Category: Uncategorized
Uncategorized, hate Uncategorized
இலங்கையில் வேகமாக பரவும் கொரனோ
இலங்கையில் வேகமாக பரவும் கொரனோ
இலங்கையில் மீண்டும் கொரனோ நோயானது மிக வேகமாக பரவி வருகிறது
இவ்வாறு கடந்த தினம் மாட்டு 750 க்கு மேற்பட்டவர்களை இந்த நோயானது பாவியுள்ளமை கண்டு
பிடிக்க பட்டுள்ளது .
டிலிவரி கீரோ பெரும் இலாபம் – கொடி கட்டி பறக்கும் சாதனை
டிலிவரி கீரோ பெரும் இலாபம் – கொடி கட்டி பறக்கும் சாதனை
யேர்மனியை தளமாக கொண்டு இயங்கி வரும் டிலிவரி கீரோ என்ற உணவு விநியோக டிலிவரி
நிறுவனம் ஒன்று இந்த ஆண்டின் இதுவரையான கால பகுதியில் சுமார் 6.7 billion euros
வருமானத்தை பெற்று சாதனை படைத்துள்ளது
தனது வாடிக்கையாளர்களுக்கு 10 முதல் 15 நிமிடத்தில் உணவு வழங்கி சாதனை
நிலைநாட்டியுள்ளது
இவை ஊபர் நிறுவனத்தை முந்திய செயல் பாடாக உள்ளதாக இணையதள வாசிகள் தெரிவிக்கின்றன
குருதீஸ் போராளிகளை சந்தித்து பேசிய -ஈரான் இராணுவ தளபதி
குருதீஸ் போராளிகளை சந்தித்து பேசிய -ஈரான் இராணுவ தளபதி
ஈரான்,துருக்கி சிரியா ,ஈராக் என்ற நான்கு நாடுகளுடனும் போராடி வருகிறது குருதீஸ்
போராளிகள் ,இவ்வாறான நிலையில் புலிகளை போன்று அழிவு நிலையில் இருந்த குருதீஸ்
போராளிகளை ஈரானிய இராணுவ தளபதி திடீரென சந்தித்து பேசியுள்ளார்
இவரது இந்த சந்திப்பு பெரும் திருப்புமுனையாக குருதீஸ் போராளிகளுக்கு அமைய பெறும் என
எதிர் பார்க்க படுகிறது
மனைவியை அடித்து கொன்ற கணவன்
மனைவியை அடித்து கொன்ற கணவன்
இலங்கை மாத்தறை பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ள
து
இதனால் ஆத்திரமுற்ற கணவன் பொல்லு ஒன்றினால் மனைவியை தாக்கி படுகொலை
செய்துள்ளார்
தற்போது கொலை குற்ற சாட்டில் கணவன் கைது செய்ய பட்டுள்ளார்
இவ்வாறான குற்ற சம்பவங்கள் நாட்டில் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
இலங்கை வெள்ளத்தில் சிக்கி 25 பேர் மரணம்
இலங்கை வெள்ளத்தில் சிக்கி 25 பேர் மரணம்
இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை இருபத்தி ஐந்து பேர் மரணமாகியுள்ளனர்
மேலும் 212,030 குடும்பங்கள் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
கூட்டமைப்பு எம்பிக்கு கொரனோ
கூட்டமைப்பு எம்பிக்கு கொரனோ
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிமலநாதனுக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இதனை அடுத்து அவர் தனிமை படுத்த பட்டுள்ளார்
கல்வி போராளி மலாலாவுக்கு திருமணம்
கல்வி போராளி மலாலாவுக்கு திருமணம்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பை தொடர்ந்த மலாலா, 2020ம் ஆண்டு தத்துவம், பொருளாதாரம், அரசியல் ஆகிய படிப்புகளில் பட்டம் பெற்றார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா (24), கடந்த 2012-ம் ஆண்டு பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக பகிரங்கமாக பேசியதற்காக, தலிபான் பயங்கரவாதிகள் அவர் மீது தாக்குதல்
நடத்தினர். இதில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மலாலா, பல மாத சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் தேறினார்.
பிறகு, தனது குடும்பத்துடன் இங்கிலாந்தில் குடிபெயர்ந்த மலாலா, பெண் குழந்தைகளின் கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இவரது சேவையை பாராட்டி, 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
மேலும், மலாலா, பெண் குழந்தைகளின் கல்வி எதிர்காலத்திற்கு உதவும் வகையில், தனது பெயரில் நிதி நிறுவனம் ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகிறார்.
பின்னர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பை தொடர்ந்த மலாலா, 2020ம் ஆண்டு தத்துவம், பொருளாதாரம், அரசியல் ஆகிய படிப்புகளில் பட்டம் பெற்றார்.
இந்நிலையில், இங்கிலாந்து பிர்மிங்காமில் அமைந்துள்ள அவரது வீட்டில் நேற்று எளிய முறையில் அசார் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தார்.
தனது திருமண நிகழ்வு குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், “இன்று என் வாழ்வின் பொன்னான நாளாகும். அசாரும், நானும் வாழ்க்கையில் இணைய முடிவு செய்து திருமணம் செய்து கொண்டோம்.
எங்கள் நிக்கா குடும்பத்தினர் முன்னிலையில் எளிய முறையில் பிர்மிங்காமில் உள்ள வீட்டில் நடந்தது. உங்களது ஆசீர்வாதத்தை எங்களுக்கு அனுப்புங்கள் ” என்று குறிப்பிட்டிருந்தார்.
வெள்ளத்தில் சிக்கி 20 பேர் மரணம் – ஒருவரை காணவில்லை
வெள்ளத்தில் சிக்கி 20 பேர் மரணம் – ஒருவரை காணவில்லை
இலங்கையில் இடம்பெறும் சீரற்ற காலநிலை காரணமாக பரவி வரும் மழை ,வெள்ளத்தில் சிக்கி இதுவரை இருபது பேர் பலியாகியுள்ளனர்
மேலும் 17 பேர் காயமடைந்துள்ளன ,ஒருவரை காணவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது
மக்களுக்கு உதவிட தாயார் நிலையில் கடற்படை
மக்களுக்கு உதவிட தாயார் நிலையில் கடற்படை
நாட்டில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான
அவசர உதவி நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கை கடற்படையின் நிவாரண குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கடற்படையின் மேற்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளையகங்களைச் சேர்ந்த அவசர உதவிக்
குழுக்கள் இவ்வாறு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் அவசர உதவி
நடவடிக்கைகளுக்காக கடற்படையின் மூன்று நிவாரண குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் மற்றுமொரு நிவாரண குழு, உடுகம பிரதேச செயலகத்தின் உடமலத்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
மீதமுள்ள நிவாரண குழுக்கள் அவசர தேவைகளின் போது ஈடுபடுத்தப்படுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
காணாமல் போன மூன்று பெண்கள் வீடு திரும்பினார்
காணாமல் போன மூன்று பெண்கள் வீடு திரும்பினார்
இலங்கையில் காணாமல் போன 15 வயதுடைய மூன்று இளம் பெண்கள் காணாமல் போயிருந்தனர் ,இவ்வாறு காணாமல் போனவர்களை மூன்று நாட்களின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்
இவர்கள் அனுராத புரத்திற்கு சென்ற பின்னர் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
புதிய கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு
புதிய கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு
குளிர்பதன பெட்டியில் வைக்க தேவையில்லாத புதிய கொரோனா தடுப்பூசியை அமெரிக்காவின்
பாஸ்டன் நகரில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரியை சேர்ந்த ஆராய்ச்சி குழுவினர் உருவாக்கி உள்ளனர்.
குளிரூட்டும் வசதி தேவைப்படாத புதிய கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு
கொரோனா தடுப்பூசி
இந்தியாவில் 3 கொரோனா தடுப்பூசிகள் புழக்கத்தில் உள்ளன. இந்த தடுப்பூசிகளை குளிர்பதன
அறையிலோ அல்லது குளிர்பதன பெட்டியிலோ வைத்து பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால், தடுப்பு மருந்தின் செயல்திறன் போய்விடும்.
ஆனால், குளிர்பதன பெட்டியில் வைக்க தேவையில்லாத புதிய கொரோனா தடுப்பூசி
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரியை சேர்ந்த ஆராய்ச்சி குழுவினர் இந்த தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர்.
வைரசின் முனைப்பகுதியில் உள்ள புரோட்டினை கொண்டு தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது.
இதை தயாரிப்பது எளிது. கொரோனாவை உருவாக்கும் சார்ஸ் வைரஸ் மற்றும் அதன் உருமாறிய ரகங்களுக்கு எதிராக சிறப்பான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
அறை வெப்பநிலையிலேயே 7 நாட்கள்வரை வைத்திருந்து இதை பயன்படுத்தலாம். அதுவரை சீராகவும், செயல்திறன் மிக்கதாகவும் தடுப்பூசி இருக்கும்.
மற்ற நோய்களுக்கான தடுப்பூசி உற்பத்திக்கும் இந்த வழிமுறையை பயன்படுத்தலாம். இந்த
தொழில்நுட்பத்துக்கு காப்புரிமை கோரி விஞ்ஞானிகள் விண்ணப்பித்துள்ளனர். மேலும், தடுப்பூசியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த மருந்து நிறுவனங்களை அணுக உள்ளனர்
அடித்து பாயும் வெள்ளம் பிரதான வீதிகள் -பூட்டு
அடித்து பாயும் வெள்ளம் பிரதான வீதிகள் -பூட்டு
இலங்கை புத்தளம் பகுதியில் வெள்ளம் பாய்வதால் கொழும்பு நோக்கி பயணிக்கும் பாலாவி பகுதி மற்றும்
இரண்டாம்கட்டை ,அரேலிய உயன ,தம்பப்பண்ணி ஆகிய சாலைகள் பகுதிகள் அடித்து பூட்ட பட்டுள்ளன என தெரிவிக்க பட்டுள்ளது
அமெரிக்கா கப்பல் வருகை – ஈரான் திடீர் போர் ஒத்திகை
அமெரிக்கா கப்பல் வருகை – ஈரான் திடீர் போர் ஒத்திகை
ஈரான் கடல் பகுதியை அண்மித்து அமெரிக்கா போர் கப்பல் வருகையை அடுத்து தற்போது
ஈரானின் முப்படைகள் இணைந்து மிக பெரும் இராணுவ போர் ஒத்திகை ஒன்றை நடத்தியுள்ளனர்
இந்த போர் ஒத்திகை மூலம் அமெரிக்காவை எவ்வேளையும் நாம் தாக்குவோம் என்பதாக ஈரான்
தெரிவித்துள்ளது
ஈரானின் இந்த நகர்வை அடுத்து அமெரிக்கா தனது படை நகர்வை நிறுத்துமா என்ற கேள்வி
எழுந்துள்ளது
பிரான்சில் போலீசார் மீது கத்தி வெட்டு – அதிர்ச்சியில் மக்கள்
பிரான்சில் போலீசார் மீது கத்தி வெட்டு – அதிர்ச்சியில் மக்கள்
பிரான்ஸ் Cannes பகுதியில் போலீஸ் நிலையம் முன்பாக நின்று கொண்டிருந்த போலீசார் ஒருவர்
மீது மர்ம நபர் ஒருவர் திடீரென கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டார்
,அவரை அடுத்து மறு போலீசார் மீது வெட்டு தாக்குதலை மேற்கொள்ள முற்பட்ட பொழுது
மூன்றாவது காவல்துறை சிப்பாய் ,தீவிரவாதி மீது துப்பாக்கி சூட்டு தாக்குதலை மேற்கொண்டார்
இதில் பலத்த காயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார் ,குறித்த நபர்
தொடர்பான விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை
ராசாக்கண்ணு மனைவிக்கு சொந்த வீடு கட்டித்தரும் ராகவா லாரன்ஸ்.
ராசாக்கண்ணு மனைவிக்கு சொந்த வீடு கட்டித்தரும் ராகவா லாரன்ஸ்.
பொய் வழக்குப் போடப்பட்டு போலீஸ் சித்ரவதையால் ராசாக்கண்ணு உயிரிழந்த நிலையில், வறுமையில் உள்ள அவரது மனைவியான பார்வதிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் சொந்த செலவில் வீடு கட்டித் தருவதாக அறிவித்துள்ளார்.
ராசாக்கண்ணு மனைவிக்கு சொந்த வீடு கட்டித்தரும் ராகவா லாரன்ஸ்
ராசா கண்ணு மனைவி – ராகவா லாரன்ஸ்
த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெய் பீம்’. இந்தப் படத்தைப்
பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தில் காட்டப்பட்ட ராசாக்கண்ணு மீது பொய் வழக்குப் போடப்பட்டு போலீஸ் சித்ரவதையில்
உயிரிழந்தார். இந்த வழக்கில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது. ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தற்போது தான் மிகவும் வறுமையில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
ராகவா லாரன்ஸ்
இந்நிலையில் ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு தனது சொந்த செலவில் வீடு கட்டித் தருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
”செய்யாத குற்றத்துக்காக சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு ராசாக்கண்ணு கொல்லப்பட்டார். அவரது மனைவி பார்வதி அம்மாவின் இன்றைய வாழ்க்கை நிலையை தனியார் யூடியூப் சேனலில் பார்த்தபோது என்னை பெரிதும் பாதித்தது. அவர்களின் மூலம் மேலும் விவரங்களைக்
கேட்டறிந்ததும் கூடுதலாகத் துயருற்றேன். பார்வதி அம்மாவுக்கு எனது செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறேன். ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவின் வறுமை நிலையினை என் கவனத்துக்குக் கொண்டுவந்த யூடியூப் குழுவினருக்கு என் நன்றிகள்.
28 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொடூரமான துயர நிகழ்வை, இன்றைக்குத் தமிழகம் முழுக்க பேசுபொருளாக்கிய ‘ஜெய் பீம்’ படக்குழுவினருக்கும், ‘ஜெய்பீம்’ படத்தை உயரிய
கலைப்படைப்பாக மாற்றிய சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கும், இயக்குநர் த.செ.ஞானவேலுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும் நன்றியும்”.
இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையிடம் 8 மில்லியன் நஷ்டம் கோரும் சீன உர நிறுவனம்
இலங்கையிடம் 8 மில்லியன் நஷ்டம் கோரும் சீன உர நிறுவனம்
சீனாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்ய பட்ட உரக் கப்பலை மீளவும் சீனாவுக்கே இலங்கை திருப்பி அனுப்பியது
மேற்படி கப்பலில் எடுத்துவரப்பட்ட உரத்தில் விஷ கிருமிகள் உள்ளதாக இலங்கை தாவரவியல் அமைப்பு தெரிவித்தது
மேற்படி அமைப்பு தமக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ள சீன உர நிறுவனம் மேற்படி கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதுடன் மூன்று நாளுக்குள் தமக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரியுள்ளது
இவ்விடயம் இலங்கை சீனாவுக்குள் மீண்டும் முறுகளை ஏற்படுத்துள்ளமை குறிப்பிட தக்கது
குருதிஸ் பகுதிக்குள் குவிக்க படும் அமெரிக்கா இராணுவம் – ஈரானுடன் யுத்தமா …?
குருதிஸ் பகுதிக்குள் குவிக்க படும் அமெரிக்கா இராணுவம் – ஈரானுடன் யுத்தமா …?
ஈராக்கில் இருந்து ஆயுத தளபாடங்களை பின்வாங்கும் அமெரிக்கா இராணுவம் அவற்றை
குருதிஸ் போராளிகள் குவிக்க பட்டுள்ள Kharab al-Jir இராணுவ விமான தளத்தில் தரை இறக்க படுகின்றன
கனரக ஆட்டிலொறிகள் ,ஏவுகணைகள் டாங்கிகள் ,டிரக்குகள் கவச வாகனங்கள் என்பன இதில் அடங்க படும்
ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது தொடர் ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டு
வரும் நிலையில் இந்த பின்வாங்கல் நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது
எனினும் இவை குருதீஸ் போராளிகள் பகுதியில் குவிக்க படுவதால் மீள் துருக்கி மற்றும் ஈரானுடன்
அமெரிக்கா மோதலை ஏற்படுத்த இங்கு தயராகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது
அகதி தஞ்ச கோரிக்கைகாக புலிகள் அமைப்பு லண்டனில் இயக்கம்- இலங்கை அரசு
அகதி தஞ்ச கோரிக்கைகாக புலிகள் அமைப்பு லண்டனில் இயக்கம்- இலங்கை அரசு
பிரிட்டனில் புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் பெரும்பாலான புலிகள் அமைப்பினர் அதில் இருந்து ஒதுங்கி விட்டனர் ,அவர்கள் தாம் ஒன்று தமது வேலை ஒன்று என உள்ளனர்
ஆனால் அகதி தஞ்ச அகோரிக்கை ஏற்று நடத்தும் சிலர் ஆட்களை கூட்டி அவர்களுக்கு விசா பெற்று கொள்ளும்
முகமாக இந்த கூட்டங்களை ஒழுங்கு படுத்தி அதில் கலந்து கொள்கின்றனர்
என சிங்கள உளவுத்துறை ஊடகம் ஒன்று செய்தி வெளிட்டு தமிழர்களை கொச்சை படுத்தியுள்ளது
மேற்படி தகவலை பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு புலிகள் கட்சி பிரமுகர் தமக்கு தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிட பட்டுள்ளது
அப்படி என்றால் சிங்கல அரசினால் சில சட்டத்தரணிகள் இலக்கு வைக்க படுவதுடன் ,மேலும் அகதிகளுக்கு ஆப்பு வைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது
மகிந்த காசில் வாழ்கை ஓட்டும் புலிகள் கட்சிகள் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது இங்கே குறிப்பிட தக்கது
செல்பி மோகம் – ரயிலில் இருந்து வீழ்ந்து இறந்த வாலிபர்
செல்பி மோகம் – ரயிலில் இருந்து வீழ்ந்து இறந்த வாலிபர்
வவுனியா கல்லாறு பாலத்தின் ஊடக பயணித்து கொண்டிருந்த பயணிகள் தொடரூந்தில்
பயணித்த வாலிபர் ஒருவர் செல்பி மோகத்தினால் அந்த பாலத்தை கடக்கும் பொழுது செல்பி
எடுக்க முயன்று அதில் மோதுண்டு வீழ்ந்த பரிதாபம் இடம்பெற்றுள்ளது
சிதைந்த நிலையில் சடலம் மீட்க பட்டு குடும்ப உறவுகளிடம் ஒப்படைக்க பட்டுள்ளது
இறந்தவர் 21 வயதுடைய வாலிபர் என தெரிவிக்க படுகிறது
இந்தியா இராணுவ சரக்கு விமனங்கள் கொழும்பில் செய்த வேலை
இந்தியா இராணுவ சரக்கு விமனங்கள் கொழும்பில் செய்த வேலை
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நானோ நைட்ரஜன் திரவ உரத் தொகுதியை ஏற்றிக்கொண்டு
இந்திய விமானப்படையின் இரண்டு சிறப்பு சரக்கு விமானங்கள் வியாழக்கிழமை கட்டுநாயக்க
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன.
கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் கூறியதாவது: இரண்டு IAF C-17 Globemaster
விமானங்கள் 100,000 கிலோ நானோ நைட்ரஜனுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான
நிலையத்தை வந்தடைந்தன. இலங்கை விவசாயிகளுக்கு நானோ நைட்ரஜன் உரம் கிடைப்பதை
விரைவுபடுத்துவதற்கும், இயற்கை விவசாயத்தை நோக்கிய இலங்கை அரசாங்கத்தின்
முன்முயற்சிக்கு ஆதரவளிப்பதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டதாக இந்திய அதெரிவித்துள்ளது











