Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
வாலிபர் சுட்டு கொலை – மனித உரிமை ஆணையகம் பொலிசாருக்கு அழைப்பு
ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு பல சிரேஷ்ட பொலிஸ்
அதிகாரிகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைத்துள்ளது.
இதன்படி, பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி
பொலிஸ்மா அதிபர், கேகாலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், கேகாலை மற்றும் ரம்புக்கனை பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாளை (22) காலை 11 மணிக்கு இலங்கை மனித உரிமை
ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மரத்தின் மேல் ஏறி வாலிபர் போராட்டம் –
மரத்தின் மேல் ஏறி வாலிபர் போராட்டம் –
இலங்கையில் ஆளும் கோட்டா அரசு உடனடியாக பதவி விலக கோரியும்
,ரம்புகளையில் வாலிபர் சுட்டு கொலை செய்ய பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு
தெரிவித்தும் வாலிபர் ஒருவர் மரம் ஒன்றின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்
மக்களின் தொடர் போராட்டங்களுக்கு செவி சாய்க்காது கோட்டா தனது ஆட்சியை
முன்னெடுத்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
இலங்கை வந்தடைந்த இந்தியா எண்ணெய் கப்பல்
இலங்கை வந்தடைந்த இந்தியா எண்ணெய் கப்பல்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அதற்கு
கடனடிப்படையில் உதவிட 40 மெட்ரிக் தொன்
எரிபொருளுடன் இந்திய எண்ணெய் கப்பல் ஒன்று இலங்கை வந்தடைந்துள்ளது
இந்திய சமீப நாட்களாக தொடராக இலங்கைக்கு எரிபொருளை அனுப்பிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
கிணறுகளில் மிதக்கும் மனித சடலங்கள்
கிணறுகளில் மிதக்கும் மனித சடலங்கள்
இலங்கை மட்டு கொக்குவில் பகுதியில் உள்ள கிணறு ஒன்றுக்குள் இருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்க பட்டுள்ளது
இவர் கொலை செய்ய பட்டு குறித்த குணற்றுக்குள் வீச பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது
சடலம் மீட்க பட்டத்தை அடுத்து தொடர் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
கோட்டா ஆட்சியில் நீர் நிலைகளில் தொடராக மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
மனோ தலைமையில் தமுகூ தூதுக்குழு – அமெரிக்க தூதர் சந்திப்பு
போராளிகள் மீதான வன்முறை பற்றி தெரிவிப்பு: மலையக அபிலாசை ஆவணம் கையளிப்பு
மனோ தலைமையில் தமுகூ தூதுக்குழு – அமெரிக்க தூதர் சந்திப்பு
இலங்கையில் இன்று போராடும் போராட்டக்காரர்கள் மீது வன்முறையை அவிழ்த்து விட வேண்டாம் என்ற நிபந்தனையை, சர்வதேச நாணய நிதி (ஐஎம்எப்) இலங்கைக்கு உதவும் போது, இலங்கை அரசாங்கத்தின் மீது விதியுங்கள். இலங்கையில் வாழும்
இந்திய வம்சாவளி மலையக தமிழரின் இருப்பை பதிவு செய்துக்கொண்டு நமது மக்களை பற்றிய அமெரிக்காவின் அக்கறையை இலங்கை தொடர்பான உங்கள்
கொள்கை நிலைப்பாடுகளின் போது வெளிப்படுத்துங்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி – தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம் தெரிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு இன்று அமெரிக்க தூதுவரை சந்தித்து உரையாடியது. கூட்டணி சார்பில் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்
இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். அமெரிக்க தரப்பில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங். அரசியல் துறை அதிகாரி ரூபி வுட்சைட் ஆகியோர்
கலந்துக்கொண்டனர். மனோ எம்பியின் செயலாளர் பிரியாணி குணரட்னவும் உதவியாளராக கலந்துக்கொண்டார்.
இது தொடர்பில் மனோ எம்பி தனது டுவீட்டர் தளத்தில்,
“ஐஎம்எப் இலங்கைக்கு உதவ நினைக்கிறது. நன்றி. ஆனால், அதை ஜனநாயக நிபந்தனையுடன் செய்க. போராளிகள் மீது வன்முறை கூடாது.
காலிமுகம் உட்பட நமது போராளிகள் உலகில் மிக கட்டுப்பாடான போராளிகள். அமெரிக்க தூதர் ஜூலி சங்கிடம், ரம்புக்கன நிகழ்வுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்
கூறினேன். இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் அரசியல் சமூக பொருளாதார அபிலாசைகளுக்கு இலங்கை பரப்புக்கு உள்ளே தீர்வுகள் வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த சந்திப்பின் போது, மலையக தமிழரின் அரசியல் அபிலாஷை ஆவணத்தை அமெரிக்க தூதுவரிடம் கூட்டணி தலைவர் மனோ கணேசன் கையளித்தார். இலங்கையில் தென்னிலங்கையில் மத்திய, மேல், சப்ரகமுவ, ஊவா,
தென் மாகாணங்களில் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களின் அரசியல், சமூக, பொருளாதார வாழ்நிலைமைகள் பற்றி அமெரிக்க தூதுவர் கேட்டு தெரிந்துக்கொண்டார்.
தான் கொரிய வம்சாவளி அமெரிக்கர் என்பதில் பெருமை அடைவதாகவும், இந்நிலையில் தமது நாட்டின் பன்மைத்தன்மை தமக்கு பலம் சேர்த்துள்ளதாகவும்
அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். இதுவே இலங்கையும் எதிர்பார்க்கும் எதிர்காலம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்கள் அமெரிக்க தூதுவரிடம் கூறினர்.
மத்திய மலைநாட்டுக்கு விஜயம் செய்து நேரடியாக விடயங்களை அறியுங்கள் என கூட்டணியின் பிரதிதலைவர் இராதாகிருஷ்ணன் விடுத்த அழைப்பையும் அமெரிக்க தூதுவர் ஏற்றுக்கொண்டார்.
இது தொடர்பில் அமெரிக்க தூதர் ஜூலி சங் தனது டுவீட்டர் தளத்தில்,
“மலையக தமிழர் உட்பட அநேகமான (இலங்கை) சமூகங்கள்,
எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு அவசியமாகின்றது. நிலையான பொருளாதார
மீட்சிக்கு இலங்கை மக்களின் தலைவர்கள் அவசர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். (இவைபற்றி) @ManoGanesan
மனோ கணேசன் அவர்களுடன் உரையாடினேன்.” என்று கூறியுள்ளார்.
சிறுமியை கற்பழித்து வீடியோ பிடித்து மிரட்டி பணம் கேட்ட நபர் கைது
சிறுமியை கற்பழித்து வீடியோ பிடித்து மிரட்டி பணம் கேட்ட நபர் கைது
13 வயது சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்தி வீடியோ ஒன்றினை காட்டி 10 இலட்சம் ரூபா கப்பம் கேட்டு நீண்டகாலமாக மிரட்டி வந்த இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும்
மே மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவில் உள்ள சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த 13 வயதான தனது மகளை 3 சந்தேக நபர்கள் வீடியோ காணொளி ஒன்றினை
முன்வைத்து கப்பம் கேட்பதாக கடந்த 2022.01.05 அன்று சிறுமியின் தாயாரினால் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.
இதற்கமைய பொலிஸார் தலைமறைவாக இருந்த 3 சந்தேக நபர்களையும் அடையாளம் கண்டு, தேடுதல் மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை
(18) அன்று கப்பம் கோரிய சந்தேக நபரான மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியை சேர்ந்த 33 வயதுடையவரை கல்முனை பகுதி உணவகமொன்றில் வைத்து கைது செய்தனர்.
அதன் பின்னர் கைதானவரின் தகவலுக்கமைய இச்சம்பவத்திற்கு உடந்தையான செயற்பட்ட மற்றுமொரு சந்தேக நபரான சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த 31
வயதுடையவர் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இரு சந்தேக நபர்களையும் பொலிஸ் விசேட பிரிவின் தகவலுக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில்
துரிதமாக செயற்பட்ட கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் தலைமை குழுவினர் கைது செய்திருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடமும் பொலிஸார் விசாரணை
மேற்கொண்ட பின்னர் நேற்று (19) கல்முனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, சந்தேகநபர்களை எதிர்வரும் மே 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதுடன் பிரதான சந்தேக நபரான சாய்ந்தமருது
பகுதியை சேர்ந்த மற்றுமொரு சந்தேக நபர் டுபாய் நாட்டிற்கு தப்பி சென்ற நிலையில் அவரை கைது செய்ய பிடியாணை
உத்தரவினை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஈழத்தமிழ் மக்களுக்கான நேரடி உதவிப் பொறிமுறை ! தமிழக முதலமைச்சருக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் கடிதம் !!
ஈழத்தமிழ் மக்களுக்கான நேரடி உதவிப் பொறிமுறை ! தமிழக முதலமைச்சருக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் கடிதம் !!
இலங்கைத்தீவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்வாதாரப் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ள ஈழத்தமிழ் மக்களுக்கு நேரடியாக உதவுவதற்கு,
அனைத்துலக சமூகத்தின் பங்குபற்றலுடன் ஓர் பொறிமுறையொன்றினை உருவாக்குமாறு தமிழக அரசினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கோரியுள்ளார்.
இது தொடர்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கடந்த ஏப்ரல் 15ம் தேதியன்று கடிதமொன்றினை அனுப்பியிருந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன்,
சிங்கள அரசாங்கங்கள் எவையும் தமிழ்மக்களை பாரபட்டசமின்றி நீதியாக நடத்தப்
போவதில்லை. இந் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகளிலும் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுவார்கள். இந்நிலையில் நேரடி உதவிப்பொறிமுறை
உருவாகும் நிலை தோன்றின் புலம்பெயர் தமிழ் மக்கள், தமிழக மக்கள், உலகத் தமிழ் மக்கள் இணைந்து ஈழத்தமிழ் மக்களை இன்றைய நெருக்கடியில் இருந்து காப்பாற்ற முடியும் என தெரிவித்துள்ளார்.
இலங்கைத்தீவில் தமிழ்மக்கள் மீதான சிங்கள அரசாங்கங்களின் இனவழிப்புப்போரும், பெரும் இராணுவச் செலவீனங்களும், தவறான கொள்கைளும், ஊழல் நிறைந்த நிர்வாகமும், கொரோனா உலகப்பெருந்தொற்று உருவாக்கிய தாக்கங்களும்
இணைந்தே இப்பெரும் பொருளாதார நெருக்கடியினை உருவாக்கியுள்ளதெனக் குறிப்பிட்டுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், ஈழத்தமிழர் தேசம் சிங்கள பேரினவாத அரசால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலையில், இப்பொருhளார நெருக்கடிக்,
இனவழிப்புப்போரால் பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு இன்றைய நெருக்கடி இரட்டைச்சுமையாய் அமைந்துள்ளளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஈழத்தமிழ் மக்களுக்கான ஒரு நேரடி உதவிப்பொறிமுறையினை உருவாக்கும் முயற்சிக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமை தாங்குமாறு கோரியிருந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன், இப்பொறிமுறையினை உருவாக்கும்
முயிற்சியினைக் காலதாமதம் இன்றி ஆரம்பிப்பது ஈழத்தமிழ்மக்களுக்கு பெரும் நம்பிக்கையைத் தரும் எனத் nதிவித்திருந்ததோடு, தமிழ்நாடு அரசின் சார்பில்
ஈழத்தமிழர் தேசத்தின் உண்மை நிலையையைக் கண்டறிவதற்கான குழு ஒன்றினை
அங்கு உடன் அனுப்பி வைப்பதும் இம் முயற்சிக்கு வலுச் சேர்க்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நேரடி உதவிப் பொறிமுறை ஊடாக ஈழத்தமிழ் மக்களுக்கு அனுப்பி வைக்கும்
முயற்சியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது பங்களிப்பை வழங்கும் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு எதிராக இராணுவம் செயல்படவில்லை – இராணுவ தளபதி
மக்களுக்கு எதிராக இராணுவம் செயல்படவில்லை – இராணுவ தளபதி
இலங்கையில் அரசுக்கு எதிராக நடத்த பட்டு வரும் போராட்டங்களில் இராணுவம்
மக்களுக்கு எதிராக செயல் படவில்லை என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
நாம் மேலும் மக்களுக்கு ஆதரவாக செயல் பட்டு வருவதாக சொல்வதெல்லாம் உண்மை பாணியில் தெரிவித்துள்ளார் ,
ஊந்துருளியில் வருகை தந்த இராணுவத்தினர் மக்களை மிரட்டி சென்றமை இங்கே குறிப்பிட தக்கது
தொடரும் மின்வெட்டு – அவதியில் மக்கள்
தொடரும் மின்வெட்டு – அவதியில் மக்கள்
இலங்கையில் ,இன்றும் ,நாளையும் மின்வெட்டு மேலும் மூன்று மணித்தியாலங்கள்
மேலாக முடக்க படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது
இதனால் தொழில் துறைகள் பாதிக்க பட்டுள்ளதுடன், உள்ளூர் உற்பத்தி சேவைகள்
பாதிக்க பட்டுள்ளது ,இதனால் பொருளாதாரம் மேலும் கீழ் நிலைக்கு சென்ற வண்ணம் உள்ளதுடன் மக்கள் கொதிப்பில்
உறைந்துள்ளனர்
எரி பொருள் விலை மேலும் அதிகரிப்பு – கொதிப்பில் மக்கள்
எரி பொருள் விலை மேலும் அதிகரிப்பு – கொதிப்பில் மக்கள்
இலங்கையில ஆளும் கோட்டா அரசினால் மீளவும் தற்போது
எரிபொருள்விலை அதிகரிக்க பட்டுள்ளது
இந்த எரிபொருள் விலை ஏற்றத்தின் காரணமாக மக்கள் கொதிப்படைந்து போராடி வருகின்றனர்
இந்த போராட்டங்களுக்கு மதிப்பளிக்காது கோட்டா அரசு பதவி விலக மறுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது
முகக்கவசம் தேவையில்லை – வெளியான அறிவிப்பு
முகக்கவசம் தேவையில்லை – வெளியான அறிவிப்பு
இலங்கையில் பரவி வந்த கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து முகக்கவசம்
தேவை இல்லை என்ற அறிவிப்பு வெளியானது
இந்த நிலையில் தற்பொழுது போக்குவரத்து மற்றும் உள்ளக செயல்பாடுகள் தவிர்ந்த
இடங்களில் இவை அவசியம் இல்லை என தெரிவிக்க பட்டுள்ளது
பதவி விலக மறுக்கும் கோட்டா – தொடரும் போராட்டம்
பதவி விலக மறுக்கும் கோட்டா – தொடரும் போராட்டம்
இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோட்டா பிரதமர் மகிந்தா உள்ளிட்டவர்கள் பதவி
விலக கோரி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்
இந்த மக்களின் கோரிக்கையை ஏற்று ஆட்சியாளர்கள் பதவி திறக்க மறுத்து வருவதால் போராட்டம் அதி உச்சம் பெற்றுள்ளது
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காது செல்லும் ராஜபக்ஸ்ச குடும்பங்களுக்கு எதிராக
மக்கள் மேலும் கொதிப்படைந்து போராட்டம் உக்கிரம் பெற்று வருகிறது
சிகரெட் தர மறுத்த கடை உரிமையாளரை அடித்து கொன்ற கும்பல்
சிகரெட் தர மறுத்த கடை உரிமையாளரை அடித்து கொன்ற கும்பல்
இலங்கை முகுனுவடவன, மஹகம பகுதியில் உள்ள கடை ஒன்றுக்கு வருகை தந்த
நால்வர் அடங்கிய குழுவினர் சிகரெட் கேட்டுள்ளனர்
அவர் இல்லை என தெரிவித்ததை அடுத்து அவரை இளுத்து வைத்து அடித்து கொன்றுள்ளனர்
கொலையை செய்த பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர் ,இது குறித்த
விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
உண்ணா விரதம் ஆரம்பித்த கிரிக்கட் வீரர்
உண்ணா விரதம் ஆரம்பித்த கிரிக்கட் வீரர்
இலங்கையில் முன்னாள் கிரிக்கட் வீரர் தம்மிக்க பிரசாத் தேவாலய உணா விரதம் ஆரம்பித்துள்ளார் .
குண்டு தாக்குதல், மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பாதிக்க பட்ட மக்களுக்கு,தீர்வு வழங்க கோரி உண்ணாவிரத போராட்டத்த்தில் குதித்துள்ளார்.
யாழில் மின்சாரம் தாக்கி பெண்மணி மரணம்
யாழில் மின்சாரம் தாக்கி பெண்மணி மரணம்
இலங்கை யாழ்ப்பாணம் கைதடி வடக்கு பகுதியில் ஐம்பத்தி ஒன்பது வயது பெண்மணி
ஒருவர் மின்சாரம் தாக்கி மரணமாகியுள்ளார்
தொலைக் காட்ச்சி பார்க்க முனைந்த பொழுது இவ்விதம் மின்சாரம் தாக்கி
பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
கோட்டாவுக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்ட போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு
கோட்டாவுக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்ட போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு
இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோத்தபாயாவுக்கு எதிராக காலிமுக திடலில்
போராட்டத்தில் கலந்து கொண்ட இரு போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட
நடவடிக்கை மேற்கொள்ள படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இராணுவ,காவல்துறையை அடக்கி எச்சரிக்கும் முகமான மிரட்டல் இதுவாக பார்க்க படுகிறது
புத்தாண்டு தினத்தில் 7 பேர் மரணம்- 118 பேர் காயம்
புத்தாண்டு தினத்தில் 7 பேர் மரணம்- 118 பேர் காயம்
இலங்கையில் நடந்து முடிந்த புத்தாண்டு தின கொண்ட்டாட்டத்தில் சிக்கி
ஏழுபேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 118 பேர் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்
போலீசார் பாதுகாப்பு பல படுத்த பட்ட வேளையிலும் இந்த விபரீதங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது
இலங்கை பெண் வெளி நாட்டில் திடீர் மரணம்
இலங்கை பெண் வெளி நாட்டில் திடீர் மரணம்
இலங்கை மட்டக்களப்பை சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவர் ஓமான் நாட்டில்
பலியாகியுள்ளார்
அங்கு இவருக்கு ஏற்பட்ட மர்ம நோயினால் பீடிக்க பட்ட நிலையில்
மரணமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது
சர்வதேச நான்நய நித்தியதுடன் இலக்கை பேச்சு
சர்வதேச நான்நய நித்தியதுடன் இலக்கை பேச்சு
இலங்கை பொருளாதாரா நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில்
சர்வதேச நாணய நித்தியதுடன் இலங்கை பேச்சில் ஈடுபடுகிறது
நான்கு பில்லியன் டொலர் தேவைப்பாடு உள்ள நிலையில் இந்த பேச்சு இடம்பெற
உள்ளதாக புதிய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்
சந்திரிகாவுடன் ,சஜித் முக்கிய பேச்சு – புதிய ஆடு களம் திறப்பு
சந்திரிகாவுடன் ,சஜித் முக்கிய பேச்சு – புதிய ஆடு களம் திறப்பு
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியை அடுத்து தற்போது ஆளும்
அரசுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர்
செயல் இழந்த பொருளாதரத்தை மீள கட்டி எழுப்பி அதற்கு தீர்வு காணும் நோக்கில் பேச்சுவராத்தையில் ஈடுபடடார் ,
இதில் சஜித்,சுமந்திரன்,பதியுதீன் உள்ளிட்ட தமிழ் முஸ்லீம் காட்சிகள் பிரதானிகளும் கலந்து கொண்டனர்








