இரும்பு கம்பியால் வாலிபர் அடித்து கொலை
Posted in இலங்கை செய்திகள்

இரும்பு கம்பியால் வாலிபர் அடித்து கொலை

இரும்பு கம்பியால் வாலிபர் அடித்து கொலை

இலங்கை நூரைச்சேலை பகுதியில் வாலிபர் ஒருவர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப் பட்டுள்ளார் .

உள்ளக முரண்பாடு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம், கொலையில் முடிவடைந்துள்ளது .

இருவரும் அதிக போதையில் காணப்பட்ட நிலையில் ,இந்த படுகொலை சம்பவம் அரங்கேறியுள்ளது .

பலியானவர் முப்பத்தி ஐந்து வயதுடைய, ஆண் என அடையாளம் காணப் பட்டுள்ளார் .

இந்த கொலையினை புரிந்த ஐம்பத்தி நான்கு வயதுடைய ,நபர் கைது செய்யப்பட்டு ,நீதிமன்றில் பாரப் படுத்த பட்டுள்ளார் .

இந்த கொலை தொடர்பான விசாரணைகள் ,புத்தளம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

No posts found.
இந்திய மீனவர்களை இரும்பு கம்பியால் தாக்கிய இலங்கை மீனவர்கள்
Posted in இலங்கை செய்திகள்

இந்திய மீனவர்களை இரும்பு கம்பியால் தாக்கிய இலங்கை மீனவர்கள்

இந்திய மீனவர்களை இரும்பு கம்பியால் தாக்கிய இலங்கை மீனவர்கள் .

இந்திய கடல் பகுதிக்குள் அத்து மீறி நுழைந்த இலங்கையை சேர்ந்த இருபது மீனவர்கள் ,இந்தியா மீனவர்கள் மீது இரும்பு கம்பிகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர் .

நடுக் கடல் பகுதியில் இடம்பெற்ற இந்த சண்டையில் ,பலமாக பாதிக்க பட்ட நிலையில் ,இந்தியா மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர் .

இலங்கை சிங்கள மீனவர்களினால் மேற்கொள்ள படும், இந்த தாக்குதல்கள் ,நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

சுப்பிரமணிய சுவாமி இலங்கை சென்று வரும் போதெல்லாம் , மீனவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து காணப்படுகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .

Posted in இலங்கை செய்திகள்

தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற மகன்

தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற மகன்

தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற ,மகனது செயல் பாடு, மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கை இரத்தம்லானை பகுதியில் ,எழுபது வயதுடைய தந்தையை ,மகன் இரும்பு கம்பியால் அடித்து கொன்ற சம்பவம், பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தாய் ,தந்தையுடன் , வாக்கு வாத்தில்ஈடுபட்ட மகன் ,கோபத்தின் உச்சத்திற்கு சென்று ,இரும்பு கம்பியால் ,தந்தையை கோரமாக தாக்கியுள்ளான் .

மகனது வன்முறை கொலை வெறி தாக்குதலில், பலத்த காயமடைந்த தந்தை ,மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டார் .,

எனினும் நீண்ட காலமாக சுயநினைவின்றி கிடந்த தந்தை ,தற்போது மரணமாகியுள்ளார் .

தந்தையை கொன்ற மகன் கைது செய்ய பட்டுள்ளார்.

கோபம் செய்த பாவம் .