Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு 15 லட்சம் இழப்பீடு
உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு 15 லட்சம் இழப்பீடு
சனத் நிஷந்தவுடன் இறந்த பொலிஸ் கான்ஸடபிள் அதிகாரிக்கு 15 லட்சம் இழப்பு வழங்க பட்டுள்ளதக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது
இராயங்க அமைச்சருக்கு காவல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொலிஸ் கான்ஸடபிள் அதிகாரிக்கே இந்த இழப்பீடு வழங்க பட்டுள்ளது .
இவர் இறந்த பின்னர் பொலிஸ் தலைமையாகத்தால் பதவி உயர்வு வழங்க பட்டிருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .
அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்
மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன
லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன
செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது
குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா
துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர்
பொலிசார் நடத்திய யுக்திய நடவடிக்கையில் 814 பேர் கைது
பொலிசார் நடத்திய யுக்திய நடவடிக்கையில் 814 பேர் கைது
பொலிசார் நடத்திய யுக்திய நடவடிக்கையில் 814 பேர் கைது செய்யப்பட்டனர் ,கடந்த 24மணித்தியாலத்தில் யுக்திய நடவடிக்கையில் பொலிசாரால் இந்த கைது இடம்பெற்றுள்ளது .
இந்த யுக்திய நடவடிக்கை பொலீசாருடன் சிக்கிய நபர்கள் பல்வேறு பேட் குற்ற செயல்களுடன் தொடர்பு பட்டவர்களாக காண படுகின்றனர் .
அதிக அளவான நபர்கள் போதைவஸ்துடன் கைது செய்ய பட்டுள்ளதாக யுக்தியை நடவடிக்கை பொலிசார் தெரிவித்துள்ளனர் .
Grid
புதுக்குடியிருப்பு விபத்தில் வாலிபன் பலி அதிகரித்த விபத்துக்கள்
புதுக்குடியிருப்பு விபத்தில் வாலிபன் பலி அதிகரித்த விபத்துக்கள்
புதுக்குடியிருப்பு விபத்தில் வாலிபன் பலியாகியுள்ளார் , முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வில்லிபுனத்தை சேர்ந்தவரே பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
அதிகரித்த விபத்துக்கள் தொடர்பாக விசேட வீதி போக்குவரத்து கண்காணிப்பு நடத்த பட்டு வருகின்ற பொழுதும், சாரதிகள் அலட்சிய போக்கால் இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் .
இலங்கையில் நாள்தோறும் இடம்பெறும் விபத்து சம்பவங்களில் சிக்கி நான்கிற்கு மேற்பட்ட மக்கள் பலியாகி வருகின்றனர் .
இவ்வாறான புதிய விபத்து புள்ளி விபரம் மக்களை அலறவிட்டுள்ளது .
இந்தியா மீனவர்கள் 12 பேர் விடுதலை
இந்தியா மீனவர்கள் 12 பேர் விடுதலை
இந்தியா மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் .யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள் நீதிமன்றினால் இவ்வாறு விடுவிக்க பட்டுள்ளனர் .
இலங்கை கடல்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்கின்ற குற்ற சாட்டில் கைது செய்யப்பட்ட இந்தியா மீனவர்களே இவ்விதம் விடுவிக்க பட்டுள்ளனர் .
விடுதலை புலிகள் அழிக்க பட்ட பின்னர் இலங்கை கடற்படையால் இந்தியா மீனவர்கள் தொடராக இவ்விதம் கைது செய்ய பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .
தெற்கு சூடான் போருக்குத் திரும்பும் அபாயம்
லண்டனில் தமிழர் ஈழம் ரஞ்சன் வாகனம் திருட முயற்சி
கெரவலப்பிட்டி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து
இந்தியாவிலிருந்து வரும் அதிகரித்த முதலீடுகள்
130 தாலிபான் போராளிகள் கொல்லப்பட்டனர்
இலங்கையில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி
பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு பொலிஸ் கவலை
பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு பொலிஸ் கவலை
பாலியல் குற்றங்கள் இலங்கையில் அதிகரித்து வருவதாக பொலிஸ் கவலை வெளியிட்டுள்ளது ,இந்த் ஆண்டில் பாலியல் குற்றங்கள் விபரத்தை வெளியிட்ட பொலிஸ் புள்ளி விபரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன .
ஆண்டு தோறும் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சம்சுபா உளவியலுடன் சம்பந்த பட்ட ஒன்றாக காண படுகிறது .
இ கடந்த வாரியத்தில் 18 வயதுக்கு உள்ளிட்ட பெண்கள் 1502 பேர் பிழையால் துன்புறுத்தல் குற்றங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் ரேணுகா தெரிவித்துள்ளார் .
பெண்கள் மற்றும் மக்கள் மத்தியில் விழுப்புணர்வுஅட்டிர காரணத்தினாலும் ,போதை பாலகத்தினால் இவ்விதமான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது .
கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொள்ளை
கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொள்ளை
பமுனுகம தெலத்துர எலபெம்ம பகுதியில் கூரிய ஆயுதங்களால் மூவர் தாக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இணையத்தில் வெளியான விளம்பரத்துக்கு அமைய மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக லொறியில் வந்த மூவரே இவ்வாறு தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீதியில் மறைந்திருந்த நால்வர் இந்த தாக்குதலை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 132,000 ரூபாய் பணம், 5 அலைலைபேசிகள், தங்க நகை மற்றும் வளையல் என்பவற்றை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்ட சந்தேக நபர்கள் பமுனுகம பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சுதந்திர காற்றை சுவாசிக்க முடியாது இருக்கிறோம் ஸ்ரீதரன்
சுதந்திர காற்றை சுவாசிக்க முடியாது இருக்கிறோம் ஸ்ரீதரன்
தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களை சிங்கள மக்கள் அனுபவிக்க தொடங்கி விட்டனர். இதனால் அரசு அச்சத்தில் மூழ்கியுள்ளது. இதுவும் தமிழர்களுக்கான பாதை திறக்க வழியாகும். ஆகவே நாம் எல்லோரும் இணைந்து ஒருமிக்க வேண்டிய காலகட்டம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் கடந்த 21 ந் திகதி தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து மன்னார் மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களினால் வியாழக்கிழமை(24) மாலை வரவேற்பு நிகழ்வு மன்னார் அலுவலகத்தில் நடத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
சுதந்திர காற்றை சுவாசிக்க முடியாது இருக்கிறோம் ஸ்ரீதரன்
மனிதர்களுடைய வாழ்விலே பிறப்பிலிருந்து இறப்பு வரை எவ்வளவோ நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறே தமிழர்களுடைய வாழ்வில் பல அடையாளங்களோடும் எதிர் பார்ப்புகளோடும் கடந்து சென்று கொண்டிருக்கின்றன.இந்த நேரத்தில் மன்னார் மக்களுடன் நான் உரையாடுவது எனது வரலாற்றில் ஒரு பதிவாகின்றது.என்னுடைய தெரிவுக்கு மன்னார் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு நன்றியுடன் அத்துடன் உங்களுடன் நம்பிக்கையுடன் பயணிக்க இருக்கிறேன்.
இந்த மண்ணிலே நாம் பல உயிர்களை தியாகம் செய்திருந்தும் நாம் இன்னொரு சுதந்திரமான காற்றை சுவாசிக்க முடியாத கட்டத்தில் இருக்கிறோம். நாம் இன்னும் அந்நியப்படுத்த பட்டிருக்கின்றோம்.
நாம் 75 ஆண்டுகளுக்கு மேலாக போராடி போராடி வரும் ஓர் இனமாக இருக்கின்றோம். 1949 ஆம் ஆண்டு தந்தை செல்வா கூறியது தமிழர் ஒரு தேசிய இனம். இழந்துபோன இறைமையை மீட்டு எடுத்து எமது தேசிய அடையாளத்தோடு வாழ வேண்டும் என செயல்பட ஆரம்பித்தார்.
தந்தை செல்வா மன்னார் மண்ணுக்கும் வந்து சென்றுள்ளார். அவருடைய காலத்தில் பலர் இந்த மண்ணில் எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் இருந்துள்ளனர்.அவருடைய தேசிய சின்னத்துடன் இந்த மண்ணில் தேசிய மாநாடு இங்கு நடந்துள்ளது.
இவ்வாறு வரலாறு இப்பொழுதும் எமக்கு புதிய பணியை தந்துள்ளது. இது ஒரு தனி மனிதன் ஆற்றும் பணியல்ல. மாறாக நாம் யாவரும் ஒன்றிணைந்து ஒரு சக்தியாக தமிழர் என்று திரள்கின்ற பொழுது இந்த சமூகம் உலகம் எம்மை அங்கிகரிக்கின்ற நாள் நெருங்கிக் கொண்டு இருக்கின்றது என்ற நம்பிக்கை எம்மிடம் இருக்க வேண்டும்.
எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்குள் உலகம் முழுவதும் பாரிய மாற்றங்கள் இடம்பெற இருக்கின்றன. இன்று உலகத்தில் நிகழ்கின்ற சண்டைகள் அரசியல் நிகழ்வில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இலங்கை நாடும் இங்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று கண்ணை மூடிக் கொண்டு இருக்கிறார்கள். இலங்கை உலகத்தை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றது என உலகம் தெளிவாக புரிந்து கொண்டு இருக்கின்றது.
தமிழர்களின் தேசிய அபிலாசைகளை உலகம் புதிய பரிமாணத்துடன் சிந்திக்க முற்பட்டுள்ளது. நாம் இழந்த ஆத்மாக்கள் இப்பொழுது எமக்கு உத்வேகத்தை தருகிறது.நாம் எந்த நோக்கத்துக்காக எமது உறவுகளின் உயிர்களை இழந்தோ மோ அந்த நோக்கங்கள் இன்னும் அழிந்து போகவில்லை.சிங்கள மக்களுக்கு முன்பே நமது தமிழினம் இங்கு வாழ்ந்துள்ளது. நாம் இங்கு பல அடையாளங்களுடன் வாழ்ந்திருக்கிறோம்.
ஆகவேதான் இழந்த இறைமையை தான் நாம் மீண்டும் பெற போராடுகின்றோம். எமது மொழி , இடம் , கலை பண்பாட்டு இவைகள் எமது தமிழ் தேசிய அடையாளத்தை பற்றியுள்ளது.நாம் பல சவால்களை சந்தித்து இன்னும் மனிதர்களாக இருக்கிறோம் என்றால் நாம் அறத்தின் மீதும் தர்மத்தின் மீது பற்றுக் கொண்டவர்களாக இருக்கின்றோம்.இலங்கை அரசுக்கு ஒரு செய்தியை கூறுகின்றோம்.
தமிழர்களுக்கு வெளிச்சமான பாதை தொடங்கியுள்ளது. ஆகவே நாம் ஒருமித்த கரங்களாக இணைந்து கொள்வோம்.
நமக்கு இந்த நாடு நிம்மதியான அமைதியை தருமா? என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டு நிற்கின்றோம். இலங்கை அரசு தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்காவிடில் இந்த நாடு பெரும் பாதாளத்துக்குள் விழும் என்பது ஐயம் இல்லை.
நாம் பெற்ற துன்பங்களை சிங்கள மக்கள் அனுபவிக்க தொடங்கி விட்டனர். இதனால் அரசு பயத்தில் மூழ்கியுள்ளது. இதுவும் தமிழர்களுக்கான பாதை திறக்க வழியாகும். ஆகவே நாம் எல்லோரும் இணைந்து ஒருமிக்க வேண்டிய காலகட்டம் என தெரிவித்தார்.
அதிக வரையறைகளால் பொருளாதாரத்துக்கு பாதிப்பு
அதிக வரையறைகளால் பொருளாதாரத்துக்கு பாதிப்பு
அதிக வரையறைகளை விதிக்கும், தெளிவற்ற சட்டங்கள் மூலம் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி பாதிக்கப்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
அவை முதலீடுகளையும் டிஜிட்டல் பொருளாதார அபிவிருத்தியையும் பாதிக்கும் எனவும் அவர் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பில் சமூக வலைத்தளத்தில் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இந்த சட்டத்திருத்தம் மூலம் கருத்து சுதந்திரம், புத்தாக்கம் மற்றும் தனியுரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் சிவில் சமூகமும் தொழில்நுட்ப
நிறுவனங்களும் அடங்கலாக பிரதான தரப்பினர் முன்வைத்த முக்கிய விடயங்கள் உள்வாங்கப்படவில்லையெனவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்
முத்தமிழ் வித்தியாலயத்தின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு
முத்தமிழ் வித்தியாலயத்தின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு
பல வருடங்களுக்கு பின்னர் வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் பின் தங்கிய பாடசாலையான கோயில்புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்தின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் குடிநீர் திட்டம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா, கோவில்குளம் மஹா விஸ்ணு ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் அவர்களின் நிதிப் பங்களில் வவுனியா ஊடகவியலாளர்களினால் அமைக்கப்பட்ட குடிநீர் திட்டம் தைப்பூச தினமான நேற்று (25) பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் குடிநீர் இன்றி பல்வேறு சிரமங்களை எதிர் கொள்வதாக கடந்து 5 வருடங்களுக்கு மேலாக பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை சமூகம் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
இது தொடர்பாக குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரின் பெற்றோர் முன் வைத்த கோரிக்கைக்கு அமைவாகவும், அதிபர் அவர்களின் வேண்டுதலுக்கு அமைவாகவும் வவுனியா ஊடகவியலாளர்கள் புலம்பெயர்
தேசத்தில் தற்போது வசிக்கும் வவுனியா, கோவில்குளம் மஹா விஸ்ணு ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் அவர்களிடம் முன்வைத்த
முத்தமிழ் வித்தியாலயத்தின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு
கோரிக்கைக்கு அமைவாக அவரால் வழங்கப்பட்ட நிதித் திட்டத்தின் மூலம் மோட்டருடன் கூடிய குழாய் கிணறு நிர்மாணிக்கப்பட்டு, குடிநீர் தாங்கியும் நிறுவி பாடசாலையிடம் கையளிக்கப்பட்டது.
இதன்போது, அதிதிகள் குடிநீர் திட்டத்தை திறந்து வைத்ததுடன், பெயர் பலகையையும் திரை நீக்கம் செய்து வைத்தனர். மாணவர்களுக்கு குடி நீரும் அதிதிகளால் வழங்கப்பட்டதுடன், குறித்த நிகழ்வின் நினைவாக பயன்தரும் மரநடுகையும் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் மா.அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சுஜீபன் பிரியதர்சினி, செட்டிகுளம் பிரதேச செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் சிவ.கஜன்,
ஊடகவியலாளர்களான ந.கபில்நாத், கி.வசந்தரூபன், திருமதி சி.திவியா, வ.பிரதீபன், இ.சங்கர், சமுதாய சிவில் பாதுகாப்பு குழுத் தலைவர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
தெற்கு சூடான் போருக்குத் திரும்பும் அபாயம்
லண்டனில் தமிழர் ஈழம் ரஞ்சன் வாகனம் திருட முயற்சி
கெரவலப்பிட்டி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து
இந்தியாவிலிருந்து வரும் அதிகரித்த முதலீடுகள்
130 தாலிபான் போராளிகள் கொல்லப்பட்டனர்
இலங்கையில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி
இனிப்புப் பண்டத்தை முன்னணி ஏற்றுமதித் துறையாக அரசாங்கம் ஆதரவு
இனிப்புப் பண்டத்தை முன்னணி ஏற்றுமதித் துறையாக அரசாங்கம் ஆதரவு
இனிப்புப் பண்டத் தொழில்துறையை முன்னணி ஏற்றுமதித் துறையாக மாற்றுவதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
கொக்கோ உள்ளிட்ட பயிர்களைப் பயிரிடுவதற்கு அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டங்களை குத்தகை அடிப்படையில் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் 24 ஆம் திகதி பிற்பகல் நடைபெற்ற இலங்கை இனிப்புப் பண்ட உற்பத்தியாளர் சங்கத்தின் 30ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
சிலாபம் மற்றும் குருநாகல் பிரதேசங்களில் உள்ள தோட்டங்களுக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளையும், ஜனதா தோட்ட அபிவிருத்திச் சபை , அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எல்கடுவ உள்ளிட்ட ஏனைய காணிகளையும் இதற்காகப் பயன்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இனிப்புப் பண்டத்தை முன்னணி ஏற்றுமதித் துறையாக அரசாங்கம் ஆதரவு
இதுவரை பயன்படுத்தப்படாத மகாவலி ஏ மற்றும் பி வலயங்களில் பயிர்ச்செய்கையையை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டில் உணவுப் பாதுகாப்பை ஏற்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மேலும், நாட்டில் போட்டிமிக்க ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்காக தேசிய உற்பத்தித் திறன் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஏனைய நாடுகளுடன் தற்போதுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளையும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கைகளையும் வலுப்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், தேயிலை ஆராய்ச்சி நிறுவனம், தென்னை ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றையும் நவீனமயப்படுத்தப்பட்டு வருவதாகவும் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஆராய்ச்சித் துறைக்காக சுமார் 08 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இனிப்புப் பண்டத் தொழில்துறையினூடாக தேசிய பொருளாதாரத்திற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி, நாட்டில் உள்ள எட்டு முன்னணி இனிப்புப் பண்ட உற்பத்தியாளர்களுக்கு ஜனாதிபதியினால் விருதுகள் வழங்கி வழங்கப்பட்டன.
மெலிபன் ஸ்தாபகர் ஏ.ஜி. ஹின்னி அப்புஹாமி, கெண்டோஸ் ஸ்தாபகர் உபாலி விஜேவர்தன, Elephant House ஸ்தாபகர் ஆர்தர் வொன் போஸ்னர், மஞ்சி ஸ்தாபகர் மேனக விக்ரமசிங்க, மோதா ஸ்தாபகர் ஜூலியஸ் மோதா,
உஸ்வத்த ஸ்தாபகர் பி.ஜே.சி. பெரேரா, லக்கி லேண்ட் ஸ்தாபகர் சிங்கசாமி முத்தையா, செரிஸ் பிஸ்கட் ஸ்தாபகர் விதானகே ஜோன் அப்புஹாமி ஆகியோருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
இனிப்புப் பண்டத்தை முன்னணி ஏற்றுமதித் துறையாக அரசாங்கம் ஆதரவு
இலங்கை இனிப்புப் பண்ட உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கலாநிதி சமித பெரேரா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நினைவுப் பரிசை வழங்கி வைத்தார்.
கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரன, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க மற்றும் இலங்கை இனிப்புப் பண்ட உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு
அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு போதுமானதாக இல்லாததால், இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் வாரத்தில் தீர்மானிக்கவுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள் தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாக அதன் இணைப்பாளர் சந்தன சூரியராச்சி தெரிவித்தார்.
“அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் அரசாங்கம் வழங்கியுள்ள 5,000 ரூபாய் கொடுப்பனவு. ஏப்ரல் மாதம் வழங்க வேண்டிய மீதி ரூ.5,000 கொடுப்பனவு எமக்கு போதாது. உழைக்கும் மக்கள் குறைந்தபட்சம் 20,000 ரூபாய்
கொடுப்பனவு உயர்வுக்காகவே போராடினார்கள். எதிர்வரும் 29ஆம் திகதி கொழும்பில் அரச மற்றும் மாகாண தொழிற்சங்கங்கள் ஒன்றுகூடுகின்றன.
தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றவாறு நியாயமான சம்பள அதிகரிப்பு அல்லது கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
இதேவேளை, தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு ஹோட்டல் தொழிலை பராமரிப்பது சிரமமாக உள்ளதாக ஹோட்டல் பணியாளர்கள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தமது தொழில்துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை கவனம் செலுத்தவில்லை என அதன் தேசிய அமைப்பாளர் ஜயதிலக்க ரணசிங்க https://www.youtube.com/watch?v=BzjMyMPsY3Qதெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட போவது தமிழ் மக்கள் தான் சாணக்கியன்
பாதிக்கப்பட்ட போவது தமிழ் மக்கள் தான் சாணக்கியன்
நேற்று (24) இடம்பெற்ற நிகழ்நிலைக் காப்பு வரைவுச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தின் போது Online Safety Bill எனும் பெயரில் கொண்டு வரப்பட்ட சட்ட மூலம் தமிழ் மக்களுக்கு மிகவும் ஆபத்தானது என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் 30, 40 ஆண்டுகளாக தமிழ் மக்களை ஒடுக்குவதற்கும் அடக்குவதற்குமே பயன்படுத்தப்பட்டது. Online Safety Bill சட்ட மூலம் நடைமுறைப்படுத்தப்படுமாயின் நடைமுறையில் மக்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகளை இங்கு நான் கூற விரும்புகின்றேன்.
இந்த Online Safety Bill சட்ட மூலம் ஊடாக வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் ஒரு பிரச்சனைக்கு எதிராக ஒரு பாரிய கடையடைப்பு போராட்டம் அல்லது ஹர்த்தால் அறிவித்தால் அந்த அறிவித்தலை வழங்குபவர்களை இந்த Online Safety Bill ஊடாக கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
அதே போல 15 வருடங்களாக காணாமல் போன எமது உறவுகளுக்காக தாய்மார்களும், உறவினர்களும் வீதி வீதியாக போராடி 2,000 இற்கும் மேற்பட்ட நாட்கள் கடந்தும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களை Online Safety Bill சட்ட மூலத்தினூடாக கைது செய்யக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன.
தற்போது நாங்கள் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை நிலம் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றோம். மயிலத்தமடு மாதவனையில் சட்டவிரோதமாக குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றது என்பது யாவரும் அறிந்த விடயமே ஆகும்.
பாதிக்கப்பட்ட போவது தமிழ் மக்கள் தான் சாணக்கியன்
அரசாங்கம் நமது வடக்கு, கிழக்கில் காணப்படும் மக்களின் விகிதாசாரத்தை மாற்றுவதற்காகவும் பெரும்பான்மை சமூகத்தினரை மேலும் அதிகரிக்க சட்ட விரோத குடியேற்ற வேலை திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது என அறிவித்தால் அதற்கு கூட Online Safety Bill சட்ட மூலம் சட்ட விரோதமான செயற்பாடு என மேற்கோள் காட்டும்.
ஜனாதிபதி அவருடைய பினாமிகளாக ஐந்து பேரை நியமிப்பதை அரசியல் Constitution Council அனுமதித்தாலும் கூட இந்த ஐந்து பேர் மாத்திரம் இனி வரும் காலங்களில் எவை சரியான கருத்துக்கள், எவை பிழையான கருத்துக்கள் என கூறும் அளவிற்கு மாறிவிடலாம்.
இன்று ஒரு அமைச்சர் இருக்கலாம் நாளை இன்னும் ஒருவர் மாறலாம். மாற்றமடையும் அமைச்சர்களுடைய செயல்பாடுகள் எங்களுக்கு தெரியாது. அமைச்சர் விரும்பினால் திறமை உள்ளவர் ஒருவரை நியமித்து நாளைய தினம் அவருடைய தொலைபேசி மற்றும் மடிக்கணினி என்பவற்றை எடுத்து என்ன இருக்கிறது என்பதை ஒரு நீதிமன்றத்தின் உத்தரவின்றி மேற்கொள்ளலாம் என தெரிவித்தார்.
மக்களின் அபிலாஷைகளை கருத்தில் கொள்ள வேண்டும் சஜித் பிரேமதாச
மக்களின் அபிலாஷைகளை கருத்தில் கொள்ள வேண்டும் சஜித் பிரேமதாச
சட்டவாக்கத்துறையில் சட்டவாக்கம் மிக மேலான அறிவார்ந்த முறையில் நடக்க வேண்டும் என்றாலும், நிகழ்நிலை காப்பு தொடர்பான சட்டமூலத்தில் இவ்வாறு எதும் நடக்கவில்லை.
தனிப்பட்ட ரீதியிலான தனிநபர்களின் பெயர்களுக்கு கலங்கம் விளைவித்தல், தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளல் என்பவற்றிற்காக அமைச்சர்களால் இந்த சட்டமூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஊடாக 220 இலட்சம் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
220 இலட்சம் மக்களின் பொதுவான அபிலாஷைகளின் அடிப்படையில் சட்டங்களை உருவாக்குவதற்கு பதிலாக, பாராளுமன்றத்தில் உள்ள 225 பேரின் தனிப்பட்ட அபிலாஷைகளை அடையும் நோக்கில் சட்டம் இயற்றப்பட்டால்,
இந்நாட்டில் பாராளுமன்றத்தின் தரம் தொடர்பான பிரச்சினை ஏற்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் நேற்று (24) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மக்களின் அபிலாஷைகளை கருத்தில் கொள்ள வேண்டும் சஜித் பிரேமதாச
பாராளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வை குழுவும் இந்தச் சட்டமூலத்தில் தனது கடமையை சரியாக நிறைவேற்றவில்லை.
நவீன ஊடக பாரம்பரியத்தை உருவாக்குவதை விடுத்து இளைஞர்களின் உரிமைகளை பறிக்கும் பாரம்பரியத்தை கையாண்டு,இவ்வாறான சட்டங்களை நிறைவேற்றி, ஊடக கலாசாரத்தை குழி தோன்டி புதைத்து, நாட்டை கற்காலத்திற்கு கொண்டு செல்லும் தீர்மானத்தை நிறைவேற்றிய குழுவாகவே இந்த துறைசார் மேற்பார்வை குழுவை கூறலாம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலும் பொதுத் தேர்தலும் நடைபெறவுள்ள இந்த வருடத்தில் நாட்டு மக்களின் பேச்சு சுதந்திரம்,கருத்து சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமையை அழிக்கும் நோக்கிலயே இந்தச் சட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்தின் மூலம் நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக் காட்டினார்.
நிகழ்நிலை காப்பு சட்டத்தால் சமூக ஊடகங்கள் மோசமாகப் பாதிக்கப்படுகின்றன.
ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் 03 தூண்களான சட்டமன்றம், நிறைவேற்றுத்துறை,நீதித்துறை ஆகிய 3 தூண்களோடு புதிய தூணாக நவீன உலகில் கருதப்படும் ஊடகங்கள் இந்த நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தால் கடுமையாகப் பாதிக்கப்படும். இதனால் ஊடக சுதந்திரம் மற்றும் சமூக ஊடக சுதந்திரம் என்பன கட்டுப்படுத்தப்படும்.
ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் தூண்களான சட்டமன்றம்,நிறைவேற்றுத்துறை,நீதித்துறை போன்றவற்றில் உள்ள தவறுகளையும் குறைகளையும் சுட்டிக்காட்டும் திறன் ஊடகங்களுக்கும் சமூக ஊடகங்களுக்கும் இருந்தாலும், அதுவும் இந்தச் சட்டத்தின் மூலம்
மட்டுப்படுத்தப்படும்.எனவே ஊடக சுதந்திரம் மற்றும் சமூக ஊடக சுதந்திரம் என்பன பாதுகாக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக் காட்டினார்.
வீதி விபத்துக்களில் பல உயிர்கள் பலி
வீதி விபத்துக்களில் பல உயிர்கள் பலி
இலங்கையின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் பல உயிர்கள் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரன்ன – ஹூங்கம நோக்கி பயணித்த வேன் ஒன்று எதிர்திசையில் இருந்து வந்த லொறியுடன் மோதியதில் திஸ்ஸ – மாத்தறை வீதி பகுதியில் நேற்று (24) காலை விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் வேனின் சாரதி உயிரிழந்துள்ளதுடன், 12 வயதுக்கும் 71 வயதுக்கும் இடைப்பட்ட 7 பயணிகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் 75 வயதுடைய மேகத்தன்ன பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
வீதி விபத்துக்களில் பல உயிர்கள் பலி
விபத்தில் லொறி சாரதியும் காயமடைந்து ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, கொலன்னாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாணமுர, களுபொத்தெனிய பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் இடதுபுறம் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் பின்னால் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது கணவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
64 வயதுடைய யத்தெஹிகந்த பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிலாபம் – கொக்கவில வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியை முந்திச் செல்ல முற்பட்டதில் எதிர்திசையில் வந்த லொறியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 26 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, பல்லேகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A26 பிரதான வீதியில் அபித விளையாட்டரங்கிற்கு அருகில், திகனவில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற ஜீப் ஒன்று பாதசாரி பெண் ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் சிக்கிய 69 வயதுடைய பெண் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் இறுதி செல்ஃபி
உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் இறுதி செல்ஃபி
இன்று (25) அதிகாலை 2 மணி அளவில் கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் மேலும் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்.
சனத் நிஷாந்த கட்டுநாயக்காவில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவர் பயணித்த சொகுசு கார் அதே திசையில் சென்ற கொள்கலன் பாரவூர்தியுடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் இறுதி செல்ஃபி
நேற்று (24) இரவு சனத் நிஷாந்த, பண்டாரவத்தை, சிலாபம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற திருமண வைபவத்தில் கலந்து கொண்டு கொழும்பு திரும்பும் போதே வாகன விபத்தில் உயிரிழந்தார்.
திருமண வைபவத்தின் போது சனத் நிஷாந்தவுடன் புதுமணத் தம்பதிகள் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது முகநூலில் வைரலாகியுள்ளதுடன், புகைப்படம் எடுத்தவர் தனது தனிப்பட்ட முகநூல் கணக்கில் குறித்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
தெற்கு சூடான் போருக்குத் திரும்பும் அபாயம்
லண்டனில் தமிழர் ஈழம் ரஞ்சன் வாகனம் திருட முயற்சி
கெரவலப்பிட்டி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து
இந்தியாவிலிருந்து வரும் அதிகரித்த முதலீடுகள்
130 தாலிபான் போராளிகள் கொல்லப்பட்டனர்
இலங்கையில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி
ரயிலின் சிற்றுண்டிச்சாலைக்கு சீல்
ரயிலின் சிற்றுண்டிச்சாலைக்கு சீல்
மனித நுகர்வுக்கு தகுதியற்ற உணவுகளை விற்பனை செய்ததற்காக, மீனகயா ரயிலின் சிற்றுண்டிச்சாலையை தற்காலிகமாக சீல் வைக்க நீதிமன்ற உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மட்டக்களப்பு பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவொன்று மீனகயா ரயிலின் சிற்றுண்டிச்சாலைக்கு பெப்ரவரி 08 ஆம் திகதி வரை சீல் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 22ஆம் திகதி பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த ரயிலின் சிற்றுண்டிச்சாலையை ஆய்வு செய்திருந்தனர்.
ரயிலின் சிற்றுண்டிச்சாலைக்கு சீல்
இதன்போது, மனித நுகர்வுக்கு தகுதியற்ற உணவுகளை விற்பனை செய்தமை தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்ததையடுத்து, குறித்த உணவகத்தை தற்காலிகமாக மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, குறித்த உணவகம் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் 8ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டும், மனித நுகர்வுக்கு தகுதியற்ற உணவுகளை விற்பனை செய்ததாக மீனகயா ரயிலின் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் கோர விபத்து ஒருவர் மரணம் பலர் காயம்
கிளிநொச்சியில் கோர விபத்து ஒருவர் மரணம் பலர் காயம்
கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகி 8 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்து சிக்கிய பேரூந்து சேதம் ,
யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்துடன், கொழும்பியிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பேருந்து, விதியில் பயணித்த மாடுகளுடன் மோதிய பின் வேனுடன் மோதியுள்ளது.
விபத்தில் வவுனியாவை சேர்ந்த 50 வயதுடைய திருமணி திருச்செல்வம் எனும் பெண் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
கிளிநொச்சியில் கோர விபத்து ஒருவர் மரணம் பலர் காயம்
காயமடைந்தவர்களில் ஐவர் கிளிநொச்சி வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, குறித்த விபத்தில் 8 மாடுகளும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இலங்கை பாராளுமன்றுக்குள் பதற்றம் செங்கோலுக்கு கடும் பாதுகாப்பு
இலங்கை பாராளுமன்றுக்குள் பதற்றம் செங்கோலுக்கு கடும் பாதுகாப்பு
இலங்கை பாராளுமன்றுக்குள் பதற்றம் செங்கோலுக்கு கடும் பாதுகாப்பு பாராளுமன்றத்தில் தற்போது பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. சபைக்கு நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு திருத்தங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன.
எதிர்கட்சியினால் இதுவரையிலும் கொண்டுவரப்பட்ட இரண்டு திருத்தங்களையும் ஏற்க ஆளும் கட்சி மறுத்துவிட்டது.
இந்நிலையில், ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், தயாசிறி ஜயசேகர, சந்திம வீரக்கொடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை கவனத்தில் கொள்ளாது திருத்தங்கள் செய்யப்படுகின்றன.
இது சட்டவிரோதமானது என்றும் எதிர்க்கட்சியின் குற்றஞ்சாட்டினர். அத்துடன் சபைக்குள் நடுவை இறங்கிவிட்டனர்.
ஆளும் கட்சியினரும் சபையின் ஓரத்திலுள்ள ஆசனங்களுக்கு முன்பாக குவிந்து நிற்கின்றனர்.
இதனால் இருதரப்பினரும் காரசாரமாக கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், படைகல சேவிதர்கள் மற்றும் உதவியாளர்கள் செங்கோலுக்கு அருகில் நின்று, செங்கோலுக்கு பாதுகாப்பு வழங்கிக்கொண்டிருக்கின்றனர்.
Grid
மரக்கறிகளின் விலை தொடர்ந்து விலை ஏற்றம்
மரக்கறிகளின் விலை தொடர்ந்து விலை ஏற்றம்
நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற மரக்கறிகளுக்கான விலைகள் தொடர்ச்சியாக விலை ஏற்றம் கண்டு வருகிறது.
அதேநேரத்தில் கரட்டுக்கான விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு செல்லப்பட்டுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
அந்த வகையில் நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய சந்தையில் நுவரெலியா கரட்டுக்கு தொடர்ச்சியாக தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இன்று (24.01.2023) காலை நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய காரியாலயம் மரக்கறிகளுக்கான விலை பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில் கரட கிலோ கிராம் ஒன்றின் மொத்த விற்பணை விலை 1250/=ரூபா என அறிவித்துள்ளது.
அதேபோல கோவா 470 ரூபாய்,
லீக்ஸ் 480 ரூபாய்,
ராபு 170 ரூபாய்,
இலை பீட்ரூட் 420 ரூபாய்,
இலை இல்லா பீட்ரூட் 520 ரூபாய்
கறி உருளை கிழங்கு 320 ரூபாய்
நோக்கோல் 340 ரூபாய் எனவும் மோத்த விற்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
7 மீனவர்களுக்கு மரணத் தண்டனை
7 மீனவர்களுக்கு மரணத் தண்டனை
கொழும்பு மேல் நீதிமன்றம் 7 மீனவர்களுக்கு மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு மீனவ படகொன்றை கடத்தி மூவரை கொலை செய்த சம்பவம் தொடர்பிலான வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது






































