Posted in Uncategorized

குண்டு வைத்த ஐவர் சுட்டுக்கொலை – 21 பேர் கைது

குண்டு வைத்த ஐவர் சுட்டுக்கொலை – 21 பேர் கைது

உகாண்டாவில் இடம்பெற்ற இரட்டை குண்டு தாக்குதலில் சிக்கி


பல மக்கள் பலியாகினர்

மேற்படி குண்டு தாக்குதலை நடத்தினார்கள் என்ற குற்ற சாட்டில் ஐவர் சுட்டு கொலை செய்ய

பட்டுள்ளனர்

மேலும் இந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்கள் என இருபத்தி ஒருபேரை கைது

செய்துள்ளனர்
தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டைகள் முடுக்கிவிட பட்டுள்ளன

    Posted in Uncategorized

    சீன உர நிறுவனங்களுக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

    சீன உர நிறுவனங்களுக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

    பக்டீரியா உள்ளிட்ட தீங்கு ஏற்படுத்தும் பிற உயிரினங்கள் அடங்கிய உர தொகையை இந்நாட்டுக்கு கொண்டு வந்ததாக கூறப்படும் சீன நிறுவனங்களுக்கு, மற்றும் அதன் தேசிய

    முகவர்களுக்கு பணம் வழங்குவதை தடுத்து மக்கள் வங்கி மீது விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு

    இம்மாதம் 30 ஆம் திகதி வரையில் நீடிக்கப்படுவதாக கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மனுதார உர நிறுவனம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் நாயகம் சுசந்த பாலபடபெந்தி, பில்லியன் ரூபாயை விட அதிக மதிப்புள்ள இயற்கை உரங்களை வாங்குவதற்கான டெண்டரைப்

    பெற்ற பிரதிவாதியான “குவின்டாம்ப சிவின் பயோடேக் காப் கம்பனி” என்ற சீன நிறுவனம் குறித்த டெண்டரை செயற்படுத்தி உர தொகையை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்ததாக முன்னதாக நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

    அதன் பிரகாரம், கிருமி நீக்கம் செய்யப்பட்ட சேதன உரத்தை இலங்கைக்கு அனுப்ப வேண்டிய தேவையிருந்த போதிலும், குறித்த நிறுவனம் கப்பலின் அறிவுறுத்தல் துண்டுப்பிரசுரத்தில் சேதன

    உரத்தில் நுண்ணுயிரிகள் இருந்ததை ஏற்றுக்கொண்டுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

    பிரதிவாதியான சீன நிறுவனத்தால் தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவைக்கு அனுப்பிய உர மாதிரியை பரிசோதித்ததில், சில உர பாகங்களில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் பிற

    உயிரினங்கள் இருப்பது தெரியவந்ததாக கூறிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், இந்த நிலையில், டெண்டரில் ஏற்கப்பட்ட நிபந்தனைகளை சீன நிறுவனம் பூர்த்தி செய்யவில்லை என குற்றம் சாட்டினார்.

      Posted in Uncategorized

      யாழில் கொரானாவுக்கு சிக்கி 4 பேர் மரணம்

      யாழில் கொரானாவுக்கு சிக்கி 4 பேர் மரணம்

      தென்மராட்சிப் பகுதியில் கொரோனாப் பரவல் மிகத் தீவிரம் பெற்றுள்ளதுடன், கடந்த 16 நாள்களில் மாத்திரம் 118 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, 04 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

      தினமும் சராசரியாக 8 முதல் 10 தொற்றாளர்கள் என்றளவில் எண்ணிக்கை உயரத் தொடங்கிவிட்டதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

      சுகாதார நடைமுறைகளை மக்கள் இறுக்கமாகப் பின்பற்றாமை காரணமாக சமூகத்தில் தொற்று தீவிரமாகப் பரவியிருப்பதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

      தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும் நோய் அறிகுறிகளுடன் தாமாக வந்து அன்டிஜன பரிசோதனைக்கு தம்மை உட்படுத்திக்கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

      கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இலவச துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் அறிவித்துள்ளனர்.

      அது குறித்து அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட இடங்களில் வசிப்பவர்கள் கொரோனா அறிகுறிகள் தென்படுமாயின், உடனடியாக தங்களை சுய தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்.

      “அத்தோடு, காலதாமதமின்றி கொடிகாமம் பிரதேச வைத்தியசாலை, வரணி பிரதேச வைத்தியசாலை அல்லது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் துரித அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுங்கள்.

      “இவற்றுக்கு மேலதிகமாக சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய மூன்று தினங்களும் காலை 8.30 மணிக்கு குறித்த பரிசோதனை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

        Posted in Uncategorized

        வெடித்த குண்டு -சிதறிய மனித உடல்கள்

        வெடித்த குண்டு -சிதறிய மனித உடல்கள்

        ஆப்கான் தலைநகர் பகுதியில் இடம் பெற்ற கார் குண்டு தாக்குதலில் சிக்கி எட்டு பேர்

        பலியாகினர் மேலும்பலர் படுகாயமடைந்துள்ளனர்

        இரட்டை குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ள போதும் பெரும் சேதங்கள் இன்றி மக்கள் தப்பித்து

        கொண்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

          Posted in Uncategorized இலங்கை செய்திகள்

          பரந்தனில் வாலிபர் வெட்டி கொலை

          பரந்தனில் வாலிபர் வெட்டி கொலை

          பரந்தன் பகுதியில் தற்காலிக கொட்டகை அமைத்து வசித்து வந்த வாலிபர் ஒருவர் பலத்த வெட்டு

          காயங்களுக்கு உள்ளான நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார்


          இவரை கொலை செய்தவர்கள் யார் என்பது இதுவரை தெரியவரவில்லை

          போலீசார் தொடர் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

          தமிழர் பகுதிகளில் வாள்வெட்டு குழுக்கள் அடாவடிகள் அதிகரித்து காணப்படுகின்றமை

          குறிப்பிட தக்கது

            Posted in Uncategorized

            இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!

            இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!


            பனாமுரே பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

            கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் பொலிஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

            மேலும், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

            பனாமுரே பொலிஸ் சிறைக்கூண்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து அப்பகுதி மக்கள்

            பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

            குடும்ப தகராறு காரணமாக மனைவி செய்த முறைப்பாட்டையடுத்து கைது செய்யப்பட்ட

            பனாமுரே, வெலிபோத யாய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை

            ஒருவர் பொலிஸ் சிறைக்கூண்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

            சந்தேக நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

            சம்பவத்தை அடுத்து இன்று (17) காலை பனாமுரே பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடிய

            பிரதேச மக்கள், இந்த மரணத்திற்கு பொலிஸாரே காரணம் என குற்றம் சுமத்தியுள்ளனர்.

              Posted in Uncategorized

              புலிகளை ஒழிக்க முஸ்லீம்கள் பெரும் பங்கு ஆற்றினர் -கூவிய கூலி

              புலிகளை ஒழிக்க முஸ்லீம்கள் பெரும் பங்கு ஆற்றினர் -கூவிய கூலி
              ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

              இலங்கையில் தெற்கு மற்றும் வடக்கு பகுதியில் தலைவிரித்தாடிய


              பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முஸ்லீம்கள் உதவினர் என பகீரங்கமாக


              முஸ்லீம் கூலியும் சிங்கள அடிமையுமான ரிச்சர்டு பதியுதீன் பாரளுமன்றில் கூவியுள்ளார்


              இவரது இந்த பேச்சு ஒட்டு மொத்த தமிழர்களையும் கொதிப்புற செய்துள்ளது ,தமிழர் என பேசிய

              படி தமிழர்களை காட்டி கொடுத்து


              வேட்டையாடிய எட்டப்பர்களுக்கு அதே சிங்களவன் ஆட்சியில் சிறையில் அடைத்து போத்தலில்

              மூத்திரம்


              கழித்திட செய்தது சிறந்த தண்டனை தான் ,வாழ்க கோட்டா என இப்போது கோஷம் போடுங்கள் ரிச்சார்ட்

              Posted in Uncategorized

              ஆப்கான் தலைநகரில் ஐ எஸ் தாக்குதல்

              ஆப்கான் தலைநகரில் ஐ எஸ் தாக்குதல்

              ஆப்கான் நாட்டை தலிபான்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர் ,இவ்வேளை தலைநகர்

              காபூல் பகுதியில் தொடர் குண்டுகள் வெடித்த வண்ணம் உள்ளது

              இந்த குண்டு வெடிப்பில் சிக்கி இதுவரை மூவர் பலியாகியும் ஐந்துக்கு மேற்பட்டவர்கள்

              பாடுகாயமடைந்துள்ளனர்

              தொடராக குண்டுகள் வெடித்து வரும் நிலையில் தடுக்க முடியாது தலிபான்கள் தினறி

              வருகின்றமை குறிப்பிட தக்கது

                Posted in Uncategorized

                இராணுவம் வெறியாட்டம் – 50 தீவிரவாதிகள் சுட்டு கொலை


                இராணுவம் வெறியாட்டம் – 50 தீவிரவாதிகள் சுட்டு கொலை

                நைஜீரியாவில் அரச இராணுவத்தினர் நடத்திய முற்றுகை வேட்டையில் சிக்கி ஐம்பதுக்கு

                மேற்பட்ட ஐ எஸ் தீவிரவாதிகள் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர்

                மேலும் பல படுகாயமடைந்துள்ளனர்

                மக்கள் ,மீதும் இராணுவத்தினருக்கு எதிராக மேற்படி குழுவினர் பெரும்


                தாக்குதல்களை நடத்தி வந்த நிலையில் மேற்படி தேடி அழிக்கும் வேட்டையில் இராணுவத்தினர்

                ஈடுபட்டு வருகின்றார் என இராணுவம் தெரிவித்துள்ளது

                  Posted in Uncategorized

                  யாழில் சக்கரை நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

                  யாழில் சக்கரை நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

                  யாழ் மாவட்டத்தில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து

                  வருவதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலைய பொறுப்பு அதிகாரி வைத்தியர் அரவிந்தன் தெரிவித்தார்.

                  நேற்றைய (15) தினம் யாழ் போதனா வைத்தியசாலையில் நீரிழிவு சிகிச்சை முகாமினை ஆரம்பித்து வைத்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

                  யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரை தற்போது நீரிழிவு நோய் என்பது பெரும் ஒரு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

                  குறிப்பாக இளம் வயதினருக்கு இந்த நீரிழிவு நோய் அதிகமாக காணப்படுகின்றது.

                  நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஏனைய பல தொற்றுநோய்களும் ஏற்படுவதற்கான சான்றுகள்

                  அதிகம் காணப்படுகின்றன. இளம் வயதினர் குறித்த நீரிழிவு நோய் தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும்.

                  குறிப்பாக உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்இ அல்லது தகுந்த வேளையில் நீரிழிவு

                  பரிசோதனையை மேற்கொண்டு ஆரம்பத்தில் இந்த நீரிழிவு நோய் குறித்த அறிகுறியை

                  அடையாளமகாணும் பட்சத்தில் அந்த நோயை குணப்படுத்த முடியும்.

                  இதேவேளை உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ் நீரிழிவு கழகம் யாழ் போதனா

                  வைத்தியசாலையுடன் இணைந்து செயற்படுத்தும் நீரிழிவு சிகிச்சை முகாம் நேற்று காலை

                  ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

                    Posted in Uncategorized

                    பாடசாலை மீது துப்பாக்கி சூடு – ஆறு பேர் காயம்

                    பாடசாலை மீது துப்பாக்கி சூடு – ஆறு பேர் காயம்

                    அமெரிக்கா Colorado பாடசாலை ஒன்றின் மீது மர்ம நபர் ஒருவர் திடீர் துப்பாக்கி
                    சூட்டு தாக்குதலை நடத்தினார்

                    இதில் ஆறு மாணவர் படுகாயமடைந்துள்ளனர்


                    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆயுத போலீசார் பாதுகாப்பை


                    பல படுத்தியதுடன் சந்தேக நபரை வேட்டையாடினர்

                    அமெரிக்காவில் என்றுமில்லாதவாறு தற்போது துப்பாக்கி


                    சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை
                    குறிப்பிட தக்கது

                      Posted in Uncategorized

                      பிரிட்டன் லீவர் பூல் மருத்துவமனையில் வெடித்துசிதறிய கார் – நடந்தது என்ன ..?

                      பிரிட்டன் லீவர் பூல் மருத்துவமனையில் வெடித்து சிதறிய கார் – நடந்தது என்ன ..?

                      பிரிட்டன் லிவர்பூல் பகுதி மருத்துவமனைக்குள் நிறுத்தி வைக்க பட்டிருந்த கார் ஒன்று திடீரென


                      வெடித்து சிதறியுள்ளது

                      இதில் சம்பவ இடத்தில ஒருவர் பலியாகியுள்ளார்

                      மேலும் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார்

                      மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது ,இது தீவிரவாத

                      செயலா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை

                        Posted in Uncategorized

                        132 வயது பாட்டி மரணம்

                        132 வயது பாட்டி மரணம்

                        ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள கொடிபங்கு பஞ்சாயத்துக்குட்பட்ட வேலாங்குடி கிராமத்தில்தான் சந்தனம்மாள் வாழ்ந்து வந்தார்.

                        25 பேரன், பேத்திகள், 50 கொள்ளுபேரன், பேத்திகள்: 4 தலைமுறை கண்ட 132 வயது பாட்டி மரணம்

                        இன்றைய உலகில் இளம் வயதிலேயே பலரும் நோய்வாய்பட்டு மருந்து, மாத்திரைகளுக்கு அடிமையாகி உள்ளனர். ஆனால் நூற்றாண்டு கடந்து நலமுடன் மூதாட்டி வாழ்ந்து தனது 132-வது வயதில் மரணத்தை சந்தித்துள்ளார்.

                        இவர் நோய்வாய்பட்டு ஆஸ்பத்திரிக்கு சென்றதில்லை என்கின்றனர் அவரது வம்சாவழியினர். 132 வயதில் மரணத்தை சந்தித்த மூதாட்டியின் பெயர் சந்தனம்மாள்.

                        ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள கொடிபங்கு பஞ்சாயத்துக்குட்பட்ட வேலாங்குடி கிராமத்தில்தான் சந்தனம்மாள் வாழ்ந்து வந்தார்.

                        கடந்த 18.5.1889-ம் ஆண்டு பிறந்த சந்தனம்மாளின் கணவர் பெயர் ஆரோக்கியம் என்ற வேளாணி.

                        இந்த தம்பதிகளுக்கு 10 குழந்தைகள்.அதில் தற்போது பிரான்சிஸ், சேசுராஜ், அருளானந்த் ஆகிய 3 மகன்களும், தேவநேசம், பாத்திமாமேரி, பாக்கியம்மேரி ஆகிய 3 மகள்களும் உள்ளனர். 1982-ம்

                        ஆண்டு கணவர் ஆரோக்கியம் என்ற வேளாணி இறந்து விட்ட நிலையில் மகள் பாக்கியம் மேரியுடன் சந்தனம்மாள் வசித்து வந்தார்.

                        இவருக்கு 25 பேரன், பேத்திகள் உள்ளனர். அவர்கள் மூலம் 50 கொள்ளுபேரன், பேத்திகளையும் சந்தனம்மாள் பார்த்துள்ளார். மொத்தத்தில் 4 தலைமுறைகளை சந்தித்த சந்தனம்மாளுக்கு கடந்த சில ஆண்டுகளாக வயோதிகம் காரணமாக பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது.

                        ஆனாலும் அவர் எந்த ஆஸ்பத்திரிக்கும் சென்றதில்லை. மீன் குழம்பை விரும்பி சாப்பிடும் சந்தனம்மாளுக்கு கடந்த தீபாவளிக்கு பின்னர் சற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

                        இதனால் பாதிக்கப்பட்ட அவர் தனது 132-வது வயதில் நேற்று இறந்தார்.

                        இதனை கேள்விபட்டதும் சுற்றுவட்டார மக்கள் திரண்டு வந்து சந்தனம்மாளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

                          Posted in Uncategorized

                          தெ – அமெரிக்கா சிறையில் 68 பேர் சுட்டு கொலை

                          தெ – அமெரிக்கா சிறையில் 68 பேர் சுட்டு கொலை

                          தென் அமெரிக்கா சிறை சாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சண்டையில் சிக்கி அறுபத்தி எட்டு


                          கைதிகள் பலியாகியுள்ளனர்


                          மேலும் பல டிசைன் பேர் படுகாய மடைந்துள்ளனர்

                          மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                            Posted in Uncategorized

                            அவுஸ்ரேலியாவில் பாரிய நில நடுக்கம்

                            அவுஸ்ரேலியாவில் பாரிய நில நடுக்கம்

                            அவுஸ்ரேலியா மேற்கு பகுதியில் 5.8 அளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது ,இந்த நடுக்கத்தினால்


                            ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

                              Posted in Uncategorized

                              மகன் இயக்கத்தில் நடிக்கும் ராஜ்கிரண்

                              மகன் இயக்கத்தில் நடிக்கும் ராஜ்கிரண்

                              பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் ராஜ்கிரண், தனது மகனின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

                              மகன் இயக்கத்தில் நடிக்கும் ராஜ்கிரண்
                              ராஜ்கிரண்


                              கஸ்தூரிராஜா இயக்குனராக அறிமுகமான முதல் படம் என் ராசாவின் மனசிலே. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம்

                              படத்தின் கதாநாயகனாக நடித்த நடிகர் ராஜ்கிரண். இப்படத்தில் இவர் தொடை தெரிய வேஷ்டி கட்டுவது, எலும்பு கடிப்பது பல காட்சிகளில் ரசிகர்களை கவர்ந்திருப்பார்.

                              தற்போது இந்த படத்தின் 2-ம் பாகத்தை ராஜ்கிரணின் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது இயக்க உள்ளார். இதன் மூலம் அவர் சினிமா துறையில் இயக்குனராக அறிமுகமாகிறார்.

                              ராஜ்கிரண்

                              இதற்கிடையில் நடிகர் ராஜ்கிரண், லைகா புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பை முடித்து இருக்கிறார்.

                              மேலும், 2டி தயாரிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில்

                              கார்த்தியின் தாய்மாமாவாக முக்கிய கதாபாத்திரத்தில் மதுரையில் நடக்கும் படப்பிடிப்பில் தற்போது கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

                                Posted in Uncategorized

                                இளம் ஆண் பெண்களுக்கு விவசாயம் செய்திட காணி – அரசு அதிரடி அறிவிப்பு

                                இளம் ஆண் பெண்களுக்கு விவசாயம் செய்திட காணி – அரசு அதிரடி அறிவிப்பு

                                விவசாயிகளின் நலன்களை உறுதி செய்வதற்கும், விவசாயிகளை பாதுகாப்பதற்கும் சட்டம் தயாரிக்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

                                மேலும், பயிர் செய்கை மேற்கொள்ளப்படாத நிலங்களை, இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு பயிர்ச்செய்கைக்காக வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

                                பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட உரையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

                                இதேவேளை, பால் உற்பத்தி தொடர்பான திட்டங்களை அதிகரிக்கும் நோக்கில் திரவ பால்

                                பாவனையை அதிகரிப்பதற்காக ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழ் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள

                                தொகைக்கு மேலதிகமாக மேலும் 1000 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்க எதிர்பார்ப்பதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

                                  Posted in Uncategorized

                                  வவுனியாவில் போதையில் தமிழ் வாலிபனை தாக்கிய இராணுவம் – வீடியோ

                                  வவுனியாவில் போதையில் தமிழ் வாலிபனை தாக்கிய இராணுவம் – வீடியோ

                                  சற்று முன்னர் வவுனியா பகுதியில் ஆட்டோவில் பயணித்து கொண்டிருந்த தமிழ் வாலிபன்

                                  ஒருவரை வழிமறித்த இராணுவத்தினர் சரமாரியாக தகக்கியுள்ளனர்

                                  அதி போதையில் இருந்த இராணுவ சிப்பாய்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்

                                  சம்பவ ஐஇடத்திற்கு விரைந்து வந்த ஊடக நபர்கள் மேற்படி விடயத்தை அம்பல படுத்திய நிலையில் இவர்கள் சிக்கலில் உள்ளனர்

                                  இதுவே தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது

                                  கோட்டா ஆடசியில் இராணுவ மயமாக்களின் ஒன்றாக இதனை பார்க்க முடிகிறது ,தமிழா என்று

                                  விழிப்பாய் ..? கூட்டமைப்பு என்ன செய்கிறது இதுவே மக்கள் கேள்வியாக உள்ளது

                                    Posted in Uncategorized

                                    கிளிநொச்சியில் கடைக்குள் புகுந்த லொறி

                                    கிளிநொச்சியில் கடைக்குள் புகுந்த லொறி

                                    கிளிநொச்சி பகுதியில் உள்ள பிரபல புடவை கடை ஒன்றுக்குள் வேகமாக வந்த டிப்பர் வண்டி

                                    ஒன்று புகுந்தது

                                    இதனால் அந்த கடைக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது எனினும் இதில் உயிர் சேதங்கள்

                                    ஏற்படவில்லை
                                    மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                                      Posted in Uncategorized

                                      பிரிட்டனில் செயல் இழந்த ஜிமெயில்

                                      பிரிட்டனில் செயல் இழந்த ஜிமெயில்

                                      உலக புகழ் பெற்ற அதிக மக்கள் பாவனைக்கு உட்படுத்தி வரும் கூகிள் இணையத்தின் ஜிமெயில்
                                      கணக்குகள் பிரிட்டனில் தடை பட்டுள்ளது

                                      பலருடைய கணக்குகள் செயல் இழந்த நிலையில் காண படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது