Tag: காற்று
மழையுடன் கூடிய பலத்த காற்று வீசும்
மழையுடன் கூடிய பலத்த காற்றுவீசும்
மழையுடன் கூடிய பலத்த காற்று வீசும் ,பல பகுதிகளில் மழையுடன் கூடிய பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊவா மாகாணத்திலும், மாத்தளை, நுவரெலியா, அம்பாறை
ஊவா மாகாணத்திலும், மாத்தளை, நுவரெலியா, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய வானிலை முன்னறிவிப்பின்படி, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை
மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு நாடு முழுவதும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவு
இதற்கிடையில், மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30
முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். கொழும்பிலிருந்து புத்தளம் வழியாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறை முதல்
ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.
மாத்தளை, திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இதேபோன்ற காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில்
மூடுபனியுடன் கூடிய வானிலை நிலவக்கூடும் என்றும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
மழை காற்று வானிலை மையம் எச்சரிக்கை
மழை காற்று வானிலை மையம் எச்சரிக்கை
மழை காற்று வானிலை மையம் எச்சரிக்கை பல மாகாணங்களில் மழை மற்றும் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு
பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
சபரகமுவ மாகாணத்திலும், காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு பல இடங்களில் மழை
அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், சில பகுதிகளில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய மலைகளின் கிழக்கு சரிவு
மத்திய மலைகளின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும்
திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
மேற்கு, சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை நிலவக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- வீரவணக்கம் செல்லப்பா| கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- தேனிசை செல்லப்பா மரணம் | கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa’s Death

- தேனிசை செல்லப்பா வீரமரணம்

- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

எங்கள் தலைவிதி ….!
எங்கள் தலைவிதி ….!
இளம் காற்று பாடும் ஈழ கரையோரம்
இதயங்கள் நொறுங்கும் சோக துயரம்
எவர் செய்த சதியோ இத்துயர் கோலம்
எங்களின் வாழ்வில் ஏனோ இப் பாரம்
கரும்புகை ஏறி வானை மறைக்கும்
கந்த துகளில் மூச்சு உறையும்
வெடியோசை மண் கிளற வீழ்ந்தே இறந்தோம்
உடன் இருந்தார் விட்டே ஊர் ஏறி கடந்தோம்
வலியில் நெஞ்சு வாடி தவிக்க
வழி தெரியா நின்றோம்
உரிமை போரும் முடிவில் தவிக்க
உதவுவார் இன்றி ஏங்கி தவித்தோம்
தரணியில் நாங்கள் பிறந்தது கேடா
தமிழனாய் இங்கு வாழ்தல் பிழையா
சுதந்திரம் கேட்டோல் சூடு காடா
சுதந்திர தேசமே நீதி இல்லையா
மொத்த தமிழன் அழித்தான் உலகில் நடக்கிறான்
ஒட்டு துணி இல்லா தமிழன் தவிக்கிறான்
இத்துயரில் தினமும் எங்களின் தேசம்
இதயம் இல்லா நடக்கும் உலகம்..!
வன்னி மைந்தன்
ஆக்கம் 25-03-2021
http://ethirinews.com/
கடற்பகுதியில் பலமான காற்று – மக்களுக்கு எச்சரிக்கை
கடற்பகுதியில் பலமான காற்று – மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2021 செப்டம்பர்03ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
மழை நிலைமை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையானகடற்பரப்புகளிலும்காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையானகடற்பரப்புகளும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும்அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.
கிளிநொச்சி வீடுகளை உடைத்தெறிந்த புயல் – photo in
கிளிநொச்சி வீடுகளை உடைத்தெறிந்த புயல் – photo in
கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றைய தினம் (06.05.2020) காற்றுடனான மழையின் காரணமாக வீடு ஒன்று முழுமையாகவும்
10 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்ததுடன் 2 சிறிய தொழில் முயற்சி நிலையங்களும் பாதிக்கப்பட்டன.
அத்துடன் பயிர்களும் அழிவிற்குள்ளாகியுள்ளன.தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையத்தின் ஊடாக
பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கையினை கிளிநொச்சி மாவட்டச்செயலகம்
முன்னெடுத்துள்ளது. தற்போதைய காலப்பகுதியில் பலத்த காற்றுடனான மழைவீழ்ச்சி மற்றும் இடி மின்னல் பாதிப்புக்கள் ஏற்பட சாத்தியங்கள் உண்டு.
இதனால் மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் வீட்டிற்கு அருகில் பாதுகாப்பற்ற வகையில் மரங்கள் இருக்குமாக இருந்தால்
அவற்றினை அகற்றி பாதுகாப்பாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மக்களுக்கு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

கிளிநொச்சி வீடுகளை 










