Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
அடையாளம் தெரியாதவர் துப்பாக்கிச் சூடு
அடையாளம் தெரியாதவர் துப்பாக்கிச் சூடு
அடையாளம் தெரியாதவர் துப்பாக்கிச் சூடு மாத்தறை – தெவினுவர, தல்பாவில பகுதியில் உள்ள கருவாடு வர்த்தகர் ஒருவரின் வீட்டின் முன்னால் அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூடு நேற்று (12) மாலை 4.45 மணியளவில் நடந்ததாகவும், இந்த துப்பாக்கிச் சூட்டால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.
கருவாடை வாங்க விரும்புவதாகக் கூறிய நிலையில, வாயில் காதவை திறந்த போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது வாயிலுக்கு அருகிலுள்ள சுவரில் துப்பாக்கிச் சூடு பாய்ந்ததுடன், துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் காலியான தோட்ட உறையையும் எடுத்துச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அருகிலிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் பிரவேசித்த மோட்டார் சைக்கிள்
அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வாகன விபத்தில் இருவர் பலி
வெல்லாவெளி வாகன விபத்தில் பலி
வாகன விபத்தில் இருவர் பலி நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்தனர்.
வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பலாந்துறை சவலக்கடை வீதியில் பிலாலி வெம்பு சந்திக்கு அருகில், வெல்லாவெளியிலிருந்து காந்திபுரம் நோக்கிச் பயணித்த உழவு இயந்திரம் ஒன்று, எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி நேற்று (12) மாலை விபத்து ஏற்பட்டது.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் களுவாஞ்சிகுடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார்.
விபத்தில் உயிரிழந்தவர் மண்டூர், சங்கர்புரத்தைச் சேர்ந்த 43 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் களுவாஞ்சிகுடி மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
வாகன விபத்தில் இருவர் பலி
விபத்தையடுத்து உழவு இயந்திரத்தின் சாரதி தப்பி ஓடிய நிலையில், வாகனத்தை பொலிஸார் பொறுப்பேற்றனர்.
பின்னர் தப்பிச் சென்றிருந்த சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், பின்னவல பொலிஸ் பிரிவின் கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியில் அமுபிட்டிய பகுதியில் பாதுக்க திசையிலிருந்து சீலகம நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி கொங்ரீட் தூணில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த டிப்பர் வாகனத்தின் சாரதி, பலாங்கொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பெலிஹுல்ஓயாவைச் சேர்ந்த 49 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சடலம் பலாங்கொடை மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பின்னவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- என் புருசா நில்லுடா 146 | கௌரி பாடல் |En Purusaa Nilludaa |Tamil love Feeling songs

- என் கண்ணீர் துளியிலே உன்னை தேடுவேனே |621| en kanneer thuliyile unnai theduvene | VANNI MAINTHAN Song

- ஜிந்தா ஜீனுக்கு தான் |966 |காதல் பாடல் | LOVE TAMIL SONG

- சிக்கு சிக்கு தான் | 982|Chikku Chikku Than |

- மறக்க முடியல |964| காதல் பாடல் |Love song | MALA SONGS

கண்டுபிடிப்பு கடத்த பட்ட மாணவி
கண்டுபிடிப்பு கடத்த பட்ட மாணவி
கண்டுபிடிப்பு கடத்த பட்ட மாணவி.கண்டி தவுலகல பகுதியில் வேனில் கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறை பேருந்து தரிப்பிடத்தில் பேருந்தில் இருந்த போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இன்று (13) காலை கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில் இருந்த போது, கடத்திச் சென்ற நபரையும், குறித்த மாணவியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நேற்றிரவு (12) அம்பாறை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இருவரும் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவியிடம் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றார்.
அஜித்குமார் கார் போட்டியில் வெற்றி
அஜித்குமார் கார் போட்டியில் வெற்றி
அஜித்குமார் கார் போட்டியில் வெற்றி,தமிழ் திரை உலகின் முதலாவது நட்சத்திரமாக விளங்கி வரும் வேளையில் கார் பந்தயத்தில் துபாயில் போட்டியிட்டு அவரது அணி மூன்றாம் இடத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில் இடம்பெற்ற பரபரப்பான கார் போட்டோ ஓட்டப்பந்தயத்தில் அவர் வெற்றியை பெற்றுள்ளார்.
நடிகர் அஜித் குமார் ஓட்டிச் சென்ற கார் விபத்தில் சிக்கிய நிலையிலும் அவரது அணி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது.
கண்கள் கலங்கிய நிலையில் இந்திய கொடியை தாங்கி பிடித்தவாறு மூன்றாம் பரிசை அவர் தட்டிச் சென்று இருக்கின்றார்.
அவரது நீண்ட நாள் கார் பந்தய போட்டியின் உடைய கனவு இன்று நனவாகி உள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
தல வெற்றி பெற்றதை அடுத்து தலையின் உடைய ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
அந்தக் காட்சிப் பலன்கள் கீழே உள்ள படத்தில் காணலாம்


- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- அதிவேக நெடுஞ்சாலைகள் ரூ. 355 மில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளன

- மட்டக்களப்பில் தினமும் நான்கு மணி நேரத்திற்கு நீர் வெட்டு

- வறண்ட வானிலைக்கு மத்தியிலும் ஏழு மாவட்டங்களில் குடிநீர் விநியோகம்

- பெட்ரோல் விலை குறைப்பு

- முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்

- நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 903 ஆக உயர்வு

- உள்நாட்டு வருவாய்த் துறையுடனான (IRD) வரித் தகராறில் இலங்கை தேசிய கிரிக்கெட் வீரர்கள்

- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை

- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

மாணவி கடத்தல் பெற்றோர் கதறல்
மாணவி கடத்தல் பெற்றோர் கதறல்
மாணவி கடத்தல் பெற்றோர் கதறல் ,பாடசாலை முடிந்து வீட்டுக்கு பயணித்துக் கொண்டிருந்த மாணவிகளில் ஒருவர் கடத்தப்பட்டுள்ள செய்தி தற்பொழுது பதிவாகியுள்ளது.
பாடசாலை முடிவடைந்து வீதியால் பயணித்துக் கொண்டிருந்த இரு மாணவர்களில் ஒரு மாணவியை அந்த வழியால் பயணித்த கருப்பு வான் ஒன்று கடத்திச் சென்றுள்ளது.
எனினும் ஒரு மாணவி வாகனத்தின் எதிர் திசையில் தப்பி ஓடியதால் அவர் தப்பிவிட்டார் எனவும் மேலும் ஒரு மாணவி கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டப்பகலில் நடந்த இந்த கடத்தல் சம்பவத்தை கண்ணுற்ற சிலர் அதனை தடுக்க முற்பட்ட பொழுது அந்த காப்பாற்று நடவடிக்கை தோல்வியில் முடிவடைந்துள்ளது.
மோட்டார் சைக்கிள் வந்தவர்கள் தெரிவித்த தகவலை அடுத்து தற்பொழுது அந்த மாணவியைக் கடத்திச் சென்ற வாரம் கண்டுபிடிக்க நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தக் கடத்தல் சம்பவம் இடம்பெற்ற பொழுது வீட்டுக்கு முன்பாக இருந்த கமராவில் அந்த கடத்தல் பதிவாகியுள்ளதாகவும் அதனை அடுத்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- அதிவேக நெடுஞ்சாலைகள் ரூ. 355 மில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளன

- மட்டக்களப்பில் தினமும் நான்கு மணி நேரத்திற்கு நீர் வெட்டு

- வறண்ட வானிலைக்கு மத்தியிலும் ஏழு மாவட்டங்களில் குடிநீர் விநியோகம்

- பெட்ரோல் விலை குறைப்பு

- முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்

- நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 903 ஆக உயர்வு

- உள்நாட்டு வருவாய்த் துறையுடனான (IRD) வரித் தகராறில் இலங்கை தேசிய கிரிக்கெட் வீரர்கள்

- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை

- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

4 நீதிபதிகள் புதிதாக நியமனம்
4 நீதிபதிகள் புதிதாக நியமனம்
4 நீதிபதிகள் புதிதாக நியமனம் ,இலங்கையில் ஆளுகின்ற அனுரா குமர திசை நாயக்காவினுடைய ஆட்சி பதவிக்கு வந்ததன் பின்னர் ,தற்போது 4 புதிய நீதி அரசர்கள் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர் .
அதன்படி மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் கௌரவ ஆர்எம்எஸ் ராஜகருணா கௌரவ மேனகா விஜய சுந்தர ,கௌரவ சம்பத் பி அபயகோன் , மற்றும் கௌரவ எம் எஸ் கே பி விஜயரத்தின . ஆகியோரை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வு உத்திய புறமாக இடம்பெற்று இருக்கின்றது இந்த நிகழ்வில் பல முக்கியத்துவர்கள் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நீதிபதிகள் நீதிகளை நிலைநாட்டு கின்றனரா அல்லது நீதிக்கு எதிராக செயல்படுகின்றனரா என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நீதியரசர்கள் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சட்டம் என்பது ஒரு இருட்டறை என்பதோ அல்லது சட்டம் ஒரு நீதி தேவதையா என்பதுதான் இன்றுள்ள கேள்வியாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.
மோட்டார் சைக்கிள் திருடன் போலீசாரால் மடக்கிப் பிடிப்பு
மோட்டார் சைக்கிள் திருடன் போலீசாரால் மடக்கிப் பிடிப்பு
மோட்டார் சைக்கிள் திருடன் போலீசாரால் மடக்கிப் பிடிப்பு,பல மோட்டார் சைக்கிளை திருடி விற்று வந்த திருடன் ஒருவன் போலீசாரின் சிறப்பு குழுவினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.
இவரால் திருடப்பட்ட 4-க்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவர்களுடன் போதை வஸ்து பயன்படுத்தி விற்பனையில் ஈடுபட்ட வந்த பொழுதே போலீசாரின் சிறப்பு குழுவினால் இவர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.
மேற்கொண்ட விசாரணையில் அவர் மோட்டார் சைக்கிளை திருடி குற்றவாளிகள் மற்றும் போதை போல் கடத்தல் கடத்தலுக்கு விட்டு வந்துள்ளது அந்த செயலுடன் செயல்பட்டு வந்துள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு இந்த திருட்டில் ஈடுபட்டிருந்தவர் 28 வயதுடைய இளம் வாலிபர் எனவும் இவரால் எவ்வாறு இந்த மோட்டார் சைக்கிள் திருடப்படுகிறது என்ற வித்தையும் போலீசாருக்கு கற்றுக் கொடுத்தார்.
இலங்கையில் நாடாளாவிய ரீதியில் நாளுக்கு நாள் பல மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு வருகின்ற அவ்வாறான திருடர்களில் ஒருவரை இப்பொழுது வசமாக மாட்டி.
அவ்வாறு திருடப்படும் மோட்டார் சைக்கிள் எவ்வாறு திருடப்படுகின்றன என்கின்ற வித்தையை காட்டிக் கொடுத்துள்ளார்.
காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு
காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு
காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு,இலங்கை மதவாச்சி மயானத்தின் அருகில் 30 வயதுக்கு உள்ளிட்ட பெண் ஒருவருடைய சடலம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இவர் கொழும்பில் இருந்து இலவச பேருந்து ஊடாக வருகை தந்துள்ளது அதனுடைய பற்றி சீட்டுகள் மற்றும் அவரது உடைகள் பைகள் என்பன கொலை செய்யப்பட்ட இடத்தில் காணப்படுகின்றன.
உடலில் பலத்த காயங்கள் காணப்படுவதால் இவள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சடலம் எடுக்கப்பட்டு மரண பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ள பொழுது இவர் யார் என்பது தொடர்பாக இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
இந்த இளம் பெண் அடுத்த படுகொலை செய்யப்பட்ட நிலையில் மயானத்துக்கு அருகில் உள்ள குழி தோண்டிக் அருகிலே இந்த சடலம் கைவிடப்பட்ட நிலையில்
செல்லப்பட்டுள்ளதாகவும் இந்த கொலையை செய்தவர்கள் யார் என்பது தொடர்பாக கண்டுபிடிக்க நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் 2000ரூபாய் புளி கிலோ
இலங்கையில் 2000ரூபாய் புளி கிலோ
இலங்கையில் 2000ரூபாய் புளி கிலோ ,இலங்கையில் புலி ஒரு கிலோ 2000 தற்பொழுது சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதால் புதிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள திடீர் தட்டுப்பாடு காரணமாகவே உள்ளூர் சந்தைகளில் 2000 ரூபாய்க்கு புளி விற்பனையாகி வருகிறது.
தொடர்ந்தும் இலங்கையில் பொருளாதாரம் பலத்த வீழ்ச்சி நிலையை சென்று வருவதாலும் உள்ளூர் உற்பத்திகள் தடுக்கப்பட்டுள்ள காரணத்தினாலேயே உள்ளூர் சந்தையில் இதனுடைய விலை உச்சம் பெறுகின்றது.
இவ்வாறு நாள்தோறும் பொருட்களின் விலை நாளுக்கு ஒவ்வொரு விலையாக காணப்பட்டால் அது மக்களுக்கு பெரும் இடர்களை ஏற்படுத்தும் என்பதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றன.
ஆனால் மக்களுடைய வாழ்வாதாரம் பொருளாதாரம் விலை வாசிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆளுகின்ற அனுரா ஆட்சி செயல்படவில்லை என்பதாக குற்றச்சாட்டு உள்ளது.
சீனாவின் உடைய நோயானது தற்போது உலகளாவிய ரீதியில் பரவி விறகு கொண்ட நிலையில் அந்த நோய் இலங்கையில் வந்தால் இந்த விலைவாசிகள் இரண்டு மடங்கு அதிகரித்தால் இலங்கை நிலை என்பது தான் இப்பொழுதுள்ள கேள்வியாகும் .
சீனா வைரஸ் தமிழகத்தில் தொற்று
சீனா வைரஸ் தமிழகத்தில் தொற்று
சீனா வைரஸ் தமிழகத்தில் தொற்று,தமிழகத்தில் சீனாவின் வைரஸ் தற்பொழுது தோன்றியுள்ள நிலையில் அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு முகாமில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நோயானது கொரோனா போன்ற நோய் தாக்கத்தை ஏற்படுத்த விரும்பும் இதனால் மீளவும் அடித்து பூட்டும் நிகழ்வுகள் இடம்பெறக் கூடும் என மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
உலக நாடுகளில் இவ்வளவு இந்த நோயானது வேகமாக பரவி வருகின்ற நிலையிலேயே உலக நாடுகளில் உள்ள மக்களும் பதட்டத்தில் உறைந்திருக்கின்றன.
மீளவும் நாடு முடக்கப்பட்டு விட்டால் தமது பொருளாதாரத்தில் பெரும் சிதைவுகள் ஏற்படும் மிகுந்த நிலையில் தற்பொழுது நாடுகள் இதை மூடி மறைத்து வருவதற்கான குற்றச்சாட்டு மக்களால் முன்வைக்கப்படுகிறது.
சீனாவில் தொற்றிய நோயானது தமிழகம் வந்திருப்பதால் இவை வரவில்லை இலங்கைக்கும் நாடு கடத்தப்படும் எனவும் ,அவ்வேளை இலங்கையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்ற அச்சம் இப்பொழுது ஏற்பட்டுள்ளது.
ஜெர்மன்செல்ல முற்பட்டவர் விமானத்தளத்தில் கைது
ஜெர்மன்செல்ல முற்பட்டவர் விமானத்தளத்தில் கைது
ஜெர்மன்செல்ல முற்பட்டவர் விமானத்தளத்தில் கைது,போலி விசாவை பயன்படுத்தி இலங்கை கட்டுநாயக்க வான்தளம் ஊடாக ஊடாக ஜெர்மன் செல்ல முற்பட்ட யாழ்ப்பாணம் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் இளவாலை பகுதியை சேர்ந்த வாலிபர் எனவும் தற்பொழுது போலீசார் நாள் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு நீதிமன்றத்தில் பாரப் படுத்தப்பட்டுள்ளார் .
வெளிநாடுகளுக்குச் சென்றால் ஆடம்பரமாக வாழலாம் எனவும் அதிகம் சம்பாதிக்கலாம் என நினைத்து வருகின்ற வாலிபர்கள் பலர் வேலையிழந்து தற்பொழுது நாடு திரும்பி சென்றுள்ள நிலையும் காணப்படுகிறது.
பல கோடி ரூபாய்களை கட்டி வெளிநாடுகளுக்கு மோகத்தில் வருகின்ற இவர்கள் இவ்வாறு விமானத்தில் சிக்கியுள்ளது சட்டவிரோத குடியேற்ற வாசிகளாக நாடுகளுக்கு இவர்கள் கடத்தப்படுவது தொடர்கிறது.
சமீபத்திய மாதங்களுக்கு முன்பதாக வெளிநாடு வர ஆசைப்பட்டு ,தற்போது ரஷ்யா இராணுவத்தில் பல இளைஞர்கள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு இவர் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
12வது மாடியில் இருந்து தவறி விழுந்த இளம்பெண்
12வது மாடியில் இருந்து தவறி விழுந்த இளம்பெண்
12வது மாடியில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் ,கொழும்பு மியூசியஸ் கல்லூரியில் தரம் 11 இல் கல்வி கற்கும் 16 வயதுடைய சிறுமி பொரளையில் உள்ள 24 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் இருந்து தவறி
விழுந்து சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து பொரளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று (10) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், பொரளை, சர்ப்பன்டைன் வீதியைச் சேர்ந்த சிறுமி, ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சிறுமி மன உளைச்சலுக்கு சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்ததாக அவரது தாயார் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், சிறுமி பால்கனியில் இருந்து குதித்தாரா அல்லது தவறி விழுந்தாரா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
வாகனம் ஓட்டுவதைக் கண்டறிய வேகத் துப்பாக்கிகள்
வாகனம் ஓட்டுவதைக் கண்டறிய துப்பாக்கிகள்
வாகனம் ஓட்டுவதைக் கண்டறிய வேகத் துப்பாக்கிகள்,அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட வேகத் துப்பாக்கிகள் ரூ. அதிவேகமாக வாகனம் ஓட்டுவதைக் கண்டறிய காவல்துறைக்கு 91 மில்லியன்.
அதிவேக வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்களைக் குறைக்கும் முயற்சியில், இலங்கை காவல்துறை, ரூ.500 மதிப்புள்ள அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பல வேகத்
துப்பாக்கி சாதனங்களை விநியோகித்துள்ளது. போக்குவரத்து அதிகாரிகளுக்கு 91 மில்லியன்.
இந்த சாதனங்கள் வேக வரம்புகளை மீறும் டிரைவர்களைக் கண்டறிய உதவும். முதற்கட்டமாக, பதில் பொலிஸ் மா அதிபர், நீர்கொழும்பு, களனி, கம்பஹா மற்றும் மேல் மாகாண போக்குவரத்து (தெற்கு) பிரிவின் பணிப்பாளர்களிடம் 30 வேக துப்பாக்கிகளை கையளித்தார்.
இனி, இந்த சாதனங்கள் தீவு முழுவதும் உள்ள போக்குவரத்து பிரிவுகளுக்கு விநியோகிக்கப்படும். புதிய வேகத்தைக் கண்டறிதல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகளுக்குப் பயிற்சியும் வழங்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வேகத் துப்பாக்கிகள், பகல் மற்றும் இரவு போக்குவரத்து நடவடிக்கைகளில் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டில், இலங்கையில் 24,589 போக்குவரத்து விபத்துக்கள் பதிவாகியுள்ளன, இதில் 2,242 உயிரிழப்பு சம்பவங்கள், 2,253 பேர் உயிரிழந்துள்ளனர். கூடுதலாக, 31,182 அதிவேக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது 731 விபத்துகளுக்கு பங்களித்தது.
துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 66பேர் உயிரிழப்பு
துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 66பேர் உயிரிழப்பு
துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 66பேர் உயிரிழப்பு ,2024 ஜனவரி முதல் நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட சம்பவங்களில் 66 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பாதாள உலகம் சம்பந்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் தொடர்பான துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
வன்முறையை எதிர்த்துப் போராடுவதற்கான தீவிர முயற்சிகள் இருந்தபோதிலும், வெளிநாட்டைச் சேர்ந்த கடத்தல்காரர்களின் ஈடுபாடு மற்றும் சிறை அமைப்புக்குள் ஊழல் உள்ளிட்ட சவால்கள் நீடிக்கின்றன.
தரவுகளின்படி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் தொடர்பான வன்முறைகள் 2024 இன் பிற்பகுதியில் அதிகரித்தன, அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் 13 தனித்தனி துப்பாக்கிச் சூடுகளில் 10 இறப்புகள் மற்றும் நான்கு
காயங்கள் பதிவாகியுள்ளன. 2025 ஜனவரி தொடக்கத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் மேலும் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
அம்பலாங்கொடை, கல்கிசை, திக்வெல்ல, பதவிய, கம்பஹா, கந்தானை, மீகொட, மருதானை, மீட்டியகொட, ஜா-எல, காலி, சீதுவ, வெலிகம மற்றும் அஹுங்கல்ல உள்ளிட்ட பல பகுதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய துப்பாக்கிச் சூடு ஜனவரி 9 ஆம் தேதி அஹுங்கல்லவில் இடம்பெற்றது, இதில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் காயமடைந்தார்.
அஹுங்கல்ல முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்ட நபர், ‘லோகு பட்டி’ என அழைக்கப்படும் அறியப்பட்ட பாதாள உலக நபரான சுஜீவ ருவன்குமாரவுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டில், மொத்தம் 103 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதில் 56 பாதாள உலக நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை.
பாதிக்கப்பட்ட 63 பேரில், 45 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடையவர்கள்.
இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், விசாரணைகளின் போது 20 T-56 துப்பாக்கிகளையும் மீட்டுள்ளனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதை அடுத்து, பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பதில்
பொலிஸ் மா அதிபருக்கு (IGP) பணித்தார். தேவையான இடங்களில் விசாரணை மற்றும் நடவடிக்கைகளில் சிறப்பு அதிரடிப்படையை (STF) ஈடுபடுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகள், வெளிநாடுகளில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களின் ஈடுபாட்டின் காரணமாக சவாலானதாக உள்ளது,
அவர்கள் வெளிநாட்டில் இருந்து நேரடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர், கொலைகள் மற்றும் கப்பம் தொடர்பான குற்றங்கள் உட்பட.
சில கடத்தல்காரர்கள் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறைச்சாலை அமைப்பில் உள்ள ஊழல், முயற்சிகளையும் தடை செய்துள்ளது.
இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், சிறைச்சாலைகளுக்குள் உள்ள போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செல்வாக்கை கட்டுப்படுத்துவதற்கு துரித நடவடிக்கை
எடுக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு முன்னதாக பணிப்புரை விடுத்துள்ளார்.
14ஆம் திகதி ஜனாதிபதி சீனா பயணம்
14ஆம் திகதி ஜனாதிபதி சீனா பயணம்
14ஆம் திகதி ஜனாதிபதி சீனா பயணம் ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சீனாவுக்கு 2025, ஜனவரி 14 முதல் 17 வரையில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்விஜயத்தின் போது, ஜனாதிபதி ஷீ ஜின்பிங்குடன் பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு துறைகள் குறித்து இருதரப்பு கலந்துரையாடல்களை
மேற்கொள்ளவுள்ளதுடன், சீனப் பிரதமர் லீ சியாங் மற்றும் சீன தேசிய மக்கள் காங்கிரஸின் தற்போதைய நிலைக்குழுவின் தலைவர் ஜாஓ லெர்ஜி ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.
ஜனாதிபதியின், சீன மக்கள் குடியரசிற்கான இவ்விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்தும் எனவும்
வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதி தூங்கியதால் பேருந்து விபத்து 12 பேர் காயம்
சாரதி தூங்கியதால் பேருந்து விபத்து 12 பேர் காயம்
சாரதி தூங்கியதால் பேருந்து விபத்து 12 பேர் காயம் கொழும்பிலிருந்து பசறை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று பசறையில் உள்ள 15வது தூண் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதி தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பேருந்து வீதியை விட்டு விலகி முன்பக்க பகுதி பள்ளத்தை நோக்கி வழுக்கிச் சென்று நின்றுள்ளதாக எங்கள் செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்தில் காயமடைந்த 13 பேர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து இன்று (11) காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சியினர்
கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சியினர்
கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சியினர்தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்
ஆகியோர் இந்திய பாராளுமன்றின் திராவிட முன்னேற்றக் கழக சார்பான தலைவர் கனிமொழியை சந்தித்துள்ளனர்.
இந்தியா – தமிழ் நாட்டு அரசின் அழைப்பின் பேரில் இந்த சந்திப்பு சென்னையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஈழத் தமிழ் மக்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகள் சம்பந்தமாகவும் மத்திய அரசில் தமிழ் நாட்டின் குரலை எமக்காக தொடர்ந்து எழுப்புவது சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
- என் புருசா நில்லுடா 146 | கௌரி பாடல் |En Purusaa Nilludaa |Tamil love Feeling songs

- என் கண்ணீர் துளியிலே உன்னை தேடுவேனே |621| en kanneer thuliyile unnai theduvene | VANNI MAINTHAN Song

- ஜிந்தா ஜீனுக்கு தான் |966 |காதல் பாடல் | LOVE TAMIL SONG

- சிக்கு சிக்கு தான் | 982|Chikku Chikku Than |

- மறக்க முடியல |964| காதல் பாடல் |Love song | MALA SONGS

பியர் விலை அதிகரிப்பு
பியர் விலை அதிகரிப்பு
பியர் விலை அதிகரிப்பு நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, இன்று (11) முதல் மதுபானம் மற்றும் சிகரெட் மீதான கலால் வரிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அதிவிசேஷ சாராயத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு லீற்றர் மதுபானத்திற்கு விதிக்கப்படும் வரி 7,244 ரூபாய் ஆகும்.
இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒரு லீற்றர் மதுபானத்திற்கு, மொலேசஸ், பனை, தேங்காய் மற்றும் பதப்படுத்தப்பட்ட சாராயத்திற்கு விதிக்கப்படும் வரி 7,752 ரூபாய் ஆகும்.
இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு லீற்றர் மதுபானத்திற்கு 7,969 ரூபாய் வரி விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 9 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்படும் வரிகள் இன்று முதல் திருத்தப்பட்டுள்ளன.
இந்தப் புதிய வரித் திருத்தங்களால், 3,580 ரூபாய் ஆக இருந்த ஒரு போத்தல் அதி விசேஷ சாராயத்தின் விலை 102 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
3,850 ரூபாவாக இருந்த ஒரு போத்தல் தென்னஞ் சாராயத்தின் விலை 109 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், 4,000 ரூபாயாக இருந்த பழைய சாராய போத்தல் ஒன்றில் விலை 109 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
4,250 ரூபாவாக இருந்த அதிவிசேஷ பழைய சாராய போத்தல் ஒன்றில் விலையும் 109 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், செறிவு குறைந்த பீர் போத்தல் ஒன்றின் விலை 30 ரூபாவாலும், செறிவு கூடிய பீர் போத்தல் ஒன்றின் விலை 40 ரூபாவாலும் அதிகரித்துள்ளது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வெளிநாட்டு விஸ்கி போத்தல் ஒன்றின் விலையும் 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டு மதுபானங்களின் விலைகள் அவற்றின் செறிவை பொறுத்து அதிகரிக்கப்பட்டுள்ளது.
- என் புருசா நில்லுடா 146 | கௌரி பாடல் |En Purusaa Nilludaa |Tamil love Feeling songs

- என் கண்ணீர் துளியிலே உன்னை தேடுவேனே |621| en kanneer thuliyile unnai theduvene | VANNI MAINTHAN Song

- ஜிந்தா ஜீனுக்கு தான் |966 |காதல் பாடல் | LOVE TAMIL SONG

- சிக்கு சிக்கு தான் | 982|Chikku Chikku Than |

- மறக்க முடியல |964| காதல் பாடல் |Love song | MALA SONGS

கோப் குழுவை புறக்கணிக்கும் எதிர்க்கட்சி
கோப் குழுவை புறக்கணிக்கும் எதிர்க்கட்சி
கோப் குழுவை புறக்கணிக்கும் எதிர்க்கட்சி அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவை (COPE) புறக்கணிக்க எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற குழுவுக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் பாரம்பரிய நடைமுறைகள் மீறப்பட்டதால் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கோப் குழுத் தலைவர் பதவிக்கு ஒருமனதாக நியமனம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அது ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் மட்டுமே செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
தற்போதைய சூழ்நிலையில் ஏனைய பாராளுமன்றக் குழுக்களில் பங்கேற்க போவதில்லை என்ற நிலைப்பாட்டில் எதிர்க்கட்சி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
போலி ஆவணங்களைத் தயாரித்த மூன்று பேர் கைது
போலி ஆவணங்களைத் தயாரித்த மூன்று பேர் கைது
போலி ஆவணங்களைத் தயாரித்த மூன்று பேர் கைது மோசடியாக தயாரிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் பிற வாகன உரிமங்களை தயாரித்து பணம் பெறும் மோசடியில் ஈடுபட்டு வந்த ஒருவரை
பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (10) மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் மனம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, அவரிடம் இருந்து 19 போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் வாகனப் பதிவு சான்றிதழ்களை தயாரிப்பது தொடர்பிலும் குறித்த நபர் மேலும் பல அதிர்ச்சி தகவல்களை பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
கிடைத்த தகவல்களின் அடிப்படையில், வேரஹெர மோட்டார் வாகன சாரதி அனுமதிப்பத்திர அலுவலகம் அருகே சாரதி பயிற்சி பாடசாலை நடத்தும் ஒருவரையும், நாரஹேன்பிட்ட மோட்டார் வாகன சாரதி அனுமதிப்பத்திர
#அலுவலகம் அருகே போலி உரிமங்களைத் தயாரித்த ஒருவரையும் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 39 மற்றும் 60 வயதுடைய பொரலஸ்கமுவ மற்றும் நாரஹேன்பிட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்தேகநபர்களிடமிருந்து மூன்று போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள், ஆறு கைப்பேசிகள், ஒரு கணினி மற்றும் இதற்காகப் பயன்படுத்தப்பட்ட பல ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மனம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் மனம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














































