இலங்கைக்கு 600 மில்லியன் டொலர் வழங்கும் வங்கி
Posted in இலங்கை செய்திகள்

ஜனவரி மாதத்தில் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர்

ஜனவரி மாதத்தில் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

கடந்த வருடம் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 11.4 வீத அதிகரிப்பு என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தனது X கணக்கில் குறிப்பொன்றையிட்டு அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி மாதத்தில் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர்

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் 437.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளனர்.

இதேவேளை, பெப்ரவரி மாதம் முதல் 8 நாட்களில் 60,122 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை வந்துள்ளனர்.

இதன்படி இந்த ஆண்டு இதுவரை 268,375 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதுடன் அதன் எண்ணிக்கை 42,768 ஆகும்.

மேலும், ரஷ்யாவில் இருந்து 39,914 சுற்றுலா பயணிகளும், பிரித்தானியாவில் இருந்து 22,278 சுற்றுலா பயணிகளும், ஜேர்மனியில் இருந்து 18,016 சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

காணி தகராறில் ஒருவர் சுட்டுக்கொலை

காணி தகராறில் ஒருவர் சுட்டுக்கொலை

புத்தளம் – மஹகும்புக்கடவல, செம்புகுளிய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (10) பிற்பகல் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

காயமடைந்த நபர் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணி தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

முல்லேரியாவில் ஒருவர் கழுத்தறுத்து கொலை

முல்லேரியாவில் ஒருவர் கழுத்தறுத்து கொலை

முல்லேரியா, வெகந்த பிரதேசத்தில் 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், கொலையாளி யார் என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரின் வீட்டில் நேற்று (09) இரவு மதுபான விருந்து ஒன்றும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

அயோத்தி ராமர் கோவிலில் மகிந்த மகன் நாமல் கும்பிடு
Posted in இலங்கை செய்திகள்

அயோத்தி ராமர் கோவிலில் மகிந்த மகன் நாமல் கும்பிடு

அயோத்தி ராமர் கோவிலில் மகிந்த மகன் நாமல் கும்பிடு

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம் செய்வதற்காக இரண்டு நாட்கள் தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு உத்தரப்பிரதேசத்திற்கு சென்றுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் தங்கியிருந்த அவர், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதல்வர் பிரிகேஷ் பதேக் ஆகியோரை சந்தித்தார்.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உத்தரபிரதேசத்தில் தாம் வழங்கிய அன்பான விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்தார்

யாழில் கரிகாரன் இசை நிகழ்ச்சியில் குழப்பம் விரட்டிய மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் கரிகாரன் இசை நிகழ்ச்சியில் குழப்பம் விரட்டிய மக்கள்

யாழில் கரிகாரன் இசை நிகழ்ச்சியில் குழப்பம் விரட்டிய மக்கள்

யாழில் கரிகாரன் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அந்த நிகழ்வு நிறுத்தப்பட்டு அவர்கள் விரட்டி அடிக்க பட்டனர் .

மக்கள் மேடைக்கு அருகில் சென்று இந்தியா இசை மற்றும் நடிகை நடிகைகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதால் பெரும் குழப்பமும் பதட்டமும் ஏற்பட்டது

அதனால் அந்த நிகழ்வு தொடர்ந்து நடத்திட முடியா நிலை காணப்பட்டதாக தெரிவிக்க படுகிறது .

யாழில் கரிகாரன் இசை நிகழ்ச்சியில் குழப்பம் விரட்டிய மக்கள்

இலங்கை வருகை தரும் இந்திய படைப்பாளிகள் சிலரது கருத்துக்கள் நடவடிக்கை மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தும் வண்ணம் விளங்கிய நிலையில் ,இந்த நிகழ்வு போலீசாரால் பாதுகாப்பு கருதி நிறுத்த பட்டதாக தெரிவிக்க படுகிறது .

இது தொடர்பான காணொளிகள் சில வெளியக பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

பிக்கு கொலை துப்பாக்கியுடன் குற்றாவளி கைது

பிக்கு கொலை துப்பாக்கியுடன் குற்றாவளி கைது

பிக்கு ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அந்த கொலையா புரிந்த நபர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார் .

மல்வத்து ஹிரிபிட்டிய பகுதியை சேர்ந்த பிக்குவே படுகொலை செய்ய பட்டு இருந்தார் .

இந்த பிக்கு படு கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணைகளின் பொழுதே கொலையை புரிந்த குற்றவாளி தாக்குதலுக்கு பயன் படுத்திய துப்பாக்கியதுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .

இலங்கையில் சேமிப்பாக காலங்களாக இவ்வாறான துப்பாக்கி கலாச்சாரங்கள் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .

இலங்கை இந்திய திடீர் பேச்சு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை இந்திய திடீர் பேச்சு

இலங்கை இந்திய திடீர் பேச்சு

இலங்கை இந்தியாவுக்கு இடையில் திடீர் பேச்சு இடம்பெற்றுள்ளது .இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி. எஸ். ஜெய்சங்கரை சந்தித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சில் ஈடுபட்டார் .

இலங்கைக்கு தேவை படும் அவசர உதவிகள் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க பேசியுள்ளதாகவும் ,அவர்கள் விடுக்க பட்ட அந்த உதவிகள் விரைவில் இலங்கைக்கு கிடைக்க பெற வழி வகை செய்து கொடுக்க படும் என எதிர் பார்க்க படுகிறது .

வீடியோ

ரயில் மோதி வாலிபன் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

மலையக ரயில் போக்குவரத்து பாதிப்பு

மலையக ரயில் போக்குவரத்து பாதிப்பு

நாவலப்பிட்டியில் இருந்து நானுஓயா வரை பயணித்த சரக்கு ரயில் தடம் புரண்டதால் மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இன்று மாலை 5:00 மணியளவில் ரயிலின் இயந்திரம் மற்றும் ஒரு பெட்டி தடம் புரண்டுள்ளது.

இதனையடுத்து, கொழும்பில் இருந்து பதுளை வரை செல்லும் ரயில்கள் வட்டவளை ரயில் நிலையத்துக்கும், பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் ரயில்கள் ஹட்டன் நிலையம் வரை இயக்கப்படும் என ஹட்டன் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

வீடியோ

கேரளா அமைச்சருடன் அனுர சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

கேரளா அமைச்சருடன் அனுர சந்திப்பு

கேரளா அமைச்சருடன் அனுர சந்திப்பு

இந்தியா சென்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் நேற்று கேரளா மாநிலத்தின் தொழில்துறை அமைச்சர் பி.ராஜிவை சந்தித்துள்ளனர்.

மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

ஐந்து நாள்கள் விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசநாயக்க உள்ளிட்ட குழுவினர் நேற்றைய இறுதி நாளில் இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நிலவும் கேரளாவிற்கு சென்றிருந்தனர்.

இதன்போது, தொழில் மற்றும் சட்டம் தொடர்பிலான அமைச்சர் பி.ராஜிவினை சந்தித்துள்ளனர்

வீடியோ

30 தோட்டாக்களுடன் காணாமல் போன மெகசின் கண்டுபிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

30 தோட்டாக்களுடன் காணாமல் போன மெகசின் கண்டுபிடிப்பு

30 தோட்டாக்களுடன் காணாமல் போன மெகசின் கண்டுபிடிப்பு

காணாமல் போயிருந்த இராணுவ பொலிஸ் படைக்கு சொந்தமான T-56 துப்பாக்கியின் மெகசீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இராணுவ ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

பொல்ஹேன்கொட இராணுவ பொலிஸ் படை முகாமில் இருந்த 30 தோட்டாக்களுடன் கூடிய ரக T-56 ரக மெகசீன் இராணுவ பொலிஸ் படை முகாமின் நீர் வடியும் வடிகாலில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

30 தோட்டாக்களுடன் காணாமல் போன மெகசின் கண்டுபிடிப்பு

இன்று (09) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதலில், சிவில் பணியாளர்கள் பயன்படுத்தும் சுகாதார அமைப்புக்கு அருகிலுள்ள வடிகாலில் இருந்து, காணாமல் போன குறித்த மெகசின் 30 தோட்டாக்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இராணுவ பொலிஸார் மற்றும் கிருலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஜோர்தானில் இருந்து 66 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்
Posted in இலங்கை செய்திகள்

ஜோர்தானில் இருந்து 66 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்

ஜோர்தானில் இருந்து 66 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்

ஜோர்தானில் இரண்டு ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் சிரமத்திற்குள்ளான 66 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

ஜோர்டானில் இத்தொழிற்சாலைகளை நடத்தி வந்த இந்திய முதலீட்டாளர்கள் அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு தெரிவிக்காமல் தொழிற்சாலைகளை மூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், அந்த தொழிற்சாலைகளில் பணியாற்றிய இலங்கையர்கள் குழுவொன்று தமக்கான அனைத்து சலுகைகளையும் பெற்றுக் கொண்டு இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக தாயகம் திரும்பியிருந்தனர்.

இந்த ஜோர்தானிய தொழிற்சாலையில் பணிபுரிந்த மற்றுமொரு இலங்கையர் குழு எதிர்வரும் இரண்டு நாட்களில் இலங்கை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஜோர்தானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

ரணிலுக்கு எதிராக யாழில் தமிழ் மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

புலம்பெயர் இலங்கையர்களை சந்தித்த ஜனாதிபதி

புலம்பெயர் இலங்கையர்களை சந்தித்த ஜனாதிபதி

7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவுஸ்திரேலியாவின் பேர்த் நகருக்குச் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவுஸ்திரேலியாவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களை பேர்த்தில் சந்தித்தார்.

இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் பொருளாதார நவீனமயமாக்கல் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கமளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, காலநிலை மாற்றம், சுற்றுலா மற்றும் பொருளாதார அபிவிருத்தி போன்ற துறைகளில் அரசாங்கத்திற்கு உதவ விரும்புவதாக சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கையர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வொங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

காதல் உணர்வை அதிகரிக்கும் சொக்லெட்
Posted in இலங்கை செய்திகள்

காதல் உணர்வை அதிகரிக்கும் சொக்லெட்

காதல் உணர்வை அதிகரிக்கும் சொக்லெட்

பிப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்கான கொண்டாட்டங்கள் பிப்ரவரி 7 ஆம் திகதியே தொடங்கும் நிலையில், மூன்றாம் நாளாக சொக்லெட் தினம்

கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், உங்கள் அன்பு பிரியருக்கு நீங்கள் பரிசளிக்கும் சொக்லெட்டில் உள்ள நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.

சொக்லெட் ‘ட்ரைப்டோஃபன் ’என்கிற மூலப்பொருளை அதிகமாக கொண்டிருக்கிறது. அது நம் உடலில் உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடிய செரோடின் அமிலத்தை சுரக்கச் செய்கிறது. அதேபோல் கஃபைன் என்கிற மூலப்பொருளும் அதில் இருக்கிறது. இது மெல்லிய உணர்வை அதாவது

ரொமாண்டிக் மூடை தூண்டுகிறது. அதனால்தான் காதலர் தினத்தில் சாக்லெட்டை பரிமாறிக் கொள்கின்றனர். நீங்களும் உங்கள் காதலியிடமிருந்து ஒரு முத்தம் வேண்டுமெனில் பெரிய சொக்லெட்டை வாங்கிக் கொடுங்கள்.

காதல் உணர்வை அதிகரிக்கும் சொக்லெட்

உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளை கரைக்கும் ஆற்றல் சொக்லெட்டில் இருக்கிறது. இதை ‘ஜர்னல் ஆஃப் நியூட்ரீஷியன்’ அமைப்பு ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளது.

சொக்லெட் உண்பதால் மூலையின் செயல்பாடுகள் கூர்மையாகின்றன. ஹார்வர்ட் ஆராய்ச்சியில் தினம் இரண்டு டம்ளர் சூடான சொக்லெட் ஷேக் உண்பதால் மூளையின் செயல் ஆற்றல், நினைவாற்றல் , அறிவாற்றல் போன்றவை அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

சொக்லெட் உண்பதால் இதயம் தொடர்பான பிரச்னைகள் வராது என பி.எம்.ஜே. நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளது.

தினமும் 100 கிராம் சொக்லெட்டை சாப்பிட்டு வந்தால் பக்கவாதம் வராது என ஜர்னல் ஹார்ட் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. கனாவில் நிகழ்த்திய ஆய்வில் சாக்லெட் உட்கொள்வதால் பக்கவாதம் இருப்போருக்கு 22 சதவீதம் குறைய வாய்ப்பு என தெரிவித்துள்ளது.

இத்தனை நன்மைகளா ? என அதிகமாக சொக்லெட்டுகளை உண்டாலும் அது ஆபத்தானதே. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது அனைவருக்கும் தெரியும். எனவே அளவாக உண்ணுங்கள் ; ஆரோக்கியமாக வாழுங்கள்.

14000 வீடுகளுக்கு இலவச சூரிய ஔி மின்சாரம்
Posted in இலங்கை செய்திகள்

நாட்டில் மின் நெருக்கடி ஏற்படும் எச்சரிக்கை

நாட்டில் மின் நெருக்கடி ஏற்படும் எச்சரிக்கை

உத்தேசிக்கப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க மின் நிலையத் திட்டங்களை நடைமுறைப்படுத்தாவிட்டால், இந்த வருடத்தில் நாட்டில் மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நிதி திவால்நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்பிப்பதற்காக மின்சார சபையின் அதிகாரிகள் பாராளுமன்ற விசேட குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் இதன்போது கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி தொடர்பில் விடயங்கள் கேட்கப்பட்டன.

நாட்டில் மின் நெருக்கடி ஏற்படும் எச்சரிக்கை

இதன்போது, கருத்து தெரிவித்த மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா, கடந்த அரசாங்கங்கள் எடுத்த சில தீர்மானங்கள் மற்றும் மின் உற்பத்தித் திட்டங்களுக்கு அமைவாக மின் உற்பத்தி நிலையங்கள் இயங்காததன் விளைவுகளை மக்கள் தற்போது அனுபவிக்க நேரிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

செயற்திறன் ஆற்றல் வகைகளை பயன்படுத்தி எதிர்கால உற்பத்தித் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும் என மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா தெரிவித்தார்.

இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள்

வட்டியில்லா கல்விக்கடனை தொடர்ந்தும் வழங்க தீர்மானம்

வட்டியில்லா கல்விக்கடனை தொடர்ந்தும் வழங்க தீர்மானம்

கே. ஐ. யு மற்றும் ஹொரைஸன் தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் பிள்ளைகளுக்கு அரச வங்கிகளினால் வழங்கப்படும் வட்டியில்லாக் கடன் வசதிகளை தொடர்ந்தும் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம்ஜயந்த இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த வாய் மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதற்காக அமைச்சரவை தற்போது தயாராகி வருவதாகவும், அதற்கான வேலைகள் எதிர்வரும் இரண்டு மூன்று வாரங்களுக்குள் பூர்த்தி செய்யப்பட்டு ஒப்புதல் பெற்றுக்கொள்வதுடன் தற்போது அந்த நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் தொடர்ந்தும் கல்விச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்; தற்போதைய ஜனாதிபதி 2017ஆம் ஆண்டில் இக்கடன் யோசனை முறையை ஆரம்பித்தார். ஏழாவது குழுவினர் இம்முறை உள்ளெடுக்கப்படுவர்.

வட்டியில்லா கல்விக்கடனை தொடர்ந்தும் வழங்க தீர்மானம்

தற்போது வரை 6 குழுக்கள் நிறைவு செய்துள்ளன. அண்ணளவாக 5000 பேரளவில் தனியார் பல்கலைக்கழகங்களில் வட்டியில்லாக் கடன் வசதிகளை இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிகளின் ஊடாக பிள்ளைகளுக்கு பட்டம் பெறுவதற்கு வழங்கப்பட்டது.

இந்தப் பிரச்சினையை இதற்கு முன்னரும் எதிர்கட்சித் தலைவர் முன்வைத்தாலும் அதன் பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடமெபெற்றது.

ஜனாதிபதியின் செயலாளரும், இலங்கை வங்கியின் பிரதி பிரதம முகாமையாளர் உட்பட பலரும், திறைசேரி அதிகாரிகளும், இணைந்து இதற்கான தீர்வைப் பெற்றுத் தந்தார்கள். இந்நிறுவனங்களுக்கு புதிதாக உள்ளெடுக்கப்பட்ட குழுவிற்கு கடன் வழங்காமை தாமதமாவதற்கு பிரதான காரணம் முதலாவது மற்றும் இரண்டாவது குழுவில் 200 பேரளவில் கடனை மீளச் செலுத்தாதிருப்பதாகும்.

முதலாவது மற்றும் இரண்டாவது குழுக்கள் பட்டம் முடியும் போது கொரோனாத் தொற்றுப் பிரச்சினை ஏற்பட்டதாக நான் இக்கலந்துரையாடலில் தெளிவுபடுத்தினேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் காணப்பட்டன. 200 என்றால் சராசரியாக பெரிய எண்ணிக்கை அல்ல. வங்கியின் மீளப்பெற்றுக்கொள்ளும் திணைக்களத்தினால் இது தொடர்பாக அறவீட்டைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிதாக பிணையாளிகள் இருவர் வங்கியினால் கோரி கடன் பணத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கடன் நிதி தொடர்பாக பூர்த்தி செய்து கடந்த வாரத்தில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சில் தனியார் பல்கலைக்கழகங்களின் மேலதிக செயலாளருக்கு ஊடக இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்குத் தெரியப்படுத்துவதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

வீடொன்றில் இருந்து தம்பதியினர் சடலமாக மீட்பு

வீடொன்றில் இருந்து தம்பதியினர் சடலமாக மீட்பு

வீடு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த தம்பதியினரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மிரிஹான ஜுபிலி மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து நேற்று (08) இந்த சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

பொலிசார் குறித்த வீட்டிற்கு சென்று சோதனை செய்தபோது, ​​வீட்டின் அறையில் கட்டிலில் சில நாட்களுக்கு முன் உயிரிழந்த ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் சமையலறை தரையில் நிர்வாணமாக பெண்ணின் சடலம் இருந்ததாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

சில நாட்களாக குறித்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதாக அயலவர் ஒருவர் மிரிஹான பொலிஸாருக்கு வழங்கிய அறிவித்தலின் படி குறித்த வீடு சோதனையிடப்பட்டுள்ளது.

80 வயதுடைய ஆணும் 96 வயதான பெண்ணுமே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

திருமணம் செய்த பெண் கைது

திருமணம் செய்த பெண் கைது

இலங்கையில் ஆண்ணொருவரை திருமணம் செய்து கொண்டு விசா இன்றி தந்தையுடன் தங்கியிருந்த எத்தியோப்பிய பெண், கண்டி சுற்றுலாத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் இலங்கையை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து அம்பிட்டிய பிரதேசத்தில் வசிப்பதாகவும், வெளிநாட்டு பெண், மீண்டும் வெளிநாட்டுக்குச் சென்றுவிடுவாரோ என அஞ்சிய இலங்கையை சேர்ந்த கணவர் பெண்ணின் கடவுச்சீட்டு மற்றும் ஏனைய ஆவணங்களை மறைத்து வைத்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

எத்தியோப்பிய பெண் தனது முந்தைய திருமணமான எத்தியோப்பியாவில் தனது இரண்டு குழந்தைகளுடன் இந்த நாட்டிற்கு வந்துள்ளார், மேலும் அவரது விசா ஜனவரி 17 ஆம் திகதி காலாவதியானது, சம்பவம் குறித்து கண்டி சுற்றுலாப் பொலிஸ் பிரிவு இந்தியாவிலுள்ள எத்தியோப்பிய தூதரகத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இளம் தாய் துஷ்பிரயோகம் மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி
Posted in இலங்கை செய்திகள்

பெண் வைத்தியர் துஷ்பிரயோகம்: ஆண் வைத்தியர் கைது

பெண் வைத்தியர் துஷ்பிரயோகம்: ஆண் வைத்தியர் கைது

மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் 28 வயதுடைய பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் வியாழக்கிழமை (8) கைது செய்யப்பட்டதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.

அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் 45 வயதுடைய திருமணமான வைத்தியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெண் வைத்தியர் துஷ்பிரயோகம்: ஆண் வைத்தியர் கைது

பெண் வைத்தியரின் தந்தை அளித்த முறைப்பாட்டின் பிரகாரம் ஆண் வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் வைத்தியர் வேறு வைத்தியசாலையில் இருந்து இடமாற்றம் பெற்று கடந்த 5ம் திகதி அரநாயக்க மாவட்ட வைத்தியசாலைக்கு பணிக்காக வந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான வைத்தியர் மற்றும் அப்போது கடமையில் இருந்த 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவத்திற்கு முகம் கொடுத்த பெண் வைத்தியர் கேகாலை போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

ஆட்டுப்பட்டி தெரு பொலிஸில் அதிர்ச்சி சம்பவம்

ஆட்டுப்பட்டி தெரு பொலிஸில் அதிர்ச்சி சம்பவம்

ஆட்டுப்பட்டி தெரு பொலிஸ் நிலையத்தின் சிறையில் இருந்த சந்தேகநபர்கள் இருவர், இனந்தெரியாத ஒருவர் வழங்கிய பால் பாக்கெட்டை அருந்தி சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இவர்களுக்கு வழங்கப்பட்ட பால் பாக்கெட்டில் விஷம் கலந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 25ஆம் திகதி ஜிந்துபிட்டிய பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இதன்போது சந்தேக நபர்களில் ஒருவரை பிரதேசவாசிகள் பிடித்ததுடன், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பிச் சென்றார்.

விசாரணையின் பின்னர், தம்பனை பகுதியில் வைத்து தப்பியோடிய துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதுடன், பின்னர் அவர் ஆட்டுப்பட்டி தெரு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அதன்படி குறித்த சந்தேகநபருக்கு உதவிய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் இருவரும் ஆட்டுப்பட்டி தெரு பொலிஸ் நிலையத்தில் ஒரே சிறையில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

ஆட்டுப்பட்டி தெரு பொலிஸில் அதிர்ச்சி சம்பவம்

இவ்வாறானதொரு பின்னணியில், துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் காதலி நேற்று காலை ஆட்டுப்பட்டி தெரு பொலிஸாருக்கு வந்து சுகம் விசாரித்ததுடன் மற்றுமொரு சந்தேக நபரிடம் நலம் விசாரிக்க மேலும் ஒருவரும் அங்கு வந்துள்ளார்.

குறித்த நபர், சந்தேக நபர்களிடம் இரண்டு மீன் பாணையும், பால் பால் பாக்கெட்டினை கொடுத்து விட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், சந்தேக நபர்கள் இருவரும் மீன் பாண்களை சாப்பிட்டுள்ளனர்.

ஜிந்துபிட்டியவில் துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு தம் கையில் வைத்திருந்த பால் பாக்கெட்டினை வழங்கியதாக துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் காதலி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அதைக் குடித்தவுடன் அவர் சுருண்டு விழுந்ததுடன், மற்றைய சந்தேக நபர் தரையில் விழுந்த பால் பாக்கெட்டை எடுத்து குடித்துள்ளார்.

இதனால் மயக்கமடைந்த சந்தேக நபர்கள், பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த பால் பாக்கெட்டில் விஷம் கலந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பால் பாக்கெட்டை கொடுத்த நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முள்ளிவாய்க்கால் கஞ்சி குடித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலை
Posted in இலங்கை செய்திகள்

யுக்திய பொலிஸ் நடவடிக்கையில் மேலும் பலர் கைது

யுக்திய பொலிஸ் நடவடிக்கையில் மேலும் பலர் கைது

யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 728 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 558 சந்தேக நபர்களும் குற்றவியல் பிரியவிற்கு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருந்த 170 சந்தேக நபர்களும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 122 கிராம் ஹெரோயின், 101 கிராம் ஐஸ், 5 கிலோ 217 கிராம் கஞ்சா மற்றும் 1,852 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.