சீனியை பதுக்கினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
Posted in இலங்கை செய்திகள்

சீனியை பதுக்கினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

சீனியை பதுக்கினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

யாழில் சீனியை பதுக்கி வைத்திருந்தால் நுகர்வோர் அதிகார சபை ஊடாக அவற்றை வெளிக்கொண்டு வந்து, பதுக்கி வைத்திருந்தவர்களுக்கு எதிராக

நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ் மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்திற்கு 100 மெற்றிக் தொன் சீனி கூட்டுறவு சமாசம் ஊடாக கிடைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

சீனியை பதுக்கினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

அந்நிலையில் சீனியை பதுக்கி வைத்து, செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த சிலர் முனைவதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

அவ்வாறானவர்களை நுகர்வோர் அதிகார சபையின் ஊடாக வெளிக்கொண்டு வந்து, பதுக்கி வைத்திருப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். என அவர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

கோட்டா சீனி வியாபாரத்திற்கு ஆப்பு

கோட்டா சீனி வியாபாரத்திற்கு ஆப்பு

இலங்கையில் ஆளும் கோட்டா அரசு சீனி இறக்குமதியை ஏற்படுத்தி பல மில்லியன் டொலர் பணத்தினை
சம்பாதித்து வந்துள்ளது

இதனை அடுத்து தற்போது இவ்விதம் மோசடி புரிந்த நபர்களை கண்டு பிடித்து அவர்களுக்கு


எதிராக வழக்கு தாக்குதல் செய்திட வேண்டும் என்ற கோரிக்கை முன்னெடுக்க பட்டு வருகின்ற நிலையில்


கோட்டா அரசின் சீனி வியாபாரம் அம்பலத்திற்கு வரும் என எதிர் பார்க்க படுகிறது

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் சீனிக்கு தட்டுப்பாடு – மக்கள் அவதி

    இலங்கையில் சீனிக்கு தட்டுப்பாடு – மக்கள் அவதி

    இலங்கையில் மீளவும் சீனிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது ,தற்போது கிலோ ஒன்று 160 துக்கு மேலாக விற்பனையாகிறது

    சீனி வியாபாரத்தில் கோட்டாபய ஈடுபட்டுள்ளதால் ,திட்டமிடப்பட்டு இந்த தட்டு பாட்டை இவர் ஏற்படுத்தியுள்ளதாக கூற படுகிறது

      Posted in Uncategorized

      அரிசி, சீனிக்கு நள்ளிரவிலிருந்து நிர்ணய விலை

      அரிசி, சீனிக்கு நள்ளிரவிலிருந்து நிர்ணய விலை

      இதேவேளை, பதுக்கி வைத்திருக்கும் சீனியை கண்டுபிடிக்கும் வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது. பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை சீனி இன்றும்

      கண்டுபிடிக்கப்பட்டது. 22 ஆயிரத்து 597 மெற்றிக் தொன் சீனி நேற்று வரை சதொச நிறுவனத்திற்கு கிடைத்துள்ளதாக அதன் தலைவர் றியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார். அந்த சீனி

      நாடு தழுவிய ரீதியில் உள்ள சதொச களஞ்சியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. சிவப்பு சீனியை 130 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும். துறைமுகத்தில் 10 ஆயிரம் மெற்றிக்

      தொன்னுக்கும் அதிகமான சீனி உள்ளது. அதனை விடுவிப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே நாளை மறுதினம் நண்பகலை அடையும் போது சீனிக்கான

      பிரச்சினை முழுமையாக தீருமென சதொச நிறுவனத்தின் தலைவர் நம்பிக்கை தெரிவித்தார்.

      Posted in Uncategorized

      இன்று நள்ளிரவு முதல் அவசரகால விதிமுறைகள்,

      இன்று நள்ளிரவு முதல் அவசரகால விதிமுறைகள்,

      அத்தியாவசிய உணவு விநியோகத்துடன் சம்பந்தப்பட்ட அவசரகால விதிமுறைகள், இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

      பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆவது பிரிவின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், அக்கட்டளைச் சட்டத்தின் iiஆவது பிரிவின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தி, 5ஆவது பிரிவின்
      ஏற்பாடுகளின் பிரகாரம் இந்த விதிமுறைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

      நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாகப் பதுக்குதல், அதிக விலை அறவிடுவதன் மூலம் நுகர்வோரை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் சந்தை

      முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக, அரசாங்கத்தின் உத்தரவாத விலைக்கு அல்லது சுங்கத்தில் இறக்குமதி செய்யப்பட்ட விலையை அடிப்படையாகக் கொண்டு நெல், அரிசி, சீனி உள்ளிட்ட

      அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாகக் கொள்வனவு செய்து மக்களுக்கு நியாயமான விலைக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள அதிகாரிகள்

      நடவடிக்கை எடுப்பதற்கும், அரச வங்கிகளின் மூலம் மொத்தமாகக்
      கொள்வனவு செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள கடன், கடன் பெற்றுக்கொண்டவர்களிடம் இருந்து அறவிடப்படக்கூடிய வகையில் இது நடைமுறைப்படுத்தப்படும்.

      சாதாரண பொதுமக்களின் வாழ்க்கை நிலையை இயல்பு நிலையில் பேணுவதற்குத் தேவையான நெல், அரிசி, சீனி உள்ளிட்ட ஏனைய நுகர்வுப் பொருட்களை விநியோகிப்பதை ஒருங்கிணைப்புச்

      செய்வதற்காக, அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகமாக, மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.