குளவி கொட்டுக்கு இலக்காகி 30 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

குளவி கொட்டுக்கு இலக்காகி 30 பேர் காயம்

குளவி கொட்டுக்கு இலக்காகி 30 பேர் காயம்

வவுனியா போகஸ்வெவ பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி பயின்ற மாணவர்கள் திடீர் குளவி கொட்டுக்கு ,இலக்கான நிலையில் வவுனியா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டுள்ளனர் .

பாடசாலை வளாகத்தில் மரமொன்றில் குளவி கூடு, ஒன்று கலைந்ததில் ,இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது எனப்படுகிறது .

ஆபத்தான நிலையில் உள்ள சிலர் பதவியா மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .


சமீப காலங்களாக இவ்விதமான குளவி கொட்டுக்கு மக்கள் ,உள்ளாகி வருகின்றமை குறிப்பிட தக்கது .

தேர்தலில் நாங்களே வெல்வோம் மகிந்தா திமிர் பேச்சு
Posted in இலங்கை செய்திகள்

தேர்தலில் நாங்களே வெல்வோம் மகிந்தா திமிர் பேச்சு

தேர்தலில் நாங்களே வெல்வோம் மகிந்தா திமிர் பேச்சு

இலங்கையில் மீளவும் தேர்தல் இடம்பெற்றால் அதில் நாமே மகத்தான வெற்றியை பெறுவோம் என ,மக்களினால் துரத்தியடிக்க பட்ட, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா தெரிவித்துள்ளார் .

கோட்டபாய மற்றும் ,மகிந்தா ராஜபக்ச சகோதரர்கள், உடனடியாக பதவி விலக வேண்டும் ,என கோரி மக்கள், வரலாற்று போரை நடத்தி விரட்டியடித்தனர் .

அதன் பின்னர் தமது அரசியல் எதிர்காலம் தொலைந்து விட்டது என குமுறியபடி நடைபயிலும் ,ராஜபக்ச குடும்பம் ,மீளவும் தாமே தேர்தலில் வெல்வோம் என திமிருடன் பேசி வருவது மக்கள் மத்தியில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது .

மகிந்த ராஜபக்சாவை சீனா தூதுவர் மற்றும், சுப்பிரமணிய சுவாமி ஆகியோர், சந்தித்த பின்னர் ,மகிந்த ராஜபக்ச தேர்தலில் வெல்வோம் என பேசியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .

மின்பதிவு இயந்திரங்களை கைக்கிங் செய்து, அதன் ஊடாக வாக்குகளை பெற்று வெற்றியாளர்கள் தாமே என, காண்பிக்க மகிந்த ராஜபக்ச , தரப்பு முனைய கூடும் என அஞ்ச படுகிறது .

தனிமையில் வசித்த பெண் அடித்து கொலை
Posted in இலங்கை செய்திகள்

தனிமையில் வசித்த பெண் அடித்து கொலை

தனிமையில் வசித்த பெண் அடித்து கொலை

இலங்கை பேராதனை காவல்துறை பிரிவில் வசித்து வந்த பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

தனிமையில் வசித்து வந்த பெண்ணை காணவில்லை என தேடுதல் நடத்திய பொழுது இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

இவரை அடித்து கொன்றவர்கள் யார் என்பது தொடர்பில் ,காவல்துறையினர் ,விசாரணைகளை நடத்தி வருகின்றனர் .

இலங்கையில் இவ்விதமான கொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

மகிந்தாவுக்கு எதிராக மக்கள் போராட்டம் 10 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

மகிந்தாவுக்கு எதிராக மக்கள் போராட்டம் 10 பேர் கைது

மகிந்தாவுக்கு எதிராக மக்கள் போராட்டம் 10 பேர் கைது

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச நாவலப்பிட்டி பகுதியில் மொட்டு கட்சியின் ஏற்பாட்டில் கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தார் .

இந்த கூடத்தில் கலந்து கொள்ள சென்ற மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் .

இதனால் அங்கு பொலிசார் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது .

தொடர்ந்து மக்கள் மற்றும் பொலிசாருக்கு இடையில் முறுகல் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

பிரிட்டன் பணம் பெரும் வீழ்ச்சி வரலாற்று சாதனை
Posted in இலங்கை செய்திகள்

200 மில்லியன் பணத்தை திருப்பி தாங்க இலங்கையிடம் கெஞ்சும் நாடு

200 மில்லியன் பணத்தை திருப்பி தாங்க இலங்கையிடம் கெஞ்சும் நாடு

இலங்கைக்கு பங்களாதேஸ் 200 மில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக வழங்கியது .

இவ்விதம் வழங்க பட்ட நிதி குறித்த நேரத்திற்கு இலங்கையினால்வழங்க முடியாது போயுள்ளது .

அமெரிக்காவில் இலங்கையின் முக்கிய அதிகாரிகளை ,சந்தித்து இது விடயம் தொடர்பாக பேச பட்டுள்ளது .

இதன் பொழுது 2023 ஆண்டு பங்குனி மாதம் , இந்த நிதி மீள் வழங்க படும் என இலங்கை தெரிவித்துள்ளது .

எனினும் இந்த நிதி குறிப்பிட்ட மாதமும், வழங்க படுமா என்ற ஏக்கத்தில் பங்களாதேஸ் சிக்கியுள்ளது .

இதே போன்ற நிலை கடன் வழங்கிய அனைத்து நாடுகளுக்கும் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

இலங்கை வெள்ளத்தில் 3 பேர் மரணம் 13 902 பேர் பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை வெள்ளத்தில் 3 பேர் மரணம் 13 902 பேர் பாதிப்பு

இலங்கை வெள்ளத்தில் 3 பேர் மரணம் 13 902 பேர் பாதிப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக 3 பேர் பலியாகியும் 13,902 பேர் பாதிக்க பட்டும் உள்ளனர் .

தொடர்ந்து பொழிந்து வரும் மழையால் 11 மாவட்டங்கள் பாதிக்க பட்டுள்ளன .

இந்த வெள்ள பெருக்கு மற்றும் காற்று பலமாக தொடர்வதால் உயிரிழப்புக்கள் மற்றும் சொத்தழிவுகள் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

இலங்கை வெள்ளத்தில் 3 பேர் மரணம் 13 902 பேர் பாதிப்பு
இலங்கை வெள்ளத்தில் 3 பேர் மரணம் 13 902 பேர் பாதிப்பு

இந்திய மீனவர்களை இரும்பு கம்பியால் தாக்கிய இலங்கை மீனவர்கள்
Posted in இலங்கை செய்திகள்

இந்திய மீனவர்களை இரும்பு கம்பியால் தாக்கிய இலங்கை மீனவர்கள்

இந்திய மீனவர்களை இரும்பு கம்பியால் தாக்கிய இலங்கை மீனவர்கள் .

இந்திய கடல் பகுதிக்குள் அத்து மீறி நுழைந்த இலங்கையை சேர்ந்த இருபது மீனவர்கள் ,இந்தியா மீனவர்கள் மீது இரும்பு கம்பிகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர் .

நடுக் கடல் பகுதியில் இடம்பெற்ற இந்த சண்டையில் ,பலமாக பாதிக்க பட்ட நிலையில் ,இந்தியா மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர் .

இலங்கை சிங்கள மீனவர்களினால் மேற்கொள்ள படும், இந்த தாக்குதல்கள் ,நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

சுப்பிரமணிய சுவாமி இலங்கை சென்று வரும் போதெல்லாம் , மீனவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து காணப்படுகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .

இந்தியா கடல் படையால் 5 இலங்கை மீனவர்கள் கன்னியா குமரியில் கைது
Posted in இலங்கை செய்திகள்

இந்தியா கடல் படையால் 5 இலங்கை மீனவர்கள் கன்னியா குமரியில் கைது

இந்தியா கடல் படையால் 5 இலங்கை மீனவர்கள் கன்னியா குமரியில் கைது .

இலங்கை மீனவர்கள் பயணித்த மீன்பிடி இயந்திர படகு ஒன்று கண்ணிய்குமாரி பகுதியில் .கரை ஒதுங்கியது .

குறித்த இலங்கை மீன்பிடி படகை ,இந்திய கடல்படை கிங்க்ஸ் செய்து நீதிமன்றில் யார் ஏற்படுத்தியுள்ளது .

இந்த ஐந்து மீனவர்களுக்கும் 90 மைல் தொலைவில் கரை ஒதுங்கிய நிலையில் கன்டுபிடிக்க பட்டுள்ளது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

அரச கூரைகளில் சூரிய ஒளி மின்சாரம் பொருத்த 100 மில்லியன் இந்தியா கடனுதவி
Posted in இலங்கை செய்திகள்

அரச கூரைகளில் சூரிய ஒளி மின்சாரம் பொருத்த 100 மில்லியன் இந்தியா கடனுதவி

அரச கூரைகளில் சூரிய ஒளி மின்சாரம் பொருத்த 100 மில்லியன் இந்தியா கடனுதவி

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தணிப்பதற்கு ,இலங்கையில் உள்ள அரச கட்டிடங்களின் கூரைகள் மேலே சூரிய ஒளி தகடுகளை பொருத்திட இந்தியா முன் வந்துள்ளது .

இந்த சூரிய ஒளி மின்சார தகடுகளை , அரச கட்டிடங்களின் மேலே பொருத்துவதற்கு நூறு மில்லியன் அமெரிக்கா டொலர் ,அவசர உதவியாக இந்தியாவால் இலங்கைக்கு வழங்க படுகிறது .

தற்கால நெருக்கடியை தணிப்பதற்கு ,உலக நாடுகள் தோறும் ஓடி ,பிச்சை கேட்டு வரும் இலங்கையின் ,எதிர்காலம் எவ்விதம் அமைய போகிறது என்கின்ற பெரும் ,கேள்வி மக்கள் முன்பாக எழுந்துள்ளது .

ஆட்சியாளர்களின் தவறான அணுகுமுறை ,மற்றும் லஞ்சம் ஊழல் காரணமாக ,இலங்கை பிச்சைக்கார நாடாக மாற்றமடைந்துள்ளது .

முகமலையில் கவிழ்ந்த பேரூந்து 44 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

முகமாலையில் கவிழ்ந்த பேரூந்து 44 பேர் காயம்

முகமாலையில் கவிழ்ந்த பேரூந்து 44 பேர் காயம்

யாழ்ப்பாணம் கண்டி வீதியில் பயணித்து கொண்டிருந்த பேரூந்து ஒன்று ,முகமாலை பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்றுடன் மோதி விபத்தில் சிக்கி பேரூந்து கவிழ்ந்தது .

இந்த பேரூந்து விபத்தில் சிக்கி 44 பேர் காயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் பாளை,கிளிநொச்சி,யாழ்ப்பாண மருத்துவமனைகளில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

குறித்த விபத்து தொடர்பில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

இந்த விபத்தினால் அந்த வழி போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளது .

பெண் காவல்துறை அதிகாரிக்கு முத்தமிட்டவர் சிக்கலில்
Posted in இலங்கை செய்திகள்

பெண் காவல்துறை அதிகாரிக்கு முத்தமிட்டவர் சிக்கலில்

பெண் காவல்துறை அதிகாரிக்கு முத்தமிட்டவர் சிக்கலில்

இலங்கை பெண் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு ,சார்யன்ட் தரத்தில் பணியாற்றி வந்த காவல்துறை அதிகாரி ஒருவர் பலவந்தமாக முத்தமிட்டுள்ளார் .

இந்த முத்த சம்பவம் குறித்த அதிகாரிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது .

ஒரு முத்தத்தினால் அவரது பதவி பிடுங்க பட்டு ,அவர் மீது ஒழுக்காற்று நாவடிகை மேற்கொள்ள பட்டுள்ளதாக, காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது .

பணியிடை நீக்கம் என்பது நீடிக்குமா ,அல்லது தற்காலிக முடக்கமா என்பது தொடர்பில் தெரியவரவில்லை .

சீனாத் தூதுவர் மகிந்த ராஜபக்ச திடீர் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

சீனாத் தூதுவர் மகிந்த ராஜபக்ச திடீர் சந்திப்பு

சீனாத் தூதுவர் மகிந்த ராஜபக்ச திடீர் சந்திப்பு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவை சீனா தூதர் சந்தித்து பேசியுள்ளார் .

இந்த பேச்சுக்களின் பொழுது சீனா மகிந்தாவிடம் தமது பாணியில் சில டீல்கள் பேசியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

அமெரிக்கா இந்தியாவை பகைத்து சீனாவுடன் ஒட்டி உறவாடிய மகிந்த ராஜபக்ச ஆட்சி ,அதே சீனாவினால் மூழ்கடிக்க பட்டது .

இவ்வாறான நெருக்கடி நிறைந்த கால பகுதியில், மீளவும் சீனா மகிந்தவை சந்தித்து டீல்கள் பேசி வருகின்றமை ,தேர்தலில் வெற்றியை மகிந்தா சூடி
கொள்ளும் நகர்வு பேச்சுக்கள் இடம்பெற்று இருக்கலாம் என கருத படுகிறது.

டயஸ்போரா அமைப்புகளை சந்தித்து உரையாட நான் தயார் மனோ கணேசன்
Posted in இலங்கை செய்திகள்

22ம் திருத்தத்துக்கு நிபந்தனைகளுடன், ஐக்கிய மக்கள் கூட்டணி ஆதரவு
-தேர்தல் மேகம் சூழ்கிறது என்கிறார் மனோ கணேசன்-

22ம் திருத்தத்துக்கு நிபந்தனைகளுடன், ஐக்கிய மக்கள் கூட்டணி ஆதரவு
-தேர்தல் மேகம் சூழ்கிறது என்கிறார் மனோ கணேசன்-

22ம் திருத்தத்துக்கு நிபந்தனைகளுடன் ஆதரவு அளிக்க பிரதான எதிர்க்கட்சி ஐக்கிய மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி மனோ கணேசன் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமைக்குழு கூட்டத்தில் இம்முடிவு எட்டப்பட்டதாகவும் மனோ எம்பி கூறினார்.

இதுபற்றி தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மேலும் கூறியதாவது,

இரட்டை குடியுரிமை கொண்டோர் பாராளுமன்றத்தில் உறுப்புரிமை வகிக்க முடியாது. சமர்பிக்கப்பட்டுள்ள வரைபில் உள்ளதை மாற்றி, அமெரிக்க பிரஜை

பெசில் ராஜபக்சவின் எண்ணப்படி செயற்பட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு நாம் ஒருபோதும் இடம் தர மாட்டோம். பெசில் ராஜபக்ச அமெரிக்க காங்கிரசில் இடம் தேடி கொள்ளட்டும்.

அதேவேளை பாராளுமன்றத்தை, அடுத்த வருட முதல் காலாண்டில் கலைக்க இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிகாரம் தரும்,

22ம் திருத்தத்துக்கு நிபந்தனைகளுடன், ஐக்கிய மக்கள் கூட்டணி ஆதரவு
-தேர்தல் மேகம் சூழ்கிறது என்கிறார் மனோ கணேசன்-

“இரண்டரை வருடம்”, என்ற விதி மாற்றப்படக்கூடாது. இந்நாட்டு மக்கள் இன்று, இந்த பாராளுமன்றத்தை மாற்றி, புதிய பாராளுமன்றத்தை அமைக்க

விரும்புகிறார்கள். ஆகவே, இரண்டரை வருடத்தில் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் தொடர்ந்து விடப்படுவதை நாம் தந்திரோபாய நோக்கில் ஆதரிக்கிறோம்.

அதேவேளை, பாராளுமன்றத்தில் குறைந்தபட்சம் 113 உறுப்பினர்கள் கூடி
பாராளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலுக்கு செல்ல வேண்டும் என தீர்மானித்தால்,


அதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மறுக்க முடியாது. அதை அவர் ஏற்று பாராளுமன்றத்தை

பங்கு சந்தைக்காணொளிகள் பார்க்க இதில் அழுத்துங்க


கலைத்து புதிய தேர்தலுக்கு செல்ல தீர்மானிக்க வேண்டும் என நாம் நம்புகிறோம்.

ஆகவே அடுத்த வருடம் தேர்தல் மேகம் சூழும்.
புதிய மக்களாணையை பெற கட்சிகள் தயாராக வேண்டும்.


தேர்தலை சந்திக்க தமிழ் முற்போக்கு கூட்டணி தயார் நிலையில் இருக்கிறது.
அந்நிலையை இன்னமும் மெருகூட்டும் நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.

வெள்ள அபாயம் மக்களுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

வெள்ள அபாயம் மக்களுக்கு எச்சரிக்கை

வெள்ள அபாயம் மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கை களனி ஆற்று பகுதியில் ,மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

களனி குளத்தின் தாழ்வு பகுதிகளில் அதிக நீர் பாய்ந்து செல்வதால் ,கீழ் பகுதி மக்கள் ,வெள்ளத்தில் சிக்கி பாதிக்க படுவார்கள் என ,எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

பருவ கால மழை வீழ்ச்சி அதிகமாக காணப்படுவதால் ,இந்த வெள்ள அபாயம் எழுந்துள்ளது .

கடலில் நீராட சென்றவர் சடலமாக மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கடலில் நீராட சென்றவர் சடலமாக மீட்பு

கடலில் நீராட சென்றவர் சடலமாக மீட்பு

இலங்கை திருக்கோவில் பகுதியில் நண்பர்களுடன் நீராட சென்றவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

ஆறு நண்பர்களுடன் கடலுக்கு சென்று ,உணவு சமைத்து உண்டு ,களியாட்டத்தில் ஈடுபட்டவர் ,வெற்றிலை போட்டு வருவதாக சென்றுள்ளார் .

ஆனால் நீண்ட நேரமாக திரும்பி வராத நிலையில் ,அவரை தேடி நடத்த பட்ட தேடுதலில் ,சடலமாக மீட்க பட்டுள்ளார் .

இவ்வாறு சடலமாக மீட்க பட்டவர் 38 வயதுடைய நபர் என தெரிவிக்க படுகிறது .

இலங்கையில் நீர் நிலைகளில் நீரட சென்று இவ்வாறு பலர் உயிரிழந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

கடலுக்கு சென்ற தந்தை மகன் உள்ளிட்ட நான்கு பேரை காணவில்லை
Posted in இலங்கை செய்திகள்

கடலுக்கு சென்ற தந்தை மகன் உள்ளிட்ட நான்கு பேரை காணவில்லை

கடலுக்கு சென்ற தந்தை மகன் உள்ளிட்ட நான்கு பேரை காணவில்லை

மட்டக்களப்பு வாழைச்சேனை கடல் பகுதியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற தந்தை ,மகன் உள்ளிட்ட நான்கு பேரை 19 நாட்களாக காணவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இயந்திர படகு மூலம் ஆள் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற இவர்கள் ,இதுவரை கரைக்கு திரும்பாத நிலையில் ,தேடுதல் நடத்த பட்டு வருகிறது .


இவர்கள் சென்ற படகு பழுதடைந்து வேறு திசை நோக்கி சென்று இருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது .

பங்கு சந்தை காணொளிகளை பார்க்க இதில் அழுத்துங்க

காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

மனோ கணேசன் - ஆஸ்திரேலிய தூதுவர் போல் ஸ்டீபன் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

மனோ கணேசன் – ஆஸ்திரேலிய தூதுவர் போல் ஸ்டீபன் சந்திப்பு

மனோ கணேசன் – ஆஸ்திரேலிய தூதுவர் போல் ஸ்டீபன் சந்திப்பு

மனோ கணேசன் – ஆஸ்திரேலிய தூதுவர் போல் ஸ்டீபன் சந்திப்பு
-நலிவுற்றோரை அடையாளம் காணும் அளவுக்கோல்கள் பற்றி இலங்கை அரசிடம் கேள்வி எழுப்ப வேண்டும்-

தமிழ் முற்போக்கு கூட்டணி – ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கும்,

கொழும்பில் உள்ள இலங்கைக்கும், மாலைதீவுக்குமான ஆஸ்திரேலிய தூதுவர் போல் ஸ்டீபனுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் உள்ள ஆஸ்திரேலிய தூதுவரின் இல்லத்தில் நேற்று நிகழ்ந்த இந்த சந்திப்பு பற்றி மனோ கணேசன் எம்பி தெரிவித்ததாவது,

சமீபத்தில் நான் ஆஸ்திரேலியாவுக்கு மேற்கொண்ட அதிகாரபூர்வ பயணம் தொடர்பில் உரையாடினோம்.

ஆஸ்திரேலியாவில் திகழும் பன்மைத்துவ கலாச்சாரம் பற்றிய பாடங்கள் இலங்கைக்கு அவசியம் என்பதை ஆஸ்திரேலிய தூதுவர் போல் ஸ்டீபனுக்கு தெரிவித்தேன்.

குறிப்பாக ஆஸ்திரேலிய அரசு மற்றும் அரசு நிலை அரசியல் பிரமுகர்கள் அங்கு வாழும், இலங்கையர்களுடன் குறிப்பாக புலம் பெயர்ந்துள்ள சிங்கள

ஆஸ்திரேலியர்களுடனும், அவர்களது அமைப்புகளுடனும் தொடர்புகளை மேம்படுத்தி அவர்கள் மூலம் பன்மைத்துவ சிந்தனையை இலங்கைக்குள் கொண்டு வர உதவ வேண்டுமென வலியுறுத்தினேன்.

இலங்கையின் நெருக்கடி நிலைமையும், அதற்கான மாற்றமும் வெறுமனே பொருளாதார விடயங்களை சார்ந்தது அல்ல என்ற எமது நிலைபாட்டை அவருக்கு வலியுறுத்தினேன்.

பொருளாதார விடயங்களுக்கு அப்பால், மூல காரணமாக திகழ்வது இலங்கையில் பன்மைத்துவ கொள்கை ஏற்றுக்கொள்ளப்படாமையே என்ற தமிழ் மக்களின் எண்ணப்பாட்டை அவருக்கு சுட்டிக்காட்டினேன்.

ஆகவே இலங்கையில் ஏற்படுகின்ற எந்தவொரு மாற்றமும் இலங்கை பன்மொழி, பன்மத, பல்லின நாடு என்ற பன்மைத்துவ கொள்கை அரசியலமைப்புரீதியாக ஏற்றுக்கொள்ளப்படுவதிலேயே தங்கி உள்ளது.

அதுவே மாற்றத்திற்கான ஆரம்ப புள்ளி என தெளிவுபடுத்தினேன்.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை, மலையக தமிழர்கள், மிகவும் பின்தங்கிய தோட்ட தொழிலாளர்கள், நடைபெற்ற அரகலய கிளர்ச்சி, எதிர்கட்சிகளின் உடனடி தேர்தலுக்கான கோரிக்கை ஆகியவை பற்றியும் உரையாடினோம்.

இலங்கை சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நலிவுற்ற பிரிவினரான தோட்ட தொழிலாளர்கள், தொழில்ரீதியாகவும், தமிழ் சிறுபான்மையினர் என்ற இனரீதியாகவும் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை எடுத்து கூறினேன்.

பின்தங்கிய நலிவுற்ற பிரிவினருக்கு என ஆஸ்திரேலியா உட்பட உலக அரசாங்கங்கள் வழங்கும் உதவி தொகைகள், நன்கொடைகள் தோட்ட தொழிலாளர்களுக்கு பெரும்பாலும் கிடைப்பதில்லை.

நலிவுற்ற பிரிவினரை அடையாளம் காண்பதில் அரசு கடைபிடிக்கின்ற அளவுக்கோல்கள் பிழையானவை.

அவை அரசியல் மற்றும் சில வேளைகளில் தவறான இன அடிப்படைகளை கொண்டவை.

இதன் காரணமாக நலிவுற்ற பிரிவினரான தோட்ட தொழிலாளர்கள் நலிவுற்றோர் பட்டியலில் இடம் பெறுவதில் தவிர்க்கப்படுகிறார்கள்.

ஆகவே இந்த நலிவுற்றோரை அடையாளம் காணும் அளவுக்கோல்கள் பற்றி ஆஸ்திரேலியா, இலங்கை அரசிடம் கேள்வி எழுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன்.

உடனடியாக பாராளுமன்ற தேர்தலை நடத்தி, புதிய மக்களாணையை பெறுவதன்
மூலமாகவே நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை, உலகரீதியான ஏற்புடைமை,
பொருளாதார மீட்சிக்கான வழிவரைபு (Road Map) ஆகியன ஒழுங்கமைக்கப்படும் என கூறினேன்.

கனடா விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இறுவர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

கனடா விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் மரணம்

கனடா விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் மரணம்

கனடா மார்க்கம் டெனிசனில் இடம்பெற்ற கார் விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரன் மற்றும் சகோதரி பலியாகியுள்ள துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இவர்கள் பயணித்த கார் விபத்தில் சிக்கியதில் இருவரும் பலியாகியுள்ளனர் .

பலியானவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் சுதுமலை, மற்றும் இனிவில் மஞ்சத்தடியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்க படுகிறது .

இரண்டு இளம் வாலிப சொந்தங்கள் மரணம் ,உலக தமிழ் மக்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது .

வெளி நாடுகளில் வசிக்கும் நம்ம தமிழர்கள் பலர் ,இவ்வாறான விபத்துக்களில் சிக்கி பலியாகிய வண்ணம் உள்ளனர் .

சமூக வலைத்தளங்களில் இவர்கள் மரண செய்தி பகிரப்பட்ட வண்ணம் உள்ளது இங்கே குறிப்பிட தக்கது .

இலங்கையில் மீண்டும் மகிந்த ராஜபக்ச பிரதமராகிறார் .
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் மீண்டும் மகிந்த ராஜபக்ச பிரதமராகிறார் .

இலங்கையில் மீண்டும் மகிந்த ராஜபக்ச பிரதமராகிறார் .

இலங்கையில் மீண்டும் மகிந்த ராஜபக்ச பிரதமராகிறார் என்கின்ற தகவல்களை ,அவரது கூட்டாளிகள் வெளியிட்டுள்ளனர் .

மொட்டு கட்சியை மக்கள் விரட்டியைக்கவில்லை என, தொடர்ந்து கூறி வரும் ,மகிந்தா ஆதரவு சக்திகள் ,இலங்கையில் மீளவும் மகிந்த ராஜபாக்ஸ பிரதமராகிறார் எனவும் ,விரைவில் அவர் பதவி ஏற்பார் என்கிறது .

மகிந்தா ராஜபக்ச ,கோட்டபாய ராஜபக்ச ,அதிகாரத்தை துறந்து ஓடவேண்டும் என மக்கள் போராட்டம் நடத்தினர் .

அவ்வாறன நிலையில் ,அதனை மறந்து மீளவும் அரியணையில் அமர்ந்திட, மகிந்த தரப்பு முனைந்த வண்ணம் உள்ளமை கவனிக்க தக்கது .

மானிப்பாயில் 101 கைகுண்டுகள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மானிப்பாயில் 101 கைகுண்டுகள் மீட்பு

மானிப்பாயில் 101 கைகுண்டுகள் மீட்பு

யாழ்ப்பாணம் மானிப்பாயில் வீடொன்றுக்குள் இருந்து , சுமார் 101 கைகுண்டுகள் மீட்க பட்டுள்ளன .

காணியை அதன் உரிமையாளர் துப்பரவு செய்த் கொண்டிருந்த பொழுது ,அதற்குள் இருந்தே இந்த 101 கைகுண்டுகள் மீட்க பட்டுள்ளன .

குண்டு செயல் இழக்க வைக்க படும் இராணுவத்தினர் வரவழைக்க பட்டு, குண்டுகள் செயல் இழக்க வைக்க பட்ட வண்ணம் உள்ளன .

இதே பகுதியில் மிக பெரும் இராணுவ முகாம் முன்னர் அமைய பெற்றிருந்தது.

இது குறித்த விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்ட பின்னரும் ,புலிகள் பீதியை கிளப்பும் விதத்தில் தென் இலங்கை அரசியல்வாதிகள், செயல் பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .