எதிரிகளைப் பந்தாட நாங்கள் தயார்ஈரான்
Posted in உலக செய்திகள்

எதிரிகளைப் பந்தாட நாங்கள் தயார்ஈரான்

எதிரிகளைப் பந்தாட நாங்கள் தயார்ஈரான்

எதிரிகளைப் பந்தாட நாங்கள் தயார்ஈரான் ,எதிரிகளைப் பந்தாட நாங்கள் தயார் ஈரான் அதிரடி அறிவிப்பை நடத்தியுள்ளது.

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டு நாடுகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்கின்ற எதிர்பார்ப்பு நிலை வருகின்ற வேளையில் , எதிரிகளால் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு நடவடிக்கையை முறியடிக்க, ஈரான் தயாராக உள்ளதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரானை அழிப்போம் எதிரிகள்

ஈரானை மிரட்டி பயத்தில் உறைய வைத்து அவர்களை அழித்து விடுவோம் என்கின்ற நடவடிக்கை எதிரிகள் காய்களை நகர்த்துகின்றனர் .

முடிந்தால் தொட்டுப்பார் அப்புறம் நீ காணாமல் போவாய் என்பது ஈரான் விடுக்கும் எச்சரிக்கை செய்தியாக காணப்படுகிறது .

ட்ரான் தற்கொலை விமானங்கள் உளவு விமானங்கள், படை பலத்திலும் பலமாக இருக்கக்கூடிய ஈரானுடன் இஸ்ரேல் நேருக்கு நேர் மோத முடியுமா என்றால் இல்லை.

மிக முக்கியமான தளபதிகளை போட்டு தள்ளுவதன் ஊடாக, அந்த ராணுவத்தையும் அந்த நாட்டையும் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து விட முடியும் என மோசட் கருதுகிறது .

தாக்குதல் வீரம் நிறைந்த புத்திசாலிகள் இருக்கக்கூடிய ஈரானுடைய மிக முக்கியமான ராணுவ தளபதிகளை அடுத்தடுத்து படுகொலை செய்யக்கூடிய நடவடிக்கையில் எதிரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

இதை ஈரான் உணர்ந்து கொண்டு செயல்பட்டால் ,அவர்கள் படுகொலை தடுக்கப் படும், இல்லையென்றால் மொசாட்டின் வலையில் அவர்கள் விழுந்து மிகப்பெரும் ராஜ்ஜியம் காணாமல் போகக்கூடிய நிலைமை உருவாகும்.

லெபனான் , கிஸ்புல்லா ,ஹவுதி

லெபனான் , கிஸ்புல்லா ,ஹவுதி ,போன்றவற்றிற்கு வருகின்ற இந்த தலைமை அழிப்பு நடவடிக்கை ஈரானுக்கும் விடப்பட்ட நேரடி அச்சறுத்தலாக பார்க்கலாம்.

அதனால்தான் இஸ்ரேல் அடித்தால் திருப்பி அடிப்போம் என்கிறது ஈரான். களம் சூடு பிடிக்கிறது .இப்பொழுது மூன்றாம் உலக போர்வெடிக்கும் அபாயம் காணப்படுகிறது.

நாங்கள் மலர்ந்துவிட்டோம்
Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

நாங்கள் மலர்ந்துவிட்டோம்.

நாங்கள் மலர்ந்துவிட்டோம்.

மலர்களே❗
சற்று ஒதுங்கிக் கொள்ளுங்கள்.
நாங்கள் மலர்ந்துவிட்டோம்.
கார்த்திகை மாத
காவிய தேவருக்காய் மலர்ந்துவிட்டோம்.
வான்மழை பெய்யும்
கானகம் எங்கும் கலந்துவிட்டோம்.

மங்கையரே❗
எம்மை மன்னித்துக்கொள்ளுங்கள்.
வாசம் வீசும் உங்கள் கூந்தல்களில்
வந்து குடிகொள்ளப் போவதில்லை.
தேசம்மீட்க உயிர்துறந்த
தெய்வங்களை துயிலெழுப்ப போகிறோம்.

சாமிகளே❗
கொஞ்சம் சகித்துக்கொள்ளுங்கள்.
பக்தர்கள் பூத்தட்டுகளில்
காத்திருக்கப் போவதில்லை.
உத்தம வேள்வியில் நீராடியவர்களின்
உடல்களைத் தழுவப்போகிறோம்.

தேனீக்களே❗
உங்களைத் தேற்றிக்கொள்ளுங்கள்.
மகரந்த சேர்க்கைக்கு மலரவில்லை.
மாவீரரின் விடுதலை
வேட்கைக்காகவே மலர்ந்துள்ளோம்.

மகிழ்ச்சிக்காக மலரவில்லை.
இனத்தின் எழிச்சிக்காக மலர்ந்துள்ளோம்.
ஆசைக்காக மலரவில்லை.
புனிதர் நாளின்
பூசைக்காக மலர்ந்துள்ளோம்.

காய்ந்து விழும்
காலத்துக்காக மலரவில்லை.
கல்லறையில் விழும் கண்ணீரை ஏந்துவதற்காக மலர்ந்துள்ளோம்❗

-பிறேமா(எழில்)-