Author: நலன் விரும்பி
தனிமை படுத்தப்பட்ட களுத்துரை& கண்டி மாவட்டங்கள் விடுவிப்பு
தனிமை படுத்தப்பட்ட களுத்துரை& கண்டி மாவட்டங்கள் விடுவிப்பு
ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான
ஊடக சந்திப்பு நேற்று மதியம் (3) கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும்,
பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
“களுத்துரை மாவட்டத்தில் அமைந்துள்ள பேருவலையிலுள்ள முடக்கப்பட்ட பன்னில பிரதேசம், கண்டி மாவட்டத்திலுள்ள
சீனகொட்டுவ மற்றும் அக்குரனை ஆகிய பிரதேசங்கள் இன்று 3 ஆம் திகதி மருத்துவ ஆலோசனையின் பிரகாரம்
விடுவிக்கப்பட்டுள்ளன. குறித்த பிரதேசங்கள் ஏனைய பிரதேசங்களை போன்று இயல்பு நிலையில் இயங்கும்.
லன்டனில் இருந்து இன்று மாலை மாணவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உட்பட 207 பேர் இலங்கை வரவுள்ளனர். அவர்கள்
தனிமைப்படுத்தலுக்காக தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்டவுள்ளனர்.
இராணுவத்தினரால் நிருவகிக்கப்பட்டு வரும் தம்மின்ன (9) மற்றும் வெலிகந்தை(2) தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 11 பேர்
கொண்ட மேலும் ஒரு குழுவினர், மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் அவர்களுடைய வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து 4917 பேர் இன்று 3 ஆம் திகதியுடன் தங்களுடைய வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
அதேவேளை, கோவிட்-19 தொற்றுக்குள்ளான கடற்படையினரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய
தொடர்புகளை பேணிய 1023 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் 36 தனிமைப்படுத்தல் மையங்களில் இதுவரையில் 4635 பேர் தனிமைப்படுத்தலில்
உள்ளனர் என லெப்டின்ன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் தெரிவித்தார்.
சுருக்கம் :
இதுவரை மொத்தம் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை -4917
தற்பொழுது மொத்தமாக தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள்- 4635
மொத்த தனிமைப்படுத்தல் நிலையங்கள் – 36

- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை

- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை

- 48 மணி நேர ரயில்வே வேலைநிறுத்தம் நிறைவுற்றது

- டெலிகிராம் வழியாக இணையவழி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

- பாகிஸ்தான் காவல் நிலைய வளாகத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு

- H-1B குடியேறாதோர் விசாக்களுக்கு 100000 கட்டணம் டொனால்ட் டிரம்ப்

- கடும் மின்னல் குறித்து எச்சரிக்கை

- ஒருவர் அடித்து கொலை

- பருவமழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த முன் தயாரிப்பு அவசியம் – பிரதமர்

- மதுக்கடையில் நடந்த ஆயுதக் கொள்ளை

- இன்று முதல் அனைத்து விரைவுச்சாலை பயணிகளுக்கும் சீட் பெல்ட் கட்டாயம்

- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை

- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை

- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை

- 48 மணி நேர ரயில்வே வேலைநிறுத்தம் நிறைவுற்றது

- டெலிகிராம் வழியாக இணையவழி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

- பாகிஸ்தான் காவல் நிலைய வளாகத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு

- H-1B குடியேறாதோர் விசாக்களுக்கு 100000 கட்டணம் டொனால்ட் டிரம்ப்

- கடும் மின்னல் குறித்து எச்சரிக்கை

நாளை முதல் அரச ஓய்வூதிய காரர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு
நாளை முதல் அரச ஓய்வூதிய காரர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு
அனைத்து அரச ஓய்வூதிய காரர்களுக்கும் ஓய்வூதிய கொடுப்பனவு நாளையும் நாளை மறுதினமும் வழங்கப்படவுள்ளது.
இதற்கான ஒழுங்குகளை பொருளாதார புத்தொளி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி நடவடிக்கை முற்கொண்டுள்ளது.இதுதொடர்பாக செயலணி விடுத்துள்ள
அறிக்கை பின்வருமாறு:
பொருளாதார புத்தொளி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் ஊடக அறிக்கை
2020.05.03
அனைத்து அரச ஓய்வூதிய காரர்களுக்கும் ஓய்வூதியம் வழமையாக ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி செலுத்தப்படுவது வழமை. இருப்பினும் வெசாக் நோன்மதி மற்றும் வார இறுதி விடுமுறை
தினம் இடம்பெறுவதினால், மே மாதத்திற்கான ஓய்வூதியத்தை மே மாதம் 5ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் செலுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும் ஓய்வூதியகாரர்களுக்கு ஏப்ரல் மாத ஓய்வூதியத்தைப் பெற்றக் கொள்வதற்கு அரசாங்கம் வசதி செய்த வகையில் இந்த மாதமும் , மாவட்ட செயலாளர்கள் பிரதேச செயலாளர்கள்
ஆகியோரின் வழிகாட்டல்களின் கீழ் கிராம உத்தியோகத்தர்கள் அடங்கலாக கிராம மட்டத்தில் அரச கடமைகளை மேற்கொள்ளும் அதிகாரிகளின் அமைப்புக்கள் , முப்படை மற்றும் இலங்கை
போக்குவரத்து சபையுடன் இணைந்து அனைத்து பிரதேச செயலாளர் பிரிவவுகளிலும் உள்ள ஓய்வூதியகாரர்களை
வங்கிகளுக்கு அழைத்துச் செல்வதற்கும் , அங்கு அவர்களுக்கு தேவையான மருந்துப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக மருந்தகங்களுக்கும் அழைத்துச் செல்வதற்கும் வைத்திய
சிகிச்சையை (கிளினிக்) மேற்கொள்வதற்காக அருகில் உள்ள மருத்துவ மற்றும் ஆயர்வேத வைத்திய நிலையங்களுக்கு
அழைத்துச் செல்வதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதை இதன் மூலம் அறியத்தருகின்றோம்.

- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை

- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை

- 48 மணி நேர ரயில்வே வேலைநிறுத்தம் நிறைவுற்றது

- டெலிகிராம் வழியாக இணையவழி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

- பாகிஸ்தான் காவல் நிலைய வளாகத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு

- H-1B குடியேறாதோர் விசாக்களுக்கு 100000 கட்டணம் டொனால்ட் டிரம்ப்

- கடும் மின்னல் குறித்து எச்சரிக்கை

- ஒருவர் அடித்து கொலை

- பருவமழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த முன் தயாரிப்பு அவசியம் – பிரதமர்

- மதுக்கடையில் நடந்த ஆயுதக் கொள்ளை

- இன்று முதல் அனைத்து விரைவுச்சாலை பயணிகளுக்கும் சீட் பெல்ட் கட்டாயம்

- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை

- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை

- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை

- 48 மணி நேர ரயில்வே வேலைநிறுத்தம் நிறைவுற்றது

- டெலிகிராம் வழியாக இணையவழி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

- பாகிஸ்தான் காவல் நிலைய வளாகத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு

- H-1B குடியேறாதோர் விசாக்களுக்கு 100000 கட்டணம் டொனால்ட் டிரம்ப்

- கடும் மின்னல் குறித்து எச்சரிக்கை

ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா – அதிரும் தமிழகம்
ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா – அதிரும் தமிழகம்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது.
ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா – அதிரும் தமிழகம்
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. இந்த கொடிய வைரஸ் பரவுவதை
கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், கொரோனா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.
இதற்கிடையில், நேற்றிய நிலவரப்படி தமிழகத்தில் 2,757 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. மேலும், பலியானோர் எண்ணிக்கை 29 ஆக இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 266 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்
மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 23 ஆக அதிகரித்துள்ளது.
குறிப்பாக சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் புதிதாக 203 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பரவியவர்களில் ஆயிரத்து 379 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழர் வீடுகளுக்கு முதலை விட்ட இராணுவம் – பதறி ஓடிய மக்கள்
தமிழர் வீடுகளுக்கு முதலை விட்ட இராணுவம் – பதறி ஓடிய மக்கள்
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தமிழர் வீடுகளுக்குள் இலங்கை அரச இராணுவத்தினர் முதலை விட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது
இந்த பகுதியில் குளங்கள் ,ஆறுகள்,ஏதும் இல்லாத நிலையில் இந்த முதலைகள் திடீரென வீடுகளுக்குள் நுழைந்துள்ளது,முதலை விடப் பட்ட பகுதிக்கு அருகில் இராணுவ முகாம்கள் உள்ளன
கொடிகாமம்,கிளிநொச்சி ,இயக்கச்சி பகுதியில் இந்த முதலைகள் விட பட்டுள்ளன ,வீட்டு தாவரத்தில் உறங்கி கொண்டிருந்த சிறு பிள்ளை ஒன்றை முதலை உண்ண விரைந்து வந்துள்ளது ,
இதனை கண்டு நாய் குரைத்து ஒலி எழுப்பிய நிலையில் சுதாகரித்து கொண்ட மக்கள் வீ,ட்டின் முற்ற பகுதியில் வந்த பொழுது முதலையை கண்டுள்ளனர்
நாயின் குரைத்து இருக்க விட்டால் அந்த சிசுவை முதலை தின்று இருக்கும் என பாதிக்க பட்டவர்கள் தெரிவிக்கின்றனர் ,
ஊரடங்கு வேளையில் இராணுவத்தினர் ,வீடுகளுக்கு அருகில் இவ்வாறு முதலைகளை விட்டு செல்கின்றனர் ,
மதம் பிடித்த யானைகளை ஆனையிறவு ,ஊரியன் ,கண்டாவளை ,பகுதிகளில் இராணுவத்தினர் விட்டுச சென்றுள்ளனர்
,
இந்த யானைகள் மக்களின் பயன் தரும் மரங்கள் ,மற்றும் மக்களை அடித்து கொன்றுள்ள சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன .
- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை

- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை

மக்கள் இந்த விடயங்களை வெளியில் கூற முடியாத நிலையில் அச்சத்தில் உறைந்துள்ளனர் ,
இறுதி போர் முடிவடைந்த நிலையில் தமிழர் பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

முல்லை,வவுனியாவில் கிணற்றில் இருந்து ஆண் ,பெண் சடலமாக மீட்பு
முல்லை,வவுனியாவில் கிணற்றில் இருந்து ஆண் ,பெண் சடலமாக மீட்பு
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பகுதியில் பெற்றவர்கள் இருவரையும் இழந்து
வசித்து வந்த இளம் வாலிபர் ஒருவர் கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார்
தாயின் ,தாயாருடன் வசித்து வந்த மாணவன் அவர் தங்கி இருந்த வீட்டு கிணற்றில்
இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார் ,நீர் எடுத்துவர சென்ற இவரை காணவில்லை என தேடிய பொழுது ,எங்கும் கிடைக்கவில்லை
கிணற்றுக்குள் நீர் அள்ளிட சென்ற பொழுது ,அங்கு அவர் சடலமாக மிதந்துள்ளார் ,
இவர் எவ்வாறு இந்த கிணற்றில் வீழ்ந்து இறந்தார் என்பது தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
இதைப்போலவே வவுனியா செட்டி குளம் பகுதியில் கிணறு ஒன்றில் பெண் ஒருவர் இறந்த நிலையில் மீட்க பட்டுளளார்
இவருடன் கடந்த ஒருவாரத்தில் பத்து பேர் சடலமாக மீட்க பட்டுள்ளனர் ,தமிழர் பகுதியில் தொடரும் இவ்வாறான மர்ம கொலைகள் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
பளையில் காணமல் போனவர் – அழுகிய நிலையில் சடலமாக மீட்பு -தொடரும் கொலைகள் photo
பளையில் காணமல் போனவர் – அழுகிய நிலையில் சடலமாக மீட்பு -தொடரும் கொலைகள்
பளையில் காணாமல் போன கல்லூரி மாணவன் ஆனையிறவு புலோப்பளை கடல் நீரேரி -பகுதியில் சடலமாக மீட்க பட்டுள்ளார்
கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன இந்த மாணவனை தேடி குடும்ப உறவினர்கள் காவல் துறையில் முறைபாடு செய்திருந்தனர்
இவ்வாறான நிலையில் தற்போது புலோப்பளை கடல் நீரேரி பகுதியில் அழுகிய நிலையில் இவர்
சடலமாக மீட்க பட்டுள்ளார் .இவர் மர்ம நபர்களினால் கடத்த பட்டு சித்திரவதை வதை செய்ய பட்ட பின்னர்
படுகொலை செய்ய பட்டு ,ஆட்கள் அற்ற ஆனையிறவு பகுதியில் வீச பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் யாழ்ப்பாண பகுதியை மையமாக வைத்து இவ்வாறு எட்டு கொலைகள் இடம்பெற்றுள்ளன .
அரசியல் வாதிகள் முதல் சாதாரண மக்கள் வரை இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளன
இந்த அப்பாவி வாலிபனும் நீரில் மூழ்கி மூச்சு திணறி இறந்தார் என சட்ட வைத்திய அதிகாரி மரண சான்றிதழ் வழங்குவார் ,இவ்வாறே பலருக்கு வழங்க பட்டு வருகிறது ,
இந்த கொலைகளின் பின்புலத்தில் உள்ள குழுக்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை,இந்த தொடர் கொலைகளினால் மக்கள் பெரிதும் அச்சத்தில் உறைந்துள்ளனர்
தமிழர்களை கைவிட்ட கூட்டமைப்பு -வீட்டுக்கு வந்தால் செருப்படி – மக்கள் குமுறல்
தமிழர்களை கைவிட்ட கூட்டமைப்பு -வீட்டுக்கு வந்தால் செருப்படி – மக்கள் குமுறல்
இலங்கையில் பரவி வரும் வைரஸ் நோயின் காரணமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டுள்ளது ,இதனால் அன்றாடம் கூலிகள் பெரும்
இடர்களுக்குள் சிக்கி வருகின்றனர் .
ஒருவேளை கூட உண்ணமுடியாத நெருக்கடிக்குள் சிக்கி தவிக்கின்றனர் .
இவ்வேளை தம்மை பிரதி நிதிப் படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எம்பிக்கள் எவரும் தமது நிலைகளை
கண்டறிந்து உதவிட முன்வரவில்லை என பாதிக்க பட்ட மக்கள் தமது உள்ள குமுறலை நமக்கு தெரிவித்துள்னர்
தேர்தல் வந்தால் மட்டும் புலிகளின் வீர வசனங்களை பேசிய படி வீடு தேடி வரும் இவர்கள் ,தேர்தல் முடிந்ததும் மறந்து விடுகின்றனர் என குமுறியுள்ளனர் .
இலங்கை அரச காவல்துறையினர் அப்பாவி மக்கள் மீது போலி குற்ற சாட்டுக்களை சுமத்தி தாக்க படுவதும் ,அதற்கு எதிராக
இவர்கள் எதுவும் செய்திட இயலாமல் இருப்பதையும் சுட்டி காட்டும் மக்கள்
இம்முறை தேர்தலில் இவர்களை தோற்கடிப்பதுடன் ,நாம் யாருக்கு வாக்கு அளிக்க மாட்டோம் என்கின்றனர் .
இது மக்களின் கோபத்தின் வெளிப்பாட்டு நிலையாக அமைந்துள்ளது ,இதனை தடுக்க கூட்டமைப்பினர் என்ன செய்ய போகின்றனர் ..? இவ்வாறு நோக்கின் கூட்டமைப்பின் எதிர்காலம் கேள்விக்குறியே

ரஷியாவில் வேகமாக பரவும் கொரனோ – ஒரேநாளில் 10,633 பாதிப்பு
ரஷியாவில் வேகமாக பரவும் கொரனோ – ஒரேநாளில் 10,633 பாதிப்பு
ரஷியாவில் மிக வேகமாக கொரனோ நோயானது பரவி வருகிறது ,இங்கே
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில்
10,633 பேர்
புதிதாக இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் .
இதுவரை சுமார் 134,686 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,.
இதுவரை 1,280 பேர் இறந்துள்ளனர் என அரசு உத்தியோக பூர்வகாம அறிவித்துள்ளது
ஆனால் மறுபட்ட தகவலோ அமெரிக்காவை போல ரசியாவிலும் பாதிப்பு அதிகம் எனவும் ,அந்த நாடு திட்டமிட்டு உண்மை தகவலை மறைத்து வருவதான குற்ற சாட்டு முன் வைக்க பட்டு வருகிறது
இந்த நோயினை தடுக்கும் மருந்துகள் இதுவரை மக்களுக்கு முழுமையாக
வழங்கும் நிலைக்கு நாடுகள் எவையும் தம்மை தயார் படுத்தவில்லை என்பதே துயர் தோய்ந்த நிலையாக உள்ளது

14 தாலிபான்கள் சுட்டு கொலை – பெரும் தாக்குதல் முறியடிப்பு
14 தாலிபான்கள் சுட்டு கொலை – பெரும் தாக்குதல் முறியடிப்பு
ஆப்கானிஸ்தான் Panjwai பகுதியில் பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தும் முகமாக
தாலிபான்கள் முயற்சித்து வந்த நிலையில் ,அதனை அறிந்து கொண்ட அரச
இராணுவம் திடீர் சுற்றிவளைப்பு தாக்குதலை நடத்தியது ,இதில் 14 தாலிபான்கள் பலியாகினர்
அவ்வாறு படு கொலை செய்ய பட்டவர்கள் சடலங்கள் மீட்பட்டு மக்கள் பார்வைக்கு வைக்க பட்டுள்ளது
தெற்கு கந்தகார் பகுதியில் நடத்த பட்ட இராணுவத்தின் சுற்றிவளைப்புக்களில் குறித்த போராளிகள் அமைப்பு சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளனர்
தாலிபான்களின் தாக்குதலில் அரச இராணுவத்தின் உளவுத்துறை தலைவர்
படுகொலை செய்ய பட்டதில் இருந்து தற்பொழுது தாக்குதல்கள் உக்கிரம் பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது

சிறையில் இருந்து ஆறுவர் தப்பின் ஓட முயற்சி – ஒருவர் பலி
சிறையில் இருந்து ஆறுவர் தப்பின் ஓட முயற்சி – ஒருவர் பலி
இலங்கை மகர சிறையில் சிறை வைக்க பட்டிருந்த ஆறு கைதிகள் அந்த
சிறை சாலையில் இருந்து தப்பி ஓட முயற்சிகளை மேற்கொண்டனர் .
இதன் பொழுது அவர்களை காவல் துறையினர் தூரத்தி சென்றனர் ,
இதில் மரம் ஒன்றில் ஏறியவர் அதில் இருந்து வீழ்ந்து பலியானார் .
மேலும் ஐவர் கைது செய்ய பட்டனர்
இந்த சம்பவத்தில் கைதிகளை துரத்தி சென்ற இரு காவல் துறையினரும்
படுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மேலதிக விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருவதுடன் ,குறித்த சிறை பாதுகாப்பு அதிகரிக்க பட்டுள்ளது

வடகொரியா ,தென்கொரியாவுக்கு இடையில் மோதல் – போர் பதட்டம் அதிகரிப்பு
வடகொரியா ,தென்கொரியாவுக்கு இடையில் மோதல் – போர் பதட்டம் அதிகரிப்பு
வடகொரியா அதிபர் பலியாகி விட்டார் என உளவு துறை நிறுவனங்களினால் செய்திகள் பரப்ப பட்டது ,அதனை
பொய்யாக்கும் விதத்தில் நான் நலமாகவே உள்ளேன் என அவர் மக்கள் முன் தோன்றினார் .
இவர் வெளியில் தோன்றி 24மணித்தியாலத்தில் தென்கொரிய இராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது
இதற்கு பதலடியாக தென் கொரியாவும் பதில் தாக்குதலை நடத்தியது ,இதனால் எல்லை பகுதியில் பதற்றம் ஏற்பட்டது
155 மைல் நீளம் கொண்ட வடகொரியா எல்லையில் ,தீவிரமான கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ளது ,இதில் முக்கியான அபாய
பகுதிகளில் இரு தரப்பு இராணுவத்தை குவித்துள்ளது
இந்த சூட்டு சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்க படுகின்ற பொழுது வடகொரியா தாக்குதலி நடத்தி விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது
கிங் யோங் உன் எப்பொழுது எதை செய்வார் என்பதே எவருக்கும் தெரியாது .
ரொக்கட் மான் எப்பொழுது வேண்டுமானாலும் எத்தனை செய்திடுவார் என்பதே உலக நாடுகளின் அச்சமாகும்

தீயில் எரிந்த 14 வீடுகள் – கண்ணீரில் மக்கள்
தீயில் எரிந்த 14 வீடுகள் – கண்ணீரில் மக்கள்
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எபோட்ஸிலி தோட்டத்தில் 14 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் நேற்றிரவு (02) 7
மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 வீடுகள் முற்றாக எரிந்து தீக்கிரையாகின. மேலும் 5 வீடுகளுக்கு பகுதியளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால் 50 இற்கும் மேற்பட்டவர்கள் நிர்க்கதியாகியுள்ளனர். இவர்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி உரிய
இடமொன்றில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
குறித்த தோட்டத்தில் கோவிலுக்கு அருகிலுள்ள நெருங்குடியிருப்பிலேயே இவ்வாறு தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
ஊரடங்கால் மக்கள் வீட்டுக்குள் இருக்கையில் திடீர் தீபரவல் ஏற்பட்டதால் மக்கள் பதறியடித்துக்கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு ஓடிவந்தனர்.
இதனையடுத்து பொலிஸாருக்கும், தீயணைப்பு பிரிவினருக்கும் தகவல் வழங்கப்பட்டது. இதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்த
அட்டன், டிக்கோயா நகரசபையின் தீயணைப்பு பிரிவினர், மக்களுடன் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினர்.
இதற்கிடையில் அப்பகுதியில் மக்கள் குவிந்ததால், சமூக இடைவெளியை பின்பற்றி உரிய வகையில் இருக்குமாறு பொலிஸாரால் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.
இத்தீவிபத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாதபோதிலும், பெருமளவில் பொருட் தேசங்கள் ஏற்பட்டுள்ளன. வீட்டு
உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள்
தீக்கிரையாகியுள்ளன என்று மக்கள் தெரிவித்தனர். ஒரு சில பொருட்கள் மாத்திரமே மக்களால் பாதுகாக்ககூடியதாக இருந்தது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியபபடவில்லை. பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன

கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை 705 ஆக அதிகரித்துள்ளது..
சுகாதார பிரிவு இன்று காலை இதுதொடர்பாக குறிப்பிடுகையில் நோயாளர்களில் 172 பேர் குணமடைந்து வைத்திய சாலைகளில் இருந்து வெளியேறியிருப்பதாக தெரிவித்துள்ளது.
கொரோனா COVID -19 பரம்பலின் தரவுகள்
புதுப்பிக்கப்பட்டது 2020-05-03 06:59:19
705
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்
526
சிகிச்சை பெறும் நோயாளிகள்
0
புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்
172
குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை
7
இறப்பு எண்ணிக்கை

கொரனோவால் குணமடைந்தவர் – மீளவும் பாதிப்பு
கொரனோவால் குணமடைந்தவர் – மீளவும் பாதிப்பு
ஜா – எல கபாலாகந்த பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட கொவிட் 19 தொற்றுக்கு இலக்கான நபர் பூரண குணமடைந்து
வீட்டுக்கு சென்ற ஒருவர் மீண்டும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
இத்தாலியில் இருந்து வருகை தந்த ஒருவருடன் நெருங்கிய உறவை பேணிய ஒருவரே மீண்டும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
இவர் கடந்த 16 ஆம் திகதி அவர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீட்டுக்கு சென்றிருந்தார்.
அவ்வாறு சென்ற அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டிருந்தார்.
எனினும் குறித்த நபர் கடந்த 30 ஆம் திகதி தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே அவர் மீண்டும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவை உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த நபரின் குடும்ப உறுப்பினர்களும் 21 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சிகிச்சை அளித்த டாக்டர்கள் பெயரை குழந்தைக்கு வைத்த போரிஸ் ஜான்சன்
சிகிச்சை அளித்த டாக்டர்கள் பெயரை குழந்தைக்கு வைத்த போரிஸ் ஜான்சன்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர்களது பெயரை தனது குழந்தைக்கு வைத்துள்ளார்.
சிகிச்சை அளித்த டாக்டர்கள் பெயரை குழந்தைக்கு வைத்த போரிஸ் ஜான்சன்
போரிஸ் ஜான்சன், கேரி சைமண்டஸ்
லண்டன்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது வருங்கால மனைவி கேரி சைமண்ட்ஸ் ஆகியோருக்கு சமீபத்தில் லண்டன்
மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. தாய் மற்றும் குழந்தை இருவரும் நலமாக இருப்பதாக அவர்களின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மேலும், பிரதமர் போரிஸ் மற்றும் சைமண்ட்ஸ் என்ஹெச்எஸ் மகப்பேறு குழுவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறார்கள் என தெரிவித்தார்.
கொரோனா வைரசுடனான தனது போரின்போது தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த போரிஸ் ஜான்சன்
நோய்த்தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்த நிலையில் கடந்த வாரம் பணிக்குத் திரும்பினார்.
ஆண் குழந்தை பிறந்த செய்தியைத் தொடர்ந்து அனைத்துத் தரப்பிலிருந்தும் போரிஸ் ஜான்சன்-கேரி சைமண்ட்ஸ் ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்தன.
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர்களது பெயரை தனது குழந்தைக்கு வைத்துள்ளார்.
இதுதொடர்பாக, போரிஸ் ஜான்சன் காதலி கேரி சைமண்ட்ஸ் தனது இன்ஸ்டாகிராமில் தனது குழந்தை புகைப்படத்தை வெளியிட்டுள்ள
செய்தியில், கொரோனா பாதிப்பால், போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் இருந்தபோது தீவிர சிகிச்சை அளித்து வந்த
இரு டாக்டர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக நிக்கோலஸ் என்ற பெயரை சேர்த்து வில்பிரட் லேவெரி நிக்கோலஸ் ஜான்சன் என தங்கள் குழந்தைக்கு சூட்டியுள்ளோம் என பதிவிட்டுள்ளார்.

இலங்கையில் வாலிபனை செருப்பால அடிக்கும் தமிழ் பெண் – வீடியோ
இலங்கையில் வாலிபனை செருப்பால அடிக்கும் தமிழ் பெண் – வீடியோ
இலங்கையில் மட்டக்களப்பு வீதியால் சென்ற பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் ஒருவரை மடக்கி பிடித்து
அவனை செருப்பால் அடிக்கும் காட்சி இது
இதில் அந்த பெண் செய்த செயல் சரி எனின் சரி எனவும் ,பிழை எனின் பிழை எனவும் வாதிடுக ,ஆனால் அடிவாங்கிய நபர் அந்த பெண்ணை சும்மா விடுவாரா ..?
பெண்ணின் காலில் வீழ்ந்து மன்னிப்பு கேட்கும் வாலிபரை இப்படி கொடூரமாக போட்டு தாக்கும் பெண்ணின் செயல் கண்டிக்க வேண்டியது .
சட்டத்தை இவர்கள் கையில் எடுத்தால் ,இலங்கை நீதிமன்ரறம் என்ன அப்பமா சுட்டு விக்கிறது என நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்
தற்போது மீள இந்த காணொளி வைரலாகி வருகிறது – இதில் அழுத்தி வீடியோ பார்க்க

பிரான்ஸ்,கனடா மருத்துவர்களுக்கு உணவளித்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !படம் உள்ளே
பிரான்ஸ்,கனடா மருத்துவர்களுக்கு உணவளித்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !படம் உள்ளே
கொரோனா வைரஸ் பெருந்தொற்று மனிதகுலத்திற்கு பெரும் உயிரச்சுறுத்தலாக மாறியுள்ள இவ்வேளையில், இதனை
எதிர்கொள்ளும் வகையில் உலகத் தமிழர்களுக்கான சிறப்புக்குழுவினை ( Corona – Tamils Task Force) நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைத்து செயற்படத் தொடங்கியுள்ளது.
கொரோனா நெருக்கடி நீண்டகாலத்துக்கு நீடிக்க இருக்கின்ற நிலையில், தமிழர்களின் நலன்களின் அடிப்படையில்
உடனடியானதும், நீண்டகாலத்துக்குமான செயற்திட்டங்களை வகுத்து தமிழர் தாயகம், புலம்பெயர் தமிழர்கள், உலகத் தமிழர்கள் என செயற்படத் தொடங்கியுள்ளது.
மருத்துவம், விழிப்பு, பொருளாதாரம், சுற்றுச்சூழல், சமூகம், அரசியல் என பல்வேறு பரிமாணங்களில் கொரோனாக்காலம்,
கொரோனாவுக்கு பிந்திய காலம் என தனது செயற்திட்டத்தை கொரோனா – தமிழர்கள் சிறப்புக்குழு வகுத்து வருகின்றது.
குறிப்பாக கொரோனா வைரஸ் பெருந்தொற்று இலங்கைத்தீவில் இனம்காணப்பட்ட உடனேயே, அது தொடர்பிலான விழிப்பு
பிரச்சாரங்களை தமிழர் தாயகம் எங்கும் உள்நாட்டு தொண்டு அமைப்புக்கள் வழியே மேற்கொள்ளப்பட்டதோடு, ஒரு தொகுதி
முதியவர்களுக்கு உள்ளுரில் தயாரிக்கப்பட்ட சுவாச்சகவசங்களும் வழங்கப்பட்டன.
தொடர்ந்து ஊரடங்கு உத்தரவினால் வீடுகளில் முடங்கியுள்ள வறியநிலை மக்களுக்கு உணவுப்பொதிகள், அத்தியாவசிய
பொருட்களும் வழங்கப்பட்டு வருவதோடு, மக்களை சுயநிறைவுடன் எதிர்காலத்தில் இருக்கும் வகையில் வீட்டுத் தோட்டங்களை ஊக்குவிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றது.
இதேவேளை கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக களமாடிவரும் சுகாதாரப் பணியாளர்களுக்கு உணவுகளை வழங்கி
தமிழர்களின் நன்றியினையும் தோழமையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் செயலாற்றி வருகின்றது.
கனடாவின் ரொன்ரோவின் பெரும்பாகத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு உணவுப்பொதிகளை வழங்கும் பொருட்டு, முதற்கட்டமாக உணவுப்பொதிகள் வழங்கபட்டன. இதுபோல்
பிரான்சிலும் தலைநகர் பரிசில் Hôpital Bicêtreமருத்துமவனையின் அவரசப்பிரிவு சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டன.
கொரோனாவுக்கு எதிராக போராடிவரும் தேசங்களுக்கு தமிழர்களின் தோழமையினை நல்லெண்ணத்தோடு இவைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம் புலம்பெயர் தேசங்களில் கொரோனாவுக்கு இரையாகியுள்ள தமிழர்களின் விபரங்களையும் திரட்டி ஆவணப்படுத்தும் பணியிலும் இச்சிறப்புக்குழு ஈடுபட்டுள்ளது.

பிரான்ஸ் கனடா 


கொரனோ தாக்குதலில் சிக்கி பிரிட்டனில் 27,500 பேர் பலி
கொரனோ தாக்குதலில் சிக்கி பிரிட்டனில் 27,500 பேர் பலி
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் இருபத்தி ஏழாயிரத்து ஐநூறு பேர்
பலியாகியுள்ளனர் .
மேலு ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
இவ்வாறு பாதிக்க பட்டவர்கள் தொடர்ந்து மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,நாள்தோறும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர்
இவ்வாறான நெருக்கடியான நிலையில் மீளவும் பாடசாலைகளை திறந்திட அரசு முயல்கிறது ,
மக்கள் அச்சத்துடன் உலவி வரும் வேளையில் மீளவும் கல்வி நிலையங்களை அரசு திறந்திட முனைவதும் ,
அவ்வாறு திறக்க பட்ட கல்வி நிலையங்களுக்கு பிள்ளைகளை அனுப்பிட மறுக்கும் பெற்றவர்களுக்கு தண்டம் அறவிடும்
நிலையை உருவாகக்கிட அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது
எப்போது யாருக்கு எது நடக்கும் என்ற நிச்சயம் அற்ற நிலையில் எவ்வாறு
பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்க முடியும் என மக்கள் கொந்தளித்து வருகின்றனர்
பாடசாலைகள் திறக்க பட்டால் மட்டுமே வர்த்தக நிலையங்கள் திறக்க முடியும் ,அதனால் இந்த விளையாட்டை அரசு மேற்கொள்ள முயல்கிறது

கள்ள காதலால் கற்பமாகும் தமிழ் பெண்கள் – சீரழியும் யாழ்ப்பாணம்
கள்ள காதலால் கற்பமாகும் தமிழ் பெண்கள் – சீரழியும் யாழ்ப்பாணம்
இலங்கையில் போர் முடிவடைந்த பின்னர் இளசுகள் ஆடம்பரத்தில் மூழ்கி இதுவே வாழ்வின் சொர்க்கம் என்ற நிலையில் உறைந்து விடுகின்றனர்
இதனால் ஆண் ,பெண் நெருக்கம் அதிகரிக் கிறது ,பெண் கற்பமாகிறாள் ,இன்று பெண்ணோடு நெருங்கியவர் அவளை விட்டு
தப்பி ஓடி விடுகின்றார் ,விளைவு ,.அவள் சிசுவை பெற்று வீதிகளில் எறிந்து விட்டு தப்பி ஓடுகின்றாள் ,இல்லை எனின் தற்கொலை
செய்கின்றாள் ,அதற்கு மேலாக சட்டவிரோத கருக்கலைப்பு இடம்பெறுகிறது
பெற்றவர்கள் தலை குனியும் நிலையை இந்த பெண் பிள்ளைகள் ஏற்படுத்தி விடுகின்றனர் ,ஒரு வேளை சுகம் காண ,அதனை
செய்திட முன்பு அதன் தடுப்பு முறைகளை கையாள மறந்து ,இவ்விதம் கண்மூடித்தனமாக நடந்து கொள்வதால் ,
தனது அழகிய வாழ்வை சிதைத்து சாகும் வரை வலியோடு பயணிக்கும் வாழ்வியல் சுழன்ற வண்ணம் உள்ளது
கஞ்சா,பீடி,மது,என கேளிக்கைகளில் நாட்டம் கொண்டுள்ள இளசுகள் ,புரியும் இந்த சிந்திக்க மறந்த சீர்கேட்டு தனத்தில் தம்மை
ஈடுபடுத்தி கொள்வதுடன் ,ஒரு சமூகத்தையும் குற்ற சமூகமாக மாற்றி வருகிறது
போதைவஸ்து ,மது பாவனையை தடுத்திட அரச முயலுமா…?அப்படி அவை தடுக்க முடியாத படத்தில் சமூகம் குற்றம் அற்ற சமூகமாக மாறும் ,,?
அவ்வாறு இல்லை எனின் கீழ் வரும் விடயங்களை நடைமுறை படுத்த வேண்டும் .விழிப்புணர்வு நிச்சயமாக பெண்களுக்கு தேவை படுகிறது
இதனை தடுப்பது யார் கடமை ….?சிந்திக்குமா அரசு …? தற்கால நிலையில் இலங்கையில் பாலியல் கல்வி ஊட்டம் அவசிய மாகிறது
வெளி நாடுகளை போல சிறுவயது முதலே இந்த பாலியல் கல்வியை ஊட்டுதல் மூலமே குற்றம் அற்ற சமூகமாகவும் ,இந்த சீரழிவுகளில் இருந்து சமூகத்தை காப்பாற்றும் நகர்வையும் மேற்கொள்ள முடியும் .
இந்த கல்வி முறையை அமூல் படுத்திட மகிந்த முனைந்தார் ,ஆனால் அது கைவிட பட்டது ,மீள இதனை ஆளும் அரசு நடைமுறைக்கு
உள்ளாக்கி குற்றம் அற்ற சமூகத்தை உருவாக்குமா..?சமூக சீரழிவை தடுக்குமா ..?மேற்படி சட்ட மாற்றத்தின் மூலம் குற்றங்களை கட்டு படுத்த முடியுமா ..? சிந்திக்க வேண்டியது நீங்களே ….!

- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை

- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை

- 48 மணி நேர ரயில்வே வேலைநிறுத்தம் நிறைவுற்றது

- டெலிகிராம் வழியாக இணையவழி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

- பாகிஸ்தான் காவல் நிலைய வளாகத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு

- H-1B குடியேறாதோர் விசாக்களுக்கு 100000 கட்டணம் டொனால்ட் டிரம்ப்

- கடும் மின்னல் குறித்து எச்சரிக்கை

- ஒருவர் அடித்து கொலை

- பருவமழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த முன் தயாரிப்பு அவசியம் – பிரதமர்

- மதுக்கடையில் நடந்த ஆயுதக் கொள்ளை

- இன்று முதல் அனைத்து விரைவுச்சாலை பயணிகளுக்கும் சீட் பெல்ட் கட்டாயம்

- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை

கற்பழிக்க படும் பெண்கள் – மர்மமாக நடக்கும் தற் கொலைகள் – அதிர்ச்சி வீடியோ
கற்பழிக்க படும் பெண்கள் – மர்மமாக நடக்கும் தற் கொலைகள் – அதிர்ச்சி வீடியோ
இலங்கையில் போர் முடிவடைந்த பின்பும் , போரால் பாத்திக்க பட்ட பெண்கள் தொடர்ந்து பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்க பட்டு வருவதாக முக்கிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது
நிறுவனங்களில் மேலதிக வேலைக்கு உட்படும் பெண்கள் அங்கு பணிபுரியும் ,நிறுவனர்கள்,அதிகாரிகளினால் ,பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த படுகின்றனர்
அதனால் மன வீரக்தி அடைந்த பெண்கள் தாமாகவே தூக்கு போட்டு பலியாகும் சம்பவங்கள் அதிகரித்து செல்ல படுகிறது
இவர்கள் இவ்வாறு பாதிக்க பாடுகின்றனர் ,என்பதனை இந்த விவரண காட்சி வெளியிடுகிறது .
பணியிடங்களில் 45 வீதமான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த படுகின்றனர் என்ற திடுக்கிடும் தகவலே இதுவாக உள்ளது
வேலைக்கு செல்லும் பெண்களில் எதனை பேர் இவ்விதம் பாதிக்க படமால் உள்ளனர் ..?
அதனை ஏற்று கொண்டு தமது குடும்பத்தை பாதுகாக்க எத்தனை பேர் சகித்து அதற்குள் தம்மை புதைத்து பயணிக்கின்றனர் ….?
கேள்வியோடே விடை தந்து நகர்கிறது இந்த காணொளி .இதுவே இன்றைய இலங்கையின் நிலவரம்












