Tag: ஆலயம்
பல இலட்சத்திற்கு ஏலம் போன மாம்பழம்
பல இலட்சத்திற்கு ஏலம் போன மாம்பழம்
யாழில் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமொன்றில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவின் மாம்பழம் பல இலட்சங்களில் ஏலம் போயுள்ளது.
யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி ஸ்ரீசிவசுப்பிரமணியர் ஆலயத்திலே இந்த ஏலம் இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆலயத்தில் 15 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிற நிலையில் எட்டாம் நாளான நேற்று மாம்பழத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த மாம்பழத்திருவிழா நிறைவடைந்த பின்னராக முருகனின் மாம்பழம் ஆலய நிர்வாக சபையினரால் ஏலம் விடப்பட்டிருந்தது.
இதன் போது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்தும் ஆலயத்திற்கு வந்திருந்த அடியவர்கள்குறித்த மாம்பழத்தை வாங்கும் நோக்கில் ஏலத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மாம்பழத்தின் விலையும் உயர்ந்து கொண்டு சென்றது. இவ்வாறு பல இலட்சங்களையும் தாண்டி மாம்பழம் ஏலம் எடுக்கப்பட்டது.
இதன்போது பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்திருந்த அ.அகிலன் எனும் அடியவர் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் ரூபாவிற்கு இந்த மாம்பழத்தை ஏலத்தில் எடுத்திருந்தார்.
இதன் போது ஆலய நிர்வாக சபையினரால் ஏனைய சில பொருட்களும் ஏலத்தில் விடப்பட்டிருந்த நிலையில் அதனையும் அடியவர்கள் ஏலத்தில் வாங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும், குறித்த ஆலயத்தின் 15 நாள் திருவிழாவின் தொடராக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழாவும் திங்கட்கிழமை தீர்த்த திருவிழாவும்
மறுநாள் செவ்வாய்க்கிழமை பூங்காவனத் திருவிழாவும் புதன்கிழமை வைரவர் உற்சவமும் இடம்பெற்று திருவிழா நிறைவடையவுள்ளது.
துணுக்காயில் ஆலயம் உடைத்து – விஷமிகள் அட்டகாசம்
துணுக்காயில் ஆலயம் உடைத்து – விஷமிகள் அட்டகாசம்
இலங்கை துணுக்காய் ஆரோக்கியபுரம் பகுதியில் விசமிகள் நடத்திய தாக்குதலில் அந்த ஆலயம் முற்றாக சேதமாக்க பட்டுள்ளது
மேற்படி தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்ட நபரை கைது செய்யும் நடவடிக்கையில்
போலீசார் ஈடுபட்டுள்ளனராம்
கொரோனா வைரஸ் பரவலில் பாதிப்டைந்துள்ளோருக்கு ஆசி வேண்டி விஷேட பூஜைகள் photo
கொரோனா வைரஸ் பரவலில் பாதிப்டைந்துள்ளோருக்கு ஆசி வேண்டி விஷேட பூஜைகள் photo
விகாரி வருடம் பங்குனி திங்கள் மாத சஷ்டி தினத்தன்று புஸ்ஸல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத ஆலயத்தில் கொரோனா வைரஸ்
பரவலில் பாதிப்டைந்துள்ளோருக்கு ஆசி வேண்டி விஷேட பூஜைகள் நேற்று (30) நடைபெற்றன. இந்த தெய்வீக நிகழ்வில் குறிபிட்ட
பக்தர்களும் புஸ்ஸல்லாவ பொலிஸாரும் கலந்துக் கொண்டனர்
















