என கூறும் நபர்களின் ஆரம்பம் முதல் இன்று வரையான செயல்பாடுகளை தோலுரித்து தொங்க விட்டால் தான் ,இவ்வாறான துரோகி பட்டம் வழங்கும் செயல் பாடுகள் முடக்க படும் என, மக்கள் மன்றம் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

அரசியல் கட்சி அர்ச்சுனா ஆரம்பித்தார்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அரசியல் கட்சி அர்ச்சுனா ஆரம்பித்தார்

அரசியல் கட்சி அர்ச்சுனா ஆரம்பித்தார்

அரசியல் கட்சி அர்ச்சுனா ஆரம்பித்தார், மக்கள் இயக்க முன்னனி அர்ச்சுனா இராமநாதன் என்கின்ற புதிய அரசியல் கட்சி ஒன்றை அர்ச்சுனா இராமநாதன் ஆரம்பித்துள்ளார் .

தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கு மக்கள் இயக்க முன்னணி என்கின்ற கட்சி தொடர்ந்து செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார் .

எதிர் வரும் நாட்களில் மக்கள் இயக்க முன்னணி தனது ஆடுகளத்தை ஐந்து வெளிநாடுகளில் கிளை பரப்பி செயல்பட உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

வன்னி மைந்தன் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார் என்கின்ற விடயமும் தெரிவிக்க படுகிறது .

கனடா ,பிரான்ஸ் , சுவிஸ் , அவுஸ்ரேலியா ,பிரிட்டன் ,நாடுகளில் இதன் கிளை ஆரம்பிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் .

அதற்கான செயலணிகள் உருவாக்க பட்டு வருகின்றது .விரைவில் முழு மூச்சாக மக்கள் இயக்க முன்னணி என்ற கட்சி மக்கள் முன் ஆளுமையுடன் ,ஆளுமையானவர்களை தாங்கி செயல்படும் என அடித்து கூற படுகிறது .

கட்சியின் செயல்பாட்டுக்கு மக்கள் தமது நன்றிகளையும் பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர் .

மேலே உள்ள குறிப்பிட்ட நாடுகளில் உள்ளவர்கள் எமது வாட்சாப் ,மற்றும் வைபர் குழுவுடன் இணைந்து செயல் படுங்கள் ,நாடுகளுக்கு என பிறிது குழுமங்கள் உருவாக்க பட்டு வருகின்றன .

அந்த நாடு தழுவிய இணைப்புக்கள் விரைவில் எதிரி இணையம் என்ற பகுதியிலும் ,அர்ச்சுனா archchunanews .com லும் இணைக்க படும் .

அர்ச்சுனா மக்கள் இயக்க முன்னணியில் இணைய விரும்பும் உறவுகள் உங்களை இணைத்து பயணிக்க முடியும் என்பதை அன்பு நெஞ்சங்களே தெரிவித்து கொள்கிறோம் .

அர்ச்சுனா காதல் புதுசா கிளப்பிராங்க
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனா காதல் புதுசா கிளப்பிராங்க

அர்ச்சுனா காதல் புதுசா கிளப்பிராங்க

அர்ச்சுனா காதல் புதுசா கிளப்பிராங்க ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் மீது சிலர் சுமத்திய விசமதனமான குற்ற சாட்டுக்கு சாட்டையடி வழங்கிய அர்ச்சுனா இராமநாதன் பதில்கள் .

காணொளியை அழுத்தி முழுமையாக பாருங்கள் மக்களே

அர்ச்சுனா கட்சி ஆரம்பித்தார் மகிழ்ச்சியில் மக்கள்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனா கட்சி ஆரம்பித்தார் மகிழ்ச்சியில் மக்கள்

அர்ச்சுனா கட்சி ஆரம்பித்தார் மகிழ்ச்சியில் மக்கள்

அர்ச்சுனா கட்சி ஆரம்பித்தார் மகிழ்ச்சியில் மக்கள்,மக்கள் இயக்க முன்னணி ராமநாதன் அர்ச்சுனா என்கின்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார் .

அதனடிப்படையில் இந்த கட்சி உருவாக்க பட்டு செயலாற்ற படவுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .

கட்சியின் தலைவராக அர்ச்சுனா இராமநாதன் மற்றும் அதன் செயலராக மயூரன் ஆகியோர் நியமிக்க பட்டுள்ளனர் ,

அதனை அடுத்து கட்சியின் இணைய விடயங்கள் மற்றும் உறுப்பினர்கள் தொடர்பாக வரும் நாட்களில் விடயங்கள் வெளியிட படும் .

https://www.tiktok.com/@vannimainthan
FOLLOW ME அர்ச்சுனா வருகிறார் இன்று TODAY UK TIME 4.00 PM பேச வாங்க

வீடியோ

அர்ச்சுனா ஆட்டம் ஆரம்பம் அனுரா வெற்றி அலறும் எதிரிகள்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனா ஆட்டம் ஆரம்பம் அனுரா வெற்றி அலறும் எதிரிகள்

அர்ச்சுனா ஆட்டம் ஆரம்பம் அனுரா வெற்றி அலறும் எதிரிகள்

அர்ச்சுனா ஆட்டம் ஆரம்பம் அனுரா வெற்றி அலறும் எதிரிகள் ,இலங்கை ஜனாதிபதி தேர்தலில் அனுரா குமுற திசாநாயக்க இலங்கை ஜனாதிபதியாக தெரிவு செய்ய பட்டதை அடுத்து அர்ச்சுனா இராமநாதன் ஆட்டம் ஆரம்பித்துள்ளது.

இன்று அதிகாலை வன்னி மைந்தன் ஆகிய எனது டிக் டாக் நேரலையில் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்த முக்கிய விடயங்கள் இதோ காணொளியில் உள்ளது .

வீடியோ

அர்ச்சுனா இராமநாதன் சிக்குவாரா
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனா இராமநாதன் சிக்குவாரா

அர்ச்சுனா இராமநாதன் சிக்குவாரா

அர்ச்சுனா இராமநாதன் சிக்குவாரா, இன்று இடம்பெற்று கொண்டிருக்கும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அர்ச்சுனா இராமநாதன் சிக்குவாரா என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் அனுரா திஸநாயாக்காவே அமோக வெற்றியாளராக காணப்படுவதுடன் இரண்டாம் நிலையில் சஜித் தள்ள படுவார் .

அவ்வாறு அனுரா ஜனாதிபதியாக வருகை தந்தால் ,வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் தற்போது செயல் பட்டது போன்று சுதந்திரமாக செயல்படுவாரா அதற்கு இவர்களும் ஆளும் அதிகாரம் இடம் அளிக்குமா என்பதே நமது கேள்வியாகும் .

களம் மாறும் போல் அசைவுகள் காணப்படுகின்றன பார்க்கலாம் ,சிலவாரத்தில் இதன் தாக்கம் எதிரொலிக்கும் .

காணொளியில் முழுமையான விடயம் மக்களே அதனை பார்க்க

சற்றுமுன் கிளிநொச்சியில் களமிறங்கிய அர்ச்சுனா
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

சற்றுமுன் கிளிநொச்சியில் களமிறங்கிய அர்ச்சுனா

சற்றுமுன் கிளிநொச்சியில் களமிறங்கிய அர்ச்சுனா

சற்றுமுன் கிளிநொச்சியில் களமிறங்கிய அர்ச்சுனா, இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகுதியில் மக்கள் வாழ்வு இப்படித்தான் இருக்கிறது .

வன்னி மைந்தன் ஆகிய எனது டிக் டாக் நேரலையில் மருத்துவர் அர்ச்சுனா கலந்து கொண்டு கூறிய கருத்திற்கு இனங்க இந்த காட்சிகளை காண் பித்துள்ளார் .

இப்பொழுது மக்களே உங்கள் மன நிலை என்ன ..? 1950ஆண்டுகளில் எப்படி வளர்ச்சி இன்றி இந்த பகுதிகள் காணப்பட்டனவோ ,அதேபோல யன்னல்கள் இல்லாது ,கதவு இல்லாது உண்ண உணவின்றி மக்கள் இப்படித்தான் இருக்காங்க .

அரசியல் வாதிகளை நம்பி ஏமாந்து போனோமா ..இல்லை அறிவற்ற தனத்தில் சிந்தனை திறன் அற்று இருக்கிறோமா .இனியேனும் கொஞ்சம் சிந்தி மக்கள் .

இதோ வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதன் வெளியிட்ட காணொளியை காண்க .

வீடியோ

https://www.youtube.com/watch?v=PM9ICXRpObM
அர்ச்சுனாவுக்கு அழுத பெண்கள்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவுக்கு அழுத பெண்கள்

அர்ச்சுனாவுக்கு அழுத பெண்கள்

அர்ச்சுனாவுக்கு அழுத பெண்கள்,அர்ச்சுனா இராமநாதனுக்கு ஆதரவக தமிழ் பெண்கள் கண்ணீர் மல்க தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர் .

மருத்துவர் அர்ச்சுனா அரசியல் போராட்டம் ,அது குறித்து மக்கள் தெரிவிக்கும்

வீடியோ

காதல் கவிதை அர்ச்சுனா எழுதினார்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

காதல் கவிதை அர்ச்சுனா எழுதினார்

காதல் கவிதை அர்ச்சுனா எழுதினார்

காதல் கவிதை அர்ச்சுனா எழுதினார் ,2020.05.14
காலம் என் மகனையும் என்னையும் தனித்து விட்ட போது..
இனம் மொழி கடந்த நீ செய்த உதவிகள்..
இன்று வரை என் பிள்ளைகளை பார்த்துக் கொண்டவை..
எல்லாம் மறக்க..
நான் ஒன்றும் நன்றி கடந்தவன் அல்ல..
நீ சொன்ன வரிகளுக்காய்..
நான் தந்த வார்த்தைகளுக்காய்..
நான் சொன்னதை செய்தேன்..
உன் அர்ப்பணிப்புகள்..
நீ வயிற்றில் சுமக்காத ஒரு பிள்ளையை..
இன்று வரை உன் தோளில் சுமக்கிறாய் என்பதை..
கடைசி வரை நான் மறவேன்..
சமூகத்திற்கு இது ஒரு பிழையாக போகலாம்..
என் பிள்ளையின் தாயும் நானும் பிரிந்த போது..
நீதிமன்றம் என் பிள்ளையை தந்ததற்குரிய காரணம்..
நீதான் என்பதை உலகறிய வேண்டும்..
இன்று வரை அவனை ஒரு வசனம் கூட உருக்கி பேசாத உன் இதயம்..
நீ செய்த உதவிகளை மறக்காத என் பிள்ளையின் அன்பு..
நான் தமிழ்..
நீ சிங்களத்தி என்பதை தாண்டி..
என்னோடு என் வாழ்க்கையில் இதுவரை இணைந்திருந்ததை..
சமூகத்திற்கு சொல்லியாகவே வேண்டும்..
சாவகச்சேரியில் எனது குவாட்டர்ஸ்க்கு நீ வந்தபோது
கேதீஸ்வரன் மற்றும் தயாளினி எழுதிய கடிதங்கள்..
பொல்லாத உறவு என்று சொன்னார்கள்..
ஒருவனை தனியே வைத்து வளர்க்கிறேன்…
தயாளினியும் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாய்..
அவள் எழுதிய கடிதங்கள் என்னிடம் இப்போதும் இருக்கின்றன..
நீ அப்போது ஒரு மருத்துவ பீட மாணவி..
உன் படிப்பையும் தாண்டி நீ செய்த அர்பணிப்புகள்..
கோவிட் வந்தபோது நான் உன்னையும் மகனையும்
ஒன்றாக வீட்டில் விட்டு
நாள் கணக்காக மருத்துவமனையே தவம் என கிடப்பேன்..
அன்று எனக்கு நீ வரம்..
என் பிள்ளைக்கு நீ ஒரு பெற்றெடுக்காத தாய்..
அவனுக்கு சிங்களம் தெரியாது..
உனக்கோ தமிழ் தெரியாது..
இடையில் மாட்டிக் கொண்ட நான்..
மும்மொழி ஆகிய காரணம் இதுதான்..
கோபத்தில் கத்தி இருக்கிறேன்..
மனம் உடைந்து அழுது இருக்கிறேன்..
எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டவள்..
இரவு பகலாக மகனைப் பார்த்தாய்..
அவன் என் அரவணைப்பை தாண்டி..
உனக்குள்ளே ஒரு குழந்தையாகினான்..
ராத்தி என பெயர் வைத்தது கூட அவன் தான்..
இன்றுவரை..
அம்மாவா நானா நீயா என..
உன் வாழ்க்கை போராடிக் கொண்டிருக்கிறது..
பெற்றெடுக்காத பிள்ளையை நீ தத்தெடுத்த போது..
உன் அன்பிற்கு..
அவன் அடைக்கலமான அந்த நாட்களை..
இன்னாளில் அன்றோ அன்னாள் தொடங்கியது..
நன்றி அம்மா..
வார்த்தைகள் இல்லை..

4900 மில்லியன் ஓடு கையோடு கூட்டி வாருங்கள் அர்ச்சுனா
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

4900 மில்லியன் ஓடு கையோடு கூட்டி வாருங்கள் அர்ச்சுனா

4900 மில்லியன் ஓடு கையோடு கூட்டி வாருங்கள் அர்ச்சுனா ,கண்டால் வரச் சொல்லுங்க ள்4900 மில்லியன் ஓடு கையோடு கூட்டி வாருங்கள்..
நான் இதை வளமையான சூரியனைப் பார்த்து குரைக்கும் எதையோ போல் விடப்போவதில்லை.


ஒரு அழகிய சிறிய குடும்பத்தை ஒரு பிள்ளையின் அம்மாவை ஒரு சமூகத்திலே ஒரு வைத்தியனாக ஒரு பேராசிரியர் மகளாக இருந்த எங்கள் குடும்பத்தை பிரித்த அந்த கண்ணாடி போட்ட வரை ஒரு 10 குடும்பத்திற்கு ஆவது வீடு கட்டி கொடுக்காமல் சும்மா போக விடமாட்டேன்.


டவல் பேண்ட் போடப்பட்டிருக்கிறது..
ஆகவே நாட்டை விட்டும் ஓட முடியாது..
கடலில் குதித்து நீந்துவார் என்றால்..
அதுக்கும் வாய்ப்பில்லை ராஜா..


ஒரு சில வீடியோக்களை எடுத்து விட்டிருக்கிறார்..
ஒரு youtube வைத்திருக்கும் உங்களுக்கே இவ்வளவு என்றால்..
எங்களுக்கு எவ்வளவு இருக்கும்.. என வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் .

தமது குடும்பம் பிரிவதற்கு காரணம் இவர் என்பதே அர்ச்சுனா இராமநாதன் உள்ளக்குமுறலாக உள்ளது .வழிபட்டவனுக்கே அதன் வலி புரியும் என்பது இப்பொழுது இந்த பதிவின் மூலம் அம்பலமாகியுள்ளது .

குற்றவாளி கூண்டில் ஏற்றப் பட்டு இந்த அழகிய குடும்பம் பிரிய காரணமாக விளங்கிய அந்த கயவன் தண்டிக்க படுவரா என்பதே கேள்வியாக உள்ளது .

அர்ச்சுனா கண்ணீர் உருக்க கடிதம்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

அர்ச்சுனா கண்ணீர் உருக்க கடிதம்

அர்ச்சுனா கண்ணீர் உருக்க கடிதம்

அர்ச்சுனா கண்ணீர் உருக்க கடிதம் ,இப்போது தான் மனம் இரண்டாய் பிளந்து கிடக்கிறது..


11 வழக்குகளையும் தாண்டி 118 வது நாளாக தெளிவாக ஓடிக் கொண்டிருக்கிறேன்..
ஒவ்வொரு துரோகங்களையும் முதுகிலிருந்து கத்திகளாக கழட்டும் போது நெஞ்சம் வலிக்கிறது..


செலஸ்தீன் அண்ணாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட துரோகத்திற்கான வரலாறு..
செலஸ்டின் அண்ணாவுக்கு நான் என்ன செய்தேன்?
மீண்டும் தம்பி ராசா?தம்பி லோக்கல் அரவிந்த்?அஜித்?கிஷோர்?
மது பிளாக்?இவர்களில் யாராவது சொல்லட்டும் நான் இவர்களுக்கு தீங்கிழைத்து இருக்கிறேன் என்று?


எல்லா தடைகளையும் தனியாக ஒருவன் தாங்கிக் கொண்டு 117 ஆவது நாளாக இன்றுவரை உங்கள் மத்தியில் நிற்கும் போது ஒன்றாக படித்த மருத்துவ சமூகமே நீதித்துறையுடன் சேர்ந்து முதுகில் குத்தும் போது?


பக்கத்தில் நிற்க வேண்டியவர்கள் முதுகில் குத்தி விட்டு தள்ளி நிற்கிறார்கள்?
அரசாங்கம் வஞ்சிக்கிறது என்று நினைத்தேன் சாவகச்சேரியில் இருந்து வெளியேறும் போது!


ஒன்றாக படித்த மெடிக்கல் அட்மினிஸ்ட்ரேஷன் எனக்கு எதிராக நிற்கிறது என்னை ஃபெயில் ஆக்கி கைதட்டி சிரித்துக்கொள்கிறது..
அப்போது கூட வலிக்கவில்லை..


ஆனால் ஒன்றாக நிற்கிறேன் ஒன்றாக சாப்பிடுவோம் ஒன்றாக தோளோடு போவோம் என்று சொன்னவர்கள் இப்போது தனித்தனி வீடியோக்கள் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்?


இதனையும் தாண்டி ஒருவன் நிற்கிறான் என்றால் ..
அதற்குப் பின்னாலும் எனக்காக சில பேர் நிற்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்..


அது எனக்காக வந்த எனக்காக நீதிமன்றத்தில் என் சார்பில் நின்ற தங்கை கௌசல்யாவில் தொடங்கி மயூரன் வினோ பாரதி சஞ்சு விக்கி அண்ணா வன்னி மைந்தன் தளபதி சபே சோதி அக்கா நேசன் அண்ணா உதயா அண்ணன் எனது சொந்த சகோதரர்கள் மற்றும் தமிழ் என்ற உணர்வில் நிற்கும் தமிழனாய் பிறந்த ஒவ்வொரு மானிடனும் எனக்காக நிற்கிறான்..


அந்த ஒரு அரவணைப்பே போதும்..
ஜெயில் என்ன மரண தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன்..
வைத்தியர்கள் அநீதி செய்கின்றார்கள் என நான் சொல்லவில்லை..
தாங்களாகவே ஓடிப்போய் வழக்குகளை போட்டு கொண்டார்கள்..


நீதிமன்றமும் சட்டவாளர்களும் வைத்தியர்களும் ஒன்றாக கிரிக்கெட் விளையாடி ஒன்றாக உணவருந்தி விட்டு ஒரே ஒருவனை குரல்வளையை போட்டு நசுக்கும் போது அது நீதிமன்ற அவமதிப்பு என்று சொன்னால் கூட எத்தனை வருடங்கள் எழுத முடியுமோ அத்தனை வருடங்கள் எழுதிக் கொள்ளுங்கள்..


தூக்கு தண்டனை எழுத முடியுமோ அதை கூட எழுதிக் கொள்ளுங்கள்..
எழுதிய பேனைகளை உடைக்கும் போது நீங்கள் உடைப்பது பேனையல்ல..
தமிழனின் குரல்வளைகளை என்பதை நினைவில் கொள்ளுங்கள்..


துரோகிகள் ஆகவே வாழ்ந்து பழகிப்போன தமிழினம் ஒருபோதும் நீதிக்கு தோள் கொடுக்காது..


அதற்காக அது அநீதி என தெரிகின்றபோது நீதிமன்றம் மட்டும் அல்ல தூக்கு மேடையிலும் சொல்லிக் கொள்வேன் அது அநீதி என்று!
சாகத் துணிந்தவனுக்கு தூக்கு மேடை பஞ்சு மெத்தை என்பதை மறுமுறை ஒருமுறை சொல்லிக் கொள்கிறேன்..


மருத்துவ துறையாக இருக்கட்டும் நீதித்துறையாக இருக்கட்டும்..
அநீதி என்பதை அநீதி என்று சொல்லுவதற்கு எதற்காக நான் பயப்பட வேண்டும்?
ஒன்றாக கிரிக்கெட் விளையாடிய அவர்களும் ஒன்றாக உணவு உண்டவர்களும் வழக்கு போட்டவர்களும் அவர்கள் தான் வழக்கை விசாரிப்பவரும் அவர்கள்தான்..
ஆனால் தன்னந்தனியாக நிக்கிறேன்..


கனம் நீதிபதியிடம் ஒரே ஒரு கேள்வி..
அன்று வெள்ளிக்கிழமை..


எல்லா வைத்தியர்களும் வைத்தியசாலையை விட்டு வெளிநடப்பு செய்த போது டிப்பரில் அடிபட்டு ஒரு தந்தையும் மகளும் கைகால் சிதைந்து ஏழு மணி அளவில் கிளிநொச்சி அம்புலன்ஸில் சாவகச்சேரிக்கு கொண்டு வந்த போது…


தாங்கள் நியாயமான வழக்குகள் என சொல்லிக் கொள்கின்ற அதே வழக்குதாரிகள் தான் யாழ்ப்பாணம் சுகாதார பிராந்திய பணிமனையில் ஒலிவாங்கிகளுக்கு முன்னாள் நின்று அவர்களுடைய உரிமைகள் பற்றி கதைத்துக் கொண்டிருந்தார்கள்..
அவர்கள் பக்கம் பக்கமாக எழுதி வாசித்துக் கொண்டிருந்தார்கள்..


ஐயா..
நீங்கள் அதைப் பார்க்கவில்லையா..
உங்களுக்கும் பிள்ளைகள் இருக்கிறது..
உங்களுக்கும் ஒரு அழகான மனைவி இருக்கிறார்..
அவர்கள் அன்று கால் சிதைந்து வந்திருந்தால்..


நீங்கள் என்னை நீதிமன்றத்திற்கு கேட்டு இருப்பீர்களா?? எல்லா வைத்தியர்களும் போனபோது நீர் ட்ரீட் பண்ண வேண்டியது உமது கடமை என்று..
கணம் நீதிபதி அவர்களே நான் ஒரு வைத்திய நிர்வாகி..


அன்று நான் எனக்கென்ன என்று நின்று இருக்கலாம்..
அப்போது அவர்கள் குருதிப்போக்காலே செத்து இருப்பார்கள்..
எனக்கு வழக்கு வந்திருக்காது..


அந்த 25 வைத்தியர்கள் தான் வழக்கில் அடைபட்டு இருப்பார்கள்.
அன்று நானும் எஞ்சி இருந்த மருத்துவ தாதியார்களும்தான் அந்த உயிரை காப்பாற்றினோம்..


அந்த உயிர் அன்று போயிருந்தால் எல்லாருக்கும் ஒரு செத்த வீடு.
அந்தக் குடும்பத்தை சற்று நினைத்துப் பாருங்கள்..


அங்கே ஒரு 18 வயது பெண் பிள்ளையை இழந்திருப்பார்கள்..
ஒரு தந்தையை ஒரு மனைவி இழந்து இருப்பார்…
இப்போது சொல்லுங்கள் அந்த உயிர்களை மட்டுமல்ல அந்த 25 வைத்தியர்களையும் காப்பாற்றியது யார்?


தொழிற்சங்க போராட்டம் என்று கொலை செய்யும் துணிந்தவர்களை நியாயமான வழக்குகள் என்று நீங்கள் சொல்லிக் கொள்கிறீர்கள்?
ஆம் என்னை அச்சுறுத்தினீர்கள்? அதில் என்ன சந்தேகம் இருக்கிறது..
வழக்கினை விசாரிக்காமலே வைத்தியசாலையை விட்டு வெளியே போகுமாறு நீங்களே சொல்கிறீர்கள்..


முதலில் ஒரு வழக்கினை விசாரிக்க வேண்டும்..
வைத்தியசாலை அத்தியாசகர் யார் என்பதை சுகாதார அமைச்சு எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும்..


அதன் பின்பு தானே ஐயா நீங்கள் முடிவெடுக்க முடியும் நான் வைத்தியசாலை வைத்திய அர்ச்சகர் பதவியில் இருந்து விலக்கப்பட்டுள்ளேன் என்று?
லண்டனில் இருந்து படித்து விட்டு வந்து யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் சேர்ந்து ஒரு துடுப்பாட்ட மாட்டை கூட பிடிக்கத் தெரியாதவர்கள் இன்று லோயர்களாக நிற்கிறார்கள்.


உங்கள் கணம் நீதிமன்றத்தின் முன் அவர்கள் என்னை அவமானப்படுத்தும் போது திருப்பி ஒரு வசனம் கதைப்பதற்கு கூட தாங்கள் என்னை அனுமதிக்கவில்லை..


குற்றத்தை விசாரிக்காமலே குற்றம் ஆனவன் என நீங்கள் நினைத்து விட்டீர்கள் ஏனெனில் அவர்கள் உங்களுடைய கிரிக்கெட் ஆட்டத்தின் நண்பர்கள் அல்லவா…
நல்ல காலம் நான் வைத்தியர்களுக்காக விளையாடவில்லை..


நானும் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் சோப் போல் ஹார்ட் போல் இரண்டும் விளையாடினேன்..


நீதிபதி என்று பார்க்காமல் கூட பவுன்சர் அடித்திருப்பேன்…
முடியாவிட்டால் ஒரு புல் டோஸ்ட் ஆவது போட்டு இருப்பேன்…
எங்களுக்கு முதுகின் பின் கதைக்க தெரியாது..


ஆனால் இலகு தமிழில் நன்றாக கதைக்க தெரியும் தங்கள் மேல் நீதிமன்றம் என்னை கதைக்க கூட அனுமதிப்பதில்லை…


ஒரு குற்றவாளியை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமலே சட்டம் தெரிந்தவர்கள் என சொல்லிக் கொள்பவர்கள் ஒரு கரையில் கத்தும் போது நான் கை உயர்த்தினால் உமக்கு கை உயர்த்த கூட அனுமதி இல்லை அடைப்பேன் என்று சொல்லும் உங்கள் நீதி…
வாழ்க நீதிமன்றம்..


கனம் நீதிபதி அவர்களே..
உங்கள் மகன் உந்துருளியில் விழுந்து காதலும் மூக்காலும் இரத்தம் ஒழுக அன்று வெள்ளிக்கிழமை வந்திருந்த குழந்தையாக இருந்தால்..


அப்போது நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்..
25 வைத்தியர்களுக்கும் எதிராக தாங்கள் அப்போதே ஒழுக்காளற்று நடவடிக்கை எடுத்திருக்க மாட்டீர்களா?
எனக்குத்தானே வருகின்றபோது எல்லாரும் நினைத்துக் கொள்வார்கள் அது இரத்தம் என்று..


அடுத்தவனுக்கு வரும்போது அது தக்காளி தொக்கு தானே ஐயா..
இதே நீதிமன்ற நீதிபதி 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் என்று நினைக்கிறேன் நெஞ்சு வலி என்று ஒரு மாலை நேரம் 5 மணி அளவில் வந்திருந்த போது ETU வில் பார்க்க வேண்டிய வைத்தியர்கள் இருக்கவில்லை..
அன்றைய நாள்..


நான் ஈ டி உவிலும் வேலை இல்லை..
நான் ஒரு குழந்தை மருத்துவனாக முதலாம் ஓட்டில் வேலை செய்து கொண்டிருந்தேன்..
அன்று வந்த நீதிபதி எந்த வைத்தியரும் பார்க்காமல் 30 நிமிடங்களுக்கு மேல் நெஞ்சு வலியுடன் துடித்துக் கொண்டிருந்தார்..


அப்போது நான் பெர்மனெண்டாகவே குவாட்டர்ஸில் இருந்ததால் என்னிடம் உடனடியாக ஓடி வந்து சொன்னார்கள் ஒருவர் நெஞ்சுவலிகள் இருக்கிறார் வந்து பார்க்க இயலுமா என்று..


ஐயா சட்டம் கதைப்பதாக இருந்தால்..
நான் அன்று சொல்லி இருக்கலாம்..
நான் முதலாம் வோட்டில் வேலை..
ஆதலால் பார்க்க முடியாது என்று..


எனக்கு அன்று சென்று அவருடைய ஷர்ட் கழட்டுமாறு கூறியபோது தாதிகள் ஒரு மாதிரி நெளிந்தார்கள்..


நான் அவரை சொன்னேன் தயவுசெய்து சேட்டை கழட்டுங்கள் அப்போதுதான் இசிஜி போட முடியும் என்று..


அவர் ஷூட்டை கழட்டிய போது நான் ஸ்க்ரீன்களை போட்டு மறைத்து கொண்டேன்..
மற்றக்கட்டிலில் பெண்மணிகள் இருந்தார்கள்..


அன்று நான் அவருக்கு மருத்துவம் செய்யாது விட்டிருந்தால்..
அன்று நான் யாரோ ஒருவர் தானே என எனது வேலையை பார்த்துக் கொண்டிருந்திருந்தால்..


அந்த நீதிபதி இழக்கப்பட்டிருப்பார்..
சட்டமும் நீதியும் வெளியே கதைக்கலாம்..
நான் அங்கு வேலை இல்லை என சொல்லிவிட்டு நடந்து போய்விட்டிருக்கலாம்..
ஆனால் ஒரு நீதிபதியின் வீட்டில் சாவு விழுந்திருக்கும்..
ஒரு நீதிமன்றமே கலங்கி போயிருக்கும்..
இது பொய் என்றால்..


தயவுசெய்து 2019 ஆம் ஆண்டு வரை நீதிபதியாக இருந்த நீதிபதியிடமே போய்க் கேளுங்கள்..
அவர்தான் என்னுடைய விவாகரத்து வழக்கையும் தன்னுடைய தனிப்பட்ட அறையில் கூப்பிட்டு விசாரித்தார்..


அவர்களும் நீதிபதிகள் தான்..
அவர்களும் கடவுள்கள்தான்..


இதை நான் எழுதுகிறேன் என்பதற்காக 26 ஆம் தேதி நான் வராமல் விடப்போவதில்லை..
எப்படியும் உங்களோடு தோல் நின்று படமெடுத்த சட்டத்தரணிகள் இவற்றையும் பிரிண்ட் பண்ணி எடுத்துக் கொண்டு வருவார்கள்.


அப்போது நீங்கள் சொல்லுவீர்கள்..
நீங்கள் மனத்தியாலகணக்காக எழுதுவதை நான் வாசிக்க வேண்டுமா என்று.
ஆம்..


தீர்ப்பு வழங்குவதாக இருந்தால் ஒரு விடயத்தை தீர விசாரிக்க வேண்டும் என்பது நீதி என்பது பொதுமக்களுக்கு தெரியும்..


ஒருவன் வழக்கினை இடும் போது அவனைப் பார்த்து பொய் வழக்கு இடுவே ஆனால் அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும் என தாங்கள் கூறும் போது எனது நெஞ்சம் சில்லிட்டு போனது..


ஒரு வழக்கை விசாரிக்காமலே பொய் வழக்கு என தீர்மானிக்கும் தங்களுடைய மேலான திறமையை நான் எங்கே சென்று வஞ்சுவது..


வைத்திய சாலையில் உள்ள நோயாளர்களை உள்ள தாதியர்களை உள்ள ஊழியர்களை ஒரு தரப்பு விருத்தி கடிதம் கொண்டு வந்து தங்களிடம் தரும் போது அதையும் வேண்டிப் பார்க்கிறீர்கள்..


மத்திய சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட நான் அதற்குரிய கடிதத்தை கொண்டுவந்து நீட்டும் போது அதை எதிர் தரப்பு சட்டத்தரணிகள் சொல்லுகிறார்கள் அவற்றை கதைக்கின்ற அடிப்படை உரிமை கூட குற்றம் சாட்டப்பட்டவருக்கு இல்லை என்று.


அப்படி என்றால் ஐயா..
நாங்கள் வைத்தியம் பார்க்கும்போது..
நோயாளிகளிடம் சொல்ல வேண்டும் நீங்கள் கதைக்கும் உரிமை உங்களுக்கு இல்லை என்று..


எனது மருத்துவம் சொல்லிக் கொள்கிறது..
மீண்டும் சொல்கிறேன் எனது மருத்துவம்..
நோயாளிகளை மாத்திரமே சிகிச்சை அளிக்க வேண்டுமே ஒழிய நோயாளிகளின் ரிப்போர்ட்களை அல்ல என்று..


ஏனோ தெரியவில்லை..
இன்று வரை மனம் சொல்கிறது..
நீதி கிடைக்கும் என்று..


இல்லை அந்த நீதி மறுக்கப்பட்டால் அதற்கு உயரிய உயரிய நீதிமன்றங்களை நாடவேண்டிய பொறுப்பு என்னிடம் இருக்கிறது..


எனக்கு வந்த லோயரே என்னைப் பற்றி முகப்புத்தகத்தில் எழுதும் போது..
அவரை நான் விலக்கி இருக்கிறேன்..


எனது மருத்துவ தர்மத்தில் ஒரு நோயாளி தனது உடம்பை கொண்டு வந்து எனது கைகளில் எடுக்கும்போது அவனை முட்டு முழுதாக ஏற்றுக் கொள்கிறேன்..
நீதி மருத்துவத்திற்கு மேலானது..


ஆனால் நீதியே குரல்வலையை நசுக்க கூடாது அல்லவா..
எனக்கு நீதிமன்றத்தில் கதைக்கின்ற உரிமை இல்லாதபோது..
எனது நியாயத்தை சொல்ல முடியாத போது..


நான் எங்கே சென்று சொல்லுவேன்..
பொதுமக்கள் இதைக் கேட்கட்டும் வாசிக்கட்டும்..
எனக்குத் தண்டனை தூக்கும்படியாக இருந்தால் கூட ராமநாதன் அர்ச்சுனா சிரித்துக்கொண்டே செல்வான்..


முடிந்தால் எழுதிவிட்டு உங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக இருங்கள்..
உங்களுக்கு என்ன ஐயா..


யாழ் போதனா வைத்தியசாலை சென்றால் வைத்தியசாலை நிர்வாகி சத்தியமூர்த்தியே வந்து உங்களை உள்ளே அழைத்துச் செல்வர்.
ஆனால்..


இதை வாசிக்கின்ற ஒரு தமிழன் வாயிலில் லைனில் தான் நிற்க வேண்டும்..
அவன் ஒப்பிடியில் இருந்து மருந்து எடுத்து வரும்போது வீட்டில் உலை வைத்திருக்க மாட்டார்கள்..


இதை வாசிக்கின்ற ஒவ்வொருவனும் நிலத்திலே தான் படுக்க வேண்டும்.
ஆனால் நீங்கள் செல்லும்போது பஞ்சு மெத்தை தருவார்கள்..
முதலாவது கட்டிலில் விடுவார்கள்..


நீங்கள் இருமு முன்னரே உங்களுக்கு ஆவி பிடிப்பார்கள்..
வயிறு நோகின்றது என மெல்லமாக சொன்னாலே 12 மருத்துவர்கள் உங்களை சுற்றி நிற்பார்கள்.


ஆனால் பாமர தமிழனுக்கு..
அது கொலையே நடந்தால் கூட..
ஒவ்வொரு சிந்துஜாவாக மட்டுமே மாறிக்கொள்ளலாம்..
சிந்துஜாவின் கணவன் கூட இப்போது சிந்துஜாவுடன் சேர்ந்திருக்கிறான்..
அதற்கான நீதி எங்கே?


அந்தக் குழந்தைக்கான அம்மா அப்பா எங்கே?
அதை என்ன நடந்தது என்று பார்க்க சென்ற என்னை வைத்தியரிடம் கேட்டுவிட்டு உள்ளே சென்ற என்னை உங்கள் மீது ஐந்து நாள் சிறைச்சாலைகள் அடைத்துப் பார்த்து சிரித்துக் கொண்டது..


ஆனால்..
எனது வைத்திய சாலையில்.


நான் நிர்வகிக்கின்ற வைத்திய சாலையில் உங்களுடைய நண்பன் கிரிக்கெட் கேப்டன் மன்னிக்கவும் வைத்தியர்களுடைய கிரிக்கெட் கேப்டன் உள்ளே வந்து அடித்து விழுத்தி என்னுடைய மொபைல் போனை பார்த்து என்னுடைய காசைப் பறித்து எனக்கு எதிராகவே வழக்கு போட்டு தங்களிடம் வந்த போது..


தாங்கள் ஜெயிலுக்கு அனுப்பவில்லை…
ஏன் சம்பந்தப்பட்ட நபர் நீதிமன்றத்திற்கு கூட வரவில்லை..
ஏனெனில் உங்கள் நண்பன் ஆயிற்றே..


அவரை நீங்கள் அரெஸ்ட் பண்ணுமாறு ஒருநாளும் சொல்லப்போவதில்லை..
இதே உங்களுடைய நீதிமன்றத்தில் இன்னொருவர் வந்து உங்களை அடித்து விழித்தியிருந்தால்..


உங்கள் தொலைபேசியைப் பறித்து அதை போலீஸ் நிலையத்தில் நிலத்தில் கிடந்ததாக கொடுத்திருந்தால் தங்களுக்கு எவ்வாறு இருந்திருக்கும்?
அப்போது கூட நீங்கள் நீதிமன்றத்தில் வைத்து என்னை கேட்கிறீர்கள் ஒருவரை படம் எடுக்க செல்லும்போது போனை பார்த்து அடிப்பதில் இன்னொரு பிழை இருக்கின்றது என்று?


நான் தமிழன் என்று சொல்லவே வெட்கி தலைகுனிகிறேன்..
2021 ஆம் ஆண்டு சாவகச்சேரி வைத்திய சாலையை விட்டு நான் வெளியேறும் போது எல்லாரிடமே சொன்னேன் நான் இறந்தால் கூட எனது உடலை ஆணை இரவு தாண்டி இங்கால் கொண்டு வர வேண்டாம் என்று…


ஆனால் இந்த முறை மருத்துவ நிர்வாகியாக மாறிய போது ஒவ்வொரு நண்பனும் அடித்து கேட்டான். மச்சான் சாவத்திரி ஹாஸ்பிடல் மாற்ற முடியாதா?
நீயும் வராவிட்டால் யார் மச்சான் இதை மாற்றுவது என்று?
சொன்னவனை தேடிக் கொண்டிருக்கிறேன்..
கௌரிசன்..


இப்போது சித்தருடன் சேர்ந்து நிற்கிறான்..
வாழ்க்கை..
ஒரு வட்டம்..
இன்னும் 20 வருடம் தான் வாழ்வேன்..
ஆனால்..


அவை சிறைச்சாலையில் என்றால் கூட உண்மையை சொல்லிவிட்டு உள்ளே போனவன் என்ற பெயருடனே வாழுவேனே தவிர கை கால்களில் விழுந்து கெஞ்சி அழுது மானமற்ற தமிழனாக வாழ மாட்டேன்
நான் மேதகு எனப்படுகின்ற ஒரு தெய்வத்தை பார்த்து வளர்ந்தவன்..
நாங்களும் அங்கே வளர்ந்ததாக சொல்லிக் கொள்கிறார்கள்..


நல்ல காலம் மேதாகு உயிருடன் இல்லை.. என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
அவரின் நீதிமன்றத்தில் இவ்வாறு நடந்ததில்லை..


எனது தந்தை அவரின் நீதி கட்டமைப்பில் ஒரு பெரிய பங்கு வகித்தவர்..
ஒரு இளம் ஆசிரியையை முள்ளியவளையில் பாலியல் வன்முறை கொலை செய்ததற்காக நான் நினைக்கிறேன் விசுவா நடுவில் வைத்து மின்கம்பத்தில் இணைக்கப்பட்டு அந்தப் பெரிய போராளி சுடப்பட்டர்..


அப்போது கூட நீங்கள் அங்கே தான் இருந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..
எழுதலாம் எழுதிக் கொண்டே போகலாம்..
என்ன..


நீங்கள் மறுபடியும் சொல்வீர்கள் இவற்றையெல்லாம் வாசித்துக் கொண்டிருப்பதால் எனக்கு வேலை என்று..
வைத்தியர்கள் போட்ட வழக்குக்கு மேலாக வழக்கை போடும்படி உபதேசிக்கும் தாங்கள்..


வைத்தியசாலையில் வந்து அடிக்கும்போது கூட உங்களுடைய கிரிக்கெட் மேட்சின் நண்பனை இன்றுவரை அரெஸ்ட் பண்ணவில்லை..
அது ராஜகாரிய வதகிரிமை இல்லையா ஐயா..
அன்னார் நீதிமன்றத்தில் நீதி ஒன்று..
சாவகச்சேரி நீதிமன்றத்தில் நீதி ஒன்று..
வாழ்க தமிழினம்..


சமூகத்தின் முன்னோடிகளாக வாழ வேண்டியவர்களே சமூகத்தின் குரல்வளையை நெறுத்திக் கொண்டிருக்கிறார்கள்..
எனக்கு இப்போது நம்பிக்கை இருக்கிறது…


நான் என்றாவது ஒருநாள் சிறையில் இருந்து வெளியால் வந்தால்..
அப்போது என்னுடன் தமிழினமே நிற்கும்..
இப்போது கூட நிற்கிறது..


புரியவில்லை என்றால் அயல் வீட்டில் உள்ள குழந்தை இடம் கேட்டுக் கொள்ளுங்கள்..
சில வேளைகளில் உங்களுடைய மனைவியும் உங்களுடைய குழந்தைகளும் என்னுடைய லைவை பார்த்துக் கொண்டிருப்பார்கள்..
அவர்களிடம் கேளுங்கள்..யார் குற்றம் இழைத்தவன்..யார் நிரபராதி..
நீதிக்கான தேடலில் என்னை இழந்தாலும்.


எனது தமிழினத்தை அழிக்க விடமாட்டேன்..
உங்கள் முன்னாலே உங்களுடைய சட்டவாளர்கள் சொல்லிக் கொள்கிறார்கள் வடிவேல் போல் இருக்கிறார் என்று..


ஒரு குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளி என நிரூபிக்க முடியாத ஒருவரை ஒரு சட்டவாளர் வந்து அவ்வாறு கதைக்கும் போது உங்களுடைய கனமான நீதிமன்றம் சிரித்துக் கொண்டது…


இவையெல்லாம் வெளியே தெரிய வாய்ப்பில்லை..
நான் இதுவரை இவ்வாறான ஒரு நீதிமன்றத்தை பார்க்கவில்லை..
யாழ் நீதிமன்றத்திற்கு கூட சென்றேன்..


நீதிபதி மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டார்.
ரெட்ட தெளிவாக சம்பந்தப்பட்ட சட்டவாளரிடம் சொன்னார் நீங்கள் கதைக்க வேண்டாம் என்று..


நீதி சாகவில்லை..
மேல் நீதிமன்ற நீதி அரசர் என்று சொல்லிக் கொண்டு வந்த ஒருவரே தமிழினத்தை அழித்து இதுவரை அரசியல் செய்து கொண்டிருக்கும்போது.
தங்களுக்கு மிகவும் நீண்ட பாதை இருக்கிறது..


தாங்களும் ஒரு அரசியல்வாதியாக வந்தால் எமது இனம் இருந்த இடமே தெரியாமல் போய்விடும்.


அரசியல் மேடையில் நானும் நிற்பேன்..
மன விரக்த்தியுடன் எழுதவில்லை..
மனமுடைந்து எழுதுகிறேன்.


எனது கொழும்பில் உள்ள சட்டவாளர் சொல்லி இருக்கிறார், தங்களுக்கும் முறைப்பாட்டாளருக்கும் சமூக தொடர்பு இருப்பதால் தாங்கள் ஏதோ ஒரு செக்ஷனின் படி நீதிபதியாக இருக்க முடியாது என்று..


அந்த செக்ஸன் எல்லாம் எனக்கு தெரியாது ஐயா..
அவரே வந்து சொல்லுவார்..
அல்லது மேலும் மேலும் நீதிமன்றங்களை நாங்கள் நாடுவோம்..
மறுபடியும் சொல்கிறேன்..


சாகத் துணிந்தவனுக்கு தூக்குமடையும் பஞ்சு மெத்தையே.
நீங்கள் தூக்குமடையையே எழுதி சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்..


ஆனால் உங்களுடைய குடும்பத்திடம் ஒருமுறை ஒருமுறை கேட்டுக் கொள்ளுங்கள்..
உங்களுடைய அழகான மனைவியும் அழகான குழந்தைகளும் நன்றாக வாழ்வார்கள்.
ஆனால் ஏனைய வீதியிலும் பூநகரி வீதியிலும் வாழைப்பழம் வீக்கம் எனது தமிழினம் எப்போது நிமிர்ந்து வாழ்வது?


தாங்கள் என்னை உயிருடன் விடும் பட்சத்தில்..
என்னும் ஒரு 20 வருடங்கள் தமிழனுக்காகவே வாழ்ந்து போவேன்…
முடிந்தால் நான் கூட்டமானவன் என எபரையாவது நிரூபிக்க சொல்லுங்கள்..
தமிழனுக்கு ஆக சாக துணிந்தவன்.

மாறாக வீழ்த்தவே முடியும். எனவே பொருளாதார வீழ்ச்சியை விரும்பாதவர்கள் செப்டம்பர் 21 சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களியுங்கள் இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது, திருக்கோவிலுக்கு அபிவிருத்தியும் கிட்டாது.” என்றார்.

இவ்வாறு அர்ச்சுனா இராமநாதன் தந்து முகநூலில் பதிவிட்டுள்ளார் ,இந்த பதிவில் வன்னி மைந்தன் ஆகிய என்னையும் சுட்டி காட்டியுள்ளார் ,அதற்கு மிக்க நன்றி அர்ச்சுனா ,என்றும் உங்களோடு நிற்போம் கவலை விடுங்கள் .