Author: தமிழரசி
டக்ளஸ் க்கு ஆதரவு கொடுக்கும் கட்சிகள்
டக்ளஸ் க்கு ஆதரவு கொடுக்கும் கட்சிகள்
யாழ் மாவட்டத்தில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஏனைய கட்சிகள் ஆதரவு கொடுக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
சங்கு, சைக்கிள் கூட்டணி மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆகிய தரப்புக்கள் தம்மை தொடர்பு கொண்டு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில்
ஆதரவு கோரியதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
நண்பர் தர்மலிங்கம் சித்தார்த்தன் என்னை தொடர்பு கொண்டு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தொடர்பாக கலந்துரையாடினார்.
அரசியல்வாதியாக இல்லாமல் நட்பு ரீதியாக அந்த சந்திப்பு நடைபெறும்.
உள்ளூராட்சி சபைகளை ஆளுவது தொடர்பாக அண்ணன் சி.வீ.கே.சிவஞானமும். குறுஞ்செய்தியை அனுப்பி சந்திப்பதற்கு கோரியிருந்தார். இருவரையும் சந்திக்க தீர்மானித்துள்ளேன்.
எங்களுடைய கட்சியினுடைய நிலைப்பாடு பக்கம் சாராது மக்கள் நலன் சார்ந்து இருக்கும். எந்த இடத்திலும் ஆட்சியை பொறுப்பெடுப்பதற்கோ ஆட்சியில் பங்கெடுப்பதற்கோ நாங்கள் தயாராக இல்லை.
எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு எங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு உள்ளோம்.
உத்தியோகபூர்வமாக எந்த கட்சிகளும் இதுவரை என்னோடு கதைக்கவில்லை. தனிப்பட்ட முறையில் எங்களுடைய கட்சி முக்கியஸ்தர்களிடம் தங்கள் ஆதரவை கோரியுள்ளனர்.
கடந்த கால கசப்புகளை கருத்திற்கொண்டு எதுவுமே உத்தியோகபூர்வமாக இருந்தாலே அது நல்லது என்பது என்னுடைய அனுபவம் – என்றார்.
இலங்கையில் கொரோனா தொற்று ஒருவர் பலி
இலங்கையில் கொரோனா தொற்று ஒருவர் பலி
இலங்கையில் அதிகமாக கொரோனா தொற்று இருப்பதாக தெரிவித்த சுகாதார அமைச்சு இன்று கொரோனாவினால் ஒருவர் பலி என உறுதிசெய்துள்ளது.
மே மாதத்தில் அநுராதபுரத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாகவும்
தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் தேஜனா சோமதிலக இன்று தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் நோயாளிகள் தற்போது வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், அநுராதபுரம், சாலியவத்தையைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவர் ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக வைத்தியர் தேஜனா சோமதிலக தெரிவித்துள்ளார்.
ஆசியாவிலேயே தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசுக்குள் குழப்பம் ஏற்படுத்தும் எதிராளிகள்
அரசுக்குள் குழப்பம் ஏற்படுத்தும் எதிராளிகள்
அரசுக்குள் குழப்பம் ஏற்படுத்தும் எதிராளிகள் ,அரசுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி இவ் அரசு மீது களங்கத்தை ஏற்படுத்த முயற்சிகள் நடப்பதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார்.
“மக்களின் அமோக ஆணையால் உருவாக்கப்பட்ட இந்த அரசுக்குள் குழப்பத்தை ஏற்பட்டுத்துவதற்காக எதிராளிகளால் திட்டமிட்டுப் போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன.
ஆனால், அந்தச் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. அதேவேளை, பிரதமர் ஹரிணியை மாற்றும் எண்ணமும் இல்லை.” –
அமைச்சரவைப் பேச்சாளர்
என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்தப்படவிருப்பதாகவும் அமைச்சரவையில் மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவையாகும்.
அமைச்சரவை மறுசீரமைப்பு
அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பிலோ – அமைச்சர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பிலோ இதுவரை எந்தவொரு கலந்துரையாடலும் முன்னெடுக்கப்படவில்லை.
அரசுக்கு எதிரானவர்களால் திட்டமிட்டு இந்தச் செய்தி பரப்பப்பட்டுள்ளது. அவதானத்தைத் திசை திருப்புவதற்காகவும், அரசுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலும் இவ்வாறான செய்திகள் திட்டமிட்டு வெளியிடப்படுகின்றன.
எந்தவகையிலும் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது. பிரதமர் ஹரிணியை மாற்றும் எண்ணமும் இல்லை.” – என்றார்.
திருகோணமலையில் கடற்படையினர் துப்பாக்கி சூடு
திருகோணமலையில் கடற்படையினர் துப்பாக்கி சூடு
திருகோணமலையில் கடற்படையினர் துப்பாக்கி சூடு ,திருகோணமலையில் கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
கடற்படையினரின் துப்பாக்கிச்சூடு
திருகோணமலை குச்சவெளி கடற்பகுதியில் கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி மீனவர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் செவ்வாய்கிழமை (03) மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் குச்சவெளி ஜாயாநகர் கிராமத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே படுகாயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
குச்சவெளி கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்தவேளை சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கடற்படையினரால் சிலர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன்
படகு மற்றும் சுருக்கு வலைகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
மீன்பிடிக்கக்கூடிய சட்டம்
சுருக்கு வலையை பயன்படுத்தி சுமார் 7 கிலோ மீற்றருக்கு அப்பால் மீன்பிடிக்கக்கூடிய சட்டம் இருப்பதாகவும் அதை மீறி மீன்பிடித்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
வட மாகாணத்திற்கு ஜனாதிபதி நிதியம்
வட மாகாணத்திற்கு ஜனாதிபதி நிதியம்
ஜனாதிபதி நிதியம் வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலகங்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகள் விரிவாக்கப்பட்டதன் மூலம்,
அதில் கோரப்படும் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.
அதே நேரத்தில், புதிய கணினி அடிப்படையிலான(Online System) குறித்து பிரதேச செயலகங்களின் உரிய விடயத்துடன் தொடர்புடைய ஊழியர்களுக்கு
தெளிவூட்டுவதும் பயிற்சி அளிப்பதும் அவசியமாகியுள்ளது.
அதன் ஒரு அங்கமாக, வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியாமாவட்டங்களின் பிரதேச செயலாளர்கள் மற்றும்
ஜனாதிபதி நிதியம் தொடர்பாக செயலாற்றும் அதிகாரிகளுக்கு 2025.06.21 அன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பயிற்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தின் மூலம், வடக்கு மாகாணத்தில் ஜனாதிபதி நிதியின் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பயனாளிகளுக்கு உயர்தர சேவையை வழங்கவும்,
நவீன மயமாக்கப்பட்ட ஆன்லைன் அமைப்புகளை அறிமுகப்படுத்தவும்,மேலும் சேவைகளை விரைவாக வழங்கவும்எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பை மையமாகக் கொண்ட ஒரு குறிப்பிட்ட அளவிலானவர்களுக்கு மட்டும் நன்மைகளை வழங்கிய ஜனாதிபதி நிதியத்தை,
நாடு முழுவதும் வாழும் மக்களுக்கு நன்மைகளை வழங்கும் மக்கள் நிதியமாக செயல்படுத்துவதே தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான பணிக்குழுவின் முதன்மையான நோக்கமாகும்.
அந்த நோக்கத்தை அடைய,எதிர்காலத்தில் இது போன்ற பயிற்சித் திட்டங்கள் ஏனைய மாகாணங்களிலும் செயல்படுத்தப்படும்.
சுன்னாகத்திலும் கிளிநொச்சியிலும் போதை
சுன்னாகத்திலும் கிளிநொச்சியிலும் போதை
வடக்கு மாகாணத்தில் நாளுக்குநாள் அதிகரித்துவரும் போதை சுன்னாகத்திலும் கிளிநொச்சியிலும் அகப்பட்ட போதை.
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இளைஞர்கள் இருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது இளைஞனின் உடைமையில் இருந்து 2 போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.
அதேவேளை, வீதியில் பயணித்த இளைஞன் ஒருவரை சுன்னாகம் பொலிஸார் வழிமறித்து சோதனையிட்ட போது இளைஞனின் உடைமையில் இருந்து 20 போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.
அதனையடுத்து போதை மாத்திரைகளுடன் கைதான இரு இளைஞர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கிளிநொச்சி போதை
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதநகர் பகுதியில் பாழடைந்த வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட மூன்று பார்சல் கஞ்சா போதைப்பொருள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலை அடுத்து இராணுவ புலனாவுத் துறையினரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கஅமைய கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு பொலிஸ்மா அதிபரின் கீழ் உள்ள சிறப்பு பிரிவினர் சம்பவ இடத்துக்கு விரைந்ததுடன் மூன்று பார்சல் கஞ்சாவை மீட்டுள்ளனர்.
இருப்பினும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் யாரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பல இலட்சத்திற்கு ஏலம் போன மாம்பழம்
பல இலட்சத்திற்கு ஏலம் போன மாம்பழம்
யாழில் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமொன்றில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவின் மாம்பழம் பல இலட்சங்களில் ஏலம் போயுள்ளது.
யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி ஸ்ரீசிவசுப்பிரமணியர் ஆலயத்திலே இந்த ஏலம் இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆலயத்தில் 15 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிற நிலையில் எட்டாம் நாளான நேற்று மாம்பழத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த மாம்பழத்திருவிழா நிறைவடைந்த பின்னராக முருகனின் மாம்பழம் ஆலய நிர்வாக சபையினரால் ஏலம் விடப்பட்டிருந்தது.
இதன் போது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்தும் ஆலயத்திற்கு வந்திருந்த அடியவர்கள்குறித்த மாம்பழத்தை வாங்கும் நோக்கில் ஏலத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மாம்பழத்தின் விலையும் உயர்ந்து கொண்டு சென்றது. இவ்வாறு பல இலட்சங்களையும் தாண்டி மாம்பழம் ஏலம் எடுக்கப்பட்டது.
இதன்போது பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்திருந்த அ.அகிலன் எனும் அடியவர் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் ரூபாவிற்கு இந்த மாம்பழத்தை ஏலத்தில் எடுத்திருந்தார்.
இதன் போது ஆலய நிர்வாக சபையினரால் ஏனைய சில பொருட்களும் ஏலத்தில் விடப்பட்டிருந்த நிலையில் அதனையும் அடியவர்கள் ஏலத்தில் வாங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும், குறித்த ஆலயத்தின் 15 நாள் திருவிழாவின் தொடராக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழாவும் திங்கட்கிழமை தீர்த்த திருவிழாவும்
மறுநாள் செவ்வாய்க்கிழமை பூங்காவனத் திருவிழாவும் புதன்கிழமை வைரவர் உற்சவமும் இடம்பெற்று திருவிழா நிறைவடையவுள்ளது.
ஜனாதிபதிக்கு டக்ளஸ் எழுதிய கடிதம்
ஜனாதிபதிக்கு டக்ளஸ் எழுதிய கடிதம்
ஜனாதிபதி அனுரவுக்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடிதம் அனுப்பியுள்ளார்.
வடக்கு, கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் எமது கடல் வளத்தையும் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துப் பேரழிவைத் தடுக்குமாறு கோரி
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டியதும், சட்டவிரோதமானதுமான இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் தொழில் செயற்பாடுகள் காரணமாக
எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்களும், கடல் வளமும் பாரியளவில் பாதிக்கப்பட்டு வருவதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
இத்தகைய செயற்பாடுகளை நிறுத்துவதற்கு நாமும் பல்வேறு முயற்சிகளை எடுத்திருந்தும், அவை முழுமை பெறவில்லை.
தற்போது மீனினங்களின் இனப்பெருக்கக் காலம் என்பதால் இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் தொழில் நிமித்தம் வருவதில்லை.
இது ஒவ்வொரு வருடமும் நிகழ்வதாகும். அந்தவகையில் இந்த வருடம் இக்காலகட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி தொடங்கி எதிர்வரும் 15ஆம் திகதி முடிவடைகின்றது.
இந்தக் காலகட்டம் முடிவடைந்த நிலையில் – அதாவது எதிர்வரும் 15ஆம் திகதிக்குப் பின்னர் ஆயிரக்கணக்கிலான இந்திய இழுவை மடி வலைப் படகுகள் இலங்கைக் கடற்பரப்புக்குள் நிச்சமயாக வரும்.
எனவே, இந்த விடயம் தொடர்பில் தங்களது அவதானத்தைச் செலுத்தி, ஒரு பக்கத்தில் இது தொடர்பான இராஜதந்திர ரீதியிலான பேச்சுகளை இந்திய அரசுடன் மேற்கொண்டும்,
மறு பக்கத்தில் இலங்கையில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டும், இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் இலங்கைக் கடற்பரப்புக்குள்ளான செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றுள்ளது.
UK பாதுகாப்புச் செலவு 3.5% ஆக உயரும்
UK பாதுகாப்புச் செலவு 3.5% ஆக உயரும்
UK இந்த மாதம் 3.5% தேசிய வருமானத்தை பாதுகாப்புக்காக செலவழிக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என நிச்சயமாக உள்ளதாக UK செய்திகள் தெரிவிக்கிறது.
இது NATO கூட்டமைப்பின் ஆயுதத் தயாரிப்புப் போக்கின் ஒரு பகுதியாகவும், அமெரிக்காவை உறுதியாகச் சேர்த்துக்கொள்ளும் முயற்சியுடனும் இணைந்துள்ளது.
இந்த முக்கிய அரசியல் மாற்றம் உறுதியாக இருப்பதால், பாதுகாப்பு துறை (MoD) அதிகாரிகள், முன்னதாக 2030களுக்குள் 3% இலக்கை நோக்கம் எனவா
அல்லது “உறுதி” எனவா குறிப்பிடுவது குறித்து தொழில்நுட்ப சிக்கல்களாக பதற்றப்படுவதைப் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளனர்.
பிரதமரான சர் கீர் ஸ்டார்மர் பாதுகாப்பு செலவுகளை அதிகரிப்பது மற்றும் சமூக நல திட்டங்களை மேற்கொள்வது ஆகிய இரண்டுக்கும் இடையில் சமநிலையை தேட வேண்டிய
அரசியல் சிக்கலின் மத்தியில் உள்ளார். அவர் இன்று உடனடியாகவே இந்த செலவுக் குறிக்கோளை தீர்மானிக்க வாய்ப்பு உள்ளது.
2035க்குள் பாதுகாப்பு செலவினை 3.5% ஆக உயர்த்துவதுடன், பாதுகாப்பு தொடர்பான இரகசிய உளவுத்துறைகள், தளவமைப்புகள் போன்றவற்றுக்காக கூடுதல் 1.5% செலவினையும் உறுதி செய்ய வேண்டியிருக்கும்.
இதன் மூலம் மொத்தப் பாதுகாப்பு செலவு 5% ஆக உயரும், இது இந்த மாதம் நெதர்லாந்தில் நடைபெறும் முக்கிய NATO மாநாட்டில் ஒட்டுமொத்த உறுப்பினர்களிடமும் எதிர்பார்க்கப்படும்
வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசு வீடுகள்
வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசு வீடுகள்
வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசு வீடுகள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 30 ஆண்டுகளாக நிலவிய போர் காரணமாக குறித்த பிரதேசங்களில் வாழ்ந்த குடும்பங்களுக்குரிய பெருமளவான வீடுகள் சேதமடைந்தன.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 2009 ஆண்டிலிருந்து இதுவரை 274,728 குடும்பங்களைச் சேர்ந்த 914,722 நபர்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
2024 ஆண்டின் இறுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 08 மாவட்டங்களில் 150,488 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
குறித்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு இலங்கை அரசு, இந்திய அரசு, அரச சார்பற்ற அமைப்புகள் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் உள்ளிட்ட பிற அமைப்புகள் மூலம் நிதி வழங்கப்படுகிறது.
2009 ஆண்டுக்கு முன்னர் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு (Core families) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 08 மாவட்டங்களில் மேலும் 16,759 வீடுகள் நிர்மாணிக்கப்பட வேண்டும் என இனங்காணப்பட்டுள்ளது.
குறித்த திட்டத்தின் ஆரம்பத்தில் 550 சதுர அடி வீடுகளை அமைப்பதற்காக மதிப்பீடு செய்யப்பட்ட கிரயம் ரூபா 1,100,000 மற்றும் 340 சதுர அடி வீடுகளை அமைப்பதற்கு ரூபா 650,000 எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், கட்டிட நிர்மாண மூலப்பொருட்களின் தற்போதைய விலைகளுக்கு அமைய 550 சதுர அடி வீடுகளை அமைப்பதற்காக மதிப்பீடு செய்யப்பட்ட கிரயம்
ரூபா 1,600,000 மற்றும் 340 சதுர அடி வீடுகளை அமைப்பதற்கு ரூபா 950,000 எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, 2025 ஆண்டிலிருந்து அமுலாகும் வகையில் நிரந்தர வீடமைப்பு திட்ட பயனாளி நிர்மாணிக்கும் அடிப்படையில் அரசினால் வழங்கப்படும் உதவிப் பணத்தை பின்வரும் வகையில் அதிகரிப்பதற்கு
நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
மனைவியின் தலையுடன் பொலிஸில் கணவன்சரண்
மனைவியின் தலையுடன் பொலிஸில் கணவன்சரண்
மனைவியின் தலையுடன் பொலிஸில் கணவன்சரண் ,மனைவியின் தலையை அறுத்து பொட்டலம்கட்டி பொலிஸில் சரண்டைந்த கணவனால் வவுனியா பரபரப்பாகியுள்ளது.
மனைவியின் கழுத்தை அறுத்து கையில் எடுத்து சென்ற கணவன்
மனைவியின் கழுத்தை அறுத்து கையில் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள சம்பவமொன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புளியங்குளம், நொச்சிக்குளம்- அனந்தர்புளியம்குளம் பகுதியை 32 வயதுடைய சேர்ந்த ஆரம்பப்பிரிவு பாடசாலை ஆசிரியை ஒருவரே கொல்லப்பட்டுள்ளார்.
இன்று (03) காலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு தனது மனைவியின் தலையை எடுத்துக் கொண்டு வந்த கணவன், மனைவியை கொலைசெய்து, நயினாமடு காட்டுக்குள் வீசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது,
கள்ள காதல் மனைவியை வெட்டி கொன்ற கணவன்
மானிப்பாயை சொந்த இடமாக கொண்ட கணவன், குறித்த ஆசிரியையுடன் காதல் திருமணம் செய்துள்ளார்.
ஆனால், ஆசிரியை இளைஞன் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக கணவன் குற்றம்சாட்டி தகராறில் ஈடுபட்டு வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் இருவர் பேசி தீர்த்துவிட்டு சுமுகமாக இருந்துள்ளனர்.
இந்நிலையில், ஆசிரியையுடன் தொடர்பிலிருந்ததாக கூறப்பட்ட இளைஞன், இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை கணவனுக்கு அனுப்பியுள்ளனர். இதனால் ஆத்திரம் தாங்காத கணவன், மனைவியின் சகோதரனிடமும் இதை கூறியுள்ளார்.
பின்னர், இந்த விவகாரத்தை பொலிஸ் நிலையத்தில் தீர்த்துக்கொள்ளலாம் என கூறி, மனைவியை அழைத்துச் சென்றுள்ளார்.
அவ்வேளையில், நயினாமடு காட்டுப்பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பின்னர், கழுத்தை வெட்டி, பிளாஸ்ரிக் பையில் வைத்து, புளியங்குளம் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.
தனது மனைவியை கொன்று நயினாமடு காட்டில் வீசியுள்ளதாக அவர் தெரிவித்ததையடுத்து, பொலிஸார் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அனுரவின் அதிரடிஉத்தரவு களத்தில் முப்படைகள்
அனுரவின் அதிரடிஉத்தரவு களத்தில் முப்படைகள்
அனுரவின் அதிரடிஉத்தரவு களத்தில் முப்படைகள் ,இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்க மீண்டும் களத்தில் முப்படைகளை இறங்குமாறு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
நாடு முழுவதும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக முப்படைகளை அழைக்க ஜனாதிபதி சிறப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 40வது அத்தியாயத்தின் பிரிவு 12ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் .
என்று சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்ரமரத்ன இன்று (03) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
விழுந்து போய் கிடக்கின்ற பொருளாதாரத்தை நிமிர்த்த முடியாது திணறி வருகின்ற ஆளும் அனுரா அரசு .
இராணுவ குவிப்பு
இந்த இராணுவ குவிப்பு கொரோனவை அடையாளம் காட்டுவதன் மூலமும் களத்தில் இறக்கி மக்களை அச்சுறுத்தும் ஒரு நடவடிக்கையாக இதை பயன்படுத்த போகிறதா என்கின்ற பரபரப்பு நிலவுகிறது.
இராணுவ பாதுகாப்பு செலவினத்தையும் இராணுவ படைகளின் எண்ணிக்கையும் குறைத்து வைத்திருந்த அனுரா அரசு ,திடீரென ராணுவத்தை வீதிகளில் இறக்கி பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்துவதில் இருந்து, தமது அரசை தக்கவைத்துக் கொள்வதற்கு நடவடிக்கையாக உள்ள நோக்கமுடிகிறது .
ஆளும் அரசு அதிகாரங்கள் தமது அரசாட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக ,மக்களை அடக்கி ஆளும் தந்திரோபாயத்தை கையாண்டு வருகிறது.
அவ்விதமான ஒரு நடவடிக்கையின் ஒரு வெளிப்பாட்டு தன்மையாகவே, இந்த இராணுவ குவிப்பும் கொரோனா நோய் பரவல் கதைகள் காணப்படுவதாக பார்க்கப்படுகிறது.
வீதிகள் எங்கும் இராணுவம் போலீசார் குவிப்பு
எதிர்காலத்தில் வீதிகள் எங்கும் இராணுவம் போலீசார் குவிக்கப்பட்டு ,பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு அதனால் மக்கள் கைது செய்யப்படக்கூடிய அபாயம் காணப்படுகிறது.
வரி அதிகரிப்பு காரணமாக பொருட்களின் விலை அதிகரிப்பு ஏறக்கூடும் என்ற நிலையில் அவ்வேளை மக்கள் தன்னெழுச்சியாக ஆளும் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்துவர்.
விதமான போராட்டங்களை தடுப்பதற்காகவே தற்போது கொரோனா நோய் காட்டி இராணுவத்தை வீதியில் இறக்கும் சந்துருபாய் நடவடிக்கை அனுராசு மேற்கொண்டு வருவதையே இதனூடாக காண முடிகிறது
அப்படி என்றால் விரைவில் அனுரா ஆட்சி கவிழ்க்க பட போவதையும் மக்கள் அவருக்கு எதிராக போராட்டத்தில் குதிக்க போவதையும் இவை எடுத்துக்காட்டுகின்றன.
யாழில் சைக்கிளுக்கும் சங்குக்கும் ஒப்பந்தம்
யாழில் சைக்கிள் சங்குக்கும் ஒப்பந்தம்
யாழில் சைக்கிளுக்கும் சங்குக்கும் ஒப்பந்தம் ,யாழில் சைக்கிளுக்கும் சங்குக்கும் இடையே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே கொள்கை ரீதியான இணக்கத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தமொன்று இன்றையதினம் திங்கட்கிழமை கைச்சாத்திடப்பட்டது.
யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதி
யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. தமிழ் தேசிய பேரவையின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் அதன் செயலாளர் நாகலிங்கம் இரட்ணலிங்கமும் கையொப்பமிட்டனர்.
ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் தமிழ் தேசிய பேரவையின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், ந.சிறீகாந்தா, பொ.ஐங்கரநேசன், எம்.கே.சிவாஜிலிங்கம், ஈ.சரவணபவன், க.அருந்தவபாலன்,
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி
க.நாவலனும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரம், சுரேஸ் பிரேமச்சந்திரன், முருகேசு சந்திரகுமார்,
நாகலிங்கம் இரட்ணலிங்கம், பா.கஜதீபன், க.சர்வேஸ்வரா உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர்.
உள்ளூராட்சி நிறுவனங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் வடக்கில் பெரும்பாலான சபைகளில் ஆட்சி அமைப்பதில் தமிழ் கட்சிகளிடையே இழுபறி நிலையே காணப்பட்டது.
தமிழ் தேசிய பேரவை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே தொடர்ச்சியாக நடைபெற்ற சந்திப்புக்களை தொடர்ந்து ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
செம்மணியில் ஒரு மனித புதைகுழி
செம்மணியில் ஒரு மனித புதைகுழி
செம்மணியில் தோண்ட தோண்ட மிதக்கும் மண்டையோடுகள் ஆகவே செம்மணி ஒரு மனித புதைகுழி என பிரகடணம் செய்யபப்டவுள்ளது.
யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மயானத்தை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சமர்பணங்களை முன்வைக்க சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
செம்மணி – சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டப்பட்டபோது, மனிதச் சிதிலங்கள் பல மீட்கப்பட்டிருந்தன.
அந்த மனிதச் மனிதச் சிதிலங்கள் 1995, 1996ஆம் ஆண்டுகளில் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.
முறைப்பாட்டின் பிரகாரம் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி யாழ் . நீதவான் நீதிமன்ற நீதவான் மேற்கொண்ட ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து, அகழ்வுப் பணிகள் கடந்த மே மாதம் 15ஆம் திகதி ஆரம்பமானது.
இரண்டாம் நாளான 16ஆம் திகதி அகழ்வின், போது முழுமையான என்புத்தொகுதிக்கு மேலதிகமாக , மண்டையோடு ஒன்றும்,, கை எலும்பு ஒன்றும் மீட்கப்பட்டன.
இவை அனைத்தும் அகழ்வு செய்யப்படும் பகுதியின் வெவ்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டதால், அந்த இடம் மனிதப் புதைகுழியாக இருக்கலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டிருந்தது.
அந்நிலையில் 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பெய்த மழை காரணமாக அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு இருந்தன.
இந்நிலையில் , இன்றைய தினம் திங்கட்கிழமை மீள அகழ்வு பணிகள் ஆரம்பமான போது, ஏற்கனவே அகழ்வு பணிகள் இடம்பெற்ற பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி அப்பகுதி சகதியாக காணப்பட்டமையால்,
பிறிதொரு பகுதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
அதன் போது, ஐந்து மண்டையோடுகளுடன் , எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இது வரையிலான அகழ்வு பணிகளில் 07 மனித மண்டையோடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன் , எலும்பு கூட்டு எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன. மூன்று மண்டையோடுகளுக்கு மேல் ஒரு பகுதியில் அடையாளம் காணப்பட்டால்
அப்பகுதியினை மனித புதைகுழி என பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.
அதனால், அப்பகுதியை மனித புதைகுழி என பிரகடனப்படுத்துமாறு யாழ் . நீதவான் நீதிமன்றில் சமர்ப்பனங்களை முன்வைக்க உள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்னர்.
இந்தியாவலியுறுத்து இலங்கை அகதிகளின் பாதுகாப்பு
இந்தியாவலியுறுத்து இலங்கை அகதிகளின் பாதுகாப்பு
இந்தியாவலியுறுத்து இலங்கை அகதிகளின் பாதுகாப்பு ,இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்லும் அகதிகள் குறித்து இந்தியா தனது கருத்தை தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு அனுப்பப்படும் தமிழ் அகதிகள் பாதுகாப்பாக அவர்களது இல்லத்துக்கு போய்ச்சேர உரிய நடவடிக்கைகளை
இந்திய அரசும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும் என்று திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பியின் சகோதரர் நடேசன் (வயது 92) புதுச்சேரி லாஸ்பேட்டை அவ்வைநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார்.
அவரது உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று மாலை அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் திருமாவளவன் எம்பி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,
இந்திய அரசை நம்பி, தாயகம் திரும்பியவர்களை இலங்கை அரசு கைது செய்வது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.
அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உள்ளது. இந்திய அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும்.
தமிழகத்தில் இருந்து அல்லது இந்தியாவில் எந்த மாநிலத்தில் இருந்தும் இலங்கைக்கு அனுப்பப்படும் தமிழ் அகதிகளை பாதுகாப்பாக
அவர்களது இல்லத்துக்கு போய்ச்சேர உரிய நடவடிக்கைகளை இந்திய அரசும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
யாழ்மாநகர சபையின் முஸ்லிம்பெண் பிரதிநிதி
யாழ்மாநகர சபையின் முஸ்லிம்பெண் பிரதிநிதி
யாழ்மாநகர சபையின் முஸ்லிம்பெண் பிரதிநிதி முதன்முதலாக யாழ் மாநகர சபையில் முஸ்லிம் பெண் ஒருவர் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ். மாநகர சபையில் தனக்குக் கிடைத்த 3 (போனஸ்) பிரதிநிதிகளில் ஒன்றை, யாழ் முஸ்லிம் சமூகம் சார்பில், றிபைன் பாத்திமா றிஸ்லாக்கு தமிழரசு கட்சி வழங்கியுள்ளது.
உள்ளுராட்சி தேர்தல்
2025 ஆம் ஆண்டு உள்ளுராட்சி தேர்தல் பற்றிய விசேட வர்த்தமானி சனிக்கிழமை (31) வெளியிடப்பட்டது.
குறித்த அறிவித்தல் மூலம் நியமனம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ் மாநகர சபையில் தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் றிஸ்லா வேட்பாளராக களமிறங்கியிருந்தார்.
மாநகரசபைத் தேர்தலில், பட்டியல் வேட்பாளராக பாத்திமா றிஸ்லா ஆசிரியரை இலங்கை தமிழ் அரசுக் கட்சி தமது நியமன உறுப்பினராக நியமித்துள்ளது.
யாழ் மாநகரசபையின் முதல் முஸ்லீம் பெண்
இந்த நியமனத்தை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுடன் இதன்படி யாழ் மாநகரசபையின் முதல் பெண் பிரதிநிதியாக ஆசிரியை பாத்திமா றிஸ்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தை கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாணக்கிளைத் தொகுதி தலைவர் சிறில் மற்றும் செயலாளர் ஆர்னோல்ட் ஆகியோர் உறுதி செய்துள்ளனர்.
இங்கிலாந்தில் ஊதிய உயர்வு
இங்கிலாந்தில் ஊதிய உயர்வு
இங்கிலாந்து அரசு அதிகாரப்பூர்வமாக 2025 ஏப்ரல் 1 முதல் தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பணவீக்கத்தின் அதிகரிப்பை எதிர்கொள்வதற்கான முயற்சியாக,
இது அனைத்து வயது பிரிவிலுமுள்ள பணியாளர்களுக்கு நிதியுதவி வழங்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளது.
முக்கியமான மாற்றமாக, தேசிய வாழ்நிலை ஊதியம் (National Living Wage – NLW) இப்போது 21 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்காக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன், 23 வயதுக்கும் மேல் இருந்தவர்களுக்கே இது பொருந்தியது. இம்மாற்றம் குறிப்பாக வேலைவாய்ப்பு வாழ்க்கைக்கு மாறிக்கொண்டிருக்கும் இளைய பணியாளர்களுக்கான வருமான ஒற்றுமையை மேம்படுத்தும் முயற்சியாகும்.
புதிய ஊதிய விகிதங்கள், குறிப்பாக இளம் ஊழியர்கள் மற்றும் பயிற்சி பெறுபவர்களுக்காக, குறிப்பிடத்தக்க அளவில் உயர்வாக உள்ளன. கடந்த ஒரு தசாப்தமாக உள்ள மிகப்பெரிய வருடாந்திர ஊதிய உயர்வுகளில் இது ஒன்றாகும்.
இதன் மூலம், வயதுப்பிரிவுகளுக்கு இடையிலான ஊதிய வேறுபாடுகள் குறைக்கப்படும் மற்றும் பணியாளர்களுக்கு நிதி நிலைத்தன்மை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
21 வயதுக்கும் மேற்பட்ட பணிநிரந்தர ஊழியர்களுக்கு, புதிய ஊதிய விகிதமான £12.21 என்ற அடிப்படையில், வருடத்துக்கு சுமார் £24,441 சம்பாதிக்கலாம்.
இது 2024-இன் £22,918 உடன் ஒப்பிடும்போது முக்கியமான உயர்வாகும்.
இதனால் என்ன நன்மை
வாடகை, உணவு மற்றும் மின்சாரம் போன்ற செலவுகளை சந்திக்க அதிக வருமானம்
பகுதி நேர மற்றும் மணி அடிப்படையிலான வேலைக்கு செல்லும் பணியாளர்களுக்கு நிதி சுதந்திரம்
உண்மையான வாழ்நிலை ஊதியத்தை நோக்கி ஒரு முன்னேற்றம் (இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என சிலர் வலியுறுத்துகின்றனர்)
தொழிலாளர்களுக்கு இதன் தாக்கம் மற்றும் சவால்கள்
பணியாளர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், வணிகத் துறைக்கு—முக்கியமாக சில்லறை வணிகம், உணவகம், மற்றும் பராமரிப்பு சேவைகள்—இதனால் வேலைச்செலவுகள் உயரும்.
நிறுவனங்களுக்கு எதிர்பார்க்கப்படும் சவால்கள்:
சிறிய வணிகங்களுக்கான செலவுகள் அதிகரிக்கும்
விலைகளை உயர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்
ஏப்ரலுக்கு முன் HR மற்றும் Payroll அமைப்புகளை மேம்படுத்த வேண்டிய தேவை
நியாயமாக நடத்த நிறுவனங்கள் செய்ய வேண்டியவை:
ஊழியர் ஒப்பந்தங்களை மீளாய்வு செய்யவும் மாற்றம் செய்யவும்
Payroll அமைப்புகளை புதுப்பிக்கவும்
ஊழியர்களுக்கு புதிய ஊதியங்களை பற்றி தெரிவிக்கவும்
இந்த மாற்றங்களைச் செயல்படுத்த தவறினால், ஊதியம் குறைவாகக் கொடுத்த ஒவ்வொரு ஊழியருக்கும் £20,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். சட்ட நடவடிக்கைகளும் ஏற்படலாம்.
ஊதிய உயர்வுக்கான அரசின் நோக்கம்
இந்த ஊதிய உயர்வு, அரசு மேற்கொள்ளும் வருமான ஒற்றுமையை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.
குறைந்த வருமானம் பெறுபவர்களை ஆதரித்தல்
இளம் பணியாளர்களுக்கு அடிப்படை செலவுகளை சந்திக்க உதவுதல்
மக்களின் செலவுத்திறனை அதிகரித்து பொருளாதார வளர்ச்சிக்கு உதவுதல்
குறிப்பாக 16 முதல் 20 வயதுக்குட்பட்டவர்களின் ஊதிய உயர்வு, இளம் மக்கள் வேலைக்கு வர ஊக்குவிப்பதையும், நலத்திட்டங்களில் சார்ந்திருக்கும் நிலையை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பணியாளர்கள் செய்ய வேண்டியவை
உங்கள் ஊதிய உயர்வு சரியாக அமலாகிறதா என்பதை உறுதி செய்ய:
ஏப்ரல் மாதத்தில் உங்கள் Payslip-ஐ சரிபார்க்கவும்
உங்கள் ஊதியம் குறைவாக இருக்கிறது என்று சந்தேகம் இருந்தால் Acas (0300 123 1100) அல்லது Citizens’ Advice-ஐ தொடர்புகொள்ளவும்
உங்கள் கூடுதல் வருமானத்தை சீராக பயன்படுத்தவும்: முக்கிய தேவைகள், சேமிப்பு, கடனை அடைதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கவும்
யாருக்கு புதிய ஊதிய உயர்வு பொருந்தாது?
புதிய ஊதிய உயர்வுகள் கீழ்கண்டவர்களுக்கு பொருந்தாது:
சுயதொழிலாளர்கள்
தன்னார்வலர்கள் மற்றும் சம்பளம் இல்லாத பயிற்சி ஊழியர்கள்
ஆயுதப்படை உறுப்பினர்கள்
குடும்ப உறுப்பினர்கள் சொந்தமாக நடத்தும் வணிகத்தில் பணிபுரிபவர்கள்
உங்களுக்கு இந்த புதிய ஊதியம் பொருந்துகிறதா இல்லையா என்பது குறித்து சந்தேகம் இருந்தால், உங்கள் HR பிரிவை அல்லது தொழிலாளர் உரிமை அமைப்பை தொடர்புகொள்ளவும்.
இலங்கையில் கொரோனா தீவிரம்
இலங்கையில் கொரோனா தீவிரம்
இலங்கையில் கொரோனா தீவிரம் அண்மை நாட்களாக வேகமாக பரவிவரும் கொரொனா தொற்று இலங்கையிலும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆசிய நாடுகளில் இந்நாட்களில் தீவிரமாக பரவி வரும் கொவிட் -19 திரிபு இலங்கையிலும் கண்டறிந்துள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோயியல் நிபுணர் வைத்தியர் ஜூட் ஜயமஹ தெரிவித்ததாவது,
ஓமிக்ரோன் வைரஸின் புதிய திரிபு
ஓமிக்ரோன் வைரஸின் புதிய திரிபுகளான LF.7 மற்றும் XFG எனும் புதிய வைரஸ் வகைகள் நாட்டில் உள்ள சில நோயாளிகளிடையே கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து பெறப்பட்ட உயிரியல் மாதிரிகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் பொதுமக்கள் இவ்வாறான கொவிட் -19 திரிபுகள் தொடர்பாக வீண அச்சத்தை ஏற்படுத்தி கொள்ளத் தேவையில்லை.
அதிக ஆபத்துள்ள பிரிவினர் என சுட்டிக்காட்டப்படும் குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார், வயதானவர்கள் மற்றும் நாட்பட்ட நோயாளர்கள் நோய்குறித்து அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
மீண்டும் முகக்கவசம்
அத்தோடு பொதுமக்கள் மீண்டும் முகக்கவசம் அணிவதுடன் கொவிட்-19 பரவலின் போது பின்பற்றிய சுகாதார நடைமுறைகளை மீள பின்பற்றுவதன் மூலம் இவ்வாறான நோய்களில் இருந்து பாதுகாப்பு பெறலாம்.
இந்நாட்களில் சனநெரிசலான பகுதிகளில் அதிக நேரம் செலவழிக்க வேண்டாம் எனவும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கொவிட்-19 வைரஸின் புதிய திரிபுகள் காலத்துக்கு ஏற்ற அவ்வப்போது பரவுகின்றன. இருப்பினும், இதனை சுகாதார அதிகாரிகள் தொடர்ச்சியாக கவனித்து வருவதால் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், காலி தேசிய வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த ஒரு மாத பச்சிளம் குழந்தைக்கும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காலி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிடுகையில், உயிரிழந்த குழந்தையின் உயிரியல் மாதிரி கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர்
மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த வைரஸ் தற்போது ஆசியாவில் பரவி வரும் கொவிட்-19 திரிபு இல்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
ஏனோ இந்த பிரிவு
ஏனோ இந்த பிரிவு
ஏனோ இந்த பிரிவு…
இன்னும் நீயின்றி உயிர் வாழ
நானோ பழகவில்லை,
உன் சுவாசமே எனது தேசம்
என்று நம்பிய என் நெஞ்சம்,
தொலைந்துவிட்டது நம்
பார்வையின் வழியில்…
கண்ணீரோ நம் காதலின்
கடைசி கடிதமா?
அதில் எழுத்துகள் இல்லை, ஆனால்
உணர்வுகள் அலைகடலாக.
நீ சென்ற பாதையில்
நான் இருளாய் நின்றேன்,
வந்துவிடுவாய் என்ற
திடமான நம்பிக்கையுடன்…
நீ சொன்ன சொற்கள் இன்னும் என் காதில்…
“நாம் என்றும் இணைவோம்…” என்று
அந்த எண்ணம் என்னை நிமிர்த்துகிறது,
அதே நேரத்தில் நசுக்கியும் விடுகிறது.
காதல் வென்றதோ
தோற்றதோ தெரியாது,
ஆனால் நான் தோற்றேன்,
உன் நினைவுகளிடம்…
உன் இல்லாமையிடம்.
நேட்டோ புடினின் தாக்குதலுக்கு தயாராகவேண்டும்
நேட்டோ புடினின் தாக்குதலுக்கு தயாராகவேண்டும்
நேட்டோ புடினின் தாக்குதலுக்கு தயாராகவேண்டும் ,புடின் தாக்குதலை எதிர்கொள்ள நேட்டோ தயாராக இருக்க வேண்டும் என ஜெர்மனியின் பாதுகாப்புத் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செலன்ஸ்கி, $7 பில்லியன் மதிப்பிலான தாக்குதலில் ரஷ்யாவின் மூன்றில் ஒரு பகுதி துருவ விமானங்களை அழித்த அதிரடியை
வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை
“திறமைமிக்க, வரலாற்றுச் சிறப்புமிக்க” நடவடிக்கை என புகழ்கிறார்.**
இன்று உக்ரைன் ஒரு முன்னெப்போதும் இல்லாத அளவிலான ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டு, ரஷ்யாவின் முக்கிய வான்படைகளில் ஒன்றை நொறுக்கிய பெரும் வெற்றியை பெற்றது.
“ஆபரேஷன் ஸ்பைடர் வெப்” எனக் குறியிடப்பட்ட இந்த நடவடிக்கையில்:
40க்கும் மேற்பட்ட ரஷ்ய விமானங்கள் – இதில் Tu-95, Tu-22 போன்ற துருவ (strategic) பாம்பர்கள் மற்றும் A-50 கட்டளை விமானங்கள் அடங்கும் – அழிக்கப்பட்டன அல்லது கடுமையாக சேதமடைந்தன.
இது ரஷ்யாவின் மூன்றில் ஒரு பகுதி துருவ விமான படையை அழித்தது என கூறப்படுகிறது. மொத்த சேத மதிப்பு: $7 பில்லியன் (அமெரிக்க டாலர்)
2,500 மைல்கள் தூரம் வரை சென்று தாக்கும் திறனை கொண்ட ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.
இந்த திட்டத்தை உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி நேரடியாக கண்காணித்ததாகவும், இது 18 மாதங்களாக திட்டமிடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செலன்ஸ்கி இதனை:
“திறமைமிக்க, வரலாற்றுச் சிறப்புமிக்க தாக்குதல்”
“உக்ரைனின் திறனையும் மனவலிமையையும் உலகிற்கு காட்டும் நிகழ்வு”
என்று புகழ்ந்துள்ளார்.
உக்ரைன் ரஸ்யா மோதல் வெடித்த தற்கொலை விமானங்கள்
இத்தாக்குதலுக்குப் பதிலாக, ரஷ்யா 472 ட்ரோன்கள் மற்றும் ஏழு ஏவுகணைகளை உக்ரைனில் நோக்கி அனுப்பியது.
இதனால் குறைந்தது 12 உக்ரைன் ராணுவத்தினர் உயிரிழந்து, 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சூழ்நிலையை முன்னிட்டு, ஜெர்மனியின் பாதுகாப்புத் துறை அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ்:
“நேட்டோ (NATO) புடினின் தாக்குதலிற்கு தயாராக இருக்க வேண்டும்.”
“ஜெர்மனி மற்றும் அதன் கூட்டாளிகள், ரஷ்யாவிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் நேரடி அல்லது மறைமுக ஆபத்துகளுக்கு தயாராக இருக்க வேண்டும்”
என எச்சரிக்கை விடுத்துள்ளார்.






















































