Tag: இளைஞரில்லா
இளைஞரில்லா இலங்கை
Author: நிருபர் காவலன் Published Date: 08/10/2023
இளைஞரில்லா இலங்கை
யுத்தமொன்று வந்ததனால்
மொத்த உறவும் பறந்தன.
முத்தமிட்ட அன்னை மண்ணைச்
சத்த மின்றிப் பிரிந்தன.
சொத்துப்பத்து ஈட்டவென்றும்
சொந்த நாட்டைத் துறந்தனர்.
நித்திரையை மறந்தங்கே
நித்தம் உழைப்பில் இறந்தனர்.
புத்திஜீவி கல்விமான்கள்
பிற நாடுதேடி ஓடினம்.
பத்தியெரியும் வயிற்றுடனே
பலர் குத்தியிங்கு முறியினம்.
கலைஞர் இளைஞர் கன்னிகளும்
கனடாக் கனவில் மிதக்கினம்.
அலைகள்போல அள்ளுப்பட்டு
அங்கே போக நினைக்கினம்.
இக்கரைக்கு அக்கரையென்று
இருந்ததெல்லாம் பறக்குதாம்.
சக்கரையில்லாப் பொங்கல்போல
சேர்ந்தபிறகு வெறுக்குதாம்.
செத்த வீட்டில் பங்குகொள்ளச்
சொந்தங்களும் இருக்காது.
சுத்தியுள்ள சாமி தூக்கப்
பக்தர்களும் கிடைக்காது.
பெத்தவர்க்குக் கொள்ளிவைக்கப்
பிள்ளை ஒன்றும் இருக்காது.
புத்தருக்கு விகாரைகட்ட – இனி
இங்கு போராட்டமும் நடக்காது.
-பிறேமா(எழில்)-
- வெளியில் தெரியாத வேர்கள்.

- சேரன் குளிர்களி

- ஈழத் தமிழச்சி ஏலாத் தமிழச்சியா

- பாதுகாப்பு வலயமென்று

- செட்டிகுள முகாமும் சீ என்ற வாழ்க்கையும்

- தனியாகப் போறவளே

- அப்பான்ர சைக்கிளே அந்தநாள் வாகனம்

- பாரதமே இவர்களையாவது பறக்கவிடு

- டெங்கொழிக்க எங்களின் பங்கு

- மழைக்காலத் துன்பங்கள்

- நாங்கள் மலர்ந்துவிட்டோம்.

- சினிமாவுக்குள் மூழ்கும் சீமான்களுக்கு

- ஓடிஓடி வாழ்ந்தபோதும் ஓய்ந்திடாத கல்வி

- இளைஞரில்லா இலங்கை

- தியாகத்துக்கான காவடி தமிழர்








