Tag: ராஜீவ் காந்தி
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன் திடீர் மரணம்
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன் திடீர் மரணம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சாந்தன் மரணமடைந்துவிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வந்த போதும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
கோமா நிலைக்கு சென்ற சாந்தனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சாந்தன் மரணம் அடைந்தார்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன் பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன் திடீர் மரணம்
சாந்தன் இலங்கை தமிழர் என்பதால், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் தங்க வைக்கப்பட்டார்.
தன்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் எனக் கோரி வந்தார் சாந்தன். சாந்தனை இலங்கை அனுப்பி வைக்க மத்திய அரசும் அனுமதி வழங்கியது.
எனினும், சாந்தனுக்கு கடந்த ஜனவரி மாதம் 24-ம் திகதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்
ராஜீவ் காந்தி விசாரணை குழு கலைப்பு -அதிர்ச்சியில் ராஜீவ் காந்தி குடும்பம்
ராஜீவ் காந்தி விசாரணை குழு கலைப்பு -அதிர்ச்சியில் ராஜீவ் காந்தி குடும்பம்
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்க அமைக்க பட்ட குழு ,மத்திய அரசினால் அதிரடியாக கலைக்க பட்டுள்ளது .
ராஜீவ் காந்தி கொலை வழக்கை வைத்தே ,இந்தியா தமிழீழ விடுதலை புலிகளை பழிவாங்கி வந்தது .
,இந்தியாவில் அதனை வைத்த அரசியல் பிழைப்பு இடம்பெற்று வந்தது .
இன்று இந்த குழுவை மோடி ஆட்சி அதிரடியாக கலைத்துள்ள சம்பவம் ,இந்திய அரசியலில் புயலை கிளப்பியுள்ளது .
ராஜீவ் காந்தி விசாரணை குழு கலைப்பு -அதிர்ச்சியில் ராஜீவ் காந்தி குடும்பம்
மேற்படி ராஜீவ் காந்தி விசாரணை குழு கலைப்பு , ராஜீவ் காந்தி குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மேலும் இதன் ஊடக இலங்கைக்கு மோடி ஆட்சி ஏதோ ஒரு விடயத்தை ,துல்லியமாக சொல்கிறது என்பதாகிறது .
இந்தியா தமிழர் விடயத்தை புதிய முறையில் கையாள போகிறது என்பதை இவை இடித்துரைக்கிறது என்பதாக உள்ளது .
தற்போது தமிழகத்தில் ராஜீவ் காந்தி விசாரணை குழு கலைப்பு விடயம் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .















