Tag: கயேந்திரன்
கயேந்திரன் பம்மாத்து ஏமாற்று குதிரை அரசியல்
கயேந்திரன் பம்மாத்து ஏமாற்று குதிரை அரசியல்
கயேந்திரன் பம்மாத்து ஏமாற்று குதிரை அரசியல் இலங்கை விவகாரங்கள் மற்றும் ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பில் சென்னையில் கலந்துரையாடல்
இலங்கை விவகாரங்கள் மற்றும் ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பாக, சென்னையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
பாரிமைந்தன் தலைமையிலான தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பினருக்கும், இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தலைமையிலான தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.
அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கம், தீர்வு’
இதன்போது, அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கம், ‘தீர்வு’ என்ற பெயரில் ஒற்றையாட்சி அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கான சதி
நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், இதனைத் தடுப்பதற்கு தமிழகம் குரல் கொடுக்க வேண்டும் என தமிழ் தேசிய பேரவையினர் வலியுறுத்தியுள்ளனர்.
இந்திய மத்திய அரசு ஊடாக, இலங்கை அரசு மீது அழுத்தங்களைக் கொடுத்து, ‘ஏக்கிய ராஜ்ய’ அரசியலமைப்பு நிறைவேற்றப்படுவதைத் தடுப்பதற்கான அவசரத் தேவை குறித்தும் இங்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், தமிழர்களின் இனப் பிரச்சினைக்குத் தீர்வாக, தமிழர்களின் தேசம், இறையாண்மை மற்றும் சுயநிர்ணய உரிமை, அங்கீகரிக்கப்பட்ட
அடிப்படையிலான சமஷ்டித் தீர்வை அடைவதற்கு ஏற்ற அரசியலமைப்பைக் கொண்டுவர அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலை
ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதுடன், செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட 427 என்புக்கூடுகளை ஆதாரமாகக் கொண்டு,
இலங்கை அரசு உண்மைகளைத் திரிபுபடுத்துவதைத் தடுத்து, உடனடி சர்வதேச விசாரணைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் இந்தக் கலந்துரையாடலின்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், இந்திய மற்றும் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு இடையிலான முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்தியாவில் வசிக்கும் ஈழ ஏதிலிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட
வேண்டும் என்றும் தமிழ் தேசிய பேரவையினரால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சாணக்கியன் மக்களை ஏமாற்றுகின்றார் – கயேந்திரன்
சாணக்கியன் மக்களை ஏமாற்றுகின்றார் – கயேந்திரன்
சிங்கள மயமாக்கத்தினையோ பௌத்த மயமாக்கத்தினையோ தடுக்க முடியாத சாணக்கியன் எம்.பி மக்களை ஏமாற்றுவதற்காக வடகிழக்கு இணைந்த முதலமைச்சர் சொல்கின்ற ஒரு
விடயத்தை தெரிவித்து தொடர்ந்து ஏமாற்ற மக்கள் ஏமாளிகள் அல்லர் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது, தமிழ் தாயகத்தில் இடம்பெறுகின்ற பௌத்தமயமாக்கம் சிங்கள மயமாக்கம் போன்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்தாவிடின் தமிழ் தேசத்தின் இருப்பினை நாங்கள் பாதுகாக்க முடியாது என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறான விடயங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமாயின் தமிழ் தேசத்தின் இறைமை என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும்.தமிழர்களின் சுயநிர்ணய உரிமை போன்று ஒரு சுயாட்சி எட்டப்பட
வேண்டும். இவ்வாறு இல்லாமல் வெறுமனே வடக்கு கிழக்கினை இணைப்பதன் ஊடாக மாத்திரம் இந்த குடியேற்றங்களையோ அல்லது பௌத்த மயமாக்க விடயங்களையோ தடுத்து நிறுத்த முடியாது.
ஏனெனில் அதிகாரம் முழுவதும் அவர்களது (அரசு) கைகளிளே உள்ளது.அதே வேளை வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டிருந்தாலும் அங்கு ஆளுநருக்கு தான் அதிகாரம். அதே போன்று அந்த
ஆளுநருக்கு கீழ் உள்ள உத்தியோகத்தர்கள் ஆளுநரின் கட்டளை படி தான் நடப்பார்கள். மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபையில் கூட முதலமைச்சரின் செயலாளரையும் ஆளுநர் தான்
நியமிப்பார்.அங்கே சகல கட்டுப்பாடுகளும் ஆளுநரின் கீழ் தான் இருக்கும். ஆகவே மக்களின் வாக்குகளை பெறுவதற்காக பல்வேறு கருத்துக்களை கூற முடியும்.
ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக ஒரு போதும் சிங்கள மயமாக்கத்தினையோ பௌத்த மயமாக்கத்தினையோ தடுக்க முடியாது. இது 1987 1988
ஆண்டுகளில் இருந்து மாகாண சபை உருவாக்கப்பட்ட நாளில் இருந்து இந்த மாகாண சபை நடைமுறையில் தான் இருக்கின்றது. இச்சபை இணைந்தும் இருந்தது. குடியேற்றம் அந்த
வேளையிலும் இடம்பெற்றிருந்தது. அப்போது ஆயுதப்போராட்டத்தினால் குடியேற்றங்கள் தடுக்கப்பட்டு கொண்டிருந்ததே தவிர இந்த மாகாண சபையின் நிர்வாகத்தின் ஊடாக
கட்டுப்படுத்தப்பட்டிருக்கவில்லை. இது தான் உண்மையான விடயம். சாணக்கியன் எம்.பி மக்களை ஏமாற்றுவதற்காக சொல்கின்ற ஒரு விடயமாகும்.
என்னை பொறுத்தமட்டில் அவர்கள் தேர்தல் காலங்களில் பல வாக்குறுதிகளை வழங்கி வந்தமை வரலாறு.2015 ஆண்டு எமக்கு கடைசி சந்தர்ப்பம் ஒன்றினை தாருங்கள் என்று கூறினார்கள்.
அதாவது வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில் ஒரு சமஸ்டி தீர்வு ஒன்றினை பெற்றுத்தருவோம் என்றெல்லாம் கூறினார்கள். அதே போன்று 2016 ஆண்டு இறுதிக்குள் யுத்த குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவோம் என்று கூறினார்கள். மக்களை அதனை நம்பி
பெருவாரியாக வாக்குகளை இவர்களுக்கு வழங்கி இருந்தார்கள்.வென்ற மறு வாரமே சுமந்திரன் எம்.பி சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என்று கூறினார்கள். ஜெனிவாக்கு சென்று உள்ளக
விசாரணைக்கு வாய்ப்பு பெற்று கொடுத்தார்கள். இப்படி இவர்களது ஏமாற்றுக்களை தேர்தலை மையப்படுத்தி செய்கின்றார்கள். இவர்களது இவ்வாறான நாடகங்களை மக்களும் அறிவார்கள்.
முழுக்க முழுக்க ஏமாற்றும் விடயங்களே இவர்களிடம் உள்ளன. மக்கள் இவர்களது பசப்பு வார்த்தைகளை நம்பி மக்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதை கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.








