Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
லண்டனில் கத்தி வெட்டு ஒருவர் மரணம் – இருவர் காயம்
லண்டனில் கத்தி வெட்டு ஒருவர் மரணம் – இருவர் காயம்
தெற்கு லண்டன் பகுதியில் இடம்பெற்ற கத்தி குத்து ,மற்றும் வெட்டு தாக்குதலில் சிக்கி சம்பவ இடத்தில் ஒருவர் மரணமானார் ,
மேலும் இருவர் பலத்த காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மேற்படி சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,இது தீவிரவாத செயலா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை
சமீப காலங்களாக லண்டன் பகுதியில் இவ்விதமான கத்தி குத்து சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றன ,
காவல்துறையினர் கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ள நிலையிலும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்கின்றமை குறிப்பிட தக்கது
பிரிட்டனில் 6000 சிறுவர்களை சிறையில் அடைத்த அரசு
பிரிட்டனில் 6000 சிறுவர்களை சிறையில் அடைத்த அரசு
பிரிட்டனில் ஆறாயிரம் சிறுவர்களை இரவு வேளையில் சிறையில் அடைத்துள்ள பெரும் அதிர்ச்சிகர சம்பவம் இடம் பெற்றுள்ளது
தற்கால கொரனோ விதிகளை பின்பற்றாதவர்கள் ,மற்றும் மக்கள் கூடும் போது இடங்களில் தொந்தரவு ,குற்றங்கள் ,
விபச்சாரம் ,திருட்டு,போதைவஸ்து,என பல்வேறுபட்ட பட்ட குற்ற செயல்கள் புரிந்தனர் என்ற குற்ற சாட்டில் இந்த சிறுவர்கள் கைது செய்ய பட்டு தண்டிக்க பட்டுள்ளனர்
கடந்த மூன்று வருடத்தில் ஆறாயிரம் சிறுவர்கள் இவ்விதம் இரவு வேளைகளில் சிறையில் கழித்துள்ளனர்
இந்த ஆண்டின் இத்தகுவரையான காலத்தில் ஆயிரம் சிறுவர்கள் இவ்விதம் தண்டிக்க பட்டுள்ளது என தெரிவிக்க படுகிறது
லண்டனில் – உடலுறவுக்கு அழைத்து செல்வந்தரை கொன்று வீசிய பெண்
லண்டனில் – உடலுறவுக்கு அழைத்து செல்வந்தரை கொன்று வீசிய பெண்
லண்டனில் பத்தொன்பது வயதுடைய இளம் பெண் ஒருவர் தனது கட்டுடலை காண்பித்து ,அதில் மயங்கிய செல்வந்தர்களை
ஆசைக்கு அழைத்து சென்று அவர்கள் ஆசை தீர்ந்ததும் ,குடிபானத்தில் விஷத்தை கலந்து கொடுத்து கொன்று அவர்கள் உடைமைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இவ்விதம் 42 வயதுடைய ஐரீஷ் செல்வந்தரை கொன்று அவரது வங்கியில் இருந்த பணத்தை கொள்ளையடித்து ,
80 ஆயிரம் பவுண்டுகள் பெறுமதியான வைரம் ஒன்றை அமெரிக்கா தலைநகரில் கொள்வனவு செய்திட முனைந்த பொழுது மேற்படி காதலார்கள் சிக்கி கொண்டனர்
இந்த பெண் தனது காதலனுடன் இணைந்தே மேற்படி விடயத்தை அரங்கேற்றி வந்துள்ளார்
நீதிமன்றில் இடம் பெற்று வந்த விசாரணையில் குறித்த குற்றத்தை புரிந்த பெண்ணுக்கு 16 வருடம் கடூழிய சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது
பிரான்சில் இருந்து பிரிட்டனுக்கும் நுழையும் லொறி சாரதிகளுக்கு கொரனோ சோதனை
பிரான்சில் இருந்து பிரிட்டனுக்கும் நுழையும் லொறி சாரதிகளுக்கு கொரனோ சோதனை
பிரான்சின் கலை வழியாக பிரிட்டனுக்கும் நுழையும் லொறி சாரதிகளுக்கு தற்போது கொரனோ உள்ளதா என்ற
சோதனை நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது ,அதில் அவர்களுக்கு குறித்த நோயானது இல்லை
என அறிந்தால் மட்டும் அவர்கள் பிரிட்டனுக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்க படுகிறது
இங்கிலாந்து அரசு மேற்கொள்ளும் இந்த நடைமுறை சாரதிகளுக்கு இடையில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
கனடாவில் மக்கள் மீது கத்தி குத்து ஏழுபேர் காயம்
கனடாவில் மக்கள் மீது கத்தி குத்து ஏழுபேர் காயம்
கனடாவில் மக்கள் மீது கத்தி குத்து ஏழுபேர் காயமடைந்துள்ள சம்பவ ஒன்று இடம்பெற்றுள்ளது .
கனடா நாட்டின் வான்கூவர் பகுதியில் உள்ள நூலகம் ஒன்றுக்குள் நுழைந்த நபர் ஒருவர் அங்கிருந்த மக்கள் இது சரமாரியாக கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டார் .
இதில் ஏழு பேர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.
மேலும் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .இது தீவிரவாத செயலா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை .
பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்ற வண்ணம் உள்ளது.
மோடிக்கு எதிரான ஆர்ப்படத்தில் 10 பேர் மரணம் – பல டசின் பேர் காயம்
மோடிக்கு எதிரான ஆர்ப்படத்தில் 10 பேர் மரணம் – பல டசின் பேர் காயம்
பங்களாதேசுக்கு அரச முறை பயனைத்தை மேற்கொண்டு சென்றுள்ள மோடிக்கு எகிரக மக்கள் நடத்தி வரும்
ஆர்ப் பாட்டத்தில் சிக்கி இதுவரை பத்து பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் பலடசின் பேர் படுகாயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன
இந்த மக்கள் கண்டன போராட்டம் இந்தியா பிரதமர் மோடிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஈரான்-சீனா 25 ஆண்டுகால ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்து
ஈரான்-சீனா 25 ஆண்டுகால ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்து
உலக வல்லரசாக திட்டம் போட்டு நகர்ந்து வரும் சீனா மாதம் தோறும் தனது பொருளாதாரத்தில் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது
இங்கு மாதம் தோறும் பத்து புதிய செல்வந்தர்கள் உருவாக்கம் பெற்று வருகின்றனர்
இவ்விதமான கால பகுதியில் ஈரான் ,சீனா இருபத்தி ஐந்து வருடம் நீடிப்பு கொண்ட ஒத்துழைப்பு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன
இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் இரு நாடுகளின்,பாதுகாப்பு ,மற்றும் வர்த்தக பொருளாதாரம் உள்ளடக்க பட்டுள்ளது
ஈரான் இது மீது வேற்று நாடுகள் படையெடுப்பை நடத்தினால் .ஈரானுக்கு சீனா உதவும் நிலையும் இந்த ஒப்பந்தம் மூலம் உணர படுகிறது
அமெரிக்கா கடற்கரையில் துப்பாககி சூடு பலர் மரணம்
அமெரிக்கா கடற்கரையில் துப்பாககி சூடு பலர் மரணம்
அமெரிக்காவின் மிக முக்கியமான பீச்சாக விளங்கும் Virginia பீச்சில் மாமா நபர்கள் சிலர் நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலில் இருவர் பலியாகியுள்ளனர்
மேலும் காவல்துறை அதிகாரி மீது காரல் மோதியுள்ளனர்
இதில் பலத்த காயமடைந்த நிலையில் குறித்த போலீஸ் ஊழியர் தீவிர சிகிச்சை பிரிவில்
அனுமதிக்க பட்டுள்ளார் ,அமெரிக்காவில் இவ்வாறான சூட்டு சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி
மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று வங்காளதேசத்திற்கு சென்றுள்ளார். வங்காள தேசத்தின் 50-வது தேசிய தின விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த பயணம் அமைந்துள்ளது.
நேற்று காலை பிரதமர் மோடி அங்குள்ள தேசிய போர் நினைவிடத்திற்குச் சென்றுள்ளார். கொரோனா பரவத் தொடங்கிய பிறகு அவர் கடந்த ஓராண்டாக எந்த வெளிநாட்டுக்கும் செல்லவில்லை.
வங்காள தேசத்தின் 50-வது சுதந்திர தினம் மற்றும் அந்நாட்டின் தேசத் தந்தை ஷேக் முஜிபூர் ரகுமானின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்ததையடுத்து நேற்று அவர் வங்காள தேசத்திற்குச் சென்றுள்ளார்.
நேற்று காலை வங்காளதேச தலைநகர் டாக்காவிற்கு தனி விமானம் மூலம் சென்ற பிரதமர் மோடியை வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார்.
இதனை தொடர்ந்து வங்காளதேசத்தின் தேசிய போர் நினைவிடத்திற்குச் சென்ற பிரதமர் மோடி, போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
இதற்கிடையே, பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக அந்த நாட்டின் தலைநகர் டாக்காவில் மாணவர்கள் உள்பட சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த போராட்டத்தில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையிலான மோதலில் 40 பேர் காயம் அடைந்துள்ளனர்.
காயமடைந்த அனைவரும் டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போராட்டம் தொடர்பாக 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் போராட்டக்காரர்கள் அணிவகுப்பு நடத்திய நிலையில் போலீசார் அவர்களை கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைத்தனர்.
பிரதமர் மோடி வருகைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது போராட்டக்காரர்கள்மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் கொல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
போராட்டக்காரரகள் ஒரு போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடததினர். நாங்கள் அவர்களைக் கலைக்க கண்ணீர்ப் புகைகள் மற்றும் ரப்பர் தோட்டாக்களைச் சுட வேண்டியிருந்தது என போலீஸ் அதிகாரி ரபிகுல் இஸ்லாம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
புயலில் சிக்கி இடிந்து வீழ்ந்த வீடு – ஐவர் மரணம்
புயலில் சிக்கி இடிந்து வீழ்ந்த வீடு – ஐவர் மரணம்
அமெரிக்காவில் வீசி வரும் கடும் புயலின் கோர தாண்டவத்தில் சிக்கி ஐவர் மரண மாகியுள்ளனர்
,இவர்கள் தங்கி இருந்த வீடு முற்றாக இடிந்து வீழ்ந்த நிலையில் அந்த வீட்டுக்குள் வசித்து வந்த ஐவர் இவ்வாறு மரணமாகியுள்ளனர் என தெரிவிக்க படுகிறது

ஜப்பான் கடலில் வீழ்ந்து வெடித்த வடகொரியாவின் புதிய ஏவுகணைகள்
ஜப்பான் கடலில் வீழ்ந்து வெடித்த வடகொரியாவின் புதிய ஏவுகணைகள்
வடகொரியா இந்த ஆண்டின் முதல் இரண்டு ஏவுகணைகளை தயாரித்து அதனை வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்துள்ளது
மேற்படி இரு ஏவுகணைகளும் ஜப்பான் கடல்பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது
எனினும் து எவ்வகையான ஏவுகணைகள் என்பதும் ,அதன் தூர வீச்சு தொடர்பாக உடனடியாக தெரியவரவில்லை
மேற்படி சம்பவம் நாடுகளுக்கு இடையில் போர் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது
தெற்கு லண்டனில் வெடிகுண்டுகளுடன் தீவிரவாதி கைது
தெற்கு லண்டனில் வெடிகுண்டுகளுடன் தீவிரவாதி கைது
தெற்கு லண்டன் பகுதியில்,வெடிகுண்டுகளுடன் 53 வயதுடைய நபர் ஒருவர் தீவிரவாதத்துடன் தொடர்பு பட்டார் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளார்
கைதானவர் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்
பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ள பட்ட சுற்றிவளைப்பின் பொழுதே இவர் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
பிரிட்டனில் பற்றி எரிந்த பாடசாலை – தப்பி ஓடிய மாணவர்கள் ,மக்கள்
பிரிட்டனில் பற்றி எரிந்த பாடசாலை -தப்பி ஓடிய மாணவர்கள் ,மக்கள்
பிரிட்டன் ஐரீஷ் பகுதியில் Northfield Academy பாடசாலையில் திடீரென தீப்பற்றி கொண்டது ,இதனால்
மாணவர்கள் உடனடியாக அங்கிருந்து அப்புற படுத்த பட்டதுடன் ,அதன் சுற்றாடல் பகுதியில் இருந்து மக்களும் அவசர,மாக வெளியேற்ற பட்டனர்
தொடர்ந்து ,போலீசார் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டதுடன் ஒரு மையில் சுற்றாடல் போக்குவரத்திற்கு தடை செய்ய பட்டது
இந்த தீ விபத்தில் பாடசாலை பலத்த சேதமடைந்துள்ளது
குறித்த தீ விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
சிரியாவில் ரசியா அகோர வான் தாக்குதல் – மருத்துவ மனைகள் சேதம்
சிரியாவில் ரசியா அகோர வான் தாக்குதல் – மருத்துவ மனைகள் சேதம்
சிரியாவின் வடகிழக்கு பகுதி நோக்கி ரசிய விமான படையினர் அகோரா வான்வழி தாக்குதலை
நடத்திய வண்ணம் உள்ளனர் ,இதில் பதின் நான்கு பேர் மரணமாகியுள்ளனர்
இந்த தாக்குதலால் மருத்துவமனைகள் உள்ளிட்ட பொது மக்கள் வாழ்விடங்கள் பாதிக்க
பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
பிரிட்டனில் காணாமல் போன இளம் பெண் சடலமாக மீட்பு
பிரிட்டனில் காணாமல் போன இளம் பெண் சடலமாக கட்டுக்குள் இருந்து மீட்பு
பிரிட்டனில் Hove, East Sussex பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போன இருபது வயதுடைய இளம் பெண் ஒருவர் ஞாயிறு சடலமாக மீட்க பட்டுள்ளார்
காணாமல் போன இவர் எவ்வாறு பலியானார் என்பது தொடர்பில் அவரது உடல் மரண பரிசோதனை அறிக்கையில்
தெரியவரும் என எதிர் பார்க்க படுகிறது ,சடலம் உடல் கூற்று ஆய்வுக்குள் உட்படுத்த பட்டுள்ளதுடன் மேப்ப நாய்களுடன் உதவியுடன் போலீசார் தொடர்ந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
இவரது மரணம் கொலையா தற்கொலையா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை

பிரிட்டனில் விபச்சாரம் புரிந்த 18 அழகிகள் கைது
பிரிட்டனில் விபச்சாரம் புரிந்த 18 அழகிகள் கைது
பிரிட்டனில் அந்த நாட்டின் சட்ட விதிகளுக்கு முரணாக ,விபச்சாரத்தில் ஈடுபட்ட சுமார் 18 அழகிய பெண்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
.இதில் ரோமானிய ,ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண்களே அதிகம் இந்த
குழுவிடம் விற்க பட்டுள்ளனர்
இவ்வாறு விற்க பட்டு தனி அறைகளில் வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த பதினெட்டு பெண்களை தாம் மீட்டுள்ளதாகவும் ,
இதில் 18 வயதுக்கு குறைந்த பெண் ஒருவார் இந்த கும்பலிடம் சிக்கி இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்
சர்வதேச விபச்சாரத்தில் ஈடுபட்ட கும்பல் ஒன்றே வசமாக சிக்கியது,இந்த முற்றுகையில் போலீசார் வழங்கிய தகவலின் அடிப்படையில்
அந்த அந்த நாடுகளின் காவல்துறையினருடன் இணைந்து பிரிட்டன் போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது
பிரிட்டனில் போராட்டம் நடத்திய 30 பேர் – பொலிஸாரால் கைது
பிரிட்டனில் போராட்டம் நடத்திய 30 பேர் – பொலிஸாரால் கைது
பிரிட்டனில் லொக்கடவுன் காலத்தில் கொரனோ விதிகளை மீறி ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் ஒன்று கூடி
போராட்டத்தில் ஈடுபட்டனர் ,இவ்வாறு ஈடுபட்டவர்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் தள்ளு முள்ளு ஏற்பட்டது
இந்த மோதல்களின் விளைவாக முப்பது பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,தொடர்ந்து அடித்து
பூட்டும் நிலவரங்கள் முடிவுக்கு வராத நிலையில் இவ்விதமான போராட்டங்கள் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து
மசாச் கடைக்குள் புகுந்து 8 பெண்களை சுட்டு கொன்ற – ஆயுத தாரி
மசாச் கடைக்குள் புகுந்து 8 பெண்களை சுட்டு கொன்ற – ஆயுத தாரி
அமெரிக்கா Atlanta பகுதியில் உள்ள பிரபல மசாச் கடைக்குள் புகுந்த இருபத்தி ஒருவயதுடைய ஆயுத தாரி அங்கு பணிபுரிந்த பெண்கள் மீது சரமாரி துப்பாக்கி சூட்டை நடத்தினான் .
இதில் எட்டு பெண்களும் சம்பவ இடத்தில துடிதுடித்து பலியாகினர்
மேற்படி கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
குறித்த சூட்டு சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
பிரிட்டனில் கொரனோ கடன் Coronavirus Bounce Back loan மோசடி செய்தவர்களுக்கு சிறை
பிரிட்டனில் கொரனோ கடன் Coronavirus Bounce Back loan மோசடி செய்தவர்களுக்கு சிறை
கொரனோ காலத்தில் பாதிக்க பட்ட வர்த்தகர்களுக்கு அரசு குறைந்த வட்டியுடன் பல்லாயிரம் பவுண்டுகளை கடனாக வழங்கியது .
Coronavirus Bounce Back loan scheme எனப் படுதலில் ஐம்பது ஆயிரம் முதல் ஐந்து லட்சம் பவுண்டுகள் வரை வழங்க பட்டன .
மேற்படி வங்கி கடனை முறைகேடான முறையில் 490.000 வங்கிகளில் பெற்று மோசடி புரிந்த
நையீரியா நாட்டை சேர்ந்த ஆண் ,பெண் இருவர் கைது செய்ய பட்டு விசாரனைக்கு உட்படுத்த பட்டனர்
மேற்படி நபர்கள் புரிந்தது மிக பெரும் கிரிமினல் குற்றம் என்பதால் நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்று வந்தன
இதில் இருவரும் குற்றவாளிகள் என அடையாளம் காணப் பட்ட நிலையில்
39 மாத சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது ,இது போன்று நம்ம தமிழர்கள் பலரும் புரிந்துள்ளதாக நம்ப படுகிறது ,அவ்விதம் இந்த கடன்களை முறைகேடாக பெற்ற அனைவரும் இவ்வாறு நீதிமன்ற விசாரணைகளுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது
உங்கள் வீடுகளை தேடி நாளை விசேட அதிகாரிகள் கதவுகளை தட்டலாம் ,எச்சரிக்கையாக இருப்பது நல்லது ,ஆசைப்படுவான் ஏன் அவஸ்தை படுவான் ஏன் ..?
தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இதுவரை ரூ.331 கோடி பறிமுதல் – தேர்தல் ஆணையம்
தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இதுவரை ரூ.331 கோடி பறிமுதல் – தேர்தல் ஆணையம்
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது
. இதையடுத்து, தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் 295 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இதுவரை ரூ.331 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதில், தமிழகத்தில் அதிகபட்சமாக ரூ.127.64 கோடி மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணமும், மேற்கு வங்காளத்தில் ரூ.112.59 கோடி மதிப்புள்ள பொருட்களும், அசாமில் ரூ.63 கோடியே ரூ.75
லட்சமும், கேரளாவில் ரூ.21 கோடியே 77 லட்சமும், புதுச்சேரியில் ரூ.5 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.







