கோதுமை மா விலை குறைப்பு -மா பொருட்கள் விலை குறையுமா
Posted in இலங்கை செய்திகள்

கோதுமை மா விலை குறைப்பு -மா பொருட்கள் விலை குறையுமா

கோதுமை மா விலை குறைப்பு -மா பொருட்கள் விலை குறையுமா

இலங்கையில் கோதுமை மாவு ஒரு கிலோ 265 ரூபாவாக குறைக்க பட்டுள்ளது .

திடீரென கிலோ ஒன்றுக்கு 25 ரூபா குறைக்க பட்டுள்ளதாக திடீர் அறிவித்தல் விடுக்க பட்டுள்ளது .

இதனால் கோதுமை மாவினால் தயாரிக்க படும் பொருட்கள் விலை குறையுமா என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

இந்த விலை குறைப்புக்கள் தேர்தலை மைய படுத்தி நகரும் விலை குறைப்பு என தெரிவிக்க படுகிறது .

ராஜீவ் காந்தி விசாரணை குழு கலைப்பு -அதிர்ச்சியில் ராஜீவ் காந்தி குடும்பம்
Posted in இலங்கை செய்திகள்

ராஜீவ் காந்தி விசாரணை குழு கலைப்பு -அதிர்ச்சியில் ராஜீவ் காந்தி குடும்பம்

ராஜீவ் காந்தி விசாரணை குழு கலைப்பு -அதிர்ச்சியில் ராஜீவ் காந்தி குடும்பம்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்க அமைக்க பட்ட குழு ,மத்திய அரசினால் அதிரடியாக கலைக்க பட்டுள்ளது .

ராஜீவ் காந்தி கொலை வழக்கை வைத்தே ,இந்தியா தமிழீழ விடுதலை புலிகளை பழிவாங்கி வந்தது .

,இந்தியாவில் அதனை வைத்த அரசியல் பிழைப்பு இடம்பெற்று வந்தது .

இன்று இந்த குழுவை மோடி ஆட்சி அதிரடியாக கலைத்துள்ள சம்பவம் ,இந்திய அரசியலில் புயலை கிளப்பியுள்ளது .

ராஜீவ் காந்தி விசாரணை குழு கலைப்பு -அதிர்ச்சியில் ராஜீவ் காந்தி குடும்பம்

மேற்படி ராஜீவ் காந்தி விசாரணை குழு கலைப்பு , ராஜீவ் காந்தி குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

மேலும் இதன் ஊடக இலங்கைக்கு மோடி ஆட்சி ஏதோ ஒரு விடயத்தை ,துல்லியமாக சொல்கிறது என்பதாகிறது .

இந்தியா தமிழர் விடயத்தை புதிய முறையில் கையாள போகிறது என்பதை இவை இடித்துரைக்கிறது என்பதாக உள்ளது .

தற்போது தமிழகத்தில் ராஜீவ் காந்தி விசாரணை குழு கலைப்பு விடயம் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

துப்பாக்கி வெடித்து வாலிபர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கி சூடு ஒருவர் மரணம் இருவர் காயம் – துப்பாக்கி தாரி ஓட்டம்

துப்பாக்கி சூடு ஒருவர் மரணம் இருவர் காயம் – துப்பாக்கி தாரி ஓட்டம்

இலங்கை காலி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த ,மர்ம துப்பாக்கிதாரி நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி ,ஒருவர் சம்பவ இடத்தில பலியானார் ,நான்கு வயது குழந்தை உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்துள்ளனர் .

இவர்கள் மீது துப்பாக்கி சூட்டை நடத்தியவர் தப்பி ஓட்டம் ,என்கிறது காவல்துறை .


இதுவரை துப்பாக்கி தாக்குதலை மேற்கொண்ட ,குற்றவாளி கைது செய்யப்படவில்லை .


விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்க பட்டு வருவதாக ,காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

இலங்கையில் நாள் தோறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை கவனிக்க தக்கது .

வவுனியாவில் இளம் பெண் சுட்டு கொலை
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் இளம் பெண் சுட்டு கொலை

வவுனியாவில் இளம் பெண் சுட்டு கொலை

வவுனியா நெடுங்கேணி பகுதியில் 21 வயது இளம் பெண் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் .

வீட்டில் இருந்து வழியே வந்த இளம் பெண்ணை, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ,சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார் .

கொலையாளிகளை கைது செய்திடும் நகர்வில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .

யாழ் சங்கானையில் வயோதிபரை வெட்டி பணம் கொள்ளை
Posted in இலங்கை செய்திகள்

யாழ் சங்கானையில் வயோதிபரை வெட்டி பணம் கொள்ளை

யாழ் சங்கானையில் வயோதிபரை வெட்டி பணம் கொள்ளை

யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் பயணித்த முதியவர் ஒருவரை வழிமறித்த ,கொள்ளையர்கள் அவரை வெட்டிவிட்டு ,15000 ரூபா பணம் மற்றும் ஒன்றை பவுன் சங்கிலி என்பனவற்றை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றுள்ளனர் .

யாழ்ப்பாணத்தில் தொடரும் கொள்ளையர்கள் செயலினால் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏஜமான் சடலத்தில் ஏறி அவரை கட்டியணைத்து அழுது புலம்பிய குரங்கு
Posted in இலங்கை செய்திகள்

ஏஜமான் சடலத்தில் ஏறி அவரை கட்டியணைத்து அழுது புலம்பிய குரங்கு

ஏஜமான் சடலத்தில் ஏறி அவரை கட்டியணைத்து அழுது புலம்பிய குரங்கு

மட்டக்களப்பு – தாளங்குடா பிரதேசத்தில் குரங்கு ஒன்று தனது ஏஜமான் உயிரிழந்ததையடுத்து அவரின் சடலத்தில் ஏறி அவரை கட்டியணைத்து அழு

து புலம்பியதுடன், அவரின் இறுதிக் கிரிகை நடந்த மயானத்திற்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்திய சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்ததுடன் பெரும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது

தாளங்குடா பிரதேசத்தினைச் சேர்ந்த 56 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான பீதாம்பரம் ராஜன் காட்டில் இருந்து வந்த குரங்கு ஒன்றிற்கு பழங்களை வழங்கிவந்துள்ளார்.

குறித்த குரங்கும் தினமும் அவரது வீட்டிற்கு வந்ததும் அவர் அதற்கு பிஸ்கற்களை வழங்குவதுடன் அவரின் வலது குறைந்த பிள்ளையை அறையில்

இருந்து குரங்கு அழைத்து வந்து அந்த பிள்ளையுடன் பிஸ்கற் சாப்பிடுவது வழக்கம்.

ஏஜமான் சடலத்தில் ஏறி அவரை கட்டியணைத்து அழுது புலம்பிய குரங்கு

இந்த நிலையில் திங்கட்கிழமை(17) இரவு சுகயீன் காரணமாக அவர் உயிரிழந்ததையடுத்து அவருடைய வீட்டுக்கு வந்த குரங்கு அவர் சடலமாக படுத்திருப்பதை பார்த்து அவரின் பக்கம் சென்று அவருக்கு மூச்சு உள்ளதா

என பார்த்து அவரின் கழுத்து சட்டையை பிடித்து இழுத்து கண்ணீர் விட்டு அழுததுடன் அவரின் காலை தொட்டு கும்பிட்டு அவரின் அருகில் தொடர்ந்து அமர்ந்தது.

அதேவேளை சடலத்தை புதைப்பதற்காக மயானத்துக்கு கொண்டு சென்ற நிலையில் குரங்கு அங்கும் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது.

ஏஜமான்  சடலத்தில் ஏறி அவரை கட்டியணைத்து அழுது புலம்பிய குரங்கு
மாமாவின் மரணத்திற்கு வந்த மருமகன் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

மாமாவின் மரணத்திற்கு வந்த மருமகன் மரணம்

மாமாவின் மரணத்திற்கு வந்த மருமகன் மரணம்

மாமாவின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்வதற்கு வந்திருந்த மருமகன், மரம் முறிந்து விழுந்து பலியான பெருந்துயர் சம்பவம் ஒன்று கம்பளை, அட்டபாகை தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

நேற்றிரவு (18) சுமார் 10.45 மணி அளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கம்பளை – அட்டபாகை தோட்டத்தை சேர்ந்த இராமகிருஷ்னன் (வயது – 76) என்பவர் இயற்கை மரணம் எய்திய நிலையில் அவருக்கான இறுதிக் கிரியைகள் இன்று (19.10.2022) இடம்பெறிவருந்தன.

மாமாவின் மரணத்திற்கு வந்த மருமகன் மரணம்

சடலம் அஞ்சலிக்காக அவரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே மரண வீட்டு வளாகத்தில் இருந்த மரம் மருமகன் மீது முறிந்து விழுந்ததில் அவர் (ரட்னசாமி) உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, அட்டபாகை தோட்ட பகுதியில் பாடசாலை உட்பட மக்கள் நடமாடும் பகுதிகளில் முறிந்து விழக்கூடிய அபாயத்தில் பல மரங்கள் உள்ளன.


எனவே, அவற்றை அகற்றி தமது உயிரை பாதுகாக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்திய கடல் பகுதிக்குள் இலங்கை கடற்படை
Posted in இலங்கை செய்திகள்

காணாமல் போன இலங்கை இராணுவ கப்பல் கண்டு பிடிப்பு

காணாமல் போன இலங்கை இராணுவ கப்பல் கண்டு பிடிப்பு

இலங்கை கடற்படையின் நீருந்து விசை படகு ஒன்று, திடீரென கட்டு பாட்டு அறையுடன் தொடர்புகள் துண்டிக்க பட்டு காணாமல் போனது .

அவ்வாறு காணமல் போன இலங்கை கடல் படை கப்பல் ,சர்வதேச கடல் பகுதியில் ,இருந்தவாறு கண்டு பிடிக்க பட்டுள்ளது .

கண்டு பிடிக்க பட்ட கப்பலை மீள இலங்கை கடல்படை , தளத்திற்கு இழுத்துவரும் நகர்வில் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளது .

இந்த கப்பல் காணாமல் போனது தொடர்பாக, அண்டைய நாடுகளுக்கும் இலங்கை கடற்படை அறிவித்தது .

இலங்கை கடற்படையின் கப்பல் ஒன்று சர்வதேச கடல்பரப்பில் ,உள்ள இலங்கை கடற்படை கப்பலை இழுத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்கிறது இலங்கை கடற்படை .

தொலைத்த பணம் சங்கிலியை மீட்டு கொடுத்த நாய்
Posted in இலங்கை செய்திகள்

தொலைத்த பணம் சங்கிலியை மீட்டு கொடுத்த நாய்

தொலைத்த பணம் சங்கிலியை மீட்டு கொடுத்த நாய்

வீட்டில் வளர்க்கும் நாயொன்று செய்த நல்ல செயலால் அந்த குடும்பமே குதூகலித்த சம்பவமொன்று கண்டி அலதெனிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

வீட்டுக்கு வெளியே கடந்த 15ஆம் திகதியன்று இரவு​வேளையில் வெளியே சென்றிருந்த அந்த நாய், கடையொன்றுக்கு முன்பாகவுள்ள வீதியில்

விழுந்துகிடந்த பணப்பையை கௌவிக்கொண்டுவந்து, தன்னுடைய கூடாரத்துக்கு அருகில் போட்டுவிட்டுள்ளது.

பாதணிகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களையும் கடிக்கும் அந்த நாய், அந்த பணப்பையை மட்டும் கடித்து சேதப்படுத்தாது, முன்னங்கால்கள் இரண்டிலும் அழுத்தி பிடித்துக்கொண்டிருந்துள்ளது.

தொலைத்த பணம் சங்கிலியை மீட்டு கொடுத்த நாய்

எனினும், வீட்டின் உரிமையாளர்கள் அந்த பையை நாயிடமிருந்து மீட்டெடுத்து, அதனை திறந்து பார்த்துள்ளனர்.

அதில், 7ஆயிரம் ரூபாய் பணமும் ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் பெறுமதியான தங்கச் சங்கிலியும் இருந்துள்ளது.

அத்துடன் அந்த பணப்பையில் இருந்த தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்ட வீட்டு உரிமையாளர்கள், உரிமையாளரை வீட்டுக்கு அழைத்து அந்தப் பணப்பையை கையளித்துள்ளனர்.

இதுதொடர்பில் அலதெனிய பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும் அறிவுறுத்தியுள்ளனர்.

பொலிஸாருடன் வீட்டுக்கு வந்த பணப்பையின் உரிமையாளர் அதனை பெற்றுச்சென்றுள்ளார்.

இலங்கைக்கு வைத்திய உபகரணங்களை வழங்கி வைத்த அமெரிக்கா
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு வைத்திய உபகரணங்களை வழங்கி வைத்த அமெரிக்கா

இலங்கைக்கு வைத்திய உபகரணங்களை வழங்கி வைத்த அமெரிக்கா

இலங்கை சுகாதார அமைச்சுக்கு ,அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சினால் மருத்துவ உபகாரணகள் வழங்கி வைக்க பட்டுள்ளது .

அமெரிக்காவின் இராணுவத்தை கட்டி காப்பாற்றும் ,பாதுகாப்பு அமைச்சினால் ,இலங்கைக்கு வைத்திய உபகாரணங்கள் வழங்கி வைக்க பட்டுள்ளது .

இராணுவ அமைப்பு ஒன்று ,இலக்கைக்கு ஏன் இவ்வாறான ,உபகரணங்களை வழங்கியது என்பதே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .

கமல் சிறிதரன் திடீர் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

கமல் சிறிதரன் திடீர் சந்திப்பு

கமல் சிறிதரன் திடீர் சந்திப்பு

நடிகர் கமல் மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்கள், தமிழகத்தில் சந்தித்து பேசியுள்ளார் .

இந்த சந்திப்பில் , தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிப்பு மற்றும் ,தமிழர் அடிப்படை பிரச்சனைகள் தொடர்பாக பேச பட்டதாக தெரிவிக்க படுகிறது .

தமிழ் மக்களின் நன்மதிப்பை பெற்றவராக ,இலங்கை தமிழ் அரசியல் வாதியாக ஸ்ரீதரன் முன்னிலை வகிப்பது குறிப்பிட தக்கது .

இலங்கை தொடர்ந்து உதவுவோம் சீனா அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் சீனாவின் ஆதிக்கம் கவலை கொள்ளும் இந்தியா

யாழ்ப்பாணத்தில் சீனாவின் ஆதிக்கம் கவலை கொள்ளும் இந்தியா

தமிழர் பகுதியான வடக்கு யாழ்ப்பாண தீவக பகுதியில் ,சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக இந்தியா கவலை வெளியிட்டுள்ளது .

இந்தியா இலங்கைக்கு பாரிய உதவிகளை புரிந்த பொழுதும் ,தற்போது சீனாவின் வாலை பிடித்தவாறு இலங்கை பயணிக்கிறது .

சீனா முக்கிய பகுதிகளை ,ஆக்கிரமித்து ,இந்தியாவின் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது .

இவற்றை கருத்தில் கொள்ளாது இந்தியா பயணிப்பது ..இந்தியாவுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் எனப்படுகிறது .

இலங்கை வரும் சீனா கப்பல் கொதிக்கும் இந்தியா
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை வரும் சீனா கப்பல் கொதிக்கும் இந்தியா

இலங்கை வரும் சீனா கப்பல் கொதிக்கும் இந்தியா

இலங்கைக்கு நாளை மறுதினம் சீனாவின் கப்பல் ஒன்று வருகை தருகிறது .

இந்த சீன கப்பல் இலங்கை கொழும்பு கடலில் எரிந்த எக்ஸ்பிரஸ் , கப்பலில் இருந்து வீழ்ந்த இடிபாடுகளை அகற்றிட ,இலங்கை வருவதாகா தெரிவிக்க பட்டுள்ளது .

இவ்விதம் இலங்கை வரும் சீனா கப்பல் பலமாதங்களாக இலங்கையில் தங்கி நிற்கும் எனபதே இந்தியாவுக்கு கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

கலைகளை வளர்த்துக்கொள்கின்ற அதேவேளை, சமூகத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடியதா கஇருக்கவேண்டும். மாகாண பணிப்பாளர் (திருமதி) சரண்யா சுதர்சன்
Posted in இலங்கை செய்திகள்

கலைகளை வளர்த்துக்கொள்கின்ற அதேவேளை, சமூகத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடியதா கஇருக்கவேண்டும்.
மாகாண பணிப்பாளர் (திருமதி) சரண்யா சுதர்சன்

கலைகளை வளர்த்துக்கொள்கின்ற அதேவேளை, சமூகத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடியதா கஇருக்கவேண்டும்.
மாகாண பணிப்பாளர் (திருமதி) சரண்யா சுதர்சன்
தெரிவிப்பு!

(பைஷல்இஸ்மாயில்)

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள கலைஞர்களின் படைப்புக்களும், அவர்களின் செயற்பாடுகளும் நாளாந்தம் கூடியவண்ணம் சென்றுகொண்டிருக்கின்றது. ஆனால், திருகோணமலை மாவட்ட

கலைஞர்களின் படைப்புக்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது என்று கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாண பணிப்பாளர் (திருமதி) சரண்யா சுதர்சன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் இளைஞர் அபிவிருத்தி “அகம்” இணைந்து திருகோணமலை மாவட்ட கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நாடகமும், அரங்காற்றுகைக்குமான

போட்டியொன்றை மாவட்ட ரீதியாக நடாத்துவது தொடர்பாக விளக்கமளிக்கும் கலந்துரையாடல் மாகாண பணிப்பாளர் (திருமதி) சரண்யா சுதர்சன்

தலைமையில் நேற்று மாலை (17) மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள கலைஞர்களின் படைப்புக்களை தேர்ந்தெடுப்பதில் பாரியசிக்கல்நிலை இருக்கின்றது. ஏனென்றால் போட்டிக்கு வருகின்ற எல்லாப்படைப்புக்களும்

திறன்வாய்ந்ததாகவே இருக்கின்றது. ஆனால், திருகோணமலை மாவட்டத்தில் இந்நிலை இருப்பதில்லை.

அவர்களின் படைப்புக்கள் மிகக் குறைவாகவே போட்டிக்கு வருகின்றதென்று மாகாண பணிப்பாளர் (திருமதி) சரண்யா சுதர்சன் சுட்டிக்காட்டினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கலைகளை வளர்த்துக்கொள்கின்ற அதேவேளை, சமூகத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடியதா கஇருக்கவேண்டும். மாகாண பணிப்பாளர் (திருமதி) சரண்யா சுதர்சன்

எமது கலைகளை வளர்த்துக்கொள்கின்ற அதேவேளை, எமது படைப்புக்கள் மூலம் சமூகத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடியதாகவும், நன்மைகளை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கவேண்டும்.

சமூக உரிமை, பால்நிலை சமத்துவத்துடன் கூடிய இளைஞர்களின் பங்களிப்புக்கள், பிள்ளைகளின் நலனில் இளையோரின் பங்களிப்புகள் எவ்வாறு அமையவேண்டும்,

கிராமிய வாழ்க்கை முறையுடன் சமூக அபிவிருத்தி பற்றிய தகவல்கள், இயற்கை வளங்களை பாதுகாப்பது தொடர்பான விடயங்கள், பெரியோர்கள் வழிகாட்டலால் இளைஞர்களின் வளர்ச்சி, சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக

அபிவிருத்திகள் போன்ற விழிப்புணர்வு விடயங்களை கருப்பொருளாகக் கொண்டு உங்களின் படைப்புக்கள் இடம்பெறுமாக இருந்தால் அதில் பல நன்மைகளுண்டு.

மேலும், சமூகங்களுக்கிடையிலான ஏற்றத்தாழ்வு, இளவயது திருமணம், போதைப்பொருள் பாவனை, பாலியல் துஸ்பிரயோகம், இனரீதியான மோதல்கள், மொழி தொடர்பான அறிவின்மை, வேலைவாய்ப்பின்மை,

பாடசாலை இடைவிலகல், பொருளாதார நெருக்கடி, அதிகரித்த தொலைபேசிப் பாவனை போன்ற பல்வேறு பிரச்சினைகள் இன்று இளைஞர்கள் மத்தில் காணப்படுகின்றது.

இதனால் இன்றைய இளம் சந்ததியினர் சமூகச் சீர்கேட்டிற்கு ஆளாகிச் செல்வதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.

இதனை முன்வைத்து உங்களின் படைப்புக்கள் அமையவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இளைஞர் அபிவிருத்தி “அகம்” நிறுவனத்தின் இணைப்பாளர் பொ.சற்சிவானந்தம்,


சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர்களான க.அன்பலகன்,
வீ.கோணஸ்வரன், வி.குணபாலா மற்றும் திருகோணமலை மாவட்ட கலைஞர்கள் பலர்
கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

புலிகள் பலம் வாய்ந்த அமைப்பு இந்தியா இராணுவ தளபதி
Posted in இலங்கை செய்திகள்

புலிகள் பலம் வாய்ந்த அமைப்பு இந்தியா இராணுவ தளபதி

புலிகள் பலம் வாய்ந்த அமைப்பு இந்தியா இராணுவ தளபதி

தமிழீழ விடுதலை புலிகள் பலம் வாய்ந்த அமைப்பு என இந்தியாவின் முன்னாள் இராணுவ தாக்குதல் தளபதி தெரிவிப்பு .

தமிழீழ மக்களை காப்பாற்றும் நோக்குடன் இலங்கை சென்றடைந்த
இந்திய இராணுவத்தினர் ,தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு மற்றும்
ஒடுக்குறை தாக்குதல்களை மேற்கொண்டனர் .

இந்த தாக்குதல் வெடித்திட குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12 பேரின் கைதின் பின்னரே ஏற்பட்டது .

இலங்கையிடம் இவர்களை ஒப்படைக்க வேண்டாம் என புலிகள் கோரினர் .

ஆனால் நாம் புலிகளின் முக்கிய தளபதிகள் உள்ளிட்டவரை வழங்கினோம் .

அவர்கள் சிறையில் சயனைட் குப்பிகளை கடித்து மரணித்தனர் .
அதன் பின்னர் புலிகளுடன் நேரடி மோதல்கள் ஏற்பட்டது .

புலிகள் வெளி நாட்டு தமிழ் மக்களின் பண உதவியுடன் ,
அவர்களின் சொந்த கப்பல்கள் மூலம் ஆயுதங்களை இறக்குமதி செய்தனர் .

இந்திய இராணுவத்திடம் இல்லாத ஆயுதங்களை அவர்கள் வைத்திருந்தனர் .

சிறந்த ஒரு தலைவனை புலிகள் அமைப்பு பெற்று கொண்டது .
புலிகள் இந்தியாவில் இராணுவ பயிற்சி பெற்றதன் பின்னர்,
பல மிக்க தளபதிகளை ,இந்திய பயிற்சியின் இருந்து கற்று கொண்டு உருவாக்கினார் .

புலிகள் பலம் வாய்ந்த அமைப்பு இந்தியா இராணுவ தளபதி

என்னுடன் வருகை தந்த 32 இராணுவத்தில் 30 க்கு மேற்பட்டவர்களை புலிகள் துல்லியமாக கொன்றனர்
என மிரண்டு போய் தெரிவித்தார் .

இவர்கள் அமெரிக்கா இராணுவ திரைப்படங்களை பார்த்து வந்தனர் .
அதன் ஊடாகவும் பயிற்சிகளை பெற்று கொண்டனர் .
சக்தி வாய்ந்த கெரில்லா அமைப்பாக புலிகள் விளங்கினர் .

இதற்கு புலிகள் உளவு துறை மிக முக்கியமான ஒன்றாக விளங்கியது என ,
அந்த இராணுவ தளபதி தெரிவித்துள்ளார் .

புலிகள் அழிந்ததன் பின்னர் , சீனா இலங்கையை ,ஆக்கிரமித்து ,
இந்தியாவுக்கு பெரும் நெருக்கடியை தருவித்து வருகிறது .

இந்தியா இராணுவ தளபதிகள் புலிகளை பயங்கரவாதிகள் என்றனர் ,
தற்போது அதே புலிகள் அமைப்பை போராளிகள் என்கின்ற சொல்லாடலை
பயன் படுத்தி வருவது ,இந்திய வெளியுறவு கொள்கையில் ஏற்படடுளள மாற்றாம என என்ன தோன்றுகிறது .

புலிகளை இணைந்து அழித்த இந்தியா ,புலிகள் அமைப்பை
தேடும் காலம் விரைவில் மலரும் எனலாம் .

https://www.youtube.com/watch?v=EAxg1bdtd5k
இலங்கையின் மிக பெரும் கொள்ளைக்காரி பிரியமாலி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையின் மிக பெரும் கொள்ளைக்காரி பிரியமாலி

இலங்கையின் மிக பெரும் கொள்ளைக்காரி பிரியமாலி

இலங்கையின் மிக பெரும் கொள்ளைக்காரியாக வலம் வந்துள்ள பிரியமாலி,தற்போது சிக்கியுள்ளார் .

இவர் இதுவரை மூன்று பில்லியன் இலங்கை ரூபாய்கள் வரை ,மோசடி செய்துள்ளதான குற்ற சாட்டு முன் வைக்க படுகிறது .

தற்போது முஸ்லீம் அரசியல்வாதி அசாத் அலியு தானும் எட்டு கோடிக்கு மேலாக இவரிடம் பணத்தை வழங்கி மோசம் போயுள்ளதாக தெரிவித்துள்ளார்.

.இலங்கையின் மிக பெரும் கொள்ளைக்காரி பிரியமாலி

மகிந்த ராஜபக்ச ஆதரவுடன் இவர் மிக பெரும் பணமோசடியில் ,ஈடுபட்டு வந்துள்ளது அம்பலமாகியுள்ளது .

இலங்கையின் அதி உயர் வர்த்தக மையத்தில் , காரியாலயம் அமைத்து ,பண கொள்ளையை பிரியமாலி நடத்தி வந்துள்ளார் .

காவல்துறையினரால் கைது செய்யபட்டு செயல் பட்ட இவர் அரசியல் பின்புல ஆதரவுடன் செயல் பட்டு வருவதாக தெரிவிக்க படுகிறது .

ஆவணங்கள் இன்றி பணத்தினை செலுத்திய பலர்,ஏதும் செய்திட முடியா நிலையில் உள்ளதாக திடுக்கிடும் பேச்சுக்கள் கசிகின்றன .

இந்தியவில் ஒரு பூலன் தேவி ,இலங்கையில் ஒரு பிரியாமாலி என களம் மாறியுள்ளது .

பசில் ரணில் விசேட சந்திப்பு பேச போவது என்ன
Posted in இலங்கை செய்திகள்

ரணில் விக்கிரமசிங்க பசில் ராஜபக்சவுக்கு இடையில் பேச்சு

ரணில் விக்கிரமசிங்க பசில் ராஜபக்சவுக்கு இடையில் பேச்சு

இலங்கையின் முன்னாள் நிதியமைச்சர் பசில் மற்றும் ,ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவுக்கு இடையில், தொலைபேசி வாயிலாக இரகசிய பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளது .

தேர்தல் ஒன்று இடம்பெற்றால் ,அதில் எவ்விதம் கூட்டணி அமைத்து கொள்வதது என்பது தொடர்பில் கவனம் செலுத்த பட்டுள்ளது .

எதிர் வரும் தேர்தலில் தாமே அதிக வெற்றி வாய்ப்பை தட்டி செல்வோம் என்கின்ற நிலையில் ,மகிந்த தரப்பு பேசிய வருகிறது .

இவ்வாறான பேச்சு பரப்புரையை ராஜபக்ச குடும்பம் மேற்கொண்டு வரும் நிலையில் ,பசில் ரணிலுக்கு இடையில் இந்த இரகசிய பேச்சு இடம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

பட்டினி நாடுகள் வரிசையில் இலங்கை 65 தாவது இடம் பிடித்து சாதனை
Posted in இலங்கை செய்திகள்

பட்டினி நாடுகள் வரிசையில் இலங்கை 65 தாவது இடம் பிடித்து சாதனை

பட்டினி நாடுகள் வரிசையில் இலங்கை 65 தாவது இடம் பிடித்து சாதனை

இலங்கை உலக நாடுகளின் பட்டினி நாடுகளின் வரிசையில் 65 தாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது .

இலங்கையில் ராஜபக்ச சகோதரர்கள் ஆட்சியில் ,இலங்கை திவாலாகி , மக்களை படு பாதாளத்திற்கு தள்ளிய வரலாற்று சாதனையை புரிந்தனர் .

இலங்கை தனது வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு ,பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது .

இவர்களின் இந்த லஞ்ச ஊழல் மோசடி காரணமாகவே ,நாடு பின்னோக்கி நகர்ந்து செல்கிறது .

தற்போது ,உலக அரங்களில் 65 தாவது பட்டினி நாடக இலங்கை பதிய பெற்று சாதனை படைத்துள்ளது .

இந்த சாதனைகள் யாவும் ராஜபக்ச குடும்பங்களை சாரும் .

உரப்பையில் இருந்து சிசு சடலமாக மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

காய்ச்சலினால் யாழ் மருத்துவமனையில் சிசு மரணம்

காய்ச்சலினால் யாழ் மருத்துவமனையில் சிசு மரணம்

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஏழுமாத சிசு ஒன்று கடும் காய்ச்சல் காரணமாக பலியாகியுள்ளது .

பலியான சிசுவுக்கு பல நாட்களாக சிகிச்சை வழங்க ப்பட்ட போதும் ,சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளது .

கிளிநொச்சி கணேசபுரம் பகுதியை சேர்ந்த சிசுவே காய்ச்சல் காரணமாக பலியாகியுள்ளது .

இலங்கையில் இருந்து தமிழகம் தப்பி சென்ற தமிழர்கள்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் இருந்து தமிழகம் தப்பி சென்ற தமிழர்கள்

இலங்கையில் இருந்து தமிழகம் தப்பி சென்ற தமிழர்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ,தமிழகம் தப்பி சென்ற ஆறு இலங்கையர்கள் இந்திய கடற்படையால் காப்பாற்ற பட்டனர் .

இலங்கையில் ஏற்பட்டு வரும் பொருளாதர நெருக்கடி மற்றும் உணவு தட்டுப் பாட்டையடுத்து மக்கள் இவ்விதம், இலங்கையை விட்டு தப்பி ஓடிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .