Tag: மலர்ந்துவிட்டோம்
நாங்கள் மலர்ந்துவிட்டோம்.
நாங்கள் மலர்ந்துவிட்டோம்.
மலர்களே❗
சற்று ஒதுங்கிக் கொள்ளுங்கள்.
நாங்கள் மலர்ந்துவிட்டோம்.
கார்த்திகை மாத
காவிய தேவருக்காய் மலர்ந்துவிட்டோம்.
வான்மழை பெய்யும்
கானகம் எங்கும் கலந்துவிட்டோம்.
மங்கையரே❗
எம்மை மன்னித்துக்கொள்ளுங்கள்.
வாசம் வீசும் உங்கள் கூந்தல்களில்
வந்து குடிகொள்ளப் போவதில்லை.
தேசம்மீட்க உயிர்துறந்த
தெய்வங்களை துயிலெழுப்ப போகிறோம்.
சாமிகளே❗
கொஞ்சம் சகித்துக்கொள்ளுங்கள்.
பக்தர்கள் பூத்தட்டுகளில்
காத்திருக்கப் போவதில்லை.
உத்தம வேள்வியில் நீராடியவர்களின்
உடல்களைத் தழுவப்போகிறோம்.
தேனீக்களே❗
உங்களைத் தேற்றிக்கொள்ளுங்கள்.
மகரந்த சேர்க்கைக்கு மலரவில்லை.
மாவீரரின் விடுதலை
வேட்கைக்காகவே மலர்ந்துள்ளோம்.
மகிழ்ச்சிக்காக மலரவில்லை.
இனத்தின் எழிச்சிக்காக மலர்ந்துள்ளோம்.
ஆசைக்காக மலரவில்லை.
புனிதர் நாளின்
பூசைக்காக மலர்ந்துள்ளோம்.
காய்ந்து விழும்
காலத்துக்காக மலரவில்லை.
கல்லறையில் விழும் கண்ணீரை ஏந்துவதற்காக மலர்ந்துள்ளோம்❗
-பிறேமா(எழில்)-
- முன்னாள் தேசியப் போக்குவரத்து ஆணையத் தலைவர் ரேணுகா பெரேரா இலஞ்சக் குற்றச்சாட்டு ஆணையத்தால் கைது

- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு

- இஸ்ரேலுக்கான 2.8 பில்லியன் டாலர் ஆயுதத் தொகுப்பிற்கு அமெரிக்கா ஒப்புதல்

- மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த வாரம் பொல்கொல்ல அணை காலி

- மகிந்தா மனைவி மீது பாய்ந்த விசாரனை

- ஞானசார தேரோ அவதூறு வழக்கு செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணை

- அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை

- சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்புப் படை பல நகரங்களில் அவசரகால எச்சரிக்கை

- ஏமன் சண்டையில் தங்களுக்குத் தொடர்பில்லை என ஈரான் மறுப்பு

- ஈரான் போர் கப்பல் போக்குவரத்துக்கு பாதிப்பு

- எதிரி விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

- இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் MSF ஊழியர் காயம், வாகனம் சேதம்

- ஈரான் மீதான போர் அமெரிக்காவின் வெடிமருந்துகளில் பற்றாக்குறை

- இருவர் வெட்டி படுகொலை

- லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சபாநாயகர் மீது விசாரணை

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை









