காத்திரு உன் கடன் தீர்ப்பேன் ..!
உள்நாட்டு போர் வெடிக்க
ஊந்துகணை வாசல் விழ
கதறி வாய் குழற
கால் பிடித்து நாமோட
சிங்களத்து வாசலிலே
சிறை பட்டு நான்கிடக்க
ஓடி வந்தென்னை
ஒத்திக்கு எடுத்தவரே
வேரூன்றி யான் நிமிர
வேண்டுதல் செய்தவரே
உன்செயல் கடன்தீர்க்க
உள்ளத்தால் முடியலையே
ஆண்டு பல கடந்திருச்சு
ஆனாலும் இயலையே
மறந்துவிட்டேன் என்றே
மனதில் நினைத்திருப்பாய்
ஆவி பிரியு முன்னே
அக்கடனை யான் முடிப்பேன்
உன் செயல் யான் மறப்பின்
உலகம் அழிந்து விடும்
விரைவில் கை பேசி
விடயம் பகிரும்
அன்று வியப்பாய்
அழுதே களைப்பாய் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 23-12-2021
- ஈரான் அமெரிக்கா கடலில் போர்
- 39 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா
- ஈரான் மீதான போர் ‘மிக விரைவில் முடிவுக்கு வரலாம்’ என்கிறார் டிரம்ப்
- அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ‘உண்மையான பயங்கரவாதிகள்’ என ஈரான் அதிபர் சாடினார்
- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது
- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை
- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்
- அமெரிக்க முற்றுகையை மீற முடியாமல் சிக்கிய சீன கப்பல்
- ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகை போர்
- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை
- இஸ்ரேலுக்கான ட்ரம்பின் இராணுவ விற்பனை
- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை
- இஸ்ரேல்-லெபனான் பேச்சுவார்த்தை
- விமான நிலையத்தில் சிக்கிய சீன நாட்டவர்




















