Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
அர்ச்சுனாட வெற்றி உணவு வழங்கி கொண்டாடிய பெண்
அர்ச்சுனாட வெற்றி உணவு வழங்கி கொண்டாடிய பெண்
அர்ச்சுனாட வெற்றி உணவு வழங்கி கொண்டாடிய பெண் ,அர்ச்சுனாட வெற்றிக்காக வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் சார்பாக முதியவர்களுக்கு உணவு வழங்கி ,அந்த வெற்றியை கொண்டாடி இருக்கிறார் டயானி என்கிற உறவு .
யாழ்ப்பாணம் கிளிநொச்சி பகுதியில் போட்டியிட்ட மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் ,ஒன்பதுதாவது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார் .
இதில் அவர் வெற்றி பெற்றதை அடுத்தே தற்பொழுது ,முதோயார் இல்லத்தில் உள்ள ,பிள்ளைகளினால் கைவிட பட்ட இவர்க்ளுக்கு ,உணவை வழங்கி அவர்களை மகிழ்வித்து தனது அன்பை பகிர்ந்துள்ளார் டயானி என்கின்ற உறவு .
அவருக்கு எமது வாழ்த்துக்களையும் பாரட்டுக்கையு எதிரி இணையமும் ,வன்னி மைந்தன் டிக் டாக் தளமும் தெரிவித்து கொள்கிறது .





சுமந்திரன் படு தோல்வி விரட்டிய மக்கள்
சுமந்திரன் படு தோல்வி விரட்டிய மக்கள்
சுமந்திரன் படு தோல்வி விரட்டிய மக்கள் ,நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் சுமந்திரன் படு தோல்வியை சந்தித்துள்ளார் .
மக்கள் அவரை ஓட ஓட விரட்டியடித்துள்ளனர் .
தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைத்து சிதைத்த சுமந்திரன் ,அதே தமிழ் மக்களினால் இம்முறை விரட்டியடிக்க பட்டுள்ளார் .
மக்கள் விரோத போக்கை கடைபிடித்து ,மக்கள் வெறுப்பை சந்தித்த நிலையில் படு தோல்வியை சந்தித்துள்ளார் .
எனினும் பின் கதவு வழியாக பாராளுமன்ற்ம் இவர் நுழைய கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
அர்ச்சுனா வெற்றி பெற்றார்
அர்ச்சுனா வெற்றி பெற்றார்
அர்ச்சுனா வெற்றி பெற்றார் ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஒரு ஆசனத்தை பெற்றுள்ளார் .
இருபத்தி ஏழாயிரம் வாக்குகளையோ பெற்று வெற்றி பெற்றுள்ளார் .ஏனையவர்கள் தோல்வியை தழுவி உள்ளனர் .
அர்ச்சுனா மூன்று ஆசனத்தை பெற்று மகத்தான வெற்றியை பெறுவார் என எதிர் பார்க்க பட்ட நிலையில் இந்த படு தோல்வி இடம்பெற்றுள்ளது .
வடகிழக்கில் தமிழரசு கட்சி 7 ஆசனம்
வடகிழக்கில் தமிழரசு கட்சி 7 ஆசனம்
வடகிழக்கில் தமிழரசு கட்சி 7 ஆசனம் ,வடகிழக்கு ந்தமிழர் பகுதியில் இலங்கை தமிழரசு கட்சி ஏழு ஆசனத்தை பெற்று சுருண்டுள்ளது .
யாழ்மாவட்டம் தொகுதியில் சிறிதரன் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார் ,ஏனையவர்கள் பலத்த தோல்வியை தழுவி வீடு சென்றுள்ளனர் .
தனது கோட்டையை மட்டும் சிறிதரன் தக்க வைத்து செயல் பட்டுள்ளது ,இந்த வெற்றியின் மூலம் மீளவும் உறுதியாகியுள்ளது .
5 கட்சிகளுக்கு வன்னியில் ஆசனம்
5 கட்சிகளுக்கு வன்னியில் ஆசனம்
5 கட்சிகளுக்கு வன்னியில் ஆசனம் ,0 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் வன்னி மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP)- 39,894 வாக்குகள் (2 ஆசனங்கள்)
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 32,232 வாக்குகள் (1 ஆசனம்)
இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 29,711 வாக்குகள் (1 ஆசனம்)
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)- 21,102 வாக்குகள் (1 ஆசனம்)
இலங்கை தொழிலாளர் கட்சி (SLLP) – 17,710 வாக்குகள் (1 ஆசனம்)
பெரும் பான்மை வெற்றியை பெற்றுள்ள அனுரா
பெரும் பான்மை வெற்றியை பெற்றுள்ள அனுரா
பெரும் பான்மை வெற்றியை பெற்றுள்ள அனுரா ,நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இதுவரை வௌியான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) மொத்தம் 123 இடங்களை வென்றுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் 19 ஆசனங்களில் 16 ஆசனங்களைக் கைப்பற்றியதன் பின்னர், தேசிய மக்கள் சக்தியின் பெரும்பான்மை பலம் உறுதியாகியுள்ளது.
இதுவரை தேசிய மக்கள் சக்தி 6,842,223 வாக்குகளைப் பெற்றுள்ளது. இது இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 61.73% ஆகும்.
கூட்டமைப்பு படு தோல்வி
கூட்டமைப்பு படு தோல்வி
கூட்டமைப்பு படு தோல்வியை இந்த தேர்தலில் சந்தித்துள்ளது .
அனுரகுமார திஸாநாயக்கவைன் அளவும் கட்சி யாழ்ப்பாணத்தில் மூன்று ஆசனங்களை பெற்று சாதனை படைத்துள்ளது .
வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் 12 ஆசனங்களை பெற்று சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இதுதமிழ் தேசிய கூட்டமைப்பின் விரோத போக்கை காண்பிக்கிறது என மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது .
பணம் விநியோகித்தவர் கைது
பணம் விநியோகித்தவர் கைது
பணம் விநியோகித்தவர் கைது ,பொதுத் தேர்தல் வேட்பாளர் ஒருவர் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு இன்று (14) பணம் விநியோகம் செய்து கொண்டிருந்த போது கற்பிட்டி அல்மனார் முகாமுக்கு அருகில் கற்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வேட்பாளரிடம் ஏற்கனவே 97,200 ரூபாய் பணம் இருந்ததுடன், அந்தப் பணத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரகாஷ் வாக்களித்தார் அர்ச்சுனா வேட்பாளர்
பிரகாஷ் வாக்களித்தார் அர்ச்சுனா வேட்பாளர்
பிரகாஷ் வாக்களித்தார் அர்ச்சுனா வேட்பாளர் ,அர்ச்சுனா சுயேட்சை குழு 17 இல் போட்டியிடும் பருத்தித்துறை வேட்பாளர் ஸ்ரீஸ்கண்ணா பிரகாஷ் தனது வாக்கை அளித்தார் .
மாற்றத்தை தேடி மறு மலர்ச்சிக்காக வந்திறங்கிய அர்ச்சுனா அரசியல் பயணம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடு ,மக்கள் காத்திருக்க பிரகாஷ் வாக்களித்துள்ளார் .
ஒன்பதவது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அர்ச்சுனா வென்று முடிசூடுவர் என்றே மக்கள் நம்புகின்றனர் .
எதிர்வரும் சில மணித்தியாலங்களில் தேர்தல் முடிவுகள் வெளி வரும் பார்க்கலாம் ; வெல்ல போவது யார் .
மக்கள் புதிய புரட்சியை விரும்புகின்றார்களா இல்லையா என்பதை தேர்தல் களம் பரணி பாட போகிறது என்பது நிலவரமாகிறது .
9ஆவது பாராளுமன்றத்துக்காக இன்று வாக்களிப்பு
9ஆவது பாராளுமன்றத்துக்காக இன்று வாக்களிப்பு
9ஆவது பாராளுமன்றத்துக்காக இன்று வாக்களிப்பு ,இலங்கையின் 9 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல், இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி நடைபெறுகின்றது.
பாராளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் மக்களின் நேரடி வாக்குகள் மூலம் தெரிவாகும் 196 பாராளுமன்ற ஆசனங்களுக்காக 8,352 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.இந்த தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல்
கட்சிகளைச் சேர்ந்த 5006 வேட்பாளர்களும் 3346 சுயேச்சைக்குழு வேட்பாளர்களும் போட்டியிடும் நிலையில் இவர்களுக்கு 17,140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் 22 தேர்தல் மாவட்டங்களிலும் 160 தொகுதிகளில் அமைக்கப்படவுள்ள 13,421 வாக்களிப்பு நிலையங்களில் 14ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரையில் வாக்களிப்புகள் இடம்பெறவுள்ளன.
அதன்பின்னர், தபால் மூல வாக்களிப்புகளை எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும். நிறைவில், வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.
பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கை ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரையில் நடைபெற்றது.இந்தக் காலப்பகுதியில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும்
சுயேட்சைக் குழுக்களின் சார்பாக 764 குழுக்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்ததுடன், அவற்றில் 74 குழுக்களின் வேட்பு மனுக்கள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டன..
இதற்கமைய 690 குழுக்கள் தேர்தல் களத்தில் போட்டியிட தகுதி பெற்றன. இந்த குழுக்களின் சார்பாக நாடு முழுவதும் 8352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
வாக்காளர்கள் இறுதி நேரம் வரையிலும் காத்திருக்காமல், நேரகாலத்துடன் சென்று வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு
அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், தேர்தல் சட்டங்களை மீறிவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கெனவே, அச்சுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாக்களிப்பு நிலையத்தில் இருந்து சடலம் மீட்பு
வாக்களிப்பு நிலையத்தில் இருந்து சடலம் மீட்பு
வாக்களிப்பு நிலையத்தில் இருந்து சடலம் மீட்பு ,யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய சுபாஷ் எனும் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாசாலையில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் புதன்கிழமை (13) முதல் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த
குறித்த நபர் வியாழக்கிழமை (14) காலை உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
அதனையடுத்து சடலத்தை மீட்ட கோப்பாய் பொலிஸார் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் , போதனா வைத்தியசாலையில் சடலத்தை
ஒப்படைத்துள்ளதுடன் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இச் சம்பவத்தினால் இன்றைய தினம் காலை குறித்த வாக்களிப்பு நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன் , பிறிதொரு பொலிஸ்
உத்தியோகத்தர் கடமைக்கு அமர்த்தப்பட்டு , வாக்களிப்பு சுமூகமான முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
106 வயது முதியவர் வாக்களிப்பு
106 வயது முதியவர் வாக்களிப்பு
106 வயது முதியவர் யோன் பிலிப் லூயிஸ் பாராளுமன்றத்தேர்தலுக்கான தமது வாக்கை திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று(14) செலுத்தினார்.
யாழ்ப்பாணத்தில் 18.11.1918 இல் தாம் பிறந்து,தமது 22 வயதில் திருகோணமலைமலைக்கு வந்து தொடர்நது இங்கே வாழ்ந்து வருவதாகவும்,இலங்கையின் பாராளுமன்ற தேர்தல்கள் அனைத்திலும் தாம் வாக்களித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சமூக ஊடகங்களில் தேர்தல் பிரச்சாரம் முறைப்பாடுகள் அதிகரிப்பு
சமூக ஊடகங்களில் தேர்தல் பிரச்சாரம் முறைப்பாடுகள் அதிகரிப்பு
சமூக ஊடகங்களில் தேர்தல் பிரச்சாரம் முறைப்பாடுகள் அதிகரிப்பு ,அமைதியான முறையில் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் இந்த காலப்பகுதியில், சமூக ஊடகங்கள் ஊடாக தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டமை தொடர்பில் 1,388 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், 11ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் 12ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரையிலான காலப்பகுதியில், 747 சமூக ஊடக இணைப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
அத்துடன், ஒக்டோபர் 11 முதல் இதுவரையில் மொத்தமாக 2,033 சமூக ஊடகங்கள் தொடர்பான புகார்கள் பெறப்பட்டுள்ளன.
அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள், இனம், மதம், ஆளுமை மற்றும் பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில், 385 பதிவாகியுள்ளன.
மேலும், வெறுப்பு பேச்சு தொடர்பாக 203 சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விபத்தில் மரணம் மரண சடங்குக்கு வந்தவர்
விபத்தில் மரணம் மரண சடங்குக்கு வந்தவர்
விபத்தில் மரணம் மரண சடங்குக்கு வந்தவர் ,யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மரண சடங்குக்கு வந்த மட்டக்களப்பை சேர்ந்த ஒருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியை சேர்ந்த குகதாஸ் விஜிதா (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உரும்பிராய் பகுதியில் நடைபெற்ற மரண சடங்குக்கு கடந்த 09 ஆம் திகதி வருகை தந்த குறித்த நபர் மறுநாள் மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் போது ,
கொக்காவில் பகுதியில் வைத்து பன்றி ஒன்று வீதியின் குறுக்கே ஓடியதில் , அவர் பயணித்த வாகனம் பன்றியுடன் மோதி விபத்துக்கு உள்ளானது.
விபத்தில் படுகாயமடைந்தவரை மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் .
போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் புதன்கிழமை (13) அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
33 ரயில் சேவைகள் ரத்து
33 ரயில் சேவைகள் ரத்து
33 ரயில் சேவைகள் ரத்து ,ரயில் சாரதிகள் மற்றும் சாரதி உதவியாளர்கள் இல்லாத காரணத்தினால் இன்று 33 ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
சாரதிகள் மற்றும் உதவி சாரதிகள் கடமைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் இன்று காலை இடம்பெறவிருந்த 10 புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது சாரதிகள் மற்றும் சாரதி உதவியாளர்கள் இல்லாத காரணத்தினால் இன்று மேலும் 23 ரயில்கள் ரத்து செய்யப்பட வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.
அதன்படி, பிரதான பாதையில் 13 புகையிரத சேவைகளும், கரையோரப் பாதையில் 8 புகையிரத சேவைகளும், புத்தளம் பாதையில் 6 புகையிரதங்களும், களனி பள்ளத்தாக்கு பாதையில் மேலும் 6 புகையிரதங்களும் இன்று இரத்து செய்யப்படவுள்ளன.
தேர்தலில் வாக்களிப்பதற்காக விசேட போக்குவரத்து சேவைகள்
தேர்தலில் வாக்களிப்பதற்காக விசேட போக்குவரத்து சேவைகள்
தேர்தலில் வாக்களிப்பதற்காக விசேட போக்குவரத்து சேவைகள் ,பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்காக இன்றும் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
பயணிகளின் வசதி கருதி தேவையான போக்குவரத்து சேவைகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை, தனியார் பேருந்து
உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தொடருந்து திணைக்களம் என்பன அறிவித்துள்ளன.
அதற்கமைய, பயணிகளின் வசதி கருதி இன்றைய தினம் 80 பேருந்துகளை மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார்.
அதே போன்று தேர்தல் நடவடிக்கைகளுக்காக சுமார் 1,000 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, நாளாந்தம் பயணிக்கும் ரயில்களை விடவும் தேர்தல் காலத்தைக் கருத்திற் கொண்டு மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத்
ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்துள்ளார்
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் சீமான்
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் சீமான்
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் சீமான் ,இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சட்டவிரோதமாக எல்லை தாண்டி வரும் இந்திய கடற்றொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ஜனாதிபதி அநுரகுமார
திசாநாயக்க கூறியதை சுட்டிக்காட்டியே அவர் இந்த வலியுறுத்தலை மத்திய அரசாங்கத்திடம் விடுத்துள்ளார்.
இலங்கையில் தமிழக கடற்றொழிலாளர்கள் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் அவர்களின் வலைகள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்
அவதூறான வீடியோ பதிவு தொடர்பில் முறைப்பாடு
அவதூறான வீடியோ பதிவு தொடர்பில் முறைப்பாடு
அவதூறான வீடியோ பதிவு தொடர்பில் முறைப்பாடு ,தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பிர்தௌஸ் நளீமிக்கு எதிராகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தொடர்பிலும் காத்தான்குடியின் பிரமுகர்கள் சிலர் தொடர்பாகவும்
வெளியிடப்பட்ட வீடியோ பதிவு தொடர்பாக பிர்தௌஸ் நளீமியினால் செவ்வாய்க்கிழமை(12) இரவு காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த வீடியோவை தயாரித்தவர்கள், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியவர்கள், பகிர்ந்தவர்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில்,
தனது சட்டத்தரணிகள் ஊடாக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பிர்தௌஸ் நளீமி தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவிற்கு செலவு அதிகம்
தேர்தல் ஆணைக்குழுவிற்கு செலவு அதிகம்
தேர்தல் ஆணைக்குழுவிற்கு செலவு அதிகம் ,இம்முறை பாராளுமன்ற தேர்தலுக்கு அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் இருப்பதால், கூடுதல் வாக்கு எண்ணும் மையங்கள்,
ஆவணப் பணிகள், வாக்குச் சீட்டு அச்சிடுதல் போன்றவற்றில் கூடுதல் செலவுகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் நேற்று (13) தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க டெய்லி மிரருக்குத் தெரிவித்ததாவது, வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் விளைவாக
ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திற்கும் ஏற்ப வாக்குச்சீட்டுகளில் பெரும் வேறுபாடுகள் உள்ளன.
கடந்த முறை 1713 ஆக இருந்த வாக்கு எண்ணும் மையங்களின் எண்ணிக்கை இம்முறை 2034 ஆக அதிகரித்துள்ளது என்றார்.
“இவை அனைத்தும் தேர்தல் அலுவலகத்திற்கு கூடுதல் செலவாகும். இருப்பினும், வாக்குப்பதிவைத் தொடர்ந்து சரியான மதிப்பீடுகள் செய்யப்பட்ட பின்னரே துல்லியமான செலவு உயர்வை அறிய முடியும்,” என்று அவர் கூறினார்.
நாடு முழுவதும் நாளை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
‘கடின பிங்காமா’ (போயா தின பௌத்த வழிபாடு), வெள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் ஊனமுற்ற வாக்காளர்களுக்கான அணுகல் பிரச்சினைகள் காரணமாக
முன்பு பெரும்பாலும் பௌத்த விகாரைகளில் ஏற்பாடு செய்யப்பட்ட 60 வாக்களிப்பு நிலையங்கள் மாற்றப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது.
நாடு முழுவதும் உள்ள 13,421 வாக்களிப்பு நிலையங்களில் நாளை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இம்முறை, 225 பாராளுமன்ற உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்த, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 5,464 வேட்பாளர்களும்,
3,357 சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வேட்பாளர் பட்டியலில் பெயர் பெண் முறைப்பாடு
வேட்பாளர் பட்டியலில் பெயர் பெண் முறைப்பாடு
வேட்பாளர் பட்டியலில் பெயர் பெண் முறைப்பாடு ,நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சை குழுவொன்று தனக்கு தெரியாமல் தன்னுடைய பெயரை வேட்பாளர்
பட்டியலில் குறிப்பிட்டுள்ளதாக பெண்ணொருவர் தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
யாழ்ப்பாண உதவி தேர்தல் ஆணையாளரிடம் செவ்வாய்க்கிழமை (12) அன்று முறைப்பாடு செய்துள்ளார்.
அப்பெண் மேலும் தெரிவிக்கையில் ,
“சுயேட்சை குழுவொன்று தன்னுடைய அனுமதி இன்றி , வேட்பாளர் பட்டியலில் எனது பெயரை குறிப்பிட்டுள்ளனர். இதுவரை காலமும் எனக்கு இந்த விடயம் தெரிய வரவில்லை. நேற்றைய தினம் திங்கட்கிழமை எனது மாணவி ஒருவர்
எனக்கு தொலைபேசி அழைப்பினை எடுத்து , தேர்தலில் போட்டியிடுகிறீர்களா ? என வினாவிய போதே , எனது பெயர் வேட்பாளர் பட்டியலில் வந்திருந்தமை தெரிய வந்தது.
அதனை உறுதிப்படுத்திக்கொள்ள யாழ் . மாவட்ட தேர்தல் திணைக்கள அலுவலகத்திற்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அது என்னுடைய
பெயர் தான் என்பதனையும் எனது அனுமதியின்றி எனது பெயரை வேட்பாளர் பட்டியலில் சுயேட்சை குழு தலைவர் உள்ளடக்கி உள்ளார் என்பதனையும் உறுதிப்படுத்திக்கொண்டேன்.”
அது தொடர்பில் யாழ் . மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளரிடம் எழுத்து மூலம் முறையிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.































