அமெரிக்கா மூன்று கடற்படை சிப்பாய்கள் பலி
Posted in இலங்கை செய்திகள்

இந்திய மீனவர்களை துரத்திய சிங்கள கடற்படை

இந்திய மீனவர்களை துரத்திய சிங்கள கடற்படை

இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நேற்று (24) மாலை இலங்கை கடற்படையினரால் துரத்தப்பட்டனர்.

இவ்வாறு துரத்திய சமயம் கடற்படையினர் அவற்றை வீடியோ வடிவில் ஒளிப்பதிவு செய்ததோடு இந்திய படகுகளின் இலக்கங்களையும் குறித்துள்ளனர்.

இதன்போது படகுகள் நின்ற இடங்களை ஜீ.பி.எஸ் கருவிகள் மூலம் துல்லியமாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் தொடர்ச்சியாக அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.

இந்திய மீனவர்களை இரும்பு கம்பியால் தாக்கிய இலங்கை மீனவர்கள்
Posted in இலங்கை செய்திகள்

இந்திய மீனவர்களை இரும்பு கம்பியால் தாக்கிய இலங்கை மீனவர்கள்

இந்திய மீனவர்களை இரும்பு கம்பியால் தாக்கிய இலங்கை மீனவர்கள் .

இந்திய கடல் பகுதிக்குள் அத்து மீறி நுழைந்த இலங்கையை சேர்ந்த இருபது மீனவர்கள் ,இந்தியா மீனவர்கள் மீது இரும்பு கம்பிகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர் .

நடுக் கடல் பகுதியில் இடம்பெற்ற இந்த சண்டையில் ,பலமாக பாதிக்க பட்ட நிலையில் ,இந்தியா மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர் .

இலங்கை சிங்கள மீனவர்களினால் மேற்கொள்ள படும், இந்த தாக்குதல்கள் ,நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

சுப்பிரமணிய சுவாமி இலங்கை சென்று வரும் போதெல்லாம் , மீனவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து காணப்படுகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .