மாத்தறையில் சட்டவிரோத உர விற்பனையில் நுகர்வோர்
Posted in இலங்கை செய்திகள்

மாத்தறையில் சட்டவிரோத உர விற்பனையில் நுகர்வோர்

மாத்தறையில் சட்டவிரோத உர விற்பனையில் நுகர்வோர்

மாத்தறையில் சட்டவிரோத உர விற்பனையில் நுகர்வோர் விவகார ஆணைய சோதனை

மாத்தறையில் உள்ள நுகர்வோர் விவகார ஆணையம்

மாத்தறையில் உள்ள நுகர்வோர் விவகார ஆணையம் (CAA), மார்ச் 30, 2026 அன்று பெறப்பட்ட ஒரு புகாரைத் தொடர்ந்து, சட்டவிரோத உர விற்பனையைக் குறிவைத்து ஒரு சிறப்பு சோதனையை நடத்தியுள்ளது.

அதிகாரிகளின் கூற்றுப்படி, மாத்தறை மாவட்ட அலுவலகத்தைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரிகள், கட்டாய விலை லேபிள்களை அகற்றியும், தயாரிப்பு

விவரங்களை மோசடியாக மாற்றியும் யூரியா உரம் விற்கப்பட்டு வந்த ஒரு இடத்தில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் போது, ​​நுகர்வோர் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி சேதப்படுத்தப்பட்டிருந்த 50 கிலோ யூரியா உரம் கொண்ட 179 மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதற்குப் பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சந்தேக நபர்கள் மாத்தறை

நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்

நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் நுகர்வோர் விவகார ஆணையம் தெரிவித்துள்ளது.

விலைகளைக் கையாளுவதன் மூலமும், தயாரிப்புத் தகவல்களைத் தவறாக வழிநடத்துவதன் மூலமும் நுகர்வோரையும் விவசாயிகளையும் சுரண்டும்

வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் வலியுறுத்தினர்.

இஸ்ரேலிய தாக்குதல் பத்திரிகையாளர்கள் பலி
Posted in இலங்கை செய்திகள்

மாத்தறையில் துப்பாக்கிச் சூடு

மாத்தறையில் துப்பாக்கிச் சூடு

மாத்தறையில் துப்பாக்கிச் சூடு ,மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை வீதிப் பகுதியில் காரில் வந்த ஒருவர், உணவக உரிமையாளரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.

நேற்று (25) இரவு இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை

துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றாலும், இந்தச் சம்பவத்தில் கைத்துப்பாக்கி ஒன்று பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான உணவக உரிமையாளர், துப்பாக்கிதாரியுடன் மோதலில் ஈடுபட்ட நிலையில், சந்தேக நபர் தப்பியோடியுள்ளார்.

கைத்துப்பாக்கி ஒன்று, நான்கு தோட்டாக்கள்

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் கைத்துப்பாக்கி ஒன்று, நான்கு தோட்டாக்கள் மற்றும் வெற்று ரவைகள் கண்டெடுக்கப்பட்டன.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் அல்லது சந்தேக நபர் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாத்தறை துப்பாக்கிதாரிகள் சிக்கினர்
Posted in இலங்கை செய்திகள்

மாத்தறை துப்பாக்கிதாரிகள் சிக்கினர்

மாத்தறை துப்பாக்கிதாரிகள் சிக்கினர்

மாத்தறை, கேகனதுர பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு துப்பாக்கிதாரிகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 15ஆம் திகதி முச்சக்கரவண்டியில் பயணித்த நபரை காரில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றிருந்தார்.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் வாகனங்களை பறிமுதல் செய்யும் நபரொருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரதமரின் விமானத்தால் மாத்தறையில் பலத்த சேதம்
Posted in இலங்கை செய்திகள்

பிரதமரின் விமானத்தால் மாத்தறையில் பலத்த சேதம்

பிரதமரின் விமானத்தால் மாத்தறையில் பலத்த சேதம்

முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டி மெலின் இறுதிச் சடங்கிற்கு வந்த பிரதமரின் விமானம் மாத்தறை கோட்டை மைதானத்தில் தரையிறங்க முட்பட்ட போது ஏற்பட்ட பிழையினால் அப்பகுதியிலிருந்த விடுதியின் கூரை மற்றும் உணவு பானங்கள் அனைத்தும் பலத்த சேதமடைந்துள்ளன.

குறித்த விமானம் தரையிறங்கும் போது வீசிய பலத்த காற்றினால் இந்த நிலை ஏற்பட்டதாக மாத்தறை விடுதியின் முகாமையாளர் தெரிவித்தார்.

சம்பவம் நடந்தபோது, ​​உணவு மற்றும் பானங்கள் பெற்றுக் கொண்டிருந்த உயரடுக்கு பாதுகாப்புப் பணியாளர்கள், உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் மீது மணல், தூசி, குப்பைகள் விழுந்து பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.

மேலும், மாத்தறை விடுதியின் புஃபே சாப்பாட்டு மேசையில் இருந்த அனைத்து உணவுகளும் நாசமாகிவிட்டன

பிரதமரின் விமானத்தால் மாத்தறையில் பலத்த சேதம்

விமானம் சரியாக தரையிறங்காததற்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதையடுத்து, சிரமத்திற்கு உள்ளான வெளிநாட்டவர்கள் மற்றும் பிறருக்கு ஆர்டர் செய்த உணவுக்கு பதிலாக வேறு உணவை உடனடியாக தயாரிக்க மாத்தறை விடுதியின் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

இதேவேளை, குறித்த அனர்த்தத்தில் மரத்தின் கிளை ஒன்றும் சாய்ந்து விழுந்தது.

இறுதிச் சடங்குகள் முடிந்து, முக்கியஸ்தர்கள் வரவிருந்ததால், குறித்த இடத்தை மிக விரைவாக சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

எனினும், பிரதமர் தினேஷ் குணவர்தன விமானத்தில் இருந்து பத்திரமாக இறங்கி பின், இறுதிச் சடங்கிற்கு அழைத்து வரப்பட்டார்.

எவ்வாறாயினும், இந்த சம்பவத்தினால் மாத்தறை விடுதிக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஆராய்வதற்காக மாத்தறை தலைமையக பொலிஸ் பரிசோதகர் ரொஷான் ஹெட்டியாராச்சி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவும் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

துப்பாக்கி சூடு மாத்தறை இளைஞன் பலி

துப்பாக்கி சூடு மாத்தறை இளைஞன் பலி


மாத்தறை – தெலிஜ்ஜவில பிரதேசத்தில் நேற்றிரவு (20) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர், இலக்கு வைக்கப்பட்ட நபர் அல்ல என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

நேற்று (20) இரவு 08 மணி அளவில் மாத்தறை – மாலிம்படை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெலிஜ்ஜவில சந்தியில் அமைந்துள்ள கையடக்கத் தொலைபேசி உபகரண விற்பனை நிலையம் ஒன்றில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் தொலைபேசி உபகரணக் கடைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

துப்பாக்கி சூடு மாத்தறை இளைஞன் பலி

குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 22 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தெனிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த மிந்திக அளுத்கமகே எனவும், அவர் தனது கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்வதற்காக கடைக்கு வந்துள்ளாதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்பட்டதுடன், கடையின் உரிமையாளரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், மாத்தறை பிரதான நீதவான் அனுருத்த புத்ததாச, அவரை பொலிஸ் காவலில் எடுத்து பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.