ஹெலிகொப்டர் விபத்து நீதிமன்றில் விமானி
Posted in இலங்கை செய்திகள்

ஹெலிகொப்டர் விபத்து நீதிமன்றில் விமானி

ஹெலிகொப்டர் விபத்து நீதிமன்றில் விமானி

ஹெலிகொப்டர் விபத்து நீதிமன்றில் விமானி ,இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் பயிற்சியின் போது பறப்பட்ட 30 வினாடிக்குள், கட்டுப்பாட்டை இழந்து மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதி

விபத்துக்குள்ளானதாக பைலட் லெப்டினன்ட் போலன் ஜயவர்தன

விபத்துக்குள்ளானதாக பைலட் லெப்டினன்ட் போலன் ஜயவர்தன தெஹியத்தகண்டிய நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.

மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகி விமானப்படை மற்றும் இராணுவ விசேட

படையைச் சேர்ந்த 6 வீரர்களின் உயிரைப் பறித்த சம்பவம் தொடர்பான வழக்கு தெஹியத்தகண்டிய நீதவான்

பிரியந்த ஹால்யால முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தலைமை விமானி சாட்சியமளிக்கும் போதே இவ்வாறு நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

ஹெலிகொப்டர் கட்டுப்பாட்டை இழந்து மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதியமைக்கு காரணம் தனது தவறு அல்ல என்று தான் நம்புவதாக

தலைமை விமானி லெப்டினன்ட் போலன் ஜயவர்தன

தலைமை விமானி லெப்டினன்ட் போலன் ஜயவர்தன மேலும் சாட்சியமளித்தார்.

ஹெலிகொப்டர் ஏதேனும் ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அவர் கூறியுள்ளார், ஆனால் ஒரு குறிப்பிட்ட காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த வழக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் விபத்தில் இறந்த இரண்டு விமானப்படை வீரர்கள்

மற்றும் நான்கு இராணுவ விசேட படை வீரர்களின் மரணத்திற்கான காரணத்தை அறிவிக்கவும் தீர்மானித்துள்ளார்.

விமான விபத்து தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தைக் குறிக்கும் அறிக்கையை அதே நாளில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தெஹியத்தகண்டிய பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்

மோடிக்காக இந்தியாவில் இருந்து வந்த 4 ஹெலிகொப்டர்கள்
Posted in இலங்கை செய்திகள்

மோடிக்காக இந்தியாவில் இருந்து வந்த 4 ஹெலிகொப்டர்கள்

மோடிக்காக இந்தியாவில் இருந்து வந்த 4 ஹெலிகொப்டர்கள்

மோடிக்காக இந்தியாவில் இருந்து வந்த 4 ஹெலிகொப்டர்கள் ,இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (04) பிற்பகல் இலங்கைக்கு வருகை தர உள்ளார்.

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு நாளை (05) காலை சுதந்திர சதுக்கத்தில் சிறப்பு வரவேற்பு வழங்கப்படவுள்ளது. இதன் பின்னர், ஜனாதிபதிக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையே இருதரப்பு கலந்துரையாடல் நடைபெறும்.

இதற்கிடையில், இந்தியப் பிரதமரின் வருகையை முன்னிட்டு, அவருடைய பயன்பாட்டிற்காக MI 17 வகை 4 ஹெலிகொப்டர்கள் நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், 40 இந்திய விமானப்படை வீரர்கள் வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.