உலக வங்கி பிரதிநிதிகள் குழு பிரதி அமைச்சருடன் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

உலக வங்கி பிரதிநிதிகள் குழு பிரதி அமைச்சருடன் சந்திப்பு

உலக வங்கி பிரதிநிதிகள் குழு பிரதி அமைச்சருடன் சந்திப்பு

உலக வங்கி பிரதிநிதிகள் குழு பிரதி அமைச்சருடன் சந்திப்பு ,உலக வங்கியின் பிராந்திய நாட்டு இயக்குநர் (மாலைத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கை) டேவிட் சிஸ்லன் தலைமையிலான உலக வங்கி தூதுக்குழு குழு, பாதுகாப்பு பிரதி

அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) திங்கட்கிழமை (20) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தது.

இலங்கையில் காலநிலை மீள்தன்மை பல கட்ட திட்ட அணுகுமுறை (CResMPA) திட்டம் தொடர்பில் உள்ள சவால்களை எதிர்கொள்வது மற்றும்

பிரச்சினைகளை தீர்ப்பதற்கான உத்திகளைப் பற்றி, குறிப்பாக நீண்டகால

திட்ட மேலாண்மை சவால்களை நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவம் தொடர்பிலும் இச்சந்திப்பின் போது கலந்துரையாடுடப்பட்டது.

இச்சந்திப்பின் போது CResMPA திட்டத்தை செயல்படுத்தும் போது எதிர்கொள்லப்படும் சவால்கள் மற்றும் தடைகள் பற்றிய பொதுவான விளக்கம் ஒன்றை உலக வாங்கி பிரதிநிதிகள் குழு வழங்கியது.

மேலும், இந்த சவால்களை நிவர்த்தி செய்வதற்கும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் கருத்தில் கொள்ளக்கூடிய விடயங்கள் தொடர்பிலும் கருத்துக்களை முன்மொழிந்தனர்.

இந்த சந்திப்பு CResMPA திட்டத்தை செயல்படுத்துவதை விரைவுபடுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நிலையை குறிக்கிறது.

இதன் மூலம் காலநிலை மாற்ற சவால்களை நிவர்த்தி செய்வதற்கு பங்களிப்பு செய்ய உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கை திரும்பினார்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியை இன்று சந்திக்கும் IMF பிரதிநிதிகள்

ஜனாதிபதியை இன்று சந்திக்கும் IMF பிரதிநிதிகள்

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது தவணை தொடர்பான மீளாய்வு நடவடிக்கைகள் இன்று (07) ஆரம்பமாகவுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து மீளாய்வு நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.

இதன்படி, இந்த மீளாய்வு நடவடிக்கைகள் சுமார் இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்க பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை
Posted in இலங்கை செய்திகள்

அமெரிக்க பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை

அமெரிக்க பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை

இணையவழி பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட சட்டங்களுடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அமெரிக்க செனட் சபையின் வெளியுறவு தொடர்புகள் குழுவின் சிரேஷ்ட தொழில்சார் பணிக்குழாமின் பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஆழமான தெளிவை பெற்றுக்கொள்வதற்காக இந்த பிரதிநிதிகள் குழு நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது சமூக வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி பிரதிநிதிகள், பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பில் ஆராயவும், இணையவழி பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட அண்மைய சட்டங்களுடன்

தொடர்புடைய சிக்கல்கள் குறித்து கலந்துரையாடவும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்திக்கவுள்ளனர் என அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது பதிவில் தெரிவித்துள்ளார்