Tag: இலங்கை
புலி தளபதிகள் வீழ்ந்த நாளில் தள்ளாடும் கோட்டா அரசு
புலி தளபதிகள் வீழ்ந்த நாளில் தள்ளாடும் கோட்டா அரசு
கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன். இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணி
தான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு
இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன்.
தென்மராட்சிப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளராக விளங்கிய மேஜர் கேடில்ஸின்(மகாலிங்கம் திலீபன் – கண்டாவளை) இளைய மச்சினனாகிய தீபனை இயக்கத்தில் சேர்த்தது கேடில்ஸ் என்று கூறப்படுகிறது. தீபனை இயக்கத்தில் சேர்த்த
மேஜர் கேடில்ஸ் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான்,விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு,லெப்.சித்தார்த்தன்(கேணல் சங்கரின் சகோதரன்) ஆகியோர் வீரச்சாவடைய
காரணமாகவிருந்த 14-02-1987 அன்று கைதடியிலே இடம்பெற்ற வெடி விபத்தில் தானும் காற்றோடு காற்றாகிப் போனார்.
1984 ன் முற்பகுதியில் தன்னை இயக்கத்தில் இணைத்துக்கொண்ட பகீரதகுமார், ஆயுதப் பயிற்சி பெற்று தீபனாக மாறினார், இவருடைய தொடர்பாடல் குறிப்புப் பெயர் “தாங்கோ பாப்பா” ஆகும். இவர் புலிகளின் முன்னாள் துணைத்தலைவர் மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலராக நியமிக்கப்பட்டு பின்னர் பிரதான மெய்ப்பாது காப்பாளரானார். 1987 ம் ஆண்டு யூலை 29 ம் திகதி இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பின் இந்திய அமைதிப்படைக்கு எதிரான அக்காலப்பகுதி சண்டையில், தீபன் கிளிநொச்சி இராணுவ பொறுப்பாளராகவும், பால்ராஜ் முல்லைத்தீவின் இராணுவ பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
அக்காலத்தில் இந்தியப்படையினருக்கெதிரான அதிக தாக்குதல்கள் நடைபெற்ற மாவட்டங்கள் முல்லைத்தீவும் கிளிநொச்சியுமே ஆகும். இக்காலப்பகுதியில் தீபனின் இளைய சகோதரனாகிய வேலாயுதபிள்ளை சிவகுமாரும் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தனது சகோதரனைப்போலவே வேகமாக வளர்ந்த கில்மன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1993ல் திருகோணமலைக்குப் பொறுப்பாளராக அனுப்பப்பட்ட கில்மன் 1994ல் நடைபெற்ற தவறுதலான வெடிவிபத்தில் லெப்.கேணல் கில்மனாக தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார்.
1988ம் ஆண்டின் பிற்பகுதியில் மன்னார் நீங்கலான வன்னிப்பகுதியின் இராணுவப் பொறுப்பாளராக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். துணை இராணுவப் பொறுப்பாளராக தீபன் இருந்தார். இந்த இரண்டு வீரர்களும் தமது போராளிகளை முன்னின்று வழி நடத்தி பல வெற்றிச் சமர்களுக்கு வித்திட்டார்கள். இந்திய அமைதிப்படை 1990ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஈழத்தை விட்டு அகன்றது. மீண்டும் ஜூன் மாதமளவில் இலங்கைப் படைகளுடனான 2ம் ஈழப்போர் ஆரம்பமானது. பால்ராஜின் தலைமையின் கீழ் புலிகள் பல வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டார்கள், அவற்றில் பிரதானமானவை மாங்குளம் மற்றும் கொக்காவில் முகாம் தகர்ப்பாகும்.
பால்ராஜும் தீபனும் 1991ல் மேற்கொள்ளப்பட்ட ஆனையிறவு முகாம் மீதான ஆகாய கடல் வெளிச்சமரில் பங்கு பற்றி குறிப்பிடத்தக்களவான வெற்றியைப் பெற்ற போதும் முகாம் தகர்ப்பு என்ற இலக்கு எட்டப்படவில்லை. 1992ல் உருவாக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். தீபன் வன்னிப்பகுதியின் தளபதியானார். இவர்களின் இணை மண்கின்டிமலை மீதான இதயபூமி நடவடிக்கையில் பங்கு பற்றி புலிகளுக்கு மகத்தான வெற்றியை தேடித்தந்தது.
தீபனின் திறமையும் வீரமும் வெளிப்பட்ட இரு சமர்கள் யாழ்தேவி மற்றும் தவளைப்பாச்சல் ஆகும். ஆனையிறவிலிருந்து வடக்காக யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட யாழ்தேவியை இடை நடுவில் தடம்புறள வைத்த பெருமை தீபனையே சாரும். 1993 செப்டெம்பரில் இடம்பெற்ற இந்த இராணுவ நடவடிக்கையின் முதல் நாள் சண்டையிலேயே பால்ராஜ் காயம் காரணமாக களத்திலிருந்து அகற்றப்பட்டார். அதன் பின்னர் தீபனே முறியடிப்புச் சமருக்குத்தலைமை தாங்கினார்.
தீபனின் தந்திரத்தின்படி மண் கும்பிகளுக்குள் மணித்தியாலக்கணக்காக காத்திருந்த புலிகள் முன்னேறிய இராணுவம் மிக அருகில் வந்ததும் திடீர்த் தாக்குதலைத்தொடுத்து அவர்களை நிலை குலைய செய்ததுடன் புலிகள் இரண்டு ரி 55 டாங்கிகளை கைப்பற்றுவதற்கு வழி சமைத்துக் கொடுத்தது. இந்த இரண்டு ரி 55 டாங்கிகளில் ஒன்றை மண்ணுக்குள் புதைத்து பயன்படுத்தியே இரண்டு டோரா பீரங்கிப் படகுகளை சாலைப்பகுதியில் ஒரே நாளில் புலிகள் தகர்த்து சாதனை புரிந்தனர்.
1993 நவம்பரில் நடைபெற்ற ஈருடகச் சமரான தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையில் பூநகரி முகாமை தீபன் தலைமையிலான போராளிகளும் நாகதேவன்துறை கடற்படைத்தளத்தை பானு தலைமையிலான போராளிகளும் தகர்த்தனர். இங்கே கைப்பற்றப்பட்ட 5 நீருந்து விசைப்படகுகளே கடற்புலிகள் தோற்றம் பெற்று பலம் பெற உறுதுணையாக இருந்தது என்றால் மிகையாகா.
1994ல் தீபன் யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டார். அக்காலப் பகுதியில் சந்திரிகா அம்மையார் தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் பேச்சு வார்த்தை நடந்தது. 1995ல் முறிவடைந்த பேச்சு வார்த்தை 3ம் ஈழப்போருக்கு வழி சமைத்தது.
1995ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இராணுவத்தினரின் முன்னேறிப் பாய்தலுக்கெதிரான புலிப்பாய்ச்சலிலும் இடிமுழக்கம் நடவடிக்கைக்கெதிரான சண்டையிலும் தன் காத்திரமான பங்களிப்பை வழங்கினார்.
சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையை ஆரம்பத்தில் பால்ராஜ் சொர்ணம் தலைமையிலும் பின்னர் தீபன் பானு தலைமையிலும் புலிகள் எதிர்த்துப் போரிட்டனர். தீபன் தலைமையிலான போராளிகள் நவம்பர் 27 மாவீரர் நாள் முடியும் வரை யாழ்ப்பாணம் படையினர் கைகளில் வீழ்வதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினர்.
யாழ்ப்பாணத்தை விட்டு 1996 ஏப்ரல் மே காலப்பகுதியில் வெளியேறிய புலிகள் வன்னியை தளமாக்க முடிவு செய்தபோது அதற்குப் பெருந்தடையாக இருந்தது
முல்லைத்தீவு இராணுவ முகாம் ஆகும். அம்முகாமை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் புலிகள். தீபனை அழைத்த தலைவர் முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான ரெக்கியை ஆரம்பவிக்கவும் தாக்குதல் திட்டத்தை தீட்டவும் உத்தரவிட்டார்.
தீபனின் திறமையான திட்டத்தினால் 1996 ஜூலை 18ல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்க்கப்பட்டபோது 1000க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள்
கொல்லப்பட்டனர். இங்கே கைப்பற்றப்பட்ட இரண்டு 122mm ஆட்லறி பீரங்கிகளே பின்னாளில் புலிகள் மரபு ரீதியாக தமது இராணுவத்தைக் கட்டமைக்க உதவின.
ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை 1997ல் ஆரம்பிக்கப்பட்டபோது புளியங்குளத்தை தக்கவைக்கும் பொறுப்பு தீபனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓமந்தையையும்
நெடுங்கேணியையும் இலகுவாக கைப்பற்றிய இராணுவம் புளியங்குளத்தை கைப்பற்ற முடியாமல் மாற்றுப்பாதையில் கனகராயன்குளத்தையும் கரிப்பட்டமுறிப்பையும் கைப்பற்றியபோது புளியங்குளம் கைவிடப்படவேண்டியிருந்தது.
இதன்போது தீபனின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாக விக்கீஸ், அறிவு மற்றும் லோரன்ஸ் விளங்கினார்கள்.இந்தக்கூட்டணியின் கண்டு பிடிப்பான மண்
அணைக்கட்டும் அகழியுமே இலங்கை இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்பது யாவரும் அறிந்ததே.
இன்றைய தேச நிர்மாணம் மற்றும் கட்டமைப்பு அமைச்சராக இருக்கும் விநாயகமூர்த்தி முரளீதரன் என்கின்ற கேணல் கருணா அம்மான் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை காலத்தில் தானே வன்னிப்பகுதியின் கட்டளைத்தளபதியாக
நியமிக்கப்பட்டேன் என்று கூறி வருகிறார். ஆனால் அவர் தீபனுடன் இணைந்தே இந்தப் பொறுப்பை வகித்தார் என்பதும் இவர் தொடர்பாடல் மற்றும் ஒருங்கிணைப்பு
வேலைகளை கவனித்தபோது ஒட்டுமொத்த பொறுப்பாளராக இருந்தவர் தீபன் என்பதையும் குறிப்பிடத் தவறிவிட்டார்.
1998ல் ஜெயசிக்குரு கைவிடப்பட முக்கிய காரணமாக இருந்தது, சத்ஜெய நடவடிக்கையின் மூலம் படையினர் கைப்பற்றி வைத்திருந்த கிளிநொச்சியை ஓயாத
அலைகள் 2ன் மூலம் புலிகள் மீளக்கைப்பற்றிக்கொண்டதே. இத்தாக்குதலிலும் தீபனின் பங்களிப்பு மிகக்காத்திரமானதாகும்.
1999ல் புலிகள் ஓயாத அலைகள் 3ஐ ஆரம்பித்து படையினர் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கையின் மூலம் 18 மாதங்கள் கஷ்டப்பட்டு பிடித்து வைத்திருந்த பகுதிகளை வெறும் மூன்றே வாரங்களில் மீளக்கைப்பற்றிக்கொண்டனர்.
ஓயாத அலைகள் 3ன் முத்தாய்ப்பாக அமைந்தது ஆனையிறவு முகாம் கைப்பற்றலாகும். 1991 ல் ஆகாய கடல் வெளிச் சமரில் பெற்ற பின்னடைவும் படிப்பினைகளும் பின்னாளில் உலகமே வியக்கும் வண்ணம் இடம்பெற்ற குடாரப்புத்
தரையிறக்கத்துக்கு வழி சமைத்தது எனலாம். இத்திட்டத்தை தலைவர் சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜுக்கு விளக்கியபோது சற்றுத்தயங்கினாராம்
பால்ராஜ். பின்னர் தீபன் செய்ய வேண்டிய கடமைகளை விளக்கியபின்பு தீபன் மீதிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை காரணமாக களத்தில் இறங்கினாராம் பால்ராஜ்.
குடாரப்புத் தரையிறக்கம் இடம்பெற்றபின் செம்பியன்பற்றிலிருந்து வெற்றிலைக்கேணி கட்டைக்காடு வரை நிலை கொண்டிருந்த படையினரை விரட்டி அடித்தும் ஆனையிறவு முகாமை பின் பக்கமாக தாக்கியும் ஆனையிறவு முகாம்
கைப்பற்றலில் முக்கிய பங்காற்றினார் தீபன். 2000 ஏப்ரல் 24 ல் இடம்பெற்ற ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கிலான படையினரின் தீச்சுவாலை(அக்னிகீல) நடவடிக்கையை சின்னாபின்னமாக்கியது தொட்டு 2009 ஜனவரி வரை 55ம் மற்றும் 53ம்
படையனியின் ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எத்தனையோ முயற்சிகளை தவிடு பொடியாக்கியவர் வட போர்முனைக் கட்டளைத்தளபதி தீபன்.
அதே போன்று கிளிநொச்சியை சுற்றி 18km நீளமான ‘L’ வடிவிலான மண் அணைக்கட்டு அமைத்து கிளிநொச்சியின் வீழ்ச்சியை பல மாதங்கள் (2009 ஜனவரி 1 வரை) தள்ளிப்போட்டவர் தீபன். கடைசியாக புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் ஏப்ரல் 1ம்
திகதி பல படையணித்தளபதிகளுடன் சேர்ந்து படையினருக்கெதிராக பாரிய முறியடிப்புச் சமர் ஒன்றைத் திட்டமிட்டார் தீபன். ஆனால் காலன் வேறு விதமாக
திட்டமிட்டான் போலும். ஏப்ரல் 1ம் திகதி அன்றும் 2ம் திகதி அன்றும் தீபனுக்கு நெஞ்சிலே காயம் பட்டது.ஆனாலும் தொடர்ந்து போராடிய தீபன் எதிரியின் நயவஞ்சகமான நச்சுக்குண்டுத்தாக்குதலில் வீரகாவியமானார்.
25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் ஏப்ரல் மாதம் 4ம் திகதி புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது. சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜ் என்றால் எந்தவித சந்தேகங்களும் இன்றி சமர்க்களங்களின் துணை
நாயகன் இந்த தீபன் அம்மான் தான். பால்ராஜ் எனும் பாசறையிலே வளர்த்தெடுக்கப்பட்ட இந்த கண்டாவளை கண்டெடுத்த கண்மனி, பால்ராஜ் மே 2008ல் மறைந்தபோது அழுதபடியே சொன்ன வார்த்தைகள் இவை “என்னை அருகிலே
வைத்திருந்து தளபதியாக வளர்த்தெடுத்த தளபதி, அவர் என் போர் ஆசான்.” தமிழனை தலை நிமிர வைத்த இந்த இரண்டு வீரர்களும் இன்று நம்மிடையே இல்லை என்பது
எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவர்களின் நினைவுகள் எம்மனங்களில் நீங்காதிருக்கும் என்பது .
எம்பி வீட்டை சுற்றிவளைத்த மக்கள் – உலங்குவானூர்தியில் தப்பி ஓட்டம்
எம்பி வீட்டை சுற்றிவளைத்த மக்கள் – உலங்குவானூர்தியில் தப்பி ஓட்டம்
ஆளும் கோத்தபாயவின் ஆட்சிக்கு எதிராக நாடெங்கும் மக்கள் போராட்டம்
நடத்தி வருகின்றனர்
இவ்வாறான கால பகுதியில் கேகாலை மாவட்டத்தில் உள்ள கனக கேரத்தின்
வீடு முற்றுகைக்கு உள்ளாக்க பட்டது
மக்கள் சுற்றிவளைத்த நிலையில் வீட்டில் தங்கி இருக்க முடியாத நிலையில்
அவர் அங்கிருந்து உலங்குவானூர்தி மூலம் கண்டிக்கு தப்பி ஓடியுள்ளார்
தொடர்ந்து பல எம்பிக்கள் வீடு முற்றுகைக்கு உள்ளாகி பட்டு வருகினறமை குறிப்பிட தக்கது
ஒரு அமெரிக்கா டொலர் 300 ரூபாவை எட்டியது
ஒரு அமெரிக்கா டொலர் 300 ரூபாவை எட்டியது
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி அதனால் ஏற்பட்ட பண
வீக்கம் காரணமாக
ஒரு அமெரிக்கா டொலர் இலங்கை ரூபாவுக்கு 300 ஆக எட்டி பிடித்துள்ளது
இந்த பணவீக்கம் மேலும் மூன்று மத காலத்திற்கு அதிகரிக்க கூடும் என
எதிர்வு கூறப்பட்டுள்ளது
வெளி நாடுகளில் உள்ள மக்கள் முண்டியடித்து பணத்தை அனுப்புவதில்
தீவிரம் காட்டி வருகின்றனர்
இராணுவ ஆட்சி இலங்கையில் ஏற்படலாம் – நிலவும் பரபரப்பு
இராணுவ ஆட்சி இலங்கையில் ஏற்படலாம் – நிலவும் பரபரப்பு
இலங்கையில் கோட்டா ஆட்சிக்கு எதிராக மக்கள் போராடி வரும்நிலையில் முப்படையினரும்
அரசுக்கு எதிராக திசை திரும்பும் நிலை தோற்றம் பெற்றுள்ளதால்
இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி மகிந்தா கோட்டாவை வீட்டு காவலில்
வைத்து இராணுவம் ஆட்சியை கைப்பற்றலாம் என்ற நிலை ஏற்படலாம் என கணிக்க பெறுகிறது
இவ்விதமான போராட்ட காலங்களில் சில நாடுகளில் இராணுவம் ஆட்சி நிலை
நிறுத்த பட்டு பின்னர் ஜனநாயக அரசியல் தோற்றம் பெற்றது வரலாறாகி உள்ளது
இதனை மைய ப்படுத்தியே இந்த போராட்டம் வெடித்து வருவதால் இராணுவ
அடச்சியின் மூலம் கோட்டா ஆட்சி அகற்ற பட்டு ஜனநாயக அரசியல்
திரும்பலாம் என எதிர் பார்க்க படுகிறது ,நிகழ்கால சம்பவங்கள் பல
திசை மாறும் புதிய வரலாற்றை இலங்கையில் எழுதும் காலமாக இது மாற்றம் பெரும் என எதிர்பார்க்கலாம்
ஈராக்கில் உள்ள துருக்கி இராணுவம் மீது ரொக்கட் தாக்குதல்
ஈராக்கில் உள்ள துருக்கி இராணுவம் மீது ரொக்கட் தாக்குதல்
ஈராக் மொசூல் பகுதியில் நிலைகொண்டுள்ள துருக்கிய இராணுவத்தின் Zelikan
முகாம் மீது பாரிய தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இந்த தாக்குதலின் பொழுது அந்த முகாம் பாரிய சேதம் அடைந்துள்ளதாக
தெரிவிக்க படுகிறது
இஸ்ரேல் தலைநகர் அருகில் குண்டு வெடிப்பு
இஸ்ரேல் தலைநகர் அருகில் குண்டு வெடிப்பு
இஸ்ரேல் தலைநகர் Tel Aviv பகுதியில் பாரிய குண்டு ஒன்று வெடித்துள்ளது
இந்த குண்டு வெடிப்பால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பாக தெரியவரவில்லை
மகிந்தா குடும்பத்திற்குள் வெடித்த சண்டை
மகிந்தா குடும்பத்திற்குள் வெடித்த சண்டை
இலங்கையில் ஆளும் கோட்டாபயா ஆட்சிக்கு எதிராக மக்கள் பொங்கி எழுந்த
நிலையில் இவரது ஆட்சியில் அமைச்சர்களாக அங்கம் வகித்த பசிலுக்கும்
மகிந்தவுக்கு இடையில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன
மேலும் ,பீரிஸ்,தினேஸ்குணவர்தன ,பசில் ஆகியோர் ராஜீனமா கடிதத்தில்
கையொப்பம் இடைவில்லை என தெரிவிக்க படுகிது
இதனால் அங்கு பெரும் மோதல் வெடித்த நிலையில் இன்று கோட்டாவை மகிந்தா சந்திக்கிறார்
இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்க படும் என எதிர் பார்க்க படுகிறது
அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்ற பொழுதும் அதனால்
ஏற்பட போவது ஏதும் இல்லை என்பதே இன்றைய களநிலவரமாக உள்ளது
மத்திய வாங்கி ஆளுநர் பதவி விலகி ஓட்டம் – தள்ளாடும் கோட்டா அரசு
மத்திய வாங்கி ஆளுநர் பதவி விலகி ஓட்டம் – தள்ளாடும் கோட்டா அரசு
இலங்கையில் பொருளாதரத்தை நிர்ணயம் செய்திடும் நிலையில் உள்ளது
மத்திய வங்கி ஆகும் ,இதன் ஆளுநர் ர் அஜித் நிவார்ட் கப்ரால் தனது பதவியை இராயீனமா செய்துள்ளார்
இதனால் மத்திய வங்கிக்கு புதிய ஒருவரை நியமிக்க வேண்டிய நிலையில் கோட்டா தள்ள பட்டுள்ளார்
புதிய அமைச்சர்கள் ,புதிய ஆளுநர்கள் நியமிக்க பட்டாலும் நாடு தற்போது
உள்ள நிலையினை சமாளிக்க முடியுமா என்பதே கேள்வியாக உள்ளது
மகிந்த வீட்டுக்கு முன்பாக மக்கள் போராட்டம் – பதட்டத்தில் வீடு
மகிந்த வீட்டுக்கு முன்பாக மக்கள் போராட்டம் – பதட்டத்தில் வீடு
இலங்கையில் ஆளும் பிரதமர் மகிந்தவின் தங்காலையில் உள்ள
கார்ல்டன்இல்லம் முன்பாக ஆயிர கணக்கில் மக்கள் கூடி தமது
போராட்டத்தை நடத்தி வருகின்றனர்
இங்கு மகிந்தா ஒழிக , கோட்டா ஒழிக என்ற கோஷங்கள் வெடித்து
பறக்கின்றன
இங்கு பொலிசாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல்கள் வெடித்துள்ளன
நாமல் மனைவி ,அவர் குடும்பம் இலங்கையை விட்டு தப்பி ஓட்டம்
நாமல் மனைவி ,அவர் குடும்பம் இலங்கையை விட்டு தப்பி ஓட்டம்
இலங்கையில் ஆளும் மகிந்த மகன் நாமல் மனைவி ,மற்றும் அவரது
பெற்றோர்கள் இலங்கையை விட்டு தப்பி ஓடியுள்ளனர்
இவர்கள் நாட்டில் சிறை பிடிக்க பட்டு நாட்டை விட்டு தப்பி செல்ல முடியாத
நிலை ஏற்படலாம் என்றதினால் இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளனர்
இவர்களுடன் ஒன்பது பேர் இவ்விதம் நாட்டை விட்டு தப்பித்துள்ளனர்
இலங்கையில் எவ்வேளையும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை நிலவி வரும்
நிலையில் இந்த சம்பவங்கள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது
பசில் ,நாமல், உள்பட 26 அமைச்சர்கள் பதவி விலகல்
பசில் ,நாமல், உள்பட 26 அமைச்சர்கள் பதவி விலகல்
இலங்கையில் ஆளும் கோட்டா அரசுக்குக்கு எதிராக மக்கள் வீதி இறங்கி போராடி வரும் நிலையில்
மகிந்த மகன் நாமல் ,மற்றும் நிதியமைச்சர் பசில் ,சாமல் உள்ளிட்ட இருபத்தி ஆறு அமைச்சர்களும் பதவி விலகியுள்ளனர்
இதன் பின்னர் புதியவர்களாக நியமிக்க முடிவு செய்ய பட்டுள்ளதாம்
அவ்விதம் தெரிவு செய்ய பட்டு நாட்டை சிறந்த முறையில் கொண்டு நடத்த உள்ளதான
கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்ற கோட்டா மகிந்த முயன்று வருகின்றனர்
ஆனால் அது மகிந்த கோபத்தின் முன் நிலை பெறுமா என்பதே கேள்வியாக உள்ளது
இலங்கைக்கான இந்தியா விமான சேவைகள் குறைப்பு
இலங்கைக்கான இந்தியா விமான சேவைகள் குறைப்பு
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலையை அடுத்து
தற்பொழுது வராம் ஒன்றுக்கு இடம் பெற்று வந்த 13 விமான சேவைகள்
தற்போது 13
ஆக குறைக்க பட்டுள்ளது ,இம்மாதம் முதல் அவை ஒன்பதாக குறைக்க
படவுள்ளது என் எயார் இந்திய விமான சேவை அறிவித்துள்ளது
இவை மேலும் இலங்கை பொருளாதரத்தில் பெரும் இடியை ஏற்படுத்தியுள்ளது
கோட்டாவிற்கு எதிராக திசை திரும்பும் மகிந்தா மகன் நாமல்
கோட்டாவிற்கு எதிராக திசை திரும்பும் மகிந்தா மகன் நாமல்
இலங்கையில் அரசுக்கு எதிராக ஆர்ப்பரித்து எழும் மக்கள் புரட்சியை தடுக்க
ஊரடங்கு சட்டங்கள் அமுல்படுத்த பட்டுள்ளன ,.
ஆவ்வறான காலப்பகுதியில் மக்கள் அதிகம் கூடி புரட்சி நடத்த காரணமாக
விளங்கிய சமுக வலைத்தளங்கள் மீதும் அரசு தடை விதித்துள்ளது
இந்த சமூக முகவலைத்தள முடக்கம் அர்த்தம் அற்ற ஒன்று எனவும், அவற்றை
தான் எதிர்க்கிறேன் என தனது சித்தப்பா கோட்டாவுக்கு எதிராக மகிந்த மகன்
நாமல் கொதித்து எழுந்துள்ளாராம்
இவை எல்லாமே ஒரு கண்துடைப்பு நாடகம் என்பது சிறுபிள்ளைக்கும் புரியும்
என்பது சொல்லியா தெரியவேண்டும் என்பது சமூக வலைத்தள நபர்கள்
பேச்சாக பதிய பெறுகிறது
நான்கு மாகாணங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை
நான்கு மாகாணங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக
நாடளாவிய ரீதியில் உள்ள நான்கு வடக்கு,தெற்கு ,வடமேல்,கிழக்கு
,மாகாணங்களின் பாடசாலைகள் மறு அறிவிதல் வரை விடுமுறை விடுவிக்க பட்டுள்ளது
ஆசிரியர்கள்,மாணவர்கள் போக்குவரத்து நிலையை கருத்தில் கொண்டு இந்த
உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது
ஒருவர் சுட்டு கொலை – மிரட்டும் படு கொலைகள்
ஒருவர் சுட்டு கொலை – மிரட்டும் படு கொலைகள்
இலங்கை Madipola பகுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 42 வயதுடைய
நபர் ஒருவர் பலி யாகியுள்ளார்
இந்த படு கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,போலீசார்
விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
நாடெங்கும் இவ்வாறான படுகொலை சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
மின்சாரம் இல்லாது இணையம்,கைபேசிகள் செயல் இழப்பு
மின்சாரம் இல்லாது இணையம்,கைபேசிகள் செயல் இழப்பு
இலங்கையில் மின்சாரம் ,டீசல்,பெட்ரோல் இல்லாத நிலையில் இணைய
சேவைகள் மற்றும் கைபேசிகள் ,கணனிகள் இயக்க முடியாத நிலையில் மக்கள் தவித்து வருகின்றனர்
இதனால் தொடர்பாடல் துண்டிக்க பட்டு மக்கள் தனிமை படுத்த பட்டுள்ளனர்
இவை திட்டமிட்டு நடத்த படும் அரசின் செயல்பாடுகளில் ஒன்றாக உள்ளது
என கோரி மக்கள் கொதித்து வருகின்றனர்
அணைத்து விதத்திலும் மக்கள் அடக்கி ஒடுக்க படும் நிகழ் கால நிகழ்வுகளாக மாற்றம் பெற்றுள்ளது
இவ்வாறான செயல்பாடுகள் மக்களை மேலும் கொதிப்பில் உறைய
வைத்துள்ளதுடன் அரசுக்கு எதிராக மக்கள்
எழுச்சி கொள்ளும் நிலையை மேலும் உருவாக்காகி வைத்துள்ளது
பொது இடங்களில் மக்கள் கூட புதிய தடை – மக்களை அடக்க புதிய சட்டம்
பொது இடங்களில் மக்கள் கூட புதிய தடை – மக்களை அடக்க புதிய சட்டம்
இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வரும்
நிலையில் அதனை தடுத்திட கோட்டாவினால் வர்த்தமானி மூலம் அறிவித்தல்விடுக்க பட்டுள்ளது
இதன் விடயம் யாதெனில் பூங்கா ,மற்றும் பொது இடங்களில் மக்கள்
கூடுவதற்கு தடை விதிக்க பட்டுள்ளது
அதனை மீறி ஒன்றுகூடினால் அவர்கள் கைது செய்ய படுவார்கள் என அரசு உத்தரவிட்டுள்ளது
மக்களை அடக்கி ஒடுக்குவதற்கான அனைத்து வித சட்டங்களும் அமூல் படுத்த பட்டு சர்வாதிகார
போக்கில் அரசு நாட்டை நகர்த்தி செல்வது மேலும் ஆபத்தை விளைவிக்கும் ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது
அடக்குமுறை அரசு அடாவடி 660 பேர் காவல்துறையால் கைது
அடக்குமுறை அரசு அடாவடி 660 பேர் காவல்துறையால் கைது
ஊரடங்கு வேளையில் மேல்மாகாணத்தில் உலவிய 660 மக்களை தாம் கைது செய்துள்ளதாக
காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
மேலும் ஆட்சியாளர்களுக்கும் ,அவர்தம் அமைச்சர்களுக்கும் எதிராக மக்கள்
போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர்
இதனை தடுக்க விதிக்க பட்ட ஊரடங்கு சட்டத்தை மீறி மக்கள் உலவியதால்
இந்த கைது வேட்டையை நடத்தி மக்களை அரசு அச்சுறுத்தி வருகிறது
இந்த செயல் பாடு மேலும் மக்களை கொந்தளிப்பில் உறைய வைத்துள்ளது
கோட்டாவே அமெரிக்காவுக்கு தப்பி ஓடு மக்கள் கோசம்
கோட்டாவே அமெரிக்காவுக்கு தப்பி ஓடு மக்கள் கோசம்
இலங்கையில் தனி சிங்கள மக்களின் வாக்குகளை பெற்று சர்வாதிகார
ஆட்சியில் மிதந்து வந்த கோட்டாவின் ஆட்சி மூன்றாண்டு கடக்கும் முன்னே
அதே சிங்கள மக்கள் வீதி இறங்கி அந்த அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர்
நாட்டில் எகிறியுள்ள விலைவாசிகள் அதனால் எழுந்த பட்டினி அதன்
எதாரொளியாக இந்த விடயம் அரங்கேறியுள்ளது
கடனை வாங்கி நாட்டை குட்டி சுவராக்கி அதன் கயானவை கொள்ளையடித்த
மகிந்த குடும்ப சர்வாதிகார ஆட்சிக்கு இப்பொழுது செருப்படி வீழ்ந்துள்ளது
இலங்கை வரலாற்றில் மீளவும் ஆட்சியில் அமர முடியாத நிலை இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது
நாட்டை விட்டு அமெரிக்காவுக்கு தப்பி ஓடு என மக்கள் முழங்கினார்
இலங்கை விமான சேவைகள் பல திடீரென இடை நிறுத்தம்
இலங்கை விமான சேவைகள் பல திடீரென இடை நிறுத்தம்
இலங்கை எயர்லங்கா விமான சேவைகளில் கொழும்புக்கும் பஹ்ரைனுக்கும் இடையேயான
சேவைகள் எதிர் வரும் மே மாதம் 12 திகதி முதல் இடை நிறுத்த படுகிறது
இது போன்று மேலும் பல சேவைகள் நிறுத்த படலாம் என்பதால் ,இலங்கை சென்ற
வெளிநாட்டவர்கள் முண்டியடித்து நாட்டை விட்டு வெளியேறுவதில் கவனம் செலுத்தி வருகின்றனர்
தற்கால நிலையில் இலங்கையில் எதுவும் நடக்கலாம் என்பது நிலவரமாக உள்ளது







