Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக்மேயர்
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக்மேயர்
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக்மேயர் ,கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கான
அமெரிக்காவின் அதிவிசேட மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதியால் இவரது பெயர் செனட் சபையில் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் வெளிநாட்டுத் சேவைத் துறையின் (Senior Foreign Service) சிரேஷ்ட உறுப்பினராக செயற்பட்டுள்ளார்.
தற்போது, இவர் தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான (Bureau of South and Central Asian Affairs) சிரேஷ்ட அதிகாரியாக இந்தியா, ஆப்கானிஸ்தான்,
இலங்கை, மாலைத்தீவு உள்ளிட்ட 13 நாடுகளில் நிர்வாகத்தின் கொள்கை முன்னுரிமைகளை ஒருங்கிணைப்பதற்கும், பணியகங்களை மேற்பார்வையிடுவதற்கும் பொறுப்பாளராக செயற்படுகிறார்.
முன்னதாக நோர்வே, வட மாசிடோனியா, கசகஸ்தான், கம்போடியா ஆகிய நாடுகளில் பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
வவுனியா சம்பவத்தில் காயமடைந்த 5பொலிஸார்
வவுனியா சம்பவத்தில் காயமடைந்த 5பொலிஸார்
வவுனியா சம்பவத்தில் காயமடைந்த 5பொலிஸார் ,வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று (11) இரவு பொலிஸாருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொலிஸாருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம்
சம்பவத்தின் போது பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உத்தரவைப் பின்பற்றாமல் வாகனத்தை செலுத்திய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை கைது செய்ய முயன்றபோது ஏற்பட்ட சம்பவத்தில் அந்த நபர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் போராட்டம் நடத்தி இந்த சம்பவத்தை உருவாக்கி தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா கூமாங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் விழுந்து கிடப்பதாக நேற்று (11) இரவு போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் நால்வருக்கு நபரொருவர் தகவல் வழங்கியுள்ளார்.
அதன்படி, நான்கு பொலிஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, அருகில் இருந்த ஒரு குழு அவர்களைத் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்ய சென்றபோது
இதன்போது, பொலிஸார் அவரை கைது செய்ய சென்றபோது இடம்பெற்ற சம்பவமொன்றின் காரணமாகவே அந்த நபர் இறந்துவிட்டதாக பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய குழு தெரிவித்துள்ளது.
அருகிலுள்ள மதுபானக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தவர்களை பொலிஸ் அதிகாரிகள் கைது செய்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், குறித்த நபர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் பொலிஸார் ஒரு கட்டையை வீசியதன் காரணமாக, அவர் விழுந்து இறந்ததாகவும் கிராம மக்கள் கூறியுள்ளனர்.
இருப்பினும், அவ்வாறு நடந்திருந்தால், சக்கரம் சேதமடைந்திருக்கும், மேலும் விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளின் சக்கரத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவும், பொலிஸ் விசேட அதிரடிப்படையும் வரவழைக்கப்பட்டன.
பிரதேச மக்களால் தாக்கப்பட்ட 5 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறந்தவரின் சடலம் மீதான பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் இன்று (12) மேற்கொள்ளப்படவுள்ளது.
கடற்படைக்கு எதிராக ஒன்றுதிரண்ட மக்கள்
கடற்படைக்கு எதிராக ஒன்றுதிரண்ட மக்கள்
கடற்படைக்கு எதிராக ஒன்றுதிரண்ட மக்கள் கல்பிட்டி, தளுவ கிராம மக்கள் நேற்று (10) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடற்படை என்று கூறிக்கொண்ட இருவர் கிராமவாசி ஒருவரைத் தாக்கியதற்கு எதிராகவும், போதைப்பொருள் கடத்தலுக்கு கடற்படையும் பொலிஸாரும் ஆதரவு
இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வழங்குவதாகவும் குற்றம் சாட்டியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது, கடற்படையைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் சிவில் உடையணிந்த இருவர் வந்து அதை வீடியோ பதிவு செய்ததால், அங்கு பதற்றமான சூழல் உருவானது.
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி
அப்போது அங்கு வந்த நுரைச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.
எனினும், இது தொடர்பாக அத தெரண வினவியபோது, கடற்படை இந்தக் குற்றச்சாட்டுகளை மறுப்பதாக தெரிவித்தது.
அதிகாலை துப்பாக்கிச் சூடு
அதிகாலை துப்பாக்கிச்சூடு
அதிகாலை துப்பாக்கிச் சூடு , ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றின் அறையில் இன்று (11) அதிகாலை நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டின் ஜன்னலை உடைத்து அவரைச் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த நபர் மாலமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவராவார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் பற்றிய தகவல்கள் இன்னும் தெரியவரவில்லை.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம்
சந்தேக நபர்களைக் கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குடு சலிந்துவிற்கும் நிலங்கவிற்கும் இடையிலான மோதலில் குடு சலிந்துவின் தரப்பில் ஒருவரை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேற்படி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட
ஆடியவர் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு
ஆடியவர் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு
ஆடியவர் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு ,ஏறாவூர் களுவங்கேணி பிரதேசத்தில் பேச்சியமன் கோவிலில் இடம்பெற்ற வருடாந்த சடங்கின் போது தெய்வம் ஆடிய ஒருவர் திடிரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்ததுடன், மற்றொருவர் மீது
தெய்வம் ஆடியவர், கூரிய ஆயுதத்தால் தாக்கியதை அடுத்து அவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி சிங்காரதோப்பு கிராமத்திலுள்ள பேச்சியம்மன் ஆலயத்தில் வருடாந்த திருவிழாவின் இறுதி
பெரும் பதற்றம்
நாளான நேற்று (10) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தை அடுத்து அங்கு பெரும் பதற்றம்
இதன் போது பக்தர்கள் ஆலயத்தினுள் தெய்வம் ஆடிக் கொண்டிருந்த போது, 37 வயதான ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்ததையடுத்து அவர் உயிரிழந்தார்.
கூரிய ஆயுதத்தால் தாக்கியதில்
இதனையடுத்து அங்கு தெய்வம் ஆடிக்கொண்டிருந்தவர், இன்னொருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்கியதில், அவர் படுகாயமடைந்து மட்டு போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் தாக்குதலை நடத்தியவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கல வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
மத்தள விமான நிலையம்
மத்தள விமான நிலையம்
மத்தள விமான நிலையம் மத்தள சர்வதேச விமான நிலையத்தை விமானங்களுக்கு தயார்படுத்த இன்னும் பல ஆண்டுகள் செல்லும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
விமான நிலையத்தை அதன் தற்போதைய நிலை
விமான நிலையத்தை அதன் தற்போதைய நிலையில் பராமரிப்பதன் மூலம் அரசாங்கம் கூடுதல் செலவுகளைச் செய்ய வேண்டியுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்று (10) விமான நிலையத்தை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் இவ்வாறு கூறினார்.
“மத்தள விமான நிலையத்தை விமானங்களை கொண்டு வரக்கூடிய அளவுக்கு கட்டமைக்க நாங்கள் முயற்சிக்கிறோம். ஓரிரு வருடங்களில் அதை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல முடியாது என்று நாங்கள் நினைக்கிறோம்.
ஆனால் இந்த விமான நிலையம் எங்களிடம் இருப்பதால், எங்களுக்கு நிறைய செலவுகள் மற்றும் கடன் உள்ளது.
மேலும், இலங்கைக்கு ஒரு மாற்று விமான நிலையம் தேவை. இது எங்களுக்கு கூடுதல் நன்மையாக உள்ளது.
நாங்கள் தற்போது கலந்துரையாடி வருவது விமானங்களை கொண்டு வர. இது ஒரு பெரிய விடயம்.
சரியான முதலீட்டாளர்களை நாம் கொண்டு வர வேண்டும்
இதற்காக சரியான முதலீட்டாளர்களை நாம் கொண்டு வர வேண்டும்.
இதற்கிடையில், விமானங்களை பழுதுபார்ப்பது போன்ற தொழில்களைச் செய்ய முடியும்.
விமான நிலையத்தில் நிறைய இடம் இருப்பதால், விமான ஓடுபாதைக்கு வெளியே உள்ள பகுதிகளில் சோலார் பேனல்கள் போன்ற தொழில்களுக்குச் செல்ல முன்மொழியப்பட்டுள்ளது.
இது உண்மையில் வணிகத் திட்டம் இல்லாமல் கட்டப்பட்ட விமான நிலையமாகும். கடன் மலைபோல் குவிந்துள்ளது.
260 மில்லியன் டொலர் கடன். 2030க்குள் அதை செலுத்த வேண்டும்.
கட்டுநாயக்காவில் சம்பாதித்த பணம் இங்கு கொண்டு வரப்படுகிறது. “இது பணத்தை வீணடிப்பதாகும். இது ஒரு வெறிச்சோடிய விமான நிலையம்,” என்று அவர் கூறினார்.
புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுபணி
புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுபணி
புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுபணி ,விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அந்த அமைப்பின் பிற தலைவர்களால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு
ஆயுதங்களைத் தேடி அகழ்வு பணி
மந்துவில் பகுதியில் உள்ள நிலத்தடி பதுங்கு குழியில் ஆயுதங்களைத் தேடி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட உத்தரவின் பேரில், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவால் நேற்று (10) இந்த அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கு அமைய முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்திற்கு சமர்ப்பணங்களை முன்வைத்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த போரின் போது பாதுகாப்புப் படையினரின் தாக்குதல்களால் சுமார் 20 அடி ஆழம் கொண்ட இந்த நிலத்தடி பதுங்கு குழியின் நுழைவாயில்கள் அழிக்கப்பட்டன.
2009ஆம் ஆண்டில், விடுதலை புலிகள் அமைப்பின் பிரதான முகாமாக இந்த இடம் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், முகாமின் அளவு இரண்டு ஏக்கருக்கும் அதிகமாகும் என பொலிஸார் தெரிவித்தனர்.
பொது மக்களுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட இந்த முகாம் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்ட பிறகு, கண்ணி
வெடிகள் அகற்றப்பட்டு அசல் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், வெளியாட்கள் உள்ளே நுழைய முடியாதபடி பாதுகாப்புப் படையினர் நிலத்தடி பதுங்கு குழியை மண்ணால் மூடிவிட்டனர்.
அந்த நேரத்தில், விடுதலை புலிகள் அமைப்பால் பொதுமக்களிடமிருந்து பறிக்கப்பட்ட தங்கத்தை மறைத்து வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில்
பல்வேறு குழுக்களும் நிலத்தடி பதுங்கு குழியை தோண்ட முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசேட அதிரடிப் படையின் வெடிகுண்டு செயலிழப்புப் வழிகாட்டுதலின் கீழ் பெக்கோ இயந்திரங்களைப் பயன்படுத்தி அகழ்வு பணிகள்
முன்னெடுக்கப்படும் அதே நேரத்தில் தொல்பொருள் அதிகாரிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் பணிகளை கண்காணித்து வருகின்றனர்
O/L பரீட்சை பெறுபேறுகள்
O/L பரீட்சை பெறுபேறுகள்
O/L பரீட்சை பெறுபேறுகள் ,2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, 237,026 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி தெரிவித்தார்.
இது பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் 73.45% ஆகும்.
இதற்கிடையில், அனைத்து பாடங்களிலும் 9 ‘A’ சித்திகளை பெற்ற 13,392 மாணவர்கள் உள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
இது மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 4.15 சதவீதமாகும்,
மாகாண வாரியாக மாணவர் சித்தி சதவீதம் பின்வருமாறு,
மேல் 74.47%
மத்திய 73.91%
தெற்கு 75.64%
வடக்கு 69.86%
கிழக்கு 74.26%
வடமேல் 71.47%
வட மத்திய 70.24%
ஊவா 73.14
சப்ரகமுவ 73.47%
பாட வாரியாக சித்தி சதவீதம் பின்வருமாறு,
பௌத்தம் – 83.21%
சைவநெறி – 82.96%
கத்தோலிக்கம் 90.22%
கிறிஸ்தவம் 91.49%
இஸ்லாம் 85.45%
ஆங்கிலம் 73.82%
சிங்கள மொழி மற்றும் இலக்கியம் 87.73%
தமிழ் மொழி மற்றும் இலக்கியம் 87.03%
வரலாறு 82.17%
அறிவியல் 71.06%
கணிதம் 69.07%
அனைத்து பாடங்களிலும் சித்தி பெறாத மாணவர்களின் சதவீதம் 2.34%
கோர விபத்து 4வயது சிறுவன்பலி
கோர விபத்து 4வயது சிறுவன்பலி
கோர விபத்து 4வயது சிறுவன்பலி , மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிகுளம் பகுதியில் இன்று (10) மாலை இடம்பெற்ற விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்
மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் 12 வயது சிறுமி ஆகிய மூவர் படுகாயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவரும்போது, அப்பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தந்தை, தாய்,
மகன் மற்றும் மகள் ஆகிய நான்கு பேரும் இன்று (10) மாலை நானாட்டான் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது,
நானாட்டான் பிரதான வீதி வழியாக மன்னார் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பிக்கப் ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை, தாய், மகன் மற்றும் மகள் ஆகிய நான்கு
பேரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், பலத்த காயங்களுக்கு உள்ளான 4 வயது சிறுவன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தான்.
மேலும், தந்தை, தாய் மற்றும் 12 வயது சிறுமி ஆகிய மூவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த வாகனத்தின் சாரதியை கைது செய்த முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு
இலங்கை மின்சார சபையின் மறு சீரமைப்பு
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு ,இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புடன் தொடர்புடைய சட்டமூலம் மற்றும் வேலைத்திட்டம் குறித்து
தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் எரிசக்தி அமைச்சுக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
மின்சார சபையின் மறுசீரமைப்பு
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டத்தில் ஊழியர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாப்பது உட்பட
தொழிற்சங்கங்களின் கவனத்திற்கு வந்த பல பிரச்சினைகள் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டது.
மின்சாரத் துறையை அரசாங்க உரிமையின் கீழ் வைத்திருப்பது அரசாங்கத்தின் கொள்கை என்றும், இந்த மறுசீரமைப்பு திட்டத்தின் மூலம்
ஊழியர் உரிமைகளைக் குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அமைச்சர் கூறினார்.
தொழிற்சங்க பிரதிநிதிகள்
இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற தொழிற்சங்க பிரதிநிதிகள், தங்கள் கருத்துகளையும் பரிந்துரைகளையும் அமைச்சரிடம் நேரடியாக முன்வைக்க வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி தெரிவித்தனர்.
மின்சாரத் துறையை அரசாங்க உரிமையின் கீழ் வைத்திருக்கும் இந்தக் கொள்கையை அவர்கள் மிகவும் பாராட்டுவதாகக் கூறினர்.
ஊழியர் உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கமும் அமைச்சரும் காட்டிய அக்கறைக்கு நன்றி தெரிவித்ததோடு,
மின்சாரத் துறையின் வளர்ச்சிக்கு அதிகபட்ச பங்களிப்பைச் செய்ய தொழிற்சங்க இயக்கத்திற்கு ஆதரவையும் தெரிவித்தனர்.
மின்சார சபையின் பிரதிநிதிகள் மற்றும் 42 தொடர்புடைய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்தக் சந்திப்பிற்காக அழைக்கப்பட்டிருந்தனர்.
தெற்கு பிரான்சில் காட்டுத்தீ
தெற்கு பிரான்சில் காட்டுத்தீ
தெற்கு பிரான்சில் காட்டுத்தீ விமான நிலையத்தை மூடியது
செவ்வாய்க்கிழமை வேகமாக நகரும் காட்டுத்தீ பிரான்சின் இரண்டாவது பெரிய நகரமான மார்சேயின் புறநகர்ப் பகுதியை அடைந்தது, இதன் விளைவாக அதன் விமான நிலையம் மூடப்பட்டது, குடியிருப்பாளர்கள்
வீட்டிற்குள் இருக்கவும், புகையிலிருந்து பாதுகாப்பாக இருக்க அனைத்து திறப்புகளையும் மூடவும் கூறப்பட்டது.
செவ்வாய்க்கிழமை தெற்கு பிரான்சின் மார்சேயின் புறநகர்ப் பகுதியை அடைந்த வேகமாக நகரும் காட்டுத்தீயை நூற்றுக்கணக்கான தீயணைப்பு
வீரர்கள் எதிர்த்துப் போராடினர், இதனால் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது மற்றும் அருகிலுள்ள விமான நிலையமும் மூடப்பட்டது.
தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களின் உதவியுடன், தீயணைப்பு வீரர்கள் மாலைக்குள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர், ஆனால் இன்னும் பலத்த காற்று வீசும் என்ற
முன்னறிவிப்பு, அது பிரான்சின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகரத்தை நோக்கி இன்னும் முன்னேறக்கூடும் என்பதாகும்.
மணிக்கு 70 கிமீ (43 மைல்) வேகத்தில் வீசிய தீ, மத்தியதரைக் கடல் கடற்கரையில் நகரத்தின் மீது அடர்த்தியான புகை மேகங்கள் சூழ்ந்ததால், மார்சேயின் மையத்தில் உருகக்கூடும்.
“இது மிகவும் வியக்கத்தக்கது – பேரழிவு கூட,” என்று மார்சேய்க்கு வடக்கே உள்ள லெஸ் பென்னஸ்-மிராபியூவில் வசிக்கும் மோனிக் பெய்லார்ட் கூறினார், அங்கு தீ ஒரு நெடுஞ்சாலையில் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ 700 ஹெக்டேர் (1,730 ஏக்கர்) எரிந்துள்ளது, மேலும் அது இன்னும் எரிந்து கொண்டிருந்தாலும் அது கட்டுக்குள் இருப்பதாகக் கருதப்படுகிறது என்று பிராந்திய முதல்வர் ஜார்ஜஸ்-ஃபிராங்கோயிஸ் லெக்லெர்க் கூறினார்.
தீயினால் சுமார் 20 கட்டிடங்கள் குறைந்தது ஓரளவு சேதமடைந்துள்ளன, ஆனால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் நூற்றுக்கணக்கான வீடுகள் தீயணைப்பு வீரர்களால் காப்பாற்றப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களின் உதவியுடன் 700 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சர்வதேச விசாரணை சாணக்கியன் பதிலடி
சர்வதேச விசாரணை சாணக்கியன் பதிலடி
சர்வதேச விசாரணை சாணக்கியன் பதிலடி ,செம்மணி படுகொலை மற்றும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களுக்கு உடனடியாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்

இராசமாணிக்கம் சாணக்கியன் நேற்றைய (09) பாராளுமன்ற உரையில் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, இலங்கை அரசியலமைப்பில் சர்வதேச விசாரணைக்கு இடமில்லை எனக் கூறியிருந்தார்.
இதற்கு சாணக்கியன் கடுமையாக பதிலளித்தார்.
சாணக்கியன் தனது பதிலில்,
“மாண்புமிகு நீதி அமைச்சர் அவர்களே, இலங்கையின் சட்டத்தின் கீழ், சர்வதேச விசாரணை நடைபெறுவதற்கான அமைப்பை உருவாக்க வழிகள் உள்ளன. OMP (காணாமல் போனோர் பற்றிய அலுவலகம்) சட்டம் இதற்காகவே
நிறைவேற்றப்பட்டது. அதைப் படித்துப் பாருங்கள். முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ எதிர்க்கட்சியில் இருந்தபோது கொண்டுவந்த சட்டமூலம், உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது, வெளிநாட்டு
விசாரணையாளர்கள் அல்லது நீதிபதிகள் இதில் பங்கேற்பது அரசியலமைப்பிற்கு விரோதமல்ல என உயர் நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்தது. இதன்படி, சர்வதேச பங்கேற்புக்கு இலங்கையின் சட்ட
கட்டமைப்பில் போதுமான இடம் உள்ளது” என்றார். மேலும், அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் சட்ட அறிவு குறித்து கேள்வி எழுப்பிய சாணக்கியன், “உங்கள் துறையில் இதுபோன்ற சட்டங்கள் பற்றிய உங்கள்
அறிவு போதுமானதாக இல்லை. இவ்வாறான அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன், ஜனாதிபதி மன்றங்களுடன் ஆலோசனை செய்ய
வேண்டும். தெளிவற்ற தகவல்களுடன் எனது தீர்மானத்தின் அடிப்படையை கேள்வி கேட்கிறீர்கள்” என்று விமர்சித்தார்.
சாணக்கியன் மேலும் கூறுகையில், “நான் சுயாதீன வழக்கறிஞர்களைப் பற்றி பேசவில்லை. மனித உரிமை மீறல்களுக்கான சிறப்பு வழக்கறிஞர்
அலுவலகத்தைப் பற்றி பேசுகிறேன். அட்டர்னி ஜெனரல் துறைக்கு அதிக வேலைப்பளு இருப்பதாக நீங்களே கூறியுள்ளீர்கள். என்று தெரிவித்தார்.
இலங்கை மீதான டிரம்பின் வரி
இலங்கை மீதான டிரம்பின் வரி
இலங்கை மீதான டிரம்பின் வரி ,இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 30% தீர்வை வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பான கடிதம் வெள்ளை மாளிகையால் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44% வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
இதற்கு ஒரு சலுகைக் காலம் வழங்கப்பட்டிருந்தது. அந்தக் காலம் நேற்று (9) முடிவடைந்த நிலையில், 2025 ஓகஸ்டு முதலாம் திகதி முதல் 30% வரி விதிக்கப்படும் என டிரம்ப் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தனது வரிகளை உயர்த்தினால், அந்த வீதம் தற்போதைய 30% வரியுடன் சேர்க்கப்படும் என டிரம்ப் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னதாக விதிக்கப்பட்ட 44% வரியை 30% ஆக குறைத்தது நேர்மறையான அணுகுமுறை என இலங்கை வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.
பட்டியலிடப்பட்ட அனைத்து நாடுகளிலும் இலங்கைக்கு மிகப்பெரிய வரிக் குறைப்பு வழங்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர சுட்டிக்காட்டினார்.
இது இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் இராஜதந்திர மத்தியஸ்தத்தின் விளைவு என அவர் குறிப்பிட்டார்.
இலங்கையுடன், மேலும் ஆறு நாடுகளுக்கு நேற்றைய தினம் அமெரிக்க ஜனாதிபதி புதிய வரிகளை அறிவித்தார்.
அதன்படி, அல்ஜீரியா, ஈராக் மற்றும் லிபியாவுக்கு 30% வரியும், புருனை மற்றும் மால்டோவாவுக்கு 25% வரியும், பிலிப்பைன்ஸுக்கு 20% வரியும் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை, மேலும் 14 நாடுகளுக்கு புதிய
வரிகளை அமெரிக்க ஜனாதிபதி அறிவித்திருந்தார். இதற்கு மேலதிகமாக, பிரேசிலுக்கு 50% வரி விதிக்கப்படவுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வீதியில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்
வீதியில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்
வீதியில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் ஹோமாகம கிளை வீதியில் இன்று (10) காலை ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் சுமார் 35 வயதுடையவர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சடலத்தின் தலையில் ஆயுதத்தால் தாக்கப்பட்டதற்கான காயங்கள், கழுத்தில் வீக்கம் மற்றும் கழுத்துக்கு அருகில் இரத்தக் கறைகள் காணப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த நபர் வேறொரு இடத்தில் கொலை செய்யப்பட்டு, பின்னர் வாகனத்தில் கொண்டு வரப்பட்டு இந்த இடத்தில் வீசப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் நுகேகொடை பொலிஸ் பிரிவின் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும், ஹோமாகம தலைமையக பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்
ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்
ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்
ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் ,அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார
திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடல், முன்னர் அறிவிக்கப்பட்ட 44% வரியை 30% ஆகக் குறைத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முடிவை அடுத்து,
இலங்கையின் நிலைப்பாடு மற்றும் எதிர்கால உத்திகளை ஆராய்வதற்காக நடத்தப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, மத்திய
வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.ஏ.
விமலேந்திராஜா, மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ ஆகியோர் கலந்துகொண்டனர்.
சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை
சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை
சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை ,2025 ஜூலை மாதத்தின் முதல் ஆறு நாட்களில் (ஜூலை 1 முதல் 6 வரை) 36,002 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்த ஆண்டு இதுவரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,204,046 ஆக உள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டில், 12 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஓகஸ்ட் மாதத்தில் பதிவாகியிருந்தனர்.
இந்த ஆண்டு, முந்தைய ஆண்டை விட வேகமாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவது சுற்றுலாத் துறையில் மீட்சியை பிரதிபலிக்கிறது.
ஜூலை மாதத்தின் முதல் ஆறு நாட்களில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவிலிருந்து 8,053 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்,
இதனைத் தொடர்ந்து, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 3,562 பேர், அவுஸ்திரேலியாவிலிருந்து 2,674 பேர், மற்றும் சீனாவிலிருந்து 2,362 பேர் இலங்கைக்கு வந்துள்ளனர்.
T20 போட்டி டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன
T20 போட்டி டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன
T20 போட்டி டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன ,சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இன்று (10) நடைபெறவிருக்கும் இருபதுக்கு
20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, டிக்கெட் விற்பனை நிலையங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், விற்பனைக்கு இனி டிக்கெட்டுகள் எதுவும் இல்லை என்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
டிக்கெட் வைத்திருப்பவர்கள் மைதானத்திற்குள் பிரவேசிக்க மாலை 5 மணி முதல் வாயில்கள் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.
கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாக உள்ளது.
பால் மா விலை அதிகரிப்பு
பால் மா விலை அதிகரிப்பு
பால் மா விலை அதிகரிப்பு .இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
அதேபோல், 01 கிலோ பால் மா பொதி ஒன்றின் விலை 250 ரூபாவால் அதிகரித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் வேண்டுகோள்
எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் வேண்டுகோள்
எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் வேண்டுகோள் ,உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைகளைக் கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க அரசாங்கத்திடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்தார்.
பாராளுமன்றில் இன்று கருத்து தெரிவித்த அவர், 2021, 2023, மற்றும் 2024 ஆம் ஆண்டு விவாதங்களில் இவ்விவகாரம் குறித்து பல கேள்விகளை
எழுப்பியதாகவும், உண்மையைக் கண்டறிய தெளிவான வேலைத்திட்டம் தேவை என்றும் கூறினார்.
2024 ஏப்ரலில் கார்டினல் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் சட்ட நிபுணர்களுடன் கலந்துரையாடி, 6 அம்ச முன்மொழிவுகளை
முன்வைத்ததாகவும், இந்த 6 அம்சங்கள் குறித்து பாராளுமன்றத்திலும் கருத்து வெளியிட்டுள்ளேன் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
*தேசிய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய விசேட விசாரணை ஆணைக்குழு அமைத்தல்.
*நிரந்தர விசாரணை அலுவலகம் தாபித்தல்.
*விசாரணைக்கான வேலைத்திட்டம் உருவாக்குதல்.
*சட்டமா அதிபரால் குற்றவியல் வழக்குகள் தாக்கல் செய்தல்.
*விசேட நீதிமன்றம் தாபித்தல்.
*அரச வழக்கறிஞர் அலுவலகம் அமைத்தல்.
இவை அரசியல்மயமாக்கப்படுவதாகவும், கடந்த காலங்களில் அதிகாரிகள் மீது அழுத்தங்கள், பழிவாங்கல்கள் மூலம் விசாரணைகள் தடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
ஸ்கொட்லாந்து யார்ட், எப்.பி.ஐ ஆகியவற்றின் ஆதரவுடன் நேர்மையான விசாரணை மூலம் உண்மையைக் கண்டறிய வேண்டும் என்றும், கத்தோலிக்க சமூகத்திற்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
முறையான மாற்றம் இல்லையெனில், கார்டினல் மற்றும் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கலாம் எனவும், உண்மைக்காக ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் முன்நிற்கும் எனவும் தெரிவித்தார்.
சஜித் இன்று எழுப்பிய கேள்வி
சஜித் இன்று எழுப்பிய கேள்வி
சஜித் இன்று எழுப்பிய கேள்வி ,இறக்குமதி செய்யப்பட்ட 323 கொள்கலன்கள் சுங்க பரிசோதனைகள் இல்லாது விடுவிக்கப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைக் குழு அறிக்கையின் பரிந்துரைகளின் கீழ், பரிந்துரை 4 இன் 3 ஆவது பந்தி இவ்வாறு குறிப்பிடுகிறது:
சுங்கத் திணைக்களத்தின் அனைத்துப்பிரிவுகளுக்கும்
“இவ்வாறு நல்லெண்ணத்துடன் கொள்கலன் நெரிசலைக் குறைக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தால், இந்த நடைமுறை குறித்து முறையாக சுங்கத் திணைக்களத்தின் அனைத்துப்
பிரிவுகளுக்கும் அறிவித்து, சுங்கப் பகுதியிலிருந்து வெளியேறிய பின்னர் அது குறித்து ஏனைய சுங்க விசாரணைப் பிரிவுகள் மூலம் சோதனைக்கு உட்படுத்தி
“சிவப்பு” என வகைப்படுத்தப்பட்ட கொள்கலன்களை பௌதீக ரீதியான பரிசோதனை செய்யாததன் ஊடாக ஏற்படக்கூடிய அபாயத்தைக் குறைத்துக்கொள்ள முடிந்திருக்கும்.”
இந்த பரிந்துரையின் மூலம், முழு செயல்முறையும் நல்லெண்ணமின்றியே மேற்கொள்ளப்பட்டது என்பதைக் குறிக்கிறது. இதன் பிரகாரம், நான் பின்வரும் கேள்விகளை எழுப்புகிறேன்.
(01). 12.06.2025 அன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட 323 சந்தேகத்திற்குரிய இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்கள் குறித்த
விசாரணை அறிக்கை
விசாரணை அறிக்கை இன்னும் பகிரங்கப்படுத்தப்படாததற்கான காரணங்கள் யாது ? இந்த அறிக்கையை முழுமையாக பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்ய அரசாங்கம் எப்போது நடவடிக்கை எடுக்கும் ?
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்களே வெளிக்கொணர்ந்தார். ஆனால் அரசாங்கமே இதைச் செய்திருக்க வேண்டும்.
(02). 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும், 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் துறைமுக நடவடிக்கைகளில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக கப்பல்கள் திரும்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பான பிரச்சினைகளைத்
க்க அமைச்சர் ஒருவரது தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு குழுவொன்று நியமிக்கப்பட்டதா? இந்தக்
குழுவின் பரிந்துரைகள் யாது ? இதன் பிரகாரம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாது ?
(03). சிவப்பு மட்டுமல்லாது, மஞ்சள் நிறமும் குறிக்கப்பட்ட கொள்கலன்களை முறையான பரிசோதனை இல்லாமல் விடுவிக்க, விடயத்துக்குப் பொறுப்பான
அமைச்சரிடமிருந்தோ அல்லது அரசாங்க தரப்பிலிருந்தோ ஏதேனும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதா ? அல்லது, இறக்குமதியாளர்களிடமிருந்து அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதா ?
(04). குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 323 கொள்கலன்கள் எந்தெந்த நாடுகளிலிருந்து வந்தன ? அவற்றில் காணப்பட்ட பண்டங்கள் (பொருட்கள்)
தொடர்பான ஆவணத்தை இந்த சபையில் சமர்ப்பிக்க முடியுமா? இவற்றை இறக்குமதி செய்த நிறுவனங்கள் யாது ?
13 சந்தர்ப்பங்களில், 2218 கொள்கலன்கள் பௌதீக சோதனை இல்லாமல் விடுவிக்கப்பட்டன. இதில் 999 சிவப்பு என வகைப்படுத்தப்பட்ட
கொள்கலன்களும், மஞ்சள் நிறம் என வகைப்படுத்தப்பட்ட 1219 கொள்கலன்களும் இதில் அடங்கும். இது தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து தெளிவான பதிலை எதிர்பார்க்கின்றேன்.
(05). சுங்கப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் மீதான சுங்க வரிகளை முறையாக அறவிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா? அவ்வாறு அறவிடப்பட்டது என்பதற்கு தரும் உத்தரவாதம் யாது ?
(06). 23.01.2025 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களில் போதைப்பொருளோ அல்லது சட்டவிரோதப் பொருட்களோ இருந்தால் அதனை அரசாங்கம் பொறுப்பேற்கும் என்று
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் தெரிவித்தார். இந்தக் கூற்று இன்னும் செல்லுபடியாகுமா ?
(07). குழு முன்மொழிந்த 12 பரிந்துரைகளின் பிரகாரம் அரசாங்கம் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் யாது ?
(08). இது தொடர்பாக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா? அவ்வாறானால், அவற்றின் முன்னேற்றங்கள் யாது ? இந்த சம்பவத்திற்கான பொறுப்புக்கூறலிருந்து அரசாங்கம் தப்பிக்க
முடியுமா? இதற்கு அரசியல் அதிகாரம்படைத்தவர்கள் பொறுப்பாக இருந்தால், அவர்கள் தொடர்பில் எடுக்கும் நடவடிக்கைகள் யாது ?
(09). இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க அரசாங்கத்தின் உத்தேச புதிய கொள்கைகள் அல்லது சட்டத் திருத்தங்கள் யாவை?




































