Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக சிறிதரன் நியமனம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் நியமிக்க பட்டுள்ளார்
இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் கே 184 வாக்குகளை பெற்று தனது வெற்றியை தேடி கொண்டார் .
சுமந்திரன் 137 வாக்குகளினால் பின் தள்ள பட்டுளளார் ,எனினும்ஸ்ரீதரன் தொடர்ந்து நீதியாக செயல் பட்டு சுமந்திரன் அனுமதிப்பாரா என்கின்ற கேள்வி எழுகிறது ,
இலங்கை தமிழரசு கட்சி இனியாவது சிறை பாதையில் பயணித்து மக்களுக்கு நல்வழி படுத்தும் என நம்புவோம் .
M.A.சுமந்திரன் – பெற்ற வாக்குகள் -137
சிறிதரன் பெற்ற வாக்குகள் -184
சி.யோகேஸ்வரன் பெற்ற வாக்குகள்-0
திருகோணமலை நகரமண்டபத்தில் இன்று 21ம் திகதி இடம் பெற்ற கூட்டத்தில் 327
பேர் கலந்து கொண்டு வாக்களிப்பில் கலந்துகொண்டனர்.
விஸ்வ புத்த துறவி மீண்டும் கைது
விஸ்வ புத்த துறவி மீண்டும் கைது
தன்னை ‘விஸ்வ புத்தர்’ என்று அழைத்துக் கொண்ட காவி அங்கி அணிந்த துறவி, பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் அறிக்கை வெளியிட்டதற்காக மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கலகெடிஹேன பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் முதலில் டிசம்பர் 12 ஆம் திகதி கைது செய்யப்பட்டார், அதன் பின் அவருக்கு கொழும்பு பிரதான நீதவான் ஜனவரி 8 ஆம் திகதி பிணை வழங்கியிருந்தார்.
விஸ்வ புத்த துறவி மீண்டும் கைது
விடுதலையின் பின், அவர் பல ஒன்லைன் பேச்சு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
இதேவேளை, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன் அவர் அடுத்த வாரம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் சமரவிக்கிரம நடத்திய நிகழ்ச்சி ஒன்றின் பொருட்டே அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கி சூடு மாத்தறை இளைஞன் பலி
துப்பாக்கி சூடு மாத்தறை இளைஞன் பலி
மாத்தறை – தெலிஜ்ஜவில பிரதேசத்தில் நேற்றிரவு (20) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர், இலக்கு வைக்கப்பட்ட நபர் அல்ல என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
நேற்று (20) இரவு 08 மணி அளவில் மாத்தறை – மாலிம்படை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெலிஜ்ஜவில சந்தியில் அமைந்துள்ள கையடக்கத் தொலைபேசி உபகரண விற்பனை நிலையம் ஒன்றில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் தொலைபேசி உபகரணக் கடைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
துப்பாக்கி சூடு மாத்தறை இளைஞன் பலி
குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 22 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தெனிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த மிந்திக அளுத்கமகே எனவும், அவர் தனது கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்வதற்காக கடைக்கு வந்துள்ளாதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்பட்டதுடன், கடையின் உரிமையாளரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், மாத்தறை பிரதான நீதவான் அனுருத்த புத்ததாச, அவரை பொலிஸ் காவலில் எடுத்து பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
Grid
வவுனியாவில் யுவதி ஒருவர் தாக்குதல் இரு சகோதரிகள் கைது
வவுனியாவில் யுவதி ஒருவர் தாக்குதல் இரு சகோதரிகள் கைது
வவுனியாவில் யுவதி ஒருவர் மீது தாக்குதல் நடத்தினர் என்றக் குற்றச்சாட்டின் பேரில் பெண்கள் இருவர், சனிக்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாதிப்படைந்த யுவதி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கழிவு நீர்மற்றும் வெள்ள நீர் என்பன வீதியில் உள்ள வாய்கால் ஊடாக செல்வது தொடர்பில் அப் பகுதியில் உள்ள இரு வீட்டாரிடையே முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.
குறித்த பகுதி வடிகாலமைப்பு சீரற்ற நிலையில் காணப்படுவதாலும், அனுமதியற்ற கட்டிடங்களின் காரணமாகவும் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு பிரதேச சபைக்கு, குறித்த வீட்டாரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த போதும் பிரதேச சபையால் அவை தீர்த்து வைக்கப்படவில்லை.
வவுனியாவில் யுவதி ஒருவர் தாக்குதல் இரு சகோதரிகள் கைது
இந்நிலையில், குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றின் கழிவு நீர் வீதி வாய்கால் ஊடாக இன்னுமொரு வீட்டை அண்மித்து சென்றுள்ளது.
கழிவு நீரை வீதிக்கு விட்ட வீட்டாருடன் அயல் வீட்டில் வசிக்கும் யுவதி ஒருவர் முரண்பட்டுள்ளார். இதன்போது இரு வீட்டாருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
அது கைகலப்பாக மாறவே, குறித்த யுவதி மீது இரு பெண்கள் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால் காயமடைந்த 22 வயதான யுவதி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய தாக்குதல் மேற்கொண்டதாக 30 மற்றும் 25 வயதுடைய சகோதரிகளான இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் வவுனியாவில் அரச திணைக்களம் ஒன்றில் உத்தியோகத்தராக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள பல வீதிகளில் வடிகாலமைப்பு சீர்செய்யப்படாத நிலை காணப்படுவதுடன், மழை காரணமாக பல வீடுகள் வெள்ளத்தினால் பாதிப்படைந்த போதும் வவுனியா
தெற்கு பிரதேச சபை செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்காது அசமந்த போக்குடன் செயற்பட்டு வருகின்றமையே இவ்வாறான சச்கரவுகள் ஏற்பட வழிவகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸாருக்கு புதிய உத்தரவு திணறும் இலங்கை பொலிஸ்
பொலிஸாருக்கு புதிய உத்தரவு திணறும் இலங்கை பொலிஸ்
இலங்கை பொலிஸாருக்கு புதிய உத்தரவு பொலிஸ் தலைமையக்கத்தால் பிறப்பிக்க பட்ட நிலையில் இலங்கை பொலிஸார் திணறி வருகின்றனர் .
லொறி சாரதி ஒருவரை சிவில் உடையில் நின்ற பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை செய்தனர் .
இதனை அடுத்து இலங்கை பொலிஸ் நிலையங்கள் யாவற்றுக்கும் உடனடி அமூலுக்கு வரும் நிலையில் ,சிவில் உடையில் பணியாற்றும் இலங்கை பொலிஸார் யாவரும் வாகனங்களை சோதனை செய்த்திட தடை விதிக்க பட்டுள்ளது .
பொலிஸாருக்கு வழங்க பட்ட இந்த அதிரடி உத்தரவை அடுத்து லஞ்ச போலிஸ் பெருச்சாளிகள் கலக்கத்தில் உறைந்துள்ளனராம் .
கடை எரிக்க 19 லடசம் வெளிநாட்டில் இருந்து கடை எரிக்க பணம் அனுப்பிய தமிழர்
கடை எரிக்க 19 லடசம் வெளிநாட்டில் இருந்து கடை எரிக்க பணம் அனுப்பிய தமிழர்
யாழ்ப்பாணத்தில் கடை எரிக்க 19 லடசம் வெளிநாட்டில் இருந்து வழங்கி கடையை எரிக்க பணம் அனுப்பிய தமிழர் வசமாக சிக்கியுள்ளார் .
ஐரோப்பியா நாடான பெல்ஜியம் நாட்டில் வசிக்கும் தமிழர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள மிக முக்கிய, இரண்டு புடவை கடைகளை தீவைத்து எரிக்கும் படி பணம் அனுப்பி இருந்தாராம் .
சுமார் 19 லட்சம் இலங்கை பணம் அனுப்ப பட்டு அந்த கடைகள் எரிக்க பட்டனவாம் ,இவற்றில் கடை எரிப்பதற்கு 12 லட்சம் வழங்க பட்டு உள்ளதாம் .
மேலும் கார் எரிப்பதற்கு ஏழுலட்சம் வழங்க பட்டது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
கார் எரிப்பதற்கு ஏழு லட்சம் ,கடை எரிப்பதற்கு 12 லட்சம் என்கின்ற விடயம் இலங்கை மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
போலீஸ் நடத்திய விசாரணையில் இந்த விடயம் தெரிய வந்த நிலையில் ,பெல்ஜியம் நாட்டில் இருந்து பணம் அனுப்பியவரை ,சர்வதேச பொலிஸ் உதவியுடன் கைது செய்திடும் நடவடிக்கையில் இலங்கை பொலிஸ் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது
- குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா
- துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர்
- லங்கா சதோசா 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கிறது
- அஸ்வசூமா சம்பந்தப்பட்ட மாபெரும் மோசடி
- மோட்டார் சைக்கிள் விபத்துகளில் 749பேர் பலி
- பல பகுதிகளில் 75 மி.மீ-க்கு மேல் மழை
- சிறைச்சாலை அமைப்பு கடுமையான நெருக்கடியில் உள்ளது
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ
- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்
மின்சார சபை ஆப்பு மின்சார சபைக்கு எதிராக போரட்டம் நடத்திய 66 பேர் நீக்கம்
மின்சார சபை ஆப்பு மின்சார சபைக்கு எதிராக போரட்டம் நடத்திய 66 பேர் நீக்கம்
இலங்கை மின்சார சபை மறு சீரமைப்புக்கு எதிராக போரட்டம் நடத்திய 66 பேர் பணி நீக்கம் செய்ய பட்டு ஆப்பு அடித்துள்ளது இலங்கை மின்சார சபை .
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு புதிய நவீன மயமாக்களுக்கு உள்ளாக்கும் வகையில் மறுசீரமைப்பு நடவடிக்கை இலங்கை மின்சார சபை வாரியம் எடுத்து வந்தது .
அவ்வாறான நவீன மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்களில் 66 பேரே ,இவ்விதம் இலங்கை மின்சாரா சபை தலைமை அறிவிப்பினால் பணிநீக்கம் செய்ய பட்டுள்ளனர் .
பொலிஸ் துப்பாக்கி சூடு துப்பாக்கி சூட்டில் இறந்தவருக்கு ஒரு மில்லியன் இழப்பு வழங்கிய பொலிஸ்
பொலிஸ் துப்பாக்கி சூடு துப்பாக்கி சூட்டில் இறந்தவருக்கு ஒரு மில்லியன் இழப்பு வழங்கிய பொலிஸ்
பொலிஸ் நாரம்மல பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தியதில் லொறி சாரதி ஒருவர் பலியானார் ,இந்த துப்பாக்கி சூட்டில் இறந்தவருக்கு ஒரு மில்லியன் இழப்பு வழங்கிய பொலிஸ் சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையில் தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பாவம் தேர்தலில் மிக பெரும் எதிர்வினையை ஆற்றும் என்பதால் ,போலீஸ் துப்பாக்கி சூட்டில் இறந்தவருக்கு பொலிஸார் இந்த ஒரு மில்லியன் இழப்பு தொகையை வழங்கியுள்ளனர் .
இலங்கையில் அப்பாவி மக்கள் மீது ஆதாரமற்ற நிலையில் பொலிஸ் துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது .
குற்றவாளியின் காலின் கீழே பொலிஸ் துப்பாக்கி சூடு நடத்த வேண்டும் என்கின்ற விதி உள்ள பொழுதும் ,அதனை மதிக்க மறந்து இவ்வாறு கண்மூடித்தனமாக பொலிஸ் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவங்கள் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இந்த துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு வழங்கிய பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யபட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது .
நோயாளியை தூக்கி சென்ற அவலம் வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு கெடுபிடி
நோயாளியை தூக்கி சென்ற அவலம் வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு கெடுபிடி
திருகோணமலை பொது வைத்தியசாலையில் நோயாளியை கொண்டு செல்வதற்கு சக்கர நாற்காலி வழங்கப்படாமையால் அவரின் உறவினர்கள் நோயாளியை தூக்கிக் கொண்டு சென்ற சம்பவம் நேற்று (19) இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை வைத்தியசாலையில் எலும்பு முறிவுக்கு உள்ளாகி சிகிச்சை பெறுவதற்காக சென்ற நோயாளியை கொண்டு செல்வதற்கு சக்கர நாற்காலி வழங்கப்படவில்லை எனவும்
இதனால் நோயாளியை தூக்கிக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுபோன்ற பல சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் இதனால் நோயாளிகள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிய வருகின்றது.
நோயாளியை தூக்கி சென்ற அவலம் வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு கெடுபிடி
அத்துடன் நோயாளிகளுக்கான கட்டில்கள் பற்றாக்குறையின் காரணமாக தரையில் காட்போட் அட்டைகளை விரித்து படுக்க வேண்டி இருப்பதாகவும் நோயாளிகள் கவலை வெளியிடுகின்றனர்.
திருகோணமலை வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர்கள், மருந்து மற்றும் வைத்தியசாலை உபகரணங்களின் பற்றாக்குறையின் காரணமாகவும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவருகின்ற பணிப்பகிஷ்கரிப்பின் காரணமாகவும் சிறந்த சேவையினை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாகவும் நேயாளிகள் விசனம் வெளியிடுகின்றனர்
- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது
- குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா
- துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர்
- லங்கா சதோசா 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கிறது
- அஸ்வசூமா சம்பந்தப்பட்ட மாபெரும் மோசடி
- மோட்டார் சைக்கிள் விபத்துகளில் 749பேர் பலி
- பல பகுதிகளில் 75 மி.மீ-க்கு மேல் மழை
- சிறைச்சாலை அமைப்பு கடுமையான நெருக்கடியில் உள்ளது
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ
- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்
ஈழ மக்கள் வாழ்வு சிறக்கும் தமிழக அரசு ஈழ மக்களுக்கு தெரிவிப்பு
ஈழ மக்கள் வாழ்வு சிறக்கும் தமிழக அரசு ஈழ மக்களுக்கு தெரிவிப்பு
ஈழ மக்கள் வாழ்வு சிறக்கும் என ஆளும் தமிழக அரசு முதல்வர் ஸ்டாலின் ஈழ மக்களுக்கு தெரிவித்துள்ளார்
தமிழ் தேசிய அரசியல் வாதியாக விளங்கி வரும் சாணக்கியனிடம் இது தொடர்பாக தமிழக அரசு தெரிவித்துள்ளது .
இதே திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் ஈழ தமிழர் கூண்டோடு அழிக்க பட்டு அந்த விடுதலை இனம் காணாமல் ஆக்க பட்டது .
ஈழ மக்கள் வாழ்வு சிறக்கும் தமிழக அரசு ஈழ மக்களுக்கு தெரிவிப்பு
அவ்வாறான நிலையில் தற்போது ஈழ தமிழர்கள் வாழ்வு சிறக்கும் என கொறட்டை விட்டு உறங்கும்ஆளும் தமிழக அரசு தெரிவித்துள்ளது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது .
நாம் தமிழர் கட்சி அச்சம் இதன் ஊடக தமிழக அரசிடம் இருந்து பிரதி பலித்துள்ளதை இவை காண்பிக்கின்றன .
- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது
- குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா
- துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர்
- லங்கா சதோசா 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கிறது
- அஸ்வசூமா சம்பந்தப்பட்ட மாபெரும் மோசடி
- மோட்டார் சைக்கிள் விபத்துகளில் 749பேர் பலி
- பல பகுதிகளில் 75 மி.மீ-க்கு மேல் மழை
- சிறைச்சாலை அமைப்பு கடுமையான நெருக்கடியில் உள்ளது
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ
- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்
மீனவர் படகுகள் எரிப்பு படகுகள் இழந்து உடப்பு மீனவர்கள் கண்ணீரில் தவிப்பு
மீனவர் படகுகள் எரிப்பு படகுகள் இழந்து உடப்பு மீனவர்கள் கண்ணீரில் தவிப்பு
மீனவர் படகுகள் எரிப்பு தமது படகுகள் இழந்து உடப்பு மீனவர்கள் கண்ணீரில் தவிப்பு .இந்த படகுகளுக்கு தீ வைத்தது யார் என்பதை கண்டுபிடிக்கும் பணியில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
நள்ளிரவு தொழில் முடித்து தமது படகுகளை வாடியில் விட்டு அவர்கள் வீடு சென்றனர்.
அதிகாலை வேளை உடப்பு மீன் வாடிக்கு வருகை தந்த விஷமிகள் ,படகுகள் யாவற்றுக்கும் தீ வைத்து எரித்து விட்டு தப்பி சென்றுள்ளனர் .
தமது வாழ்வாதாரத்தை நடத்தும் மூலமான தமது மீன்பிடி படகுகள் இழந்து உடப்பு மீனவர்கள் கண்ணீரில் தவித்து வருகின்றனர் .
இலங்கையில் இவ்வாறான மீன்படி படகுகள் எரிப்பது இப்போது சாதாரண ஒரு செயலாக மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .
மாமாவை கடத்தி மிரட்டிய மன்மதன் கைது
மாமாவை கடத்தி மிரட்டிய மன்மதன் கைது
கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் கர்ப்பமான தங்கையை கவனித்துக்கொள்ள தங்கையின் வீட்டுக்கு அக்காள் சென்றுள்ளார் அப்போது தங்கையின் கணவனுக்கும் அக்காவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தனிமையில் இனிமை கண்டனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…
சென்னை கொடுங்கையூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சாமுவேல் (வயது 55). சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவருக்கு சோனியா (23), சொர்ணா (23) என 2 மகள்கள் உள்ளனர். சோனியா, 4 வருடங்களுக்கு முன்பு காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆழ்வான் (35) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 1 வருடங்களுக்கு முன்பு சோனியா கர்ப்பமானார். அவரை கவனித்து கொள்ள சொர்ணா, தனது அக்காள் வீட்டுக்கு சென்றார்.
அப்போது அவருக்கும், ஆழ்வானுக்கும் பழக்கம் ஏற்பட்டது. மனைவிக்கு தெரியாமல் சொர்ணாவை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
மாமாவை கடத்தி மிரட்டிய மன்மதன் கைது
இந்த உண்மை சோனியாவுக்கு தெரிந்த பிறகு இருவரையும் திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டில் தனித்தனியாக வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தார்.
ஆழ்வானுக்கு போதிய வருமானம் இல்லாததால் குடும்பம் நடத்த முடியாமல் குடிப்பழக்கத்துக்கு ஆளானார். அக்காள்-தங்கை இருவரையும் அடித்து உதைத்து சித்திரவதை செய்தார் இதனால் இருவரும் கொடுங்கையூரில் உள்ள தங்கள் தாய் வீட்டுக்கு வந்துவிட்டனர்.
தனது 2 மனைவிகளையும் அழைத்துச்செல்ல மாமனார் வீட்டுக்கு கடந்த 12-ந்திகதி ஆழ்வான், வந்தார். அப்போது அவருக்கும், மாமனார் சாமுவேலுக்கும் தகராறு ஏற்பட்டது. மறுநாள் சமாதானமாக பேசுவதுபோல் மாமனார் சாமுவேலை அழைத்துச்சென்ற ஆழ்வான், மாமனாருக்கு மதுபானம் வாங்கி கொடுத்தார். போதை தலைக்கேறியதும் அவரை கொடுங்கையூரில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்தார்.
பின்னர் தனது மனைவிகளுக்கு போன் செய்து, “உங்கள் தந்தையை கடத்தி விட்டேன். என்னுடன் குடும்பம் நடத்த இருவரும் வராவிட்டால் உங்கள் தந்தையை கொன்றுவிடுவேன்” என மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்காள்-தங்கை இருவரும் கொடுங்கையூர் பொலிசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் பொலிஸார் செல்போன் சிக்னலை வைத்து மாதவரம் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் அடைத்து வைத்திருந்த சாமுவேலை மீட்டனர். மேலும் ஆழ்வானையும் கைது செய்து விசாரித்தனர்.
அதில் மதுபோதைக்கு அடிமையான சாமுவேல், மகள்களின் வாழ்க்கையை பற்றி நினைக்காமல் மருமகனுடன் சேர்ந்து கடத்தல் நாடகமாடியது தெரிந்தது.
அவரை கடுமையாக எச்சரித்து அனுப்பிய பொலிஸார், மருமகன் ஆழ்வானை கைது செய்தனர்.
மேலும் விசாரணையில் அவர் ஏற்கெனவே தனக்கு 2 திருமணம் ஆனதை மறைத்து தற்போது அக்காள்-தங்கை இருவரையும் திருமணம் செய்ததும் தெரியவந்தது. கைதான ஆழ்வான் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
18 ஆண்டுகளாக தாம்பத்ய உறவு இல்லை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
18 ஆண்டுகளாக தாம்பத்ய உறவு இல்லை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
18 ஆண்டுகளாக, திருமணம் நடந்தும் தாம்பத்ய உறவு இல்லாத சூழலில் அந்நபர் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரினார். அதற்கு நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் நீதிபதிகள் ஷீல் நகு மற்றும் வினய் ஷரப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசித்திர வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது.
இதன்படி, மனுதாரருக்கு 2006-ம் ஆண்டு ஜூலையில் திருமணம் நடந்தது. ஆனால், அவருடன் சேர்ந்து வாழ அவருடைய மனைவி மறுத்திருக்கிறார்.
திருமண நிகழ்வை ஏற்று கொள்ள மறுத்ததுடன், கட்டாயப்படுத்தி திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க வைத்து விட்டனர் என்று அந்த பெண் கணவரிடம் முதலிரவில் கூறியுள்ளார். அந்த பெண் வேறொருவருடன் காதலில் இருந்துள்ளார். இதனால், கணவரிடம் தன்னை காதலரிடம் சேர்த்து வைக்கும்படியும் கெஞ்சியிருக்கிறார்.
இதனை கேட்ட அந்த நபர் அதிர்ச்சி அடைந்து உள்ளார். அதே மாதத்தில், அந்த கணவர் வேலைக்காக அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றிருக்கிறார். இதனால், அவருடைய மனைவி செப்டம்பரில், பிறந்த வீட்டுக்கு சென்றார். அதன்பின் அவர் வீடு திரும்பவேயில்லை.
18 ஆண்டுகளாக தாம்பத்ய உறவு இல்லை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
இதனால், 2011-ம் ஆண்டு போபாலில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி கணவர் வழக்கு பதிவு செய்திருக்கிறார். 2014-ம் ஆண்டு அவருடைய மனு தள்ளுபடியானது. இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார்.
இதுபற்றிய உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் அந்நபர் உடல்ரீதியிலான திறனற்றவராக இல்லாதபோது அல்லது குதியான காரணம் எதுவுமின்றி ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு, பாலியல் உறவு வைத்து கொள்ள ஒருதலையாக மறுப்பது என்பது, மனதளவில் கொடுமை செய்யும் அளவுக்கு கொண்டு அளவுக்கு கொண்டு செல்லும் என தெரிவித்தது.
இந்த திருமணம் முறைப்படி நடந்துள்ளது. குறுகிய காலத்தில் இந்தியாவை விட்டு கணவர் வெளிநாடு செல்வார் என்பது முன்பே முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த காலகட்டத்தில், திருமணம் முழுமையடைவதற்கான நம்பிக்கையுடன் மனுதாரர் இருந்துள்ளார்.
ஆனால், அதற்கு அவருடைய மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த செயல் நிச்சயம் மனதளவில் கொடுமைப்படுத்துவதற்கு ஈடாகும் என்று நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. தனை அடுத்து அந்த நபருக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது.
இதனால், 18 ஆண்டுகளாக, திருமணம் நடந்தும் தாம்பத்ய உறவு இல்லாத சூழலில் அந்நபர் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றிருக்கிறார்.
பொலிஸ் துப்பாக்கி சூடு ஒருவர் பலி துப்பாக்கி சூட்டுக்கு எதிராக மக்கள் போராட்டம்
பொலிஸ் துப்பாக்கி சூடு ஒருவர் பலி துப்பாக்கி சூட்டுக்கு எதிராக மக்கள் போராட்டம்
நாரம்மல பொலிஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் பலியாகியுள்ளார் .இவரது மரணத்தை கண்டித்து பொலிஸ் துப்பாக்கி சூட்டுக்கு எதிராக மக்கள் பெரும் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் .
நாரம்மல பொலிஸ் வழியாக பயணித்த லொறியை மறித்த பொழுது அது நிறுத்தாமல் சராதி ஒட்டி சென்ற நிலையில் துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது .
இதில் சராதி பலியாகியுள்ளார் .பொலிஸ் துப்பாக்கி சூட்டில் பலியானவர் மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்க பட்டுள்ளது .
மேற்படி விடயம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்த்தியை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையில் விசா பெற இலகு வழி
இலங்கையில் விசா பெற இலகு வழி
இலங்கையில் மக்கள் விசா பெற இலகு வழி அறிமுக படுத்த படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது .
வழமையாக விசா பெறுவதற்கு இலக்கையர் பெற்று வந்த இன்னல்கள் நீங்கி ,புதிய நவீன மாயமாக்களுக்கு உள்ளான நிலையில் ,இவை சரி செய்யப்பட உள்ளதாக ,இலங்கை குடியகல்வு குடிவரவு அமைச்சு தெரிவித்துள்ளது .
இலங்கையில் இலங்கையர்கள் ,வெளிநாட்டவர்கள் என பல தரப்பட்டவரும் இந்த விசா பெற பல சிரமங்களை சந்தித்து வந்தனர் .
அவை இப்பொழுது நீக்க பட்டு சுலபமாக விசா பெறும் வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக அறிவிக்க பட்டுள்ளது
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சிறிதரன்|தடுக்கும் சுமந்திரன்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சிறிதரன்|தடுக்கும் சுமந்திரன்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சிறிதரன் நியமிக்க படவேண்டும் என பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர் ,ஆனால் அதனை தடுக்கும் நகர்வில் சுமந்திரன் ஈடுபட்டுள்ளார் .
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்த இரா சம்பந்தன் மூப்பாகி விட்ட காரணத்தால் , தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டிய நெருக்கடியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சிக்கி உள்ளது .
தமிழீழ விடுதலை புலிகளினால் உருவாக்க பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு ,உலக தமிழ் மக்கள் மத்தியில் அதனால் நன்மதிப்பை பெற்றுள்ளது .
ஆனால் இடையில் நுழைந்த எம் ஏ சுமந்திரன் செயல் பாட்டினால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உடைந்து காணப்படுகிறது .
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சிறிதரன்|தடுக்கும் சுமந்திரன்
இதே தமிழ் தேசிய கூட்டமைப்பில் சுமந்திரன் தொடர்ந்து நீடித்தால் கட்சி காணாமல் போகும் நிலை ஏற்படும் என மக்கள் தமது கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர் .
இவ்வாறான கால பகுதியில் கல்விமானாகவும் ,புத்தியீவியாகவும் விளங்கி வரும் பாராளுமன்ற உறுப்பினர் ,சிவஞானம் சிறிதரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக பொறுப்பேற்கும் தகமை கொண்டவர் என மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
கொழும்பின் முகவராக செயல் பட்டு தமிழ் தேசிய இலக்கை சிதைத்து ,ஒன்று பட்டு பணியாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைத்தலை குழப்பிய நபர்களில் சுமந்திரன் முதன்மை வைக்கிறார் .
அதனால் சுமந்திரனுக்கு எதிராக சகா உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர் .
சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக அமர்த்த பட்டால் கூட்டமைப்பு என்கின்ற கட்சி காணாமல் போகும் என யோகேஸ்வரன் திறந்த மனதோடு தனது கருத்தை வெளியிட்டு ,ஸ்ரீதரனுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார் .
பற்றைக்குள் துப்பாக்கி குண்டு துப்பாக்கியுடன் பற்றையை சுற்றிவளைத்த பொலிஸ்
பற்றைக்குள் துப்பாக்கி குண்டு துப்பாக்கியுடன் பற்றையை சுற்றிவளைத்த பொலிஸ்
பற்றைக்குள் துப்பாக்கி குண்டு கண்டுபிடிக்க பட்ட நிலையில் துப்பாக்கி தாங்கிய பொலிசார்
குறித்த பற்றையை சுற்றிவளைத்து சோதனை நடத்தினர் .
வன்னி புதுக்குடியிருப்பு மாலிகைத்தீவு பகுதியில் உள்ள பற்றைக்குள் இருந்து 37 துப்பாக்கி குண்டுகள் மீட்க பட்டன .
இந்த துப்பாக்கி குண்டுகள் யாவும் 50 மில்லி மீட்டர் கனரக துப்பாக்கிக்கு பயன்படுத்த படும் குண்டுகள் என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளன .
போர் முடிவடைந்து 14 வருடங்கள் கழிந்த பின்னர் ,எவ்வாறு இந்த பற்றைக்குள்
குறித்த துப்பாக்கி குண்டுகள் ,வந்தடைந்தன என்பது தொடர்பில் போலீசார் எதனையும் தெரிவிக்கவில்லை .
பற்றைக்குள் துப்பாக்கி குண்டு துப்பாக்கியுடன் பற்றையை சுற்றிவளைத்த பொலிஸ்
குறித்த ஆயுதங்கள் கண்டுபிடிக்க பட்ட பகுதிகளில் ஆட்கள் நடமாட தடை விதிக்க பட்டு, விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
தேர்தல் இடம்பெற உள்ள வேளை பார்த்து ,இவ்வாறான ஆயுதங்கள் கண்டுபிடிக்க படுகின்றமை இங்கே கவனிக்க தக்கது .
ஆயுதங்களை வைத்து விட்டு அவற்றை அதே இடத்தில் எடுத்து பர பரப்பை கிளப்பும் ,நல்லாட்சி அரசியல் வாதிகள் சித்து விளையாட்டு இதுவென தெரிவிக்க படுகிறது
- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது
- குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா
- துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர்
- லங்கா சதோசா 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கிறது
- அஸ்வசூமா சம்பந்தப்பட்ட மாபெரும் மோசடி
- மோட்டார் சைக்கிள் விபத்துகளில் 749பேர் பலி
- பல பகுதிகளில் 75 மி.மீ-க்கு மேல் மழை
- சிறைச்சாலை அமைப்பு கடுமையான நெருக்கடியில் உள்ளது
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ
- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்
கொழும்பில் உள்ள சிசிரிவி போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதம்
கொழும்பில் உள்ள சிசிரிவி போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதம்
கொழும்பில் உள்ள சிசிரிவி அமைப்பின் மூலம் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் நபர்கள் அடையாளம் காணும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இவ்வாறு போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் நபர்கள் அடையாளம் காணப்பட்டு அபராத சீட்டு வாகன உரிமையாளருக்கு அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் திகதி முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து வௌியான அறிவிப்பு
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து வௌியான அறிவிப்பு
2024 வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட 10,000 ரூபா சம்பள அதிகரிப்பின் முதற்கட்டமாக 5,000 ரூபா கொடுப்பனவு தொடர்பான பணத்தை திறைசேரி விடுவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்காக தற்போது சுமார் 95 பில்லியன் ரூபா செலவிடப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனவரி மாதம் முதல் இந்த பணம் மேலும் 7 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கும் எனவும், ஏப்ரல் மாதம் முதல் 10,000 ரூபா சம்பள அதிகரிப்புக்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதன் பின்னர் அரசாங்கம் 14 பில்லியன் ரூபாவை மேலதிகமாக செலவிடவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பணம் அச்சிடுவதும் கடன் வாங்குவதும் நிறுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில், செலவு மேலாண்மை மூலம் மட்டுமே குறித்த தொகையை சேமிக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் ரணிலின் கபட நாடகம் சஜித் முழக்கம்
ஜனாதிபதி தேர்தல் ரணிலின் கபட நாடகம் சஜித் முழக்கம்
ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்ற செய்தியை பரப்பி மக்களிடமிருந்து கிடைக்கும் கருத்துக்களை ஆராய்ந்து ஜனாதிபதி எடை போட்டு வருகிறார். சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் ஐ.தே.க வேட்பாளர் யார் என்பதில் ஜனாதிபதியும் மொட்டும் தற்போது குழப்பத்தில் உள்ளனர்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு கூட முதுகெலும்பில்லாத இந்த அரசாங்கம் பொதுத் தேர்தல்,ஜனாதிபதித் தேர்தல் என்று தம்பட்டம் அடித்து வருகிறது என்று குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தியும் மக்களும் தயாராகவே உள்ளனர் என்றார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 68 ஆவது கட்டமாக,அனுராதபுரம் ஸ்ரீ துடுகெமுனு மகா வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (17) இடம்பெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இப்பாடசாலையில் நடனம் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நடனம் மற்றும் அரங்கேற்றங்களுக்குத் தேவையான ஆடைகளைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நிதியுதவியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களால் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
ஜனாதிபதி தேர்தல் ரணிலின் கபட நாடகம் சஜித் முழக்கம்
மோசடியில் ஈடுபட்ட வியட்நாம் சுகாதார அமைச்சருக்கு சிறை தண்டனை, மோசடியில் ஈடுபட்ட இலங்கையின் சுகாதார அமைச்சருக்கு வரப்பிரசாதம்!
மோசடி கும்பலொன்று ஆளும் தரப்பு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சேர்ந்து மனித இம்யூனோகுளோபுலின் உள்ளிட்ட ஏராளமான மருந்துகளில் மோசடி செய்துள்ளனர்.மனித இம்யூனோகுளோபுலின் என்ற மருந்துடன் நீர் கலக்கப்பட்டுள்ளது.ஆளும் தரப்பு அமைச்சர்கள் ஜனாதிபதியின் பாதுகாப்பில் திருடும்போது கூட ஜனாதிபதி இந்த அமைச்சர்களை வெளியேற்றாது அவர்களை பாதுகாத்துக் கொண்டே வருகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மருந்துப்பொருள் மோசடி செய்த சுகாதார அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்த போது ஜனாதிபதி,மொட்டுக் கட்சியின் 113 பேரை பயன்படுத்தி சுகாதார அமைச்சரைப் பாதுகாத்தாலும்,சமீபத்தில், வியட்நாமில் கூடிய விலையில் கோவிட் பரிசோதனை உபகரண தொகுதிகளை
கொள்வனவு செய்யும் விடயத்தில் நிதி முறைகேடு காரணமாக,22 இலட்சம் அமெரிக்க டொலர் திருடிய குற்றத்துக்காக வியட்நாம் சுகாதார அமைச்சருக்கு 18
வருடங்களும்,அமைச்சருடன் இணைந்து திருட்டில் ஈடுபட்ட தொழிலதிபருக்கு 29 வருடங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.வியட்நாமில் இவ்வாறு நடக்கும்
போது, இந்நாட்டில் ஊழல் மோசடியில் ஈடுபட்ட சுகாதார அமைச்சரை பாதுகாக்க ஜனாதிபதி முதல் ராஜபக்ச,மொட்டுக் குழுவின் கையாட்கள் சகலரும் கை தூக்கி உதவினார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
வியட்நாம் இலங்கையைப் போல் வங்குரோத்தல்லாத வேகமாக அபிவிருத்தி கண்டு வரும் நாடு.இந்த அபிவிருத்தியடைந்து வரும் நாட்டிலும் திருட்டுக்கு தண்டனை வழங்கப்படும் போது,வங்குரோத்தான நாட்டில்,மக்கள் மீது பெரும் வரிச்சுமை சுமத்தப்பட்டு,திருட்டு,கடத்தல் பெரிய அளவில் நடத்தப்பட்டு வருகிறது.இந்நாட்டை அழித்த வங்குரோத்தடையச் செய்த திருடர்களை பிடித்து அவர்கள் திருடிய வளங்களை இந்நாட்டின்
கல்வி,சுகாதாரம்,விவசாயம் போன்றவற்றிற்கு ஒதுக்குவதே ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான நோக்கமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
பாடசாலைகளில் குடிநீர் துண்டிக்கப்பட்டாலும் ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு பஞ்சமில்லை.
ஜனாதிபதி தேர்தல் ரணிலின் கபட நாடகம் சஜித் முழக்கம்
நாட்டில் 18% VAT வரியை அதிகரித்து ஜனாதிபதி வெளிநாட்டுப் பயணங்கள் செல்வது போலவே 250 மில்லியன் ரூபா செலவழித்து செங்கடலைப் பாதுகாக்க கடற்படையை அனுப்பினாலும்,
பாடசாலைகளால் குடிநீர் கட்டணத்தை கூட செலுத்த முடியாத நிலையை எட்டியுள்ளதாகவும்,வியட்நாமில் தண்டிக்கப்பட்டதைப் போல,ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வெளிப்படத்தன்மை மற்றும் பாரபட்சமற்ற நீதித்துறை கட்டமைப்பு மூலம் திருடர்கள் பிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
கமிஷன் இல்லாமல் நேர்மையாகவும் தூய்மையாகவும் மக்களுக்கு சேவை செய்யும் திறன் தனக்கு இருப்பதாகவும்,இதற்காக தம்மை சுற்றி பெரும் நன்கொடையாளர்கள் இருக்கின்றனர் என்றும்,இங்கு பணம் எதுவும் தனக்கு கிடைக்கப்பெறுவதில்லை என்றும், உரிய உபகரணங்களை மாத்திரமே தாம் பெற்றுக் கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எனவே,ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், ஒவ்வொரு நிதி பரிவர்த்தனையும் மக்கள் தெரிந்து கொள்ளும் பொருட்டு முன்வைக்கப்படும்.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிக்கைகளை முன்வைக்காமல் தொடர்புடைய தகவல்களை அணுக ஒரு நேரடித் திட்டம் வகுக்கப்படும். ஒவ்வொரு கொள்முதல் திட்டத்திற்கும் பல்தரப்பு அங்கீகாரத்தைப் பெறுவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.


















































