துப்பாக்கி சூடு ஒருவர் மரணம் இருவர் காயம் – துப்பாக்கி தாரி ஓட்டம்
இலங்கை காலி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த ,மர்ம துப்பாக்கிதாரி நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி ,ஒருவர் சம்பவ இடத்தில பலியானார் ,நான்கு வயது குழந்தை உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்துள்ளனர் .
இவர்கள் மீது துப்பாக்கி சூட்டை நடத்தியவர் தப்பி ஓட்டம் ,என்கிறது காவல்துறை .
இதுவரை துப்பாக்கி தாக்குதலை மேற்கொண்ட ,குற்றவாளி கைது செய்யப்படவில்லை .
விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்க பட்டு வருவதாக ,காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இலங்கையில் நாள் தோறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை கவனிக்க தக்கது .