Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
துருக்கி எண்ணெய் சந்தைமீது ஏவுகணை தாக்குதல் – எரியும் வாகனங்கள்
துருக்கி எண்ணெய் சந்தைமீது ஏவுகணை தாக்குதல் – எரியும் வாகனங்கள்
சிரியாவில் வடகிழக்கு பகுதி துருக்கிய இராணுவத்தின் கட்டு பாட்டில் உள்ளது , அந்த பகுதியில்
உள்ள மிக பெரும் எண்ணெய் விற்பனை கிடங்கு மீது திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டது ,இதில் அந்த எண்ணெய் சந்தை பற்றி எரிந்துள்ளது
இதன்பொழுது எண்ணெய்களை காவி செல்லும் நூற்றுக்கு மேற்பட்ட வண்டிகள் எரிந்து
நாசமாகின ,இந்த ஏவுகணை தாக்குதலை யார் நடத்தியது என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை
முப்பது ஆயிரத்திற்கு மேற்பட்ட துருக்கிய இராணுவம் குறித்த நாட்டின் எல்லைகள் வாயிலாக நுழைந்து சிரியா மீது போரை தொடுத்துள்ளமை குய்ப்பிட தக்கது

கண்ணிவெடி தாக்குதல் – 19 இராணுவத்தினர் உடல்சிதறி மரணம்
கண்ணிவெடி தாக்குதல் – 19 இராணுவத்தினர் உடல்சிதறி மரணம்
நையீரியாவில் ஜிகாத் படைகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் சிக்கி பத்தொன்பது அரச இராணுவத்தினர் உடல் சிதறி பலியாகினர்
மேலும் பலர் படுகாய மடைந்துள்ளனர்
அரச இராணுவத்தின் வாகன தொடரணியை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது
தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளதுடன்
சோதனைகள் அதிகரித்துள்ளது
கொலண்டில் பொலிசார் மீது தாக்குதல் – தப்பியோடிய குற்றவாளிகள் பிரான்சில் கைது
கொலண்டில் பொலிசார் மீது தாக்குதல் – தப்பியோடிய குற்றவாளிகள் பிரான்சில் கைது
நெதர்லாந்து நாட்டின் காவல்துறை சிப்பாய் ஒருவர் மீது ஊந்துருளியில் பயணித்த இருவர் சரமரி தாக்குதலை
நடத்தினர் ,இவர்களின் தாக்குதலில் சிக்கி பலத்த காயமடைந்த காவல்துறை சிப்பாய் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டார்
Groningen பகுதியில் இடம்பெற்ற இந்த தாக்குதல் தாரிகளை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர் ,தாக்குதல் நடத்தியவர்களோ நாட்டை விட்டு தப்பித்து பிரான்சுக்குள் நுழைந்தனர்
தாங்கள் தப்பி விட்டோம் என கருதிய அவர்களை வடக்கு பிரான்சில் வைத்து பிரான்ஸ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
கைதானவர்கள் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,போலீசார் மீது மேற்கொள்ள பட்ட தாக்குதல் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
பிரிட்டனில் baseball பட்டால் அடித்து கொலை செய்ய பட்ட இந்தியர்
பிரிட்டனில் baseball பட்டால் அடித்து கொலை செய்ய பட்ட இந்தியர்
பிரிட்டனில் baseball பாட்டினால் இந்தியாவை சேர்ந்த நபர் ஒருவர் ரவுடி கும்பல் ஒன்றினால் அடித்துக் கொலை செய்ய பட்ட நிலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்
இரண்டு மாதங்களாக இடம்பெற்ற சிகிச்சை பலனின்றி அவர் இறந்துள்ளார் ,இந்த மரணம் தலையில் ஏற்பட்ட பலமான அடிகாயங்களினால் ஏற்பட்டது என மரண அறிக்கையில் தெரிவிக்க பட்டுள்ளது
இந்த கொலையை புரிந்த நபர்கள் கைது செய்ய பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டு வருகின்றனர் ,மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
சீனாவில் இருந்து பருத்தி ,தக்காளி இறக்குமதிக்கு அமெரிக்கா திடீர் தடை
சீனாவில் இருந்து பருத்தி ,தக்காளி இறக்குமதிக்கு அமெரிக்கா திடீர் தடை
உலக பொருளாதாரத்தில் முன்னேறி வரும் நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது ,இங்கிருந்து அமெரிக்காவுக்குள் பருத்தி மற்றும் தக்காளி என்பன இறக்குமதி செய்திட அமெரிக்கா திடீர் தடை விதித்துள்ளது
சீனாவுக்கு நெருக்குவாரங்களை அதிகரிக்கும் முகமாக இந்த நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளமை குறிப்பிட தக்கது
கனடா பிரதமர் வீட்டுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த நபர்
கனடா பிரதமர் வீட்டுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த நபர்.
கனடா நாட்டில் பிரதமராக இருப்பவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவரது வீட்டு வளாகத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 3-ந் தேதி கோரே ஹர்ரன் என்பவர் கைகளில் ஆயுதங்களுடன் நுழைந்தார். அப்போது வீட்டில் பிரதமரோ, குடும்பத்தினரோ இல்லை.
பின்னர் கோரே ஹர்ரன் போலீசில் சரண் அடைந்தார். பிரதமர் வீட்டு வளாகத்தில் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து, பிரதமரை அச்சுறுத்த முயற்சித்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அந்த வழக்கு, கடந்த மாதம் 7-ந் தேதி ஆன்டாரியோவில் உள்ள கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது கோரே ஹர்ரன், தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். அவர் சமூகத்துக்கு ஆபத்தானவர் என்று அரசு தரப்பு வக்கீல் கூறினார்.
தான் யாரையும் காயப்படுத்தும் நோக்கத்தில் அங்கு செல்லவில்லை என்று கோரே ஹர்ரன் குறிப்பிட்டார்.
இருப்பினும் அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி ராபர்ட் தீர்ப்பு அளித்தார்.
அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கும் எதிரிகளின் கனவு பலிக்காது- எடப்பாடி
இந்தியா டுடே பத்திரிகை ‘அடுத்த 5 ஆண்டில் தமிழகம்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தியதுசென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இந்தியா டுடே பத்திரிகை சார்பில் பேட்டி எடுக்கப்பட்டது.
அப்போது அவரது அரசியல் பயணம் குறித்து கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
1974-ல் அ.தி.மு.க.வில் சேர்ந்தேன். அப்போது நான் வளர்ந்து கொண்டு இருந்தேன்.
அந்த காலகட்டத்தில் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர்., தி.மு.க.வை எதிர்த்து கட்சி நடத்தி கொண்டு இருந்தார். அதில் இருந்து நான் கட்சியில் தீவிரமாக பணியாற்றினேன்.
எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் கட்சிக்காக உழைத்தேன். யாரிடமும் எந்த சிபாரிசுக்கும் சென்றது இல்லை.
எனது சொந்த உழைப்பால் படிப்படியாக உயர்ந்து இந்த நிலையை அடைந்துள்ளேன். 1989-ல் அ.தி.மு.க. ஜெயலலிதா அணி, ஜானகி அணி என இரண்டாக பிரிந்தது. அப்போது அம்மா தலைமையிலான அணியை ஏற்று அதில் போட்டியிட்டேன்.
அந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.ஆனேன். அதிலிருந்து கட்சியில் பல பொறுப்புகளை வகித்தேன். பல வாரியங்களுக்கு தலைவராகவும் பணியாற்றினேன். பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. அதிலும் வெற்றி பெற்றேன்.
2011- ஆண்டு அம்மா தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றேன். 2016-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்று அமைச்சர் ஆனேன். அப்போது கூடுதல் பொறுப்பாக பொதுப்பணித்துறை இலாகாவும் ஒதுக்கப்பட்டது. அனைத்து பணியையும் நான் சிறப்பாக செய்து வந்தேன்.
அம்மா மறைவுக்கு பிறகு முதல்-அமைச்சர் சேவையை செய்வதுதான் எனது பிரதான பணியாகும். மக்கள் பிரச்சனைகளை நான் முழுமையாக அறிந்துள்ளேன்.
சாதாரண விவசாயி குடும்பத்தில் பிறந்து படிப்படியாக வந்ததால் மக்களின் பிரச்சனைகள் என்ன என்பதை முழுமையாக உணர்ந்தவன்.
மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், கூலித்தொழிலாளர்கள், அனைவரின் கஷ்டங்களையும் உணர்ந்து வந்துள்ளேன்.
அதனால்தான் மக்களுக்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறேன். இந்த திட்டங்களால் தமிழகம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும்.
தமிழகம் இன்று பல துறைகளில் சாதனை படைத்து பல்வேறு தேசிய விருதுகளை பெற்றுள்ளது.
மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்தியதால் மக்களிடம் எனக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. பல்வேறு சோதனைகளை சவாலாக எடுத்து தற்போது சாதித்து உள்ளேன்.
மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதிலும், அரசியலில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதிலும் புரட்சித்தலைவி அம்மா எனக்கு பயிற்சியை தந்துள்ளார். நான் எனது சொந்த உழைப்பு முயற்சியால் இந்த நிலையை அடைந்துள்ளேன்.
இடைத்தேர்தல் வெற்றி மூலம் அ.தி.மு.க. அரசு தொடர மக்கள் விரும்புகிறார்கள் என்பதையும் அறிந்து அதற்கேற்ப பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறேன்.
அ.தி.மு.க.- அ.ம.மு.க. இணைவதாக கூறுவது தவறு. அவ்வாறு வரும் செய்திகள் முற்றிலும் தவறானது.
அ.தி.மு.க.வை எதிரிகளால் வீழ்த்த முடியாது. எதிரிகளின் கனவு பலிக்காது.
அ.தி.மு.க. மூலம் பாரதிய ஜனதா தமிழகத்தில் நுழைவதாக கூறுவது சரியல்ல. மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால் மாநில திட்டங்கள் நிறைவேறும் என்பதால், மத்திய அரசுக்கு நாங்கள் ஒத்துழைப்பு கொடுத்தோம்.
அதனால் தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்கள் கிடைத்துள்ளன. இதனால் தமிழகம் வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
தமிழகத்தில் குடிமராமத்து திட்டத்தின் மூலம் ஏரி- குளங்கள் நிரம்பி உள்ளன. இந்த திட்டத்தை மக்கள் அனைவரும் வரவேற்று உள்ளனர்.
உயர்கல்வி படிப்பில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதிபெற்று தொடங்கி உள்ளோம்.
நாங்கள் போடும் திட்டங்களை மு.க.ஸ்டாலின் காப்பி அடிக்கிறார். எங்களிடம் இருந்து கசியும் திட்டங்களை அவரது திட்டங்கள் போல சொல்கிறார்.
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் ஒரே மேடையில் என்னோடு விவாதிக்க தயாரா?
மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதில் நான் கவனம் செலுத்தியதால் எனக்கு ஆதரவு பெருகி வருகிறது.
நான் பயணித்த காலம் மிகவும் கடினமானது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவருடனும் நான் அரசியல் பணி செய்துள்ளேன். அதில் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தன. இந்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
திருடனை சுட்டு கொன்ற ஐந்து பொலிசார் கைது
திருடனை சுட்டு கொன்ற ஐந்து பொலிசார் கைது
அமெரிக்காவில் Oklahoma பகுதியில் பதின் ஐந்து வயது திருடனை சுட்டு கொன்ற ஐந்து பொலிசார் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
இவர்கள் குற்றவாளியை கைது செய்வதற்கு முன்பாக சுட்டு கொன்றனர்
என்றதன் அடிப்படையில் பணிநீக்கம் செய்யப்பட்டு சிறைத் தண்டனை அனுபவிக்கும் நிலையில் உள்ளனர்
காவல்துறையினர் தமக்கு வழங்க பட்டுள்ள அதிகாரத்திற்கு மேலாக சென்று
மக்களை துன்புறுத்தி வருகின்ற நிகழ்வுகள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
லண்டனில் போலீசார் வேட்டை – பணம் – போதைவஸ்து மீட்பு – வீடியோ
லண்டனில் போலீசார் வேட்டை – பணம் – போதைவஸ்து மீட்பு – வீடியோ
கிழக்கு லண்டன் பகுதியில் விசேட காவல்துறை அணியினர் நடத்திய திடீர் தேடுதல் நடவடிக்கையின் பொழுது
போதைவஸ்து வியாபாரத்தில் ஈடுபட்ட வந்த குழு ஒன்று மடக்கி பிடிக்க பட்டுள்ளது
அடுக்குமாடி குடியிருப்பில் இடம்பெற்ற இந்த முற்றுகையில் சுமார் 13 ஆயிரம் பவுண்டுகள் மற்றும் பலவகையான போதைவஸ்துக்கள் மீட்க பட்டுள்ளன
கொரனோ காலத்தில் பெருமளவில் இவ்வாறான நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
இதுவரை 259 பேர் கைது செய்ய பட்டுள்ளதாகவும் அதில் 30 க்கு மேற்பட்டவர்கள் கடூழிய சிறை தணடனை கிடைக்க பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இந்தியாவில் ஒரே நாளில் 20 இலட்சம் பேருக்கு தடுப்பூசி
இந்தியாவில் ஒரே நாளில் 20 இலட்சம் பேருக்கு தடுப்பூசி
இந்தியாவில் கோவிஷீல்டு, கொவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கி, அவை கடந்த ஜனவரி மாதம் 16ஆம் திகதி முதல் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
தடுப்பூசி திட்டத்தின் 52ஆவது நாளான நேற்று முன்தினம் (08) ஒரே நாளில் 2,019,723 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதுதான் ஒரு நாளின் அதிகபட்ச எண்ணிக்கை ஆகும். இவர்களில் 1,715,380 பேர், 28,884 அமர்வுகள் மூலம் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்தப்பெற்றனர்.
மேலும் 304,343 சுகாதார பணியாளர்களும், முன்கள பணியாளர்களும் தடுப்பூசியின் 2ஆவது டோஸ்களை
பெற்றுக்கொண்டனர். நேற்று காலை 7 மணி நிலவரப்படி நாடு முழுவதும் இதுவரையில் 2,308,733 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தல் – மக்கள் நீதி மய்யம் 154, சமக 40, ஐஜேகே 40 தொகுதிகளில் போட்டி.
சட்டசபை தேர்தல் – மக்கள் நீதி மய்யம் 154, சமக 40, ஐஜேகே 40 தொகுதிகளில் போட்டி.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வருகின்றன.
தமிழக சட்டசபை தேர்தல் – மக்கள் நீதி மய்யம் 154, சமக 40, ஐஜேகே 40 தொகுதிகளில் போட்டி
கமல்ஹாசன்
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ரவி பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி 154 இடங்களிலும், சமக மற்றும் ஐஜேகே ஆகியவை தலா 40 இடங்களில்
போட்டியிட உள்ளன. இதற்கான ஒப்பந்தம் சென்னையில் கையெழுத்தாகி உள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பொது செயலாளர் குமரவேல், சமக சார்பில் சரத்குமாரும், ஐஜேகே சார்பில் ரவி பச்சமுத்துவும் கையெழுத்திட்டனர்.
உலகை மிரள வைத்த ஈரான் சினைப்பர் – இரண்டு மைல் இலக்கு
உலகை மிரள வைத்த ஈரான் சினைப்பர் – இரண்டு மைல் இலக்கு
ஈரான் நாட்டு இராணுவம் தற்போது புதிதாக தயாரிக்க பட்டுள்ள சினைப்பர் துப்பாக்கி மூலம் இரண்டு மைல் தொலைவில்
உள்ளவர்களை சுட்டு கொலை செய்ய முடியும் என தெரிவிக்க பட்டுள்ளது
தமது நாட்டுக்கு எதிரிகள் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர்
என்ற நிலையில் தற்பொழுது தனது ஆயுத உற்பத்தியில் நவீன மயமாக்களுக்கு உள்ளாக்கி வருகிறது
அவ்விதமான ஒன்றாக இந்த் சினைப்பர் ,செயல் பாடு அமைந்துள்ளது குறிப்பிட தக்கது
பாஜகவுக்கு 20 தொகுதிகள்-சூடு பிடிக்கும் தேர்தல்
பாஜகவுக்கு 20 தொகுதிகள்-சூடு பிடிக்கும் தேர்தல்
தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12-ம் தேதி
தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது.
ஆளும் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஏற்கனவே பேசி வந்தனர்.
அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை கடந்த வாரம் தொடங்கியது. பா.ஜ.க. போட்டியிட
விரும்பும் தொகுதிகள் குறித்த விவரத்தை அக்கட்சியின் தலைவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்துள்ளனர். விரைவில் தொகுதி உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், அ.தி.மு.க. – பா.ஜ.க. இடையே தொகுதி பங்கீடு முடிந்துள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க. தரப்பில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மற்றும் பா.ஜ.க. சார்பில் தமிழக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி, எல்.முருகன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ள அறிக்கை வெளியானது.
அதில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டு, ஒப்பந்தமாகியுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில்
பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. 23 இடங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது
லண்டனில் KFC உணவு பொதிக்குள் – சிக்கன் அழுகிய மூளை – அதிர்ச்சியில் கஸ்டமர்
லண்டனில் KFC உணவு பொதிக்குள் – சிக்கன் அழுகிய மூளை – அதிர்ச்சியில் கஸ்டமர்
லண்டன் – Harrow Wealdstone kfc யில் வாடிக்கையாளார் ஒருவர் ,தாம் விரும்பி உண்ணும் பமிலி பக்கட் ஆடர் செய்துள்ளார் ,
ஆனால் அவர்கள் வழங்கிய ஆடர் பொதிக்குள் கோழியின் மூளை இருந்துள்ளதை கண்டு அதிர்ந்து போயினர்
குறித்த புகழ் பெற்ற உணவகத்தில் பணிபுரிபவர்களின் அலட்சிய போக்கின் காரணமாக இந்த அசம்பாவிதம் நடந்தேறியுள்ளது
One of the pieces I bit into didn’t taste right then I started picking at it and discovered a brain like piece in the chicken and straight away I panicked and was in pure disgust.
மேற்படி விடயம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,மக்களே உசார் இப்படியும் நடக்க வாய்ப்புள்ளது


40 வருடமாக கடத்தி சிறை வைக்க பட்ட நபர் மீட்பு – பிரிட்டனில் நடந்த பயங்கரம்
40 வருடமாக கடத்தி சிறை வைக்க பட்ட நபர் மீட்பு – பிரிட்டனில் நடந்த பயங்கரம்
பிரிட்டனில் நாப்பது வருடமாக நபர் ஒருவரை கடத்தி ஆறடி பலகை கொட்டகை கூண்டு ஒன்றுக்குள் ,ஒரு கீற்றாருடன் அதற்குள் சிறை வைக்க பட்ட நிலையில் அந்த நாபர் மீட்க பட்டுள்ளார்
தற்போது 58 வயதாகும் அவர் மனநிலை குழம்பிய நிலையில் காணப்படுவதாகவும் ,இவரை ஏன் கடத்தினார்கள் என்பது
தொடர்பாக 80 வயது தந்தை மற்றும் 55 வயது மகன் ஆகியோர் கைது செய்ய பட்டு நீதிமன்ற விசாரணைகளுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
மேற்படி மனித கடத்தல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
கனடாவில் பயங்கரம் போத்தலை உடைத்து முகத்தில் குற்றிய நபர்
கனடாவில் பயங்கரம போத்தலை உடைத்து முகத்தில் குற்றிய நபர்
கனடா ஸ்காபுரோ பகுதியில் நாற்பது வயதுடைய நபர் ஒருவர் பாதுகாவலர் ஒருவர் மீது போத்தலை உடைத்து அவரது முகத்தில் சரமாரியாக குற்றியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.
மேற்படி தாக்குதலை நடத்திய நபரை டொடொரன்டோ காவல்துறையினர் கைது செய்துதுள்ளனர் .
போத்தலை உடைத்து காவல்துறை முகத்தில் குற்றிய நபர் மேலதிக விசாரணைகளுக்கு குற்ற தடுப்பு பிரிவினர் உற்படுத்தியுள்ளனர் .
பொலிஸ் விசாரணைகளின் பின்னர் இவர் நீதிமன்றில் முன்னிலை ப்படுத்துவர் என தெறிவிக்க படுகிறது .
வட கொரியா எமை மிரட்டுகிறது – ஐநாவில் அமெரிக்கா கதறல்
வட கொரியா எமை மிரட்டுகிறது – ஐநாவில் அமெரிக்கா கதறல்
உலக நாடுகளை வடகொரியா மிரட்டி வருவதாகவும் ,அதன் எல்லை
தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்க வேண்டும் என அமெரிக்கா தூதர் ஐக்கிய நாடுகள் சபையில் முழங்கியுள்ளார்
வடகொரியா தனது ஏவுகணை பலத்த தொடர்ந்து அதிகரித்து செல்வதால் நாடுகளுக்கு இடையில் தொடர்ந்து பதட்டம் நிலவி
வருகிறது ,இதனை தடுக்க வடகொரியா மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது
இதன் நகர்வுகள் விரைவில் ஆளும் பைடன் ஆட்சியும் வடகொரியா
மீது நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள தயராகி வருவதை இதன் ஊடக அவதானிக்க முடிகிறது
அமெரிக்கா எல்லையில் கோர விபத்து – 13 பேர் மரணம்
அமெரிக்கா எல்லையில் கோர விபத்து – 13 பேர் மரணம்
அமெரிக்கா Mexico எல்லையில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் சிக்கி ,சம்பவ இடத்தில்பதின் மூன்று பேர்
பலியாகியுள்ளனர் ,மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இதே பகுதியில் சட்டவிரோத ஆள் கடத்தல்கள் இடம் பெற்று வருகிறது ,
இதனை அடுத்து கண்காணிப்பு தீவிர படுத்த பட்டிருந்த பொழுதும் மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
இங்கிலாந்தில் புதியவகை மோசடி – மக்களே எச்சரிக்கை -SCAM warning
இங்கிலாந்தில் புதியவகை மோசடி – மக்களே எச்சரிக்கை -SCAM warning
பிரிட்டன் புறநகர் பகுதியான Yorkshire பகுதியில் வசிக்கும் மக்கள் பலருக்கு மோசடி கும்பல் ஒன்று இலக்கு வைத்து அவர்களது nationa
l insurance numbers.பெற்று மோசடி செய்த்துள்ளது அம்பலமாகியுள்ளது
குறித்த நபர்கள் கைபேசியில் அழைத்து அவர்களது இன்சூரன்ஸ் இலக்கம் பிழையாக உள்ளது எனவும் புதியவை சரியானதை
அனுப்பி வைக்கிறோம் என கூறி பழைய இலக்கத்தை கேட்டு அதன் ஊடாக மோசடி இடம் பெற்றுள்ளது
அழைத்த நபர் மீது சந்தேக அடைந்த நபர்கள் சிலர் அவர்களது குரலை பதிவு செய்து பொலிசாருக்கு தெரிய படுத்திய நிலையில்
,போலீசார் வழங்கிய வழி காட்டலின் பிரகாரம் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
மக்களே இவ்வாறு யராவது அழைத்தால் அவர்களுக்கு உங்கள் விபரங்கள் எதனையும் தெரிவித்து விடாதீர்கள் ,எச்சரிக்கை
,இவ்வாறான அழைப்பு வந்தால்உடனே பொலிஸாருக்கு தெரிய படுத்துங்கள்
மலசல கூடத்தில் கமரா வைத்து பெண்களை படம் பிடித்த இயக்குனர் கைது
மலசல கூடத்தில் கமரா வைத்து பெண்களை படம் பிடித்த இயக்குனர் கைது
பிரிட்டனில் பிரபல இயக்குனர் ஒருவர் அவரது ஆடம்பர இல்லத்தில் அங்கு வந்து சென்ற பெண்கள் பயன் படுத்திய மலசல கூடத்தில்
இரகசிய கமராவை பொருத்தி அந்த பெண்களின் அந்தரங்க
பாகங்களை காணொளி பதிவு செய்து இரசித்து வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
இவ்விதம் இருபத்தி நான்கு பெண்களை இவர் காணொளியாக பிடித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது
நீதி மன்றத்தில் இடம்பெற்று வந்த விசாரணைகளில் இவருக்கு 15 மாத சிறை தண்டனை விதிக்க பட்டுள்ளதுடன் ,பாதிக்க பட்ட
பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஐந்தாயிரம் பவுண்டுகள் வழக்கப் பட வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிட பட்டுள்ளது







