ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
ஆண் ஒருவரின் சடலம் மீட்பு ,முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு பின் பகுதியிலேயே இவ்வாறு சடலம் அடையாளம் காணப்பட்டுட்டது.
பொலிஸார் விசாரணை
சடலம் ஒன்று காணப்படுவது தொடர்பில் மாங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வவுனியா ஊர்மிலாந்தோட்டம் பகுதியை சேர்ந்த 49 வயதுடைய ஆசீர்வாதம் என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கிளிநொச்சி வைத்தியசாலை
சம்பவ இடத்துக்கு சென்ற முல்லைத்தீவு நீதிமன்ற மேலதிக நீதவான் சடலத்தை பார்வையிட்டதுடன், கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து சென்று பிரேத பரிசோதனை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு அறிவுறுத்தினார்.
இலங்கையில் நாள் தோறும் இடம்பெறும் இவ்விதமான படுகொலை சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இந்த படுகொலைக்கு பின்னல் யார் உள்ளது ..? என்பதை விசாரிக்க போலீசார் தயங்கி வருவது ஏன் என்ற கேள்வி எழுப்பிபி பட்டுள்ளது ,எனினும் போலீசார் தரப்பில் உரிய பதில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது .












