Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
தமிழரசு கட்சிக்குள் குழப்பம் குத்து வெட்டு ஆரம்பம் பறிபோகும் சிறிதரன் தலைவர் பதவி
தமிழரசு கட்சிக்குள் குழப்பம் குத்து வெட்டு ஆரம்பம் பறிபோகும் சிறிதரன் தலைவர் பதவி
தமிழரசு கட்சிக்குள் குழப்பம் குத்து வெட்டு ஆரம்பம் பறிபோகும் சிறிதரன் தலைவர் பதவி ,தமிழரசு கட்சியின் தலைவராக சுமந்திரன் துடிப்பதால் சிறிதரன் பதவியை தட்டி பறிக்க சுமந்திரன் நடவடிக்கை .
சட்டத்தரணி சுமந்திரன் சூத்து மாத்து
இலங்கை ஆளும் ஜனாதிபதியின் சட்டத்தரனியாக விளங்கி வரும் சுமந்திரன் ,இன்றைய புதிய தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவு செய்ய பட்ட ஸ்ரீதரனுக்கு எதிராக சூழ்ச்சிகளை செய்து வருகிறார் .
தானே தமிழ் மக்கள் தாதாவாக நினைத்து தமிழ் மக்கள் அரசியல் அபிலாஷைகளை குழிதோண்டி புதைத்து வரும் சுமந்திரன் ,தான் சட்டத்தரணி என்ற வகையில் தமிழரசு கட்சிக்கு எதிராக பாரிய சதி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார் .
தமிழரசு கட்சி மீள் தலைவர் தெரிவு
தமிழரசு கட்சிக்குள் மீள் தலைவர் தெரிவு இடம்பெற வேண்டும் என அந்த கட்சிக்குள் குழப்பங்கள் நிலவி வருவதால் ,மீள ஒரு தேர்தலை நடத்தி அதன் ஊடக தலைவரை தெரிவு செய்திட தயாராக உள்ளதாக ,இன்றைய தமிழரசு கட்சியின் புதிய தலைவர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார் .
நீதிமன்றத்தினால் வழங்க படும் அறிவுறுத்தல் மற்றும் அவர்களது மேற்பார்வையின் கீழ் ,மீள ஒரு தேர்தலை நடத்தி அதன் ஊடக கட்சியின் தலைவர் பதவியை தெரிவு செய்திட, தான் தயாராக உள்ளதாக சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்து பர .பரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
.இன்றைய இலங்கை செய்திகள் தலைப்பு செய்தி
இந்த விடயம் இன்றைய இலங்கை செய்திகளில் முதன்மை தலைப்பு செய்திகளாக இடம்பிடித்து தமிழரசு கட்சியின் உள்வீட்டு குழப்பத்தை , வெட்டு குத்தை அம்பல படுத்தியுள்ளது ..
குடிகார கணவனின் சடலத்தை ஏற்க மறுத்த மனைவி
குடிகார கணவனின் சடலத்தை ஏற்க மறுத்த மனைவி
குடிகார கணவனின் சடலத்தை ஏற்க மறுத்த மனைவியின் செயல் பர பரப்பை ஏற்படுத்தியது ,கணவன் இறந்த நிலையில் அவரது சடலத்தை ஏற்க மனைவி மறுத்ததால் அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர் .
மது போதைக்கு அடிமையான கணவன்
கணவன் குடிபோதையில் நாள் தோறும் மனைவி பிள்ளைகளுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார் ,அதனால் கணவனை விட்டு மனைவி தனியாக வசித்து வந்துள்ளார் .
உழைக்கும் பணத்தை மது போதைக்கு செலவு செய்து மது போதையே வாழ்வாக மாற்றி குடும்பத்தை பராமரிக்க மறந்து மதுவுக்கு அடிமையானதினால் ,கணவனின் சடலத்தை ஏற்க மறுத்த மனைவி செயல் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கை கேகாலை இடம்பெற்ற இந்த் சம்பவம் ,இலங்கை மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கை மத்திய வங்கி இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கை மத்திய வங்கி இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கை மத்திய வங்கியானது இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது ,மத்திய வங்கியின் சின்னத்தை பயன் படுத்தி பண மோசடி நடைபெறுவதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
மத்திய வங்கி யின் சின்னத்தை பயன் படுத்தி தவறான வழியில் மோசடி இடம்பெறுவதாகவும் , இதன் பொழுது மக்களை விழிப்பாக இருக்கும் படி இலங்கை மத்திய வங்கி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது .
குற்றவியல் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கிக்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டை அடுத்து இந்த அறிவுறுத்தலை இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ளது .
மக்களுக்கு சந்தேகங்கள் ஏற்படும் பட்சத்தில் மத்திய வங்கியை தொடர்பு கொண்டு உறுதி படுத்தி கொள்ளும் படியும் வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது
நவீன நூதன முறையில் மேற்கொள்ள படும் வங்கி மோசடிகளை தடுக்கும் நடவடிக்கையில் மத்திய வங்கி ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது .
அமெரிக்க பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை
அமெரிக்க பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை
இணையவழி பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட சட்டங்களுடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அமெரிக்க செனட் சபையின் வெளியுறவு தொடர்புகள் குழுவின் சிரேஷ்ட தொழில்சார் பணிக்குழாமின் பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஆழமான தெளிவை பெற்றுக்கொள்வதற்காக இந்த பிரதிநிதிகள் குழு நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது சமூக வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி பிரதிநிதிகள், பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பில் ஆராயவும், இணையவழி பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட அண்மைய சட்டங்களுடன்
தொடர்புடைய சிக்கல்கள் குறித்து கலந்துரையாடவும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்திக்கவுள்ளனர் என அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது பதிவில் தெரிவித்துள்ளார்
தன்னாமுனை விபத்தில் ஒருவரி பலி: மூவர் படுகாயம்
தன்னாமுனை விபத்தில் ஒருவரி பலி: மூவர் படுகாயம்
மட்டக்களப்பு – தன்னாமுனை பிரதான வீதியில் வெள்ளிக்கிழமை (16) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 3பேர் காயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
காத்தான்குடியை சேர்ந்த நான்கு பேர் முச்சக்கர வண்டியில் ஏறாவூரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது தன்னாமுனையில் வைத்து முச்சக்கர வண்டியும் சிறிய லொறியும் மோதுண்டு இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது
குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த காத்தான்குடி ஷைகுல் பலாஹ் வீதியை சேர்ந்த ரியாஸ் என்பவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி குழந்தை உட்பl 3 பேர் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தன்னாமுனை விபத்தில் ஒருவரி பலி: மூவர் படுகாயம்
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
இவரின் ஜனாஸா தொழுகை காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆ பள்ளிவாயலில் சனிக்கிழமை (17) இரவு இஷா தொழுகையைத் தொடர்ந்து நடாத்தப்பட்டு அதே பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
யுக்திய சுற்றிவளைப்பு;நீதிமன்றம் அதிரடி உத்தரவு
யுக்திய சுற்றிவளைப்பு;நீதிமன்றம் அதிரடி உத்தரவு
யுக்திய’ விசேட நடவடிக்கையின் போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பல வாகனங்களை பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுவல நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதுடன், ஏறக்குறைய 100 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனங்களை அதன் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அறிவுறுத்தியுள்ளது.
விசாரணைக்காக வாகனங்களை மேலும் தடுத்து வைக்க பொலிஸார் விடுத்த கோரிக்கையையும் நீதவான் நிராகரித்துள்ளார்.
வழக்கு விசாரணையின் போது, மேற்படி சொத்துக்களை கையகப்படுத்துவதற்கு உயர் நீதிமன்றத்தில் முறையான உத்தரவுகள் பெறப்படவில்லை என பாதுகாப்பு சபை குற்றம் சாட்டியது.
யுக்திய சுற்றிவளைப்பு;நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் பொலிஸாரால் ‘யுக்திய’ விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது போதைப்பொருள் கடத்தல்காரர் என்று கூறப்படும் மலலகே சுதத் கித்சிறி என்றழைக்கப்படும் “வெலிவிட்ட சுத்தா”வின் சகோதரிக்கு சொந்தமான பல வாகனங்களை கடுவெல பொலிஸார் கைப்பற்றி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரியவருகிறது .
குறித்த பெண்ணிடம் இருந்து ஐந்து சொகுசு பஸ்கள், சொகுசு வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை கடுவெல பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கறுப்பு கொடிகளை கட்டி மீனவர்கள் போராட்டம்
கறுப்பு கொடிகளை கட்டி மீனவர்கள் போராட்டம்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட மீன்பிடி விசைப் படகின் ஓட்டுனருக்கு ஆறு மாத சிறை தண்டனை மற்றும் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்ட மீனவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தமையை கண்டித்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மீனவர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஞாயிற்றுக்கிழமை (18) காலை கறுப்பு கொடிகளை கட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கறுப்பு கொடிகளை கட்டி மீனவர்கள் போராட்டம்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட மூன்று தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்ற தீர்ப்பளித்ததை கண்டித்து நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவை புறக் கணிப்பதுடன்
சனிக்கிழமை (17) முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஆலோசனை கூட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மியன்மாரில் இலங்கை மீனவர்களுக்கு சிறைத்தண்டனை
மியன்மாரில் இலங்கை மீனவர்களுக்கு சிறைத்தண்டனை
மியன்மாரில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் இருவருக்கு மியன்மார் நீதிமன்றம் 5 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
மீன்பிடி படகுகளை செலுத்தியவர்களுக்கே 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 13 இலங்கை மீனவர்களுக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பொது மன்னிப்பின் கீழ் மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தூதுவர் கூறினார். மீனவர்கள் நலமுடன் இருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மியன்மார் கடல் எல்லையை மீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 2 மீன்பிடி படகுகளுடன் 15 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்
தங்காலை காலி பகுதிகளுக்கு ஜனாதிபதி விஜயம்
தங்காலை காலி பகுதிகளுக்கு ஜனாதிபதி விஜயம்
நாட்டின் சுற்றுலாத்துறையில் ஏற்பட்டிருக்கும் மறுமலர்ச்சி காரணமாக சுற்றுலா வலயங்களை அண்மித்த வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று தங்கல்ல முதல் காலி வரையுள்ள பல சுற்றுலாத் தலங்களுக்கு நேரடியாக விஜயம் செய்திருந்தார்.
இதன்போது சுற்றுலா ஹோட்டல்களுக்குச் சென்ற ஜனாதிபதி எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார்.
இதன்போது சுற்றுலாத் துறையினர் சுட்டிக்காட்டிய பிரச்சினைகளுக்கு உரிய அதிகாரிகளைத் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு உடனடியாக தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்த ஜனாதிபதி, சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான யோசனைகளையும் கேட்டறிந்துகொண்டார்.
தங்காலை காலி பகுதிகளுக்கு ஜனாதிபதி விஜயம்
அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி சுற்றுலா வர்த்தகச் சமூகத்திற்கு அறிவுறுத்தியதன் பின்னர் புதிய வேலைத்திட்டத்தின் ஊடாக தங்களது வர்த்தகச் செயற்பாடுகளில் புதிய பரிணாமத்தை எட்டியிருப்பதாக வர்த்தகர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
சீனிமோதர, திக்வெல்ல, நில்வெல்ல, ஹிரிகெட்டிய, வெலிகம, ஹபராதுவ பகுதிகளில் அமைந்திருக்கும் சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் வெலிகம – அலைச்சறுக்கு பயிற்சி கல்லூரிக்கும் விஜயம் செய்து அதன் செயற்பாடுகளை ஜனாதிபதி நேரில் ஆராய்ந்தார்.
இலங்கையில் இரு ஈரான் போர் கப்பல்கள் தரிப்பு
இலங்கையில் இரு ஈரான் போர் கப்பல்கள் தரிப்பு
இலங்கை கொழும்பு துறைமுகத்தில் ஈரானின் இரண்டு போர்ப்பல்கள் தரித்துள்ளன
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஈரானின் IRINS Bushehr and IRINS Tonb என்கின்ற கப்பல்கள் ,இரு நாடுகளுக்கு இடையிலான கடல் சார் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பில் ஈடுபடும் என அறிவிக்க பட்டுள்ளது .
கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ள ஈரான் கப்பல் வருகை இஸ்ரேலை கொதிப்பில் உறைய வைத்துள்ளது
240 கடல் படை சிப்பாய்களுடன் வருகை தந்துள்ள இந்த கப்பல்கள் மிக முக்கிய பங்கினை இலங்கைக்கு ஆற்றும் என எதிர் பார்க்க படுகிறது .
இஸ்ரேல் காசாவுக்கு இடையில் போர் உக்கிரம்பெற்று வரும் இந்தக் காலத்தில் இலங்கை துறைமுகத்தில் இந்த கப்பல்கள் தரித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்த படுகிறது .
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

மன்னார் சிறுமியின் மரணத்திற்கான காரணம் வெளியானது
மன்னார் சிறுமியின் மரணத்திற்கான காரணம் வெளியானது
தலைமன்னார் – வடக்கு பகுதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட 10 வயது சிறுமியின் சடலம் மீதான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது.
இதில் குறித்த சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அவர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானமைக்கான அறிகுறிகள் காணப்படுவதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி எஸ்.பிரணவன் முன்னிலையில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் சிறுமியின் மரணத்திற்கான காரணம் வெளியானது
இதேவேளை, சம்பவம் தொடர்பில் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட தென்னந்தோப்பில் பணியாற்றி வந்த திருகோணமலை – குச்சவெளி பகுதியைச் சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டிருந்தார்
அவர் மன்னார் நீதவான் முன்னிலையில் இன்று பிரசன்னப்படுத்தப்பட்டார்.
இந்தநிலையில், சந்தேகநபரை 48 மணித்தியாலத்துக்கு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு மன்னார் நீதவான் அனுமதியளித்துள்ளார்
நேற்று முன்தினம் இரவு முதல் குறித்த சிறுமி காணாமல் போயிருந்ததாக அவரது பாட்டி காவல்துறையினரிடம் முறைப்பாடளித்திருந்தார்.
இதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சிறுமியின் சடலம் நேற்று மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
இலங்கை பொலிசாருக்கு நெத்தியடி வழங்கிய நீதிமன்றம்
இலங்கை பொலிசாருக்கு நெத்தியடி வழங்கிய நீதிமன்றம்
யுக்திய நடவடிக்கை கீழ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான வாகனங்களை அவற்றின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வாகனங்களை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளுக்கு அவகாசம் வழங்குமாறு விடுத்த கோரிக்கையை நிராகரித்து கடுவெல நீதவான் திருமதி சனிமா விஜேபண்டார இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
இலங்கை பொலிசாருக்கு நெத்தியடி வழங்கிய நீதிமன்றம்
இந்தச் சொத்தை கையகப்படுத்துவதற்கு உயர் நீதிமன்றத்திடம் இருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முறையான உத்தரவுகளைப் பெறவில்லை என பிரதிவாதி சட்டத்தரணி நீதிமன்றில் கடும் ஆட்சேபனையை முன்வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
கடந்த வருடம் டிசெம்பர் மாதம் போதைப்பொருள் கடத்தல்காரரான ‘வெலிவிட்ட சுத்தா’ என்பவரின் சகோதரிக்கு சொந்தமான 5 சொகுசு பஸ்கள்,
நவீன கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை கடுவெல பொலிஸார் கைப்பற்றி குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்தமை குறிப்பிடத்தக்கது.
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

லண்டனில் தமிழரின் புது காரை திருடி சென்ற திருடர்கள்
லண்டனில் தமிழரின் புது காரை திருடி சென்ற திருடர்கள்
லண்டனில் தமிழரின் ஒருவரது புது காரை திருடி சென்ற திருடர்கள், மீள அதே இடம் வந்து திரும்பி பார்த்த பொழுது கார் திருடப்பட்டுள்ளது கண்டு அதிர்ந்த்து போயுள்ளார் அந்த .தமிழர்.
லண்டன் தொண்டன் கீற்று பகுதியில் தனது புது காரை பார்க்கிங் செய்துவிட்டு வேலைக்கு சென்றுள்ளார் .
மீள வேலை முடித்து வந்து பார்த்த பொழுது தமிழர் கார் காணாமல் போயுள்ளது .
36.000 பவுண்டுகளுக்கு வாங்க பட்ட , காரை இழந்து அவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார் .
கார் திருட பட்ட சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தெரிவிக்க பட்ட நிலையில் போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன . .
வழமையாக எந்த இடத்தில் காரை பார்க்கிங் செய்கிறார் என்பதை கவனித்து வைத்த திருடர்கள் தமது கைவரிசையை காண்பித்துள்ளனர் .
இது போன்று உங்களுக்கும் இடம்பெறலாம் எச்சரிக்கையுடன் செயல் படுங்கள் லண்டன் .தமிழர்களே
தங்க ஆபரணங்களை திருடிய இளைஞர் கைது
தங்க ஆபரணங்களை திருடிய இளைஞர் கைது
வவுனியா நகர சபை மைதானத்தில் நடைப் பயிற்சிக்கு வருகை தந்தவரின் நகைகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் 32 வயது இளைஞர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நடைப் பயிற்சிக்காகக் கடந்த சில நாட்களாக வவுனியா நகர சபை மைதானத்துக்கு வந்து சென்றுள்ளார். வழமை போன்று நேற்றுமுன்தினம் மாலையும் நகர சபைக்கு அவர் வந்துள்ளார்.
தங்க ஆபரணங்களை திருடிய இளைஞர் கைது
இதன்போது தான் அணிந்திருந்த சங்கிலி, காப்பு உள்ளிட்ட 4 பவுண் தங்க ஆபரணங்களை நகர சபை வளாகத்தில் உள்ள மோட்டடார் சைக்கிள் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்ட தனது மோட்டார் சைக்கிள் இருக்கைக்குள் வைத்து பூட்டி விட்டு நடைப் பயிற்சிக்குச் சென்றுள்ளார்.
நடைப் பயிற்சி முடிந்த பின்னர் தனது மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக அந்தப் பெண் வந்தபோது அவரது மோட்டார் சைக்கிள் இருக்கை உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் திருடப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது
யாழ் சிறைச்சாலைக்கு சென்ற ஜீவன்
யாழ் சிறைச்சாலைக்கு சென்ற ஜீவன்
மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிலையானதொரு தீர்வை காணுமாறு இந்திய அரசிடமும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்
பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள 43 தமிழக மீனவர்களை அமைச்சர் நேரில் சென்று சந்தித்தார். அவர்களிடம் சுகம் விசாரித்ததுடன், அவர்களுக்குள்ள பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் கூறியவை வருமாறு,
“ யாழ்ப்பாணம் சிறையில் உள்ள 43 தமிழக மீனவர்களை சந்தித்தேன். அவர்கள் ஏன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது பற்றி எடுத்து கூறினேன். அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டனர். 43 மீனவர்களில் இருவர் கடத்தல்
சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளனர். ஏனைய 41 மீனவர்களுக்கும் இலங்கை அரசு மூலமாக அல்லது, எம்மால் முடிந்த உதவிகளை நிச்சயம் செய்வோம். இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் அவர்கள் விடுதலை
செய்யப்படுவார்கள் என நம்புகின்றேன். இலங்கை பொலிசார் தம்மை நன்றாக நடத்துகின்றனர் என மீனவர்கள் தெரிவித்தனர்.
யாழ் சிறைச்சாலைக்கு சென்ற ஜீவன்
வடக்கில் உள்ள மீனவர்களும் தமிழர்கள், போரால் பாதிக்கப்பட்டவர்கள், சிறிய படகுகளை வைத்துக்கொண்டுதான் அவர்கள் தமது வாழ்க்கையை கொண்டு நடத்துகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது.
தமிழக மீனவர்கள் ரோலர் படகுகளைப் பயன்படுத்தி அதிகளவான மீன்களை பிடிக்கின்றனர், இலங்கை கடல் வளமும் சேதமடைகின்றது. இது கடல்சார் சட்டங்களையும் மீறும் செயலாகும். மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு
காணுமாறு இந்திய அரசிடமும், இலங்கை ஜனாதிபதியிடமும் நாம் கோரிக்கை முன்வைத்துள்ளோம்.” – என்றார்.
நிந்தவூரில் காணாமல் போன மாணவர்களின் ஒருவரின் சடலம் மீட்பு
நிந்தவூரில் காணாமல் போன மாணவர்களின் ஒருவரின் சடலம் மீட்பு
கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போன மாணவர்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓலுவில் நிந்தவூர் எல்லைக் கடலோரங்களில் விளையாட்டில் ஈடுபட்ட 8 மாணவர்களில் இருவர் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போன சம்பவம் நேற்று (16) மாலை அப்பகுதியில் சோக நிலையயை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் காணாமல் போன சூர்தின் முஹம்மட் முன்சிப் என்ற மாணவனின் உடல் இன்று காலை ஒலுவில் பகுதியில் கரையோதுங்கியுள்ளது. மற்றுமொரு மாணவன் தொடர்பான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நிந்தவூரில் காணாமல் போன மாணவர்களின் ஒருவரின் சடலம் மீட்பு
சம்பவ தினம் மாளிகைக்காடு – சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த இரண்டு மாணவர்களே பிரதேச கடலில் புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
13-15 வயதுக்குட்பட்ட 08 பாடசாலை மாணவர்கள் தொழுகையை முடித்துக்கொண்டு துவிச்சக்கர வண்டியில் நிந்தவூர்- ஒலுவில் எல்லை கடற்கரைக்கு சென்று புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன் இரண்டு மாணவர்கள் கடல் அலை உள்ளிழுத்து சென்றுவிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தவிர ஏனைய ஆறு மாணவர்களிடம் நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாந்தன் எந்த நிலையிலும் இலங்கைக்கு வந்து இறங்கலாம்
சாந்தன் எந்த நிலையிலும் இலங்கைக்கு வந்து இறங்கலாம்
சாந்தன் எந்த நிலையிலும் இலங்கையில் வந்து இறங்கலாம் என்ற கட்டத்தில்தான் இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் வினாவிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சாந்தன் எந்த நிலையிலும் இலங்கையில் வந்து இறங்கலாம் என்ற கட்டத்தில்தான் நிலைமை உள்ளது.
சாந்தனுடைய தாயார், சகோதரி, சகோதரன் உள்ளிட்டோர் என்னிடம் வந்து கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தனர்.
சாந்தன் எந்த நிலையிலும் இலங்கைக்கு வந்து இறங்கலாம்
சாந்தனும் தன்னுடைய வழக்கறிஞருக்கூடாக ஒரு கோரிக்கையை எனக்கு எழுத்தில் அனுப்பியுள்ளார். இவற்றை வைத்து அமைச்சரவையில் இது தொடர்பில் பேசியிருந்தேன்.
அதற்கு ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர், நீதி அமைச்சர் உள்ளிட்டோர் அவர் இங்கு வருவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என தெரிவித்தனர்.
இது தொடர்பில் சம்மந்தப்பட்டவர்களிற்கு அறிவித்துள்ளோம். அங்கு அதற்கான நடவடிக்கைகள் நடந்துகொண்டிருக்கிறது.
அவரை அவரது உறவினர்கள் எந்த நேரத்திலும் அழைத்து வரலாம் என தெரிவித்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்காலிக தீர்வு
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்காலிக தீர்வு
யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் நிரந்தர புகையிரத கடவை சமிஞ்ஞை விளக்கு அமைக்கப்படும் வரை புகையிரத கடவையில் ஏற்படும் அனர்த்தங்களை கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்காலிக தீர்வை பெற்றுக் கொடுத்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் இணுவில் பகுதியில் ஏற்பட்ட புகையிரதத்துடன் வான் மோதியதில் ஏற்பட்ட விபத்து காரணமாக சிறு குழந்தை உள்ளிட்ட இருவர் பலியாகி இருந்தனர்.
இந்நிலையில் விபத்து இடம்பெற்ற பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (16) களவிஜயம் மேற்கொண்டு நிலைமைகளை பார்வையிட்டிருந்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்காலிக தீர்வு
நிலைமைகளை ஆராய்ந்த அமைச்சர் துறைசார் திணைக்களத்துடன் கலந்துரையாடி சமிஞ்ஞை விளக்கை பொருத்துவதற்கான் நடவடிக்கை மேற்கொண்டார்.
குறித்த நடவடிக்கை நடைபெறுவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால் அதுவரை தற்காலிக ஏற்கபாடாக கிராமத்து இளைஞர் இருவரை காவல் கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொண்டதுடன் அதற்கான மாதாந்த கொடுப்பனவை கட்சி நிதியில் இருந்து வழங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொது கழிப்பறை கட்டணம் வெளியான அறிவிப்பு
பொது கழிப்பறை கட்டணம் வெளியான அறிவிப்பு
கொழும்பு, பெஸ்டியன் மாவத்தையில் உள்ள தனியார் பஸ் நிலையத்தில் கழிப்பறைகளை பயன்படுத்துவதற்கு அறவிடப்படும் கட்டணத்தில் மாற்றமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு கழிப்பறைகளை பயன்படுத்துவதற்கு வசூலிக்கப்பட்ட கட்டணம் 20 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக அதிகரிக்கப்பட்டதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
பொது கழிப்பறை கட்டணம் வெளியான அறிவிப்பு
இந்த நிலையில், கழிப்பறை கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்தார்.
அதன்படி, கழிப்பறைகளை பராமரிக்கும் தரப்பினருக்கு, உயர்த்தப்பட்ட கட்டணத்தை முந்தைய விலைக்கு மாற்றியமைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதன்படி நேற்று பிற்பகல் முதல் 20 ரூபாய் கட்டணம் அறவிடப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொத்மலை நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த யுவதி
கொத்மலை நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த யுவதி
படத்தை பார்க்கும் போது, யுவதியொருவர் தொங்கிக்கொண்டிருப்பதை போல தெரியும் எனினும், கதை வேறாகும்.
தலவாக்கலை, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த யுவதியொருவர் தலவாக்கலை பிரதேச மக்கள் மற்றும் பொலிஸாரால் பெரும் பிரயத்தனத்து பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் தலவாக்கலை கூட்டுறவு தலைமை அலுவலகத்துக்கு அருகாமையில் மிகவும் ஆழமான இடத்தில் இளம் பெண் வீழ்ந்துள்ளார், மேலும் அவர் நீர்த்தேக்கத்தில் தத்தளித்ததைக் கண்ட மக்கள் எடுத்த உடனடி நடவடிக்கையால் அவரது உயிரைக் காப்பாற்ற முடிந்தது.
கொத்மலை நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த யுவதி
ஒரு சிலர் நீர்த்தேக்கத்தில் குதித்து அவளைப் பிடித்தனர், நீர்த்தேக்கத்துக்கு மேலே நின்றிருந்தவர்கள் கயிறுகளை போட்டு, மிகவும் சிரமப்பட்டு கரைக்கு இழுத்தனர், பின்னர் அவர் சிகிச்சைக்காக லிந்துலை பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அக்கரபத்தன பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதி ஒருவர் நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்து மீட்கப்பட்டுள்ளார். வேலை ஒன்று இல்லையே என யோசித்துகொண்டே நீர்த்தேக்கத்துக்கு ஓரமாக சென்று கொண்டிருந்த போதே, நீர்த்தேக்கத்துக்குள் தவறி விழுந்துள்ளார்.




































