Posted in இலங்கை செய்திகள்

ரணிலுக்கு ஒட்டு போட்டவர்களும் ரணிலும் வீட்டுக்கு செல்வார் மக்கள்அறிவிப்பு

ரணிலுக்கு ஒட்டு போட்டவர்களும் ரணிலும் வீட்டுக்கு செல்வார் மக்கள்அறிவிப்பு

இலங்கை ,கொழும்பு ; இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்ட ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவருக்கு வாக்களித்த 134 பேரையும் வீட்டுக்கு அனுப்புவோம் என போராட்ட காரர்கள் தெரிவித்துள்ளனர் .

மக்கள் விரோதி மற்றும் ராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்க மகிந்தாவினால் நியமிக்க பட்ட ரணில் விக்கிரமசிங்க முப்பது நாளுக்குள் வீட்டுக்கு செல்வார் என போராட்ட கார்கள் தெரிவித்துள்ளனர் .

மேலும் ரணில் விக்கிரமசிங்காவிற்கு வாக்களித்த 134 பேரையும் மக்கள் கவனித்து கொள்வார்கள் என்கின்றனர்.

எங்கள் ஆதரவு ரணிலுக்கு மைத்திரி குத்துக்கரணம்

அவ்வாறு எனினம் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிக்கள் உள்ளிட்ட 134 எம்பிக்கள் வீடுகள் போராட்ட காரர்களினால் முற்றுகையிட பட போகிறது .

மேலும் இலங்கையில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டு விட்டார்.

நீங்கள் உங்கள் வேலைகளை பாருங்கள் என போராட்டக்கார்களை பார்த்து மகிந்த ராஜபக்ச கேவலமாக கூறிய வார்த்தை. போராட்ட கார்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது.

ரணிலுக்கு ஒட்டு போட்டவர்களும் ரணிலும் வீட்டுக்கு செல்வார் மக்கள்அறிவிப்பு

வரும் வாரம் அளவில் போராட்டம் மீளவும் உக்கிரம் பெறும் என எதிர் பார்க்க படுகிறது .

மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பவர்களை குறிவைத்து கைது செய்யும் நகர்வில் ரணில் உத்தரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

போராட்டக்காரர்கள் கூறுவது போன்று மீளவும் நாடு முடக்க பட்டால்
இலங்கை வரலாற்றில் குறைந்த நாட்கள் ஜனாதிபதியாக அங்கம் வகித்த பெருமை ரணிலுக்கு சாரும் என்பதை அடித்து கூறலாம் .

    Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

    கோட்டபாயா பிடியில் ரணில் அரசியல் சதுரங்கம் ஆரம்பம்

    கோட்டபாயா பிடியில் ரணில் அரசியல் சதுரங்கம் ஆரம்பம்

    ,

    இலங்கையில் மக்களினால் துரத்த பட்ட ஒருவர் இலங்கையின் ஜனாதிபதியான வரலாறு இடம்பெற்றுள்ளது .


    ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக விளங்கிய ரணில் விக்கிரமசிங்க தனது பாராளுமன்ற உறுப்பு அங்கத்துவத்தை இழந்த நிலையில் இன்று இலங்கையின் ஜனாதிபதியானார் .

    யாரும் சற்றும் எதிர் பார்த்திராத அரசியல் சித்து விளையாட்டில் ரணில் வென்று முடி சூடினார் .


    பேரம் பேச்சுக்களின் அடிப்படையில் வாக்குகள் சிதறடிக்க பட்டு அரியணையில் அமர்ந்தார் .

    இந்த அரியணை ஏற்றத்திற்காக பல கோடிகள் பேரம் பேச்சில் மாற்ற பட்டுள்ளன .

    தனது ஜனாதிபதி ஆசையையும் வரலாற்றில் இலங்கை ஜனாதிபதி என்கின்ற கீரீடத்தையும் ரணில் தட்டி சென்றுள்ளார் . எனினும் இவரது ஆட்சி 18 மாதங்களில் கவிழ்க்க படும் நிலையே உள்ளது.

    அதன் பின்னர் பொது தேர்தலை சந்திக்க வேண்டும்.

    இதற்குள்ளாக கொந்தளித்த மக்களை குஷி படுத்த வேண்டும் மீளவும் இயல்பு நிலைக்கு நாட்டை அழைத்து செல்ல வேண்டும் .

    அவ்விதம் வென்றால் மட்டுமே தனது கட்சியை காப்பாற்றி கொள்வதுடன் மேலும் மக்கள் நன்மதிப்பை பெற்றுக்கொள்ள முடியும்.

    ஆனால் மக்கள் விதிக்கும் கோரிக்கை என்னவென்றால் ராஜபக்ச அரசின் லஞ்ச ஊழல் மோசடி விசாரிக்க பட வேண்டும் .

    மேலும் அவர்கள் கொள்ளையடித்த பணம் மீள நாட்டுக்கு கொண்டுவரப் படவேண்டும் ராஜபக்சாக்கள் சிறையில் அடைக்க படவேண்டும்

    இவ்வாறான பலத்த சவாலுக்கு மத்தியில் ரணில் போராட்டம் இடம்பெறுகிறது.

    தான் ஜனாதிபதியானேன் என்ற மமதையை ரணில் விக்கிரமசிங்காவில் காண முடியவில்லை .மேலும் எதிர்கால நெருக்கடியை எவ்வாறு கையாள போகிறார் என்பதே ரணில் உடல் அசைவில் அவதானிக்க முடிகிறது .

    தனக்கு எதிராக கொதித்துள்ள மக்களுக்கு ரணில் விக்கிரமசிங்க என்ன செய்ய போகிறார் …?


    கோட்டாவை போல ரணிலும் விரட்டியடிக்க படுவாரா..? அல்லது மக்கள் போராட்டத்தை நீர்த்து போக வைப்பாரா ..?

    மக்கள் கொதிப்பு இவ்விதம் எழுந்தால் ரணில்விக்கிரமசிங்கா கோட்டாவை போல விரட்டியடிக்க படுவார் என்பதே களநிலவரம் .

    மக்கள் கோரிக்கைக்கு கட்டு பட்டு பதவி விலகும் நிலையே ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்படும் என்பதை இப்பொழுதே இங்கே பதிந்து வைக்கிறோம் .

    மக்களை கட்டாய படுத்த பல இலவச அறிவிப்புகளை ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்வார் ,அதில் மயங்கி மக்கள் ரணிலை மக்கள் ஏற்று கொள்வார்களா என்பதே சந்தேகமாக உள்ளது .

    கடன் தள்ளுபடி என்பன இதனை காண்பிக்கிறது .ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியான மறு மணித்தியாலம் சர்வதேச நாணய நிதியம் பேசிட அழைக்கிறது .

    அவ்வாறு எனின் ரணில் விக்கிரமசிங்காவின் நிகழ்ச்சி நிரலின் கீழ் யாவும் நடக்கிறது என்பதை இதன் மூலம் கணிக்க முடிகிறது .

      Posted in இலங்கை செய்திகள்

      ரணில் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் தள்ளாடும் புதிய அரசு

      ரணில் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் தள்ளாடும் புதிய அரசு

      இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பாரளுமன்றினால் நியமிக்க பட்டுள்ள ரணில் விக்கிரசிங்கா ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்க தயாராகிறது .

      நரி ரணில் குட்டையை குழப்பி மீனை பிடித்து ஆட்சியில் ஏறி அமர்ந்தார் .அதே குட்டையை மீள குழப்பிட மக்கள் போராட்டம் தயாராகி வருகிறது.

      இரும்பு கரம் கொண்டு பிரதமர் மற்றும் ஜனாதிபதி மாளிகைகள் என்பன பாதுகாப்பு இறுக்கம் மேற்கொள்ள பட்டுள்ளது .

      ரணில் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் தள்ளாடும் புதிய அரசு

      கோட்டாவை துரத்தி ஜனாதிபதியாகும் ரணில் ஆட்டத்தை ஆரம்பித்தார்

      இருந்த பொழுதும் இந்த இராணுவ தடைகளை உடைத்து மக்கள் போராட்டம் வெடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது.

      ரணில் ஜனாதிபதி என்ற அறிவிப்பு போராட்ட காரர்கள் மத்தியில் கொதிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ளது .

      பொம்மை ரணில் ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றுவதில் தனது நாட்களை கழிப்பார் என்கின்ற நிலையில் மக்கள் போராட்டம் மீள வெடிக்க தயாராகி வருகிறது.

      இவ்வாறு ரணில் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தால் இலங்கையில் குறுகிய நாட்கள் ஜனாதிபதியாக அங்கம் வகித்தவர் என்ற பெருமையை ரணில் தட்டி செல்வர் என்பதாகும்.

      இவ்வாறு எனினும் 18 மதங்களில் ரணில் ஆட்சி கவிழ்க்க படும் நிலையே உள்ளது.

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கை பிரதமராக தினேஷ் குணவர்தன நியமனம்

        இலங்கை பிரதமராக தினேஷ் குணவர்தன நியமனம்

        இலங்கை . கொழும்பு ; இலங்கையின் புதிய ஜனாதிபதியின் கீழ் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் இனவாதியுமான தினேஷ் குணவர்தன இலங்கை பிரதமராக நியமிக்க படவுள்ளார்.

        ரணில் ஆட்சியின் கீழ் தினேஸ்குணவர்தன பிரதமராக பொறுப்பு வகிக்க உள்ளார் என கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

        யார் பிரதமராக வந்தாலும் தமிழருக்கு பயனில்லை சுமந்திரன் கூவல்

        இதன் பின்புலம் என்ன என்பதை மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்பது நமது கணிப்பு.

        நாடாளும் புதிய அரசின் நாடகம் அரங்கேற்றம் நடக்கிறது .மக்கள் புரட்சி வெடிக்க தயராகிறது .

        Posted in இலங்கை செய்திகள்

        தமிழ் தேசிய கூட்டமைப்பு இரண்டாக உடைந்து வாக்களித்த கோலம்

        தமிழ் தேசிய கூட்டமைப்பு இரண்டாக உடைந்து வாக்களித்த கோலம்

        இலங்கை பாராளுமன்றில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவானார் .இவரது வெற்றி முதலே தீர்மானிக்க பட்ட ஒன்று என்பதை இன்றைய நிகழ்வு எடுத்து காட்டியுள்ளது .

        மொட்டு கட்சியின் ஆதரவுடன் ஜனாதிபதியான ரணில் தனது அரசியல் விளையாட்டை எதிர்காலத்தில் தொடருவாரா என்கின்ற ஐயம் எழுந்துள்ளது .

        தான் நாட்டின் ஜனாதிபதியான நிலையில் தனது பாராளுமன்ற பேச்சை சுருக்கி கொண்ட ரணில் தந்திர நகர்வு ஆரம்பிக்க பட்டு விட்டதை எடுத்து காட்டியது .

        ரணிலை ஆதரிக்க தமிழ்தேசிய கூட்டமைப்பு மறுத்துள்ளது என்கின்ற வாதம் போலியானது என வெளிப்படுத்த பட்டது .

        தமிழ் தேசிய கூட்டமைப்பை சஜித் மற்றும் அழகப்பெரும ஆகியோர் சந்தித்து உரையாடினர்.

        அதில் சஜித் பக்கம் வாக்கு அளிக்க உள்ளவர்களும் அதேபோல மொட்டு கட்சியின் பக்கம் உள்ள உறுப்பினர்கள் விபரமும் வெளியானது.

        ஊடக நபர் ஒருவர் பிடித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் காட்சி படம் ஒன்று சமுக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாற்றம் பெற்றுள்ளது.

        அதனை இந்த காட்சியில் நீங்கள் கண்டு கொள்ள முடியும் .தள்ளாடும் சம்பந்தர் அரசியல் சித்து விளையாட்டு மக்களே இதில் தெரிகிறது அல்லவா .

        இருவருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரிந்து வாக்களித்து வாக்கு சிதறலை மேற்கொண்டுள்ளது படத்தை உற்று கவனியுங்கள் .

          Posted in இலங்கை செய்திகள்

          ரணில் ஜனாதிபதியானார் பாராளுமன்றில் வாக்கெடுப்பில் வெற்றி

          ரணில் ஜனாதிபதியானார் பாராளுமன்றில் வாக்கெடுப்பில் வெற்றி

          இலங்கை பாரளுமன்றின் இடம்பெற்ற தேர்தல் மூலம் ரணில்விக்கிரமசிங்க
          134 அதிக வாக்குகளை பெற்று இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் .

          டலஸ் அழக பெருமா 82 மற்றும் அனுரகுமார திசாநாயக்க 3 வாக்குகளை பெற்றுள்ளனர்

          ரணில் போட்டு கொடுத்த திட்டமிடல்கள் அடிப்படையில் இந்த பொம்மை வாக்கெடுப்பு இடம்பெற்று நரி ரணில்விக்கிரமசிங்க வெற்றி பெற்றுள்ளார் .

          திட்டமிட்ட படியே மகிந்தா கட்சியின் மகத்தான ஆதரவுடன் ரணில் விக்கிரசிங்க மகத்தான வெற்றியை பெற்றுள்ளார்.

          அளிக்கப்படாதா வாக்குகளாக இரண்டு உள்ளன -மேலும் நிராகரிக்க பட்ட வாக்குகளாக நான்கு பதிவாகியுள்ளன .

          பாராளுமன்றில் ஜனாதிபதி தெரிவு நாடகம் முடிவுக்கு வந்தது .

          கோட்டாவை துரத்தி ஜனாதிபதியாகும் ரணில் ஆட்டத்தை ஆரம்பித்தார் கணிப்பு சரியானது

            Posted in இலங்கை செய்திகள்

            வாக்கெடுப்பை சுற்றி மகிந்தா குழு டக்கிளஸ் பேச்சு

            வாக்கெடுப்பை சுற்றி மகிந்தா குழு டக்கிளஸ் பேச்சு

            பாரளுமன்றில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்திடும் வாக்கெடுப்பு இடம்பெற்ற வண்ணம் உள்ளது.


            இவ்வேளை மகிந்த அணியினர் வாக்கு பெட்டி அருகில் மிரட்டும் தொனியில் உள்ள காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது.

            மகிந்த ராஜபக்ச வாக்கு என்கின்றவர்களை தமக்கு சாதகமாக செயல்படுமாறு வேண்டுகின்ற சைகைகள் வழங்குவதை போன்ற தோற்றம் இந்த காட்சிகள் ஊடக காண முடிகிறது.

            மகிந்த அணியினர் தமக்கு அதிக வெற்றிவாய்ப்பு என்கின்ற விதத்திலும் தமது ஆதரவு நபரே ஜனாதிபதியாவர் என்கின்ற நிலையிலும் உள்ளனர்.

            இன்னும் சற்று நேரத்தில் முடிவுகள் வெளியாகும் என எதிர் பார்க்க படுகிறது.

              Posted in இலங்கை செய்திகள்

              நான்கு வாக்கெடுப்புக்கள் செல்லுபடியற்றதாக மாற்றம்

              நான்கு வாக்கெடுப்புக்கள் செல்லுபடியற்றதாக மாற்றம்

              இலங்கை பாரளுமன்றில் இடம்பெற்று வரும் புதிய ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பில்
              இதுவரை மூன்று வாக்குகள் செல்லுபடியற்றதாக இடம்பெற்றுள்ளது.

              இந்த செல்லுபடியற்ற வாக்குகளை யார் பதிவு செய்தார்கள் என்பது தெரியவில்லை ,தொடர்ந்து வாக்குகள் எண்ண பட்டு கொண்டுள்ளன
              பாராளுமன்றம் தற்போது பரபரப்பில் உறைந்துள்ளது.

                Posted in இலங்கை செய்திகள்

                இரு காயேந்திரனும் வாக்கெடுப்பை புறக்கணிப்பு

                இரு காயேந்திரனும் வாக்கெடுப்பை புறக்கணிப்பு

                இலங்கையில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்திடும் வாக்கெடுப்பு பாராளுமன்றில் இடம்பெற்ற வண்னம் உள்ளது .

                இவ்வேளை இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது செல்வராசா காயே ந்திரன் மற்றும் காயேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் புறக்கணித்துள்ளனர்

                இவ்வாறு இவர்கள் புறக்கணிப்பு செய்திடும் நிலைக்கு சென்றதன் பின்புலத்தில் பணபெட்டிகள் கைமாறி இருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

                  Posted in இலங்கை செய்திகள்

                  இலங்கை பாராளுமன்றை சுற்றி கடும் பாதுகாப்பு

                  இலங்கை பாராளுமன்றை சுற்றி கடும் பாதுகாப்பு

                  இலங்கை பாராளுமன்றில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்திடும் வாக்கெடுப்பு இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

                  யார் இலங்கையின் புதிய ஜனாதிபதி என்ற பர பரப்பான நிலை தோற்றம் பெற்று வரும் நிலையில் முன்னால் ஜனாதிபதி மகிந் ராஜபக்ச பதட்டத்தில் உள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன.

                  இவ்வேளை பாரளுமன்றை சுற்றி இராணுவம் பொலிசார் குவிக்க பட்டுள்ளனர் ,

                  தமது ஆதரவு ஜனாதிபதியை தெரிவு செய்வதில் மகிந்த அணியினர் தீவிரமாக உள்ளனர்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    டலஸ் இலங்கையின் ஜனாதிபதி ஆட்சி நிலைக்குமா ரணில் விடுவாரா

                    டலஸ் இலங்கையின் ஜனாதிபதி ஆட்சி நிலைக்குமா ரணில் விடுவாரா

                    இலங்கை ;இன்று ஆரம்பமாகியது ஒரு ஒருமித்த பயணத்தின் தொடங்கமாகும் எனவும், பாராளுமன்னத்திற்கு அப்பால் மக்களின் வாழ்வை கட்டியெழுப்பும்

                    போராட்டத்திற்காக தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

                    இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட தீர்மானித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இத்தருணத்தில் நாட்டு மக்களுக்காக வரலாற்று

                    முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவித்த அவர்,இந்நாட்டின் அரசியலுக்கு உண்மையான புதிய கலாச்சாரத்தை அறிமுகப்படுத்த தன்னை அர்ப்பணிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

                    டலஸ் இலங்கையின் ஜனாதிபதி ஆட்சி நிலைக்குமா ரணில் விடுவாரா

                    இந்நாட்டு மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை வென்றெடுத்த வன்னம் பத்தொன்பதாவது அரசியலமைப்பு திருத்தத்தை மீண்டும்

                    அமுல்படுத்துவதற்கும், நாட்டை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் முன்னோக்கி கொண்டு செல்வதற்காக அர்ப்பணிப்புடன்

                    இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,இந்நாட்டு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதே ஒரே

                    நோக்கம் எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அதற்காக தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

                    இடைக்கால ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழியப்பட்ட டலஸ் அழகப்பெரும மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர்

                    கலந்து கொண்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (19) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

                    இடைக்கால ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நாளை இடம் பெறுகிறது என்பதோடு,


                    இதில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்பன தமது ஆதரவை நாடாளுமன்ற உறுப்பினர்
                    டலஸ் அழகப்பெருமவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

                      Posted in உலக செய்திகள்

                      அமெரிக்கா இராணுவ தளபதி சிரியாவுக்கு திடீர் பயணம்

                      அமெரிக்கா இராணுவ தளபதி சிரியாவுக்கு திடீர் பயணம்

                      அமெரிக்காவின் Lieutenant General Michael Kurilla முக்கிய தளபதி ஒருவர் சிரியாவுக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் .

                      இவரது இந்த பயணம் அதி முக்கியதத்துவம் வாய்ந்த ஒன்றாக கருத படுகிறது.

                      அமெரிக்கா இராணுவ முகாமில் வெடிப்பு சத்தங்கள்

                      அமெரிக்கா இராணுவ தொடரணி மீது தாக்குதல்

                      சிரியா மீது அமெரிக்கா மற்றும் அதன் நேச படைகள் தாக்குதலை நடத்தி வருகின்ற பொழுதும் ரசியாவின் கடும் எதிர்ப்பினால் அது கை கூடவில்லை .

                      இவ்வாறான நிலையில் அமெரிக்கா இராணுவ தளபதி திடீர் பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிது.

                      அமெரிக்கா இராணுவத்தினர் ரசியாவினால் கைது

                      போலந்தில் முகாம் அமைக்கும் அமெரிக்கா இராணுவம்

                      அமெரிக்கா இராணுவ படையணியின் முக்கிய தளபதியின் இந்த பயணத்தின் பின்னர் முக்கிய தாக்குதல் நகர்வுகள் உள்ளடங்கி இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

                        Posted in இலங்கை செய்திகள்

                        ஜனாதிபதி போட்டி சஜித் பிரேமதாசா திடீர் விலகல்

                        ஜனாதிபதி போட்டி சஜித் பிரேமதாசா திடீர் விலகல்

                        இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச விலகுவதாக அறிவித்துள்ளார் .

                        புதிய ஜனாதிபதியை தெருவு செய்வதற்கான வேட்பு மனு தாக்கல்

                        பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.


                        சஜித் பிரேமதாசாவின் இந்த திடீர் விலகல் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                        ஜனாதிபதி தெரிவு தொடர்பில் மனோ கணேசன் அறிவிப்பு

                        கட்சிகளுக்குள் இடம்பெற்ற பேரம் பேச்சுக்களின் பின்னர் இந்த முடிவு எட்ட பட்டுள்ளதாக தெரியவருகிறது.

                          Posted in இலங்கை செய்திகள்

                          கோத்தாவுக்கு எதிராக அணிதிரண்ட மலேசியத் தமிழர்கள்நீதியின் முன் நிறுத்து

                          கோத்தாவுக்கு எதிராக அணிதிரண்ட மலேசியத் தமிழர்கள்நீதியின் முன் நிறுத்து

                          சிங்கப்பூரில் தற்போது நிலைகொண்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதியும் தமிழனப்படுகொலையாளியுமான கோத்தபாய இராஜபக்சவுக்கு எதிராக மலேசியத் தமிழர்கள் அணிதிரண்டு குரல் எழுப்பியுள்ளனர்.

                          தலைநகர் கோலாலபம்பூரில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தின் முன் பினாங்கு மாநில் துணை முதல்வரும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைஞர் குழுப் பிரதிநிதியுமாகிய பேரா.இராமசாமி அவர்களது தலைமையில்

                          அணிதிரண்ட தமிழர்கள், இனப்படுகொலையினை சிங்கப்பூர் வெளியேற்றி சர்வதேச நீதிமன்றிடம் கையளிக்க வேண்டும் என்ற முழக்கத்தினை எழுப்பினர்.

                          மலேசியத் தமிழர் அரசியல் பிரதிநிதகளான சதீஸ் முனியாண்டி, டேவிட் மர்செல் உட்பட பல தமிழர் அமைப்பினர் இதில் பங்கெடுத்திருந்தனர்.

                          சிங்கப்பூர் தூதரைச் சந்தித்து கோரிக்கை மனுவினை கையளித்து, தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சிங்கப்பூரில் இருந்து

                          வெளியேற்றப்பட்டு சர்வதேச நீதிமன்றிடம் இனப்படுகொலையாளியான கோத்தபாயாவை கையளிக்க வேண்டும் என்ற கோரிக்கையிகை முன்வைத்தனர்.

                          கோத்தாவுக்கு எதிராக அணிதிரண்ட மலேசியத் தமிழர்கள்நீதியின் முன் நிறுத்து
                          கோத்தாவுக்கு எதிராக அணிதிரண்ட மலேசியத் தமிழர்கள்நீதியின் முன் நிறுத்து


                          சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் கோத்தபாய இராஜபக்சவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.

                          போர் குற்றங்களில் ஈடுபட்ட சிறிலங்காவின் அரசியல், இராணுவ தலைவர்களுக்கு எதிராக ஐ.நா உறுப்பு நாடுகள்,


                          சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைச்சபையின்


                          ஆணையாளர் மிச்சல் பசேலே அம்மையார் அவர்கள் முன்னர் அழைப்பொன்றினை விடுத்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

                          https://youtu.be/Q8738uDw2BM
                            Posted in இலங்கை செய்திகள்

                            இலங்கையில் பாடசாலைகளிற்கு 20 தம திகதிவரை விடுமுறை

                            இலங்கையில் பாடசாலைகளிற்கு 20 தம திகதிவரை விடுமுறை

                            இலங்கை கொழும்பு ; இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்ட பாடு காரணமாக பாடசலைகள் யாவும் எதிர்வரும் 20தம திகதி வரை விடுமுறை விடுக்க பட்டுள்ளது .

                            அதன் பின்னர் வழமை போன்று அணைத்து பாடசாலைகளும் இயங்கும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.


                            இலங்கையில் பாடசாலைகளிற்கு செல்லும் மாணவர்கள் போக்குவரத்து பாதிக்க பட்டமையினாலும் ஆசிரியர்களுக்கு


                            ஊதியம் வழங்கப்படுவதில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக இந்த விடுமுறை விக்க பட்டுள்ளதாக தெரியவருகிறது.

                              Posted in இலங்கை செய்திகள்

                              ஜனாதிபதி தெரிவு தொடர்பில் நாளை மனோ கணேசன்

                              ஜனாதிபதி தெரிவு தொடர்பில் நாளை மனோ கணேசன்

                              தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமைக்குழு ஜனாதிபதி தெரிவு தொடர்பில் நாளை முடிவு
                              – தமுகூ தலைவர் மனோ கணேசன்

                              தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழு நாளை செவ்வாய்கிழமை 19ம் திகதி
                              மாலை 6 மணிக்கு கொழும்பு நுகேகொடை ஏகநாயக அவனியுவில் (#15/1 Ekanayake Avenue, Nugegoda)
                              அமைந்துள்ள கட்சி செயலகத்தில் கூடி, 20ம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட
                              வேட்பு மனுக்கள் சமர்பித்துள்ள அனைத்து வேட்பாளர்கள் தொடர்பிலும், கலந்துரையாடி முடிவெடுக்கும் என தமிழ்
                              முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி ஊடகங்களுக்கு தெரிவத்துள்ளார்.

                                Posted in இலங்கை செய்திகள்

                                மக்கள் போராட்டம் 100 நாட்களை நிறைவு

                                மக்கள் போராட்டம் 100 நாட்களை நிறைவு

                                காலி முகத்திடலில் ஆரம்பமான போராட்டம் இன்றுடன் (17) 100 நாட்களை நிறைவு செய்கிறது.

                                கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி, கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுமாறு வலியுறுத்தி இளைஞர்கள் குழுவொன்று இந்த எதிர்ப்புப் பிரச்சாரத்தை ஆரம்பித்தது.

                                இதேவேளை, போராட்டத்தில் தங்களது உயிரை அர்ப்பணித்த மக்களைக் நினைவுகூறும் விசேட நிகழ்வும் நேற்று (16) இரவு போராட்ட களத்தில் இடம்பெற்றது.

                                இதற்கு திரளான மக்கள் கலந்துகொண்டதுடன், போராட்டத்தின் 100வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  ரணிலை விரட்டுவோம் மக்கள் முழக்கம் கொதிக்கும் இலங்கை

                                  ரணிலை விரட்டுவோம் மக்கள் முழக்கம் கொதிக்கும் இலங்கை

                                  இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கா அதிகாரத்தில் இருப்பதை அனுமதிக்க முடியாது என இலங்கை போராட்ட காரர்கள் அறிவித்துள்ளனர்.

                                  தொடர்ந்தும் அதி உயர் பதவியில் நாட்டை மேலும் ரணில் விக்கிரமசிங்க ஆள முனைந்தால் அவருக்கு எதிராக பாரிய போராட்டத்தை முன்னெடுப்போம்.

                                  பல் நாட்டு அரசுடன் இணைந்து அதிகாரத்தை தக்கவைத்து கொள்ள ரணில் விக்கிரமசிங்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர் .

                                  ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றிடவும் மேலும் நாட்டை கீழ்நோக்கி செல்லும் நிலைக்கு எடுத்து செல்ல பிற் படுத்தப்பட்ட சிந்தனைக்குள் ஊறியுள்ள ரணில் முயல்வார் .

                                  ரணிலை விரட்டுவோம் மக்கள் முழக்கம் கொதிக்கும் இலங்கை

                                  அதனால் அவரை அந்த பதவியில்; இருந்து விரட்டும் வரை நாம் போராடுவோம் என்கின்றனர் மக்கள் .

                                  இவ்வாறான மக்கள் போராட்டங்கள் இலங்கையில் தொடர்ந்தால் இலங்கை மேலும் சோமாலியாக மாறும் நிலை ஏற்படும் என மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

                                  மக்கள் மன்றம் விரும்பாத ஒருவர் ஜனாதிபதி நிலையில் அங்கம் வகிப்பதை முற்றாக கைவிட வேண்டும் என அந்த போராட்ட கார்கள் தெரிவித்துள்ளனர்.


                                  எரிபொருளை நாட்டுக்குள் எடுத்து அதனை நிவர்த்தி செய்துவிட்டால் மக்கள் போராட்டம் அமைதியாகிவிடும் என்பதால் எரிபொருளில் மற்றும் எரிவாயு விநியோகத்தை150 ரூபாவுக்குள் மக்களுக்குவிற்பனை செய்திடும் நரி தந்திரத்தில் ரணில் ஈடுபட்டுள்ளார்.

                                  இது தனது அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள்வும் மக்கள் எழுச்சியை மழுங்கடிக்க ரணில் விக்கிரமசிங்க போட்டுள்ள மகா நரி திட்டங்களில் இதுவும் ஒன்று என போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர் .

                                    Posted in சீமான் பேச்சு

                                    போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இலங்கை சீமான்

                                    போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இலங்கை சீமான்

                                    இலங்கையில் கோட்டபாய தோற்றது ஏன் அவர்களை மக்கள் விரட்டுவது ஏன்

                                    .இதே நிலை இந்தியாவுக்கு வந்துவிட கூடாது ஏன் நாம் தமிழர் கட்சி சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார் .

                                    இலங்கை ஜனாதிபதி மாளிகையை மக்கள் முற்றுகையிட்டு துரத்தியதன் பின்னர் புதிய தலைமுறை தொலைக்காட்சி மேற்கொண்ட நேரலையில் சீமான் இந்த விடயம் தொடர்பாக உரையாடினார் .

                                    இதில் அழுத்தி காணொளி பார்க்கலாம்

                                    Posted in உளவு செய்திகள்

                                    கோட்டபாயாவை ஏற்க மறுக்கும் நாடுகள் மிரட்டும் அமெரிக்கா

                                    கோட்டபாயாவை ஏற்க மறுக்கும் நாடுகள் மிரட்டும் அமெரிக்கா

                                    இலங்கை ஜனாதிபதி கோத்தபாயா அமெரிக்கா செல்ல முயனறார் .ஆனால் அமெரிக்கா அரசு விசா வழங்குவதை நிறுத்தி அவரது பயணத்திற்கான ஆப்பு வைக்கும் ஆட்டத்தை ஆரம்பித்தது .

                                    அதனை தொடர்ந்து தற்போது மலேசியாவுக்கு சென்றார்

                                    .அங்கும் அவருக்கான அடைக்கலத்தை வழங்க முடியாத நெருக்கடி அந்த நாட்டு ஆளும் அரசுக்கு எதிர் கட்சிகள் மற்றும் ஒன்றிணைந்த கட்சிகளினால் நெருக்கடி வழங்கப்பட்டது .

                                    அதனால் மலேசியாவில் இருந்து தற்போது சிங்கப்பூருக்கு பயணமானார் .

                                    அங்கு புகலிட அடைக்கல கோரிக்கை வழங்குவதில்லை என்று சிங்கப்பூர் கையி விரித்து விட்டது .

                                    அதனை தொடர்ந்து டுபாய் அல்லது அபுதாபிக்கு அவர் தப்பி செல்லும் நிலை ஏற்படவுள்ளது.

                                    அங்கும் அவருக்கான அடைக்கலம் அல்லது பாதுகாப்பு வழங்கும் நிலை கேள்விக்குறியாகியுள்ளது .

                                    ஐரோப்பா எங்கும் கோட்டபாய செல்ல முடியாத நிலையில் உள்ளனர் .கரணம் தமிழர்கள் போராட்டத்தில் குதித்து இவரை போர்குற்றத்தில் தூக்கிசென்று விடுவார்கள் .

                                    கோட்டபாயாவை ஏற்க மறுக்கும் நாடுகள் மிரட்டும் அமெரிக்கா

                                    தற்போது எந்த நாட்டிலும் நிரந்தரமாக தங்கிட முடியா நிலையில் கோட்டபாய சிக்கி தவித்த வண்ணம் உள்ளார் .

                                    அப்படி என்றால் அவருக்கு மாற்று வழி என்ன மீளவும் இலங்கைக்கு திரும்பி வரவேண்டும்.

                                    இலங்கை நாட்டில் கோட்டபாய தங்கிட முடியாத நெருக்கடி இவர்களுக்கு உள்ளது .

                                    கோட்டபாய மனைவியுடன் நாடு நாடாக ஓடுவதற்கு பின்புல காரணம் அமெரிக்கா .

                                    அமெரிக்காவே கோட்டபாயவுக்கு அடைக்கலம் வழங்க வேண்டாம் என்ற அழுத்தத்தை கொடுத்து வருகிறது .

                                    இதனால் ராஜபக்ச குடும்பங்கள் பீதியில் உறைந்துள்ளனர் .

                                    நாடுகளை கூட்டி வைத்து புலிகளையும் தமிழர்களையும் பயங்கரவாதம் என்ற தோரணையில் அழித்தனர் .

                                    ஆனால் தற்போது உலக நாடுகள் இவர்களை கைவிட்ட நிலையில் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

                                    இதன் மறுமுனை எதுவாக உள்ளது எனின் நீங்கள் செத்து போங்கள் என்பது தான் .

                                    அவ்வாறு நோக்கின் கோட்டபாய உள்ளிட்டவர்கள் போர்குற்றத்தில் சர்வதேச நாடுகளில் வைத்து தூக்கி செல்லும் நகர்வுகள் முன்னெடுக்க படுகின்றன.

                                    தமிழர்களின் சாபங்களும் கண்ணீரும் தற்போது 13 வருடங்களின் பின்னர் ராஜபக்ச குடும்பத்தை துரத்தி வருகிறது.

                                    தனது சொந்த மக்களும் ராஜபக்ச குடும்பத்தை வெறுத்துள்ள நிலையில் தமிழர்களும் எதிரியாக உள்ள நிலையில் என்ன செய்வதென்று தெரியாது பெரும் பொறிக்குள் ராஜபக்ச குடும்பம் சிக்கியுள்ளது.

                                    இன்று இரவு அல்லது நாளை அரபு நாடு ஒன்றுக்கு பயணிக்கும் கோட்டபாய அங்கு தங்கி இருக்கும் நிலையில் உள்ளார் .

                                    ஆனால் அவருக்கு அமெரிக்கா அரசியல் சதுரங்க ஆட்டம் சாத்தியமான ஒன்றாகி காணப்படவில்லை .

                                    கோட்டாபய நாயை போல ஆடு நாடாக ஓட வேண்டிய நிலையிலேயே சிக்கியுள்ளார் என்பதே நிலையாக உள்ளது.

                                    அமெரிக்கா கோட்டாவை பழிவாங்க காரணம் ,சீனாவுடன் நெருங்க ஒட்டி தமக்கு எதிராக செயல்பட்டதை இப்பொழுது சாதிக்கிறது.

                                    இப்பொழுது என்றாலும் ராஜபாக்ஸை குடும்பம் உலக நாகரிக அரசியலை புரிந்திருப்பார்களாக…?

                                    இப்பொழுது மக்கள் கேள்வி என்னவெனில் ஏன் கோட்டபாய சீனாவுக்கு தப்பி ஓடவில்லை என்பது தான் .

                                    இலங்கை நாட்டை பிச்சைகார நிலைக்கு ஆக்கியதே புத்த மதம் என நம்பிய சீனா தனே .

                                    அப்புறம் எப்படி சீனா காரனிடம் போய் தப்பிக்க முடியும் .இதைத்தான் ஆப்பு என்பார்கள் .ஆப்பு என்றால் அப்படி சிறந்த ஆப்பு .கோட்டா கோ கோம் Gotta GO Home அல்ல கோட்டா நோ கோம் Gotta NO Home.

                                    • வன்னி மைந்தன்