சினிமாவுக்குள் மூழ்கும் சீமான்களுக்கு
Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

சினிமாவுக்குள் மூழ்கும் சீமான்களுக்கு

சினிமாவுக்குள் மூழ்கும் சீமான்களுக்கு

குரங்கிலிருந்து மனிதன்
பிறந்தானென்று
கூர்ப்பு விளக்குது – திரை
அரங்கினில் நின்று
தொங்குவதைப் பார்க்க
அதுவும் விளங்குது.

வருசா வருசம்
விஜய்யும் அஜித்தும்
திரையில் வருவினம். – இங்கு
வலியோடு வாழும் ஈழத்
தமிழன் வாழ்வுக்கு
என்ன தருவினம்?

கலையை மதிப்பதும்
அதனை ரசிப்பதும்
அவரவர் உரிமைகள் – அதற்குன்
நிலையை அழிப்பதும்
நினைவை இழப்பதும்
வாழ்விலென்ன பெருமைகள்.

ரொக்கெட் செலுத்தியும்
விக்கற் வீழ்த்தியும்
பொக்கெற்றை நிரப்புறார்கள் – நீங்கள்
டிக்டொக்கை அமத்தியும்
சீக்ரட்டை பத்தியும் ஏன்
மாக்கெற்றை இழக்கிறீர்கள்.

திரிஷா பிறநடிகைகள்
பெரிதா செய்ததை யார்க்கும்
தெரிந்தால் சொல்லுங்கள் – அல்லது
ஒரிசா பாலுவையும்
தெரேசா அன்னையையும் முடிந்தால்
உசிரா வணங்குங்கள்❗

-பிறேமா(எழில்)-

கண்ணீர் அஞ்சலி
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி

நெஞ்சுக்குள் நிற்கின்ற பேரொளி – இவன்
நேயத்தில் வீசிடும் கதிரொளி
அன்பிலே கலங்கிடும் கண்விழி
அஞ்சா பேசிடும் தமிழ் மொழி

கொடை கொட்டியே பொழிந்திடும் பெருமழை
கொடி நாட்டியே எழுந்திட்ட பெருமலை
தடை தாண்டியே ஓடிய பெரும் அலை
தானத்தில் இவனே பெரும் தலை

வானத்தில் ஓடிய பெரும் முகில்
வாடியே வீழ்ந்தான் ஏன் துயில்
ஆழ் மனம் மறக்க மறுக்கிறதே – உன்
அன்பில் நொடிகளும் துடிக்கிறதே

இத்தனை வேகத்தில் ஏன் மறைந்தாய்
இந்த விழிகளில் நீர் ஏன் வைத்தாய்
உச்சத்தில் ஆடிய பெரும் முகில் – இன்று
உருகுதே பார் ஐயா உடல் தீயில்

கத்தியே அழுகிறோம் கண் திறவாய்
கண்ணீரை வந்து நீ துடைப்பாய்
என்றுன்னை இனி நாம் காண்போம்
ஏனோ இறைவா நீ பறித்தாய் ..

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 21-10-2023
காந்தி மாமா பிரிவின் துயரில் கண்ணீர் சமர்ப்பணம்
( திருவையாறு இரத்தினபுரம்)

ஓடிஓடி வாழ்ந்தபோதும் ஓய்ந்திடாத கல்வி
Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

ஓடிஓடி வாழ்ந்தபோதும் ஓய்ந்திடாத கல்வி

ஓடிஓடி வாழ்ந்தபோதும் ஓய்ந்திடாத கல்வி

குண்டு மழை நடுவிலும்
கொள்கையோடு கற்றோம் – உலகம்
கண்டு கொள்ளா நிலையிலும்
கல்வியினைப் பெற்றோம்.

மண்டை பிளக்கும் வெயிலிலும்
மரநிழலில் கற்றோம் – கொடும்
சண்டை நடந்த நேரத்திலும்
சலிக்காமல் கற்றோம்.

பராலைற் வெளிச்சத்திலும்
படிப்பினைத் தொடர்ந்தோம் – வளம்
இராத காலங்களிலும்
வல்லோராய் வந்தோம்.

உயிர்காத்து கற்பித்தோர்க்கு
உயர் மதிப்பைக் கொடுத்தோம் – அன்று
உயிர் துறக்கும் வாழ்வினிலும்
உயர் மதிப்பெண்கள் எடுத்தோம்.

தந்தை தாயின் உதவியின்றித்
தனியாகச் சென்றோம் – நல்ல
சிந்தையுள்ள குருமாரைச்
சந்தித்ததால் வென்றோம்.

அண்டை நாட்டின் சதியினாலும்
அழுதழுது கற்றோம் – என்றும்
அன்றையநாள் கல்வி வாழ்வை
எப்படித் தான் மறப்போம்❗

-பிறேமா(எழில்)-

இளைஞரில்லா இலங்கை
Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

இளைஞரில்லா இலங்கை

இளைஞரில்லா இலங்கை

யுத்தமொன்று வந்ததனால்
மொத்த உறவும் பறந்தன.
முத்தமிட்ட அன்னை மண்ணைச்
சத்த மின்றிப் பிரிந்தன.

சொத்துப்பத்து ஈட்டவென்றும்
சொந்த நாட்டைத் துறந்தனர்.
நித்திரையை மறந்தங்கே
நித்தம் உழைப்பில் இறந்தனர்.

புத்திஜீவி கல்விமான்கள்
பிற நாடுதேடி ஓடினம்.
பத்தியெரியும் வயிற்றுடனே
பலர் குத்தியிங்கு முறியினம்.

கலைஞர் இளைஞர் கன்னிகளும்
கனடாக் கனவில் மிதக்கினம்.
அலைகள்போல அள்ளுப்பட்டு
அங்கே போக நினைக்கினம்.

இக்கரைக்கு அக்கரையென்று
இருந்ததெல்லாம் பறக்குதாம்.
சக்கரையில்லாப் பொங்கல்போல
சேர்ந்தபிறகு வெறுக்குதாம்.

செத்த வீட்டில் பங்குகொள்ளச்
சொந்தங்களும் இருக்காது.
சுத்தியுள்ள சாமி தூக்கப்
பக்தர்களும் கிடைக்காது.

பெத்தவர்க்குக் கொள்ளிவைக்கப்
பிள்ளை ஒன்றும் இருக்காது.
புத்தருக்கு விகாரைகட்ட – இனி
இங்கு போராட்டமும் நடக்காது.

-பிறேமா(எழில்)-

Posted in கவிதைகள்

பாலச்சந்திரன்

பாலச்சந்திரன்

பாலச்சந்திரன்
பாரே வியந்த தலைவன் வம்சத்தின்
பால்மணம் மாறாத பாலகன்.

தாழ்வே இல்லாக் கல்வியில் சிறந்த
தமிழின வருங்கால நாயகன்.

வாழச் சிறந்த தமிழீழ மண்ணில்
வாசம் வீசவேண்டிய சந்தணம்.

ஆளச் சிறந்த அரசன் குடும்பத்தின்
ஆகச் சிறந்த அறிவுச் சுந்தரம்.

மா தவம் செய்து மதிவதனி மங்கை
மகிழ்வோடு பெற்றெடுத்த மகவு.

பாதகம் செய்த பாவியர் பிடியிலும் இறுதிப்
பார்வையில் எத்தனை கனவு.

-பிறேமா(எழில்)

உன் நிலை என்ன
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உன் நிலை என்ன

உன் நிலை என்ன

சொந்த நிலம் பறிபோக
செந்தமிழன் விலை போக
வெந்து இங்கு வாழ்க
வேதனையில் நோக

மூத்த குடி நாங்கள் என்று
முன்னே பலர் சொன்னார் -அட
மூத்திரம் பெய்துவிட
முன்னே படை காவலா

கோத்திரத்தில் இங்கு உந்தன்
கொள்கை என்னவோ
கொடும் பகைவன் செயல் இழக்கும்
நிலை என்னவோ

மாற்று பகை நகர்வில் உன்
மடை என்னவோ
மறு மலர்ச்சி காண
உன் நிலை என்னவோ ..?

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-09-2023

தியாகத்துக்கான காவடி தமிழர்
Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

தியாகத்துக்கான காவடி தமிழர்

தியாகத்துக்கான காவடி தமிழர்

தியாகத்துக்கான காவடி தமிழர்
தாயகத்தின் காவடி.
மனக்காயத்தோடு உறங்கியவனின்
மரியாதைக்கான காவடி.

கடவுளுக்கான காவடி மக்கள்
கண்ணீரின் காவடி.
நினைவுகளைச் சுமந்தை செல்லும்
நெஞ்சங்களின் காவடி.

திலீபனுக்கான காவடி தேச
வீரனுக்கான காவடி.
வலியோடு நோன்பிருந்தவனுக்காக
வரலாற்றுக் காவடி.

அகிம்சைக்கான காவடி பெரும்
அநீதிக் கெதிரான காவடி.
வம்சங்கள் செடில் குத்தியாடும்
விடுதலைக்கான காவடி.

பருக நீர்மறுத்து பலநாள்
பசி இருந்தவனுக்கான காவடி.
முருகன் வாசலில் மூச்சுவிட்ட
புதல்வனுக்கான நாளடி❗

-பிறேமா(எழில்)-

அசானிக்காக உள்ளம் திறந்த மக்கள் குரல்கள்
Posted in கவிதைகள்

அசானிக்காக உள்ளம் திறந்த மக்கள் குரல்கள்

அசானிக்காக உள்ளம் திறந்த மக்கள் குரல்கள்

ஒத்த ரூபா இல்லா
ஓடி வந்தாயே – உன்
ஓடிந்தோடும் கண்ணீருக்கு
பரிசு ஏன் தாயே

கத்தும் கடல் கிழித்தெறிந்து
கரை வந்தாயே – மேடை
தட்டி தாளம் போட்டு
தாயே உன்னை பாடியதே

கொட்டி பகிர்ந்த அன்பின் முன்னால்
கொடும் துயரும் பறந்ததே
கட்டி தழுவி உன்னை
கரங்கள் கை கோர்த்ததே

எங்களது பிள்ளை என்றே -தமிழ்
எழுந்து நிற்கு தம்மா
என்றும் உன்னை கைவிடார்
எண்ணி கொள்ளம்மா

கனவு தாங்கி எழுந்தவளே
கண்ணீர் துடையம்மா
கடவுளானார் உன்னை காப்பர்
கண்ணே பாடம்மா

அழுவதற்கு மட்டுமா கண்கள்
இல்லை இல்லை அம்மா – நீ
ஆடி ஆடி பாட வேண்டும்
ஆடி பாடம்மா

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 14-008-2023

அசானியின் மறுபக்கம் இது தான் ,மக்கள் அவரை நம்பியதற்கு அவர் செய்த
செயல் இது தான் , உள்ளம் திறந்த மக்கள் குரல்கள் ,
இப்படித்தான் இதை பார்த்தல் நீங்களும் சொல்வீர்கள்

உன்னால் துடிக்கிறோம்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னால் துடிக்கிறோம்

உன்னால் துடிக்கிறோம்

உன்னால் துடிக்கிறோம்

உன்னால் துடிக்கிறோம்

துயர் தந்து விழி மூடி எங்கோடினாய் – விழி
துளியாலே நனைந்திட ஏன் வாடினாய்
அன்புக்கும் பண்புக்கும் முதலாகினாய்
அறத்திலே நீயோர் தாயாகினாய்

அன்பிலே நனைகின்ற சேயாகினாய்
அறத்திலே விளைகின்ற பயிராகினாய்
போதனை பொழிகின்ற அருவியானாய்
பொறுமைக்குள் உறைகின்ற பெருமையனாய்

கண்ணுக்குள் ஒளிர்கின்ற ஒளியுமானாய்
கருணையில் நீயோர் தெய்வமானாய்
பெருமைக்கும் உரிமைக்கும் நீயே ஆனாய்
பேறுகள் பேசும் நூலே ஆனாய்

உனக்குள்ளே எத்தனை ஆற்றல் கண்டேன்
உன் சுயசரிதை நூலால் நானே மிரண்டேன்
வழிகளை சொல்கின்ற துணிவு கொண்டாய் -எவர்க்கும்
வளையாத எழுதிடும் பெருமை கொண்டாய்

உன்னை தினம் நான் படிக்கையிலே
உள்ளத்தில் உயர்வான ஆற்றல் கொண்டேன்
உன் உடல் நான் வந்து பார்க்கையிலே
உதடு சிரித்து எனை அழைத்தாய்

சிந்தை இழந்தேன் சில நிமிடம் – நீ
சிகரமே உணர்ந்தேன் அவ் நிமிடம்
உனக்கும் எனக்குள்ள உறவாடல் -இந்த
உலகத்தில் எழுதாத புது பாடல்

உன்னாலே துயராகி வாடுகிறோம்
ஊன் உருகி நித்தம் தேய்கிறோம்
என்றுன்னை இனி நாம் காண்போம்
ஏங்கியே ஏங்கியே தவிக்கிறோம் ..!

சண்முக பெரியப்பா துயர் பிரிவில் ,
அவர்க்கு என் கண்ணீர் சமர்ப்பணம் .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-07-2023

உள்ளம் தர வா
Posted in கவிதைகள்

உள்ளம் தர வா

உள்ளம் தர வா

உள்ளம் தர வா, காதலித்து பார் ,கண்ணீர் பரிசாகும் ,கவலையே வாழ்வாகும், வசந்தம் இழந்து வாழ்வு தவிக்கும் ,கவிதை பார்

உன் பார்வை போதும்
Posted in கவிதைகள்

உன் பார்வை போதும்

உன் பார்வை போதும்

இதயம் உனை கண்டால்
இதயம் மெல்ல துடிக்குதே
இடரும் இங்கே மறந்து
இரு வாயும் சிரிக்குதே

உன்னை விழி பார்த்தே
உன்னை அள வெடுக்குதே
ஊட்டி கோடை கானலுக்கு
உன்னை அழைக்குதே

உன் பார்வை போதும்

வெட்கம் விட்டு நீ குலுங்க
வேர்வை கொட்டுதே
வேகும் இந்த வெயிலையும்
வேண்டி ஏற்குதே

பஞ்சு மெத்தை தேவையில்லை – உன்
பார்வை ஒன்றே போதுமே
பகலும் இங்கே இருளும்
பல கதை எழுதி மகிழும் .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 17-06-2023

உன்னை கொஞ்சம் மாற்று
Posted in கவிதைகள்

உன்னை கொஞ்சம் மாற்று

உன்னை கொஞ்சம் மாற்று

உன்னோடு எனக்கென்ன கோபம்
உள்ளத்தால் போடாத சாபம்
மண்ணோடு உடல் போகும் காலம்
மனம் வாடி அழாதே நீ பாவம்

பூவை தேடுதே வண்டு – அந்த
பூவுக்கு இதனால் வாழ்வுண்டு
புயல் இல்லா மழையுண்டோ
புன்னகை வாடா வாழ்வுண்டோ

வாழ்வில் இதெல்லாம் சரிபாதி – இந்த
வாழ்வே உருளுது இதனுடன் மோதி
நீயும் நானும் அகராதி – இதை
நீ உணர்ந்தால் துன்பம் போகும் பாதி

உன்னை கொஞ்சம் மாற்று

கல்லாய் மனதை வைக்காதே
கண்ணீரில் தினம் குளிக்காதே
முள்ளால் சொல்லை குற்றதே
முன்னே வாழ்வை தடுக்காதே

உன்னை கொஞ்சம் மாற்று
உன்னை கொஞ்சம் மாற்று
உள்ளம் தருகிறேன்
உனக்காய் வாழ்கிறேன்

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 28-05-2023

ஆர தழுவு
Posted in கவிதைகள்

ஆர தழுவு

ஆர தழுவு

உந்தன் சிரிப்பு என்னை மட்டும்
ஏனோ கொல்லுதோ
உன்னை மட்டும் எண்ண வைக்க
ஏனோ துடிக்குதோ

கள்ளம் இல்லா உந்தன் பேச்சு
காதில் ஒலிக்குதே
கண்கள் மட்டும் உன்னை சுற்றி
ஏனோ தேடுதோ

ஆர தழுவு

நீ சிரித்தால் நான் மகிழ்வேன்
சிந்தை கூறுதே
நித்தம் உன்னை பார்க்க மனம்
நித்தம் தேடுதே

உந்தன் பார்வை மட்டும் வந்து
என்னை கொல்லுதே
உன்னால் எந்தன் தூக்கம்
இன்று தொலையுதே !

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 26-05-2023

மகிழ்வாய் இருக்க விழித்து கொள்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

மகிழ்வாய் இருக்க விழித்து கொள்

மகிழ்வாய் இருக்க விழித்து கொள்

நீளும் இந்த இரவுக்குள்ளே
நினைவுகளை பகிர்வோமா
நீண்ட நாள் ஆசைகளை
நின்று கொஞ்சம் ருசிப்போமா

நாம் கண்ட கனவுகளை
நலமுடனே காண்போமா
நாள் எல்லாம் மகிழ்ந்திடவே
நலமோடு வாழ்வோமா

அசிங்கத்தில் பிறந்தோமே
அதை இன்று மறந்தோமே
ஆனாலும் நல்லவராய்
அகிலத்தில் உரைத்தோமே

சிந்தனையை சிறைவைத்து
சிகரத்தில் இருந்தோமே
சிறை உடைத்து பறந்திடவே
சிறகு இரண்டு தரிப்போமே

படைத்தவனோ வாழ்வினில
பாதி வாழ்வை சிறை வைத்தான்
பட்டு துயர் கழியு முன்னே
பாவி நாம் மூப்பானோம்

எது வரைக்கும் இத் துயரை
ஏற்று நாம் பயணிப்போம்
இன்றே நாம் விழித்து விட்டால்
இத்துயரில் நாம் எழுவோம் .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 21-05-2023

இறைவனை தேடு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

இறைவனை தேடு

இறைவனை தேடு

ஏழை சொல்லு ஏறாதடா – வலி
எவருக்கும் புரியாதடா
பார்த்து பார்த்து சிரிப்பாங்க
பல் இழித்து நகைப்பாங்க

விட்டு தள்ளடா – காலம்
விரைவில் வெற்றி பகிருமடா
நீயும் நானும் ஒன்னடா
நீர் விழியில் இல்லைடா

மனிதனை புரிஞ்சிக்க
மன்றில் நாடகம் நடக்குதடா
மாளிகையில் வாழும் போது
மனிதர் மட்டும் வையடா

சுய நல உலகத்தில
சூரியனும் உதிக்குதடா
சூடும் குளிரும்
சுழற்சியில் பகிருதடா

கால நிலை தான் வாழ்க்கை
கற்று தெரிந்தால் விடு செருக்கை
நீயும் நானும் மனிதனா
நின்மதி இப்போ இருக்கா

பதில் இல்லா அலைந்தாயே
படைத்தவன் தெளிய வைத்தேனே
இன்று என்ன செய்வாய்
இறைவனை தேடு இறைவனை தேடு .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 19-05-2023

கலங்காதே ஓடு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

கலங்காதே ஓடு

கலங்காதே ஓடு

ஏது செய்தாய் என்று இல்லை
எதையும் செய்யடா
எழுந்து வர வேண்டும் என்றால்
ஏற்று செய்யடா

போகும் பாதை பள்ளம் தான்
பொறுத்து கொள்ளடா
பொற்காலம் அமைக்க
போராடு சோராதடா

இழிந்தவர் இழியட்டும்
இன்றே விட்டு தள்ளடா
இன்றே உன்னை நம்பு
இறைவன் தருவான் தென்பு

சிந்தை கொஞ்சம் செதுக்கி
சிகரம் ஏறடா
அறியா விடயங்களை
அறிந்து கொள்ள முனையடா

பாதை வரும் தன்னால
பகை ஓடும் முன்னால
சோராத சோராத போராடு
சோற்றுக்காய் இப்போ ஓடு

நாளை உன்னை பாரும் வணங்கும்
நகலடித்து உனை பாடும்
இது தாண்டா வளர்ச்சி – பாரு
இன்று பெற்றாய் புகழ்ச்சி .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 14-05-2023

காதல் செய்வோம் வா|காதல் கவிதைகள் |காதல் சோக கவிதை
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

காதல் செய்வோம் வா|காதல் கவிதைகள் |காதல் சோக கவிதை

காதல் செய்வோம் வா|காதல் கவிதைகள் |காதல் சோக கவிதை

https://www.youtube.com/watch?v=I-zyD3gKCs4
கண்ணீர் துடை வெல்வாய் |சோக கவிதைகள் | காதல் சோக கவிதை
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

கண்ணீர் துடை வெல்வாய் |சோக கவிதைகள் | காதல் சோக கவிதை

கண்ணீர் துடை வெல்வாய் |சோக கவிதைகள் | காதல் சோக கவிதை


https://youtu.be/dSvKfDwEUZM
காதல் நீயே புனிதம்|காதல் கவிதை|வன்னி மைந்தன் கவிதை |tamil kavithai|tamil kavithaikal
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

காதல் நீயே புனிதம்|காதல் கவிதை|வன்னி மைந்தன் கவிதை |tamil kavithai|tamil kavithaikal

காதல் நீயே புனிதம்|காதல் கவிதை|வன்னி மைந்தன் கவிதை |tamil kavithai|tamil kavithaikal

https://youtu.be/qrRGAOBZOng
வாழ்வோம் வா
Posted in கவிதைகள்

வாழ்வோம் வா

வாழ்வோம் வா

உள்ளம் தரவா உள்ளம் தரவா
உன்னை தொழ வா
உயிரே உயிராய் உன்னை நானும்
உள்ளம் சுமக்க வா

நாளும் உன்னை தேடி
நானும் நடக்கிறேன்
நயாகரா அருவியாக
நாளும் துடிக்கிறேன்

விண்ணும் மண்ணும் மோதுதே
விளையாடல் புரியுதே
காலம் இது தான் வா வா
காதல் செய்வோம் வா வா

வெட்கம் விட்டு நீயும்
கொஞ்சம் பேசு – இந்த
வேளையில எந்தன் மனதை உரசு -இந்த
வேளையில உரசு

வாழ்வு கொஞ்ச காலம் தான்
வாழ்ந்து பார்க்கலாம் வா
இந்த வையத்தை
இன்றே ஆண்டு போகலாம் வா

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 08-05-2023