Category: பிரித்தானிய செய்தி
பிரித்தானிய செய்தி ஜனநாயகத்தை உலகிற்கு பறை சாற்றிய நாடாக பிரிட்டன் உள்ளது .அதிக இலங்கை தமிழர்கள் வசிக்கும் நாடு பிரித்தானியாவில் அதிக தமிழ் செய்திகள் ஊடகங்கள் உள்ளன .
பிரிட்டனில் 888பேர் பலி – அதிகரித்த மரணங்கள்
பிரிட்டனில் 888பேர் பலி – அதிகரித்த மரணங்கள்
பிரிட்டனில் கடந்த இருபத்தி நமக்கு மணித்தியாலத்தில் சுமார் 888 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் ஒரு ஒரு லட்சத்து 14 ஆயிரதிற்கு அதிகமானவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்
எதிர் வரும்நாட்களில் உயிர் பலிகள் அதிகரிக்குமென எச்சரிக்கை
விடுக்க பட்டிருந்த நிலையில் இந்த இழப்பு விகிதம் திகரித்துள்ளது
சில வாரங்களில் மொத்த மக்கள் உயிரிழப்பு எண்ணிக்கை நாப்பது ஆயிரத்துக்கு மேல் அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்
இன்று வெளியாகியுள்ள மருத்துவமனையில் மட்டும் உயிரழந்தவர்கள்
எண்னிக்கை இது எனின் ,வீடுகளில் இறந்தவர்கள் உயிழப்பும் இணைதல் இதைவிட இரண்டு மடங்கு அதிகமாகலாம் என கருத படுகிறது

பிரிட்டனில் 7,500 பேர் பலி- செத்து மடியும் வயோதிபர்கள்
பிரிட்டனில் 7,500 பேர் பலி- செத்து மடியும் வயோதிபர்கள்
பிரிட்டனில் வயோதிப மடங்களில் பிள்ளைகளினால் கைவிட பட்ட நிலையில் வசித்து வந்த சுமார் 7,500
பேர் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது
3,084 வயோதிபர்கள் பராமரிப்பு நிலையங்கள் கொரனோ நோயின் தாக்குதலுக்கு சிக்கின,
இதில் 214 நிலையங்கள் பலமாக பாதிக்க பட்டன ,கடந்த மாசி ஐந்தாம் திகதி வரையிலான புள்ளி விபரங்கள் இந்த பலி
எண்ணிக்கியாகும் ,அதன் பின்னர் இதே சரி தொகையில் இறந்திருக்கலாம் என தெரிவிக்க படுகிறது
பிரிட்டனில் குறித்த நோயில் சிக்கி வயோதிபர்கள் பலியாகி வருகின்றனர் என்ற செய்தி கசிய விடப் பட்டதன் பின்புலத்தில் இந்த விடயம் மறைந்துள்ளதும் அவை இப்பொழுது வெளியிட பட்டுள்ளது
அரசு முன்னரே மக்கள் இறந்த விடயத்தை தெரிந்து வைத்து படிப்படியாக இப்பொழுது அதனை வெளியிட்டு வருகின்றனர் என்ற குற்ற சாட்டுக்கள் முன் வைக்க படுகின்றன
எனினும் அரசு கூறும் இந்த தகவலை விட உயிர் பலிகள் இரட்டிப்பாக இருக்க கூடும் என்ற கருத்து வலுத்து வருகிறது
மருத்துவமனைகள் தொடர்ந்து நோயாளர்களினால் நிரம்பி வழிகிறது ,பிணங்கள் வைப்பதற்கும் இடம் இன்றி பிரிட்டனிலும்
அரசு தினறி வருகின்ற செய்திகள் தொடராக வெளியாகிய வண்ணம் உள்ளன ,
அது தொடர்பான காட்சி படங்கள் அங்கு பணிபுரியும் நபர்களினால் வெளியிட பட்டு வருகின்றதையும் அவதானிக்க முடிகிறது
கடந்த தினம் பிரிட்டனில் 867 பேர் பலியாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது,மேலும் நாற்பதாயிரம் பேர் வரும் சில
தினங்களுக்குள் பலியாவர்கள் என பிரபல, தொற்று நோய் ஆராய்ச்சியாளார் தெரிவித்துள்ளார்

பிரிட்டனில் 58 மிலியனை லொத்தரியில் அள்ளி சென்ற அதிஷ்டசாலி
பிரிட்டனில் 58 மிலியனை லொத்தரியில் அள்ளி சென்ற அதிஷ்டசாலி
பிரிட்டனில் நேற்று வெள்ளி இடம் பெற்ற யூரோ மில்லியன் குழுக்களில் நபர் ஒருவர் ஐம்பத்தி எட்டு மில்லியன் பவுண்டுகளை அள்ளி சென்றுள்ளார்
16, 28, 32, 37, and 45. என்ற வெற்றி இலக்கத்தை பெற்று கொண்ட அவர் இந்த இமாலய சாதனையை பெற்றுள்ளார்
வெற்றி இலக்கம் அதன் தொகை அறிவிக்க பட்டுள்ள பொழுதும் இதுவரை வெற்றியாளர் யார் என்பது தொடர்பாக தெரியவரவில்லை .
இவ்வாறு பெரும் தொகையினை பெற்று கொள்ளும் நபர்கள் ,24 மணித்தியாலம் கழித்தே தம்மை அடையாள படுத்தி கொள்கின்றனர் ,
காரணம் அதற்கு உள்ளாக லொத்தரி நிறுவனம் தவறாக இலக்கம் வீழ்த்த பட்டது என கூறி மாற்றி விடலாம் என்ற அச்சம் ,
இவ்வாறு சில விடயங்கள் நடந்தேறியுள்ள நிலையில் மக்கள் இவ்விதம் தம்மை தாமதமாக அறிவித்து உரிமை கோரலில் ஈடுபடுவது வழமையான ஒன்றாகி மாறிப் போயுள்ளது

பிரிட்டனில் 847 பேர் பலி -அதிகரிக்கும் மரணங்கள் அச்சத்தில் மக்கள்
பிரிட்டனில் பேர் பலி 847பேர் -அதிகரிக்கும் மரணங்கள் – அச்சத்தில் மக்கள்
பிரிட்டனில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு
மணித்தியாலத்தில் 847 பேர் பலியாகியுள்ளார்( மருத்துவ மனைக்கு வெளியில் இறந்தவர்கள் புள்ளி விபரம் இதில் இணைக்க படவில்லை – அதை இணைத்தல் இழப்பது அதிகம் )
மேலும் இதுவரை இடம்பெற்ற உயிர் பலி எண்ணிக்கை14,576ஆக உயர்வடைந்துள்ளது
இதுவரை சுமார் கிட்ட தட்ட ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் பாதிக்க பட்டு தொடர் சிகிச்சைக்கு உள்ளாகி வருகின்றனர்
பெல்ஜியத்தில் 306 பேர் பலியாகியுள்ளனர் ,5,136 மொத்த இறப்பு எண்ணிக்கை ஆக உயர்வடைந்துள்ளது
அதே போல ஜெர்மனியில் 46 பேர் பலியாகியுள்ளனர் மொத்த இறப்பு எண்ணிக்கை 4,098 ஆக உயர்வடைந்துள்ளது
சீனாவில் 1,290 பேர் பலியாகியுள்ளனர் ,4,632 மொத்த உயிர்பலியாக உள்ளது
அமெரிக்காவில் ஒரே நாளில் 4,491 பேர் பலியாகியுள்ளனர் 678,210 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து உயிர் பலிகள் அதிகரித்த வண்ணம் உள்ளது
பிரிட்டனில் எதிர்வரும் மே மாதத்திற்குள் 40, ஆயிரம் பேர் பலியாகலாம் என தொற்று நோய் நிபுணர்கள் தற்போது
தெரிவித்துள்ளன, அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது வருகின்றனர்
மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என வலியுறுத்த பட்டுள்ளது

வீடு வீடாக சென்று மக்களுக்கு உணவு வழங்கிய இளவரசர் கரி,மேகன் -video
வீடு வீடாக சென்று மக்களுக்கு உணவு வழங்கிய இளவரசர் கரி,மேகன் -video
பிரிட்டன் இளவரசர் கரி மற்றும் அவரது பாரியார் மேகனுடன் இனைந்து
லக் டவுன் செய்ய பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு வீடு வீடாக சென்று உணவு வழங்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன
இளவரசராக இருந்த பொழுதும் அதனை உதறி எறிந்த அவர் சாதாரண
மக்கள் வாழவிற்கு சென்று இவ்வாறு மக்களுக்கு உதவி புரிந்து வருவது பார்ப்பவர்களை வியக்க வைத்துள்ளது
இளவரசி டயானாவின் அதே குணம் மகனின் உள்ளதை இந்த காட்சிகள்
வெளிப் படுத்துகின்றன ,டயானா மக்களின் செல்வாக்கு மிக்க அன்பையும் ,ஆதரவையும் பெற்றவர் என்பது குறிப்பிட தக்கது

பிரிட்டனில் 870 பேர் மரணம் -ஒருலட்சம் பேர் பாதிப்பு
பிரிட்டனில் 870 பேர் மரணம் -ஒருலட்சம் பேர் பாதிப்பு
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 870 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் இதுவரை 13,729 பேர் பலியாகியுள்ளனர்
மருத்துவ மனைகள் தவிர்த்து அதற்கு வெளியே 1500 பேர் பலியாகியுள்ளதான புள்ளி விபரங்களும் வெளியாகியுள்ளன
இதுவரை100,000 திற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்
,.எதிர்வரும் நாட்களில் நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பலியாக கூடும் என தெரிவிக்க படுகிறது .
நோயானது வேகமாக பரவி வருவதனால் எதிர்வரும் மாதம் வரை லக்கடவுன் தொடர்கிறது .
மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என வலியுறுத்த பட்டுள்ளது

பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 801 பேர் பலி
பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 801பேர் பலி
பிரிட்டனில் கொரனோவில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 801 பேர் பலியாகியுள்ளனர் ,
இதுவரை 13,000 பேர் பலியாகியுள்ளனர் .இந்த நோயின் தாக்குதலில் சிக்கி 89,000பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
ஸ்பெயினில் 324 பேர் பலியாகியுள்ளனர் ,மொத்த இறப்பு என்ணிக்கை 18,579 ஆக பதிவாகியுள்ளது
பெல்ஜியத்தில் 283 பேர் பலியாகியுள்ளனர் ,மொத்த இறப்பு என்ணிக்கை 4,440 ஆக பதிவாகியுள்ளது
தொடர்ந்து பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் உயிர் பலிகள் அதிகரித்துள்ளன ,
அமெரிக்காவில் ஒரே நாளில் 2,200 க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் ,ஆறு லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
அமெரிக்காவில் வேகமாக பரவும் இந்த நோயினை தடுக்க மருந்து மற்றும் முக கவசங்கள் இன்றி மருத்துவர்கள் ,தாதி மார்கள் பணி புரியும் பேரவலம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

லண்டன் -Croydon னில் போலி கொரனோ சோதனை கருவி விற்ற மருந்தகம் அடித்து பூட்டு
லண்டன் -Croydon னில் போலி கொரனோ சோதனை கருவி விற்ற மருந்தகம் அடித்து பூட்டு
தெற்கு லண்டன் ,Croydon பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்றில் போலியான கொரனோ சோதனை கருவிகளை விற்பனை புரிந்த
மருந்தகம் ஒன்று காவல்துறையினரால் முற்றுகைக்கு உள்ளாக்க பட்டு அடித்து மூட பட்டுள்ளது
உரிய ஆதாரங்கள் ,அனுமதி இன்றி மேற்படி போலிக் கருவிகளை விற்று வந்த நிலையில் இந்த மருந்தகம் அடித்து பூட்ட பட்டுள்ளது .
மேலும் குறித்த கடையில் இருந்து இருபதாயிரம் பவுண்டுகளும் பணமும் மீட்க பட்டுள்ளது .
ஐரோபியா ,பிரிட்டன் ,மருத்துவ அனுமதி இன்றி இந்த கருவிகள் விற்பனை செய்ய பட்டுள்ளதாகவும் ,அவை போலியானை எனவும் தெரிவிக்க பட்டுள்ளது
சீனாவானது கள்ள சந்தையில் இவ்வாறான போலியான கருவிகளை தாராளமாக விற்று வருகிறது ,அவையே இப்பொழுது இவ்வாறான
மருந்தகங்கள் மூலமும் விற்பனை புரிய பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது
இதுவரை பல நாடுகளில் கொரனோ சோதனை கருவிகள் இல்லாது தவித்து வருவதும் ,போலியானவற்றை வாங்கி ஏமாற்றம் அடைந்துள்ளதும் தெரிந்ததே ,


பிரிட்டனில் கடைகளுக்கு ஆப்படித்த இன்சூரன்ஸ் நிறுவனம் =தவிக்கும் தமிழர்கள்
பிரிட்டனில் கடைகளுக்கு ஆப்படித்த இன்சூரன்ஸ் நிறுவனம் =தவிக்கும் தமிழர்கள்
பிருத்தானியாவில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குத்தல் காரணமாக முக்கால் வாசி கடைகள் பூட் பட்டுள்ளன .
இவ்வாறு அரசின் உத்தரவுக்கு அமைய பூட்ட பட்ட கடைகளுக்கு காப்புறுதி செலுத்த பட்டு வந்தன ,அவ்வாறு செலுத்த பட்ட
காப்புறுதி நிறுவனங்கள் தற்போது பல கடைகளை அம்போ என விட்டுள்ளன .
அதில் இவ்வாறு பூட்ட படுவதால் தமக்கு முழு அளவில் காப்புறுதி வழங்கிட
இயலாது எனவும் ,சில நிறுவனங்களோ முற்று முழுதாக தந்திட இயலாது எனவும் கையை விரித்துள்ளனவாம் .
ஆனால் அரசோ சிறு ,மற்றும், பெரும் முதலாளிகளுக்கு இழப்பப்பை வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது
ஆனால் காப்புறுதி நிறுவனங்கள் தமக்கு இதனை வழங்கிட இயலாது என கையை விரித்து வருகின்றன ,எனிநும் பாதிக்க பட்ட
பொது நடைமுறையை கருத்தில் கொண்டு இவர்களுக்கு அரைவாசி இழப்பு என்றாலும் வழங்க வேண்டும் என வலியுறுத்த பட்டு வருகிறது
இதனால் தலையில் துண்டை போட்டு உட்க்காந்து இருக்கும் தமிழர் நிறுவனங்கள் சில ,

பிரிட்டனில் தமிழர்கள் உள்ளிட்ட 778 பேர் பலி
பிரிட்டனில் தமிழர்கள் உள்ளிட்ட 778 பேர் பலி
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த
இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 778 பேர் பலியாகியுள்ளனர் .
இதுவரை
12,107 பேர் பலியாகியுள்ளனர் ,93873 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
இறந்தவர்களில் மூன்று யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர்களும் உள்ளடக்க படுகின்றனர்
பெல்ஜியம் 254 பேர் பலியாகியுள்ளனர், அதேபோல 300 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் தொடர்ந்து மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது

பிரிட்டன் நான்கு வாரத்திற்கு அடித்து பூட்டு – அறிவித்த அரசு
பிரிட்டன் நான்கு வாரத்திற்கு அடித்து பூட்டு – அறிவித்த அரசு
பிரிட்டனில் நிலவி வரும் கொரனோ நோயின் தாக்குதல் உயிர் பலிகளை
அடுத்து எதிர்வரும் நான்கு வாரங்களிற்கு மேலும் அடித்து பூட்ட படுவதாக அரசு அறிவித்துள்ளது
நோயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு இவ்வாறு மக்களை
வீடுகளை விட்டு வெளியில் நடமாட விடாது தடைகள் விதிப்பதன் மூலமே
காப்பாற்றிட முடியும் என்ற நிலை ஏற்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
அமைச்சர்களுடன் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து இந்த முடிவு மேற்கொள்ள பட்டுள்ளது .

கொரனோவில் இருந்து பிரிட்டன் பிரதமர் குணமாகி வீடு சென்றார்
கொரனோவில் இருந்து பிரிட்டன் பிரதமர் குணமாகி வீடு சென்றார்
பிரிட்டன் பிரதமர் போரில் ஜோன்சன் கொரனோ நோயின் ஆபத்தில்
இருந்து விடு பட்டு தற்போது மருத்துவ மனையில் இருந்து வீடு சென்றுள்ளார்
இவரை இவரது குடும்பத்தினர் வரவேற்பு வழங்கி அழைத்து சென்றனர் .
சாவின் விளிம்பில் இருந்து இவர் மீண்டு மீள் பிறப்பு எடுத்து வீடு திரும்பியுள்ளதாக
குடும்ப உறவினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்,இவர் வீடு சென்றது
மக்களுக்கு பெரும் ஆறுதலை வழங்கியுள்ளதாக சமூக வலைத் தளங்களில் மக்கள் கருத்துக்கள் பகிர பட்டு வருகின்றன

பிரிட்டனில் கொரனோ தாக்குதல் 710பேர் பலி
பிரிட்டனில் கொரனோ தாக்குதல் பேர் பலி
பிரிட்டனில் அதி வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்து நான்கு மணித்தியாத்தில் 710
பேர் பலியாகியுள்ளனர் மொத்த இறப்பு எண்னிக்கை 10,585ஆக உயர்ந்துள்ளது .
மேலும் இதுவரை இந்த நோயினால் பாத்திக்க பட்டு67,000சிகிச்சை பெற்று வருகின்றனர் ,
ஸ்பெயினில் இன்று 366 பேர் பலியாகியுள்ளனர் .அதுபோல நெதர்லாந்தில் 94 பேர் பலியாகியுள்ளனர் ,மொத்த இறப்பு எண்ணிக்கை 2,737 ஆக அதிகரித்துள்ளது ,25,587 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
அமெரிக்காவில் 533,115 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,இருபதாயிரம் பேர் வரை மரணம் அடைந்துள்ளனர்
பிரான்சில் 129,654 பேர் பாதிக்க பட்டுள்ளனர் இதுவரை 13,832 பேர் மரணமடைந்துள்ளனர் ர் ,
இத்தாலியில் 152,271 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,இங்கும் இதுவரை 19,468 பேர் பலியாகியுள்ளனர்
அதிக உயிர் பலி இடம் பெற்ற நாடாக அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது, இங்கே தான் அதிக தொற்றுக்கு மக்கள் உள்ளாகியுள்ளனர்
பிணங்களை வைப்பதற்கு இடம் இன்றி அரசு பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது,இதே நிலை பிரிட்டனிலும் தொடர்கிறது
பணிக்கு செல்ல மருத்துவ ஊழியர்கள் மறுத்து வருகின்றனர் ,பிரிட்டன் சுகாதார மந்திரி மன்னிப்பு கேட்ட பொழுதும் ஊழியர்கள்
அதனை ஏற்க மறுத்து வருகின்றனர் ,அரசிடம் பொருட்கள் இல்லாததே இதற்க்கு காரணம் என தெரிவிக்க படுகிறது

பிரிட்டனில் அபாயம் -தீர்ந்த கொரனோ சாதனங்கள் – வேலைக்கு செல்ல மறுக்கும் மருத்துவ ஊழியர்கள்
பிரிட்டனில் அபாயம் -தீர்ந்த கொரனோ சாதனங்கள் – வேலைக்கு செல்ல மறுக்கும் மருத்துவ ஊழியர்கள்
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதல் காரணமாக PPE ,
முக கவசங்கள் ,கையுறைகள் ,மற்றும் கொரனோவின் முன் தடுப்பு பாதுகாப்பு பொருட்கள் முடிவுற்றுள்ள நிலையில் மருத்துவ
தாதிமார்கள் ,மருத்துவர்கள் ,மற்றும் அம்புலன்ஸ் சாரதிகள் போன்றவர்கள பணிக்கு செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர் .
இவ்வாறு பலநூறு ஊழியர்கள் பணிக்கு செல்ல மறுத்து வீட்டில் தங்கியுள்ளனர் ,தமக்கு உரிய பாதுகாப்பு அங்கிகள் ,கவசங்கள்
இல்லாத நிலையில் தாம் ஆபத்தான நோயாளர்களுடன் பணியில் ஈடுபட முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்
விரைவாக வினியோகத்தை மேற்கொள்ளும் படி கேட்ட பொழுதும் ,குறித்த பொருட்களுக்கு தட்டு பாடு நிலவுவதால் அரசிடம்
சேமிப்பில் ஏதும் இல்லை ,அதனால் தற்பொழுது பேராபத்து நீடிக்கிறது
இதனால் மக்கள் பெரும் பீதியில் , உறைந்துள்ளனர் ,நோயால் பாதிக்க படுபவர்களுக்கு பனடோல் மாத்திரைகளே வழங்க படுகின்றன ,
எனினும் இந்த மாத்திரைகளினால் எவ்வித பயனும் இல்லை எனவும் மருத்துவமனை செல்லும் நோயாளர்கள் அங்கேயே இறக்கும் நிலை
ஏற்படுவதாக பாதிக்க பட்டு சிகிச்சை பெற்று வரும் தமிழர்கள் ,தமது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்
எனவே மக்களே வீடுகளை விட்டு வெளியில் செல்லாதீர்கள் ,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம் ,அரசு இதனை தொடர்ந்து கூறிய வண்ணம் உள்ளது

லண்டனில் கொரனோ – வீதியில் நடமாடும் மக்கள் – தண்டம் வழங்கும் பொலிஸ்
லண்டனில் கொரனோ – வீதியில் நடமாடும் மக்கள் – தண்டம் வழங்கும் பொலிஸ்
பிரிட்டனில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லாதீர்கள் என அரசு வேண்டுதல் விடுத்து வருகிறது ,
அதனை அலட்சியம் செய்து மக்கள் சிறுவர்களுடன் பார்க்கில் ,குந்தி உள்ளதும் ,உடல் பயிற்சிகள் செய்வதும்
இயல்பான ஒன்றாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது
நாள் தோறும் பல நூற்று கணக்கில் மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர் .அந்த செய்திகளை எல்லாம் பார்வையிட்டு இந்த மக்கள்
தமக்கு ஒன்றும் தெரியாதது போல இவ்விதம் இயல்பாக நடமாடி வருவது
பார்ப்பவர்களை கொதிக்க வைக்கிறது
வரும் நிமிடம் யார் உயிரோடு இருப்பார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் மக்கள் இவ்விதம் செயல் படுவதை என்னவென்று கூறிட ..?
மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன ,மக்களை காப்பாற்றும் மருத்துவர்கள் இறந்தவண்ணம் உள்ளனர் ,
நாடு பெரும் அவலத்தில் சிக்கி தவிக்கிறது
மேலும் பல்லாயிரம் மக்கள் பலியாக கூடுமென அபாய அறிவிப்புக்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது
இவ்வாறான சூழலில் இந்த மக்கள் இவ்விதம் நடந்து கொள்வது ,மனித
மனங்களின் சிந்தனைகள் மீது சீற்றம் கொள்ள வைக்கிறது அல்லவா ..?

சொந்த மக்களை ஏற்றி வர இந்தியா பறந்த 12 பிரிட்டன் விமானங்கள்
சொந்த மக்களை ஏற்றி வர இந்தியா பறந்த 12 பிரிட்டன் விமானங்கள்
இந்தியாவில் கொரனோ வைரஸ் காரணமாக விமான பயணங்கள் இரத்து
செய்ய பட்டன ,இதனால் உல்லாச பயணம் சென்ற பல நூறு மக்கள் சிக்கி கொண்டனர் .
இதனை அடுத்து பிரிட்டனில் இருந்து பன்னிரெண்டு சிறப்பு விமானங்கள் அனுப்பி வைக்க பட்டுள்ளன
இவை இந்தியாவின் New Delhi, Mumbai, Goa, Chennai, Hyderabad, Kochi,
ஆகிய பகுதி விமான நிலையங்கள் மூலம் அழைத்து வர படுகின்றனர்
அங்கு தவிக்கும் அத்தனை பயணிகளையும் நாம் அழைத்து
வருவோம் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

பிரிட்டனில் 917 பேர் பலி -1,559 பேர் ஆபத்தான நிலையில்
பிரிட்டனில் 917 பேர் பலி -1,559 பேர் ஆபத்தான நிலையில்
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற
கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 917 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இந்த
நோயால் ஆபத்தான நிலையில் 1,559 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
.இதுவரை இடம்பெற்ற இறப்பு விகிதம் 9,875 ஐ எட்டியுள்ளது
அது தவிர 78,991 தொடர் சிகிச்சைக்கு உள்ளாகி வருகின்றனர் .தொடர்ந்து
மரணத்தின் கோர தாண்டவம் அதிகரித்து செல்வதற் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது

கொரனோ தாக்குதல் பிரிட்டனில் 1,038 பேர் பலி
கொரனோ தாக்குதல் பிரிட்டனில் 1,038பேர் பலி
பிரிட்டனில் கடந்த இருபத்து நான்கு மணித்தியாலத்தில் வெளியான சுகாதார அமைச்சின் தகவலின்
படி கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி 1,038பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இதுவரை இடம்பெற்ற மொத்த பலி எண்ணிக்கை 9,016 ஆக அதிகரித்துள்ளது
அறுபத்தி ஐந்தாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .எதிர் வரும் நாட்களில் மேலும் இதன் உயிர் பலிகள் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது
ஆபத்தான நிலையில் சுமார் எட்டாயிரம் பேர் உள்ளனர் ,இவர்கள் அனைவரும் செயற்கை சுவாசம் பெற்ற வண்ணம் உள்ளனர்
,இவ்வாறு பெறுபவர்கள் அவர்களின் இறுதி நாட்கள் எண்ணப்படும் காலமாக மாற்றம் பெற்றுள்ளது ,
இவர்களது சுவாச காற்று வயர்கள் கழற்ற பட்டு விட்டால் அது மரணமாகவே அமையும் என்பது பாதிக்க பட்டவர்கள் கூறும் கருத்துக்களாக உள்ளன
கொரனோ ஆபத்தில் இருந்து மீண்ட பிரிட்டன் பிரதமர்
கொரனோ ஆபத்தில் இருந்து மீண்ட பிரிட்டன் பிரதமர்
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரனோ நோயால் பாதிக்க பட்டு
ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார்
கடந்த மூன்று நாட்கள் அதி தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசத்திற்கு மாற்ற பட்டார் ,
தற்பொழுது உயிர் ஆபத்தில் இருந்து மீண்டு
இயல்பான சாதாரன மருத்துவ மனை வாட்டுக்கு மாற்றம் பெற்றுள்ளார் ,
மேற்படி சம்பவமானது இவர் ஆபத்து நிலையில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
உடல் தேறி நலமுடன் மீண்டு வரவேண்டும் என உலக நாடுகளின் தலைவர்கள்
மாற்று மக்கள் வேண்டுதலாக இருந்ததது ,மேற்படி செய்தி அந்த மக்கள் மனதில் சற்று மகிழ்வை ஏற்படுத்தியுள்ளது

பிரிட்டனில் மே மாதம் வரை லக் டவுன் – தொடர்கிறது தடை நீடிப்பு
பிரிட்டனில் மே மாதம் வரை லக் டவுன் – தொடர்கிறது தடை நீடிப்பு
பிரிட்டனில் எதிர் வரும் வைகாசி மாதம் வரை லக் டவுன் செய்யும் நிலைக்கு அரசுக்கு செல்கிறது ,
அமைச்சர்களுடன் இடம் பெற்ற இந்த கலந்துரையாடலின் பின்னர்
தொடர்ந்து அதிகரித்து செல்லும் உயிர் பலிகளை கட்டு படுத்த
மேலும் இந்த தடை எதிர் வரும் மூன்று வாரங்களுக்கு நீடிக்க படவுள்ளதாக அறிவிக்க படுகிறது
கடந்த தினம் உயிர் பலிகள் அதிகரித்த நிலையில் இந்த நெருக்கடியான
நிலைக்கு அரசு தள்ள பட்டுள்ளது ,ஆளும் பிரதமர் ஜோன்சன் தொடர்ந்து
அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ள நிலையில் இந்த அதிரடி நடவடிக்கையை அரசு மேற்கொள்கிறது
அப்பாவி மக்கள் பல்லாயிரம் பேர் வருமானம் இழந்த நிலையில் தவித்து வருகின்றனர் .
மேலும் இந்த லக்கடவுன் நடவடிக்கையால் அரசுக்கு பல பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது ,
அதனை அடுத்து அரசு திறந்திட துடிக்கிறது .ஆனால் கொரனோ அதனை விடாது தடுக்கிறது







