கண்டலமே ஹெடகாரயா” யானை உயிரிழப்பு
கண்டலமே ஹெடகாரயா” யானை உயிரிழப்பு ,6 மாதங்களுக்கும் மேலாக கண்டலம ஏரி பகுதியில் சிகிச்சை பெற்று வந்த ‘கண்டலமே ஹெடகாரயா’ யானை இன்று (13) பிற்பகல் உயிரிழந்தது.
25 முதல் 30 வயதுக்குட்பட்ட இந்த யானையின் முன்னங்கால் துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு உள்ளாகியதன் காரணமாக
கடந்த சில மாதங்களாக பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வந்திருந்தது.
மனித-யானை மோதலின் விளைவாக இந்த காட்டு யானை பல சந்தர்ப்பங்களில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருந்தது.
இந்த யானையின் உயிரைக் காப்பாற்ற வனவிலங்கு அதிகாரிகள் பல்வேறு வகையான சிகிச்சைகளை மேற்கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







