Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
தமிழ் அரசியல் காட்சிகள் ஒன்றிணைய வேண்டும் சித்தார்த்தன்
தமிழ் அரசியல் காட்சிகள் ஒன்றிணைய வேண்டும் சித்தார்த்தன்
தமிழ் அரசியல் காட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என சித்தார்த்தன் தெரிவித்துள்ளதுடன் தமிழர் அரசியலை முன்னிலை படுத்த ஒன்றிணைவது காலத்தின் தேவை என்கிறார் .
தேர்தல் வரும் பொழுதெல்லாம் ஒற்றுமை நேசம், பாசம், என கூறும் தமிழ் அரசியல் காட்சிகள் ,தேர்தல் முடிந்தது வெள்ளை வேட்டியை மடிச்சு கட்டி ஓடிவிடுவது ஏன் என்பது தெரியவில்லை .
மூன்றாம் பேச்சு மேசையின் பொழுது ஒட்டு குழுக்களை ஒன்றிணைத்து ஆரம்பிக்க பட்டதுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு .
எனவே இவர்கள் கூற்றின் படியும் மீளவும் அனைவரும் ஒன்றித்து பணியாற்றுவது காலத்தின் தேவை எனும் சித்தார்த்தன் கூற்று சரியானது தான் என்கிறது ஒரு தரப்பு .
ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அது சார்ந்தவர்கள் நிலைப்பாடு வேறாக உள்ளது .ஆக மொத்தம் யார் குற்றியும் அரசி வேகாது என்பதுதான் இன்றைய தமிழர் அரசியல் நிலை .
அரசியல்வாதிகளை வாயில் அடியுங்கள் ஆனந்தசங்கரி முழக்கம்
அரசியல்வாதிகளை வாயில் அடியுங்கள் ஆனந்தசங்கரி முழக்கம்
அரசியல்வாதிகளை வாயில் அடியுங்கள் ஆனந்தசங்கரி முழக்கம் பொது வேட்பாளரை யார் நிறுத்த சொல்கிறார்களோ அவர்கள் வாயில் அடியுங்கள் என ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார் .
தேர்தல் வந்தால் தெருவிறங்கும் அரசியல்
ஆனந்தசங்கரி ஐயா இலங்கையில் இருக்காரு என்பதை இப்பதான் தெரிய வந்திருக்கு .
தேர்தல் வந்தால் தெருவிறங்கும் அரசியல் கட்சிகளில் நானும் ஒருவர் என்பதை ஆனந்த சங்கரி ஐயாவும் எடுத்து விளக்கினார் .
ஐம்பது கோடியை யாருக்கோ கொடுத்து தேர்தலை சந்திக்க உள்ளார்கள் என ஆனந்த சங்கரி தனது வழமையான பாணியிலேயே விளாசி இருக்கார் .
முன்னொரு காலத்தில் ஆந்த சங்கரி வாரார் எனறால் இலங்கை அரசியல் ஆடியதுண்டு .ஆனால் இப்போ ஐயாவுக்கு வயதும் ஆகிடுச்சு என்பதை போல அரசியலும் தேய்ந்து நொந்து போயிருச்சு .
ஆனாலும் அவர் முயற்சி செய்கின்றார் .இந்த வயதிலும் இப்படி அரசியல் செய்வது செம மாஸ் .
வயதான அரசியல்
மேற்கு நாடுகளில் அரைசியல்வாதிகள் இப்படி வயதாகும் வரை தொடர்ந்து இருப்பதில்லை .
இலங்கை இந்தியாவில் மட்டும் தான் இப்படி உள்ளது ,அதுதான் அரசியல் இவ்வாறு கவலைக்கிடமாக உள்ளதை காண்பிக்கிறது .
ஆனந்த சங்கரி ஐயா வாயில சுண்ட போறார் ஓடி தப்புங்கோ குஞ்சுகளே .
வயதானலும் ஐயாக்கு தமாசு விட்டு போகல போங்க .
இலங்கை வந்த அமெரிக்கா யூடுப்பருக்கு இஸ்லாமியர் செய்த இழிவான செயல் video in
இலங்கை வந்த அமெரிக்கா யூடுப்பருக்கு இஸ்லாமியர் செய்த இழிவான செயல் video in
இலங்கை வந்த அமெரிக்கா Emeka Iwueze யூடுப்பருக்கு அழுக்காடை இஸ்லாமியர் ஒருவர் செய்த அழுக்கான செயல் உலகலாவிய நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
தெருக்கடை உணவகத்திற்கு வருகை தந்த அமெரிக்கா யூடுப்பர் உணவை சுவைக்க .அப்பொழுது அந்த உணவு என்ன விலை என அவர் கேட்கின்றார் .
1900 என அவர் சொல்கின்றார் ,அதை கேட்ட அவர் அதிர்ச்சியில் உறைந்து விடுகிறார் .
சந்தேகம் அடைந்த அவர் அங்கு பணிபுரிந்த ஊழியரிடம் அந்த விலையை கேட்கிறார் அப்பொழுது அவரும் 1900 என்கிறார்.
அவ்வளவு தான் சூடான கடைக்காரர் யூட்டுபரை அங்கிருந்து விலகி சென்று விடு என்கிறார் .வெளிநாட்டவரை தாக்க செல்வது போல அவரது உடல் மொழி காணப்படுகிறது .
இலங்கை வந்த அமெரிக்கா யூடுப்பருக்கு இஸ்லாமியர் செய்த இழிவான செயல் video in
ஐந்து முறை ஒருவர் ,துவா செய்யும் இழிநிலையை செய்ய மாட்டார் .
அல்லா அனைவருக்கும் பொதுவான ,அறத்தை நேர்மையை விதைத்தவர ,நபிகள் நாயகம் அவ்வாறே பயண பட்டவர் .
அவர் வழியை பின்பற்றும் இவ்வாறான நபர்களை என்ன சொல்ல ..?
ஒருவர் செய்த ஒரு செயல் ஒட்டு மொத்த இஸ்லாமியருக்கு அவமரியாதையை செய்துள்ளது .
இந்த காட்சியை பார்த்து நானே அதிர்ந்து போனேன் .
இனப்படுகொலைக்கு எதிராக கறுப்பின நாடான நெதர்லாந்து சர்வதேச நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தது
அவ்வாறன மக்கள் இன குழுமத்தை சேர்நதவர்களை இப்படியா அவமதிப்பது தோழர்களே .
இலங்கை காவல்துறையால் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளது வரவேற்க பட வேண்டிய விடயம் .
இலங்கை காவல்துறைக்கு மிக்க நன்றி
இலங்கையில் ஒருவடை டீ 800 யூடுப்ரை ஏமாற்றிய சிங்களவர் video in
இலங்கையில் ஒருவடை டீ 800 யூடுப்ரை ஏமாற்றிய சிங்களவர் video in
இலங்கை வந்த youtuber ஒருவர் கழுத்துறைக்கு பயணம் செய்தார் .
அப்பொழுது உணவகம் ஒன்றுக்கு சென்ற இவர் வடை மட்டும் டீ சாப்பிட்டார் ,அப்பொழுது அவரிடம் ஒரு டீ மற்றும் டீக்கு 800 ரூபா வாங்கியுள்ளார் .
இவருக்கு சந்தேகம் வரவே அவ்வழியே சென்றவர்களை கூப்பிட்டு விலையை கேட்க்கின்றார் அந்த பெண்மணியோ 150 என தெரிவித்துள்ளார் .
இலங்கையில் ஒருவடை டீ 800 யூடுப்ரை ஏமாற்றிய சிங்களவர் video in
அதன் பின்னர் அவர் மிகுதி பணத்தை திருப்பி கொடுக்கின்றார் ,வெளிநாட்டவர்களை இப்படி ஏமாற்றும் கும்பல் இலங்கையில் இருக்கத்தான் செய்கிறார்கள் .
இவர்களது இந்த செயலை என்னவென்று சொல்ல
அதன் பின்னர் ஒரு பெண்ணிடம் அலுவா வாங்கிவிட்டு அந்த பெண்ணிடம் மேலதிகமாக பணத்தை வழங்குகின்றார் .
எமது மக்கள் விழித்து கொள்ள வேண்டும் என்பதே நமது அவாவாகும்
அத்தனையோ அவர் காணொளி பிடித்து வெளியிட்டுள்ளார்
தப்பி ஓடிய 50 ஆயிரம் இராணுவத்தை மீள அழைக்கும் இலங்கை இராணுவம்
தப்பி ஓடிய 50 ஆயிரம் இராணுவத்தை மீள அழைக்கும் இலங்கை இராணுவம்
தமிழீழ விடுதலை புலிகள் போரில் தப்பி ஓடிய 50 ஆயிரம் இலங்கை இராணுவத்தை மீள அழைக்கும் இலங்கை இராணுவ தலைமையகம் .
போரில் தப்பி ஓடிய இலங்கை இராணுவம்
புலிகள் இலங்கை இராணுவத்தினருக்கு இடையில் இடம் பெற்று வந்த உள்நாட்டு யுத்தத்தில், தப்பி ஓடிய ஐம்பது ஆயிரத்திற்கு மேற்பட்ட சிங்கள இராணுவத்தை ,மீள வந்து படையில் சேருமாறு வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .
சித்தரை மாதம் 20 ஆம் திகதி முதல் வைகாசி மாதம் 20 ஆம் திகதி வரை மீளவும் பொது மன்னிப்பு காலம் வழங்க பட்டுள்ளது .
இதில் படையில் மீள இணையவோ அல்லது விலகி செல்லவோ முடியும் என்கிறது இலங்கை இராணுவ தலைமையகம் .
இந்த கால பகுதியில் மீள இராணுவத்தில் வந்து சேருமாறு இலங்கை இராணுவ தலைமையகம் அழைப்பு விடுத்துள்ளது .
விடுதலை புலிகள் மரபு வழி போர்
தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் பாரிய யுத்தம் இடம்பெற்று வந்தன .
இவ்வாறான கால பகுதியில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினரால் குறியீட்டு பெயருடன் கொண்ட பல மரபு படை போர் நடத்த பட்டது .
தப்பி ஓடிய 50 ஆயிரம் இராணுவத்தை மீள அழைக்கும் இலங்கை இராணுவம்
அதில் குறிப்பாக ஓயாத அலைகள் ஒன்று முதல் ஓயாத அலைகள் மூன்று கட்டமான போர் இடம்பெற்று இருந்தது .
இந்த வெற்றிகரமான மண்மீட்பு போரில் பல்லாயிரம் இலங்கை இராணுவம் பலியாகியது .
அதேபோல் ஆனையிறவு படைத்தளம் அழிப்பின் பொழுது இலங்கை இராணுவம் தப்பி ஒடியிருந்தது .
அவ்வாறு தப்பி ஓடிய ஐம்பது ஆயிரம் படைகளில் பத்து ஆயிரம் பேர் மட்டும் மீள திரும்பினர் .
இலங்கை இராணுவத்தில் இணைய மறுக்கும் தப்பி ஓடிய படைகள்
இவ்வாறு தப்பி ஓடியவர்கள் தொடர்ந்தும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் .அவர்களையே இப்பொழுது இலங்கை இராணுவம் தேடி வருகிறது .
இன்று இலங்கை இராணுவத்தினருக்கு நடந்த இதே நிகழ்வு நாளை இஸ்ரேல் இராணுவத்தினருக்கும் நடக்கும் .அவர்களது படையிலும் பல ஆயிரம் படைகள் பலியாகி இருக்க கூடும் என்பது கணிப்பாகிறது .
தப்பி ஓடியவர்களை மீளவும் இலங்கை இணைக்க அழைப்பதில் இருந்து புதிய போராட்டம் ,இலங்கையில் வெடிக்க போவதற்கான முன் அறிவிப்பாக இதனை உற்று நோக்க முடிகிறது .
தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்டாலும் அவர்களதுவீரம் செறிந்த தாக்குதல் எவ்வாறு உள்ளது என்பதை, இலங்கை இராணுவம் இவ்விதம் தப்பி ஓடியதில் இருந்து தெரிகிறது .
வாழ்ந்தவர்கள் அழிக்க படலம் ஆனால் வரலாறு அழிக்க படாது என்பதற்கு இவை சான்றாகும் .
மட்டக்களப்பு காத்தான்குடி கடலில் மிதந்த பெண்ணின் சடலம்
மட்டக்களப்பு காத்தான்குடி கடலில் மிதந்த பெண்ணின் சடலம் மீட்க பட்டு காத்தான் குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
மட்டக்களப்பு காத்தான்குடி பாலமுனை கடற்கரை பகுதியில் மீட்க பட்ட பெண் யார் என்பது தொடர்பில்விசாரணைகளை ஆரம்பித்திருக்கும் இலங்கை பொலிஸார் குற்றவாளிகளை தேடுகின்றனர் .
இந்த பெண்ணின் மர்ம மரணத்தின் பின்புலத்தில் உள்ள கொலை குற்றவாளிகள் யார் என்பதை காத்தான் குடி பொலிசார் இதுவரை கண்டுபிடிக்கவில்லை .
மட்டக்களப்பு காத்தான்குடி கடலில் மிதந்த பெண்ணின் சடலம்
இந்த பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்ட பின்னர் கொலை செய்ய பட்டு இருக்கலாம் என்கின்ற தகவல்கள் வெளியாகி வருகின்ற பொழுதும் ,அது தொடர்பாக காத்தான்குடி காவல்துறையினர் எதனையும் தெரிவிக்கவில்லை .
இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வரும் இவ்வாறான மர்ம கொலைகள் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்பதை இலங்கை போலீசார் கண்டுபிடிக்க முடியாது திணறி வருகின்றனர் .
சீரியல் கில்லர் ஒருவர் இவ்வாறான கொலைகளை செய்து வருகின்றாரா என்கின்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது .
மகள்களை கற்பழித்த தந்தை
இங்கிரிய பகுதியில் தனது மகள்களை பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தி வந்த தந்தை செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
தாய் இறந்த நிலையில் மூன்று பெண் பிள்ளைகளும் தந்தையுடன் வசித்து வந்துள்ளனர் .
இவ்வாறான கால பகுதியில் 17 வயதான தனது மூத்த மகளை தந்தை ஐந்து வருடமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்துள்ளார் .
இதே சமகாலத்தில் தனது இரண்டாவது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த தந்தை முனைந்ததை கண்ணுற்ற மூத்த மகள் தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார் .
அதனை அடுத்தே தற்போது இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார் .
கடலில் குழந்தை பெற்ற யாழ்ப்பாண பெண்
கடலில் குழந்தை பெற்ற யாழ்ப்பாண பெண்
கடலில் குழந்தை பெற்ற நையினா தீவு யாழ்ப்பாணதை சேர்ந்த பெண் ,மருத்துவமனைக்கு வருவதற்கு படகில் வந்த பொழுது கடலில் படகில் குழந்தையை பிரசவித்துள்ளார் .
நையினா தீவு மருத்துவமனையில் இருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லுமாறு கூறப்பட்டதை அடுத்து ,அம்புலன்ஸ் படகு இல்லாத காரணத்தால்
படகில் ஏற்றி அழைத்து வந்த பொழுது அதே படகில் குழந்தையை பிரசவித்துள்ளார் .
படகில் பயணித்த ஆண் பயணிகள் மேல்தட்டுக்கு செல்ல பட்ட பின்னர் ,கீழ் தட்டில் பயணித்த பெண்கள் பொண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளனர் .
கடலில் குழந்தை பெற்ற யாழ்ப்பாண பெண்
மக்கள் சேவை ஆற்றும் அரசியல்வாதிகள் மக்கள் உயிர் காக்கும் மருத்துவ படகு சேவையை ஒழுங்கு படுத்தி கொடுக்க முடியாத வக்கற்ற நிலையில் உள்ளதை இவை காண்பிக்கிறது .
லஞ்ச ஊழல் பெருச்சாளிகள் வாழும் இந்த நாட்டில் மக்கள் நலன் காற்றில் பறக்கும் என்பதற்கு இவை ஒரு முன்னுதரணம் எனலாம் .
அம்பாந்தோட்டையில் தந்தை மீது வாள்வெட்டு மகன் கொலை
அம்பாந்தோட்டையில் தந்தை மீது வாள்வெட்டு மகன் கொலை
அம்பாந்தோட்டையில் தந்தை மீது வாள்வெட்டு மகன் கொலை ,விரைந்து வந்த பொலிசார் காயத்துடன் துடித்த தந்தையை காப்பாற்றினர் ,மகன் கொலை தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
தந்தையின் மீது தாக்குதலை மேற்கொண்ட வாள்வெட்டு குழு பின்னர் 12 வயது மகன் மீது தாக்குதலை நடத்தியது ,
இந்த வாள்வெட்டு குழுவின் தாக்குதலில் காயமடைந்த தந்தை தொடர் சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர் .
காணி தகராறு காரணமாக இந்த வாள்வெட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
தந்தையை இலக்கு வைத்து வாள்வெட்டு தாக்குதலை நடத்திய குழு ,மகன் மீதும் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியதில் சிறுவன் துடிதுடித்து இறந்து போனான் .
இலங்கையில் இவ்வாறான வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் ,மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு காணப்படுகிறது .
இலங்கை தமிழின இனப்படுகொலையை விசாரிக்க கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நடவடிக்கை
இலங்கை தமிழின இனப்படுகொலையை விசாரிக்க கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நடவடிக்கை
இலங்கை தமிழின இனப்படுகொலையை விசாரிக்க கனடா நடவடிக்கை மேற்கொள்ள கூடும் என்பதால் கனடா தொடர்பில் இலங்கை மிக எச்சரிக்கியாக உள்ளது .
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இலங்கை இறுதி போரில் இலங்கை புரிந்தது இனப்படுகொலை என தெரிவித்து இருந்தார் .
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இவ்வாறு தெரிவித்து இருந்தது இலங்கை கனடாவுக்கு இடையில் இரயத்தந்திர நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தது .
இலங்கை தமிழின இனப்படுகொலையை விசாரிக்க கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நடவடிக்கை
அதனை அடுத்து எதிர்வரும் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் வருவதை அடுத்து ,மீளவும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இலங்கை இனப்படுகொலையை விசாரித்து இலங்கையை தண்டிக்கும் படி கூறலாம் என எதிர்பார்க்க படுகிறது .
அவ்வாறு கனடா முன் நகர்வை மேற்கொண்டால் ,அதுவே இலங்கைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால் ,இலங்கை பதட்டத்தில் உறைந்துள்ளது .
இலங்கையில் சிங்கள அரசினால் மேற்கொள்ள பட்ட தமிழின படுகொலைக்கு 14 ஆண்டுகள் கழிந்த பொழுதும் இதுவரை தீர்வு கிட்டவில்லை .
தமிழின படுகொலையை நடத்தியவர்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர்.
,ஆனால் பாதிக்க பட்ட மக்களுக்கு எதுவித நீதியும் கிடைக்கவில்லை என்பது வலி தோய்ந்த வரலாறாக காணப்படுகிறது .
பெண்கள் இருவர் வீட்டுக்குள் சடலமாக மீட்பு
பெண்கள் இருவர் வீட்டுக்குள் சடலமாக மீட்பு
பெண்கள் இருவர் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் ,போலீசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து வீடடை சோதனை செய்த பொழுது இரு பெண்கள் சடலம் காணப்பட்டுள்ளது .
வீட்டில் இறந்த நிலையில் காணப்பட்ட பெண்கள் இருவரை கிராமசேவாகார் அடையாளம் காட்டினார் .
இறந்த இரு பெண்களும் 65 மற்றும் 79 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது .
இறந்த இருபெண்களதும் சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது .
பெண்கள் இருவர் வீட்டுக்குள் சடலமாக மீட்பு
இந்த பெண்கள் மரணம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் காவல்துறையினர் உரிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
இலங்கையில் சாமீப காலங்களாக இவ்வாறு வீடுகளுக்க்குள் சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது .
இவை திட்டமிடப்பட்ட படுகொலை சம்பவங்களாக இருக்கலாம் என் மக்கள் கருத்துரைத்த வருகின்றனர் .
பூட்டிய வீட்டுக்குள் இறந்த இரு பெண்கள் மரணம் அந்த கிராம மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .
நீதிபதியை தாக்கிய பொலிஸ் அதிகாரி அதிர்ச்சியில் மனைவி மரணம்
நீதிபதியை தாக்கிய பொலிஸ் அதிகாரி அதிர்ச்சியில் மனைவி மரணம்
நீதிபதியை தாக்கிய பொலிஸ் அதிகாரி செயலினால் அதனை கண்ணுற்ற மனைவி அதிர்ச்சியில் மரணமாகியுளளார் .
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நீதிபதி தனது மைத்துனர் வீட்டுக்கு பயணம் செய்துள்ளார் .
அங்கு சென்ற நீதிபத்தி தன்னுடன் தான் வளர்த்த வளர்ப்பு பூனையை அழைத்து சென்றுள்ளார் .
அந்த பூனையால் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக நீதிபதி பொலிஸ் அதிகாரிக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது .
இதனை அடுத்து நீதிபதியை பொலிஸ் அதிகாரி தாக்கியுள்ளார் .மேற்படி சம்பவம் போலீசாருக்கு தெரிய படுத்தியதை அடுத்து பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார் .
நீதிபதியை தாக்கிய பொலிஸ் அதிகாரி அதிர்ச்சியில் மனைவி மரணம்
இவ்வேளை மனைவி தனக்கு நெஞ்சு வலிக்கிறது என கூறியுள்ளார் .போலீசாருக்கு நீதிபதி வாக்குமூலம் வழங்கி கொண்டிருந்த நிலையில் மனைவியை கவனிக்கவில்லை .
அவர் நெஞ்சு வழியால் துடித்து கொண்டிருக்க மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார் .ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார் .
இந்த சம்பவத்தல் அதிர்ச்சி உற்ற அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது .
புதுவருடத்தை கொண்டாட சென்ற நீதிபதி பொலிஸ் அதிகாரி மேற்கொண்ட அருவருப்பான செயலினால் மனைவியை இழந்து தவிக்கின்றார் .
மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 சம்பளம் உயர்வு
மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 சம்பளம் உயர்வு
மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 சம்பளம் உயர்வு உடபுஸ்லாவை கோட் லோச் தோட்டத்திற்கு பயணித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரித்துள்ளார் .
ஜீவன் தொண்டமான் அறிவித்தது போன்று 1700 ரூபா சம்பள உயர்வு தொடர்பாக பேச படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் .
கொழும்புக்கு ஜீவன் தொண்டைமானை அழைத்து நான் பேச உள்ளேன் .அதன் பொழுது மலையக தோட்ட தொழிலாளர்கள் சம்பள உயர்வு தொடர்பாக பேசி நல்ல முடிவை எடுப்பேன் என மக்களுக்கு தெரிவித்தார் .
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை அடுத்து தற்போது அரசியல் காட்சிகள் வாக்குறுதிகளை அடித்து விடுகின்றனர் .
வாக்கு பெற்று ஆட்சியில் அமர்ந்த பின்னர் மக்களை ஏமாற்றி பிழைக்கும் அரசியல் கோமாளிகாக ,இலங்கை அரசியல் மாறி செல்கிறது .
அடித்தட்டு மக்களின் வாழ்வுரிமைகள் அவர்கள் வளர்ச்சி நிலை தொடர்பாக சிந்திக்க மறுக்கும் மலையக அரசியல் காட்சிகள் ,என்று அந்த மக்களுக்குரிய சிறந்த வாழ்வை கொடுக்க போகின்றார்கள் என மலையக தோட்ட தொழிலாளர்கள் ஏங்கி நிற்கின்றனர் .
நூறு ஆண்டுகளாக மலையக தோட்ட தொழிலாளர்கள் கொத்தடிமைகளாகவே காண படுகின்றனர் .
ஒழுங்கான வீதி வீடுகள் ,கல்வி கூடங்கள் ,கழிவறைகள் ஏதும் இன்றி மலையக மக்கள் வாழ்கின்றனர் .
இந்த மக்களுக்கு ஆளும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் நல்லதை செய்து கொடுக்க மாட்டாரா என அந்த மக்கள் ஏக்கத்துடன் காத்துள்ளனர் .
இளம் வயதில் இலங்கை அரசியலில் கால் ஊன்றியுள்ள ஜீவன் தொண்டமான், மக்கள் மனங்களை வென்று நல்லாட்சி கொடுப்பாரா மலையக தோட்ட தொழிலாளர்கள் வாழ்வில் விடியல் பிறக்குமா பொறுத்திருந்து பார்க்கலாம் .
கெஹலிய ரம்புக்வெல்ல இலஞ்ச ஊழல்
கெஹலிய ரம்புக்வெல்ல இலஞ்ச ஊழல் தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய பட்டுள்ளது .
சுகாதார அமைச்சராக பதவி வகித்த கெஹலிய ரம்புக்வெல்ல அக்காலத்தில் அந்த அமைச்சில் இலஞ்ச ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டார் என குற்றம் சுமத்த பட்டுள்ளது .
நீதிமன்றில் தொடரப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் தற்போது கெஹலிய ரம்புக்வெல்ல நீதி விசாரணை சிறை கொட்டகையில் வசித்து வருகிறார் .
இலங்கை நீதிமன்றில் குற்றவாளியாக குற்றம் சுமத்த பட்ட கெஹலிய ரம்புக்வெல்ல ,அமைச்சு பதவி முற்றாக பறிக்க படவில்லை என குற்ற சாட்டு முன் வைக்க பட்டுள்ளது .
அதனால் கெஹலிய ரம்புக்வெல்ல அங்கம் வகிக்கும் தற்கால அமைச்சு பதவிகள் முழுவதும் பறிக்க பட்டு ,அவர் புரிந்த குற்றத்திற்கு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என, பொதுநல அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளது .
அரசியலில் இன்னும் 5 வருடம் பயணிக்க போகிறேன் டக்ளஸ் தேவானந்தா -உங்களுக்கு ஒரு மடல்
அரசியலில் இன்னும் 5 வருடம் பயணிக்க போகிறேன் டக்ளஸ் தேவானந்தா -உங்களுக்கு ஒரு மடல்
அரசியலில் இன்னும் 5 வருடம் பயணிக்க போகிறேன் என டக்ளஸ் தேவானந்தா அறிவிப்பு விடுத்துள்ளார் ,யாழில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் டக்ளஸ் தேவானந்தா இப்படி முழங்கியுள்ளார் .
தமிழ் மக்கள் விடுதலைக்காக ஆயுதம் தூக்கிய போராட்ட குழுக்களில் டக்ளஸ் தேவானந்தா ஒருவராவார் .
ஆனால் அந்த இலட்சிய பாதையில் தெளிவுற நேர்மையுடன் பயணிக்க முடியாத அவர் எதிரியுடன் கூட்டு வைத்து தமிழர்களுக்கு எதிரான சாதிகளில்; ஈடுபட்டார் .
ஈழ தமிழர் வரலாற்றில் யார் இந்த டக்ளஸ் தேவானந்தா என்றால் அவருக்கு என ஒரு திறந்தவெளி கறுப்பு பக்கம் உள்ளது .
தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் இலங்கை அரசியல் வரலாற்றில் மிக பெரும் சாதனையை இவர் தமிழர்களுக்கு நாட்டுவார் என எதிர் பார்க்க பட்டது.
ஆனால் அது வெற்றிடமாகவே காண படுகிறது .
ஒன்று பட்டு ஒருமித்து பயணித்த தமிழ் போராளிகள் குழுக்களுக்கு இடையில் சதிகளை தூவி பிரித்தாண்டு ,இன்று ஒட்டு மொத்த தமிழர் நெஞ்சங்களில் இடம்பிடிக்க முடியாத நிலையில் ஒருவராக டக்ளஸ் தேவானந்தா மாற்றம் பெற்றார் .
இது தவிர்க்க பட முடியாத ஒரு பக்கத்தின் பாதை என்பது அவரது உளதெளிவு .
ஆனால் அதனை ஈழ தேசிய இனமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை ,புலிகள் இல்லா காட்டுக்குள் எலிகளுக்கு வேட்டை என்பதை போலவே இப்பொழுது இலங்கையில் பல பெருச்சாளிகள் உலவி திரிகின்றனர் .
அரசியலில் இன்னும் 5 வருடம் பயணிக்க போகிறேன் டக்ளஸ் தேவானந்தா -உங்களுக்கு ஒரு மடல்
வரலாற்றில் கிடைத்த மிக பெரும் வாய்ப்புக்களை டக்ளஸ் தேவானந்தாவும் தவறவிட்டு விட்டார் ,என்பதே அவரை எதிரியாக கருகியவர்கள் நெஞ்சங்களில் ஓரத்தில் இப்படி செய்து கொள்ள மாட்டாரா என்ற ஏக்கம் ,அற்று போயுள்ளதை காண முடிகிறது .
வயது மூப்பாகி விட்ட நிலையில் ,ஐந்து ஆண்டுகளுடன் எனது ஆயூள் முடிந்து விடும் என டக்ளஸ் தேவானந்தா நினைத்திருப்பார் போல் உள்ளது .
இது அவரது அரசியல் கட்சியின் சிந்தாந்தம் எனவே அதனை யார் தான் மாற்ற முடியும் ..?,ஐந்து என்ன பத்து வருடங்கள் கூட அரசியலில் பயணியுங்கள் டக்ளஸ் தேவானந்தா அவர்களே .
கல்லான மனிதர் என்றாலும் ஒரு மூலையில் ஈரம் உள்ளது என்பதை தொலை காட்சி விவாதத்தில் பஞ்சாயத்து பண்ணிய உங்கள் நிலை கண்டு வியந்தேன் .
ஆதலால் உங்கள் செய்திகளை தவிர்த்து வந்த நான் ஒரு சிறு இடம் ஒதுக்கி பதிவிடுகிறேன் .
உங்களுக்கு நாங்கள் எதிரிகள் ஆனால் தமிழர்கள் இன்று யாரையும் எதிரியாக பார்க்கவில்லை .
ஏன் என்றால் அவர்களுக்கு எதிர்க்கும் பலம் இன்று இல்லை டக்ளஸ் தேவானந்தா அவர்களே புரிந்து கொண்டால் மகிழ்ச்சி .
யாழ்ப்பாணத்தில் மனைவியை வெட்டிய கணவன் தப்பி ஓட்டம்
யாழ்ப்பாணத்தில் மனைவியை வெட்டிய கணவன் தப்பி ஓட்டம்
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை அராலி பகுதியில் மனைவியை வெட்டிய கணவன் தப்பி ஓட்டம் ,யாழ்ப்பாணத்தில் நடந்த கத்தி வெட்டு சம்பவைத்தால் மக்கள் அதிர்ச்சியில் உறைவு .
தமிழர்களின் கலாச்சார பட்டினமாக விளங்கி வரும் யாழ்ப்பாணத்தில் ,தனக்கு வாழ்வு கொடுத்த மனைவியை கத்தியால் கோரமாக வெட்டிய கணவன் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
கணவன் மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக கணவன் மனைவியை சமையலறை கத்தியை கொண்டு வெட்டியுள்ளதாக யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவித்துள்ளன .
மனைவி இரத்த வெள்ளத்தில் மிதக்க கணவன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் ,அயலவர்கள் மற்றும் உறவினர்கள் உதவியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ,மனைவி அனுமதிக்க பட்டுள்ளார் .
மனைவியிடம் நடந்த கத்தி வெட்டு தாக்குதல் சம்பவத்தை விசாரித்த போலீசார் ,மனைவியை தாக்கிய கணவனை கைது செய்திடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் .
சற்றும் எதிர்பாரத விதமாக நடந்த மனைவி மீதான கத்தி வெட்டு தாக்குதல் சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
கொலை குற்றச்சாட்டில் கணவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என தெரிய வருகிறது .
பொலனறுவையில் கவிழ்ந்த பேரூந்து தப்பிய இசைக்குழு
பொலனறுவையில் கவிழ்ந்த பேரூந்து தப்பிய இசைக்குழு
பொலனறுவை ஓங்கம பகுதியில் இசை குழு பயணித்த பேரூந்து ஒன்று கவிழ்ந்ததில் அதில் பயணித்த ,இசை குழுவை சேர்ந்தவர்கள் காயமடைந்துள்ளனர் .
பொலனறுவை பகுதியில் இசை நிகழ்ச்சியை நடத்தி விட்டு, வீடு திரும்பிய அதே இசைக்குழுவை சேர்ந்த சாரதி ஒருவரே பேரூந்தை செலுத்தி வந்துள்ளார் .
அதன் பொழுதே சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பேரூந்து விபத்தில் சிக்கி கவிழ்ந்துள்ளது .
பேரூந்து தலைகீழாக கவிழ்ந்த பொழுதும் அதில் பயணித்த இசை குழு உறுப்பினர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பித்துள்ளனர் .
மக்களை மகிழ்விக்க இசை நிகழ்ச்சி நடத்திய இசை குழு, பேரூந்து விபத்தில் சிக்கிய சம்பவம் ,அந்த இசை குழு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
தெஹிவளை மிருகக்காட்சி சாலை புத்தாண்டில் அள்ளிய பெரும் பணம்
தெஹிவளை மிருகக்காட்சி சாலை புத்தாண்டில் அள்ளிய பெரும் பணம்
தெஹிவளை மிருகக்காட்சி சாலை தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டில் 4.8 மில்லியன் ரூபா பணத்தை அள்ளியுள்ளதாக தெஹிவளை மிருகக்காட்சி சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது .
இலங்கை வரும் வெளிநாட்டு உல்லாச பயணிகளை தெஹிவளை மிருகக்காட்சி சாலை கவர்ந்து இழுக்கும் ஒன்றாக காண படுகிறது .
இந்த தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் யானைகள் ,புலிகள் ,கரடி ,சிங்கம் ,புலி ,ஒட்டகம் என்பன பிரதான விலங்குகளாக இங்கே காண படுகின்றன .
இந்த காட்டு விலங்குகளை கண்டு இரசிக்க வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் அதிகம் இங்கே தேடி வருகின்றனர் .
அவர்கள் ஊடாகவே தமிழ் சிங்கள புத்தாண்டு தினத்தில் அதிக வருமானத்தை தெஹிவளை மிருகக்காட்சி சாலை பெற்று ,இந்த ஆண்டின் முதல் பகுதியில் சாதனை படைத்துள்ளது .
நான் மோசடி ஏதும் செய்யவில்லை மைத்திரிபால சிறிசேன
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக பதவியேற்ற நாளிலிருந்து எவ்வித மோசடியில் ஈடுபடவில்லையென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் .
இலங்கை அரசியலில் தேர்தல் சூடுபிடிக்கவுள்ள நிலையில்,காட்சிகள் மாற்றமடைந்து வருகின்றன .
அவ்வாறன நிலையில் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார் .
இலங்கையில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக அங்கம் வகிக்கும் பொழுதே நாட்டில் தொடர் குண்டுகள் வெடித்தன .
கொழும்பு தேவாலயங்கள் முதல் குண்டுகள் வெடித்தன .
அந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று மைத்திரிபால சிறிசேன பதவி விலகவில்லை .
மாறாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கூட்டத்தில் பங்கேற்று பேசும் பொழுதே மைத்திரிபால சிறிசேன நான் மோசடியில் ஈடுபடவில்லை என தெரிவித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார் .
மியன்மாரில் சிக்கிய 15 இலங்கை மீனவர்கள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை
மியன்மாரில் சிக்கிய 15 இலங்கை மீனவர்கள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை
மியன்மாரில் சிக்கிய 15 இலங்கை மீனவர்கள் மியன்மார் சிறையில் அடைக்க பட்டனர் ,அவ்வாறு சிறை அடைக்க பட்ட இலங்கை மீனவர்கள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய பட்டுள்ளனர் என இலங்கை தெரிவித்துள்ளது .
தமிழ் சிங்கள புத்தாண்டு தினம் மியான்மாரிலும் கொண்டாட பட்டுள்ளது .
அதன் பொழுதே சித்திரை புத்தான்டு தினத்தை ஒட்டி கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க பட்டு இருந்தது .
அதன் பின்னர் இலங்கையை சேர்ந்த 15மீனவர்களும்மியன்மார் அரசினால் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய பட்டுள்ளனர் .
மனைவியை வெட்டி கொன்ற கணவன்
மனைவியை வெட்டி கொன்ற கணவன்
மனைவியை கணவன் வெட்டி கொன்ற சம்பவம் கந்தேநுவர, ஹுனுகல பகுதியில் இடம்பெற்றுள்ளது,மனைவியை கொன்ற கணவன் கைது செய்யப்பட்டார் .
கணவன் மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டத்தை அடுத்து ஆத்திரம் கொண்ட கணவன் மனைவியை கத்தியால் பலமுறை குத்தியும் வெட்டி கொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .
கொலைக்குற்ற சாட்டில் மனைவியை கொன்ற கணவன் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைகளிற்கு உள்ளாக்க பட்டுள்ளார் .
இலங்கையில் இவ்வாறான படுகொலைகள் அதிகரித்து செல்கின்றமை மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .
குறித்த கொலை வழக்கு தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .



























































