Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
பெரும் நெருக்கடிக்குள் அரசாங்கம்
பெரும் நெருக்கடிக்குள் அரசாங்கம்
பெரும் நெருக்கடிக்குள் அரசாங்கம் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, அரசாங்கம் கடன்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகியிருந்தன. எனினும் அரசாங்கம் அதிகமாக கடன்களை
பெற்றுக்கொள்வதாக சிலர் வாதிடுகின்றனர். அரசாங்கம் கடன்களை பெற்றுக்கொள்வது ஏற்றுக்கொள்ளகூடியது என சிலர் பதிலளிக்கின்றனர்.
இந்த நிலையில் பெற்றுக்கொள்கின்ற கடன்கள் வரவு செலவு திட்டத்தின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காகவா, அல்லது நாங்கள் ஏற்கனவே பெற்றுக்கொண்டுள்ள கடன்களை மீள செலுத்துவதற்காகவா என்று முரண்பட்ட
கூற்றுக்கள் காணப்படுகின்றன. இலங்கை அரசாங்கம் கடன்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் மூன்று முக்கிய கேள்விகளை FactCheck.lk தெளிவுபடுத்துகின்றது.
கேள்வி – 01: அரசாங்கங்கள் ஏன் கடன்களை பெறுகின்றன?
அரசாங்கங்கள் மூன்று பிரதான காரணங்களுக்காக கடன்களை பெறுகின்றன. முதலாவதாக பிரதான நிதி பற்றாக்குறையை நிவரத்தி
செய்வதற்கு. இரண்டாவது கடன்கள் மற்றும் வட்டியை செலுத்துவதற்கு. மூன்றாவதாக முதிர்வு கடன்களை அடைப்பதற்கு.
அரசாங்கம் ஒன்று நிறைவேற்றவேண்டிய இந்த மூன்று காரணங்களையும் ஒன்றாக உற்றுநோக்குவோமாயின் அதுவே ஒவ்வொரு ஆண்டும் அரசாங்கம்
பெற்றுக்கொள்ள வேண்டிய கடனின் மொத்த மதிப்பு ஆகும். இதனையே GFN (Gross Financing Need) மொத்த நிதித்தேவை என அழைக்கின்றோம்.
கேள்வி – 02: 2024 ஆம் ஆண்டு அரசாங்கம் கடனாக பெற்றுக்கொள்ளவிருந்த தொகை எவ்வளவு?
GFN (Gross Financing Need) க்கு அமைய FactCheck.lk இன் கணக்கீட்டிற்கு ஏற்ப 2024 ஆம் ஆண்டுக்காக அரசாங்கம் பெற்றுக்கொள்ள வேண்டிய கடனின் தொகையானது 3,670 பில்லியன் ரூபாவாகும்.
கேள்வி – 03: 2024 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் கடனானது எதிர்பார்க்கப்பட்ட தொகையை விட அதிகமானதா?
அரசாங்கம் தனது வரவு செலவு திட்டத்தில் பின்வரும் தேவைகளுக்காக வரையறைகளை விதிக்கின்றது.
(1) மொத்த நிதித்தேவை மற்றும்,
(2) கடனின் அளவு அதிகரிப்பு – குறித்த நேரத்தில் அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள கடனின் மொத்த தொகை.
அரசாங்கம் வரையறைக்கு அப்பால் சென்று கடன் பெற்றுக்கொண்டுள்ளதா அல்லது பெற்றுக்கொள்ளவில்லையா என்பது தொடர்பில் ஆராயப்படும். 2024 ஆம் ஆண்டுக்காக வரையறுக்கப்பட்டுள்ள கடன் தொகை மற்றும் தேசிய
ரீதியாக அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ள கடன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மேற்குறிப்பிட்ட விடயம் ஆராயப்படும்.
மொத்த நிதித்தேவையை (GFN) சரிபார்த்தல்
2024 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட மதிப்பீடுகளுக்கு (BE24) அமைய, நடப்பு நிதியாண்டுக்காக அரசாங்கம் நிர்ணயித்த மொத்த நிதித் தேவையின் எல்லையானது 3,670 பில்லியன் ரூபாவாகும். நிதியமைச்சின் தரவுகளுக்கு
அமைவாக கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் அரசாங்கத்தினால் 1,903 பில்லியன் ரூபா கடனாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடன் வரையறையை அதாவது 3,670 பில்லியன் ரூபாவினை பெற்றுக்கொள்வதற்கு
ஒக்டோபர் முதல் டிசெம்பர் வரையிலான காலப்பகுதிக்குள் மேலும் 1,766 பில்லியன் ரூபாவினை கடனாக பெறும் தகுதி அரசாங்கத்திற்கு காணப்படுகின்றது.
ஒக்டோபர் முதல் டிசெம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் பெற்றுக்கொள்ள கூடிய கடன் அளவினை Factcheck.lk மதிப்பாய்வு செய்துள்ளது.
அதற்கமைவாக குறித்த காலப்பகுதிக்குள் அரசாங்கம் பெற்றுக்கொள்ள கூடிய கடனின் அளவு 1,612 பில்லியன் ரூபாவாகும்.
இந்த கடன் தொகையானது மேலே குறிப்பிடப்பட்டுள்ள 1,766 பில்லியன் ரூபாவினை விட குறைவான தொகையாகும். அது மாத்திரமின்றி வரவு செலவு திட்டத்தின் வாயிலாக வரையறுக்கப்பட்ட தொகைக்குள் இது அடங்கும்.
BE24 உடன் ஒப்பிடுகையில் T-பத்திரங்கள் (T-bonds) மீதான வட்டி செலுத்துதல் குறைக்கப்பட்டதன் காரணமாக குறைவான கடன் தேவை என கருத முடியும்.
முடிவு: 2024 ஆம் ஆண்டின் ஒட்டு மொத்த நிதித் தேவைக்காக வரவு செலவு திட்டம் வரையறுத்துள்ள கடன் வரம்பினை மீறி மேலதிகமாக கடன்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்க முடியாது.
கடன் பிரிவுகளை (DS) சரிபார்த்தல்
மொத்த நிதி தேவை வரம்பிலிருந்து, திருப்பி செலுத்த எதிர்பார்க்கப்படும் கடனை கழிப்பதன் வாயிலாகஅரசாங்கம் கடன் அதிகரிப்பில் எதிர்பார்க்கப்படும் வரம்பினை தீர்மானிக்க முடியும்.
முதிர்ச்சியடைந்த கடனை செலுத்துவதற்காக அரசாங்கம் கடனை பெற்றிருந்தால் கடன் பிரிவுகளில் அதிகரிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்காது.
எனினும் வரவு செலவு திட்டத்தின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கம் கடனை பெற்றுக்கொள்ளுமாயின் அது கடன் பங்கின் அதிகரிப்பிற்கு வழிவகுக்கும்.
2024 ஆம் நிதியாண்டின் வரவு செலவு திட்ட மதிப்பீடுகளுக்கு அமைய, துண்டு விழும் தொகையானது 2,401 பில்லியன் ரூபாவாக அமையும் என அரசாங்கம் கணித்துள்ளது. அந்த வகையில் கடன் பிரிவுகளிலும் (DS) சமமான அதிகரிப்பினை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் கடன் பங்கானது 965 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. அதாவது,
ஒக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் DS ஐ அதிகரிப்பதற்கான வரவு செலவுத் திட்ட வரம்பிற்குள் அரசாங்கத்திடம் இன்னும் 1,445 பில்லியன் ரூபாய் உள்ளது.
வரவு செலவு திட்டத்தின் இடைவெளியை நிவர்த்தி செய்வதற்கும் தேவையான நிதித்தேவையை ஈடுசெய்வதற்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் வரவுசெலவு
திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒக்டோபர் முதல் செப்டெம்பர் மாதம் வரையிலான வரவு செலவு திட்டத்தில் எஞ்சியிருக்கும் 1,445 பில்லியன்
ரூபாவில் 1,030 பில்லியன் ரூபாவை உள்நாட்டு கடன் வாயிலாகவும், 415 பில்லியன் ரூபாவினை வெளிநாட்டு கடன் வாயிலாகவும் நிதியளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒக்டோபர் முதல் நவம்பர் வரை உள்நாட்டு கடன் பங்கானது 371 பில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளது. டிசெம்பர் மாதத்திற்கான வரவு செலவுத்
திட்டத்தின் தேசிய நிதி வரம்பு 659 பில்லியன் ரூபாய் ஆகும். அந்த வகையில் 659 பில்லியன் ரூபாய் கடனை பெற்றுக்கொள்ள அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் காணப்படுகின்றது.
முடிவு: டிசெம்பர் மாதத்திற்குள் குறித்த தொகையினை கடனாக பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் காணப்படுவதால், 2024 ஆம் ஆண்டுக்கான
உள்நாட்டு கடன் வரவு செலவு திட்டத்தின் வரம்பிற்குள் காணப்படுகின்றமை தெளிவாக புரிகின்றது.
ஒட்டுமொத்த நிதித்தேவை மற்றும் கடன் பங்கு அதிகரிப்பு தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள கட்டுபாடுகள் குறித்து மேற்குறிப்பிடப்பட்டுள்ள
முடிவுகளை கவனத்தில் கொள்ளும் போது 2024 ஆண்டிற்காக மேலதிகமாக கடனை பெற்றுக்கொள்ள வேண்டிய அபாயம் அரசாங்கத்த்திற்கு இல்லை என்பது தெளிவாக புரிகின்றது.
தமிழரசில் இருந்து சிலர் விரைவில் நீக்கப்படுவர்
தமிழரசில் இருந்து சிலர் விரைவில் நீக்கப்படுவர்
தமிழரசில் இருந்து சிலர் விரைவில் நீக்கப்படுவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவார்கள். சிலர் இடைநிறுத்தப்படுவார்கள் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
வவுனியாவில் நேற்று நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கட்சிக்கு எதிராகப் போட்டியிட்டவர்களை உடனடியாகக் கட்சியிலிருந்து நீக்குவதற்குப் பொதுச் செயலாளருக்கு அதிகாரம் இருக்கின்றது என மத்திய
குழு ஏற்றுக் கொண்டிருக்கின்றது. அதனைப் பொதுச்செயலாளர் எதிர்வரும் நாட்களில் செய்வார்.
வேறு சிலர் கட்சிக்கும், கட்சியினுடைய வேட்பாளருக்கு எதிராகவும் செயற்பட்டமை தொடர்பிலும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
அந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் வரைக்கும் அவர்கள் கட்சியின் செயற்பாடுகளில் இருந்து இடைநிறுத்தப்படுவார்கள்.
கடந்த காலத்தில் அரசமைப்பு உருவாக்கம் சம்பந்தமான விடயங்களில் தமிழரசுக் கட்சி தீர்க்கமான நிலைப்பாடுகளை எடுத்திருக்கின்றது.
சில வரைவுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. சில வரைவுகளோடு நாங்கள் இணங்கி இருக்கின்றோம். ஆகவே. அது எங்களுடைய நிலைப்பாடு என்றார்
துப்பாக்கிச் சூடு பெண் காயம்
துப்பாக்கிச் சூடு பெண் காயம்
துப்பாக்கிச் சூடு பெண் காயம் மருதானை மாளிகாகந்த நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், கொழும்பு- 13 யைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையின் பிரகாரம், கரையோர பொலிஸாரினால் இரண்டு பெண்கள், சனிக்கிழமை (14) கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவ்விருவரும் மாளிகாந்த நீதவான் முன்னிலையில், சனிக்கிழமை (14) ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கு வந்த பெண்ணொருவரின் கணவன்,
அப்பெண்ணை பிணையில் எடுத்தார். அதன் பின்னர், அங்கிருந்து கணவனுடன் வெளியேறிய போதே துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதவர்கள் துப்பாகிப்பிரயோத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
காயமடைந்த பெண், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்த மருதானை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியா செல்கின்றார் ஜனாதிபதி
இந்தியா செல்கின்றார் ஜனாதிபதி
இந்தியா செல்கின்றார் ஜனாதிபதி ,ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (15) இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
அவர் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி இன்று (15) முதல் 17ஆம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருந்து பல்வேறு உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இவ் விஜயத்தின் போது இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பல்வேறுபட்ட கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.
அத்துடன் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதலீட்டு மற்றும் வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்தும் நோக்குடன் டில்லியில் நடைபெறும் வர்த்தக நிகழ்வொன்றிலும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொள்ளவுள்ளார்.
மர்மக் காய்ச்சலால் மேலும் ஒருவர் பலி
மர்மக் காய்ச்சலால் மேலும் ஒருவர் பலி
மர்மக் காய்ச்சலால் மேலும் ஒருவர் பலி ,யாழில் எலிக்காய்சல் என சந்தேகிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் 3 நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞரொருவர் நேற்று (14) உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் – கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞனே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 5 நாட்கள் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டு உடனடியாக அன்றைய தினமே நோயின் தீவிர நிலை
உணரப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட நிலையில் உயிரிழப்பு ஏற்பட்டது
இரண்டு லொறிகள் மோதியதில் ஒருவர் பலி ஐவருக்கு காயம்
இரண்டு லொறிகள் மோதியதில் ஒருவர் பலி ஐவருக்கு காயம்
இரண்டு லொறிகள் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு அனுராதபுரம் ஏ28 பிரதான வீதியில் தம்புத்தேகம பெல்லன்கடவல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பண்டாரகமவில் இருந்து அனுராதபுரம் நோக்கி மாம்பழம் ஏற்றிச்செல்ல வந்த சிறிய லொறியும், அநுராதபுரத்திலிருந்து தம்புத்தேகம நோக்கி வீதிகளின் ஓரங்களில் பதிக்கும் (இன்டர்லாக் கற்களை) ஏற்றிச் சென்ற பெரிய லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சிறிய ரக லொறியின் சாரதியின் நித்திரை கலக்கத்தால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலத்தை மறைத்து வைத்திருந்த இருவர் கைது
சடலத்தை மறைத்து வைத்திருந்த இருவர் கைது
சடலத்தை மறைத்து வைத்திருந்த இருவர் கைது மாத்தறை – வல்யிங்குருகெட்டிய பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபரின் சடலத்தை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விலங்குகளை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்படும் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்த நபரின் சடலத்தையே இவர்கள் மறைக்க முயன்றுள்ளனர்.
இதன்படி, மின்சார வேலியைப் பொருத்திய 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாம் பொருத்திய மின்சார வேலியில் சிக்கி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 58 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
வெடிபொருட்களுடன் சந்தேகநபர் கைது
வெடிபொருட்களுடன் சந்தேகநபர் கைது
வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பூனேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூனேவ சந்திக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை பொலிஸ் அதிகாரிகள் குழு நேற்று (13) இரவு சோதனையிட்டுள்ளது.
கைதான சந்தேகநபரிடமிருந்து சேவை நூல், 150 கிராம் அம்மோனியம் மற்றும் 1 ஜெலக்னைட் குச்சிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மத்துகம பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடையவர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூனேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
6000 போலி வாகனங்கள்
6000 போலி வாகனங்கள்
6000 போலி வாகனங்கள் வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் போலியாக பதிவு செய்யப்பட்ட சுமார் 6,000 வாகனங்கள் குறித்து இலஞ்சம் அல்லது ஊழல்
குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
அடையாளம் காணப்பட்ட வாகனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த வாகனங்கள் சுங்க வரிகள் மற்றும் இதர கட்டணங்களை வசூலிப்பதற்காக சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன
சபாநாயகர் பதவிக்கு மூன்று பெயர்கள் பரிந்துரை
சபாநாயகர் பதவிக்கு மூன்று பெயர்கள் பரிந்துரை
சபாநாயகர் பதவிக்கு மூவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
இதற்கமைய, பிரதி சபாநாயகர் கலாநிதி றிஸ்வி சாலி மற்றும் தேசிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பட்டி மற்றும் லக்ஷ்மன் நிபுணராச்சி ஆகியோரின் பெயர்களே முன்மொழியப்பட்டுள்ளதாக, அரசாங்க வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், அரசாங்கம் இது தொடர்பான இறுதி முடிவை இன்னும் சில நாட்களில் எட்டும்.
முன்னதாக சபாநாயகர் பதவிக்கு நிஹால் கலப்பட்டியின் பெயர் முன்மொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு
மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு
மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு இன்று (14) மாலை 6:00 மணி வரை செல்லுபடியாகும் என அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார்.
இதன்படி, பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை பிரதேச செயலகத்திற்கு 2 கட்டங்களின் கீழ் அவதானமாக இருக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பதுளை மாவட்டத்தில் எல்ல, பசறை மற்றும் ஹாலியால, கண்டி மாவட்டத்தில் மெத தும்பற ஆகிய பகுதிகளின் 1 ஆம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது
இந்தியாவிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட புகையிரத இன்ஜின்கள்
இந்தியாவிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட புகையிரத இன்ஜின்கள்
இந்தியாவிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட புகையிரத இன்ஜின்கள் குறித்து புகையிரத பொது முகாமையாளர் .S. S. முதலிகே விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கை பின்வருமாறு…
இந்தியாவிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட புகையிரத இன்ஜின்கள் குறித்து.
குறித்த விடயம் தொடர்பாக.
2 .இந்திய அரசு நன்கொடையாக வழங்கிய புகையிரத இன்ஜின்கள் குறித்து பல்வேறு ஊடகங்களில் பல்வேறு தவறான கருத்துகள் வெளியாகி வருவதாகவும், இதனை சரி செய்ய போக்குவரத்து அமைச்சரின் அறிவுறுத்தலின்படி கீழ்கண்ட செய்திக்குறிப்பை வெளியிடுகிறேன்.
எனவே, இது குறித்து ஊடகங்கள் சரியான செய்தியை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
- இந்திய அரசின் நன்கொடையாக 22 புகையிரத இன்ஜின்களை இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு வழங்க இந்தியா ஒப்புக்கொண்டதையடுத்து, அறிக்கை சமர்ப்பிபதற்காக இலங்கை
- புகையிரத திணைக்களத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு ஒன்று இந்தியா சென்று இது குறித்து ஆய்வு செய்துள்ளது, தற்போது அந்த இன்ஜின்கள் ஏற்கனவே 2012/13 இல் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட M-10 வகை இன்ஜின்களை ஒத்த அல்லது அதற்கு பிந்தைய இன்ஜின்களாகும். அதிகளவான புகையிரத பெட்டிகளை கொண்டு நீண்ட தூரம் ஓட்டும் திறன் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தற்போது, புகையிரத திணைக்களத்திடம் இதே வகையான புகையிரத என்ஜின்கள் ஒன்பது பயன்பாட்டில் உள்ளதுடன் இவற்றை இயக்க மற்றும் பராமரிக்க எமது ஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால், பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும்.
- அதிக பயணிகள் திறன் கொண்ட நீண்ட தூர ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்களுக்கு இந்தப் புதிய புகையிரத என்ஜின்களைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இந்த நன்கொடையானது புகையிரத திணைக்களத்திற்கு
- பத்து கனரக மற்றும் நீண்ட தூர என்ஜின்கள் பற்றாக்குறையாக உள்ள நேரத்தில் மிகவும் பயனுள்ளதாகும், மேலும் இந்த என்ஜின்கள் கடந்த கால
- அனுபவத்தின் அடிப்படையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எனக்குத் தெரிவிக்கப்படுகிறது.
- அதற்கிணங்க, ஊடகங்கள் இதைப் பற்றி பரவிவரும் தவறான கருத்துகளை சரி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அதிரடி சோதனை நடவடிக்கைகள்
அதிரடி சோதனை நடவடிக்கைகள்
அதிரடி சோதனை நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் அரிசி தொடர்பான சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
நேற்று (14) நாடளாவிய ரீதியில் சுமார் 75 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டதாக அதன் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.
இனிவரும் காலங்களில் வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் சோதனை நடத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், இறக்குமதி செய்யப்பட்ட அரிசி கையிருப்பு சந்தைக்கு வருவதால் அரிசியின் விலை குறைவதோடு சில பகுதிகளில் விலை குறைவடைந்து வருவதாகவும் அவர் கூறுகிறார். R
5,200 மெற்றிக் தொன் அரிசி முதல் தொகுதி இம்மாதம் 19ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்நாட்டில் போராடும் தமிழ் இளைஞனுக்காக குரல் கொடுத்த நாமல்
தமிழ்நாட்டில் போராடும் தமிழ் இளைஞனுக்காக குரல் கொடுத்த நாமல்
தமிழ்நாட்டில் போராடும் தமிழ் இளைஞனுக்காக குரல் கொடுத்த நாமல் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக தம்மை மீண்டும் இலங்கைக்கு அனுப்புமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட
இலங்கையரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது தமிழகத்தில் தஞ்சமடைந்த ஒருவர், தம்மை மீண்டும் இலங்கைக்கு அனுப்புமாறு கோரி
மண்டியிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணொளி ஒன்றைத் தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
தமக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் அல்லது தம்மை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் குறித்த நபர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில், இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கத்துடன் இணைந்து உடனடியாக குறித்த நபரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமல் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், குறித்த நபரை இலங்கைக்கு அழைத்து வருவதற்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்குத் தாம் தயாராகவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு
எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு
எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு எக்காரணத்தைக் கொண்டும் எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு இடம்பெறாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்தார்.
நாட்டில் போதிய எரிபொருள் காணப்படுவதாகவும், நாட்டில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்திற்காக அரசாங்கத்தின் நிறுவனமாக அந்தப்
பொறுப்பை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஏற்றுக்கொள்வதாகவும் தலைவர் ஜனக ராஜகருணா சுட்டிக்காட்டினார்.
நாட்டிற்கு எவ்வித சிக்கலும் இன்றி வலுசக்தியின் அவசியத்தை பேணுவதற்கு முடியும் என்றும், தற்போது எரிபொருள் குறைவடைந்ததும், உடனடியாக யுனைடெட் பெற்றோலியத்தின் 64 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும்
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருளை விநியோகிப்பதற்கு அமைச்சின் செயலாளர், யுனைட்டட் பெற்றோலியம் மற்றும் பெற்றோலியக்
கூட்டுத்தாபனம் ஆகியன ஒன்றிணைந்து இது தொடர்பாகக் கலந்துரையாடி தீர்மானத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெளிவுபடுத்தினார்
மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் பயமுறுத்தும் பாபா வங்காவின் ஆரூடம்
மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் பயமுறுத்தும் பாபா வங்காவின் ஆரூடம்
மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் பயமுறுத்தும் பாபா வங்காவின் ஆரூடம் ,பாபா வங்கா… இந்தப் பெயரை ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பல்கேரியா நாட்டின் பெலாசிகா பகுதியைச் சேர்ந்த பெண்மணி இவர்.
சின்ன வயதில் கண் பார்வையை இழந்த பாபா வங்கா, வருங்கால உலகில் இனி என்னென்ன நடக்கும் என்று ஆரூடங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.
அந்த வகையில் பாபா வங்காவுக்கு, ‘பால்கன் பகுதியின் பெண் நாஸ்டிரடாமஸ்’ என்ற பெயர் கூட உண்டு. (பிரான்ஸ் நாட்டில் பழங்காலத்தில்
வாழ்ந்த தீர்க்கதரிசி நாஸ்டிரடாமஸ், நூற்றாண்டுகள் என்ற புத்தகத்தின் மூலம் எதிர்கால உலகத்தைப் பற்றி ஏராளமான சங்கதிகளை புட்டுபுட்டு வைத்தவர்)
பாபா வங்கா, எதிர்காலத்தில், அதாவது 5079ஆம் ஆண்டு வரை என்னென்ன நடக்கும் என்று கூறியிருக்கிறார். இவரது ஆரூடங்களில் 85 சதவீத ஆரூடங்கள் பலித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சரி, இப்போது எதற்கு பாபா வங்காவைப் பற்றி நாம் பேச வேண்டும் என்ற கேள்வி எழலாம். மேற்கு ஆசிய நாடான சிரியாவில் தற்போது ஆட்சி கவிழ்ந்து,
சிரியா கிளர்ச்சியாளர்கள் கையில் சிக்கிவிட்ட நிலையில் பாபா வங்கா பற்றிய நினைப்பு உலக அளவில் பலருக்கு மீண்டும் வந்திருக்கிறது.
ஏன்? என்ன காரணம்?
‘சிரியாவின் வீழ்ச்சிக்குப்பிறகு மூன்றாம் உலகப்போர் தொடங்கும்’ என்று பாபா வங்கா ஏற்கெனவே ஆரூடம் கூறியிருப்பதுதான் காரணம்.
1996ஆம் ஆண்டு, பாபா வங்கா மரணமடைவதற்கு முன் கூறிய ஆரூடம் இது.
‘சிரியா நாடு நிலைகுலையும். சிரியாவின் இந்த வீழ்ச்சி, ஒரு பெரும்போருக்கான முன்னறிவிப்பும், தொடக்கப் புள்ளியும் ஆகும்’ என்று கூறியிருக்கிறார் பாபா வங்கா.
‘வெற்றியாளரின் காலில் சிரியா விழுந்துவிடும். அந்த வெற்றியாளர் ஒருவர் இல்லை’ என்பது பாபா வங்கா கூறியிருப்பது பலரையும் இப்போது வியப்புக்குள்ளாக்கி வருகிறது.
சிரியாவில் ஜனாதிபதி பசர்-அல்-அசாத்தின் ஆட்சி கவிழ்ந்த நிலையில் தலைநகர் டமாஸ்கஸை, ஹாயத்-தஹ்ரீர்-அல்-ஷாம் (ஹெச்.டி.எஸ்.) என்ற கிளர்ச்சிப்படை கைப்பற்றி இருக்கிறது. அதற்கு துருக்கி நாட்டின் ‘துருக்கி
தேசிய ராணுவம்’ என்ற மற்றொரு கிளர்ச்சிப் படை உதவி புரிந்திருக்கிறது.
இதுபோக சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதப் படை, குர்த் இனப் போராளிகள் என பல்வேறு ஆயுதக் குழுக்கள் உள்ளன. ஜனாதிபதி பசர்-அல்-அசாத் வீழ்ந்ததை இவர்கள் அனைவருமே வெற்றியாகவே நினைக்கிறார்கள்.
இந்த நிலையில், ‘சிரியாவில் வெற்றியாளர் ஒருவர் இல்லை’ என்று அந்தக்காலத்திலேயே துல்லியமாக வரும்பொருள் உரைத்திருக்கிறார் பாபா வங்கா.
பாபா வங்காவின் கணிப்புப்படி பார்த்தால் 2025 ஆம் ஆண்டின் வசந்தகாலத்தில் பெரும்போர் (மூன்றாம் உலகப்போர்?) மூளும் என்று
தெரிகிறது. ‘கிழக்கும் மேற்கும் மோதிக்கொள்ளும். கிழக்கில் தொடங்கும் போர் மேற்கை அழிக்கும்’ என்று கணித்திருக்கிறார் பாபா வங்கா.
‘2025 ஆம் ஆண்டு ஐரோப்பா கண்டம் அழிவைச் சந்திக்கும். மக்கள் தொகை குறைந்து, ஐரோப்பா பயன்படாத நிலமாக மாறும்’ என்பது பாபா வங்காவின் கணிப்பு.
‘2025-ல், அபோகலப்ஸ் என்ற பேரழிவு தொடங்கும், வேற்றுலக உயிர்களுடன் தொடர்பு உருவாகும், கருவிகளின் துணையின்றி பேசக்கூடிய டெலிபதி என்ற
எண்ணத்தொடர்பு முறை வளரும். புற்றுநோய்க்கு எதிரான மிகச்சிறந்த மருந்து கண்டுபிடிக்கப்படும்’ என்பதெல்லாம் பாபா வங்காவின் இதர கணிப்புகள்.
ஆரூடங்களில் பழம் தின்று கொட்டை போட்டவரான நாஸ்டிரடமாசும் கூட, ‘2025 ஆம் ஆண்டு ஒரு போர் வெடிக்கும், ஐரோப்பா கண்டத்துக்குச் சிக்கல்
ஏற்படும்’ என்று கூறியிருக்கிறார். ‘பிளேக் மாதிரியான கொள்ளை நோய் ஐரோப்பாவில் பரவும்’ என்றும் நாஸ்டிரடாமஸ் எச்சரித்திருக்கிறார்.
அண்மையில், கரோனா என்ற பெருந்தொற்றை உலகம் ஏற்கெனவே சந்தித்து முடித்து விட்டது. இந்தநிலையில் நாஸ்டிரடாமஸ் எச்சரிக்கும் ‘பிளேக்’
இதுபோன்ற இன்னுமொரு பெருந்தொற்றா என்பது தெரியவில்லை. ஒருவேளை கரோனா பெருந்தொற்றுகூட மாறுவேடம் அணிந்து, 2025 ஆம் ஆண்டில் இன்னொரு சுற்று வரக்கூடும்.
ஒருவகையில் 2025-இல் பிளேக் நோய் என்று நாஸ்டிரடாமஸ் கூறியிருப்பது பாராட்டத்தக்க ஒரு கணிப்பு. ‘பிளேக் என்பது எலிகளால் பரப்பப்படும் நோய். போர் என்பது மனிதர்களால் பரப்பப்படும் பிளேக் நோய்’ என்று ஒரு
பொன்மொழி உண்டு. அந்த வகையில் மூன்றாம் உலகப் போரைத்தான் பிளேக் என்று நாஸ்டிரடாமஸ் நாசூக்காக கூறியிருக்கிறாரா எனத் தெரியவில்லை.
‘ஐரோப்பாவில் நடக்கும் போர் உலகப் பேரழிவாக விரிவடையும்’ என்றும் நாஸ்டிரடாமஸ் கூறியிருக்கிறார்.
தற்போது சிரியாவில் நடந்து முடிந்த போர்கூட, ஒருவகையில் ஒரு மினி உலகப்போர் மாதிரியானதுதான். சிரிய ராணுவம், ரஷியப் படையினர், துருக்கி ராணுவம், குர்து போராளிகள், அவர்களுக்குத் துணையாக 900 அமெரிக்கப்
படையினர், ஐ.எஸ். தீவிரவாதப் படை, துருக்கி தேசிய ராணுவம், ஹாயத்-தஹ்ரீர்-அல்-ஷாம் கிளர்ச்சிப் படை, லெபனானில் இயங்கும் ஹிஸ்புல்லா
அமைப்பு, ஈரான், இஸ்ரேல் நாடுகளின் தலையீடு என்று சிரியாவில் கிட்டத்தட்ட ஒரு மினி உலகப்போர் நடந்து இப்போது இடைவேளை விடப்பட்டிருக்கிறது.
இந்தநிலையில்தான், வரும் ஆண்டில் மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் என்று நாஸ்டிரடாமஸ், பாபா வங்கா போன்றவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.‘
பாபா வங்கா சொன்ன 85 சதவீத ஆரூடங்கள் ஏற்கெனவே பலித்திருக்கின்றன என்று பார்த்தோம். அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் 11 இரட்டைக் கோபுரத் தாக்குதலை, ‘பயங்கரம் பயங்கரம் அமெரிக்கா மீதான இரண்டு எஃகு
பறவைகளின் தாக்குதல்’ என்று பாபா வங்கா முன்கூட்டியே கணித்திருந்தார். ‘எஃகு பறவைகள்’ என்று அவர் கூறியது தாக்குதலுக்குப் பயன்பட்ட பயணிகள் விமானங்களை என்பது இப்போது புரிகிறது.
அதுபோல அமெரிக்காவின் 44 ஆவது அதிபராக கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் வருவார் என்பதும் பாபா வங்காவின் கணிப்பு. அதன்படி பராக் ஒபாமா, அமெரிக்காவின் 44ஆவது ஜனாதிபதியாக வந்து அந்த கணிப்பை மெய்யாக்கினார்.
இதுபோல இளவரசி டயானாவின் மரணம், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் (பிரெக்சிட்) என்பன போன்ற பாபா வங்காவின் பல ஆரூடங்கள் துல்லியமாக பலித்திருக்கின்றன.
பாபா வங்காவின் 85 சதவீத ஆரூடங்கள் பலித்திருக்கும் நிலையில், வரும் ஆண்டில் மூன்றாம் உலகப்போர் தொடங்கும் என்று பாபா வங்கா கணித்திருப்பது உலக அளவில் ஒருவித பதற்றத்தை உருவாக்கி வருகிறது.
சகோதரியின் கணவரான மச்சான் கோடரியால் வெட்டிக் கொலை
சகோதரியின் கணவரான மச்சான் கோடரியால் வெட்டிக் கொலை
சகோதரியின் கணவரான மச்சான் கோடரியால் வெட்டிக் கொலை ,குடும்ப தகராற்றில் சகோதரியின் கணவரான மச்சான் மீது கோடரி மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்குதலில் மச்சான் உயிரிழந்த சம்பவம் வியாழக்கிழமை (12)
இரவு மட்டக்களப்பு எல்லைக்கிராமமான வடமுனை ஊத்துச்சேனையில் இடம்பெற்றுள்ள கணவன்-மனைவி இருவரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வடமுனை ஊத்துச்சேனையைச் சேர்ந்த 48 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான வேலு சிவசுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பிரதேசத்தில் சம்பவ தினமான வியாழக்கிழமை (12) இரவு 11.00 மணியளவில் சம்பத்தில் உயிரிழந்தவரின் மனைவியின் சகோதரனுடன் மதுபோதை அருந்திவிட்டு அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம்
சண்டையாகமாறியது அடுத்து சகோதரியின் கணவர் மீது கோடாரி மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது சம்பவ இடத்திலே
உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இது தொடர்பாக தடயவியல் பிரிவு பொலிஸார் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மர்மக் காய்ச்சல் மேலும் ஒருவர் உயிரிழப்பு
மர்மக் காய்ச்சல் மேலும் ஒருவர் உயிரிழப்பு
மர்மக் காய்ச்சல் பாதிப்புடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறையைச் சேர்ந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேற்படி நபர் மர்மக் காய்ச்சல் பாதிப்புடன் பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறையைச் சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 47) என்ற நபரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து வடக்கு மாகாணத்தில் இதுவரை மர்மக் காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைப்பு
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைப்பு
முன்னாள் ஜனாதிபதிகள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்த அறிக்கைகளை மீளாய்வு செய்ததன் பின்னர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு 116 பேரில் இருந்து 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ராஜபக்சேவுக்கு வழங்கப்பட்டிருந்த மூன்று டிஃபென்டர்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 51 ஆகவும், முன்னாள் ஜனாதிபதி
சந்திரிகா குமாரதுங்கவின் பாதுகாப்பு எண்ணிக்கை 58 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பும் எதிர்காலத்தில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம்
இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம்
இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம் ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்துக்கு அருகே கடற்கரையில் இராட்சத திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருப்பதாக
வனத்துறையினருக்கு புதன்கிழமை (11) காலை கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கடற்கரைக்கு சென்று பார்த்தபோது 18 அடி நீளமும் 2 டொன்
எடையும் கொண்ட அரிய வகை இராட்சத திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
இதையடுத்து வனத்துறையினர் கரை ஒதுங்கிய திமிங்கல உடலை ஜே.சி.பி உதவியுடன் மீட்டு கால்நடை மருத்துவரை கொண்டு சென்று இறந்த
திமிங்கலத்தை உடற்கூறு ஆய்வு செய்த பின்னர் கடற்கரை மணலில் புதைக்கப்பட்டுள்ளது.
இறந்த திமிங்கலம் நீல திமிங்கல வகையை சேர்ந்தது. இந்த வகை திமிங்கலங்கள் 118 அடி நீளம் வரை வளரக்கூடியது.
ஆனால் தற்போது இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம் நீலத்திமிங்கலத்தின் குட்டியாக இருக்கலாம் எனவும் இது 18 அடி இருப்பதாகவும் , பெரிய கப்பல் அல்லது கடலுக்கு அடியில் உள்ள பாறை
போன்றவற்றாலும் மோதி அடிபட்டு, இறந்து உடல் அலைகளால் அடித்து வரப்பட்டிருக்கலாம் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


























