Posted in இலங்கை செய்திகள்

ராஜபக்சாக்களுக்கு நான் நண்பன் இல்லை ரணில் கூவல்

ராஜபக்சாக்களுக்கு நான் நண்பன் இல்லை ரணில் கூவல்

இலங்கை கொழும்பு ; இலங்கையில் எட்டாவது புதிய ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்துள்ள ரணில் விக்கிரமசிங்க தான் ராஜபக்சக்கள் நண்பன் இல்லை என தெரிவித்துள்ளார் .

மொட்டு கட்சியின் ஆதரவுடன் மகிந்தவின் ஆசிர்வாதத்துடன் ஜனாதிபதியாக தெரிவான ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சக்கள் நண்பன் இல்லை என்கின்ற தகவல் மக்களை சிரிப்பில் மூழ்கடித்துள்ளது.

எரிபொருள் கப்பல் வருகை அரசியல் நடத்தும் ரணில்

ரணில் வீடு முன்பாக பொலிஸ் மக்கள் மோதல் 26 பேர் காயம்

இதெல்லாம் அரசியலில் சகயமப்பா என்பதை ரணிலின் இந்த காமடி பேச்சில் தெரியப்படுத்த பட்டுள்ளது.

இலங்கை புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ள நிலையில் மக்களை குஷி படுத்த ரணில் இவ்விதம் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது .

    Posted in இலங்கை செய்திகள்

    சஜித் அணியில் இருந்து ஒருவர் ராஜினமா ஆட்டத்தை ஆரம்பித்த ரணில்

    சஜித் அணியில் இருந்து ஒருவர் ராஜினமா ஆட்டத்தை ஆரம்பித்த ரணில்

    சஜித் பிரேமதாசா அணியில் இருந்து ஒருவர் தனது பதவியை ராஜினமா செய்துளளர் .

    இலங்கையில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள நிலையில் இவர் பதவி விலகியுள்ளார் .

    ரணில் விக்கிரமசிங்காவினால் நியமிக்க படும்அமைச்சரவை அமைச்சு பதவிகளில் இவருக்கு ஒன்று வழங்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது.

    பேரம் பேச்சுக்களின் அடிப்படையில் இலங்கை ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவாகி இருந்தார்.

    அவ்விதம் சஜித் பிரேமதாசா அணியில் இருந்து 14 ஓட்டுக்கள் ரணிலுக்கு சென்றிருந்ததாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் இந்த ராஜினமா இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .

      Posted in இலங்கை செய்திகள்

      ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்

      ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்

      இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக,ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவர் ரணில் விக்ரமசிங்க

      ,பிரதம நீதியரசர் முன்னிலையில் இன்று (21) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

      பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது பாராளுமன்றத்தை வந்தடைந்த அவரை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் பாராளுமன்றத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டார்.

      அதனைத் தொடர்ந்து பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

      பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் மூலம் ரணில் விக்ரமசிங்க 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

      73 வயதான இவர் 1994 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவராக செயல்பட்டு வருகிறார்.

      இவர் 1993 முதல் 1994, 2001 முதல் 2004, 2015 முதல் 2018, 2018 முதல் 2019 மற்றும் 2022 வரை ஆறு முறை இலங்கையின் பிரதமராக பணியாற்றியுள்ளார்.

      Posted in இலங்கை செய்திகள்

      பாடசாலைகள் மீண்டும் 25 ஆம் திகதி ஆரம்பம் – வாரத்தில் 3 நாட்கள் மட்டும் நடத்த திட்டம்

      பாடசாலைகள் மீண்டும் 25 ஆம் திகதி ஆரம்பம் – வாரத்தில் 3 நாட்கள் மட்டும் நடத்த திட்டம்

      அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

      இந்நிலையில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாத்திரம் பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

      இதுதொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள புதிய அறிக்கைக்கு அமைவாக வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பாடசாலைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

      எதிர்வரும் 25ஆம் திகதி முதல் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாத்திரம் பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

      புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீடுகளிலிருந்து அல்லது இணையவழி கற்றல் செயற்பாடு முன்னெடுக்கப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

      அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

      2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை, செப்டெம்பர் 7 ஆம் திகதி வரையில் நீடிக்கப்படவுள்ளது. இரண்டாம் மற்றும் 3 ஆம் தவணையை நடத்துவதற்கான கால எல்லை தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.

      முதலாம் தரம் தொடக்கம் 11 ஆம் தரம் வரையில், திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி முதல் அது தொடர்பான கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன. அத்துடன், முதலாம் தவணை பரீட்சை நடத்தப்படமாட்டாது.

      அதேநேரம், திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை வாராந்தம் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய 3 தினங்களில் மாத்திரம் பாடசாலைகளை நடத்துவதற்கு தீ ர்மானிக்கப்பட்டுள்ளது.

      பாடசாலை நடத்தப்படாத புதன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் இணையவழியில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுப்பததில்
      கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

        Posted in இலங்கை செய்திகள்

        ரணிலுக்கு ஒட்டு போட்டவர்களும் ரணிலும் வீட்டுக்கு செல்வார் மக்கள்அறிவிப்பு

        ரணிலுக்கு ஒட்டு போட்டவர்களும் ரணிலும் வீட்டுக்கு செல்வார் மக்கள்அறிவிப்பு

        இலங்கை ,கொழும்பு ; இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்ட ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவருக்கு வாக்களித்த 134 பேரையும் வீட்டுக்கு அனுப்புவோம் என போராட்ட காரர்கள் தெரிவித்துள்ளனர் .

        மக்கள் விரோதி மற்றும் ராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்க மகிந்தாவினால் நியமிக்க பட்ட ரணில் விக்கிரமசிங்க முப்பது நாளுக்குள் வீட்டுக்கு செல்வார் என போராட்ட கார்கள் தெரிவித்துள்ளனர் .

        மேலும் ரணில் விக்கிரமசிங்காவிற்கு வாக்களித்த 134 பேரையும் மக்கள் கவனித்து கொள்வார்கள் என்கின்றனர்.

        எங்கள் ஆதரவு ரணிலுக்கு மைத்திரி குத்துக்கரணம்

        அவ்வாறு எனினம் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிக்கள் உள்ளிட்ட 134 எம்பிக்கள் வீடுகள் போராட்ட காரர்களினால் முற்றுகையிட பட போகிறது .

        மேலும் இலங்கையில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டு விட்டார்.

        நீங்கள் உங்கள் வேலைகளை பாருங்கள் என போராட்டக்கார்களை பார்த்து மகிந்த ராஜபக்ச கேவலமாக கூறிய வார்த்தை. போராட்ட கார்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது.

        ரணிலுக்கு ஒட்டு போட்டவர்களும் ரணிலும் வீட்டுக்கு செல்வார் மக்கள்அறிவிப்பு

        வரும் வாரம் அளவில் போராட்டம் மீளவும் உக்கிரம் பெறும் என எதிர் பார்க்க படுகிறது .

        மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பவர்களை குறிவைத்து கைது செய்யும் நகர்வில் ரணில் உத்தரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

        போராட்டக்காரர்கள் கூறுவது போன்று மீளவும் நாடு முடக்க பட்டால்
        இலங்கை வரலாற்றில் குறைந்த நாட்கள் ஜனாதிபதியாக அங்கம் வகித்த பெருமை ரணிலுக்கு சாரும் என்பதை அடித்து கூறலாம் .

          Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

          கோட்டபாயா பிடியில் ரணில் அரசியல் சதுரங்கம் ஆரம்பம்

          கோட்டபாயா பிடியில் ரணில் அரசியல் சதுரங்கம் ஆரம்பம்

          ,

          இலங்கையில் மக்களினால் துரத்த பட்ட ஒருவர் இலங்கையின் ஜனாதிபதியான வரலாறு இடம்பெற்றுள்ளது .


          ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக விளங்கிய ரணில் விக்கிரமசிங்க தனது பாராளுமன்ற உறுப்பு அங்கத்துவத்தை இழந்த நிலையில் இன்று இலங்கையின் ஜனாதிபதியானார் .

          யாரும் சற்றும் எதிர் பார்த்திராத அரசியல் சித்து விளையாட்டில் ரணில் வென்று முடி சூடினார் .


          பேரம் பேச்சுக்களின் அடிப்படையில் வாக்குகள் சிதறடிக்க பட்டு அரியணையில் அமர்ந்தார் .

          இந்த அரியணை ஏற்றத்திற்காக பல கோடிகள் பேரம் பேச்சில் மாற்ற பட்டுள்ளன .

          தனது ஜனாதிபதி ஆசையையும் வரலாற்றில் இலங்கை ஜனாதிபதி என்கின்ற கீரீடத்தையும் ரணில் தட்டி சென்றுள்ளார் . எனினும் இவரது ஆட்சி 18 மாதங்களில் கவிழ்க்க படும் நிலையே உள்ளது.

          அதன் பின்னர் பொது தேர்தலை சந்திக்க வேண்டும்.

          இதற்குள்ளாக கொந்தளித்த மக்களை குஷி படுத்த வேண்டும் மீளவும் இயல்பு நிலைக்கு நாட்டை அழைத்து செல்ல வேண்டும் .

          அவ்விதம் வென்றால் மட்டுமே தனது கட்சியை காப்பாற்றி கொள்வதுடன் மேலும் மக்கள் நன்மதிப்பை பெற்றுக்கொள்ள முடியும்.

          ஆனால் மக்கள் விதிக்கும் கோரிக்கை என்னவென்றால் ராஜபக்ச அரசின் லஞ்ச ஊழல் மோசடி விசாரிக்க பட வேண்டும் .

          மேலும் அவர்கள் கொள்ளையடித்த பணம் மீள நாட்டுக்கு கொண்டுவரப் படவேண்டும் ராஜபக்சாக்கள் சிறையில் அடைக்க படவேண்டும்

          இவ்வாறான பலத்த சவாலுக்கு மத்தியில் ரணில் போராட்டம் இடம்பெறுகிறது.

          தான் ஜனாதிபதியானேன் என்ற மமதையை ரணில் விக்கிரமசிங்காவில் காண முடியவில்லை .மேலும் எதிர்கால நெருக்கடியை எவ்வாறு கையாள போகிறார் என்பதே ரணில் உடல் அசைவில் அவதானிக்க முடிகிறது .

          தனக்கு எதிராக கொதித்துள்ள மக்களுக்கு ரணில் விக்கிரமசிங்க என்ன செய்ய போகிறார் …?


          கோட்டாவை போல ரணிலும் விரட்டியடிக்க படுவாரா..? அல்லது மக்கள் போராட்டத்தை நீர்த்து போக வைப்பாரா ..?

          மக்கள் கொதிப்பு இவ்விதம் எழுந்தால் ரணில்விக்கிரமசிங்கா கோட்டாவை போல விரட்டியடிக்க படுவார் என்பதே களநிலவரம் .

          மக்கள் கோரிக்கைக்கு கட்டு பட்டு பதவி விலகும் நிலையே ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்படும் என்பதை இப்பொழுதே இங்கே பதிந்து வைக்கிறோம் .

          மக்களை கட்டாய படுத்த பல இலவச அறிவிப்புகளை ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்வார் ,அதில் மயங்கி மக்கள் ரணிலை மக்கள் ஏற்று கொள்வார்களா என்பதே சந்தேகமாக உள்ளது .

          கடன் தள்ளுபடி என்பன இதனை காண்பிக்கிறது .ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியான மறு மணித்தியாலம் சர்வதேச நாணய நிதியம் பேசிட அழைக்கிறது .

          அவ்வாறு எனின் ரணில் விக்கிரமசிங்காவின் நிகழ்ச்சி நிரலின் கீழ் யாவும் நடக்கிறது என்பதை இதன் மூலம் கணிக்க முடிகிறது .

            Posted in இலங்கை செய்திகள்

            ரணில் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் தள்ளாடும் புதிய அரசு

            ரணில் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் தள்ளாடும் புதிய அரசு

            இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பாரளுமன்றினால் நியமிக்க பட்டுள்ள ரணில் விக்கிரசிங்கா ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்க தயாராகிறது .

            நரி ரணில் குட்டையை குழப்பி மீனை பிடித்து ஆட்சியில் ஏறி அமர்ந்தார் .அதே குட்டையை மீள குழப்பிட மக்கள் போராட்டம் தயாராகி வருகிறது.

            இரும்பு கரம் கொண்டு பிரதமர் மற்றும் ஜனாதிபதி மாளிகைகள் என்பன பாதுகாப்பு இறுக்கம் மேற்கொள்ள பட்டுள்ளது .

            ரணில் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் தள்ளாடும் புதிய அரசு

            கோட்டாவை துரத்தி ஜனாதிபதியாகும் ரணில் ஆட்டத்தை ஆரம்பித்தார்

            இருந்த பொழுதும் இந்த இராணுவ தடைகளை உடைத்து மக்கள் போராட்டம் வெடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது.

            ரணில் ஜனாதிபதி என்ற அறிவிப்பு போராட்ட காரர்கள் மத்தியில் கொதிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ளது .

            பொம்மை ரணில் ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றுவதில் தனது நாட்களை கழிப்பார் என்கின்ற நிலையில் மக்கள் போராட்டம் மீள வெடிக்க தயாராகி வருகிறது.

            இவ்வாறு ரணில் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தால் இலங்கையில் குறுகிய நாட்கள் ஜனாதிபதியாக அங்கம் வகித்தவர் என்ற பெருமையை ரணில் தட்டி செல்வர் என்பதாகும்.

            இவ்வாறு எனினும் 18 மதங்களில் ரணில் ஆட்சி கவிழ்க்க படும் நிலையே உள்ளது.

              Posted in இலங்கை செய்திகள்

              இலங்கை பிரதமராக தினேஷ் குணவர்தன நியமனம்

              இலங்கை பிரதமராக தினேஷ் குணவர்தன நியமனம்

              இலங்கை . கொழும்பு ; இலங்கையின் புதிய ஜனாதிபதியின் கீழ் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் இனவாதியுமான தினேஷ் குணவர்தன இலங்கை பிரதமராக நியமிக்க படவுள்ளார்.

              ரணில் ஆட்சியின் கீழ் தினேஸ்குணவர்தன பிரதமராக பொறுப்பு வகிக்க உள்ளார் என கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

              யார் பிரதமராக வந்தாலும் தமிழருக்கு பயனில்லை சுமந்திரன் கூவல்

              இதன் பின்புலம் என்ன என்பதை மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்பது நமது கணிப்பு.

              நாடாளும் புதிய அரசின் நாடகம் அரங்கேற்றம் நடக்கிறது .மக்கள் புரட்சி வெடிக்க தயராகிறது .

              Posted in இலங்கை செய்திகள்

              தமிழ் தேசிய கூட்டமைப்பு இரண்டாக உடைந்து வாக்களித்த கோலம்

              தமிழ் தேசிய கூட்டமைப்பு இரண்டாக உடைந்து வாக்களித்த கோலம்

              இலங்கை பாராளுமன்றில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவானார் .இவரது வெற்றி முதலே தீர்மானிக்க பட்ட ஒன்று என்பதை இன்றைய நிகழ்வு எடுத்து காட்டியுள்ளது .

              மொட்டு கட்சியின் ஆதரவுடன் ஜனாதிபதியான ரணில் தனது அரசியல் விளையாட்டை எதிர்காலத்தில் தொடருவாரா என்கின்ற ஐயம் எழுந்துள்ளது .

              தான் நாட்டின் ஜனாதிபதியான நிலையில் தனது பாராளுமன்ற பேச்சை சுருக்கி கொண்ட ரணில் தந்திர நகர்வு ஆரம்பிக்க பட்டு விட்டதை எடுத்து காட்டியது .

              ரணிலை ஆதரிக்க தமிழ்தேசிய கூட்டமைப்பு மறுத்துள்ளது என்கின்ற வாதம் போலியானது என வெளிப்படுத்த பட்டது .

              தமிழ் தேசிய கூட்டமைப்பை சஜித் மற்றும் அழகப்பெரும ஆகியோர் சந்தித்து உரையாடினர்.

              அதில் சஜித் பக்கம் வாக்கு அளிக்க உள்ளவர்களும் அதேபோல மொட்டு கட்சியின் பக்கம் உள்ள உறுப்பினர்கள் விபரமும் வெளியானது.

              ஊடக நபர் ஒருவர் பிடித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் காட்சி படம் ஒன்று சமுக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாற்றம் பெற்றுள்ளது.

              அதனை இந்த காட்சியில் நீங்கள் கண்டு கொள்ள முடியும் .தள்ளாடும் சம்பந்தர் அரசியல் சித்து விளையாட்டு மக்களே இதில் தெரிகிறது அல்லவா .

              இருவருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரிந்து வாக்களித்து வாக்கு சிதறலை மேற்கொண்டுள்ளது படத்தை உற்று கவனியுங்கள் .

                Posted in இலங்கை செய்திகள்

                ரணில் ஜனாதிபதியானார் பாராளுமன்றில் வாக்கெடுப்பில் வெற்றி

                ரணில் ஜனாதிபதியானார் பாராளுமன்றில் வாக்கெடுப்பில் வெற்றி

                இலங்கை பாரளுமன்றின் இடம்பெற்ற தேர்தல் மூலம் ரணில்விக்கிரமசிங்க
                134 அதிக வாக்குகளை பெற்று இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் .

                டலஸ் அழக பெருமா 82 மற்றும் அனுரகுமார திசாநாயக்க 3 வாக்குகளை பெற்றுள்ளனர்

                ரணில் போட்டு கொடுத்த திட்டமிடல்கள் அடிப்படையில் இந்த பொம்மை வாக்கெடுப்பு இடம்பெற்று நரி ரணில்விக்கிரமசிங்க வெற்றி பெற்றுள்ளார் .

                திட்டமிட்ட படியே மகிந்தா கட்சியின் மகத்தான ஆதரவுடன் ரணில் விக்கிரசிங்க மகத்தான வெற்றியை பெற்றுள்ளார்.

                அளிக்கப்படாதா வாக்குகளாக இரண்டு உள்ளன -மேலும் நிராகரிக்க பட்ட வாக்குகளாக நான்கு பதிவாகியுள்ளன .

                பாராளுமன்றில் ஜனாதிபதி தெரிவு நாடகம் முடிவுக்கு வந்தது .

                கோட்டாவை துரத்தி ஜனாதிபதியாகும் ரணில் ஆட்டத்தை ஆரம்பித்தார் கணிப்பு சரியானது

                  Posted in இலங்கை செய்திகள்

                  வாக்கெடுப்பை சுற்றி மகிந்தா குழு டக்கிளஸ் பேச்சு

                  வாக்கெடுப்பை சுற்றி மகிந்தா குழு டக்கிளஸ் பேச்சு

                  பாரளுமன்றில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்திடும் வாக்கெடுப்பு இடம்பெற்ற வண்ணம் உள்ளது.


                  இவ்வேளை மகிந்த அணியினர் வாக்கு பெட்டி அருகில் மிரட்டும் தொனியில் உள்ள காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது.

                  மகிந்த ராஜபக்ச வாக்கு என்கின்றவர்களை தமக்கு சாதகமாக செயல்படுமாறு வேண்டுகின்ற சைகைகள் வழங்குவதை போன்ற தோற்றம் இந்த காட்சிகள் ஊடக காண முடிகிறது.

                  மகிந்த அணியினர் தமக்கு அதிக வெற்றிவாய்ப்பு என்கின்ற விதத்திலும் தமது ஆதரவு நபரே ஜனாதிபதியாவர் என்கின்ற நிலையிலும் உள்ளனர்.

                  இன்னும் சற்று நேரத்தில் முடிவுகள் வெளியாகும் என எதிர் பார்க்க படுகிறது.

                    Posted in இலங்கை செய்திகள்

                    நான்கு வாக்கெடுப்புக்கள் செல்லுபடியற்றதாக மாற்றம்

                    நான்கு வாக்கெடுப்புக்கள் செல்லுபடியற்றதாக மாற்றம்

                    இலங்கை பாரளுமன்றில் இடம்பெற்று வரும் புதிய ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பில்
                    இதுவரை மூன்று வாக்குகள் செல்லுபடியற்றதாக இடம்பெற்றுள்ளது.

                    இந்த செல்லுபடியற்ற வாக்குகளை யார் பதிவு செய்தார்கள் என்பது தெரியவில்லை ,தொடர்ந்து வாக்குகள் எண்ண பட்டு கொண்டுள்ளன
                    பாராளுமன்றம் தற்போது பரபரப்பில் உறைந்துள்ளது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      இரு காயேந்திரனும் வாக்கெடுப்பை புறக்கணிப்பு

                      இரு காயேந்திரனும் வாக்கெடுப்பை புறக்கணிப்பு

                      இலங்கையில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்திடும் வாக்கெடுப்பு பாராளுமன்றில் இடம்பெற்ற வண்னம் உள்ளது .

                      இவ்வேளை இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது செல்வராசா காயே ந்திரன் மற்றும் காயேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் புறக்கணித்துள்ளனர்

                      இவ்வாறு இவர்கள் புறக்கணிப்பு செய்திடும் நிலைக்கு சென்றதன் பின்புலத்தில் பணபெட்டிகள் கைமாறி இருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

                        Posted in இலங்கை செய்திகள்

                        இலங்கை பாராளுமன்றை சுற்றி கடும் பாதுகாப்பு

                        இலங்கை பாராளுமன்றை சுற்றி கடும் பாதுகாப்பு

                        இலங்கை பாராளுமன்றில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்திடும் வாக்கெடுப்பு இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

                        யார் இலங்கையின் புதிய ஜனாதிபதி என்ற பர பரப்பான நிலை தோற்றம் பெற்று வரும் நிலையில் முன்னால் ஜனாதிபதி மகிந் ராஜபக்ச பதட்டத்தில் உள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன.

                        இவ்வேளை பாரளுமன்றை சுற்றி இராணுவம் பொலிசார் குவிக்க பட்டுள்ளனர் ,

                        தமது ஆதரவு ஜனாதிபதியை தெரிவு செய்வதில் மகிந்த அணியினர் தீவிரமாக உள்ளனர்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          டலஸ் இலங்கையின் ஜனாதிபதி ஆட்சி நிலைக்குமா ரணில் விடுவாரா

                          டலஸ் இலங்கையின் ஜனாதிபதி ஆட்சி நிலைக்குமா ரணில் விடுவாரா

                          இலங்கை ;இன்று ஆரம்பமாகியது ஒரு ஒருமித்த பயணத்தின் தொடங்கமாகும் எனவும், பாராளுமன்னத்திற்கு அப்பால் மக்களின் வாழ்வை கட்டியெழுப்பும்

                          போராட்டத்திற்காக தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

                          இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட தீர்மானித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இத்தருணத்தில் நாட்டு மக்களுக்காக வரலாற்று

                          முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவித்த அவர்,இந்நாட்டின் அரசியலுக்கு உண்மையான புதிய கலாச்சாரத்தை அறிமுகப்படுத்த தன்னை அர்ப்பணிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

                          டலஸ் இலங்கையின் ஜனாதிபதி ஆட்சி நிலைக்குமா ரணில் விடுவாரா

                          இந்நாட்டு மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை வென்றெடுத்த வன்னம் பத்தொன்பதாவது அரசியலமைப்பு திருத்தத்தை மீண்டும்

                          அமுல்படுத்துவதற்கும், நாட்டை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் முன்னோக்கி கொண்டு செல்வதற்காக அர்ப்பணிப்புடன்

                          இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,இந்நாட்டு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதே ஒரே

                          நோக்கம் எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அதற்காக தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

                          இடைக்கால ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழியப்பட்ட டலஸ் அழகப்பெரும மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர்

                          கலந்து கொண்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (19) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

                          இடைக்கால ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நாளை இடம் பெறுகிறது என்பதோடு,


                          இதில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்பன தமது ஆதரவை நாடாளுமன்ற உறுப்பினர்
                          டலஸ் அழகப்பெருமவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

                            Posted in உலக செய்திகள்

                            அமெரிக்கா இராணுவ தளபதி சிரியாவுக்கு திடீர் பயணம்

                            அமெரிக்கா இராணுவ தளபதி சிரியாவுக்கு திடீர் பயணம்

                            அமெரிக்காவின் Lieutenant General Michael Kurilla முக்கிய தளபதி ஒருவர் சிரியாவுக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் .

                            இவரது இந்த பயணம் அதி முக்கியதத்துவம் வாய்ந்த ஒன்றாக கருத படுகிறது.

                            அமெரிக்கா இராணுவ முகாமில் வெடிப்பு சத்தங்கள்

                            அமெரிக்கா இராணுவ தொடரணி மீது தாக்குதல்

                            சிரியா மீது அமெரிக்கா மற்றும் அதன் நேச படைகள் தாக்குதலை நடத்தி வருகின்ற பொழுதும் ரசியாவின் கடும் எதிர்ப்பினால் அது கை கூடவில்லை .

                            இவ்வாறான நிலையில் அமெரிக்கா இராணுவ தளபதி திடீர் பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிது.

                            அமெரிக்கா இராணுவத்தினர் ரசியாவினால் கைது

                            போலந்தில் முகாம் அமைக்கும் அமெரிக்கா இராணுவம்

                            அமெரிக்கா இராணுவ படையணியின் முக்கிய தளபதியின் இந்த பயணத்தின் பின்னர் முக்கிய தாக்குதல் நகர்வுகள் உள்ளடங்கி இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

                              Posted in இலங்கை செய்திகள்

                              ஜனாதிபதி போட்டி சஜித் பிரேமதாசா திடீர் விலகல்

                              ஜனாதிபதி போட்டி சஜித் பிரேமதாசா திடீர் விலகல்

                              இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச விலகுவதாக அறிவித்துள்ளார் .

                              புதிய ஜனாதிபதியை தெருவு செய்வதற்கான வேட்பு மனு தாக்கல்

                              பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.


                              சஜித் பிரேமதாசாவின் இந்த திடீர் விலகல் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                              ஜனாதிபதி தெரிவு தொடர்பில் மனோ கணேசன் அறிவிப்பு

                              கட்சிகளுக்குள் இடம்பெற்ற பேரம் பேச்சுக்களின் பின்னர் இந்த முடிவு எட்ட பட்டுள்ளதாக தெரியவருகிறது.

                                Posted in இலங்கை செய்திகள்

                                கோத்தாவுக்கு எதிராக அணிதிரண்ட மலேசியத் தமிழர்கள்நீதியின் முன் நிறுத்து

                                கோத்தாவுக்கு எதிராக அணிதிரண்ட மலேசியத் தமிழர்கள்நீதியின் முன் நிறுத்து

                                சிங்கப்பூரில் தற்போது நிலைகொண்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதியும் தமிழனப்படுகொலையாளியுமான கோத்தபாய இராஜபக்சவுக்கு எதிராக மலேசியத் தமிழர்கள் அணிதிரண்டு குரல் எழுப்பியுள்ளனர்.

                                தலைநகர் கோலாலபம்பூரில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தின் முன் பினாங்கு மாநில் துணை முதல்வரும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைஞர் குழுப் பிரதிநிதியுமாகிய பேரா.இராமசாமி அவர்களது தலைமையில்

                                அணிதிரண்ட தமிழர்கள், இனப்படுகொலையினை சிங்கப்பூர் வெளியேற்றி சர்வதேச நீதிமன்றிடம் கையளிக்க வேண்டும் என்ற முழக்கத்தினை எழுப்பினர்.

                                மலேசியத் தமிழர் அரசியல் பிரதிநிதகளான சதீஸ் முனியாண்டி, டேவிட் மர்செல் உட்பட பல தமிழர் அமைப்பினர் இதில் பங்கெடுத்திருந்தனர்.

                                சிங்கப்பூர் தூதரைச் சந்தித்து கோரிக்கை மனுவினை கையளித்து, தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சிங்கப்பூரில் இருந்து

                                வெளியேற்றப்பட்டு சர்வதேச நீதிமன்றிடம் இனப்படுகொலையாளியான கோத்தபாயாவை கையளிக்க வேண்டும் என்ற கோரிக்கையிகை முன்வைத்தனர்.

                                கோத்தாவுக்கு எதிராக அணிதிரண்ட மலேசியத் தமிழர்கள்நீதியின் முன் நிறுத்து
                                கோத்தாவுக்கு எதிராக அணிதிரண்ட மலேசியத் தமிழர்கள்நீதியின் முன் நிறுத்து


                                சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் கோத்தபாய இராஜபக்சவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.

                                போர் குற்றங்களில் ஈடுபட்ட சிறிலங்காவின் அரசியல், இராணுவ தலைவர்களுக்கு எதிராக ஐ.நா உறுப்பு நாடுகள்,


                                சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைச்சபையின்


                                ஆணையாளர் மிச்சல் பசேலே அம்மையார் அவர்கள் முன்னர் அழைப்பொன்றினை விடுத்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

                                https://youtu.be/Q8738uDw2BM
                                  Posted in இலங்கை செய்திகள்

                                  இலங்கையில் பாடசாலைகளிற்கு 20 தம திகதிவரை விடுமுறை

                                  இலங்கையில் பாடசாலைகளிற்கு 20 தம திகதிவரை விடுமுறை

                                  இலங்கை கொழும்பு ; இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்ட பாடு காரணமாக பாடசலைகள் யாவும் எதிர்வரும் 20தம திகதி வரை விடுமுறை விடுக்க பட்டுள்ளது .

                                  அதன் பின்னர் வழமை போன்று அணைத்து பாடசாலைகளும் இயங்கும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.


                                  இலங்கையில் பாடசாலைகளிற்கு செல்லும் மாணவர்கள் போக்குவரத்து பாதிக்க பட்டமையினாலும் ஆசிரியர்களுக்கு


                                  ஊதியம் வழங்கப்படுவதில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக இந்த விடுமுறை விக்க பட்டுள்ளதாக தெரியவருகிறது.

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    ஜனாதிபதி தெரிவு தொடர்பில் நாளை மனோ கணேசன்

                                    ஜனாதிபதி தெரிவு தொடர்பில் நாளை மனோ கணேசன்

                                    தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமைக்குழு ஜனாதிபதி தெரிவு தொடர்பில் நாளை முடிவு
                                    – தமுகூ தலைவர் மனோ கணேசன்

                                    தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழு நாளை செவ்வாய்கிழமை 19ம் திகதி
                                    மாலை 6 மணிக்கு கொழும்பு நுகேகொடை ஏகநாயக அவனியுவில் (#15/1 Ekanayake Avenue, Nugegoda)
                                    அமைந்துள்ள கட்சி செயலகத்தில் கூடி, 20ம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட
                                    வேட்பு மனுக்கள் சமர்பித்துள்ள அனைத்து வேட்பாளர்கள் தொடர்பிலும், கலந்துரையாடி முடிவெடுக்கும் என தமிழ்
                                    முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி ஊடகங்களுக்கு தெரிவத்துள்ளார்.