Tag: விவசாயிகள்
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
மன்னார் மாவட்ட சிறுபோக நெற்செய்கை
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், மன்னார் மாவட்ட சிறு போக நெற்செய்கை க்கான புலவுகளை தெரிவு செய்வதில் அதிகாரிகளின்
தனிப்பட்ட பழி வாங்களை கண்டித்து இன்று (13) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான சிறு போக செய்கைக்காக நெடுங் கண்டல் புலவை திறந்து தருமாறு கோரி மாந்தை மேற்கு விவசாயிகள் குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
போராட்டத்தில் விவசாயிகள்
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மன்னார் மாவட்டச் செயலகத்தின் நுழைவாயிலை முற்றுகையிட்டு,பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அதிகாரிகளின் தனிப்பட்ட பழிவாங்கல்களுக்கு இடம் கொடுக்காதீர்கள்,திறந்து விடு திறந்து விடு நெடுங்
கண்டல் புலவை திறந்து விடு,கொல்லாதே கொல்லாதே விவசாயிகளை கொள்ளாதே உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது போராட்டத்தில் ஈடுபட்ட மாந்தை மேற்கு விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்ட காலம் தொட்டு இன்று வரை ஒரு போதும் நெடுங்கண்டல் புலவு பூட்டப்படவில்லை.
1974 ஆம் ஆண்டு நீர் தட்டுப்பாடு வந்த போது காலபோகத்தில் செய்கை பண்ணப்படும் 40 ஏக்கருக்கு சிறுபோகத்தில் 1 ஏக்கர் என்ற தீர்மானத்தில் 40:1
என்ற விகிதத்தில் விவசாயம் செய்யப்பட்ட போது சின்ன உடைப்பு துலுசின் கீழ் உள்ள புலவுகள் மாத்திரம் திறக்கப்பட்டது.
இதில் நெடுங்கண்டல் புலவு முதன்மையானதாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட நீர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து புலவுகளும்
விதை நெல்
பூட்டப்பட்டு மன்னார் மாவட்ட விவசாயிகள் விதை நெல் தேவைக்காக நெடுங்கண்டல் புலவு மாத்திரம் திறந்து விவசாயம் செய்யப்பட்டது.
இம்முறை எமது நெடுங்கண்டல் புலவு இம்முறை பூட்டப் பட்டதற்கான காரணத்தை தனிப்பட்ட முறையில் எமது கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள் உரிய அதிகாரிகளை சந்தித்து வினவிய போது 2023 ஆம்
ஆண்டின் புலவு பங்கீட்டில் தனிப்பட்ட நபர் ஒருவருடனான முரண்பாட்டிற்கு பழி தீர்க்கும் வகையில் இம்முறை எமது புலவு பூட்டப்பட்டுள்ளது என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொண்டுள்ளோம்.
குறித்த விஷயத்திற்காக நாம் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மன்னிப்புக் கோரினோம்.
உரிய அதிகாரிகளை நேரில் சந்தித்து மிகத் தெளிவாக விளக்கியிருந்தோம்.சாதக பாதக நிலையை தெளிவு படுத்தி எமது புலவை திறந்து தரும் படி பணிவாக வேண்டினோம்.
எனினும் ஏழை விவசாயிகளாகிய நாங்கள் வஞ்சிக்கப்பட்டோம்.இதன் அடிப்படையிலேயே எமது உரிமைகளை பெற்றுக் கொள்ள போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இன்றைய தினம் காலை மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்று கூடி போராட்டத்தை முன்னெடுத்தோம்.
2024 ஆம் ஆண்டுக்கான சிறு போக செய்கைக்காக நெடுங்கண்டல் புலவை திறந்து தருமாறு விவசாயிகள் சார்பாக கோரிக்கை முன் வைக்கின்றோம் என போராட்டத்தில் ஈடுபட்ட மாந்தை மேற்கு விவசாயிகள் தெரிவித்தனர்.
கோரிக்கை அடங்கிய மகஜர்
தமது கோரிக்கை அடங்கிய மகஜர் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
இதன் போது விவசாயிகள் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர்
எஸ்.ஆர்.குமரேஸ்,ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளர் லுஸ்ரின் மோகன் ராஜ்,மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் முஜாகிர் உற்பட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Featured
விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவல்- மத்திய அரசு
விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவல்- மத்திய அரசு
மாவோயிஸ்டுகளில் ஒரு பிரிவினர் விவசாயிகளின் போராட்டத்துக்குள் புகுந்து வன்முறையை நிகழ்த்த திட்டமிட்டு
இருப்பதாகவும், எனவே விவசாயிகள் போராட்டத்தில் எந்த நேரத்திலும் கலவரம் வெடிக்கலாம் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவல்- மத்திய அரசு எச்சரிக்கை
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்
புதுடெல்லி:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இன்று (சனிக்கிழமை) 17-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது.
விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இதுவரை நடைபெற்ற 5 பேச்சுவார்த்தைகளில் சுமூக முடிவு எட்டப்படவில்லை.
இதற்கிடையே 3 சட்டங்களிலும் தேவையான திருத்தங்கள் செய்ய தயார் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் விவசாயிகள் தரப்பில் சட்டங்களை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.
தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்த பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்பட பல்வேறு மாநிலங்களில்
இருந்து மேலும் விவசாயிகளை திரட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி நேற்று சுமார் 50 ஆயிரம் விவசாயிகள் டெல்லி எல்லைக்கு புறப்பட்டு சென்றனர்.
டெல்லியை நோக்கி நூற்றுக்கணக்கான டிராக்டர்களில் விவசாயிகள் மீண்டும் திரண்டு வந்ததால் நேற்று இரவு முதல்
பதட்டமான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து டெல்லி எல்லை பகுதிகளை போலீசார் சீல் வைத்துள்ளனர். பல பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகள் டெல்லிக்குள் ஊடுருவாமல் இருப்பதற்காக எல்லையில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு வருகிறார்கள். குர்கான் எல்லை பகுதியில் 2,500 போலீசார் கூடுதலாக
நிறுத்தப்பட்டுள்ளனர். அதுபோல பரீதாபாத் எல்லை பகுதியில் சுமார் 4 ஆயிரம் போலீசார் கூடுதலாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
அரியானா மாநிலம் வழியாக வரும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை தடுத்து நிறுத்துவதற்காக போலீசார் இந்த ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.
இந்தநிலையில் இன்று விவசாயிகள் டெல்லிக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் விவசாயிகளால்
முற்றுகையிடப்பட்டன. குறிப்பாக டெல்லி-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.
அதுபோல சுங்க சாவடிகளையும் விவசாயிகள் முற்றுகையிட்டனர். இதனால் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் இன்று மேலும்
தீவிரம் அடைந்துள்ளது. விவசாயிகள் தொடர்ந்து போராடுவோம் என்று மத்திய அரசை எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையே 3 விவசாய சட்டங்களையும் ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பலர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேற்று பாரதீய கிஷான் யூனியன் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
தொடரப்பட்டது. விவசாய சட்டங்கள் தொடர்பாக விசாரணை நடைபெறும் போது தங்களது தரப்பு கருத்துக்களை கேட்க வேண்டும் என்று விவசாய அமைப்பு தெரிவித்து உள்ளது.
வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
எனவே அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் போது பாரதீய கிஷான் அமைப்பு சார்பில் புதிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெறாவிட்டால் அடுத்தக்கட்டமாக ரெயில் மறியல் போராட்டத்தை நடத்துவோம் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதனால்
விவசாயிகள் போராட்டம் திசை திரும்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் விவசாயிகளின் போராட்டத்துக்குள் சமூக விரோத சக்திகள் புகுந்து இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. மாவோயிஸ்டுகளில் ஒரு பிரிவினர் விவசாயிகளின்
போராட்டத்துக்குள் புகுந்து வன்முறையை நிகழ்த்த திட்டமிட்டு இருப்பதாகவும், எனவே விவசாயிகள் போராட்டத்தில் எந்த நேரத்திலும் கலவரம் வெடிக்கலாம் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
விவசாயிகள் போராட்டத்தை சமூக விரோத சக்திகள் திசை திருப்பி கொண்டு செல்லும் அபாயம் இருப்பதாக மத்திய உள்துறைக்கு உளவு அமைப்புகளும் தகவல் கொடுத்து எச்சரித்து உள்ளன.
இதையடுத்து மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று காலை பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை
நடத்தினார். விவசாயிகள் போராட்டம் நடைபெறும் டெல்லி எல்லை பகுதிகளில் எத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று ஆய்வு செய்தார்.
விவசாயிகள் மத்தியில் அரசியல்வாதிகள், மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் நுழைந்திருக்கிறார்களா என்பது பற்றியும் அவர் கேட்டறிந்தார். இதையடுத்து டெல்லியை இணைக்கும் பஞ்சாப்,
அரியானா, உத்தரபிரதேசம் எல்லை பகுதிகளில் கண்காணிப்பையும், பாதுகாப்பையும் மேலும் தீவிரப்படுத்த அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் இடங்களில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
அமித் ஷா போன்றே மத்திய உணவு, ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயலும் விவசாயிகள் போராட்டத்தில் சமூக விரோத சக்திகள் ஊடுருவி இருப்பதாக எச்சரித்துள்ளார். அவர் கூறுகையில்,
“விவசாயிகள் தரப்பில் பேசிய சிலர் வேளாண் சட்டம் மட்டுமின்றி வேறு சில விவகாரங்களையும் பேசுகிறார்கள். சர்ஜில் இமாம் என்பவரை விடுதலை செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்.
விவசாயிகள் எதற்காக இமாமை விடுதலை செய்ய கோரிக்கை விடுக்கிறார்கள். இதை ஏற்க இயலாது. இத்தகைய கோரிக்கை
வைத்ததற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. எனவே விவசாயிகள் கவனமாக இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தி உள்ளார்.
மத்திய அரசு தெரிவித்துள்ள இந்த எச்சரிக்கையை ஏற்க விவசாயிகள் மறுத்து உள்ளனர். போராட்டம் நடைபெறும்
இடங்களில் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் உள்பட எந்த சமூக விரோத அமைப்பும் ஊடுருவவில்லை என்று விவசாய சங்க தலைவர்கள் கூறி உள்ளனர்.
டெல்லி புறநகர் பகுதிகளில் தங்கி இருக்கும் விவசாயிகள் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேச வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.













