விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு
Posted in இலங்கை செய்திகள்

விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு

விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு

விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு.அமெரிக்கா விவசாயத் தணைக்களத்தின் (USDA) வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் (Alexis Taylor)மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

அமெரிக்க உதவியுடன் உற்பத்தி

இதன்போது, அமெரிக்க உதவியுடன் முன்னெடுக்கப்படும் பால் உற்பத்தியை நவீனமயப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

அந்த திட்டத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் பால் உற்பத்தியை விரிவுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடுகள்

அரசாங்கத்தின் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இத்துறையில் இளைஞர்களை அதிகளவில் உள்ளீர்ப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இதன்போது அரசாங்கத்தின் விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்க விவசாய துணைச் செயலாளர் உறுதியளித்தார்.

ஐரோப்பா அமெரிக்கா நாடுகளில் விவசாயம் அதி நவீன முறையில் செய்கை முறைக்கு உள்ளாக்க படுகிறது .

அவ்வாறு இலங்கையில் நடைமுறை ப்படுத்தினால் ,தன்னிறைவு பொருளாதரத்தில் இலங்கை அதியுச்ச பயனை அடையும் என எதிர் பார்க்க படுகிறது .

வீதி வாகன விபத்தில் மூவர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

வீதி வாகன விபத்தில் மூவர் மரணம்

வீதி விபத்தில் மூவர் மரணம்

வீதி வாகன விபத்தில் மூவர் மரணம் .இலங்கையில் நாடளாவிய நிலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் மூவர் மரணம் ஆகியுள்ளனர் .

புறக்கோட்டை – ஒல்கொட் மாவத்தை இரண்டாம் குறுக்குத் தெரு,அனுராதபுரம் – புத்தளம் வீதியில் பண்டுலகம தொம்பே, புதுபாகல – வானலுவாவ வீதிகளில் ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கிய இந்த மூவரும் மரணமாகியுள்ளனர் .

பாதை சாரி உள்ளிட்டவர்களே இந்த வாகன விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார் .

விபத்து மரணம் பொலிஸ் விசாரணை

வீதி விபத்து மரணம் தொடர்பாக பொலிஸ் விசாரணை ஆரம்பிக்க பட்டுள்ளது .

வாகன சாரதிகள் வீதியல் , வாகனங்களை செலுத்தி செல்லும் பொழுது ,வீதி விதிமுறைகளை பின்பற்ற தவறுவதால் ,இவ்வாறன வீதி வாகன விபத்துக்கள் ஏற்படுவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் .

இவ்வாறான வீதி விபத்துக்களை கட்டு படுத்துவதற்கு பல்வேறு பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகின்ற பொழுதும் ,தொடர்ந்து இடம்பெறும் இவ்விதமான வீதி விபத்துக்களை தடுக்க முடியவில்லை என்ற கவலை வெளியிட பட்டுள்ளது .

சாலை விதிகளை மக்கள் சமுகம் பின் பற்றாத வரை ,இவ்வாறான வீதி விபத்துக்களை ,தடுக்க முடியாது என்கிறது பொலிஸ் .

சாரதிகள் ,பாதை சாரிகள் குறுக்கும் மறுக்கும் செல்லும் ,பொழுதும் வீதி விதிகளை மதித்து ,செயலாற்றினால் ,இவ்வாறன வீதி வாகன விபத்துக்கள் இடம்பெறாது அவர்கள் தெரிவிக்கின்றனர் .

மிரட்டும் வீதி விபத்துக்கள்

வீதி வாகன விபத்தில் மூவர் மரணம் அடைந்த செயல் மக்கள் மத்தியில் அதிரவலைகளை ஏற்படுத்தியுள்ளது .,பேரூந்து மோட்டர் சைக்கிள்,ஆட்டோ ,என்பன இலங்கையில் அதிக வீதி விபத்துக்களில் சிக்கி வருகின்றன .

மாதம் ஒன்றுக்கு மூன்றுக்கு மேற்பட்ட பேரூந்து வீதி விபத்துக்கள் ,ஆட்டோ விபத்துக்கள் என்பன இடம்பெறுவதாக புதிய புள்ளி விபரம் தெரிவித்துள்ளது .

பயணிகள் பேரூந்துகள் போட்டி போட்டு ஓடுவதால் ,அதில் பயணிக்கும் மக்களும் காயமடைந்து ,பலியாகியும் வருகின்றனர் .

உலக நாடுகளில் அதிக வீதி விபத்துக்களில் பலியாகும் மக்கள் எண்ணிக்கை கொண்ட நாடாக இலங்கை இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது .

மக்கள் சமூகம் விழித்து கொள்ளாத வரை இந்த வீதி வாகன விபத்துக்களை யாராலும் தடுக்க முடியாது என்பது குறிப்பிட தக்கது .

    காணி மோசடி செய்து விற்பனை
    Posted in இலங்கை செய்திகள்

    காணி மோசடி செய்து விற்பனை

    காணி மோசடி செய்து விற்பனை

    காணி மோசடி செய்து விற்பனை வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடி செய்து விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

    வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியை பராமரிப்பதற்காக யாழ்ப்பாணத்தை சேர்ந்த உறவினர் ஒருவருக்கு அற்றோணித்தத்துவம் முடித்து கொடுத்துள்ளார்.

    அற்றோணித்தத்துவத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி காணியினை மூன்று துண்டுகளாக பிரித்து ஒரு பகுதியை நபர் ஒருவருக்கு விற்பனை செய்ததுடன், மற்றுமொரு பகுதியை வங்கியில் ஈடுவைத்துள்ளார்.

    மற்றைய துண்டினை தனது உறவினருக்கு நன்கொடையாக கொடுத்து , அதனை மீள அறுதியாக பெற்றுள்ளார்.

    காணி உரிமையாளர்

    இது தொடர்பில் அறிந்த காணி உரிமையாளர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் , முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து , காணி விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியவேளை, மன்று சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

    காதாலியை பார்க்க சென்றவர் மாயம்
    Posted in இலங்கை செய்திகள்

    காதாலியை பார்க்க சென்றவர் மாயம்

    காதாலியை பார்க்க சென்றவர் மாயம்

    காதாலியை பார்க்க சென்றவர் மாயம் .காதலியின் வீட்டுக்குச் சென்ற இளைஞன் காணாமல் போன சம்பவம் குளியாபிட்டிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

    குறித்த பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் இளைஞர் ஒருவரே காணாமல் போயுள்ளார்.

    காணாமல் போன வாலிபன்

    குளியாபிட்டிய – கபலேவ பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான சுசித ஜயவன்ச என்ற இளைஞன் தொடர்பில் ஆறு நாட்கள் ஆகியும் இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

    இவர் கடந்த 22ஆம் திகதி குளியாப்பிட்டி வஸ்ஸாவுல்ல பிரதேசத்தில் உள்ள தனது காதலியின் வீட்டிற்கு தனது கடையின் ஊழியர் ஒருவருடன் சென்றுள்ளார்.

    அவர் குறித்த வீட்டிற்குச் சென்ற நேரம் முதல் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

    காணாமல் போவதற்கு முன்னர்

    காணாமல் போவதற்கு முன்னர் சுசித சென்றதாக கூறப்படும் வீட்டின் உரிமையாளரான சிங்கிதி என்ற நபரால், சுசிதவின் நண்பருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

    இது தொடர்பாக காணாமல் போனதாகக் கூறப்படும் சுசிதவின் நண்பர் கூறும் போது,

    “செவ்வாய்க்கிழமை இரவு 7:58 மணிக்கு சிங்கிதி என்ற நபர் எனக்கு போன் செய்தார்.

    என் மகளுக்கு நியாயம் செய்தேன்

    அப்பாவாக என் மகளுக்கு நியாயம் செய்தேன். இப்போது அதை பேசி பலனில்லை. அவனை நான் கொன்று விட்டேன். அவனால் இனி வர முடியாது” என்றார்.

    சம்பவம் தொடர்பில் குளியாபிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகத்திற்கிடமான வகையில் மோட்டார் வாகனமொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

    காதலனை வீட்டுக்கு அழைத்து திட்டம் போட்டு காதலனை வீட்டில் வைத்து கொலை செய்த காதலியின் இந்த கேடுகட்ட செயல்பாடு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

    காதலில் தகராறு

    காதலில் தகராறு ஏற்பட்டாலோ அல்லது முரண்பாடுகள் ஏற்பட்டாலோ விலகி செல்வது முறையாகும் .

    இவ்வாறு நம்பி வந்த ஒருவரை நயவஞ்சமாக படுகொலை புரிந்த செயல் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

    இலங்கையில் அதிகரிக்கும் கொலைகள்

    இலங்கையில் நாள்தோறும் இவ்வாறு இடம்பெறுகின்ற வன்ம கொலைகள் அதிகரித்து காணப்படுகின்றன .

    மனங்களில் ஏற்பட்ட சஞ்சல ,எதிர்பார்ப்பு ஆசைகள் என்பன அதிகரிப்பதன் விளைவே இந்த ,இவ்விதமான படுகொலைகள் அதிகரிக்க காரணம் என தெரிவிக்க படுகிறது .

    லண்டன் லெஸ்டர் தேர் திருவிழா
    Posted in இலங்கை செய்திகள்

    லண்டன் லெஸ்டர் தேர் திருவிழா


    லண்டன் லெஸ்டர் தேர் திருவிழா

    லண்டன் லெஸ்டர் தேர் திருவிழா .தேர் திருவிழாவுக்கு விசேடமாக லண்டனில் தயாரிக்க பட்ட தேர் இதுவாகும் .

    தேர் தயாரிப்பது எப்படி

    ஸ்ரீ ஜெ துர்க்கா அம்மான் ஆலயம் ,லெஸ்டர் , தேர் திருவிழா வெகு விமரிசையாக இடம்பெற்றுள்ளது

    ஸ்ரீ ஜெ துர்க்கா அம்மான் ஆலயம் தேர் உருவாக்கத்தின் ஒரு பகுதி .

    -லண்டனை சேர்ந்த நந்தன் அவர்கள் செதுக்கி அசத்கியுள்ளார் .
    விசேடமாக சிறப்பான வடிவமைப்பில் தயாரிக்க பட்ட அம்மன் ஆலயத்தின் தேர் இதுவாகும் .

    தேர் திருவிழா

    லண்டன் லெஸ்டர் தேர் மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது ,அந்த தேர் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைராலகி வருகிறது ,.

    நம்ம தமிழர்கள் கடல் கடந்து வந்த பொழுதும் ,தமிழர்கள் தமது சமயத்தை காட்டி காத்து வருவதை இந்த தேர்த்திருவிழா எடுத்து காட்டுகிறது .

    அழகான சிற்ப வடிவமைப்பை அவர்கள் ,தேரின் முகப்பு பகுதிகளை செதுக்கி வடிவமைத்துள்ளார் .


    குறுகிய கால இடைவெளிக்குள் மிக , ,அழகுற செதுக்கி இருப்பதானது , வியக்க வைக்கிறது .

    தேரை நீங்களும் உங்கள் ஆலயங்களுக்கு தாயரிக்க ,லண்டன் சிற்பி நந்தன் அவர்களை நாடுங்கள் .

    தேரை வடிவமத்தை சிற்பி நந்தன் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள் ,பாராட்டுக்கள் .

    முழுமையான மேலதிக தகவலுடன் காணொளி கீழே இணைக்க பட்டுள்ளது .

    full video

    பெண்கள் பாடசாலை கிரிக்கெட் முறை
    Posted in இலங்கை செய்திகள்

    பெண்கள் பாடசாலை கிரிக்கெட் முறை

    பெண்கள் பாடசாலை கிரிக்கெட் முறை

    ஆண்களுக்கான பாடசாலை கிரிக்கெட் முறைமையை போன்று பெண்கள் பாடசாலை கிரிக்கெட் முறை யையை விரிவுபடுத்தப்படுவதற்கு சமமான வசதிகள் வழங்கப்பட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் பயிற்சி ஆலோசகர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

    கல்லூரி மைதானத்தில்

    கொழும்பு நாலந்தா கல்லூரி மைதானத்தில் நேற்று (26) ஆரம்பமான நாலந்தா கல்லூரி 88 அணி தலைமையிலான மஹேல சங்க சவால் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.

    ஆண்களுக்கான கிரிக்கெட்டை போன்று பெண்களுக்கு

    “ஆண்களுக்கான கிரிக்கெட்டை போன்று பெண்களுக்கான பாடசாலை விளையாட்டு முறையை விரிவுபடுத்த வேண்டும், ஏனென்றால் பெண் வீரர்கள் எதிர்காலத்தில் தேசிய மட்டத்திற்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்…”

    இதேவேளை, நேற்று முன்தினம் (25) அபுதாபியில் நடைபெற்ற மகளிர் 20-20 உலகக் கிண்ணத்திற்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் தாய்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை மகளிர் அணி 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், இலக்கை துரத்திய தாய்லாந்து மகளிர் அணியால் 16.2 ஓவர்களில் 55 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

    தமிழர் பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள்
    Posted in இலங்கை செய்திகள்

    தமிழர் பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள்

    தமிழர் பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள்

    வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர் பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்து காணப்படுவதாகவும்,

    குறிப்பாக தேசிய பாடசாலைகளில் தான் அரசியல் தலையீடுகள் தற்போது அதிகரித்து வருவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

    யாழ்ப்பாணத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

    இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது..

    வட மாகாணத்தில்

    குறிப்பாக வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள தேசிய பாடசாலையான யாழ் மத்திய கல்லூரியில் புதிதாக நியமிக்கப்பட்ட ஒரு அதிபரை கூட மாற்றியிருக்கின்ற ஒரு செயற்பாடு நடந்திருக்கிறது.

    இதே போன்று தான் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பிலுள்ள தேசிய பாடசாலையான பட்டிருப்பு கல்லூரியிலும் அரசியல் தலையீடுகளுடனான சம்பவம் ஒன்று நடைபெற்றிருக்கின்றது.

    அங்கும் நியமிக்கப்பட்ட அதிபரை மாற்றி வேறு ஒருவரை தற்போது நியமித்திருக்கின்றர்.

    அங்குள்ள அரசியல்வாதியானபிள்ளையான் கல்வி அமைச்சுடன் பேசி இந்த மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கின்றார்.

    அரசியல் நலன்களுக்காக கல்வியிலும் அரசியல் தலையீடு

    தமது அரசியல் நலன்களுக்காக கல்வியிலும் அரசியல் தலையீடுகளை பாடசாலைகளில் செய்ய முயல்வது உண்மையில் ஒரு தவறான செயற்பாடாகும்.

    எனவே பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் மேற்கொள்வதை அரசியல்வாதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். கல்வி அமைச்சும் அதிகாரிகளும் இதற்கு இடமளிக்ககூடாது.

    இதனால் தான் வடக்கு கிழக்கு மாகாணங்கள் உள்ள இந்த பாடசாலைகளின் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசியல் தலையீடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நாம் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றோம்..

    தேர்தலில் வெல்ல அரசியல் நுழைவு

    தேர்தல் வருகின்றதால் தமக்கான ஆதரவை பெருகி கொள்வதற்கே அரசியல்வாதிகள் இவ்வாறான செயற்பாடுகளை தற்போது தீவிரமாக முன்னெடுக்கின்றனர்.

    இதனை நிறுத்த வேண்டும் என்று கல்வி அமைச்சிடம் கூறிய போது, நிறுத்துவதாக சொல்லி இருக்கின்றார்கள். ஆனால் இதுவரையில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.

    இவ்வாறு நியமனங்கள் மட்டுமல்ல சில முறையான இடமாற்றங்களில் கூட அரசியல்வாதிகளின் தலையீடுகள் காணப்படுகின்றன.

    இத்தகைய செயற்பாடுகள் கல்வியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் தான் கல்வியில் அரசியல் தலையீடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நாம் கூறுகின்றோம்.

    மேலும் முழு இலங்கையிலும் இருக்கின்ற சுற்றறிக்கை வடமாகாணத்தில் பல சந்தர்ப்பங்கள் பல இடங்களில் ஆசிரியர்கள் விடயத்தில் மீறப்பட்டு வருகிறது.

    ஆகவே சுற்றறிக்கையை மீறி செயற்படுவதை நிறுத்த வேண்டும் என்றும் கூறுகின்றோம்.

    மேலும் இந்த வருடம் மே தினத்தை யாழ்ப்பாணத்தில் செய்ய தீர்மானித்திருக்கின்றோம். இதில் விசேஷமாக அதிபர், ஆசிரியர்கள் முகம் கொடுக்கிற பிரச்சினைகள் மட்டுமில்லாமல்,

    இந்த அரசாங்கம் கொண்டு வந்திருக்கின்ற அடக்குமுறை சட்டங்கள் பேச்சுரிமை தொழிலுரிமை பயங்கரவாத எதிர்ப்பு போன்ற சட்டங்கள் உட்பட பல்வேறு சட்டக்களுக்கு எதிராகவும் அனைவரதும் உரிமைகளை வலியுறுத்தி இதனை செய்கிறோம்.

    ரணில் விக்கிரமசிங்க அரசுக்கு ஒரு உரிமையும் இல்லை

    எனவே மக்களுக்கு இருக்கின்ற உரிமையை மாற்றுவதற்கு ரணில் விக்கிரமசிங்க அரசுக்கு ஒரு உரிமையும் இல்லை.

    ரணில் ராஜபக்ச அரசாங்கம் மக்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்தது மட்டுமல்லாமல் கல்வியில் கூட திருத்தங்கள் என்ற பெயரில் புதிய கொள்கைகளை கொண்டு வர முயன்றிருக்கின்றார்கள்.

    இவ்வாறான திருத்தங்கள் அல்லது புதிய கொள்கைகளை கொண்டு வந்து இந்த நாட்டில் உள்ள இலவச கல்வி முறை இல்லாமல் ஆக்குகின்ற ஒரு செயற்பாட்டை தான் இவர்கள் செய்யப் போகின்றார்கள்.

    இது இலவச கல்வியை காசுக்கு கொடுக்கிற செயற்பாட்டைதான் அரசாங்கம் முன்னெடுக்கின்ற ஆபத்து உள்ளது.

    இதேபோன்று இப்போது பாடசாலைகளை மூடுகின்ற செயற்பாட்டுகளை ரணில் ராஜபக்ச அரசாங்கம் முன்னெடுக்கின்றது.

    இது அந்தந்த பிரதேசங்களில் இருக்கின்ற மக்களின் உரிமையை பறிக்கின்ற ஒரு செயற்பாடாகவே இந்த அரசின் செயற்பாடுகள் அமைகின்றன.

    அது மட்டுமல்லாமல் பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் காசு கொடுத்து படிக்க வேண்டிய ஒரு செயல்பாட்டையும் இவர்கள் செய்ய பார்க்கின்றார்கள்.

    அடக்குமுறை சட்டங்கள்

    இந்த அரசாங்கம் கொண்டு வருகின்ற அடக்குமுறை சட்டங்கள் கல்வியை விற்கின்ற சட்டங்கள் ஆசிரியர், அதிபர்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சனைகள் சம்பளம் முரண்பாடுகளை பிரச்சனையை தீர்க்கிறது.

    இப்படியான பல பிரச்சினைகளை முன் வைத்து தான் இலங்கை ஆசிரியர் சங்கம் வருகின்ற மே முதலாம் திகதி யாழ்ப்பாணத்தில் எமது மே தினத்தை நடத்துவதற்கு தீர்மானித்திருக்கிறது.

    இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்ப்பட வேண்டுமென அரசாங்கத்திற்கு அழுத்தமாக நாம் கூறுகிறோம்.

    அப்படி அரசாங்கம் செய்யாத விடத்து ஏனைய தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து நாம் போராட்டங்களை முன்னெடுப்போம்.

    உண்மையிலே மக்கள் விரோத, மாணவர் விரோத, ஆசிரியர் விரோத செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவிற்கு எந்த உரிமையும் இல்லை.

    ஏனென்றால் அவர் மக்கள் ஆணையில்லாத ஒரு ஜனாதிபதி, அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு ஜனாதிபதி அல்ல.

    ஆனாலும் பெரமுனவின் 134 வாக்குகளை வைத்து தான் அவர் எல்லாத்தையும் செய்கின்றார்.. அவ்வாறு அவர் செய்கின்ற அனைத்தும் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளாகத்தான் இருக்கிறது.

    தேர்தலும் இல்லை

    குறிப்பாக தேர்தல் வைக்கிறேன் வைக்கிறேன் என்று சொல்லி ஓரு தேர்தலும் இல்லை. அவ்வாறு தேர்தல் என்பது வெறுமனே பேசு பொருளாக மட்டுமே இருக்கிறது.

    மக்கள் தங்களுடைய பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு அல்லது தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கு அந்த மக்களுக்கு இருக்கின்ற உரிமையை வாய்ப்பை அளிக்காத ரணில் ராஜபக்ச அரசாங்கம், மறுபக்கத்தில் கல்வி உட்பட நாட்டின் எல்லா உரிமையும் அழிக்கின்ற செயற்பாடுகளை தான் செய்கின்றது என்றார்.

    Error: View 9293b2au4w may not exist
    காஸாவுக்கு வழங்கிட நிதி திரட்டிய இலங்கை
    Posted in இலங்கை செய்திகள்

    காஸாவுக்கு வழங்கிட நிதி திரட்டிய இலங்கை

    காஸாவுக்கு வழங்கிட நிதி திரட்டிய இலங்கை

    காஸாவுக்கு வழங்கிட நிதி திரட்டிய இலங்கை முசுலீம் மக்கள் அந்த நிதியை இலங்கை ஜனாதிபதியிடம் கையளித்தனர் .

    பாலஸ்தீனம் காசா பகுதியில் பாதிக்க பட்டுள்ள ,பாலஸ்தீன காசா சிறுவர்கள் நலன் கருதி இந்த நிதி திரட்ட பட்டுள்ளது .

    காஸாவுக்கு வழங்கிட நிதி

    அவ்வாறு காஸாவுக்கு வழங்கிட நிதி திரட்டிய இலங்கைதிரட்ட பட்ட நிதியே தற்போது பாலஸ்தீனம் காசா மக்களுக்கு வழங்கும் முகமாக மட்டக்களப்பு முசுலீம்கள் இணைந்து ,இந்த நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர் .

    இவ்வாறு திரட்ட பட்ட பெரும் தொகை பணமே ,இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிடம் கையளிக்க பட்டுள்ளது .

    இஸ்ரேல் பாலஸ்தீனம் போர்

    இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் ஆரம்பிக்க பட்டு ஏழு மாதங்கள் கடந்து செல்கின்ற பொழுதும் ,இதுவரை இஸ்ரேல் அரச பயங்கரவாதம் ,பலஸ்தீன சிறுவர்கள் மீது நடத்தும் தாக்குதல்களை ஐநா கண்டுகொள்ளவில்லை .

    இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு நடத்தும் ஆக்கிரமிப்பு ,இனப்படுகொலையை தடுத்து நிறுத்த மறுத்து ,மேற்கு நாடுகள் ,அமெரிக்கா என்பன இஸ்ரேலுக்கு ஆதரவாக இனப்படுகொலைகளை நடத்துவதை ஊக்குவித்து வருகின்றன .

    மக்கள் போருக்கு எதிராக குரல்

    மக்கள் போருக்கு எதிராக திசை திரும்பியுள்ள பொழுதும் ,அந்த நாடுகளின் அரசியல்வாதிகள் ,தமது பொருளாதரத்தை கைப்பற்றி கொள்ள ,இஸ்ரேலுக்கு ஆதாரவாக செயலாற்றி வருகின்றனர் .

    ஒவ்வொரு நாடுகளின் அரசியல் தலைவர்களும் ,இஸ்ரேலுடன் நெருங்கிய பொருளாதார வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அதனால் தமது பொருளாதாரத்தை காப்பாற்றிட ,தமது நலன் சார்ந்து செயல் ஆற்றி வருகின்றனர்

    இவ்வாறான கால பகுதியில் பாலஸ்தீன சிறுவர்களை காப்பாற்றிட இலங்கை முஸ்லீம்கள் ,சேகரித்த இந்த பணம் பாராட்டை பெற்றுள்ளது .

    இலங்கை முஸ்லீம்கள்

    ஸ்ரீலங்கா வாழ் முசுலீம்கள் தமது மத அடிப்படையிலும் ,மனிதபாபிமான செயல் பாட்டின் அடிப்படையில் ,பாலஸ்தீன குழந்தைகள் நலன் கருதி ,திரட்டிய பணம் உரிய முறையில் அந்த மக்களுக்கு சென்று சேரும் வகையில் கையளிக்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது .

    காசா மக்களுக்கு ஆதரவாக இலங்கை குரல்

    பாலஸ்தீனிய காசா மக்களுக்கு ஆதரவாக இலங்கை குரல் கொடுத்து இருந்ததுடன் ,பல அமைச்சர்களும் தமது ஆதரவை பாலஸ்தீனம் காசா மக்களுக்கு வழங்கி இருந்தனர்.

    இவ்வாறான நிலையில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிடம் இந்த நன்கொடை நிதி கையளிக்க பட்டுள்ளது .

    வர்த்தகர்கள் விளையாட்டு குழுக்கள் ,பள்ளிவாசல்கள் என்பனவற்றின் ஊடக சேகரித்த பணமே இலங்கை ஜனாதிபதியிடம் கையளிக்க பட்டுள்ளன .

    கிளிநொச்சியிலும் மனித எச்சங்கள் மீட்பு
    Posted in இலங்கை செய்திகள்

    கிளிநொச்சியிலும் மனித எச்சங்கள் மீட்பு

    கிளிநொச்சியிலும் மனித எச்சங்கள் மீட்பு

    கிளிநொச்சியிலும் மனித எச்சங்கள் மீட்பு கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.

    இதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து பொலிஸார் மாவட்ட நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

    கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான்

    கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று குறித்த மனித எச்சங்கள் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

    தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும், தெரிவிக்க பட்டது .

    பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

    கிடைக்கப் பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளார்.

    அத்துடன், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.

    இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்தினை மீண்டும் சென்று பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார்.

    பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் சிக்கியது
    Posted in இலங்கை செய்திகள்

    பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் சிக்கியது

    பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் சிக்கியது

    பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் சிக்கியது தனது சகோதரியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் தனது சகோதரியால் சிக்கினார்

    தனது சகோதரியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதுடன், வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

    யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில்

    யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில் , சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.

    பெண்ணின் சகோதரி உயிரிழப்பு

    இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.

    பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி

    இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும் , போதை

    ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியதும் வந்துள்ளது.

    ஆதரவற்றோர் இல்லத்தில்

    பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் சகோதரன் தனது தங்கையை கொண்டு சென்று சேர்த்துள்ளார்.

    பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன் , உடலில் காயங்கள் காணப்பட்டமையால் , இல்ல நிர்வாகத்தினரால் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

    வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார்.

    பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதை

    அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால் , முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது , பெண் பாலியல் வன்புணர்வுக்கு

    உட்படுத்தப்பட்டுள்ளமையும் , பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.

    யாழ்ப்பாண பொலிஸார் விசாரணை

    சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

    விசாரணைகளின் அடிப்படையில் , பெண்ணின் சகோதரனே , பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும் , போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.

    சகோதரன் கைது

    அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை முற்படுத்தியவேளை , சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

    பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் கைது

    அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும் , அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    போராட்டம் ஏற்படாதவாறு பொருளாதார கட்டமைப்பு
    Posted in இலங்கை செய்திகள்

    போராட்டம் ஏற்படாதவாறு பொருளாதார கட்டமைப்பு

    போராட்டம் ஏற்படாதவாறு பொருளாதார கட்டமைப்பு


    போராட்டம் ஏற்படாதவாறு பொருளாதார கட்டமைப்பு மக்கள் போராட்டம் மீண்டும் ஏற்படாத வகையில் பொருளாதாரத்தை கட்டமைப்போம்.

    சரிவடைந்த பொருளாதாரத்தை இரண்டு வருடங்களில் மீட்க முடிந்தது. சரிவடையாத வகையில் வலுவான பொருளாதாரத்தை கட்டமைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.

    கொழும்பு ஐ.ரி.சி. ரத்னதீப அதி சொகுசு ஹோட்டல் கட்டடத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

    சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்பதற்கான அஸ்திரமாகவும் அது அமைந்திருக்கும். சுற்றுலா வியாபாரத்தினால் இலங்கையை துரிதமாக மீட்கலாம். அதற்கான வசதிகளை வழங்க நாம் தயார்.

    அவ்வாறானதொரு மக்கள் போரட்டம் மீண்டும் ஏற்படாதவாறான பொருளாதாரத்தை கட்டமைக்க வேண்டும். அதற்கு தேவையான திட்டங்களை நாம் செயற்படுத்துவோம். இந்த திட்டங்களால் பொருளாதாரத்தையும் நிலைப்படுத்த முடியும். அதனால் மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்வடையும் என்றார்.

    எதிர் வரும் தேர்தலில் மக்கள் ஆதாராவை பெற்றுக்கொள்ள ரணில் பல்வேறு பட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருவது குறிப்பிட ஹக்கது .

    திருட்டு வைத்தியருக்கு வலை வீச்சு
    Posted in இலங்கை செய்திகள்

    திருட்டு வைத்தியருக்கு வலை வீச்சு

    திருட்டு வைத்தியருக்கு வலை வீச்சு

    திருட்டு வைத்தியருக்கு வலை வீச்சு குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு நேற்று (24) தனது தாயுடன் சென்ற குழந்தையிடமிருந்து வைத்தியர் போல நடித்த ஒருவர் தங்க ஆபரணங்களை திருடியுள்ளதாக குளியாப்பிட்டிய தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

    அனுக்கனே கும்பகொடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய தாய் ஒருவர் தனது மகனின் காலில் முள்ளினால் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் வைத்தியரைச் சந்தித்து தேவையான சிகிச்சைகளை பெற்றுக்கொண்டார்.

    மருத்துவர் போல் தோற்றமளிக்கும் குறித்த நபர் மகனுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், அவர் அணிந்திருந்த தங்க ஆபரணங்களை கழற்றி பையில் போடுமாறும் கூறியுள்ளார்.

    இதன்போது, மருத்துவர் வேடமணிந்த நபர் குழந்தையை அழைத்துச் சென்று மருத்துவமனையில் உள்ள பெஞ்சில் உட்கார வைத்துவிட்டு குழந்தையின் தங்க ஆபரணங்களுடன் தப்பிச் சென்றதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .போலீஸ் விசாரணைகள் தொடர்கின்றன .

    சுவீடன் பறந்த அனுர திஸாநாயக்க
    Posted in இலங்கை செய்திகள்

    சுவீடன் பறந்த அனுர திஸாநாயக்க

    சுவீடன் பறந்த அனுர திஸாநாயக்க

    சுவீடன் பறந்த அனுர திஸாநாயக்க தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க சுவீடன் நாட்டிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

    நேற்றிரவு (25) அனுரகுமார திஸாநாயக்க இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    அனுரகுமார திஸாநாயக்க ஏப்ரல் 27 ஆம் திகதி சனிக்கிழமை சுவீடனில் நடைபெறும் பொதுக்கூட்டம் மற்றும் பல சிநேகபூர்வ சந்திப்புகளில் பங்கேற்பதற்காகவே இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

    இலங்கையில் அடுத்த ஜனாதிபதி தான் எனவே முழக்கம் இட்டு வரும் அனுர திஸாநாயக்க தற்போது முக்கிய ஏறிப்போய் நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளுக்கு பயணம் சென்றவண்ணம் உள்ளார் .

    தான் இலங்கையின் ஜனாதிபதியானால் அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற வரைபு அட்டவணை ஒன்று சில நாடுகளினால் அனுர திஸாநாயக்காவுக்கு வழங்க பட்டுள்ளது என, சில எதிரிகள் இப்படி உரைத்து வருகின்றன .

    இது அனுர திஸாநாயக்க்வின் அரசியல் பயணத்தை திசை திருப்பி மக்களை அவருக்கு எதிராக திசை திருப்பும் தந்திரோபாய திட்டமா என எண்ண வைக்கிறது .

    எனினும் இவரும் சிங்கள மக்கள் மத்தியில் பேசும் பொழுது இனவாதத்தை கக்கிய வண்ணம் பயணிக்கிறார் .

    அவ்வாறன இவர் எவ்வாறு தமிழருக்கு தீர்வினை பெற்று கொடுப்பார் என்ற விடயம் எழுகிறது .

    சுவீடன் பயணமும் இதன் ஒரு அங்கமாக காணப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

    இராணுவ கெப்வண்டி மீது லொறி மோதில்
    Posted in இலங்கை செய்திகள்

    இராணுவ கெப்வண்டி மீது லொறி மோதல்

    இராணுவ கெப்வண்டி மீது லொறி மோதல்

    இராணுவ கெப்வண்டி மீது லொறி மோதல் ,அதிகாலை மாங்குளம் வசந்தநகரில் இராணுவ கெப் வண்டி மீது லொறி மோதியதில் இலங்கை இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

    முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ்

    முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று (26) காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளனர்.

    குறித்த சம்பவம் காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முறிகண்டி வசந்தநகர் சந்தியின் A9 வீதியில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

    கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த பார ஊர்தியை, அதே திசையில் பயணித்த இராணுவ கப் வாகனம் முன் நோக்கி முற்பட்டுள்ளது.

    இதன்போது குறித்த கப் வாகனம் திடிரென இயங்காமல் நின்றுள்ளது. எதிரே வந்த வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி விடும் எனும் அச்சத்தில் விபத்தை தருக்கும் நோக்குடன் சாரதி பாரஊர்தியை செலுத்த முற்பட்டுள்ளார்.

    இராணுவ வீரர்கள் வீதியில் விழுந்துனர்

    இதன்போது, கப் வாகனத்தில் பாரஊர்தி மோதியதில் அதில் பயணித்த இரண்டு இராணுவ வீரர்கள் வீதியில் விழுந்துள்ளனர்.

    அதில் ஒருவர் மேல் பாரஊர்தி ஏறியதில் குறித்த இராணுவ வீரர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

    உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

    இதேவேளை சம்பவத்தில் காயமடைந்த 7 பேரில் இருவர் இரணைமடுவில் உள்ள இராணுவ வைத்தியசாலையிலும், மற்ற நால்வரும் கிளிநொச்சி வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடல் கொந்தளிப்பாக காணப்படும் எச்சரிக்கை
    Posted in இலங்கை செய்திகள்

    கடல் கொந்தளிப்பாக காணப்படும் எச்சரிக்கை

    கடல் கொந்தளிப்பாக காணப்படும் எச்சரிக்கை

    கடல் கொந்தளிப்பாக காணப்படும் எச்சரிக்கை ,நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

    இதன்படி, மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

    மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்

    காற்று மின்னல் தாக்குதல்

    பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

    நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.

    ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

    இதன் கடல் கரையோர மக்களுக்கும் மீனவர்களும் ,சுற்றுலா பயணிகளுக்கும் கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

    சம்பந்தன் ஐயாவுக்கு விடுமுறை
    Posted in இலங்கை செய்திகள்

    சம்பந்தன் ஐயாவுக்கு விடுமுறை

    சம்பந்தன் ஐயாவுக்கு விடுமுறை

    சம்பந்தன் ஐயாவுக்கு விடுமுறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா, பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காமல் இருக்க மேலும் 3 மாத கால விடுமுறை வழங்க பாராளுமன்றம் அனுமதியளித்துள்ளது.

    பாராளுமன்றம் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்ல எம்.பி., த.தே.கூவின் தலைவர் இரா.சம்பந்தன்

    பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காமல் இருக்க மேலும் 3 மாத கால விடுமுறை வழங்கும் முன்மொழிந்தார். அதற்கு பாராளுமன்றம் அங்கிகாரம் வழங்கியுள்ளது.

    நீதிபதி இளஞ்செழியன்மீது துப்பாக்கிச்சூடு
    Posted in இலங்கை செய்திகள்

    நீதிபதி இளஞ்செழியன்மீது துப்பாக்கிச்சூடு

    நீதிபதி இளஞ்செழியன்மீது துப்பாக்கிச்சூடு

    மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அவரது மெய்ப்பாதுகாவலாரான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்தார் .

    மற்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்த சம்பவம் தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் புதன்கிழமை (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்

    இந்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்புடன் யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்திற்கு வருகைதந்தார்.

    யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையில் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனும் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரும் சாட்சியமளித்தனர்.

    சட்டமா அதிபர் திணைக்களம்

    குறித்த வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் விசேட அரச சட்டவாதி நாகரத்தினம் நிசாந்தும் எதிராளிகள் சார்பில் சட்டத்தரணி பிரதீபன் சர்மினியும் ஆஜராகினர்.

    குறித்த வழக்கு விசாரணை தொடர்ச்சியாக மூன்று தினங்களுக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

    தமிழரசு நிர்வாகத்தெரிவு வழக்கு ஒத்திவைப்பு
    Posted in இலங்கை செய்திகள்

    தமிழரசு நிர்வாகத்தெரிவு வழக்கு ஒத்திவைப்பு

    தமிழரசு நிர்வாகத்தெரிவு வழக்கு ஒத்திவைப்பு

    தமிழரசு நிர்வாகத்தெரிவு வழக்கு ஒத்திவைப்பு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை (24) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகத் தெரிவு

    தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

    எதிராளிகள் பெயரிடப்பட்டுள்ள நிலை

    இது தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா கருத்துரைக்கையில்,

    07 எதிராளிகள் பெயரிடப்பட்டுள்ள நிலையில், 2ஆம்,4ஆம் எதிராளிகளான தலைவராக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன்,

    செயலாளராக தெரிவாகிய ச.குகதாசன் ஆகியோர்களுக்கு சார்பாக ஆஜராகினேன். சுமார் மூன்று மணி நேரம் இவ்வழக்கு விவாதிக்கப்பட்டு சமர்ப்பணம் செய்யப்பட்டது.

    வழகுகல் தாக்கல்

    கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி வழகுகல் தாக்கல் செய்யப்பட்டு 29ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு பொதுநலன் கருதி முடிவுக்கு கொண்டு வரவேண்டும். கட்சி யாப்பை மீறியதாக இங்கு எதுவும் சொல்லப்படவில்லை. குறிப்பாக சில விதிகளில் மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ளது.

    இதன் பிரகாரம் வழக்கு தொடர்ந்தால் அதனை வெற்றி கொள்ளலாம். ஆனால், காலம் செல்லும், இதனால் வழக்கை காலம் சென்ற நிலையில், வெற்றி கொண்டால் தோல்வியாகவே கருதப்படும். வழக்காளி கோரும் நிவாரணத்தை வழங்கத் தயாராக இருக்கிறோம்.

    எங்களுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, இதனை வழக்காளி தனது சட்டத்தரணி ஊடாக தெரிவிக்கவேண்டும். வழக்கை வாபஸ் பெற வேண்டும் என எனது வாதத்தை நீதிமன்றில் தெரிவித்தேன் என்றார்.

    தேர்தல் தொடர்பில் மனம் திறந்த நாமல்
    Posted in இலங்கை செய்திகள்

    தேர்தல் தொடர்பில் மனம்திறந்த நாமல்

    தேர்தல் தொடர்பில் மனம்திறந்த நாமல்

    தேர்தல் தொடர்பில் மனம்திறந்த நாமல் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியிலிருந்து பொருத்தமான வேட்பாளரை முன்னிலைப்படுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

    ஜனாதிபதித் தேர்தலில்

    எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியில் பல வேட்பாளர்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    “குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த தேர்தல் வந்தாலும் அதற்கு தயாராக இருக்கிறோம்.

    இலங்கையில் எங்கு சென்று எமது முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள் அழைக்கப்பட்டாலும் அனைத்து வேட்பாளர்களும் எமது கூட்டங்களில் இணைவதை நீங்கள் பார்க்கலாம்.

    இதன் ஊடாக எமது கட்சி கிராமங்களிலும் தொடர்ந்து செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. ஜனாதிபதி, தேர்தலை வைப்பாரா? இல்லையா? என்பது எங்களுக்குத் தெரியாது.

    வாக்குச் சீட்டில் மொட்டு சின்னம்

    தேர்தல் ​வைத்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடும்.

    அப்போது வாக்குச் சீட்டில் மொட்டு சின்னம் இருக்கும். வேட்பாளரை பற்றி உரிய நேரத்தில் வௌிப்படுத்துவோம். அதனை முன்கூட்டியே கூற வேண்டிய அவசியம் இல்லை.

    உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு ஏனும் விண்ணப்பிக்க வேட்பாளர்கள் யாராவது இருக்கிறார்களா என்று நீங்கள் முன்பு என்னிடம் கேட்டீர்கள்.

    தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கான பொதுஜன பெரமுனவிடமிருந்து பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் மூலம், காலத்திற்கு ஏற்ற, சவால்களை சமாளிக்கக்கூடிய நபரை முன்வைப்போம்” என்றார்.

    ஜனாதிபதி தேர்தலை நடத்துவதை தடுப்பதற்கு அரசாங்கம்

    இதேவேளை, ஜனாதிபதி தேர்தலை நடத்துவதை தடுப்பதற்கு அரசாங்கம் எத்தகைய தந்திரங்களை கையாண்டாலும் அவை வெற்றியடையாது என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

    இதேவேளை, நாட்டின் அபிவிருத்திக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் முறையான வேலைத்திட்டம் இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

    ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் கட்சிகளுக்கு இடையில் பெரும் போட்டி நிலவுகிறது .

    இவ்வாறான கால பகுதியில் மகிந்த ராஜபக்ச மகன் நாமல் ராஜபக்ச இவ்வாறு தனது கருத்தை பதிவு செய்து பரபரப்பை கிளப்பியுள்ளார் .

    பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நபர்
    Posted in இலங்கை செய்திகள்

    பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நபர்

    பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நபர்

    வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நபர் ஒருவர் நுழைந்தமையால் மாணவிகள் மத்தியில் அச்சநிலை ஏற்ப்பட்டுள்ளது.

    குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    பம்பைமடு பெண்கள் விடுதியில்

    பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் முகாமுக்குள் இரவு வேளையில் இனம் தெரியாத நபர் ஒருவர் உள்ளாடையுடன் நுழைந்துள்ளார்.

    இதனால் அங்கிருந்த மாணவி ஒருவர் அச்சமடைந்து கூச்சலிட்ட நிலையில், குறித்த நபர் தப்பிச்சென்றுள்ளார்.

    இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி தாயாருக்கு தொலைபேசியூடாக தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே இருதய நோயினால் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் இச்சம்பவம் அறிந்ததை அடுத்து ஏற்பட்ட திடீர் நோய் நிலையால் மரணமடைந்தார்.

    மாணவிகள் விடுதியில்

    குறித்த சம்பவத்தால் மாணவிகள் விடுதியில் இருந்து முற்றாக வெளியேறியுள்ளமையுடன் இவ் அநீதிக்கு எதிரான நீதியினை

    கோரியுள்ளமையுடன் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஏன் உள்ளனர் என்ற கேள்வியினையும் எழுப்பியுள்ளனர்.

    இதேவேளை உள்ளாடையுடன் நுழைந்த நபர் தொடர்பாக கண்காணிப்பு கெமராக்களின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது