Category: வன்னி மைந்தன் கவிதைகள்
வன்னி மைந்தன் கவிதைகள் , காதல் கவிதைகள் வன்னி மைந்தன் ,மனித உணர்வின் பிரதியாக நடைமுறை வாழ்வியலில் ஒன்றாக கலந்துள்ளது .
நம்புகிறேன் நாளை கிடைக்கும் ..!
நம்புகிறேன் நாளை கிடைக்கும் ..!
நாளை ஒரு நாள் மீள வருவோம்
நம்பும் தமிழர் ஈழம் தருவோம்
நாடு பிடித்தே நாமும் ஆள்வோம்
நம்பு தமிழா நாங்கள் வெல்வோம்
எங்கும் செல்வோம் எதிலும் வெடிப்போம்
எங்கள் இலக்கு எதுவோ அடைவோம்
தூரம் எமக்கு துயரே இல்லை
துணிந்து விட்டால் துளி அச்சமில்லை
ஆண்டு நூறு கடந்து போகும்
அதிலே துன்பம் மறைந்து போகும்
எழுந்து விட்டால் எழுச்சி பொங்கும்
எழுந்தே உலகு எம்மை வணங்கும்
நீதி நேர்மை இங்கு இல்ல
நீர்த்து போனால் ஏதும் இல்ல
அழுகை நிறுத்தி எழ வேண்டும்
அரண்கள் அமைத்தே பறக்க வேண்டும்
உன்னில் உனக்கு இறக்கை கட்டு
உயர ஏறி வானில் முட்டு
வையம் வந்து வாசல் தட்டும்
வாழ ஈழம் தந்து போகும் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 04-01-2022
உன்னை எண்ணி தவிக்கிறேன் ..!
உன்னை எண்ணி தவிக்கிறேன் ..!
என்ன செய் தாயோ
என்னை ஏங்க வைத்தாயோ
என்னை ஏங்க வைத்தேனோ
என் இதயம் பறித்தாயோ
முன் பனியாய் பின்னிரவில்
முன்னே வாராயோ – நான்
முழு நிலவில் குளித்திட
முழு உலா வாராயோ
எதுகை மோனை எனதாகும் – என்
ஏக்கம் வாங்கு உனதாகும்
படித்து பாரு புதிராகும்
படைக்க முனை விழிப்பாகும்
சந்தம் இல்லா பாட்டுக்குள்ளே
சங்கதி இருக்காதே
அந்தி சாயும் வேளையிலே
ஆள் மனம் தூங்காதே
முத்தம் தரவா முன்னே வரவா
முழு நிலவே பதில் தர வா
நித்தம் வரவா நீளும் இரவா
நினைவில் வைத்திட வா
உன்னை எண்ணி தவிக்கிறேன்
உருகி மெழுகாய் அழுகிறேன்
வின் விட்டு வாராயோ
விழுந்து உடல் தழுவாயோ ..?
வன்னி மைந்தன்
ஆக்கம் 03-01-2022
- இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர்
- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா
- ஈரான் மீதான போர் மீண்டும் தொடங்கும் என 62 சதவீத இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர்
- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை
- இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலி
- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு
- யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது என டிரம்ப்
- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு
- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை
- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி
- இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்
- ஈரான் அமெரிக்கா கடலில் போர்
- 39 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா
- ஈரான் மீதான போர் ‘மிக விரைவில் முடிவுக்கு வரலாம்’ என்கிறார் டிரம்ப்
ஓடி போ …!
ஓடி போ …!
சிந்தைக்குள்ளே உன்னை வைத்தால்
சிகரம் உன்னை அழைக்கும்
மந்தைக்குள்ளே உன்னை வைத்தால்
மன்றம் உன்னை இழிக்கும்
விந்தைக்குள்ளே உன்னை வைத்தால்
விண்ணும் உன்னை பாடும்
சந்தைக்குள்ளே உன்னை வைத்தால்
சகபாடி வந்து வாங்கும்
முந்தைசெயல் விளங்கி நிற்பின்
முழு உலகும் பாடும்
இன்றைசெயல் இயம்பி நிற்பின்
இன்றே ஏறி மிதிக்கும்
கந்தல் உடை ஆனாலுன்னை
கட்டி வந்தே அணைக்கும்
கந்து வட்டி ஆனாலுன்னை
காத் திருந்து வெட்டும்
விந்தை உளார் யாரென்று
வீடு காணி சொல்லும் – இந்த
விந்தை கூர் வாயும்நன்று
விந்தை செயல் கொட்டும்
முந்தை உரை நாவெல்லாம்
முளை இன்றி வாடும் – இந்த
பிந்தை விதை நிலமாளும் -கால்
பிடரி பட ஓடும் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 02-01-2022
ஒரு முறை உன்னை தா …!
ஒரு முறை உன்னை தா …!
வீடு வந்து என்னை தேடும்
வெண்ணிலா நீ தானோ
உன்னை தேடி நான் ஏங்கும்
உயிர் காதல் இது தானோ
மாலை ஒரு வேளை
மயக்கும் அதி காலை
நீ வந்தால் போதும்
நிகழ்ச்சிகள் தொடரும்
விடியாத இரவுக்குள்
மடியாத போர்வைக்குள்
உன்னோடு வாழும் வாழ்தால் தானே
உயிராகி மிஞ்சும் நாட்கள் தேனே
வீசிய வலைக்குள் விளையாடும் மீன்கள்
விட்டு உயிர் போகும்
கட்டுடல் அழகும் கரையாத கூந்தலும்
பட்டுடல் போகும் பாதியில் பாரும்
நிலையில்லா வாழ்வுக்குள்
நித்தம் போராட்டம்
நினைவழியா கனவுக்குள்
நீயே என் தேரோட்டம்
ஓடும் நதியாய் தேடி வரவா
ஒரு நாளும் மறக்கா முத்தமிடவா
நெஞ்சுக்குள் வாழும் சாமியடி
நீ வந்தால் வாழ்வேன் ஆண்டுநூறடி …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 30-12-2021
- இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர்
- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா
- ஈரான் மீதான போர் மீண்டும் தொடங்கும் என 62 சதவீத இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர்
- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு
ஏன் துரோகம் செய்தாய் …?
ஏன் துரோகம் செய்தாய் …?
சொந்தம் என்று சொல்ல
நீயும் எனக்கு இல்ல
பந்த பாசம் காட்ட
யாரும் இல்ல வீட்ட
நம்பி உன்னை வந்தேனே
நாள் கணக்காய் நடந்தேனே
வெம்பி அழ வைத்தாயே
வேதனையை தந்தாயே
வாழும் காலம் கொஞ்சம்
ஆளும் காலம் கொஞ்சம்
இடை உள்ள காலத்தில
இன்னல்கள் ஏராளம்
ஆசை வைத்து நான் நடந்தா
மோசம் செய்தேன் நீ படர்ந்த
என் மேலே குற்றங்களை
ஏன் அடுக்கி நீ பறந்த
விதி செய்த சதி தானோ
விளையாடல் இது தானோ
மறந்துன்னை நான் போக
மரண அடி இது தானோ ..!
வன்னி மைந்தன்
ஆக்கம் 28-12-2021
நான் வாழ நீ வேண்டும் …!
நான் வாழ நீ வேண்டும் …!
தொட்டு தொட்டு பேசும் விழி
தொடாமலே சிரிக்கும் கன்ன குழி
உன்னில் கண்டு வியந்தேனே
உள்ளம் இதை தொலைத்தேனே
கஞ்சம் இல்லா கொஞ்சும் மொழி
கட்டி தழுவும் பிஞ்சு விழி
தொட்டு பேசும் எண்ணத்திலே
தொடாது பேசும் மஞ்சத்திலே
நீரில் கலந்த பால் பிரிக்கும்
அன்ன பறவை நீ தானோ
வர்ணம் காட்டும் வானவில்லோ
வாசம் வீசும் பூவிதலோ
ஆயிரம் பூக்களில் நீ அழகு
ஆனந்தம் வீசும் பேரழகு
உன்னை மணந்தால் வாழ்வழகு
உன்னாலே காண்பேன் நான் மகிழ்வு
நான் வாழ நீ வேண்டும்
நான் ஆழ உனை வேண்டும்
நீதானே நான் வாழும் காலம்
நீந்தி கரை ஏறும் ஓடம் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 27-12-2021
உன் காதலை சொல்லிடு …!
உன் காதலை சொல்லிடு …!
நான் உலாவும் வீதியிலே
நாளை நீயும் உலவிடு
நானும் நொந்த நாளினையே
நகல் எடுத்து சென்றிடு
ஆள் உலாவும் வீதியிலே
அமைதியானால் ஏற்று விடு
அன்பு உலாவும் வீதியிலே
அமைதி ஆனாய் செத்திடு
வான் நிலவு வீதியிலே
வந்து விட்டால் பார்த்திடு
வந்து நின்ற செய்தியென்ன
வாசல் வந்து சொல்லிடு
ஏற்று விட்டால் என்னன்பே
ஏறி வந்து சொல்லிடு
என்னுறக்கம் தொலைத்த நாளை
எழுதி வைத்து சென்றிடு
உன்னுறக்கம் நீ தொலைத்தால்
உள்ளம் என்னை ஏற்றிடு
உன் உளமதில் யானமர்ந்தேன்
ஊர்ந்து வந்து கொஞ்சிடு …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 26-12-2021
இதுதான் மனித வாழ்வு பார் …!
இதுதான் மனித வாழ்வு பார் …!
ஊருக்குள் வேட்டை நடக்குது பார்
உரையாடல் வீதி கேட்குது பார்
ஆளுக்குள் மோதல் வெடிக்குது பார்
ஆயிரம் புகார் கொட்டுது பார்
முன்னைய பகை போராடுது பார்
முகங்கள் இங்கே கிழியுது பார்
தன் மானம் இங்கே தவறுது பார்
தறிகெட்டு வார்த்தை கொட்டுது பார்
தானே மேலென கொத்துறார் பார்
தவறுகள் இங்கே கொட்டுறார் பார்
வீழ்வேனோ தானென விரட்டிறார் பார்
வீழ்ந்திட்டார் இப்போ மறந்திட்டார் பார்
சிந்தையில் தவறு சிரிக்குது பார்
சீக்கிரம் உன்னை மாற்றும் பார்
முன்னைய நிகழ்வு தவறுதான் பார்
மூளை கூறும் பொறுத்து பார்
பக்குவம் உன்னில் படருது பார்
பகையிலும் பாசம் பொழியும் பார்
போர்குணம் இன்று செத்தது பார்
பொற்குணம் உன்னில் மலருது பார்
இது தான் முதுமை இன்றுபார்
இளைப்பாறும் காலம் இதுவே பார்
தவறுகள் திருத்தும் அகவை பார்
தவறா மனிதம் இதிலே பார்
கடந்ததை எண்ணி வருத்தும் பார்
கல்லான மனமும் கனியும் பார்
இதுதான் பக்குவ முதுமை பார்
இதுதான் மனித வாழ்வு பார் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 25-12-2021
காத்திரு உன் கடன் தீர்ப்பேன் ..!
காத்திரு உன் கடன் தீர்ப்பேன் ..!
உள்நாட்டு போர் வெடிக்க
ஊந்துகணை வாசல் விழ
கதறி வாய் குழற
கால் பிடித்து நாமோட
சிங்களத்து வாசலிலே
சிறை பட்டு நான்கிடக்க
ஓடி வந்தென்னை
ஒத்திக்கு எடுத்தவரே
வேரூன்றி யான் நிமிர
வேண்டுதல் செய்தவரே
உன்செயல் கடன்தீர்க்க
உள்ளத்தால் முடியலையே
ஆண்டு பல கடந்திருச்சு
ஆனாலும் இயலையே
மறந்துவிட்டேன் என்றே
மனதில் நினைத்திருப்பாய்
ஆவி பிரியு முன்னே
அக்கடனை யான் முடிப்பேன்
உன் செயல் யான் மறப்பின்
உலகம் அழிந்து விடும்
விரைவில் கை பேசி
விடயம் பகிரும்
அன்று வியப்பாய்
அழுதே களைப்பாய் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 23-12-2021
- இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர்
- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா
- ஈரான் மீதான போர் மீண்டும் தொடங்கும் என 62 சதவீத இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர்
- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை
- இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலி
- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு
- யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது என டிரம்ப்
- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு
- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை
- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி
- இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்
- ஈரான் அமெரிக்கா கடலில் போர்
உன்னை எண்ணி வியந்தேன் …!
உன்னை எண்ணி வியந்தேன் …!
நெஞ்சுக்குள் எரிகின்ற தீபம் – நீ
நெடுநாள் வாழும் கோலம்
அன்புக்குள் நீளும் பாலம் – நீ
அழியாத வாழ்வின் காலம்
தென்புக்குள் உறைகின்ற வீரம் – நீ
தெளிந்த கடல்நீர் ஓடம்
ஒன்றுக்குள் ஒன்றான ஓர்மம் – நீ
ஓயா ஒலிக்கின்ற கீதம்
நெஞ்சுக்கு நேர்பேசும் வீரம் – நீ
நெசவாகும் பட்டறை கூடம்
பண்புக்கு முதலான மாடம் – நீ
பகலவன் விடிகின்ற வானம்
அந்திக்குள் ஒளிர்கின்ற ஞாலம் – நீ
அழியா புகழின் மாயம்
சிந்தைக்குள் உதிர்கின்ற பேரம் – நீ
சீரிய நட்பின் உதயம்
முன்னைய வாழ்வின் காலம் -நீ
முன்னே தந்த பாடம்
ஏழ்மைக்கு உதவும் அறம் – நீ
ஏறியே ஆள்வாய் உலகம் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 22-12-2021
பெண்ணை ஏன் அழகாய் படைத்தாய்..?
பெண்ணை ஏன் அழகாய் படைத்தாய்..?
பூவுக்கு அழகை ஏன் படைத்தான் – இந்த
புவியில் ஆணையேன் ஏங்க வைத்தான்
கண்ணுக்குள் பார்வையை ஏன் வைத்தான் – இந்த
காதலை உலகில் ஏன் படைத்தான்
விண்ணுக்குள் நிலவை ஏன் வைத்தான் – இதை
விருப்பின்றி ஏன் அங் கடைத்தான்
பூவுக்குள் இதழை ஏன் வைத்தான் – இந்த
புன்னகையை ஏன் அங்கு சிறைவைத்தான்
மண்ணுக்குள் வேரை ஏன் மறைத்துவைத்தான் – இந்த
மாயத்தை ஏனோ செய்து வைத்தான்
சொல்லுக்குள் ஏனோ சந்தம் வைத்தான் – இந்த
செயலுக்குள் என் விந்தை வைத்தான்
மனதுக்குள் ஏனோ ஆசை வைத்தான் – இந்த
மயக்கத்தை ஏனோ அங்கடைத் தான்
பெண்ணுக்கு அழகை ஏனோ வைத்தான் – இந்த
பேரிடரை ஏனோ முன் படைத்தான் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 21-12-2021
இந்த வரியின் முடிவில் அல்லது அடியின் முடிவில் அதன் ஓசை ,,,
,,அத்தான் என ஒலிக்கிறது,,, படித்து பாருங்கள் ,மேலும் வரிகளின்
பின் இருந்து முன்னோக்கி சில சீரை படியுங்கள் அவை இரட்டை அர்த்தம் பேசும்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..!
இன்று எந்தன் பிறந்த நாள்
இன்று எந்தன் பிறந்த நாள்
இல்லம் இன்று மகிழும்
இன்று எந்தன் பிறந்த நாள்
மூத்தவனாய் வந்துதித்த – என்
முதல்வனுக்கு பிறந்த நாள்
வாழ்க்கையிலே தந்தையாக
வந்துதித்தான் பிறந்த நாள்
ஆண்டு இன்று பதினொன்றில்
ஆளும் இந்த பிறந்த நாள்
அகவையில மூப்பாகி – அகிலம்
ஆழ வந்த பெருநாள்
நெஞ்சுக்குள்ளே நீரலையாய்
நீந்தி வரும் பெரும் நாள்
மண்ணுக்குள்ளே வீரம் எழ
மன்றில் வந்தான் பெரும் நாள்
உந்தன் புகழ் பாடிவிட
உருளும் ஆண்டு போதவில்லை
உலகை ஆண்டு ஏறிவிட
உன்னை வாழ்த்த அச்சமில்லை
ஆண்டு தோறும் அகவையிலே
அன்பை ஏற்று ஆண்டிடுவாய்
ஆளும் காலம் ஆயூள் நூறு
அறத்தை நாட்டி வாழ்ந்திடுவாய் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 19-12-2021
- இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர்
- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா
- ஈரான் மீதான போர் மீண்டும் தொடங்கும் என 62 சதவீத இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர்
- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு
இவன் போல நீ எழு
இவன் போல நீ எழு
எதிரிக்கு அடங்கா எழுவான்- இவன்
எண்திசை காட்டும் உதயோன்
அடிமைக்கு அடங்கா கிழக்கு- இவன்
அறத்திலே வெடிக்கின்ற துவக்கு
எதிரிக்கும் எழுகின்ற வியப்பு- இவன்
எரிகின்ற எங்கள் நெருப்பு
வீரத்தில் பாய்கின்ற புலி – இவன்
விடுதலை முழங்கிடும் ஒலி
தளிர்த்திடும் முளைகளின் ஒளி- இவன்
தடத்திலே சிக்காத எலி
வீரத்தில் முளையிடும் முளை – இவன்
வீரம் பேசிடும் நாளை
வீழ்சியில் எழுந்த ஏவுகணை – இவன்
வீரம் பேசிடும் போர்முனை
வீழாது உழுதிடும் ஏர்முனை- இவன்
விடுதலை பேசிட நீமுனை ….
வன்னி மைந்தன்
ஆக்கம் 18-12-2021
இவன் போல நீ எழு
இவன் போல நீ எழு
எதிரிக்கு அடங்கா எழுவான்- இவன்
எண்திசை காட்டும் உதயோன்
அடிமைக்கு அடங்கா கிழக்கு- இவன்
அறத்திலே வெடிக்கின்ற துவக்கு
எதிரிக்கும் எழுகின்ற வியப்பு- இவன்
எரிகின்ற எங்கள் நெருப்பு
வீரத்தில் பாய்கின்ற புலி – இவன்
விடுதலை முழங்கிடும் ஒலி
தளிர்த்திடும் முளைகளின் ஒளி- இவன்
தடத்திலே சிக்காத எலி
வீரத்தில் முளையிடும் முளை – இவன்
வீரம் பேசிடும் நாளை
வீழ்சியில் எழுந்த ஏவுகணை – இவன்
வீரம் பேசிடும் போர்முனை
வீழாது உழுதிடும் ஏர்முனை- இவன்
விடுதலை பேசிட நீமுனை ….
வன்னி மைந்தன்
ஆக்கம் 18-12-2021
யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்
உயிர் வாழ இதை செய்வாய் ..!
உயிர் வாழ இதை செய்வாய் ..!
இஞ்சி குடித்து தினமும் வந்தால்
இருமல் சளியும் மாறும்
இன்றே விரட்டும் கொரனோ நோயும்
இடறி வீழ்ந்தே ஓடும்
வெந்தயம் மிளகு வெறும் குடளுண்டால்
வேளை மலமும் கழியும்
மல்லி தேநீர் தினமும் குடித்தால்
மணக்கும் வாயும் மாறும்
நான்கு லீட்டர் தண்ணீர் குடித்தால்
நாளும் நாறும் வியர்வை அகலும்
குருதி சுத்தம் ஆகி உடலும்
குளிர்ச்சி நாளும் பொங்கும்
உண்ணும் உணவில் இலைகள் நாளும்
உயிர்த்தே உண்டு வாரும்
உயிர் வாழுமாண்டு நூறு கூடும்
உண்மை அறிந்து வாழும்
ஆதி மனிதன் வாழ்வில் இவைதான்
அன்று மருந்து பாரும்
அதனை மறந்து உண்டாய் நீயும்
அவதியுற்றாய் ஏனோ கூறும் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 13-12-2021
மாற்றி யோசி
மாற்றி யோசி
உன்னை போல் நானிருக்க
ஒரு போதும் முடியாது
என்னை போல் நீ இருக்க
எண்ண நீ கூடாது
மாற்றி சிந்திக்க
மனதை கொஞ்சம் மாற்று
மரணித்த பின்னாலும்
மன்றில் உனை ஏற்று
முடியாத ஒன்றை
முன்னேற்ற பழகு
உனக்கான விதி ஒன்றை
உலகில் நீ எழுது
தொட முடியா உச்சத்தை
தொட்டிட முனைந்தால்
தடை போட்ட வாயெல்லாம்
தண்ணீராய் கரையும்
ஒப்பிட்டு பார்க்கும்
ஓரத்தில் நிற்காதே
ஓட்ட முடியா உச்சத்தில்
ஓடி ஏற மறக்காதே
எவரையும் பின் தொடர
என்றும் நீ எண்ணாதே
உன்னை பின் தொடர
உலகை வைக்க மறக்காதே
வன்னி மைந்தன்
ஆக்கம் 12-12-2021
- இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர்
- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா
- ஈரான் மீதான போர் மீண்டும் தொடங்கும் என 62 சதவீத இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர்
- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை
- இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலி
- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு
- யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது என டிரம்ப்
- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு
- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை
- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி
- இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்
- ஈரான் அமெரிக்கா கடலில் போர்
- 39 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா
நான் வாழ நீ வா ..!
நான் வாழ நீ வா ..!
இன்றேவா இதயம்தரவா
இக்கீதம் இசைந்தே இசைக்கவா
இசையே இணைந்தால் இசையாவேன்
இன்றே இணையே இசைவேன்
நீபாட நினைவுக்குள் நீராடா
நிகழ்காலம் நின்றாட
ஓடும்நதியாக ஓடுவேன்
ஓடும்கரை ஓடமாவேன்
நாள்தோறும் நான்வாழ
நீவா நினைவுதா
உன்னை உயிலெழுதி
உயிரே உயிரேதா
சீர்மோனை சீதனமா
சீரிட்டாய் சிக்கனமா
உன்னாலே ஊர்கிறேன்
உள்ளமே உயிராகிறேன்
எந்நாளும் என்நெஞ்சில்
ஏமனமே ஏறியாடு
எனக்காக என்னுயிரே
எந்நாளும் ஏக்கமிடு …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 10-12-2021
உன்னால் மகிழ்கின்றேன் …!
உன்னால் மகிழ்கின்றேன் …!
கண் பார்க்கும் முன்னாலே
கை பேசியில் வந்தவளே
உன்னிடத்தில் சரணடைய
உச்சரித்தாய் எப்படியோ
ஆழ்கடலின் பேரலையில்
அகப்பட்ட என்னை
தேடி வந்து மீட்டெண்ணை
தேற்றினாய் எப்படியோ
முடியாதென்ற அலட்சியத்தை
முடிவுகட்டி அனுப்பி வைத்து
முடியும் என்ற இலட்சியத்தை
முன்னேற்றி வைத்தாயே
உன்னால் மட்டும் எப்படியோ
உயிர் கொடுக்க முடிகிறது
கண்டு பிடிப்புகளை எப்படியோ
கரையேற்ற முடிகிறது
நீ அவிழ்க்கும் மொழியெல்லாம்
நிலம் செழிக்கும் உரமாய்
வீசிட எப்படித்தான்
விண்ணிலவே முடிகிறது
காலத்தை அளவிடும்
கலண்டராய் நீ இருக்க
என் மன கவலை எல்லாம்
ஏ மனமே ஓடி விடும் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 01-12-2021
மீண்டும் எழுவோம் வீரம் தரிப்போம் …!
மீண்டும் எழுவோம் வீரம் தரிப்போம் …!
சோழ கடலில் ஆடிய வீரம்
சோரம் போனதுவோ – பகை
சோர்வை அகற்ற கயவர் கூடி
சோடனை செய்ததுவோ
வில்லும் வாழும் பொருதியே களத்தில்
விண்ணில் எறியவர்
பண்ணிசை பாடியே பாமர மக்களை
படைக்கு அழைத்தவர்
இன்நிலை இழிதலில் விளைந்திடார் என்றே
இந்நிலை ஆடாதே
ஒரு நிலை வீழ்ந்திட ஒரு நிலை எழுந்திடும்
ஓர்மம் கொள்ளாதே
காலிடை நாசியும் புழுவாய் துடித்தால்
கலவரம் பிறக்காதோ
கயவர் இவரென பகைவர் அவரென
களமது முளைக்காதோ
எழுவதும் வீழ்வதும்
எழுவாய் பயனிலை
ஏற்றம் தரித்தல்
செயல் படு பொருள் நிலை
வழித்தடம் விழித்திடும் போதினில்
வழியெங்கும் பகையுடல் சரியும்
மொழியுடன் புரட்சி வெடித்திடும்
மொழியா புகழுடன் விடிந்திடும்
நஞ்சு கட்டியே களமது பொருதினார்
நாளை வந்திடுவார்
நலமுடன் வாழ தமிழ் மொழி அழ
நல் வழி செய்திடுவார் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 30-11-2021
நீ வந்தால் நான் மகிழ்வேன் …!
நீ வந்தால் நான் மகிழ்வேன் …!
விண்ணிலவு வீதியிலே ஏன் நடந்ததோ
விடலைகள் உருகிடவே ஏன் வைத்ததோ
சின்ன விழி பார்வையிலே சிறை வைத்ததே – பறவை
சிறகின்றி ஏன் நடந்ததோ
முளை விட்ட நாற்றும் உருகிடாதோ -இந்த
முழு நிலவை கண்டு பதறிடாதோ
அருகில் வந்து அணைத்திடாதோ – ஏக்கம்
ஆறாய் நெஞ்சில் பாய்ந்திடாதோ
இஞ்சி இடையிலே சிக்கி இதயம் தளம்புதே
இந்த நிலையிலே மனமும் வெம்புதே
பூவுக்கு அழகை ஏன் படைத்தான் – இந்த
புவியில் ஆணை ஏன் ஏங்க வைத்தான்
கண்ணுறங்கி போகுமோ – இல்லை
காதல் கொண்டு தொடருமோ
என்ன இது விதியோ
ஏன் இறைவா இந்த சதியோ
மின்னல் ஒன்று கண்ணிலே
மின்னி ஏன் வீழ்ந்தது
நெஞ்சில் காதல் முளைவிட
நேரில் ஏன் வந்தது
தொடை காட்டி கால் நடக்க
தொலையமால் இருக்குமோ -விழி
தொடராமல் மறையுமோ – இந்த
தொடரும் தான் முடியுமோ
ஆசை நாவூற அதிலேறி சுவை ஏற
அந்தி மறைந்தது அதிகாலை விடிந்தது
உடலும் ஒடிந்து நலிந்தது
உருமாறி அகவை முடிந்தது
அலை ஆட பட கோடும்
அதுபோல மனதாடும்
விண்ணிலவே நீ வந்தால்
விடுதலை உடன் பிறக்கும் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 29-11-2021







































