Posted in உலக செய்திகள்

கொரனோவில் இறந்த மனிதர்கள் புதைகுழி மேலே – புதிய கிருமி நாசினி தெளிப்பு photo

கொரனோவில் இறந்த மனிதர்கள் புதைகுழி மேலே – புதிய கிருமி நாசினி தெளிப்பு photo

அமெரிக்காவில் அதிவேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி நாள் தோறும் மூவாயிரம் பேர் பலியாகிய வண்ணம் உள்ளனர் ,.

அவ்விதம் இந்த நோயினால் இறந்தவர்களது உறவினர்கள் ,அடையாளம் காணமுடியாத சடலங்கள் ,யாருமற்ற அனாதைகளாக புதைக்க பட்டு வருகிறது

    ஒன்பது அடி ஆழத்தில் வெட்ட பட்ட குழிக்குள் பல நூறு சடலங்களை ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி வைத்து ,புதைக்க படும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளம்பியுள்ளன

    தற்காலிக சுடலைகள் அமைக்க பட்டு அதற்குள் இந்த மனித உடல்கள் புதைக்க படுகின்றன .


    இந்த சடலங்கள் மேல் தூவ படும் மண்ணுக்குள் ஒரு வகை திரவம் கலந்து மண் மூட படுகின்றது

      சடலங்களில் இருந்து கிருமிகள் வெளிவராத வகையில் ,அந்த கிருமிகளை கொலை செய்யும் தன்மை கொண்ட திரவ வடிவிலான கிருமி நாசினி கலவை என தெரிவிக்க படுகிறத்து

      கொரனோவில் இறந்த
      கொரனோவில் இறந்த
          Posted in இலங்கை செய்திகள்

          கொரனோ நிதியை சுருட்டிய -யாழ் மருத்துவர்

          கொரனோ நிதியை சுருட்டிய -யாழ் மருத்துவர்

          தமிழர் தாயக பகுதியில் விரைவாக அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையில் ஆளும் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது ,அதற்கு அமைவாக மக்களின் முதல் உயிர் நாடியாக விளங்கும்

          மருத்துவ மனைகளை புனர் நிர்மாணம் செய்து தரமிக்கதாக மாற்றிட இலங்கை சுகாதார அமைச்சினால் கட்டுப்பாடு இன்றி

          வடக்கு பகுதி மருத்துவ மனைகளுக்கு நிதிகள் தாராளமாக ஒதுக்க படுகின்றன

          அவ்விதம் தற்போது கொரனோ நிதி என பல மில்லியன் நிதிகளை சுகாதார அமைச்சுக்கு வடக்கு சமாகாண பொறுப்பதிகாரி கேதீஸ்வரனுக்கு ஒதுக்க பட்டுள்ளது ,

            ஆனால் அவர் அதனை உரிய முறையில் பயன் படுத்த விடாது ,தமது தனி நலன் சார்ந்து சுருட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளார்

            சுகாதார அமைச்சின் தகவல் தொடர்பு வெளிப் படுத்தலில் ,
            காடர் சிஸ்டெம் உள்ளது ,அதன் பொறிமுறையை பின்பற்றி இந்த மருத்துவம மனைகளை தரம் உயரத்திட இலகுவான வழிகள் உள்ளன .

            ஆதார வைத்திய சாலை ஒன்றுக்கு ,இரு மகப்பேறு நிபுணர்கள் ,இரு சத்திர சிகிச்சை நிபுணர் ,இரண்டு மருத்துவ நிபுணர் ,என வழங்க பட்டுள்ளது

            இவ்விதம் ,மந்திகை,சாவக்கேசரி,ஊர் காவல்துறை ,இதர வைத்தியசாலைகள் ,என்பன இவ்வாறு உள்ளடக்க பட்டுள்ளது, எனினும் அதனை உரிய முறை பயன் பாட்டிற்கு இயக்கும்

            நடவடிக்கையை வடமாகாண சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரன் செய்திட பின்னடித்து வருகின்றார்

            சிறிய சிங்கள மருத்துவ மனைகளில் ,திறன்பட்ட தமிழ் வைத்தியர்கள் சேவை புரிகின்றனர் ,உரிய விடயங்களை அமூல் செய்து ,தரமிக்க மருத்துவமனையாக இவற்றை மாற்றிடின் தமிழர்

            மருத்துவமனைகள் செழிப்புடனும் ,மக்களின் நேரான நம்பிக்கையை பெற்றதாக மாறிடும் ,ஆனால் அதனை இவர்கள் செய்திட மறுத்து வருகின்றனர்

              கொரானாவுக்கு என ஒதுக்க பட்ட பல மில்லியன் நிதிகளும் ,இதுவரை உரிய முறையில் பயன் படுத்த படவில்லை ,

              இதன் கால எல்லை முடியும் பொழுது வடையும் ,டீயும் வாங்கி கொடுத்து மருத்துவர்களுடன் கலந்துரையாடலை மேற் கொண்டு

              அதற்கு இந்த பணம் செலவு செய்ததாக கூறி கணக்கினை முடித்து அந்த பணத்தை இவர் சுருட்டி விடுகின்றார்

              ஏனைய மருத்துவர்களையும் ஊழலுக்குள் சிக்க வைத்து ,தன் மீது நேரடியாக அவர்களும் நடவடிக்கை மேற் கொள்ள முடியாத படி

              பார்த்து கொண்டு, இந்த மோசடியை தொடர்ந்து நடத்தி செல்கின்றார் கேதீஸ்வரன்

              அது மட்டுமல்ல ,யாழ்ப்பாண மருத்துவமனையில் தற்பொழுது நோயாளர்கள் வரவு வீழ்ச்சி அடைந்துள்ளது ,வழமையான இயல்பு

              நடவடிக்கையின் பொழுது ,தனியார் மருத்துவ மனையில் மக்கள் சிகிச்சை பெறும் நோக்குடன் சத்தியமூர்த்தி அனுப்பி வருகின்றார்

              இவர்கள் அரச ஊழியராக இங்கு பணிபுரிகின்ற பொழுதும் தனியார் மருத்துவ மனைகளைளிலும் பணிபுரிந்து மக்களிடம்

                பணத்தை சுரண்டி ஏப்பம் இட்டு வருகின்றனர் என பாதிக்க பட்ட மக்களும் ,மருத்துவமனை உள்ளிருந்து முக்கிய தகவல்கள் கசிகின்றன

                நோயாளரை பராமரிப்பதற்கு உரிய கட்டில்கள் இல்லை ,இவ்வாறான பெரும் நெருக்கடி நிறைந்த நிலையில் மருத்துவ மனைகள் உள்ளதுடன் ,அதிக தூர் நாற்றமும் வீசுகிறது ,

                துர் நாற்றம் இல்லாத நிலையில் மருத்துவ மனையை வழிகாட்டி செல்ல முடியாத நிலையில் கேதீஸ்வரன் உள்ளார் .

                இலங்கை சுகாதார அமைச்சு இவர்களுக்கு ஒதுக்க பட்ட நிதிகள் தொடர்பாக உரிய விசாரணை நடத்துமா ?
                இதில் இவர்கள் புரிந்த கையாடல்களை அம்பலப்படுத்தி தண்டிக்குமா …?

                தாரளமாக நிதிகளை ஒதுக்கிய அரசின் செயல் பாராட்டுதலுக்கு உள்ளன ஒன்றே ,ஆனால் அதனை சிறந்த முறையில் பயன்படுத்த

                திட்டங்களை போட்டு உரிய பொறிமுறையில் செயலாற்றி வளமான மருத்துவ ஒன்றிணைந்த செயலாக மாற்றிட முடியாத நிலையில் கேதிஸ்தீஸ்வரன் உள்ளார்

                தீவு பகுதி மருத்துவமனைகள் மற்றும் யாழ்ப்பாண மருத்துவமனைகள் உள்ளடங்கியதான ஒரு சங்கிலி தொடர் நவீன மய மாக்களுக்குள் முன் நகர்த்தி இலகு சேவையை செய்திட

                கேதீஸ்வரன் தயங்குவது ஏன் என்ற கேள்வியை நாம் இங்கு முன் வைக்கிறோம் ..

                தமது லஞ்ச,ஊழல் மோசடி அம்பலத்திற்கு வரும் நிலை எட்டும் நிலை ஏற்பட்டால் ,அதே விளையாட்டை முன்னர் புரிந்த

                  மருத்துவர்களையே சிக்க வைத்து பதவியை பிடுங்கி வீட்டுக்கு அனுப்பியுள்ள செயல் பாடுகளும் இடம்பெற்றுள்ளன

                  அவ்வாறான மருத்துவ மனையில் இடம்பெறும் அடாவடிகள்,சாவகச்சேரி மருத்துவ மனையில் இடம்பெறும் இது போன்ற செயல்கள் ,மற்றும் யாழ்ப்பாண போதான

                  வைத்தியசாலையின் நிலவரங்கள் தொடர்பாக வினாவிட கேதீஸ்வரனை பலமுறை தொடர்பு கொண்ட பொழுதும் எமது தொடர்புக்கு பதில் அளிக்க மறுத்து வருகிறார்

                  முக நூல் வாயிலாகவும் தொடர்பு கொண்டோம் அதற்கும் பதில் இல்லை ,கடவுளாக மக்கள் வணங்கும் இந்த மருத்துவர்கள் ஊழல்கள் மக்களை அதிர வைத்துள்ளது

                  வெறும் கட்டிடங்களை கட்டி ,அதனை பரப்புரை புரியும் இவர்கள் ,மருத்துவமனை உள்ளே நவீன வசதிகள் கொண்ட ,முறையில்

                  மாற்றி அமைத்து அதனை சிறந்த சேவை நிர்வாகமாக நடைமுறை படுத்த இவர்களினாலே முடியவில்லை .

                  மகப்பேறு சேவை என்பது பலம் குன்றிய நிலையில் ,உள்ளது ,குருதி சோதனை

                    வசதி கூடம் இல்லை , இவ்வாறு இந்த மருத்துவமனைகளில் குறைபாடுகள் உள்ள பொழுது அதனை நிவர்த்தி செய்திட இந்த பொறுப்புநிலை பணிப்பாளர் கேதீஸ்வரன் மறுப்பது ஏன் ..? தனது

                    ஊரான வரணி ஆதார வைத்திய சாலையில் இடம்பெறும் அடாவடிகளை தடுத்து நிறுத்தி மக்களுக்கு சிறந்த சேவையை

                    செய்திட மறுப்பது ஏன் …? அர்ச்சுதன் மற்றும் ,அங்கு பணிபுரியும் குடும்பனால தாதி செயலை தடுத்து நிறுத்துவது எப்போது ..?

                    வியாபரிகளான மருத்துவர்கள் நிலை கண்டு தமிழர் இனம் வெட்கி தலை குனிகிறது,

                    ( இந்த செய்தியை மருத்துரைத்தால் எம்முடன் தொடர்பு கொண்டு தங்கள் நிலையை விளக்கி உங்கள் தகவலை இங்கே பதிவிட முடியும் -0044 7536707793)

                    கொரனோ நிதியை சுருட்டிய -யாழ் மருத்துவர் வியாபரிகளான மருத்துவர்கள் நிலை கண்டு தமிழர் இனம் வெட்கி தலை குனிகிறது, கொரனோ நிதியை
                    கொரனோ நிதியை சுருட்டிய -யாழ் மருத்துவர் வியாபரிகளான மருத்துவர்கள் நிலை கண்டு தமிழர் இனம் வெட்கி தலை குனிகிறது, கொரனோ நிதியை
                        Posted in இலங்கை செய்திகள்

                        யாழில் திருட்டில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட ஐவர் கைது

                        யாழில் திருட்டில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட ஐவர் கைது

                        யாழ்ப்பாணத்தின் கோப்பாய் மற்றும் இதர பகுதிகளில் ஊரடங்குந் வேளையில்

                        திருட்டில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட ஐவர் காவல் துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர் .

                        நகைகள் ,பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை என்பனவற்றை இவர்கள் திருடி சென்றுள்ளது அம்பலமாகியுள்ளது

                        கைதானவர்கள் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .

                        விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டுப் வருகிறது

                        யாழில் திருட்டில்
                        யாழில் திருட்டில்
                            Posted in இலங்கை செய்திகள்

                            கொரோனா இல்லாத கடற்படையினர் விடுதலை

                            கொரோனா இல்லாத கடற்படையினர் விடுதலை

                            PCR பரிசோதனையின் மூலம் கொரோனா வைரஸ் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட கடற்படை வீரர்கள் இருவர் நேற்று (07)

                            வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

                            இந்த கடற்படை வீரர்கள் இருவரும், வெலிசறை கடற்படை முகாமில் கடமை புரிந்து வந்தவர்கள் என்பதோடு, அவர்கள் கொவிட் -19

                              தொற்றுக்கு உள்ளானதை தொடர்ந்து சிகிச்சைக்காக IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

                              இதேவேளை வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மேலும் 08 கடற்படையினர் சிகிச்சை பெற்று பூரண

                              குணத்துடன் 2020 மே 06 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

                              இவ்வாறு வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய கடற்படை வீரர்களின் 07 பேர் கொழும்பு கடற்படை பொது

                              வைத்தியசாலையிலும் ஒருவர் முல்லேரியாவ வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.

                              இவர்களின் பி.சி.ஆர் சோதனைகளில் இவர்களுக்கு வைரஸ் இல்லை என்பது தெரியவந்தது, அதன் படி 2020 மே 06 ஆம் திகதி

                              அவர்கள் குறித்த வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர் மேலும், வைத்தியசாலைகளில் இருந்து

                              வெளியேறிய இந்த கடற்படை வீரர்கள் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மேலும் 14 நாட்களுக்கு

                                தனிமைப்படுத்தப்படுவார்கள். இந்த நபர்கள் உட்பட கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 12 கடற்படை வீரர்கள் முழுமையாக

                                குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். என்று கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்தது.

                                கொரோனா இல்லாத
                                கொரோனா இல்லாத
                                Posted in இலங்கை செய்திகள்

                                வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கு விசேட வர்த்தமானி அறிவிப்பு

                                வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கு விசேட வர்த்தமானி அறிவிப்பு

                                எதிர்வரும் 11ஆம் திகதியிலிருந்து பொது மக்களின் வாழ்க்கை நிலையை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கான

                                வேலைத்திட்டம் குறித்த விசேட வர்த்தமானியை வெளியிடுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

                                இதுதொடர்பாக விசேட பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் தினங்களில் நடத்தப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.

                                  தனியார் நிறுவனங்கள் காலை 10.00 மணிக்கு திறக்கப்படவேண்டும். பணியாற்ற வேண்டிய ஊழியர்களின்

                                  எண்ணிக்கை குறித்து நிறுவன தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும். இதுதொடர்பான

                                  விடயங்கள் உரிய சட்ட கட்டமைப்புக்குள் இடம்பெறவேண்டும் என்றும் அவர் தெரிவித்;தார்

                                  எதிர்வரும் 11 ஆம் திகதி ஊரடங்கு சட்டம் நீக்கப்படுவது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித்

                                  ரோஹண மேல் மாகாணத்தின் பங்களிப்பின்றி பொருளாதாரத்தை மேம்படுத் முடியாது இதற்காக மேல் மாகாணம் திறக்கப்பட

                                  வேண்டும். தற்போதைய ஊரடங்கு அமுல் நடத்தப்பட்டபோதிலும் மேல் மாகாணத்தில் பணிகளை ஆரம்பிகக வேண்டும். என்றார்.

                                  மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடர்பான புதிய சட்டதிட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் தனிமைப்படுத்தல்

                                    சட்டங்களை மீறுவோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை.மேற்கொள்ளப்படும். சட்டங்களுக்கு அமைய

                                    செயற்படும் அரச அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் நபர்களுக்கு

                                    எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

                                    வழமை நிலைக்கு
                                    வழமை நிலைக்கு
                                        Posted in இலங்கை செய்திகள்

                                        இலங்கையில் மஞ்சளுக்கு தட்டுப்பாடு – நீக்கிட அரசு நடவடிக்கை

                                        இலங்கையில் மஞ்சளுக்கு தட்டுப்பாடு – நீக்கிட அரசு நடவடிக்கை


                                        மஞ்சளுக்கு நாட்டில் நிலவும் தட்டுப்பாட்டை நீக்க பல திட்டங்களை அமல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

                                        நாட்டின் தேவைக்காக, வருடத்துக்க 7 ஆயிரத்து 900 மெட்ரிக் தொன் மஞ்சள் தேவைப்படுவதாகவும் அனால், கடந்த வருடம் வரை இதில்

                                        ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் மாத்திரமே இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் மிகுதி 5 ஆயிரத்து 400 மெட்ரிக் தொன்

                                        இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.


                                        எனினும், கடந்த வருட இறுதியில், மஞ்சள் இறக்குமதிக்குத் தடை விதிக்க

                                        ப்பட்டதையடுத்தே மஞ்சள் தூளுக்கு சந்தையில் தட்டுப்பாடு நிலவ ஆரம்பித்தது என்றும் அவர் கூறினார்.

                                        தட்டுப்பாட்டை நீக்குவதற்கு பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் முதற்கட்டமாக, சுங்கப்பிரிவால்

                                          தடுத்து வைக்கப்பட்டிருந்த 600 மெட்ரிக் தொன் மஞ்சளை, சந்தைக்கு அனுப்பவுள்ளதாகவும் இவ்வருடம் சுமார்.

                                          2 ஆயிரத்து 200 ஹெக்டெயாரில் புதிதாக மஞ்சள் உற்பத்தி செய்ய நடவடிக்கை

                                          எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

                                          இலங்கையில் மஞ்சளுக்கு
                                          இலங்கையில் மஞ்சளுக்கு
                                              Posted in இலங்கை செய்திகள்

                                              கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 804 ஆக உயர்வு

                                              கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 804 ஆக உயர்வு

                                              இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 804 ஆக அதிகரித்துள்ளது..

                                              இன்றைய தினத்தில் (2020.05.07) இதுவரையில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட ஏழு (07) புதிய நோயாளர்கள்

                                              பதிவாகயிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.


                                                இவர்களில் 6 பேர் கடற்படை அங்கத்தவர்கள் ஆவதுடன் மற்ற நோயாளி; கடற்படை வீரருடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தவர்.

                                                இதற்கமைவாக இலங்கையில் பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 804 ஆகும்.


                                                இதுவரையில் குணமடைந்து வைத்திய சாலைகளில் இருந்து வெளியேறிய நோயாளர்களின் எண்ணிக்கை 232..
                                                நேற்றைய தினத்தில் (2020.05.06) மேற்கொள்ளப்பட்ட Pஊசு பரிசோதனைகளின் எண்ணிக்கை 1147.

                                                COVID -19 பரம்பலின் தரவுகள்
                                                புதுப்பிக்கப்பட்டது 2020-05-07 17:57:27

                                                804
                                                உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்

                                                563
                                                சிகிச்சை பெறும் நோயாளிகள்

                                                7
                                                புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்

                                                232
                                                குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை

                                                9
                                                இறப்பு எண்ணிக்கை

                                                கொரோனா நோயாளர்களின்
                                                கொரோனா நோயாளர்களின்
                                                Posted in இலங்கை செய்திகள்

                                                முல்லைத்தீவு மக்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கிய இராணுவம் – photo

                                                முல்லைத்தீவு மக்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கிய இராணுவம் – photo

                                                முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்புடன் தனியார் நன் கொடையாளரினால்

                                                வழங்கப்பட்ட 150 உலர் உணவுப் பொதிகள் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

                                                குருநாகல் பிரதேசத்தில் உள்ள பிரபல்யமான வர்தகர் திரு சுரேஷ் அவர்கள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல்

                                                  டீப்தி ஜயதிலக்க அவர்களை தொடர்பு கொண்டு இதற்பொழுது காணப்படும் தொற்று நோய் மற்றும் ஊரடங்குச் சட்டம் காரணமாக

                                                  பாதிக்கப்பட்டுள்ள நாயாறு பிரதேசத்தில் வசிக்கும் தேவையுடைய குடும்பங்களுக்கு வழங்குவதற்கு தனது அனுசரணையினை

                                                  வழங்கினார்.20200506 முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி அவர்களுடன் 59 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி

                                                  மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, 593 ஆவது பிரிகேட் தலைமையக கட்டளைத் தளபதி கேணல் வசந்த பலகும்பர, 19

                                                    ஆவது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி , அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் உட்பட பலர் இவ்விநியோகத்தில் கலந்து கொண்டனர்

                                                    Posted in இலங்கை செய்திகள்

                                                    கிளிநொச்சி வியாபார நிலையங்களிலும் கைகளை கழுவுமாறு வலியுறுத்தல்

                                                    கிளிநொச்சி வியாபார நிலையங்களிலும் கைகளை கழுவுமாறு வலியுறுத்தல்

                                                    கிளிநொச்சி மாவட்டத்தில் அரச திணைக்களங்களை இயங்க வைப்பது தொடர்பில் அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல்.


                                                    மாவட்ட செயலகத்தின் மா நாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூ.கேதீஸ்வரன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

                                                      இந்த கலந்துரையாடலின் முக்கியமான நோக்கமாக எதிர்வரும் 11ம் திகதி ஊரடங்கு தளர்த்தப்பட்டு; இயல்பு நிலை ஏற்படுத்தபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் கிளிநொச்சி மாவட்டம் கொவைட் -19

                                                      பாதிப்பு ஏற்படாத இயல்பு நிலையிலேயே காணப்பட்டாலும்; பாதிப்பு ஏற்படக்கூடியதான எதிர்பார்ப்பிலிருந்து முழுமையாக விடுபடவில்லை. இதன் காரணமாக 11ம் திகதியிலிருந்து

                                                      திணைக்களங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதால் திணைக்கள தலைவர்கள் பொது அமைப்புக்களுடனான ஆலோசனைகளுடன்

                                                      முடிவுகள் எட்டப்பட்டன.IMG 0045உத்தியோகத்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பேணியவாறு கடமையாற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பிற

                                                        மாவட்டங்களிலிருந்து உத்தியோகத்தர்கள் வருகை தருகின்ற வேளையில் பேரூந்துகளில் குறிப்பிட்டளவு உத்தியோகத்தர்கள் பயணிக்கக்கூடிய வகையில் போக்குவரத்து ஒழுங்குகளை

                                                        மேற்கொள்வதற்குமான தீர்மானம் எடுக்கப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. உத்தியோகத்தர்களுக்கு போக்குவரத்து

                                                        முக்கியமானதாகும். அத்துடன் உள்ளக போக்குவரத்தும் கவனிக்கப்பட வேண்டும். எனவே பொறுப்புக்களை மறந்து செயற்படாமல் அறிவுறுத்தல்களை கடைப்பிடித்து பாதுகாப்பான

                                                        முறையில் செயற்படுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டன.
                                                        தொடர்ந்து மக்கள் அதிகளவில் கூடும் பொது இடமான சந்தைகளில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கூடுவதை தவிர்த்து வருகின்றனர்.

                                                        அதே போல் கடைகளில் சமூக இடைவெளி பேணப்படுவதுடன் கை கழுவும் நடைமுறையும் செயற்படுத்தப்பட்டு வந்தாலும் மிக முக்கியமாக உள்ளுரர் கடைகளிலும் இந்த நடைமுறையினை

                                                          செயற்படுத்துவதற்கு ஏற்பாடுகளை செய்வதற்கு ஆலோசனை வழங்கப்பட்டது. வர்த்தக நடவடிக்கைகள்; தொடர்பில்

                                                          ஓரிருவாரங்களுக்கு ஏற்கனவே உள்ளதான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

                                                          மாவட்டவைத்தியசாலை நடவடிக்கைகளை பாதுகாப்புடன் மேற்கொள்ளவும். வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு

                                                          வழமையாக செயற்படுவதற்கும். சுவாசம் சம்மந்தமான நோய் மற்றும் ஏனைய நோய்கள் என பிரிக்கப்பட்டு சிகிச்சை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது

                                                          அனைத்து விடயங்களிலும் குறைந்தளவு நபர்கள் என்பதனை கவனத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டது.
                                                          தனியார் வாகனங்களில் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகள்

                                                          பயணிப்பது உறுதி செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு செல்லும் போது அவ்விடங்களில் நடமாடுதல் பொருட்களை கொள்வனவு செய்தல் தவிர்க்கப்பட வேண்டும்.

                                                          என்பதோடு முச்சக்கர வாகனத்தில் இருவர் மாத்திரம் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

                                                            திணைக்களங்களில் குளோரின் தொற்று நீக்கல் செய்யப்படும் பொருட்டு ஒவ்வொரு திணைக்களங்களிலும் குளோரின் தொற்று நீக்கலுக்காக ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். குளோரின் தொற்று

                                                            நீக்கலுக்காக சுத்திகரிப்பு சேவை பணியாளரை பயன்படுத்தி கொள்வதற்கும் இல்லாவிட்டால் மாற்று வழிகள் தொடர்பிலும் முடிவுகள் எட்டப்பட்டன.

                                                            அலுவலகங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அவதானிக்கும் வகையில் ஒவ்வொரு அலுவலகங்களிலும் இருவர் அல்லது 3 பேரைக் கொண்ட அணி உருவாக்கப்பட வேண்டும். அனைத்து

                                                            திணைக்களங்களும் குழுவினை அமைத்து மாவட்டச்செயலகத்திற்கு அறியத்தர வேண்டும் என்பதோடு கொரோனா தொற்றுடன் தொடர்ந்து யுத்தம் செய்ய

                                                            வேண்டியவர்களாக இருக்கின்றோம். எனினும் எமது பொருளாதார வளர்ச்சியையும் முன்னெடுக்க வேண்டும் என்பதனையும் மாவட்ட அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார்.

                                                            கிளிநொச்சி வியாபார
                                                            கிளிநொச்சி வியாபார
                                                                Posted in உலக செய்திகள்

                                                                இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு 1,783 பேர் பலி

                                                                இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு 1,783 பேர் பலி

                                                                இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,783 ஆக இன்று உயர்வடைந்து உள்ளது.

                                                                இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் இந்திய

                                                                இரசாங்கம் மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன. எனினும், பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு

                                                                ஏற்ப கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு தெரிவித்து வருகிறது.

                                                                கொரோனா பாதிப்புக்கு, பலி எண்ணிக்கை 1,694 ஆக நேற்று உயர்வடைந்து இருந்தது. 14 ஆயிரத்து 183 பேர் குணமடைந்தும், 33,514 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என

                                                                தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 49 ஆயிரத்து 391 ஆக உயர்வடைந்து இருந்தது.

                                                                இந்த நிலையில், இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா பாதிப்புக்கு 89 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 1,694ல்

                                                                  இருந்து 1,783 ஆக உயர்வடைந்து உள்ளது. 15 ஆயிரத்து 266 பேர் குணமடைந்தும், 35,902 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா

                                                                  வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 49 ஆயிரத்து 391ல் இருந்து 52 ஆயிரத்து 952 ஆக உயர்வடைந்து உள்ளது.

                                                                  இதேவேளை தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,829 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,516

                                                                  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு 35 பேர் பலியாகியிருந்தனர்.

                                                                  அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து

                                                                    கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2,328 ஆக அதிகரித்துள்ளது.

                                                                    இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தார்.

                                                                    பூந்தமல்லியை சேர்ந்த 56 வயதான பெண் ஓராண்டாக சிறுநீரகப் பிரச்சனையால் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

                                                                    கடந்த 1-ந்தேதி உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு 5-ந்தேதி தொற்று உறுதி செய்யப்பட்டது.

                                                                    அவர் மரணமடைந்ததை அடுத்து கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 36-ஆக உயர்ந்தது.

                                                                    இந்தியாவில் கொரோனா
                                                                    இந்தியாவில் கொரோனா
                                                                        Posted in இலங்கை செய்திகள்

                                                                        கிளிநொச்சி வீடுகளை உடைத்தெறிந்த புயல் – photo in

                                                                        கிளிநொச்சி வீடுகளை உடைத்தெறிந்த புயல் – photo in

                                                                        கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றைய தினம் (06.05.2020) காற்றுடனான மழையின் காரணமாக வீடு ஒன்று முழுமையாகவும்

                                                                        10 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்ததுடன் 2 சிறிய தொழில் முயற்சி நிலையங்களும் பாதிக்கப்பட்டன.

                                                                          அத்துடன் பயிர்களும் அழிவிற்குள்ளாகியுள்ளன.தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையத்தின் ஊடாக

                                                                          பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கையினை கிளிநொச்சி மாவட்டச்செயலகம்

                                                                          முன்னெடுத்துள்ளது. தற்போதைய காலப்பகுதியில் பலத்த காற்றுடனான மழைவீழ்ச்சி மற்றும் இடி மின்னல் பாதிப்புக்கள் ஏற்பட சாத்தியங்கள் உண்டு.

                                                                          இதனால் மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் வீட்டிற்கு அருகில் பாதுகாப்பற்ற வகையில் மரங்கள் இருக்குமாக இருந்தால்

                                                                            அவற்றினை அகற்றி பாதுகாப்பாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மக்களுக்கு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

                                                                                Posted in இலங்கை செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                                                கறுப்பின மக்களே கொரனோவால் பிரிட்டனில் அதிகம் பலி

                                                                                கறுப்பின மக்களே கொரனோவால் பிரிட்டனில் அதிகம் பலி

                                                                                பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானவர்கள் நான்கு மடங்கு அதிகமானவர்கள் கறுப்பின மக்களே என புதிய புள்ளி விபரம் தெரிவித்துள்ளது

                                                                                பிரிட்டன் நாட்டின் பூர்வீக குடிகளான வெள்ளை இன மக்கள் பலி எண்ணிக்கை ஆமை வேகத்தில் குறைவடைந்து ,வந்தேறு

                                                                                  குடிகளான கறுப்பின மக்களே எழுபது சதவீதம் பலியாகியுள்ளனர் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது

                                                                                  இவ்வாறு வந்தேறு குடிகளான கறுப்பினத்தவர்கள் ,கறுப்பினம் என்பது அகதிகளாக வந்து குடியேறிவர்கள் இந்தியா,இலங்கையர்கள் உள்ளிட்டவர்கள் அடக்க படுகிறது .

                                                                                  பொதுவாக கறுப்பு தோல் என்பதால் இவ்வாறு அடையாள படுத்த படுகின்றனர் ,

                                                                                  இந்து உண்மையில் கொரனோவின் பலியா அல்லது .கொரனோவின்

                                                                                    பெயரால் நடத்த பட்ட படுகொலையா என்ற சந்தேகத்த்தை பரவலாக எழுப்பியுள்ளது

                                                                                    இவ்வாறான செய்திகளின் பின்னர் ஆசிய மக்கள் சாதரண நோயினால் பாதிக்க பட்டாலும் மருத்துவ மனைக்கு செல்வதற்கு தயக்கம் காண்பித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                                                                                    கறுப்பின மக்களே
                                                                                    கறுப்பின மக்களே
                                                                                    Posted in இலங்கை செய்திகள்

                                                                                    கொடி கட்டி பறக்கும் கஞ்சா வியாபாரம் – கடத்தலில் அரசியல்வாதிகள்

                                                                                    கொடி கட்டி பறக்கும் கஞ்சா வியாபாரம் – கடத்தலில் அரசியல்வாதிகள்

                                                                                    இலங்கையில் நடப் பாண்டு நிகழ்வுகளின் செய்தி பகிர்வுகள் மற்றும் நாட்டில் நிலவி வரும் சமூக விரோத செயல் பாடுகளின் மூல உறைவிடமாக போதைவஸ்து பாவனை அதிகரித்துள்ளது

                                                                                    இந்த போதை பொருள் ஊட்டலுக்கு அடிமையானவர்கள் ,அதில் இருந்து விடுபடாத முடியாத நிலையில் குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் ,

                                                                                      கடத்தல் ,கற்பழிப்பு ,கொலை ,திருட்டு ,என்ற அனைத்து குற்ற செயல் பாடுகளிலும் தம்மை முன்னிலை படுத்தி கொள்கின்றனர்

                                                                                      இவ்வாறு ,இதற்கு அடிமையானவர்களை தமது கூலிகளாக வைத்திருக்கும் அரசியல் வாதிகள் இவர்களின் ஊடாக அணைத்து விடயத்தைனையும் கட்சிதமாக முடித்து விடுகின்றனர்

                                                                                      இவ்வாறான ரவுடிகளின் முக்கியமானவராக விளங்கி வருபவர் ,கஞ்சா அருள், ரெட்லைட் குரூப்,மின்னல் குரூப்,பாம்பு குறூப் ,என்பன .

                                                                                      இவர்கள் அனைவரும் இலங்கை அரச புலானய்வு துறையின் செல்வாக்குடன் செயல் பாட்டு வருகின்றனர்


                                                                                      தமிழர் பகுதியில் இடம் பெறும் கொலைகளுக்கு இந்த குழுக்களே காரணமாகின்றன

                                                                                        செல்வந்தர்களை மிரட்டி பணம் பறிப்பது ,அழகிய பெண்களை கடத்தி சென்று சீரழித்து மிரட்டி அனுப்பி வைப்பது தொடர்ப்பன

                                                                                        அனைத்து செயல்களும் சாதாரணமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                                                                        பாதிக்க பட்டவர்கள் அச்சத்தில் தகவல்களை வெளியில் கூற மறுப்பதனால் உறங்கு நிலையில் இவை கிடக்கின்றன


                                                                                        மக்களின் முதல்வன் நானே என பறை சாற்றும் ஆளும் அரசு இதற்கு ஒத்து ஊதுவது இலங்கையில் நிலவும் மனித உரிமை மீறல்களை அப்பட்டமாக காண்பிக்கிறது .

                                                                                        இவர்களின் இந்த செயல் பாடுகள் நாளை இலங்கை அரசு மீள முடியாத மிக பெரும் பொறிக்குள் சிக்க வைக்க போகிறது


                                                                                        அணைத்து விடயங்களும் உரிய பகுதியினரால் ஆவண படுத்த படுகின்றன

                                                                                          இலங்கைக்குள் எட்ட முடியாத தீர்வு .உலக அரங்களில் அந்த காட்சிகள் வெளியாகும் பொழுது எட்டப் படும் நிலையும் அவ்வேளை ,தலை குனியும் நிலையில் இலங்கை செல்லும் என்பதே திண்ணம்

                                                                                          அவை வெளியாகும் பொழுது மிக பெரும் நெருக்கடியை இவர்கள் சந்திப்பார்கள் என்பதனை அடித்து கூறலாம்

                                                                                          கொடி கட்டி பறக்கும்
                                                                                          கொடி கட்டி பறக்கும்
                                                                                              Posted in இலங்கை செய்திகள்

                                                                                              வரணி மருத்துவ மனையில் அடாவடி – குமுறும் மக்கள் – கண்டுகொள்ளாத கேதீஸ்வரன்

                                                                                              வரணி மருத்துவ மனையில் அடாவடி – குமுறும் மக்கள் – கண்டுகொள்ளாத கேதீஸ்வரன்

                                                                                              யாழ்ப்பாணம் வரணி ஆதார வைத்தசிய சலையில் மருத்துவர் ,மற்றும் அங்கு பணி புரியும் தாதிமார்கள் தொடர்பில் மக்கள் முறைப் பாடுகளை புரிந்து வருகின்றனர்

                                                                                              இரண்டு மணிக்கு பின்னரே மக்கள் பொது நோயாளர் பார்வை இடம் பெறுகிறது ,இவையும் மட்டு படுத்தப்பட்ட ஒன்றாக உள்ளது

                                                                                                அதிக நோயினால் பீடிக்க பட்டு அவசர சிகிச்சைக்கு அழைத்து வர படும் நோயாளர்கள் திருப்பி அனுப்ப படுகின்றனர்

                                                                                                இந்த மருத்துவ மனையின் பொறுப்பு வாய்ந்த மருத்துவர் இரண்டு மூன்று மணித்தியாலங்கள் பணியினை செய்து வீட்டுக்கு

                                                                                                சென்று விடுகிறார் ,அதன் பின்னர் தாதிமார்களே நோயாளர்களை பார்வை இடுகின்றனர் ,ஆனால் சம்பளத்தை முழு நாள் வேலை புரிந்த கணக்கில் பெற்று விடுகின்றனர்

                                                                                                இதில் ரதி மோகன் வசந்தராணி என்ற குடும்ப நல உத்தியோகஸ்தர் மக்கள் மீதி எரிந்து விழும் செயல் பாடுகளில் ஈடுபட்டுள்ளார் .

                                                                                                மகாப்பேறு தாய் சிசுவை கிராமங்கள் தோறும் சென்று அவர்கள் நிறையினை அளவீடு செய்திட வேண்டும் .

                                                                                                  அப்போது தாய் ,சிசு இருவரையும் ஒன்றாக தராசில் ஏற்றி நிறுத்து பிள்ளையின் நிறையை கழித்து ,பின்னர் தாயின் நிறையினையும் பதிவு செய்யும் சம்பவகள் அதிகரித்துள்ளது

                                                                                                  இங்கு கடும் நோயினால் பாதிக்க பட்டு சிகிச்சை பெற வந்த கர்ப்பிணி பெண் மற்றும் நோயாளி ஒருவருக்கு இவர்கள் சிகிச்ச

                                                                                                  வழங்க மறுத்ததன் விளைவால் மந்திகை மற்றும் யாழ்ப்பாணம் எடுத்து செல்லும் பொழுது இடை வெளியில் இறந்து விட்ட துயர சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன

                                                                                                  இந்த செயல் பாடுகளை கண்டு கொள்ள மறுக்கும் பொறுப்பு நிலை பிராந்திய அதிகாரி கேதீஸ்வரன் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை என்ற குற்ற சாட்டு முன் வைக்க படுகிறது

                                                                                                  இது விடயம் தொடர்பில் அவருக்கு தெரிவித்து அவர் கருத்தை கேட்க முனைந்து அழைப்பை ஏற்படுத்திய பொழுதும் எமது அழைப்பிற்கு பதில் தர அவர் மறுத்துவிட்டார்

                                                                                                    இவ்வாறு தான் செல்கிறது இன்றைய வடபுலத்தில் அரச கட்டுமான பணிகளில் உள்ள நிலைகள் ,இதனை வடக்கு ஆளுநர் அம்மணி

                                                                                                    கவனத்தில் கொண்டு இந்த மக்கள் பிரச்சனைக்கு உடனடி தீர்வை காண்பாரா ..?

                                                                                                    மக்களுக்கு உதவி செய்திட வருவதாக கூறும் வடக்கு ஆளுநர் இந்த சிக்கலான நிலைகளுக்கு தீர்வு காண்பாரா என்பதே மக்களின் ஏக்கமாக உள்ளது ,

                                                                                                    சில தமிழர் எம்பிக்களும் இது விடயம் குறித்து தெரிவிக்க பட்ட பொழுதும் அவர்களும் இது விடயத்தில் நடவடிக்கை எடுக்காது ,இருப்பது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது

                                                                                                    தொடரும் இந்த நிலைக்கு தீர்வு என்ன ..பாதிக்க படும் மக்களே இரகசியமாக காணொளி பிடித்து அனுப்பி வையுங்கள்

                                                                                                    வெள்ளையர் ஊடகம் வரை இந்த செய்திகளை எடுத்து சென்று சர்வதேசத்தில் இலங்கை மருத்துவ துறையினம் கீழ்த்தரமான செயலை அம்பல படுத்துவோம்

                                                                                                    வரணி மருத்துவ மனையில்
                                                                                                    வரணி மருத்துவ மனையில்
                                                                                                        Posted in இலங்கை செய்திகள்

                                                                                                        கோட்டபாய கருணை – 290 சிறை கைதிகள் விடுதலை

                                                                                                        கோட்டபாய கருணை – 290 சிறை கைதிகள் விடுதலை

                                                                                                        இலங்கையில் இடம்பெறவுள்ள வெசாக் தினத்தை முன்னிட்டு சிறையில் தடுத்து வைக்க பட்டிருந்த கைதிகளில் 290 பேர்
                                                                                                        விடுதலை செய்ய பட்டுள்ளனர்

                                                                                                        ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் இந்த விடுதலை இடம்பெற்றுள்ளது

                                                                                                        கோட்டபாய கருணை
                                                                                                        கோட்டபாய கருணை
                                                                                                            Posted in உலக செய்திகள்

                                                                                                            கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் கைது

                                                                                                            கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் கைது

                                                                                                            கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறி மருத்துவத் துறைக்கு சவால் விடுத்த சித்த மருத்துவர் தணிகாசலம் கைது செய்யப்பட்டார்.

                                                                                                            கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் கைது
                                                                                                            சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்


                                                                                                              உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயை குணப்படுத்தும் மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும், தனது

                                                                                                              மருந்தை பரிசோதனை செய்து பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்

                                                                                                              தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தார். தன்னிடம் கொரோனா நோயாளிகளை கொடுத்தால்

                                                                                                              குணப்படுத்துவதாக மருத்துவத் துறைக்கு சவால் விடுத்தும் அவர் பேசியிருந்தார்.

                                                                                                              இந்நிலையில், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக வதந்தி பரப்பியதாக சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீது

                                                                                                              போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குனர் புகார் கொடுத்தார். இது

                                                                                                              தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று தணிகாசலத்தை கைது செய்தனர்.

                                                                                                                திருத்தணிகாசலம் ஒரு போலி மருத்துவர் என்றும், மத்திய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்வித் தகுதியோ, முறையான அங்கீகாரமோ, பதிவோ இல்லாதவர் என்றும்

                                                                                                                சுகாதாரத்துறை கூறியுள்ளது. கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் பத்திரிகைகள் மூலம் தவறான செய்தியை பரவவிட்டு, பொது

                                                                                                                மக்கள் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டு வருவதால் காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டதாகவும் சுகாதாரத்துறை கூறியது.

                                                                                                                சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் ‘ரத்னா சித்த மருத்துவமனை’ என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார் திருத்தணிக்காசலம்.

                                                                                                                கொரோனாவுக்கு மருந்து
                                                                                                                கொரோனாவுக்கு மருந்து
                                                                                                                    Posted in இலங்கை செய்திகள்

                                                                                                                    இராணுவ வண்டி மோதி சிதறல் ஒருவர் பலி – ஏழுபேர் காயம்

                                                                                                                    இராணுவ வண்டி மோதி சிதறல் ஒருவர் பலி – ஏழுபேர் காயம்

                                                                                                                    இலங்கை பொலனறுவை கபர்ண வீதியில் பயணித்து கொண்டிருந்த இராணுவ வாகனம் ஒன்று மோதி சிதறியது ,இதில் ஒரு சிப்பாய் பலியாகியுள்ளார் .

                                                                                                                    மேலும் ஏழுபேர் படுகாயமடைந்துள்ளனர் ,அதிவேகமாக பயணித்ததன்

                                                                                                                    நிலையில் சாரதியின் கட்டுப் பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதில் இந்த் அனரத்தம் நிகழ்ந்துள்ளது

                                                                                                                    இராணுவ வண்டி மோதி
                                                                                                                    இராணுவ வண்டி மோ
                                                                                                                    தி
                                                                                                                    Posted in இலங்கை செய்திகள்

                                                                                                                    ஊடகங்கள் மக்களை மிரட்டும் -சிங்கள கடற்படை

                                                                                                                    ஊடகங்கள் மக்களை மிரட்டும் -சிங்கள கடற்படை

                                                                                                                    கடற்படை தொடர்பாக உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடும் நிறுவனங்கள் மற்றும் நபர்கள் தொடர்பில் சட்ட

                                                                                                                    நடவடிக்கை மேற்கொள்வதற்கு கடற்படை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

                                                                                                                    இதுதொடர்பாக கடற்படை தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

                                                                                                                      இலங்கை கடற்படை தலைமையகம்
                                                                                                                      கொழும்பு
                                                                                                                      2020.05.06

                                                                                                                      செய்தி பணிப்பாளர் அலைவரிசை பிரதானி
                                                                                                                      ஊடக அறிக்கை

                                                                                                                      1. கடற்படை கொவிட் 19 தடுக்கும் செயற்பாடுகளிலிருந்து தற்காலிகமாக விலகிக் கொண்டிருப்பதாக சமூக ஊடகங்கள்
                                                                                                                      2. மூலமும் செய்தி இணையதளங்கள் சில வற்றிலும் உண்மைக்குப புறம்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
                                                                                                                      3. கொவிட் 19 தொற்று பரவுவதை தடுக்கும் வேலைத்திட்டத்தின் தேசிய பொறிமுறைக்குள் கடற்படையினால்
                                                                                                                      4. மேற்கொள்ளப்படும் எந்தவித பணிகளிலிருந்தும் கடற்படை விலகிக் கொள்ளவில்லை என்றும், அனைத்து
                                                                                                                      5. நடவடிக்கைகளிலும் கடற்படை ஆகக்கூடிய பங்களிப்பை வழங்கி செயல்படுவதை இதன் மூலம் வலியுறுத்துகின்றோம்.
                                                                                                                      6. இதேபோன்று இவ்வாறான உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடும் நிறுவனங்கள் மற்றும் நபர்கள்
                                                                                                                      7. தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு கடற்படை நடவடிக்கை மேற்கொண்டிருப்பதை மேலும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

                                                                                                                        டப்ளியு.எம்.ஐ.ஆர்.எல்.சூரியபண்டார
                                                                                                                        லெப்டினன் கமாண்டர்

                                                                                                                        ஊடகங்கள் மக்களை
                                                                                                                        ஊடகங்கள் மக்களை
                                                                                                                            Posted in உலக செய்திகள்

                                                                                                                            வெள்ளத்தில் மூழ்கி 194 பேர் பலி – ஒரு லட்சம் பேர் பாதிப்பு

                                                                                                                            வெள்ளத்தில் மூழ்கி 194 பேர் பலி – ஒரு லட்சம் பேர் பாதிப்பு

                                                                                                                            கென்யா நாட்டில் நிலவி வரும் சீரற்ற கால நிலை காரணமாக இடம்பெற்ற வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை 194 பேர் பலியாகியுள்ளனர் .

                                                                                                                            மேலும் இந்த வெள்ள பாதிப்பில் சிக்கி சசுமார் ஒரு லட்சம் பேர் இடம் பெயரந்துள்ளனர் ,

                                                                                                                            மேலும் இந்த வெள்ளத்தினால் பல வீடுகள் ,பயன் தரும் மரங்கள் என்பன ஆழிந்துள்ளன,விவசாய நிலங்கள் பாதிக்க பட்டுள்ளன .

                                                                                                                            இதன் மொத்த இழப்பு பல மில்லியன்கள் என தெரிவிக்க படுகிறது ,தொடர்ந்து மீட்பு பணிகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன

                                                                                                                            வெள்ளத்தில் மூழ்கி
                                                                                                                            வெள்ளத்தில் மூழ்கி
                                                                                                                                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                                                                                                பிரிட்டனில் ஒரே நாளில் 679 பேர் பலி

                                                                                                                                பிரிட்டனில் ஒரே நாளில் 679 பேர் பலி

                                                                                                                                பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் பரவி வரும் கொரனோ

                                                                                                                                நோயின் தாக்குதலில் சிக்கி 649 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை இங்கு இடம்

                                                                                                                                பெற்ற உயிர்பலி 30,076. ஆக அதிகாரித்துள்ளது
                                                                                                                                அது தவிர

                                                                                                                                  இந்த நோயிலின் தாக்குதலில் சிக்கி நாடு தழுவிய ரீதியில் 200,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

                                                                                                                                  இவ்வாறு மக்கள் பலி அதிகரித்து செல்லும் நிலையில் அடித்து பூட்டும்

                                                                                                                                  நிலவரம் தளர்த்த படுவது பெரும் கொதிப்பபை ஏற்படுத்தியுள்ளது

                                                                                                                                  பிரிட்டனில் ஒரே நாளில்
                                                                                                                                  பிரிட்டனில் ஒரே நாளில்